Search This Blog

14.8.09

பிள்ளையார் உருவ பொம்மை உடைப்பும்- பின் விளைவுகளும்


எல்லா கடவுள்களும் ஒழிந்தே தீரும்!


நாமும் இந்தக் கடவுள் உடைப்புத் திட்டத்தை விட்டு விடாமல் உடைப்பதற்குப் பொருத்தமான நாளைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.


அதற்கேற்றாற் போலவே மே மாதம் 27–ம் தேதி புத்தர் நாள் என்பதாகக் கொண்டாட வேண்டும் என்றிருந்தோம். அதற்கு ஆக சர்க்கார் விடுமுறையும் விட்டார்கள். புத்தர் நாள் தான் இந்த ஆரியக் கடவுள்கள் உடைப்புத் துவக்கத்திற்கு சரியான நாள் என்பதாக நாம் முடிவு செய்து முதலாவதாக எந்தச் சாமியை உடைப்பது என்று யோசித்து, எதற்கும் முதல் சாமியாக இழுத்துப் போட்டுக் கொள்கிறார்களே, அந்தச் சாமியாகி கணபதி உருவத்தை முதலாவதாக உடைப்பது என்று முடிவு கொண்டு மே மாதம் 27–ம் தேதியன்று உடைத்தோம்.


இந்தக் காரியமும், எப்படி ரயிலில் உள்ள இந்தி எழுத்துக்களை 500- க்கு மேற்பட்ட ஊர்களில் 1000 க் கணக்கிலே, 10000-க் கணக்கிலே ஒருமித்து அழிக்கப்பட்டதோ அதைப் போலவே, இந்த விநாயகர் உடைப்பு ரயில் இல்லாத ஊர்களிலும் சேர்ந்து உடைக்கப்பட்டது! தமிழ்நாட்டின் எல்லா பாகங்களிலும், மூலை முடுக்குகளிலும்கூட விநாயகர் உருவங்கள் செய்யப்பட்டு உடைக்கப்பட்டன.


ஆனால், இந்தப்படி நாம் உடைத்தால் விநாயகரே ஒழிந்துவிட்டதா? இல்லை. இன்னும் சொன்னால் இப்போது கொஞ்சம் அதிகமாயிற்று.

சும்மா கிடந்த பிள்ளையாருக்கெல்லாம் பூஜை, புனஸ்காரம் நடத்தினார்கள்.

அதைப்பற்றி நமக்குக் கவலை இல்லை. ஏனென்றால் முன்பு இருந்த 2- லட்சத்தோடு இப்போது ஒரு 3,000- சேர்ந்திருக்கலாம். அதனால் என்ன பலன்? இந்த 2- லட்சம் பிள்ளையார் ஒழியும் போது, தானாக இந்த 3,000- பிள்ளையாரும் ஒழிந்து தானே போகும்? அல்லது இப்போது புதிதாக இந்த 3000- பிள்ளையார்கள் போல் உற்பத்தியானதால் இந்த 2- லட்சம் பிள்ளையார்கள் ஒழியாமல் இவைகளால் பாதுகாத்து விட முடியுமா? அது ஒன்றும் இல்லை!

சும்மா எதிர்ப்பு என்கிற பேரால் விளையாடுகிறார்கள். ஆமாம் விளையாட்டுத்தான்; இதைப்பற்றி வேறு என்ன சொல்லுவது?


ஏன் இந்தப்படி சொல்லுகிறேன் என்றால், நாம் ஒன்றும் விளையாட்டுக் காரியத்துக்காக இந்தச் சாமிகள் என்பவைகளை உடைக்கவில்லை.


இந்தச் சாமிகள் என்று கொண்டாடப்படுபவைகள் ஆபாசமானது, அசிங்கமானது, அக்கிரமமானது, நம்மை சூத்திரனாகவும், தாசி மகனாகவும், மற்றவர்களுக்கு உழைத்துப் போட்டுவிட்டு ஒன்றும் இல்லாமல் கிடக்க வேண்டியவனாகவும் வைத்திருக்கிறது. அன்னக்காவடிப் பார்ப்பானை, அழுக்குப் பிடித்த பார்ப்பானை, அயோக்கியப் பார்ப்பானை, மேல் ஜாதிக்காரனாகவும், பாடுபடாமல் ஊரார் உழைப்பிலேயே வயிறு வளர்ப்பவனாகவும், சுகபோக வாழ்வுக்காரனாகவும் ஆக்கி வைத்திருப்பது இந்தக் கடவுள் தான்!

எனவே நம்முடைய கீழ்நிலைமை – காட்டுமிராண்டித் தன்மை ஒழிய வேண்டும் என்றால், இக்கடவுள்கள் என்பவைகள் ஒழிய வேண்டும் என்று இப்படிப் பல காரணங்களை தெளிவான உண்மைகளை எடுத்துச் சொல்லி நாம் இந்தக் கடவுள் என்பவைகளை உடைக்கிறோம்!

ஆனால், நமக்கு எதிர்ப்பாளர்கள், எதிரிகள் என்பவர்கள் இதற்குச் சரியான சமாதானம், தெளிவான பதில், நீ சொல்வது தப்பு, அப்படியல்ல, இப்படியல்ல என்று தெளிவான பதிலைச் சொன்னால் ஓப்புக் கொள்ள கொஞ்சம் கூட தயங்கமாட்டோம். அதை ஒருவருமே சொல்லவில்லையே! சொல்ல முடியவில்லையே! சும்மா! அதோ! அதோ! ராமசாமி நாயக்கன் சாமியை உடைக்கிறேன் என்கிறான். அதனால் நம்முடைய சாமி போச்சு, என்று வெத்துக் கூச்சலிடுவதும், அதற்கு என்ன செய்வதும் என்றால் புதிய சாமிகளை உற்பத்தி செய் என்பதும் தான் அவர்களால் செய்ய முடிந்தது. சரி, புதிய சாமிகளை உண்டாக்குவது என்றால் யார் உண்டாக்குவார்கள்? ஏற்கெனவே பழைய சாமிகளுக்குக் கும்பிடு போடுகிறவன்தானே புதிய சாமிகளையும் உண்டாக்குவான்! இதுவரையிலே சாமி கும்பிடாதவன், அவைகள் எல்லாம் பித்தலாட்டம் என்று கருதி – சொல்லிக் கொண்டிருப்பவன் அந்த சாமிகளையே உடைத்துத் தூள் தூளாக்கத் துணிந்தவன் எவனும் புதிய சாமிகளை உடைக்க மாட்டானே! அப்புறம் அதைப்பற்றி நமக்கென்ன கவலை. எப்போதும் முட்டிக் கொள்கிற முட்டாள்கள் கொள்ளுகிற முட்டாள்கள் முட்டிக் கொண்டு போகட்டுமே! இதில் புதுசென்ன? பழசென்ன?


இன்னும், நாம் பிள்ளையார் உடைக்கிறோம் என்றவுடன், திராவிட கழகத்துக்காரனின் பிரச்சாரத்திற்கு எதிர் பிரசாரமாக நமது புண்ணிய புராணங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று ஏற்பாடு செய்து புராணப் பிரச்சாரம் செய்கிறார்கள். அதைப்பற்றியும் நமக்குக் கவலை இல்லை. நாமும் புராணங்களை எடுத்துச் சொல்லி அவைகளில் உள்ள ஆபாசங்களை, அநியாயங்களை, அக்கிரமங்களை, அறிவுக்குப் பொருந்தாத செயல்களை எடுத்துக் காட்டித்தானே அவைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்லுகிறோம்.


விநாயகரை உடைக்க வேண்டும் என்றால், விநாயகரைப்பற்றிய கதைகள், அவரின் புராணங்கள் எல்லாவற்றையும் எடுத்துக் காட்டித்தானே உடைக்க வேண்டும் என்று கூறுகிறோம். அதுபோலவே இராமயணத்தைக் கொளுத்த வேண்டும் என்றால், இராமாயத்தை பக்கம் பக்கமாக கொளுத்த வேண்டும் என்றால் இராமாயணத்தை பக்கம், பக்கமாக, காண்டம், காண்டமாக எடுத்துக் காட்டித்தானே கொளுத்த வேண்டும் என்று கூறுகிறோம். நாம் ஒன்றும் சும்மா உடைக்க வேண்டும் - கொளுத்த வேண்டும் என்று சொல்லவில்லையே! இன்னும் சொல்லப்போனால் புராணங்களை அவர்கள் பிரசாரம் செய்வதன் மூலம், அந்தப் புராணங்கள் என்பவைகளின் யோக்கியதை என்ன என்பதை எல்லா மக்களுக்கும் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படும். ஆதலால் இப்படிப்பட்ட எதிர்ப்பு பிரச்சாரங்கள் பற்றியும், புதிய சாமிகள் உற்பத்தியைப் பற்றியும் நமக்குக் கவலையில்லை. அதனால் ஒன்றும் நட்டம் ஏற்படவே ஏற்படாது!

நாம் விநாயகரை உடைத்தோமே, அதோடு நின்று விடவா போகிறது? இல்லை. இனி மேலும் தொடர்ந்து வரிசையாக இந்தக் கடவுள்களை உடைத்துக் கொண்டே வருவோம்.



முதலில் விநாயகரை உடைத்தோம். அது ஒரு சைவ முக்கிய கடவுள் ஆகும். இனி அடுத்தபடியாக ஒரு வைணவ முக்கிய கடவுளை உடைப்போம். இதைப்போலவே அல்லது அல்லது வேறு அந்தச் சாமியின் விசேஷ நாளிலே உடைப்போம் - உடைக்கத்தான் போகிறோம். இப்போதே சொல்லி வைக்கிறேன். எல்லோரும் தயார் செய்து கொள்ளுங்கள்!



------------------- 05-07-1953- அன்று திருச்சியில் நடந்த திராவிட நாடு பிரிவினை நாள் பொதுக் கூட்டத்தில் தந்தைபெரியார் அவர்கள் பேசியது. 11-07-1953 "விடுதலை" இதழில் வெளியானதில் ஒரு பகுதி.

17 comments:

aik said...

//முதலில் விநாயகரை உடைத்தோம். அது ஒரு சைவ முக்கிய கடவுள் ஆகும். இனி அடுத்தபடியாக ஒரு வைணவ முக்கிய கடவுளை உடைப்போம். இதைப்போலவே அல்லது அல்லது வேறு அந்தச் சாமியின் விசேஷ நாளிலே உடைப்போம் - உடைக்கத்தான் போகிறோம். இப்போதே சொல்லி வைக்கிறேன். எல்லோரும் தயார் செய்து கொள்ளுங்கள்! //

1953இல் பெரியார் செய்ததற்கு பிறகு எந்த கடவுளையும் உடைக்கக்காணோமே? ஏன்?

வைணவக்கடவுளைஉடைக்கிறேன் என்றார். உடைத்தாரா?
அது சரி, இதே மாதிரி ஏசு மேரிமாதா மசூதிகள் எல்லாம் உடைக்கவேண்டுமே? பெரியார் வழி வரும் வீரமணி அது சம்பந்தமாக ஏதும் முயற்சி எடுத்தாரா?

hayyram said...

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

‘‘உருவ வழிபாடு கூடாது என்று சொல்கிற நீங்களே புத்தனுக்குச் சிலை செய்து கோயில் கட்டி அதற்கு பூ, பழம், ஊதுபத்தி வைத்து புத்தனையே கடவுளாக்கி விட்டீர்கள். இவைகள் யாவும் உங்களிடமிருந்து ஒழிய வேண்டும்.”
(விடுதலை 30-05-1967)

‘புத்தனுக்கு சிலை வேண்டாம்’ என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் அதற்கு முன் என்ன சொன்னார் தெரியுமா? இதோ!

‘‘புத்த ஜெயந்தி கொண்டாட பொம்மை தயாரித்துக் கொள்ளுங்கள்…. சூத்திரர்களே! பஞ்மர்களே!’’
(விடுதலை 09-05-1953)

உருவ வழிபாடு வேண்டாம் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் புத்தரின் உருவ பொம்மையைத் தயாரித்துக் கொள்ளச் சொன்னார் என்பதிலிருந்து ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய முரண்பாட்டைத் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் ஓவியா said...

"நாம் ஒன்றும் விளையாட்டுக் காரியத்துக்காக இந்தச் சாமிகள் என்பவைகளை உடைக்கவில்லை.


இந்தச் சாமிகள் என்று கொண்டாடப்படுபவைகள் ஆபாசமானது, அசிங்கமானது, அக்கிரமமானது, நம்மை சூத்திரனாகவும், தாசி மகனாகவும், மற்றவர்களுக்கு உழைத்துப் போட்டுவிட்டு ஒன்றும் இல்லாமல் கிடக்க வேண்டியவனாகவும் வைத்திருக்கிறது. அன்னக்காவடிப் பார்ப்பானை, அழுக்குப் பிடித்த பார்ப்பானை, அயோக்கியப் பார்ப்பானை, மேல் ஜாதிக்காரனாகவும், பாடுபடாமல் ஊரார் உழைப்பிலேயே வயிறு வளர்ப்பவனாகவும், சுகபோக வாழ்வுக்காரனாகவும் ஆக்கி வைத்திருப்பது இந்தக் கடவுள் தான்!

எனவே நம்முடைய கீழ்நிலைமை – காட்டுமிராண்டித் தன்மை ஒழிய வேண்டும் என்றால், இக்கடவுள்கள் என்பவைகள் ஒழிய வேண்டும் என்று இப்படிப் பல காரணங்களை தெளிவான உண்மைகளை எடுத்துச் சொல்லி நாம் இந்தக் கடவுள் என்பவைகளை உடைக்கிறோம்!"

என்ற பெரியார் வழியில்

அடுத்து வைணவக் கடவுளின் உருவ பொம்மையை உடைக்க உற்சாக மூட்டும் உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி

hayyram said...

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

‘‘கிறிஸ்துவ மதத்தில் சில ஆபாசக் கொள்கைகள் இருந்தும் அவர்கள் எப்படி உலகை ஆளுகிறார்கள்? கிறிஸ்தவ மதத்தில் எவ்வளவு ஆபாசமும் முட்டாள்தனமுமான கொள்கைகளும் இருந்தபோதிலும் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை’’
(குடியரசு 16-11-1930)

இப்படிச் சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் 31-12-1948 குடியரசு இதழில் கூறுகிறார்! ‘‘ஒரு கிறிஸ்தவ வேதத்திலோ, இஸ்லாம் வேதத்திலோ காமக்களியாட்டத்திற்கு இடமே இராது’’

முதலில் கிறிஸ்தவ மதத்தில் ஆபாசம் இருக்கிறது என்கிறார். பின்பு கிறிஸ்தவ மதத்தில் காமக் களியாட்டத்திற்கு இடமே இல்லை என்கிறார். 1930-ல் ஆபாசம் நிறைந்த கிறிஸ்தவ மதம் எப்படி 1948-ல் ஆபாசம் இல்லாத கிறிஸ்தவ மதமாக ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு மட்டும் மாறியது? கிறிஸ்தவ மதத்தில் காமக்களியாட்டத்திற்கு இடமில்லை என்று சொல்வது முழுப்பூசணிக்காயை சோற்றிலே மறைப்பது போன்றதாகும். ஏனென்றால் கிறிஸ்தவ மதம் எவ்வளவு ஆபாசம் நிறைந்தது என்பதை கிறிஸ்தவ அறிஞர்களே விளக்கியிருக்கிறார்கள். அதனால் ஆபாசம் இல்லை என்ற ஈ.வே. ராமசாமி நாயக்கரின் வாதம் உண்மையில்லததாகும்.

hayyram said...

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

‘‘மற்றெல்லா மதங்களைவிட புத்தமதத்தில் கருத்துக்கள் விசாலமாக, மனித தர்மத்திற்கும் அனுபவத்திற்கும் ஒத்ததாக யிருக்கின்றன என்று சொல்லப்படுகிறது’’.
(குடியரசு 15-04-1928)

இன்றைய தினம் நாம் எவையெவைகளை நம்முடைய கொள்கைகளாகச் சொல்லி, எவையெவைகளை அழிக்க வேண்டும்-ஒழிக்க வேண்டும் என்று சொல்லிவருகிறோமோ அந்தக் காரியங்களுக்குப் புத்தருடைய தத்துவங்களும், உ பதேசங்களும் கொள்கைகளும் மிகவும் பயன்படும் என்பதனால்தான் ஆகும்.
(விடுதலை 03-02-1954)

பவுத்தத்திற்கும், அதில் காணப்படுபவர்களுக்கும், இப்படிப்பட்ட ஆபாசமும் அறிவுக்கு ஒவ்வாத தன்மைகளும், யோக்கியமற்றதன்மைகளும் கிடையாது.
(விடுதலை 20-02-1955)

இவ்வாறு புத்தமதத்தை புகழ்ந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் அதற்கு முரணாகவும் பேசியுள்ளார்.

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

பவுத்த மதத்திலும், ஜெயின் மத்திலும் சேர்ந்தால் தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிடவில்லை.
(குடியரசு 19-01-1936)

புத்த மதம் தீண்டாமையை ஒழித்துவிடவில்லை.
(குடியரசு 31-05-1936)

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறியதாக மணியம்மை கூறுகிறார்:
‘‘இந்து மதத்தைவிட ஏராளமான மூடநம்பிக்கைகள் புத்த மதத்திலும் இருக்கிறது.
(விடுதலை 06-01-1976)

நமக்கு புத்தருடைய கொள்கைகள்தான் பயன்படும். இன்று நாம் என்னென்ன கொள்கைகள் சொல்கின்றோமோ அவைகள் புத்தமதத்தில் இருக்கின்றன என்று கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் புத்த மதத்தில் தீண்டாமை மற்றும் மூடநம்பிக்கை இருக்கிறது என்று கூறுகிறார். புத்தமதத்தில் தீண்டாமை, மூடநம்பிக்கை இருக்கிறது என்று சொல்கிறாரே? அது என்ன 1920களிலா தீண்டாமையும், மூடநம்பிக்கையும் புத்தமதத்தில் ஏற்பட்டது? புத்தமதம் புகழின் உச்சியில் இருந்தபோதே இருந்ததே! அப்போதுமுதல் மூடநம்பிக்கை இருந்தது என்று சொல்லும்போது முதலில் ஏன் அதை ஆதரிக்க வேண்டும்? புத்தமதம் அறிவுமதம் என்று ஏன் சொல்ல வேண்டும்?

hayyram said...

ஒக்க மக்கா, உங்காத்தா பத்தினின்னா ஒரு மசூதியை உடைச்சு கடவுளை நம்பாதேன்னு சொல்லுடா பாக்கலாம். சும்மா செத்த பாம்பு அடிக்கிற கணக்கா பார்ப்பானை பத்தியே பேசிக்கிட்டிருக்க. நீங்களும் சரி உங்க கூட்டமும் சரி..பத்தினிக்கு பிறந்தவங்கன்னு நிரூபிக்கப்போறதே இல்லை.

hayyram said...

திருப்பதி போனதற்காக சிவாஜியைக் குறிவைத்துக் தாக்கினர் தி.மு.க. வினர். அவருடைய போஸ்டரில் சாணி அடித்தார்கள், அவருடைய கார்மீது கல்லெறிந்தார்கள்.

ஆனால் கடவுள் எதிர்ப்பிலும் அவர்களுக்கு உறுதி இல்லை. பத்துவருடங்களுக்குப் பிறகு ‘தனிப்பிறவி’ என்ற திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் முருகனாக நடித்தார். முன்னேற்றக் கழகத்தாரிடமிருந்து முக்கல் இல்லை; முனகல் இல்லை; முணுமுணுப்புகூட இல்லை; ஏனென்றால் எம்.ஜி.ஆர். அப்போது வளர்ந்துவிட்டார்.

வலியோரை வாழ்த்துவதும் எளியோரை தாழ்த்துவதும் இந்த வசன நிர்வாகிகளின் வழக்கமல்லவா?

தமிழ் ஓவியா said...

உருவ வழிபாடு மட்டுமல்ல ,சாதாரண வழிபாடுகளால் கூட எந்தப் பயனும் இல்லை. கடவுள்களின் பிறந்த நாள் கொண்டாடுவதற்கு எதிர் வினையாக புத்த ஜெயந்தி கடைபடிக்கப் பட்டது. அவ்வளவுதான்.


1953 இல் பெரியார் சொல்கிறார்

"‘‘புத்த ஜெயந்தி கொண்டாட பொம்மை தயாரித்துக் கொள்ளுங்கள்…. சூத்திரர்களே! பஞ்மர்களே!’’
(விடுதலை 09-05-1953)"


1967 இல் பெரியார் சொல்கிறார்


"‘‘உருவ வழிபாடு கூடாது என்று சொல்கிற நீங்களே புத்தனுக்குச் சிலை செய்து கோயில் கட்டி அதற்கு பூ, பழம், ஊதுபத்தி வைத்து புத்தனையே கடவுளாக்கி விட்டீர்கள். இவைகள் யாவும் உங்களிடமிருந்து ஒழிய வேண்டும்.”
(விடுதலை 30-05-1967)"

இதில் என்ன முரன்பாடு அய்யோராம்.

இது குறித்து பெரியார் தரும் விளக்கம் உங்களுக்கு தெளிவை ஏற்படுத்தும்.

"நான் அடிக்கடி கொள்கையில் மாற்றமடைபவன் என்று சொல்லப்படுகிறது. உண்மையாக இருக்கலாம். நீங்கள் அதை ஏன் கவனிக்கிறீர்கள் ? ஒரு மனிதன், அவன் பிறந்தது முதல் இன்று வரை திருடிக்க்கொண்டே இருக்கிற ஒரே நிலைக்காரன் என்று சொல்லப்பட்டால், அவன் மகா யோக்கியனா ? எந்த மனிதனும் ஒரே நிலையில் இருக்கவேண்டும் ' என்று நீங்கள் ஏன் ஆசைப்படுகிறீர்கள் ? அதனால் உங்களுக்கு என்ன இலாபம் ? மாறுதல் முற்போக்குள்ளதா, பிற்போக்குள்ளதா ? அதனால் மக்களுக்கு நன்மையா ? தீமையா ? என்பன போன்றவற்றைக் கவனிக்க வேண்டியதுதான் அறிவாளிகளின் கடமையாகும்.

மற்றும், பொது நன்மையை உத்தேசித்து-- கஷ்டப்படுகிற மக்கள் நன்மையை உத்தேசித்து மாறினானா ? அல்லது சுயநலத்திற்கு -- அக்கிரமமான இலாபமடைவதற்கு மாறினானா ? என்று பார்க்க வேண்டும். யோக்கியன், அறிவாளி, ஆராய்ச்சியாளி, பொறுப்பாளி, கவலையாளி ஆகியவர் மாறவேண்டியது அவசியமாகலாம். அதைப் பற்றிய கவலைஏன் ? யார் எப்படி மாறினாலும் பார்க்கின்றவர்களுக்கு புத்தியும் கண்ணும் சரியாய் இருந்தால், மாற்றத்தைப் பற்றி ஒன்றும் ஆபத்து வந்துவிடாது."


மேலும் புத்தநெறியைப் பற்றி பெரியார் பேசிய பேச்சின் சுட்டியை கீழே தந்துள்ளேன். படியுங்கள்.

http://thamizhoviya.blogspot.com/2008/12/blog-post_2219.html

தமிழ் ஓவியா said...

"புத்த ஜெயந்தி கொண்டாட பொம்மை தயாரித்துக் கொள்ளுங்கள்!"
என்ற தலைப்பில் பெரியார் விடுத்த அறிக்கையை அப்படியே தருகிறேன். அந்த அறிக்கையில் உருவவழிபாடு பற்றியெல்லாம் எழுதப்படுள்ளது. ஊன்றிபடித்து உண்மையை உணரவும்

"கடவுள் சக்திகள் கோயில் பூசை உற்சவங்கள் சம்பந்தமான பித்தலாட்டங்களை ஒழிக்க வேண்டும் என்கின்ற முயற்சி உலகில் - நாட்டில் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. இந்தியா தவிர மற்ற நாடுகளில் நீண்ட நாட்களுக்கு முன்பாகவே நல்ல அளவுக்கு ஒழிந்தும், மறைந்தும் விட்டது.


இங்கு ஒழியாததற்குக் காரணம் மேற்கண்ட கடவுள்கள் முதலியவற்றின் பேரால் பிழைக்க ஒரு ஜாதி பிறவியிலேயே ஏற்பட்டு அவர்கள் தங்களை மேல் ஜாதி, பிரமணனர் - மேலோர், மற்றவர்கள் கீழ் ஜாதி சூத்திரர் (அடிமை) கீழோர் என்று சட்டம் - சாஸ்திரம் மூலம் செய்து அத்தன்மைகளை மதத்துடன் - கடவுளுடன் சேர்த்து ஆதிக்கமடைந்து கட்டுப்படாக காப்பாற்றி வருவதால் மற்ற மக்கள் பலர் அறிவும், மானமும் உடையவர்களாக இருந்தாலும் அவர்கள் உதிரிகளாகவும், தனித்தனி சுயநலக்காரர்களாகவும், பிறவியிலேயே தாசி மக்களாகவும் இருந்து வருவதாலும் கட்டுப்பாடான எதிர்ப்பு நடத்தி வெற்றி பெற முடியவில்லை.



எதை தியாகம் செய்தாவது, ஒழித்தாவது, இந்த இழிநிலையை – காட்டுமிராண்டித்தனத்தை ஒழித்தாக வேண்டும் என்று யாரும் முன்வரவில்லை.


ஆனதால், இத்துறையில் பரீட்சை பார்க்ககூட யாரும், நம்மில் யாரும் இறங்கினதாகத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை நான் 50- ஆண்டுகளாக இவைகளுக்கு எதிரியாக – ஒழிப்பாளனாக இருந்து வந்திருக்கிறேன். என்னுடைய 30- ஆண்டு சொற்பொழிவுகளை, எழுத்துக்களை கவனித்தவர்களுக்குத் தெரியும் நான் இப்படிப்பட்டவன் என்பது. காந்தியாருக்கும் தெரியும்; இராஜாஜி அவர்களுக்கும் தெரியும்; மற்றும் பல பிரபலஸ்தர்களுக்கும், முக்கியஸ்தர்களுக்கும் தெரியும்.


எனக்கு ஆயுள் நெருங்கிக் கொண்டிருப்பதால் சற்று வேகத்தில் செல்வதாகக் காணப்படலாம்! மற்றப்படி புதியதோ மாறுதலோ அல்ல.


நான் சன்யாசி – சாது வேஷம் போட்டுக் கொண்டு, விபூதி, நாமம், பட்டை பட்டையாகப் போட்டுக் கொண்டு, கொட்டை உருட்டி முணுமுணுத்துக் கொண்டு இவைகளை எல்லாம் சொன்னால், "இவர் பெரிய மகான்" என்று, பெரிய மேதாவிகள் என்பவர்கள் எல்லாம் என் காலில் விழுவார்கள்; பணம் கொடுப்பார்கள்; பொன் முதலிய அபிஷேகம் செய்வார்கள்.


ஆனால் நான் சாதாரண, கடைத் தெரு மனிதனாக இருந்து கொண்டு 3-ந்தார மக்களுடன் தோள் சேர்த்துக் கொண்டு மிகமிக எளிதில் இவற்றைப் பேசுவதால், அதோடு காரியத்திலும் செய்ய முற்படுவதால், நான் மக்கள் முன், "மேதாவிகள்" முன் அலட்சியமாய் காணப்படுவதுடன் பார்ப்பனருக்கு இராவணனாய், சூரன்களாய் காணப்படுகிறேன். மதுரையில் 1922-ல் தோழர்கள் வைத்திய நாதய்யர் சீனவாசய்யங்கார் முதலியவர்கள் முன்னிலையில், "மதுரை சொக்க நாதரையும், மீனாட்சியையும் புரட்டிக் கழுவி குளத்துப்படிக்கட்டில் வேஷ்டி துவைக்கப் போடுங்கள்" என்றேன். எஸ். சீனிவாசய்யங்கார் என்னை "இராஜரிஷி" என்றார். மற்றவர்கள் வ.ராமசாமி அய்யங்கார் உள்பட என்னைக் "கர்ம வீரன்" என்றார்கள்.


மற்றும் பேயாடுதல், சாமியாடுதல், நெருப்பு மிதித்தல், நெருப்புச்சட்டி, காவடி எடுத்தல், திருப்பதி செல்லல் முதலியவைகளைப் பேசி கீழ்த்தரமாகக் கண்டித்து வருகிறேன்.


எனவே எனது கருத்தில் புதுமை என்ன – தவறு என்ன?


"கோவில்கள் குச்சுக்காரி வீடு" என்றார் காந்தியடிகள்.


"கடவுள் என்ற ஒரு தனி வஸ்து இல்லை" என்றார் காந்தியார்.


"I have no belief in personal God" என்று சொன்னார் காந்தியார்.


"கோயில் - கள்ளர் குகை" என்றார் ஏசு.


"கடவுளுக்கு இன்ன (உருவகம்) வைப்பவன் முட்டாள், பாவி, கடவுளின் விரோதி" என்றார் முகமது நபி.


"கல்லும், மண்ணும், பித்தளையும் கடவுளாகுமா முட்டாள்களே!" என்கிறார்கள் சித்தர்கள்.


"கொள்ளை வினைக் கூட்டத்தார் (திருட்டுப் பசங்கள்) சேர்ந்து செய்த பித்தலாட்டம் இது" என்றார் இராமலிங்க அடிகள்.


இன்னும் பல சொல்லலாம். இப்படி இருக்க நான் சொல்லுவது மாத்திரம் எப்படி புதுமையாகும்? பார்ப்பான் பேச்சைக் கேட்டு ஏமாந்து போகாதீர்கள்.



புத்த ஜயந்தி கொண்டாட பொம்மை தயாரித்துக் கொள்ளுங்கள் - சூத்திரர்களே! பஞ்சமர்களே!


----09-05-1953 "விடுதலை" இதழில் தந்தை பெரியார் அவர்கள் விடுத்த அறிக்கை.

aik said...

அதெப்படிங்க தமிழ் ஓவியா,

ஏசு சிலையை உடைப்பது பத்தியும், மாதா சிலையை உடைப்பது பற்றியும், மசூதியை உடைபப்து பற்றியும் வாயே திறக்கமாட்டேன் என்கிறீர்கள்!

பயமா?

தமிழ் ஓவியா said...

//ஏசு சிலையை உடைப்பது பத்தியும், மாதா சிலையை உடைப்பது பற்றியும், மசூதியை உடைபப்து பற்றியும் வாயே திறக்கமாட்டேன் என்கிறீர்கள்!

பயமா?//

மாதா சிலையும் இயேசு சிலையும் என்னை இழிவு படுத்தவில்லை. ஏன் அதை தொட்டு வணங்கலாம். ஆனால் இந்துக் கடவுள் சிலை யைத் தொட்டாலே தீட்டு என்பதை உங்களுக்கு சொல்ல வேண்டுமா? நான் தொட்டால் தீட்டு என்கிற போது அதை உடைக்காமல் என்ன செய்வது?

கீழே பெரியாரின் கருத்து ஒன்றைத் தருகிரேன். அது உங்கள் புத்தியை தெளிவடைய வைக்கும்.

"மனிதனுடைய மூடத் தனத்துக்கு ஒரு உதாரணம் காட்டுகின்றேன்.

மனிதன் திருடுவான். நம்பிக்கை துரோகம் செய்வான், மோசம் செய்வான், கொலையும் செய்வான். ஆனால் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவன் கொண்டு வந்த தண்ணீரை தொட்டுக் குடி என்றால் நடுங்குவான்.

பாவம் என்று ஒன்று இருந்தால் மோசம் செய்வதைவிட, நம்பிக்கை துரோகம் செய்வதைவிட, பதறப்பதறக் கொலை செய்வதைவிட, வேறு ஒன்றும் அதிகபாவம் இருக்கமுடியாது. ஆனால் இவற்றை யெல்லாம் பஞ்சாமிருதம் சாப்பிடுவதுபோல் செய்து விட்டு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவனை திண்ணையில் உட்காரவைப்பது என்றால் நடுங்குகின்றான் என்றால் மனித சமூகத்தை எவ்வளவு சுயநலமாக இருக்கும்படியாகவும், முட்டாள்தனமாக இருக்கும்படியாகவும் வாழ்க்கை முறைகள், மத முறைகள், மோட்ச நரக முறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றது என்று எண்ணிப் பாருங்கள்.

----------5.7.1931 தேதியிட்ட `குடி அரசு' ஏட்டில் வெளிவந்த தந்தைபெரியார் உரையிலிருந்து சில பகுதிகள்....

நாளை சுதந்திர தினம் பார்ப்பான் இல்லை பறையன் இல்லை ஜாதி ஒழிக்கப்பட்டு விட்டது என்ற அறிவிப்பு வந்தால் இந்த பிரச்சினையே இருக்காது ஆவன செய்வீர்களா?
aik

aik said...

தமிழ் ஓவியா,
கடவுள் மறுப்புக்காகத்தான் பெரியார் சிலையை உடைப்பதாக சொல்கிறார். நீங்கள் என்னவோ தொட்டு வணங்க அனுமதி இல்லாததால்தான் உடைபப்தாக சொல்கிறீர்கள்.
தொட்டு வணங்க அனுமதி இல்லாத எல்லாவற்றையும் உடைப்பீர்களா?

//மாதா சிலையும் இயேசு சிலையும் என்னை இழிவு படுத்தவில்லை. ஏன் அதை தொட்டு வணங்கலாம்.//

வாடிகனில் இதுவரை எத்தனை கருப்பு போப்பாண்டவர்கள் இருந்திருக்கிறார்கள் என்று லிஸ்டு தருகிறீர்களா?

தலித் கிறிஸ்துவர்களிடம் இதனை சொல்லிப்பாருங்களேன். பின்புறமாக சிரிப்பார்கள். சாவில் கூட தனித்தனி கல்லறைகளில் புதைக்கப்படும் தலித் கிறிஸ்துவர்கள் அதனால்தான் கிறிஸ்துவத்திலிருந்து வெளியேறுகிறார்கள்.

பெண்களுக்கு மசூதியில் அனுமதி இல்லை. மசூதியை உடைப்பீர்களா? இல்லை பெண்களின் நிலை பற்றி உங்களுக்கு அக்கறை இல்லையா?

தமிழ் ஓவியா said...

//பெண்களுக்கு மசூதியில் அனுமதி இல்லை. மசூதியை உடைப்பீர்களா? இல்லை பெண்களின் நிலை பற்றி உங்களுக்கு அக்கறை இல்லையா?//

பெண்களும் சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று இந்து மதம் கூறுகிறது.



அமெரிக்காவில் போய் இந்து மதத்தில் உள்ள அயோக்கியத்தனங்களை முழுவதுமாக சொல்லிப் பயனில்லை .

ஈராக்கில் போய் கிருத்து மத அயோக்கியத் தனங்களை முழுவதாக சொல்லுவதில் பயனில்லை.

அமெரிக்காவில் கிறுத்துவ மதத்தையும் ஈராக்கில் இஸ்லாம மதத்தையும் விமர்சிப்பதுதான் சரியான அணுகு முறை அது போல் இந்தியாவில் இந்துமதத்தை விமர்சிப்பதுதான் சரியானது.

முதலில் என்னை பீடித்துள்ள இந்து மத நாற்றத்தை போக்கிக் கொள விரும்புகிறேன். பின்பு கிறுத்துவ, இஸ்லாம் மதங்களை விமர்சிக்கிறேன்.

aik said...

இந்துமதம் பற்றியே உஙகளுக்கு சரியாக தெரியாது. இதில் உங்களால் எப்படி கிறிஸ்துவத்தையோ இஸ்லாமையோ விமர்சிக்க முடியும்? இந்துக்கள் போல “கிறுக்கன் இவன்” என்று விட்டுவிட்டு மற்றவர்கள் போகமாட்டார்களே? தஸ்லீமா நஸரீனை போட்டு முட்டியை பேர்த்ததுபோல வீரமணியை செய்தால் என்ன செய்வது? இல்லையா?

பரிதாபமாக இருக்கிறது.

தலித் கிறிஸ்துவர்கள் எங்கே அமெரிக்காவில் இருக்கிறார்களா? அல்லது முஸ்லீம் பெண்கள் ஈராக்கில் இருக்கிறார்களா? தலித்துகளின் எண்ணிக்கையை விட அதிகமானவர்கள் இந்திய முஸ்லீம்கள். அதுவாவது தெரியுமா உங்களுக்கு?

ஒருவேளை இவர்களெல்லாம் தமிழர்கள் இல்லையா?

இங்கேதான் இருக்கிறார்கள். சொல்லப்போனால், நீங்கள் செய்வதை நன்றாக உபயோகப்படுத்திக்கொண்டு ஆட்களை சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பகுத்தறிவு நிறைந்த அற்புத சுகமளிக்கும் கூட்டங்களுக்கு பெரியார் திடலும் வழங்குகிறீர்கள்.

ஆகவே நீங்கள் உண்மையான பகுத்தறிவுக்காகவோ அல்லது நாஸ்திகவாதத்துக்காகவோ எழுதவில்லை. இந்துமதத்தை திட்டுவது, அற்புத சுகமளிக்கும் கூட்டங்களுக்கு ஆள் சேர்ப்பது.. இதுக்காகத்தான் இங்கே கூலிக்கு மாரடிக்கிறீர்கள்.

பாவம் பரிதாபம்.

aik said...

பெரியாரின் சிந்தனைகளை இந்தியாவெங்கும் பரப்புகிறீர்களே...

அப்படியென்றால் காஷ்மீரில் மசூதியை உடைத்தும், மேகாலயாவில் ஏசு , மேரி சிலைகளை உடைத்தும் நாஸ்திகவாதத்தை பரப்பலாமே?

அவையெல்லாம் இங்கேதானே இருக்கின்றன?

bala said...
This comment has been removed by a blog administrator.
bala said...

திராவிட தமிழ் முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

கீழ்த்தரமான தமிழ்நாட்டில் ஆங்காங்கே தாடிக்கார தீவிரவாதியான பெரிய அய்யாவோட கேவலமான சிலைகளை நட்டு வைத்திருக்கிறார்கள்.அந்த சிலைகள் அனைத்திலும் கீழ்கண்ட வாசகங்களை செதுக்கி வைக்குமாறு கருப்பு சட்டை வெறி நாய்களுக்கு பரிந்துரை செய்கிறேன்.

1)பெரிய தாடிக்கார அய்யா நல்லவனோ,பண்பாளனோ இல்லை இல்லவே இல்லை.
2)தாடிக்கார அய்யாவை நம்புகின்றவன் முட்டாள்.
3)தாடிக்கார தீவிரவாதியை பெரியார் என்று போற்றி வணங்குகின்றவன் காட்டுமிராண்டி.
4)தாடிக்காரனையும்,தீவிரவாதத்தையும் பரப்புகின்ற கருப்புசட்டை குஞ்சுகள் அயோக்ய்ர்கள்.

பாலா