Search This Blog

26.1.10

அம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா



மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மதத்தவரின் குளியல் திருவிழா. எதற்காகவாம் இந்தக் குளியல்? மோட்சம் போகலாமாம். அப்படியானால் தவளை, மீன், நண்டு, இரால் எல்லாமே மோட்சம் போகுமே! அருமையான கடல் உணவு மோட்சத்தில் கிடைக்குமே! நீர் வாழ் உயிரினங்கள் மோட்சம் போகும் என்பதற்கான உத்தரவாதமும் இல்லை; போனதாக ஆதாரமும் இல்லை. பின், மனிதர்கள் மட்டும் போவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? போனார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்? போனவன் எவன் திரும்பி வந்து கூறினான்? அது கிடக்க

12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதானே- கும்பமேளா என்கிறார்கள். 3 ஆண்டுகளுக்குப் பிறகு என்கிறீர்களே, என்ற அய்யம் சிலருக்கு ஏற்படலாம். 12 ஆண்டுகள் என்பதும் சரி. 3 ஆண்டுகள் என்பதும் சரியே. குழம்புகிறதா?

கும்பமேளா நான்கு ஊர்களில் நடக்கிறது. அலகாபாத் (கங்கை-யமுனை சேரும் இடம்) அரித்வார் (கங்கைக் கரை) நாசிக் (கோதாவரி நதிக் கரை) உஜ்ஜயினி (ஷீப்ரா நதிக்கரை) என நான்கு ஊர்கள். இந்த ஊர்களில் ஒவ்வொன்றிலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை. அலகாபாதில் நடந்த மூன்றாம் ஆண்டு அரித்வாரில், அடுத்த மூன்றாம் ஆண்டில் உஜ்ஜயினியில், அடுத்த மூன்றாம் ஆண்டில் நாசிக்கில் என்று நடப்பதால்... அந்தந்த ஊரைப் பொறுத்த மட்டில் 12 ஆண்டு ... அகில இந்தியாவைப் பொறுத்து 3 ஆண்டு... காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாரதம் ஒரு நாடு... நீர் அதன் புதல்வர்...

தமிழ்நாடு மட்டும் எதிலுமே வேறுபட்டு நிற்கும். இங்கு மகாமகம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் லோகல் கும்பமேளா போட்டிக்கு வேறு ஊர் கிடையாது.

வடக்கே மட்டும் ஏன் நான்கு ஊர்? பாற்கடலைக் கடைவதில் பாதி உழைப்பை நல்கியஅசுரர்களை ஏமாற்றி, தேவர்கள் கடத்திக் கொண்டு போன அமிர்தம் (சாகா நிலை தரும் மருந்து அடங்கிய பானகம்) கலசத்திலிருந்து சிந்திய துளிகள் விழுந்தன மேற்கண்டநான்கு இடங்களில்! பார்ப்பனர் அல்லாதாரை(அசுரர்கள்)ப் பார்ப்பனர் தொடர்ந்து ஏமாற்றி வருவதை எடுத்துக் காட்டும் நிகழ்ச்சி கும்பமேளா! வெட்டப்பட்டுக் கட்டப்பட்டிருக்கும் வாழை மரம் விழாவுக்கு வருவோரை வரவேற்பது போல சூத்திரர்களும் கும்பமேளாவில் கூடிக் குளித்து, குனிந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். இப்படி அல்லாமல், வேறு எப்படிச் சொல்ல?


----------------------- தி.க. பொதுச் செயலாளர் மானமிகு சு.அறிவுக்கரசு அவர்கள் 23-1-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

5 comments:

Ram said...

It may be better if you critize the bad thing in other religion also. otherwise u have to be viewed as Anti Hindu, nothing different for Sonia Gandhi and his Family.

If you had guts talk about the Muslims and Christians.

Devanathan said...

visit below site url fully scroll downwards it's great compare with this article.

the person who is delivered from brahmas head and wearing white belt of his body played very well under hip of ladies .

http://www.exbii.com/showthread.php?t=629430

all video download option available get all video and see who is bramin

Anonymous said...

முடிவா என்ன சொல்லுறேங்க பெரியார் மாதிரி நிர்வாண அமைப்பில சேரச்சோல்லுறேங்களா?

தமிழ் ஓவியா said...

//முடிவா என்ன சொல்லுறேங்க பெரியார் மாதிரி நிர்வாண அமைப்பில சேரச்சோல்லுறேங்களா?//

பெரியார் பற்றிய செய்திகளை அரைகுறையாக தெரிந்து வைத்துக் கொண்டு மொட்டைதாதன் குட்டையில் விழுந்தான் என்பது போல் கருத்துச் சொல்வது சரியல்ல mdnkumar.

அது போல் தொடர்புடைய பதிவு குறித்து கருத்து தெரிவிப்பதே சரியானது.

-----விவாதிப்போம்

dr.sivan said...

///If you had guts talk about the Muslims and Christians.///

நம்ம வீட்டில இருக்கிற குப்பையை சுத்தம் பன்னலாமென்ரு கூப்பிட்டால் அடுத்த வீட்டில இருக்கிற குப்பையை சுத்தம் பன்னுன்னு சொல்லற!

This is the same trick you people have been doing for ages. Answer to his question. IT is our Hindus duty to clean our houses first and set an example! Why do care for other religuions. Talk about our house and the dirt.

Kusumban