Search This Blog

29.11.10

வைக்கம் போராட்டம்-பெரியாரின்,காந்தியாரின் நிலைப்பாடு என்ன?


வைக்கம் சிந்தனை! (1)

வைக்கம் விழாவின் (1924-25) 85 ஆம் ஆண்டு விழாஅதனையொட்டி தந்தை பெரியார் 132ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா ஜாதி ஒழிப்பு மாநாடு இம்மூன்றையும் முன்னிறுத்தி வைக்கத்தில் முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டது. (26.11.2010)

இம்மூன்றும் மூன்று பெயர்களில் இருந்தாலும் அடிப்படை நோக்கம் ஒன்றாகும். ஜாதி ஒழிக்கப்பட்டு, சமத்துவம், சமதர்மம் பூத்துக் குலுங்கும் ஒப்பற்ற சமுதாயத்தைப் படைப்பதே ஆகும்.

இந்தியத் துணைக்கண்டத்தில், சமுதாயப்புரட்சி வரலாற்றில் முதல் சுதந்திரப் போர் என்று குறிப்பிடத் தக்க வரலாற்றுச் சிறப்பும், திருப்பு முனையும் உடையது வைக்கம் போராட்டமாகும்.

திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஆரிய-பார்ப்பன வல்லாண்மை கொடிய வாளாக முரசடித்துக் கொண்டிருந்தது.

ஒரு நம்பூதிரிப் பார்ப்பானை எதிரே பார்த்தால் சாணான் (ஈழவர்கள்), 24 அடிகள் தூரம் விலகி இருக்க வேண்டும். ஒரு தீயர் 38 அடிகள் தூரத்தில் ஒதுங்க வேண்டும். புலையன் 96 அடிகள் தள்ளி ஒதுங்க வேண்டும் என்பதெல்லாம் கறாராகக் கடைப்பிடிக்கப்பட்டது.

பல் குச்சியில் கூட ஜாதி வாரியாக அளவு முறைகள் வேறுபட்டிருந்தன என்றாலே தெரிந்துகொள்ளலாம்- ஜாதியின் குரூரத்தனத்தை.

நாயர் வீட்டுப் பெண்களோடு, நம்பூதிரிப் பார்ப்பனர்கள் சம்பந்தம் என்ற முறையில் அனைத்து உறவுகளையும் மேற்கொள்ளும் உரிமைகளைப் பெற்றிருந்தனர்.

கோயில்களைச் சுற்றி பார்ப்பனர்கள் வீடுகளை அமைத்துக்கொண்டனர். சூத்திரர்களில் ஏராளமான உள்பிரிவுகளை உண்டாக்கி அவர்களை ஒன்று சேரவிடாமல் தடுத்து விட்டனர்.

நாயர்களுக்குள்ளேயே 64 உள்பிரிவுகள் உண்டாக்கப்பட்டன என்றால், அந்தச் சூழ்ச்சியின் கொடூரத்தைத் தெரிந்துகொள்ளலாமே!

நாயர்களுக்கு உடை வெளுக்கும் பிரிவினர் என்றால் அற்கொரு பிரிவு (வேலுத்தேடன்) நாயர் அல்லாத அந்நாட்டுக் குடிமக்களுக்கு உடை வெளுப்பவருக்கு இன்னொரு பெயர் (வேலன்), வீட்டு வேலைக்காரர்கள் வரை ஏராளமான உட்பிரிவுகளை ஏற்படுத்தினர்.

கடவுள்களிலும் கூட இரு பிரிவினர், சவர்ணக் கடவுள், அவர்ணக் கடவுள்-அதாவது உயர்ஜாதி நம்பூதிரிகளுக்கான கடவுள், மற்றவர்களுக்கு வேறு கடவுள்கள்-கோயில்கள்!

அரசர்களிடமிருந்து ஏராளமான சலுகைகளைப் பார்ப்பனர்கள் பெற்று வந்தனர். கோயில் சொத்துகளுக்கும், பார்ப்பனர் சொத்துகளுக்கும் வரி கிடையாது. போர்க்காலங்களில் தங்கள் சொத்துகளை கோயில்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் எழுதிவைத்து விடவேண்டுமாம். அப்படி எழுதி வைக்கப்பட்ட சொத்துகள் நாளடைவில் பார்ப்பனர்களுக்குத்தான் வந்து சேர்ந்தன.

எம்.கே.வெள்ளோடி என்பவர் எழுதி வைத்திருந்த ஒரு குறிப்பு கூறுகிறது.

அந்த வெள்ளோடி தன் குடும்பத்தினருடன் ஒரு கோயில் விழாவுக்குச் சென்றிருந்தார். கோயில் ஊழியர்களான வாரியர் என்பவருடன் தங்கி இருந்தார்.

வாரியர் பெண்கள் உணவு பரிமாறிக் கொண்டிருந்தனர். அந்தப் பெண்கள் மேலாடையின்றி உணவு பரிமாறிக்கொண்டிருந்தனர். (அதுதான் அங்கு வழக்கம்) சாப்பாட்டை முடித்துக் கொண்டு அங்கு வந்த நம்பூதிரிப் பார்ப்பனன் ஒருவன் மேலாடையின்றி உணவு பரிமாறிக்கொண்டிருந்த வாரியர் பெண்ணைக் கட்டிப்பிடித்து காமாந்தகரமாக நடந்துகொண்டான். நம்பூதிரிகள் அதனைக் கண்டு உரக்கச் சிரித்து, அந்தத் தடியனை வாழ்த்தினார்கள்.

வாரியர் பிரிவைச் சேர்ந்த, எந்த ஒருவரிடமும் எந்தவித சலனமும் ஏற்படவில்லையாம்.

கேரளாவை பைத்தியக்காரர்களின் விடுதி என்று விவேகானந்தர் கூறியதன் பொருள் இப்பொழுது விளங்கி இருக்குமே!

இப்படி நம்பூதிரிப் பார்ப்பனர்களின் ஆதிக்க சொர்க்கமான கேரளாவில்தான் தந்தை பெரியார் வைக்கம் போராட்டத்தின் மூலம் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தினார் என்பதை எண்ணும்போதுதான்-அந்தப் போராட்டத்தின் சிறப்பு எத்தகைய மகத்தானது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

உண்மையான முதல் சமூகப்புரட்சிப் போர் என்பதையும் இதன்மூலம் வரலாறும் ஒப்புக் கொள்ளும்.

------------------”விடுதலை” தலையங்கம் 27-11-2010

வைக்கம் சிந்தனை! (2)

இந்தியத் துணைக் கண்டத்தில் தந்தை பெரியார் தலைமை வகித்து நடத்திய வைக்கம் போராட்டம்தான் முதல் சமூகப் புரட்சி - சுதந்திரப் போராட்டமாகும்.

தீண்டாமை ஒழிப்பு என்று காந்தியார் சொல்லிக் கொண்டாலும், அந்தத் தீண்டாமை ஒழிப்பு என்பது - தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனிக் கிணறு, தனிப் பள்ளிக்கூடம் என்று ஏற்பாடு செய்து, அவர்களை நிரந்தரமாகத் தீண்டத் தகாதவர்கள் என்று நிலை நிறுத்தும் ஏற்பாடாகும்.

காந்தியாரின் இந்த வகை தீண்டாமை ஒழிப்பைத் தந்தை பெரியார் ஏற்றுக்கொண்டதில்லை.

தீண்டப்படாதவர்களைக் கிணற்றில் தண்ணீர் எடுக்கவிடாவிட்டால், வேறு தனிக் கிணறு கட்டிக் கொடு; கோயிலுக்குள் விடாவிட்டால், வேறு தனிக் கோயில் கட்டிக் கொடு என்றார் காந்தியார். அப் போது நான், கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடா தென்று இழிவுபடுத்தும் இழிவுக்குப் பரிகாரமில்லா விட்டால், அவன் தண்ணீரில்லாமலேயே சாகட்டும்; அவனுக்கு இழிவு நீங்கவேண்டுமென்பதே முக் கியமே தவிர, தண்ணீரல்ல (விடுதலை, 9.10.1957) என்று கூறியவர் தந்தை பெரியார்.

சமூக மாற்றத்தில் காந்தியார் எங்கே இருக்கிறார், தந்தை பெரியார் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை இந்த இடத்தில் நன்கு தெரிந்து கொள்ளவேண்டும்!

பாம்பும் நோகக்கூடாது; பாம்படித்த கொம்பும் நோகக்கூடாது என்கிற அணுகுமுறைதான் காந்தியார் அவர்களுடையது.

வைக்கம் போராட்டத்தில் கூட என்ன நடந்தது? தந்தை பெரியாரின் நிலைப்பாடு என்ன? காந்தியாரின் நிலைப்பாடு என்ன என்பதை இந்து ஏட்டில் (12.3.1925) வெளிவந்த ஒரு செய்தியே போதுமானதாகும்.

Walls Round Vaikom Roads,
(From Our Special Correspondent)

Quilon, March 12, (1925)
‘‘Mr. V.V.S. Iyer of the Tamil Gurukulam at Shermadevi was at Vaikom for the past two days and had a long interview with Mahatmaji on the question of interdining the Vidyalaya. It is understood that Mahatmaji did not wish that there should be any compulsion in the matter, and if any pupil had scruples such scruples had to be respected, Mahatmaji was also against the levelling down of the caste system, because it was a necessary implication of the Hinduism.
‘‘Devosom Commissioner Mr. Raja Raja Varma also interviewed Mahatmaji yesterday with orthodox pundits and discussed the situation at Vaikom. It appears that the Devosom authorities contemplate raising another wall to cover the temple roads on the four sides thus effectively preventing not only Untouchables but also Christians and Mohammodans from entering the prakarams.’’

கிலான் மார்ச் 12 (1925)

வைக்கத்தில் தங்கி இருந்த காந்தியாரை திரு. வ.வே.சு. அய்யர் சந்தித்து சேர்மாதேவி குரு குலத்திலே சமபந்தி போஜனம் நடைபெற்றாக வேண்டும் என்று ஒரு சாரார் வற்புறுத்தி வரு வதைப்பற்றி கருத்துக் கேட்டார். அதற்குக் காந்தி யார், சமபந்தி போஜனம் என்பது வற்புறுத்தலின் அடிப்படையில் நடக்கக் கூடாது. மேலும் ஒரு சாரார் மற்றவர்களோடு கலந்து அமர்ந்து சமபந்தி போஜ னம் செய்ய விரும்பவில்லை என்றால், அவர்களின் அந்த உணர்வு மதிக்கப்பட்டாகவேண்டும்.

ஜாதி என்பது ஒழிக்கப்பட்டு சரிசமமாக ஆக்கப் படவேண்டும் என்பதை மகாத்மாஜி விரும்பவில்லை. ஜாதி அமைப்பு என்பது இந்து சமூகத்தின் முக்கிய அம்சம்.

வைக்கம் தேவஸ்தான கமிஷனர் திரு. ராஜவர்மா சில வைதிகப் பண்டிதர்களுடன் சென்று மகாத் மாவைச் சந்தித்து, வைக்கத்தில் நிலவி வரும் சூழ்நிலைபற்றி விவாதித்தனர்.

விவாதத்திற்குப் பின்பு தேவஸ்தான அதிபதி கள், தீண்டத்தகாதவர்கள் மட்டுமல்ல; கிறிஸ்தவர் கள், முஸ்லிம்களும்கூட கோயில் பிரகார வீதிகளில் நுழையாவண்ணம் கோயிலைச் சுற்றி நான்கு புறங்களிலும் மற்றுமொரு சுவரை எழுப்பினர்.

இதுதான் இந்து ஏடு வெளியிட்ட செய்தியாகும்.

வைக்கம் தேவஸ்தான ஆணையர் ராஜவர்மாவும், வைதிகப் பார்ப்பனர்களும் காந்தியாரைச் சந்தித்து உரையாடியதன் விளைவு - ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது போல தீண்டத்தகாதவர்கள் என்றுசொல்லப்படு பவர்கள் மட்டுமல்லர்; கிறிஸ்தவர்கள், முஸ்லிம் களும்கூட கோயில் பிரகார வீதிகளில் நுழையா வண்ணம் கோயிலைச் சுற்றி நான்கு புறங்களிலும் மேலும் ஒரு சுவரை எழுப்பினர் என்று கூறுகிறது இந்து ஏடு.

இவ்வளவு இடர்ப்பாடுகளையும் தாண்டிதான் தந்தை பெரியார் சத்தியாக்கிரகம் நடத்தி வைக்கம் வீரராக வீறுநடை போட்டு வெளிவந்தார் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

------------------------”விடுதலை” தலையங்கம் 29-11-2010

28.11.10

தன்னைப் பற்றி....பெரியார்

என்னைப் பற்றி....

தந்தை பெரியார்

மக்களை அறிவாளியாக்கும், துறையில் மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் துறையில் யார் பாடுபட்டாலும் அவர்கள் பொது மக்களால் வெறுக்கப்படவும், நாத்திகர்கள் என்று கூறப்படவும், தொல்லைக்கு ஆளாக்கப்படவும், கொல்லப்படவுமான தன்மை உலகிலேயே இயற்கையாக இருந்து வருகிறபோது, அந்த நிலை நம் நாட்டில், நம் மக்கள் இருக்கும் யோக்கியதையில் ஏற்படாமல் இருக்க முடியுமா? அதலால், அந்த நிலைக்கு ஆளாகும் தன்மையை எதிர்பார்த்தே நான் இந்தக் காரியத்தில் பிரவேசித்துத் தொண்டாற்றி வருகிறேன்.

இதன் பயனாக நான் பலமுறை சிறை சென்றிருக்கிறேன்; வாழ்க்கையில் பல இன்னல்களை அடைந்திருக்கிறேன்; இதற்காக ஏற்படுத்தப்பட்ட இயக்கத்திற்கு என் பெயராலும், இயக்கத்தின் பெயராலும் அரசாங்கத்தாராலோ, அரசாங்கத்தில் உள்ள மேல் ஜாதி மக்களாலோ அல்லது இந்தக் கருத்துக்கு மாறுபட்டவர்கள் என்பவர்களாலோ எனது முயற்சியைத் தடுக்கவும், ஸ்தாபனத்தை ஒழிக்கவுமான தன்மையாக ரூபாய் 15,00,000 (பதினைந்து இலட்ச ரூபாய்)க்கு மேல் கடந்த காலத்துக்கு என்று இன்கம் டாக்ஸ் வரி (வருமான-வரி) போடப்பட்டிருக்கிறது என்பதுடன் நிகழ்காலத்திற்கும் ஆண்டுக்கு ஒரு இலட்சம் ரூபாய் போல் இன்கம்டாக்சும் போடப்பட்டும் வருகிறது.

இவை தவிர நம் நாட்டில் உள்ள எல்லாப் பார்ப்பனராலும் வெறுக்கப்பட்டிருக்கிறேன். மேல் ஜாதியார் என்று பார்ப்பனரைப் போல் தங்களைக் கருதிக் கொண்டிருக்கும் எல்லாச் சைவர்கள் என்பவர்களாலும் பெரிதும் வெறுக்கப்பட்டிருக்கிறேன். இவை மாத்திரமா? 100 க்கு 90 கிறிஸ்துவர்களாலும் வெறுக்கப்படுகிறேன். இஸலாமியர்களாலும் வெளிப்படையாய் வெறுக்கப்படவில்லை என்றுதான் நினைக்கிறேன்.

இவற்றுள் ஒரு அதிசயமென்னவென்றால் ஆதி திராவிட மக்களுக்குள் பதவியில் உள்ள சிலர் தவிர, ஒருவர்கூட எனக்கு ஆதரவாளர் கிடையாது. யாராவது சிலர் அவர்கள் சொந்த சுயநல காரியங்களுக்கு வருவார்கள். அவ்வளவுதான். சிலர் எதிரிகளாகவே, அலட்சியப்படுத்துபவர்களாகவே ஆகிவிட்டார்கள். எதற்கு இவற்றைச் சொல்கிறேன் என்றால் என் இந்தத் தொண்டுக்கு ஆதரவாளர்களாக, பாராட்டுபவர்களாகப் பெரும்பாலான மக்கள் இல்லை என்பதைக் காட்டுவதற்காகவேயாகும்.

இதில் நான் மகிழ்ச்சியும், பெருமையும் அடையத்தக்கதும், குறிப்பிடத்தக்கதுமான காரியம் என்னவென்றால் என் இயக்கத்தில் (இந்தத் தொண்டுக்கு ஏற்பட்ட இந்த இயக்கத்தில்) வேறு எந்த இயக்கத்தையும் விடக் கட்டுப்பாடும், அதற்கேற்ற கடமைப்பாடும் நல்ல அளவுக்கு இருந்துவருகின்றன. இயக்கத் தோழர்கள் யாராயிருந்தாலும், பிடிக்காவிட்டாலும் அவர்கள் வெளியே போய்விடுகிறார்கள் என்பதுதான். நாத்திகர் என்பதற்காக யாரும் பயப்படாதீர்கள். சாக்ரட்டீஸ் நாத்திகர்; பெர்ட்ரண்ட் ரஸல் நாத்திகர்; பெர்னாட்ஷா நாத்திகர்; இங்கர்சால் நாத்திகர்; நேரு நாத்திகர். மற்றும், இயேசு-நாதரும் நாத்திகர் என்றே சொல்லப்பட்டு கொலையுண்டார்; முகமது நபியும் நாத்திகர் என்றே சொல்லப்பட்டு அடித்து விரட்டப்பட்டார். புத்தர்களும், சமணர்களும் நாத்திகர் என்றே சொல்லப்பட்டு அவர்களின் வீடுகள், மடங்கள் கொளுத்தப்பட்டு வெகுபேர் கொல்லப்பட்டு, கழுவேற்றப்பட்டு, அவர்கள் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு அல்லலுற்றனர். இவர்கள் தவிர, அமெரிக்காவில் பல நாத்திகச் சங்கங்களில் மூன்று கோடிக்கு மேல் வெளிப்படையான நாத்திகர்கள். இங்கிலாந்திலும் அதுபோலவே அரைக்கோடிக்கு மேலும், ஜெர்மனியில் ஒரு கோடியும், சைனாவில் 60 கோடியும், ரஷ்யாவில் 25 கோடியும், ஸ்பெயினில் முக்கால் கோடியும், பிரான்சில் முக்கால் கோடியும், பர்மாவில் அரைக்கோடியும், சயாமில் ஒரு கோடியும் இருக்கிறார்கள்.

இப்படியாக நூற்றுக்கணக்கான கோடி மக்கள் நாத்திகர்களாக இருக்கிறார்கள். பல தேசங்கள் நாத்திக தேசங்களாகவே இருந்து வருகின்றன. இத்தனைக்கும் அவர்கள் எல்லோரும் பகுத்தறிவு கொண்ட தேச மக்கள் ஆவார்கள்.

----------------------------(தந்தை பெரியார் பிறந்த நாள் மலர் - 1973)

27.11.10

வைக்கம் போராட்டம் - சிறையில் பெரியார்!


“With fetters on his legs, a Convict’s cap on his head. A loin cloth reaching down his knee and a wooden number plate around his neck, E.V. Ramaswamy is working with murderers and dacoits. He is doing double the work that is generally done by a convict. This sacrifice of a caste Hindu for the freedom of the untouchables of kerala gave us new life. The noble mission of this great movement has prompted him to sacrifice his all.
Is there not anybody here with the maturity, magnanimity, experience, enthusiasm and patriotism that E.V.R. has? Are they not ashamed of themselves when they see this great leader who has come to suffer for the sake of the people of this state? is it not time for the elderly and experienced people of Kerala to rise from their easy chairs ”

இதன் தமிழாக்கம்:

கால்களில் விலங்குச் சங்கிலி, தலையிலே கைதிகள் அணியும் ஒரு குல்லாய் முழங்காலுக் குக் கீழே தொங்குகின்ற ஒரு வேட்டி, கழுத்தில் கைதி எண் குறிக்கப்பட்ட ஒரு மரப்பட்டை. இவற்றோடு ஈ.வெ. ராமசாமி கொலைகாரர்களோடும், கொள்ளைக் காரர்களோடும் வேலை செய்து கொண்டிருக்கின்றார். தண்டனை அடைந்த ஒரு சாதாரணக் கைதி எவ்வளவு ஒரு நாளைக்கு வேலை செய்வானோ, அதுபோல் இருமடங்கு வேலை செய்கிறார்.

ஒரு ஜாதி இந்து என்று சொல்லக்கூடிய நிலையிலே உள்ள ஒருவர் கேரளத்திலுள்ள தீண்டத்தகாத மக்களுக்கு உரிமை வாங்கிக் கொடுப்பதற்காக செய்த தியாகம் நமக்கு புதுவாழ்வு தந்திருக்கிறது. இந்தப் பெரிய உன்னத இலட்சியத்திற்காக அவர் அனைத்தையும் இழக்கத் தயாராக இருக்கிறார். ஈ.வெ.ரா. அவர்களுக்கு இருக்கக்கூடிய நாட்டுப்பற்று, உற்சாகம், அனுபவம் பெருந்தன்மை, பெரும் பக்குவம் இவைகளெல்லாம் உடைய இன் னொருவரை இந்த நாட்டிலே அந்த அளவுக்குக் காணமுடியுமா? இந்த மாநிலத்து மக்கள் அனுபவிக்கிற கொடுமையை நீக்கவேண்டும் என்பதற்காகத் தாம் எவ்வளவு கஷ்ட நஷ்டங்களை வேண்டுமானாலும் ஏற்கலாம் என்று சொல்லி ஒரு தலைவர் வந்தாரே _ அதைப் பார்த்து இந்த மாநில மக்களாக இருக்கிற யாருக்குமே வெட்க மேற்படவில்லையா? கேரளத்தின் முதிர்ந்த அனுபவ மிக்க தலைவர்கள் தங்கள் சாய்வு நாற்காலியைத் தூக்கியெறிந்துவிட்டு தங்கள் பங்கைச் செலுத்த இப்போதாவது வர வேண்டாமா?

- கே.பி.கேசவமேனன்

மலையாளத்தில் தன் வரலாறு, பக்கம் 108.

(வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்டு திருவனந்தபுரம் சிறையில் தந்தை பெரியார் இருந்த கோலத்தை பக்கத்தில் உள்ள படம் சித்திரிக்கின்றது.)



வைக்கம் சத்தியாக்கிரக வெற்றிக் கொண்டாட்டம்

ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர்

தந்தை பெரியார் உரை

முடிவுரையில், தனக்கும் தமது மனைவிக்கும் செய்த உபச்சாரத் திற்காக நன்றி செலுத்துவதோடு சத்தியாகிரக இயக்கத்தின் ஜெயிப்பைப் பற்றியும், தோல்வியைப் பற்றியும் பேசுவதற்கு அதற்குள் காலம் வந்து விடவில்லை தெருவில் நடக்க உரிமை கேட்பவர்களைச் சிறைக்கு அனுப்பிய அரசாங்கம், தெருவில் நடப்பதற்கு இப்போது நமக்கு வேண்டிய உதவி செய்ய முன் வந்திருப்பதைப் பார்த்தால் சத்தியாகிரகத்திற்கும், மகாத்மாவிற்கும் எவ்வளவு சக்தி இருக்கிறதென்பது விளங்குமென்றும். சத்தியாகிரக ஆரம்பத்தில் பிராமணர்கள் கட்சியில் இருந்த அரசாங்கத்தார், இப்போது பிராமணர்களுக்கு விரோதமாகவே தீண்டாதாரென்போரை கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு சர்க்காரார் செல்லுவதை நாம் பார்க்கிறபோது நமக்கே சத்தியாகிரகத்தின் தன்மையைப் பற்றி ஆச்சரியப் படத்தக்கதாய் இருக்கிறது.

சத்தியாகிரகத்தில் ஏற்பட்ட கஷ்டங்களை நாம் பொறுமையாய் அனுப வித்து வந்ததால் இவ்வித சக்தியை இங்கு காண்கிறோம். பலாத்காரத்திலோ, கோபத்திலோ, துவேஷத்திலோ, நாம் இறங்கியிருப்போமேயானால் இச்சக்திகளை நாம் ஒருக்காலும் கண்டிருக்கவே மாட்டோம். சத்தியாகிரகத் தின் உத்தேசம், கேவலம் நாய், பன்றிகள் நடக்கும் தெருவில் நாம் நடக்க வேண்டுமென்பதல்ல. மனிதனுக்கு மனிதன் பொதுவாழ்வில் வித்தியாசம் இருக்கக் கூடாதென்பதுதான். அந்த தத்துவம் இந்த தெருவில் நடந்ததோடு முடிந்துவிடவில்லை. ஆகையால், தெருவில் நிரூபித்த சுதந்திரத்தை கோவிலுக்குள்ளும் நிரூபிக்க வேண்டியது மனிதர் கடமை. மகாத்மா காந்தியும், மகாராணியாரைக் கண்டு பேசிய காலத்தில் மகாராணியார் மகாத்மாவைப் பார்த்து இப்பொழுது தெருவைத் திறந்து விட்டுவிட்டால் உடனே கோயிலுக்குள் செல்ல பிரயத்தனப்படுவீர்களேயென்று கேட்டார்கள். மகாத்மா அவர்கள் ஆம், இதுதான் என்னுடைய குறியென்றும், ஆனால் கோயிலுக்குள் செல்ல உரிமை வேண்டி ஜனங்கள், போதுமான பொறுமையும், சாந்தமும் அவசியமான தியாகமும் செய்யத் தயாராயிருக்-கிறார்களாவென்று நான் அறியும் வரையில் அக் காரியத்தில் பிரவேசிக்க மாட்டேனென்றும், அதற்கு வேண்டிய காரியங்களை அது வரையில் செய்து கொண்டிருப்பே னென்றும் சொன்னார்.

வைக்கம் சத்தியாகிரகத்திற்கு விரோதியாயிருந்தவர்கள் பிராமணர்களே ஒழிய அரசாங்கத்தார் அல்லவென்பதை அரசாங்கத்தார் நிரூபித்துக் காட்டி விட்டார்கள். மனித உரிமை அடைய அந்நிய மதங்களுக்குப் போவது மிகவும் இழிவான காரியமாகும். அப்படி அவசியமிருந்தாலும் கிருதுவ மதத்திற்காவது, மகமதிய மதத்திற்காவது செல்லலாமேயொழிய ஆரிய சமாஜத்திற்குப் போவது எனக்கு இஷ்டமில்லை. ஏனென்றால், ஆரிய சமாஜத்திற்குப் போவதனால் பொருளில்லாத அர்த்தமற்ற, பூணூல் போட்டுக் கொள்வதோடு பொருளறியாத சந்தியாவந்தனமும் செய்து கொள்ள வேண்டும்.

இப்படி ஒரு காலத்தில் பூணூல் போட்டுக் கொண்டு சந்தியாவந்தனம் பண்ணினவர்கள்தான் இன்றையத் தினம் நமது சுதந்திரத்திற்கும், சீர்திருத்தத்திற்கும் விரோதிகளாயிருக்கின்றார்கள். அந்த நிலைமைக்கு நீங்களும் வரக்கூடாதென்று நினைப்பீர்களேயானால் கண்டிப்பாய் அந்தக் கூட்டத்தில் சேராதீர்கள்.

(வைக்கத்தில் வெற்றிக் கொண்டாட்டத்தில் 29.11.25 ஆம் தேதி ஆற்றிய தலைமைச் சொற்பொழிவு) குடிஅரசு - சொற்பொழிவு - 06.12.1925)


தந்தை பெரியார் நினைவகம் திறப்பு விழா

தமிழர் தலைவர் ஆற்றிய உரை

31.1.1994 திங்களன்று மாலை கேரள மாநிலம் வைக்கத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் நினைவகம் மற்றும் உருவச்சிலை திறப்பு விழாவிற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஆற்றிய தலைமை உரை:

இந்தியாவின் சமூக நீதிக்களத்தில் நடைபெற்ற முதல் மனித உரிமைப் போரான வைக்கம் சத்தியாகிரகத்தில் போராடி அவ்வறப்போர் முழு வெற்றிபெறுவதற்கு உழைத்த வைக்கம் வீரர் தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்கு தக்கதோர் நினைவுச் சின்னத் திறப்பு விழாவாகிய இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கும் இந்த அரிய வாய்ப்பினை _ தந்தை பெரியார் அவர்களால் துவக்கப்பெற்ற சமுதாயப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகத்தின் தொண்டர்களுக்குத் தொண்டனான எனக்கு அளித்த தமிழக அரசுக்கு குறிப்பாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரி-வித்துக் கொள்கிறேன்.

வைக்கம் சத்தியாகிரகத்தினைத் துவக்கிய டி.கே. மாதவன், ஜார்ஜ்ஜோசப், குரூர் நீலகண்டன் நம்பூதிரி, கே.பி. கேசவமேனன், டாக்டர் பல்பு, பெரியாரின் துணைவியார் அன்னை ஈ.வெ.ரா. நாகம்மையார், பெரியாரின் தங்கை திருமதி எஸ்.ஆர். கண்ணம்மாள், கோவை அய்யாமுத்து, எம்.பெருமாள் நாயுடு, ஏ.கே. பிள்ளை, குஞ்சுராமன் போன்ற எண்ணற்ற அறப்போர் வீரர்களுக்கு இந்த நேரத்தில் நமது வீரவணக்கத்தினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த நினைவுச் சின்னம் அமைவதற்கான இடத்தை வழங்கிய கேரள அரசுக்கு தமிழக மக்களின் சார்பில் நமது உளப்பூர்வமான நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த நினைவுச் சின்னம் வைக்கம்வீரர் தந்தை பெரியாருக்கு அமைந்துள்ள நினைவுச் சின்னம் என்றபோதிலும், அவர்களுடன் இருமுறை சிறையேகியும், லட்சியம் என்பதை அடைய கஷ்ட நஷ்டங்கள் என்ற விலையைக் கட்டாயம் கொடுத்தே தீரவேண்டும் என்ற தந்தை பெரியாரின் அறிவுரைக்கேற்ப கடுமையான சோதனைகளுக்கு ஆளாகி, சிறைவாசம் ஏற்ற எண்ணற்ற வீரர், வீராங்கனைகளுக்கும் உரியது என்றே கொள்ளலாம். தலைவர் பாராட்டப் பெற்றால் அப்படையே பாராட்டப்பெற்றது என்பதுதானே பொருள்?

தந்தை பெரியார் அவர்களது நூற்றாண்டு விழாவையொட்டி மாண்புமிகு மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைந்திருந்த மத்திய அரசு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டு அவர்களைச் சிறப்புச் செய்தது. மாண்புமிகு எம்.ஜி.ஆரின் தமிழக அரசு அதனை ஒரு ஆண்டு முழுவதும் கொண்டாடி பல்வேறு வகையில் அவர்களுக்கு வரலாற்றுப் பெருமை மிக்க சிறப்புகளைச் செய்தது!

அப்போது தமிழக அரசால் அமைக்கப்பட்ட நூற்றாண்டு விழாக் குழு-வினர் முடிவுக்கேற்பவே இந்த நினைவுச் சின்னம் _ சிலை _ பூங்கா ஏற்பாடுகள் உருவாகின.

அதன்படி 3.11.1985 அன்று வைக்கம் நகரில், வைக்கம் நகரில், வைக்கம் வீரருக்கு நினைவகம் அடிக்கல் நாட்டு விழா, தமிழக அரசு வார்பில், கேரள அரசின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது. தமிழக அரசின் சார்பில் சீரிய பகுத்தறிவுச் செம்மல் தமிழக நிதியமைச்சர் நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்களும், கேரள அரசின் சார்பில் அன்றைய வருவாய்த்துறை அமைச்சர் பி.ஜே. ஜோசப் அவர்களும் முக்கிய பங்கேற்று விழா நடந்தது!

மீண்டும் இன்று எழிலுடனும், ஏற்றத்துடனும் திறப்பு விழா நிகழ்ச்சி அதே நிதியமைச்சரால், அதே அ.தி.மு.க. அரசின் சார்பில் நடைபெறுகிறது!

வைக்கம் போராட்டத்தின் வரலாறு எப்படிப்பட்ட தலை சிறந்த மனித உரிமைப் போரின் வரலா-று என்பது பலருக்கும் தெரியாது! கேரளத்தில் தலைசிறந்த, சமூக நீதிப் புரட்சியினை உருவாக்கிய பெருமைக்குரிய ஸ்ரீ நாராயணகுருவின் தொண்டாலும் மற்றும் பல்வேறு காலகட்ட எழுச்சிகளாலும் இன்று சமூக நிலைமை பெரிதும் மாறிவிட்டதால், இளைய தலைமுறைக்கும், இனிவரக்கூடிய தலைமுறைக்கும் எப்படிப்பட்ட நெருப்பாற்றை அன்று ஒடுக்கப்பட்ட கீழ் ஜாதி மக்கள் நீந்தினர் என்பது புரியாது!

பதிந்த வரலாற்றுச் சுவடுகள் என்னவென்பதே பலருக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை!

மண்டல் கமிஷன் அறிக்கையில் (பக்கங்கள் 14_15) சுட்டிக்காட்டப்பட்டுள்ள சில செய்திகள் அதனைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

இந்து மதத்தின் வர்ணாசிரம தர்மமாம் ஜாதி அடிப்படை எவ்வளவு மோசமான கட்டு என்பதை அது துல்லியமாக விளக்குகிறது!

“The toddy-tappers of Malabar and the east coast lzhavas and Shanars, were not allowed to carry umbrellas, to wear shoes or golden ornamnents, to milk cows or even to use the ordinary language of the country.”

மலபார் மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் வசித்த கள்ளிறக்குவோர், ஈழவர்கள், சாணார், குடை எடுத்துக்கொண்டு செல்லக்கூடாது; செருப்பு அணியவோ, தங்க நகைகளையோ அணியவோ கூடாது.

பசு மாடுகளைக் கறக்க உரிமையற்றவர்கள், சாதாரண மொழியைக்கூட அவர்கள் பயன்படுத்தக்கூடாது!

“The Shanar, Toddy-tapper of Madras, contaminates a Brahmin if he approches the latter within twenty-four paces... A Nayar may approach a Nambudiri Brahmin but must not touch him, while a Tiyan must keep himself at the distance of thirty-six steps from the Brahmin, and a Pulayan may not approach him within ninety-six paces. A Tiyan must keep away from a Nayar at twelve paces, while some castes may approach the Tiyan, though they must not touch him”

உயர்ஜாதி ஒரு பார்ப்பனர்முன்பு 24 அடிகளுக்குள் சென்னையைச் சார்ந்த கள்ளிறக்கும் சாணார் வந்தால், அவரைத் தீட்டாக்கி விடுகிறார்!

நம்பூதிரிப் பார்ப்பனர் அருகில் நாயர் வரலாம்; தொடக்கூடாது. ஆனால், அந்தப் பார்ப்பனரிடமிருந்து தீயன் 36 அடி தள்ளியே நிற்கவேண்டும். புலையன் 96 அடிகள் தள்ளி நிற்க-வேண்டும்.

நாயரிடமிருந்து தீயன் 12 அடிகள் தள்ளி நிற்கவேண்டும். மற்ற ஜாதிக்காரர்களை நெருங்கலாம்; ஆனால் தொடக்கூடாது.

இப்படிப்பட்ட கொடுமை இந்த வைக்கத்தில் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஈழவர்கள், நாடார்கள், தீயர்கள் நடந்து செல்லவும் உரிமையற்றவர்கள் என்ற நிலை இருந்தது!

அவ்வீதிகளில் சுதந்திரமாக நடமாடிய நாய்களும், பன்றிகளும், கழுதைகளும், எந்தவித சத்தியாகிரகப் போராட்டமும் செய்யாமலேயே அந்த உரிமையைப் பெற்றன; ஆனால், ஆறறிவு பெற்ற மனிதச் சகோதரர்களும் ஆதிக்கக்காரர்களால் கற்பிக்கப்பட்ட கீழ்ஜாதியில் பிறந்த ஒரே ஒரு காரணத்திற்காக அவர்கள் எவ்வளவு பெரிய கல்வி, உத்தியோக, படிப்புத் தகுதி படைத்தவராயினும்கூட நடந்து செல்ல முடியாது என்பதை கண்டுதான் வைக்கம் அறப்போர் அன்று வெடித்தது! ஜாதி ஆணவக் கொடி உச்சாணிக் கொம்பில் பறந்தது; மூடநம்பிக்கை காரணமாக, வைக்கம் கோயிலில் நம்பூதிரிகள் சாப்பிட்ட எச்சிலைகள் அரையணாவுக்கு விற்பனை செய்யப்-பட்டன; அதை வாங்கிச் சாப்பிட்டு நோய்நொடி போக்கிக் கொள்ளவும், குழந்தையற்றவர்கள் குழந்தை பெற தகுதி பெற்றவர்களாக ஆக முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

அன்றைய திருவாங்கூர் அரசு பழைய சனாதன ஏற்பாட்டினைப் பாதுகாத்த நிலையில்தான் அப்போராட்டம் நடைபெற்றது.

தந்தை பெரியார் அவர்களுக்கு முன்பே, டி.கே. மாதவன், ஜார்ஜ்ஜோசப், குரூர் நீலகண்டன், கே.பி. கேசவமேனன் போன்ற தலைவர்கள் அதனை துவக்கி உரிமைக் குரல் கொடுத்ததை நசுக்கும் வகையில் அவர்களைச் சிறையில் அடைத்துவிட்டது அன்றைய அரசு.

போராட்டம் பிசுபிசுத்து விடும் என்று நம்பிய நேரத்தில்தான் தந்தை பெரியார் இராமசாமி நாயக்கர் என்று அன்று கேரள மக்களால் அழைக்கப்பட்டவர் தமிழ் நாட்டிலிருந்து வந்து ஒரு புதுத் திருப்பத்தை அந்த சத்தியாக்கிரகத்திற்கு உருவாக்கித் தந்தார்கள்!

வரலாற்றுப் பேராசிரியரும் பின்பு பல்கலைக் கழகத் துணைவேந்தராக இருந்தவருமான பேராசிரியர் டி.கே. இரவீந்திரன் அவர்கள் தனது ஆய்வு நூலான “Vaikom Satyagraha and Gandhi” என்ற நூலில் இந்த வைக்கம் போராட்டம்பற்றி மிக அரிய செய்தி-களைக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் தந்தை பெரியார் அவர்கள் வருகையாலும், பங்கெடுப்பினாலும் எப்படி ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது என்பதைக் குறிப்பிடுகிறார்.

“Mr. Ramasami Naicker arrived on that day from Erode to take charge of the campaign. If more determined attempts are made to push past the police picquets, Mr. Pitt has all arrangements in hand for the erection of barricades. His latest report suggests that satyagrahists are deliberately provoking the rank and file of the police to loose their tempers but have failed dismally. Mr. S. Srinivasa Iyengar arrived from Madras on the 17th and had an informal conference with the caste - Hindus which seems to have come to nothing, before proceeding to Trivandrum. The latest news is the Mr. Perumal Naidu has relieved Mr. Ramasami Naicker as O.C., Satyagraha Head-Quarters”

திரு. ராமசாமி நாயக்கர் போராட்டத்திற்குப் பொறுப்பேற்க ஈரோட்டிலிருந்து அன்றே வந்து சேர்ந்தார். போலீஸ் காவல் தடைகளை மீறி மேலும் ஏதேனும் திட்டமிட்ட முயற்சிகள் நடந்தால், அதைத் தடுக்க திரு. பிட் எல்லா ஏற்பாடுகளையும் கைவசம் வைத்திருக்கிறார். சத்தியாக்கிரகிகள் திட்டமிட்டு போலீசாரின் கட்டுப்பாட்டைத் தளரச் செய்ய முயற்சித்து தோல்விகண்டனர் என்று அவருடைய சமீபத்திய குறிப்பு காட்டுகின்றது.

“But the support the Vaikkom Satyagrahists received from Madras, both in money and leadership, was very great and impressive. E.V. Ramasami Naicker’s lead gave a new life to the movement. His stirring appeal on the eve of his journey to Kerala had made a deep impression on the mind of Tamil Nadu” என்கிறார் ரவீந்திரன்.

ஆனால், வைக்கம் சத்தியாக்கிரகிகளுக்கு சென்னையிலிருந்து கிடைத்த ஆதரவு அபரிமிதமாகவும், மனதைக் கவரக் கூடியதாகவும் இருந்தது, நிதியாகவும் கிடைத்தது. இயக்கத்தை நடத்துவதற்கு தலைமையையும் தந்தது. ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் தலைமை இயக்கத்திற்குப் புத்துயிர் ஊட்டியது. கேரளாவிற்கு புறப்படுவதற்கு முன் தமிழக மக்களுக்கு அவர் விடுத்த உணர்ச்சிமிக்க வேண்டுகோள் தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களில் பசுமரத்தாணிபோல் பதிந்தது

“Ramasami Naicker’s speeches were especially impressive and their savage force cut through the prestige of the Travancore Government. He was arrested and sent to Jail several times’’

ராமசாமி நாயக்கருடைய பேச்சு மக்கள் மனத்தில் எளிதில் பதியக்கூடிய-தாகவும், காரசாரமாகவும் இருந்தது. அவருடைய பேச்சின் வேகம் திருவிதாங்கூர் அரசின் கவுரவத்தை சிதைக்கக் கூடியதாகவும் இருந்தது. எனவே அவர் பல தடவை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்! என்று எழுதுகிறார்.

தந்தை பெரியார் அவர்களோடு முதல் முறையாக மகளிர் அப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்படி ஈடுபட்டவர்களில் தந்தை பெரியாரின் துணைவியார் அன்னை நாகம்மையாரும், பெரியாரின் சகோதரியார் எஸ்.ஆர். கண்ணம்மாளும் தமிழ்நாட்டிலிருந்து வந்து ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்!

இருமுறை சிறை சென்ற தந்தை பெரியார் அவர்கள் இரண்டாவது ஆறுமாதக் கடுங்காவல் தண்டனையை எப்படி அனுபவித்தார் என்பதை திரு. கே.பி. கேசவமேனன் அவர்கள் அவரது சுயசரிதையில் வர்ணித்துள்ளார்!

சத்தியாக்கிரகிகளை எதிர்த்து அடக்குமுறைகள் மட்டும் பாயவில்லை. மூடநம்பிக்கை வில்லால் யாகம் என்ற அம்பை ஏவினர்! சத்ரு சங்கார யாகமும் நடத்தினர்.

யாகம் என்ன பலனைத் தந்தது என்பதை உலகறியும்! இறுதி வெற்றி பெரியாருக்கு என்பது இலட்சிய வரலாறு ஆகும்.

1974இல் வைக்கம் போராட்டத்தின் பொன் விழா கொண்டாட்டங்களை இந்திய பிரதமர் திருமதி இந்திரா காந்தி துவக்கி வைத்தார். அதன் நிறைவு விழா நாளன்று தலைமை விருந்தினராக அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்களை விழாக் குழுவினர் (26.4.1975) அழைத்தனர். அன்னை மணியம்மையாரோடு அப்போது பங்கேற்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது.

வைக்கம் சத்தியாக்கிரகம் நான்கு தூண்களைக் கொண்டது என்று கூறலாம். சமூக நீதி, மனித உரிமை, மகளிர் பங்கேற்று போராடுதல், தன்னலம் மறுக்கும் அறப்போரின் சக்தி ஆகியவைகளே அந்நான்கும் ஆகும்!

இந்த அறப்போர் ஒரு வெற்றியை மட்டும் ஈட்டித் தரவில்லை.

இது ஒரு யுகப் புரட்சியினைத் தோற்றுவித்து என்னலாம்!

சமூக நீதிச் சூரியனாக வடபுலத்தில் உலவிய வரலாற்று நாயகர் பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் 1927-இல் மகத் என்ற இடத்தில் பொதுக் குளத்தினை ஒடுக்கப்பட்ட மக்களும் பயன்படுத்த நடத்திய சத்தியாக்கிரகத்திற்கு இது முன்னோடி. வைக்கத்தின் தாக்கமே அந்தப் போராட்டம் என்பதை அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்று நூலில் அதன் ஆசிரியர் தனஞ்செய்கீர் அவர்களே

But the most outstanding event of the year concerning the struggle of the Depressed Classes was the Satyagraha or the passive resistance Sponsored by Ramaswami Naicker, a non-Brahmin leader, at Vaikam in the Travancore State for vindicating the rights of the Untouchables to use a certain road to which they were forbidden entry. Its moral pressure and the spirit of righteous assertion had a tremendous effect, and the orthodox Hindus, for a while, regained their civic sense and sanity, and the road was thrown open to the Untouchables.
Another incident took place at this time, It shook both sensible touchables and self-respecting Untouchables. In March 1926 an untouchable by name Murugesan entered a Hindu temple in Madras despite the customary ban on the and Untouchables. He was discovered, arrested and covicted on a charge of defiling the Hindu temple.
Ambedkar was watching these developments very carefully. He referred to the Vaikam Struggle, a few months later, very touchingly in one of his editorials, on the eve of the Mahad Satyagraha. These were notable events. Coming events cast their shadows before! என்று குறிப்பிடுகிறார்கள்.

வைக்கம் சத்தியாகிரகம் இதுபோன்ற உணர்வுகளை மடைதிறந்த வெள்ள மாக ஆக்கிவிட்டதற்கும் பயன்பட்ட ஒரு முன்னோடி சமூகநீதிப் போராட்ட-மாகும்!

சுமார் 70 ஆண்டுகள் ஆன நிலையில் இன்றும் ஜாதி தனது இரும்புப் பிடியை விட்டு நகர்ந்துள்ளதா?

இன்னமும் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சரானாலும்கூட ஒரு மேல் ஜாதியரான சம்பூர்ணானந்து சிலையை திறக்க அவரால் முடியவில்லை. காசி பல்கலைக் கழகத்து மாணவர்களே அவர் திறந்த சிலையை கங்கை நீரை விட்டு தீட்டுப் போக்கும் வெட்கக்-கேடான நிலைதானே உள்ளது?

இன்னமும் சுடுகாடுகளில் கூட பேதம்தானே உள்ளன? இன்னமும் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களும் சூத்திர மக்களும் அர்ச்சகராக முடிய-வில்லையே!

இப்போதுதானே சில முட்டுக்-கட்டைகள் அகற்றப்படுகின்றன!

ஜாதி இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே என்றார் தமிழ்நாட்டில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். கேரளத்தில் குமரன் ஆசான் போன்ற சமூக எழுச்சிக் கவிஞர்கள் குரல் கொடுத்தும் எல்லா இடங்களிலும் ஜாதி இருக்கிறது என்பது மறைக்கப்பட முடியாத உண்மை அல்லவா?

எனவே, ஜாதியற்ற ஒரு சமுதாயம் காணும் வகையில் தந்தை பெரியாருக்கும் நாராயண குருவிற்கும், அம்பேத்கருக்கும், ஜோதிபா புலேயிக்கும் உண்மையான நினைவுச் சின்னங்கள், ஜாதியைக் காப்பாற்றும் அமைப்புகள் எவையும் அகற்றப்பட்டாக வேண்டும் என்பதே! மலேரியாவை ஒழிக்க கொசு உற்பத்தி கேந்திரமே அழிக்கப்படுவதைப் போல மூலத்தை ஒழித்தாக வேண்டும்.

அதுதான் அறிவியல் அணுகுமுறை.

அதற்கு அத்துணை பேரும் ஒத்துழைக்க முன் வர வேண்டும்.

ஜாதிகள் ஒழியும் வரை ஜாதியால் ஏற்பட்ட கல்விக் கேடுபாடுகளை அகற்ற சமூக ரீதியான இடஒதுக்கீடு-களை தொடருவதும், மக்களைச் சமப்-படுத்துவதும் மற்றொரு முக்கிய வழியாகும்.

ஜாதி ஒழிப்பு என்பது புதிய பாலம் கட்டுவதுபோல; ஜாதி அடிப்படை இடஒதுக்கீடு என்பது பாலம் கட்டப்படும் வரை பயன்படுத்தப்படும் மாற்று வழிப் (Diversion Road) பாதை போல என்பதைப் புரிந்து கொண்டால் பேதங்கள் நிரந்தரமாக அகன்று மனிதநேயம் மலர்ந்திட முடியும்! There can be equality only among the equals.

சமத்துவமான நிலையை மக்கள் அடைந்த பிறகே சமத்துவம் ஆட்சி புரியமுடியும்.

வருணபேதம், வர்க்க பேதத்தைவிட கொடியது; ஆழமானது. எனவே, முதலில் அவற்றை ஒழிக்க நாம் ஒன்று திரண்டு நிற்பதே தந்தை பெரியாருக்கு நாம் செலுத்தும் தனி மரியாதையாகும்!


1-ஜி, 2-ஜி, 3-ஜி என்றால் என்ன? -3

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல்!

ஓர் அபாரமான கற்பனையே! (3) -

நேற்றைய கட்டுரையின் தொடர்ச்சி...

இதுதான் பத்திரிகை தர்மமா?


இந்திய வரலாற்றில் முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு, இந்தப் பொய்க் குற்றச்சாற்றில் பார்ப்பன பத் திரிகைகளும், தொலைக்காட்சி ஊடகங் களும் ஈடுபாடு காட்டுவது பத்திரிகை தர்மமா? இந்த அளவிற்குத் தரம் தாழ்ந்து தங்கள் தலித் விரோத மனப் பான்மையைக் காட்டும் பத்திரிகைகளும், ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் நடுநிலை என்ற வார்த்தையை உச் சரிக்க யோக்கியதை உள்ளவர்கள் தானா?

Mother of Scandals என்று அமைச்சர் ஆ. இராசாவை விமர்சிக்கிற யோக்கிய தையும், பொறுப்பும், தார்மீகமும் ஊழல் ராணி என மக்களால் புறக் கணிக்கப் பட்டு, தெருவில் தூக்கி வீசி எறியப்பட்டு, நீதிமன்றப் படிக்கட்டுகளை முத்தமிட்டுக் கொண்டிருக்கும் எதிர்க் கட்சி அம்மை யாருக்கு உண்டா? என்பது கிண்டலாகக் கேட்கப்படும் கேள்வி!

இந்தக் கேள்விகள் அனைத்தும், தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களாலும், முத்தமிழ்க் காவலர் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களாலும், அமைச்சர் ஆ.இராசா அவர்களாலும் தன்னிலை விளக்கமாக வும் தொடுக்கப்பட்ட கேள்விகள்! பொது மக்கள் மத்தியிலும் நிறைய கேள்விகள் பரவலாகக் கேட்கப்படுகின்றன.

யார் இந்த ஜெயலலிதா?

ஸ்பெக்ட்ரம் ஊழலை பகடைக்காயாகப் பயன்படுத்தி காங்கிரசுக்கு நான் ஆதரவு தருகிறேன் என்று சொல் லும் தார்மீக யோக்கியதை (Moral High Ground) அம்மையார் ஜெயலலிதா அவர் களுக்கு இருக்கிறதா? என்ற கேள்வி!

ஜானகி அம்மையாரை விமர்சித்த அதே பாணியில்,

ஆளுநர் சென்னாரெட்டியை விமர் சித்த அதே பாணியில்,

எம்.ஜி.ஆர். என் புகழைக் கண்டு பொறாமைப்படுகிறார், என்னை அடக்கி வைக்க நினைக்கிறார் என்று குற்றம் சுமத்திய அதே பாணியில்,

கிழடு தட்டிப்போனாது என்று பி.ஜே.பி.யை விமர்சித்த அதே பாணியில்,

கொஞ்சும்கூட நாக்கும், வாயும் கூசா மல் கணவனுக்குத் துரோகம் இழைத்த சோனியா காந்தி! பதிபக்தி இல்லாத சோனியா காந்தி! என்று குற்றம் சுமத் திய அதே வாயால் எப்படி காங்கிரசுக்கு நான் ஆதரவு தருகிறேன்! என்று சொல்லத் துணிந்தார்? என்பது மக்கள் மன்றத்தில் எழுந்துள்ள கேள்வி!

மூச்சுக்கு முந்நூறு முறை அன்னை! அன்னை! என்று அழைக்கும் தலைவியை கேவலமாக விமர்சித்த ஜெயலலிதா அம்மையார் எப்படி எங்கள் கட்சிக்கு ஆதரவு தருகிறேன் என்று சொல்லலாம்? என்று கோபமும், ஆத்திரமும் ஏன் யாருக்கும் பொங்க வில்லை?

அதேபோன்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த யதார்த்த நிலை சிந்தனையாளர்கள் மத்தியிலும் ஒரு கேள்வி பிறந்துள்ளது! ஆ.இராசாவை நீக்கினால் ஆதரவு என்று சொன்னால், ஆ.இராசாவை நீக்குவது ஒன்றுதான் அ.தி.மு.க.வின் அடிப்படைக் கொள்கையா? அல்லது அடிப்படை லட்சியமா? அதற்கு வேறு கொள்கைகளே இல்லையா?

இதுபோன்று ஏன்? எப்படி? என்று கேட்கப்பட்டுள்ள அத்துணை கேள்விகளுக்கும் ஒரே, ஒரு விடைதான்.

ஆ.இராசா... ஆதிதிராவிட இராசா என்பதுதான்!

இந்தப் பிரச்சினையில் கைகொட்டிச் சிரித்த கருங்காலிகளும் உண்டு! கைகட்டி வேடிக்கை பார்த்த கோழைகளும் உண்டு! இந்தப் பிரச்சினையின் உள்ளடக்கமும், உண்மையும் தெரிந் திருந்துமே, வெளியில் சொல்லாமல், மாட்டியிருப்பது ஒரு தலித் சமூகத்துக்காரன்தானே! என்று மெத்தனமாக இருந்த மெத்தப் படித்த மேதாவிகள், அறிவு ஜீவிகள், பொருளாதார மேதைகள் என்று தங்களை சொல்லிக் கொண் டவர்களும் உண்டு!

ஒரு மிகப்பெரிய ஊதிய மாற்றத் துக்கு வித்திட்ட ஒரு மத்திய அமைச்சர் என்ற உணர்வு ஏதுமின்றி அமைச்சரைக் களங்கப்படுத்துபவர்களுடன் கைகோத்த தொலைத்தொடர்பு தொழிற்சங்கங்களும், அதனுடைய தலைவர்களும் உண்டு!

இவ்வளவு பெரிய போராட்டக் களத்திலே அமைச்சர் ஆ.இராசா தனித்து விடப்பட்டு விடுவாரோ, என்று இந்திய நாட்டின் ஒட்டுமொத்த தலித் சமூகம் கலங்கிக் கொண்டிருந்த வேளையில், இப்பிரச்சினையில் ஆரம்பம் முதல் இன்றுவரை தோன்றாத் துணை யாக, தொட்டு அணைத்துத் தூக்கி நிறுத்திய தாயாய், தந்தையாய் இருந் தவர்கள் இரண்டு தலைவர்கள் - தந்தை பெரியாரின் நீட்டிக்கப்பட்ட வரலாறுகளாய் வாழ்ந்து கொண்டிருக்கும், தமிழக முதல்வர் கலைஞர் அவர்களும், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களும்தான்.

விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர், அன்புச் சகோதரர் தொல். திருமாவளவன் அவர்கள், தலித் விரோத பார்ப்பனிய ஜாதிய வளையத்தின், சதிவலைதான் இந்தப் பொய்க் குற்றச்சாற்று என முழங்கியிருக்கிறார்.

மானமிகு மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் வழங்கிய புரட்சியாளர் என்ற பட்டம் ஆ.இராசாவுக்குப் பொருத்தமான பட்டம்! தந்தை பெரியார் மொழியில், சொல்வதென்றால், புரட்சி என்றால் புரட்டிப் போடுதல்!

ஒரு காலத்தில் செல் அழைப்புக் கட்டணம், தனியார் நிறுவனங்கள் மட்டும் இருந்த காலத்தில் ரூ.16. அதற்குப் பின் இருந்த அமைச்சர்கள் காலத்திலும் அழைப்புக் கட்டணம் ஒரு ரூபாய்க்குக் கீழே இறங்கவில்லை. இப்பொழுதோ வினாடிக்கு ஒரு பைசா, அம்மா, உங்களை பார்க்க நாளை வைகையில் வருகிறேன் என்று சென்னையில் இருக்கும் மகன், மதுரையில் இருக்கும் தன் அன்னைக்கு ஒரு விநாடியில் சொல்லும் இந்தச் செய்திக்கு கட்டணம் ஒரு பைசா மட்டுமே!

இந்தக் கட்டணம் வந்த காலகட்டம், யாருடைய காலகட்டம்?

அமைச்சர் ஆ.இராசா அவர்களின் காலகட்டம் அல்லவா!

சமூகப் புரட்சியல்லவா!

சமூகத்தின் உயர்மட்டத்திலிருந்து, அடித்தட்டு மக்கள் வரை செல்பேசி சேவையை அனுபவிப்பது ஒரு சமூகப் புரட்சி அல்லவா?

தொலைத்தொடர்புத் துறையின் தொழிற்சங்கத் தலைவர்களும், அதிகாரிகள், சங்கத் தலைவர்களும் வைத்த வேண்டுகோளை ஏற்று பி.எஸ்.என்.எல். பொதுத் துறையில் 74 சதவிகித பங்கு களை தனியாருக்கு விற்கும் முடிவை நிறுத்தி வைத்து, ஊழியர் நலத்துறையாக பொதுமக்கள் நலத்துறையை பி.எஸ். என்.எல். துறையை நிலை நிறுத்தியது ஒரு புரட்சி அல்லவா!

தந்தை பெரியார் அஞ்சல் உறை மத்திய அரசின் சார்பில் வெளியிடப்பட்டதும், அமைச்சர் ஆ.இராசா அவர்களின் கால கட்டத்தில்தான். கலைஞர் அவர்கள் பொருத்தமாகத்தான் பாராட்டியிருக்கிறார் ஆ.இராசாவை - புரட்சியாளர் என்று!

மாண்புமிகுவைப் பறிக்கலாம்!

மானமிகுவைப் பறிக்க முடியுமா?

என்று தமிழர் தலைவர் அய்யா கி. வீரமணி அவர்களைத் தவிர, வேறு யாரால் இதுபோன்று கேட்க முடியும்!

இந்த ஸ்பெக்ட்ரம் பொய்க் குற்றச் சாற்றில், தலித் சமூகத்திற்கு ஆதரவாக நின்றவர்கள் யார்? எதிர்த்து நின்றவர்கள் யார்? என்பது தலித் சமூகத்துக்கும் தெரியும்!

அவர்கள் ஒன்றும் தெரியாத மூடர்கள் என்றோ, முட்டாள்கள் என்றோ யாராவது தப்புக்கணக்கு போடுவார்களேயானால், அவர்கள்தான் முட்டாள்கள்!

தலித் சமூகம் உறைந்துவிட்ட பனி மலை அல்ல! மாறாக, ஆறாத உள் நெருப்புடன் உறங்கும் எரிமலை!

அவர்களை எழுப்ப ஓர் அலாரம் அடிக்கும்! வெடித்துக் கிளம்பும் வெப்பத்துடன்! சரியான நேரத்துக்கு அவர்கள் விழிப்பார்கள்!

தேர்தல் என்னும் உணவுக் கூடத்தில், வெடித்து கிளம்பும் அந்த எரிமலையின் வெப்பத்தில், எரிக்க வேண்டியதை எரிப்பார்கள். சமைக்க வேண்டியதைச் சமைப்பார்கள்! படைக்க வேண்டிய வர்களுக்குப் படைப்பார்கள்!

கருஞ்சிறுத்தை கண் விழித்தால் தெரியும் சேதி! என்ற புரட்சிக்கவிஞரின் புரட்சி வரிகளின் வழியில் ஒரு சரித்திரம் நிகழும்!

------------------ஊமைக்குரல்(நிறைவு) -”விடுதலை” 26-11-2010

25.11.10

1-ஜி, 2-ஜி, 3-ஜி என்றால் என்ன? -2


2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல்!

ஓர் அபாரமான கற்பனையே! (2)

நேற்றைய கட்டுரையின் தொடர்ச்சி...


அய்வருக்கும் தேவி அழியாத பத்தினிக் கதைதான்

இந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர் பான பொய்யான ஊழல் குற்றச்சாற்று 2008 இல் தொடங்கி, கின்னஸ் சாதனை என்று சொல்லப்படும் அளவிற்கு திரும்பத் திரும்ப உயிர்ப்பிக்கப்பட்டு, ஊழல் தொகை ரூ.20,000 கோடியிலிருந்து ரூ.1.76 லட்சம் கோடிவரை கற்பனை யாகவே உயர்த்தப்பட்டு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அய் வருக்கும் தேவியாம்; அழியாத பத்தினி யாம் என்று பொய்யான தகவல் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக சொல்லப்படு வதைப்போல பொய்யாகவே உருவாக் கப்பட்டு, பொய்யாகவே வளர்க்கப்பட்டு, அந்தப் பொய்யின் அடிப்படையில் கற் பனையாகப் போடப்பட்ட ஒரு கற்பனைக் கணக்கீடுதான் இந்த ரூ.1.76 லட்சம் கோடி என்பது.

நாம் சற்று பின்னோக்கிச் சென்றால் பி.ஜே.பி. மத்தியில் ஆண்டபொழுது அரசுத் துறை, பொதுத் துறை நிறுவனங் களை தனியாருக்கு விற்பதற்கென்றே Disinvestment Minister திரு. அருண் ஷோரி இருந்த வரலாறும் இங்கே நினைவு கூரத்தக்கது. அதே பி.ஜே.பி. ஆண்ட பொழுது தனியார் நிறுவனங்களின் வேண்டுகோளை ஏற்று தொலைத் தொடர்புத் துறையில் லைசென்ஸ் கட் டணம் ரூபாய் 85 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டது என்பது தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமான ஒரு நிலைப்பாடு என்று பொருள் கொள் வதா? அப்பொழுது இதனை யாரும் இந்த அளவு எதிர்க்கவில்லை என்பது உண்மை.

இந்தப் பிரச்சினையில் அறிவார்ந்தவர்கள் மத்தியிலும், நடுநிலைச் சிந்த னையாளர்கள் மத்தியிலும் நிலவிவரும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும், பொய்க் குற்றம் சுமத்தும் அந்தத் தலித் விரோத சக்திகள் கண்டிப்பாகப் பதில் அளித்தே தீரவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

கேட்கிறார்கள்...
தலைவர்கள்

மத்திய அரசாங்கத்தின் கொள்கையான தேசிய தொலைத்தொடர்புக் கொள்கை அடிப்படையில் 1999 ஆம் ஆண்டிலிருந்து பின்பற்றப்பட்டு வந்த அதே நடைமுறையில், அதாவது இதற்கு முன் இருந்த தொலைத்தொடர்புத் துறை அமைச்சர்கள் பிரமோத் மகாஜன், அருண்ஷோரி, தயாநிதி மாறன் ஆகி யோர் பின்பற்றிய அதே நடைமுறைதான், அலைக் கற்றை ஒதுக்கீட்டில் ஆ. இராசா அவர்கள் செய்திருக்கும்பொழுது, முன் தேதியிட்டு, பின் தேதியிட்டு, இப்படிச் செய்திருந்தால், அப்படிச் செய்திருந்தால் என ஆயிரத் தெட்டு குற்றச்சாற்று களை ஏன் இதற்கு முன் இருந்த அமைச்சர்கள்மீது சுமத்தவில்லை? அப்பொழுது இந்த அறிவாளிகளின் மூளைகள் எல்லாம், அவர்களது தலையைவிட்டு வெளியேறி எங்கே யாவது சுற்றுப்பிரயாணமா செய்து கொண்டி ருந்தன?

6.2 MHz -க்கு மேல் ஒதுக்கீடு செய்யும் பொழுது 3ஜி-க்கு இணையாக கட்டணம் நிர்ணயிக்கவேண்டும் என்ற வழிகாட்டுதல் 2010 ஆம் ஆண்டில்தான் TRAI (Telecom Regulatory Authority of India) ஆல் அறிவிக்கப்பட்டது.

2010 ஆம் ஆண்டு கணக்கீட்டை 2008-க்கும் பொருத்திப் பார்ப்பது ஒரு கற்பனைக் கணக்கீடு (Imaginary Calculation).

இதற்குமுன் இருந்த தொலைத் தொடர்பு அமைச்சர்களும் 6.2MHz -க்கு மேல் ஒதுக்கீடு செய்துள்ளார்கள். 6.2MHz -லிருந்து 10MHz -வரை மாண்பு மிகு அமைச்சர் பிரமோத் மகாஜன் அவர்களும், 21MHz வரை மாண்புமிகு அமைச்சர் அருண்ஷோரி அவர்களும், 38.8ஆழண வரை மாண்புமிகு அமைச்சர் தயாநிதிமாறன் அவர்களும் ஒதுக்கீடு செய்துள்ளபொழுது இவர்கள் மூவரும் இந்தக் கணக்கீட்டில் வராதது ஏன்? அமைச்சர் ஆ.இராசா அவர்களை மட்டும் குறி வைக்கப்படுவது ஏன்?

இன்றைக்கு இந்த அளவுக்கு பிளந்து கட்டும் திறமை வாய்ந்த மத்திய தணிக் கைத் துறை மூளைகள் 2000 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டுவரை, தலையணை போட்டு மெத்தையில் உறங்கிக் கொண்டா இருந்தன? 2000 ஆம் ஆண்டில் அது சமர்ப்பித்த கடுமை யான ஆட்சேபங்களுக்கும், அறிக்கை களுக்கும் PAC என்று சொல்லப்படும் பொதுக் கணக்குத் துறை ஏன் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற கேள்வி அவர்களுக்கு 10 வருடங்களாக வரவேயில்லையா? திடீரென்று இப் பொழுது மட்டும் சலங்கை கட்டி ஆட வேண்டிய அவசியம் என்ன? 10 வரு டங்களாக மெய், வாய் அனைத்தும் மூடி இருந்ததற்கு என்ன காரணம்?

ரகசியமானதோ, ரகசியம் இல்லாததோ, ஓர் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பாகவே, வெளியில் பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் எதிர்க்கட்சியினருக்கு தெரிவிக் கப்பட்டதன் உள்நோக்கம் என்ன?

-----------------தொடரும் - ஊமைக்குரல் ----25-11-2010

24.11.10

1-ஜி, 2-ஜி, 3-ஜி என்றால் என்ன?


2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல்!

ஓர் அபாரமான கற்பனையே!


நாவில் பிழை இருந்தால் ஒழிய தேன் கசக்காது! வேம்பு இனிக்காது!

பிறவியில் மாற்றம் இருந்தாலொழிய புலி புல்லைத் தின்னாது!

அதுபோலத்தான் பார்ப்பனர்களின் தன்மையும்!

என்பது திராவிட இயக்க அறிஞர், செம்மல், தந்தை பெரியாரின் கூற்று.

ஏமாற்றி மற்றவரை ஏட்டால் அதை மறைத்து

தாம் மட்டும் வாழச் சதை நாணா ஆரியம்

என்பது புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் கவிதைப் படைப்பு!

பார்ப்பனர்களின் தன்மை குறித்து மேலே கூறப்பட்டுள்ள கணிப்புகள், எக் காலமும் பொருந்தும் பண்புவரிகளைப் போல இன்றைய காலகட்டத்தின் நிகழ்வுகளுக்கும், நிலைப்பாடுகளுக்கும் பொருத்தமாகவே இருக்கின்றன.

இப்பொழுதெல்லாம் பார்ப்பனர்கள் முன்புபோல இல்லை. நிறைய மாறி விட்டார்கள் என்று பேசும் பார்ப்பனர் அல்லாதவர்களின் தலையில் ஓங்கி குட்டு வைத்தது போன்ற ஒரு நிகழ்வுதான் - பொய்யாகப் புனையப்பட்ட 2-ஜி அலைக் கற்றை ஊழல் குற்றச்சாற்று!

சமூகநீதி, பகுத்தறிவு, பெண்ணுரிமை, ஜாதி ஒழிப்பு என்னும் மனிதநேயக் கொள்கைகளை உயர்த்திப்பிடித்துக் குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் குரல் வளையைப் பிடித்து நெரிக்கும் கொடிய வன்முறையின் மறு பெயர்தான் பார்ப்பனியம்!

இன்றைய காலகட்டத்தில் சமூக நீதியின் முகவரிகளாக இருக்கின்ற தமிழக முதல்வர் அவர்களும், தமிழர் தலைவர் அவர்களுமே இதுபோன்ற வன்முறைகளைச் சந்தித்தவர்கள்தான்!

பார்ப்பனச் சவுண்டிகளால், பாடை யிலே கட்டி தூக்கி எடுத்துச் செல்லப்பட் டது, தமிழர் தலைவரின் உருவ பொம்மை. வடநாட்டில் நடைபெற்ற மண்டல் எதிர்ப்புப் போராட்டத்திலே எரிக்கப்பட்டது கலை ஞரின் உருவ பொம்மை!

இராமாயணம் தொடங்கி இராசாவரை

இதற்கு முந்தைய காலகட்டத்தில் வேதகால அசுரர்கள் தொடங்கி, இராவ ணன், இரணியன், ஏகலைவன், வாலி, அதன்பின் நந்தனார், சித்தர்கள், அறி வின் மறுஉருவான புத்தர், வள்ளல் ராம லிங்க அடிகளார், அறிவாசான் தந்தை பெரியார், பேரறிவாளர் அண்ணல் அம் பேத்கர், மண்டலுக்காக மகுடத்தைத் துறந்த சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் என இன்றுவரை நீண்டு கொண்டிருக்கும் இந்த வன்முறை வரலாற்றின் இன்றைய இலக்கு (target) முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா அவர்கள்!

இந்திய அரசியல் எத்தனை எத்த னையோ ஊழல் வரலாறுகளை கண்டிருக் கிறது. அதிக அளவில் பணம் கைமாற் றப்பட்ட சர்வதேச ஊழல் குற்றச்சாற்றுகள், முகாந்திரம் (Prima facie) உள்ளது என கண்டறியப்பட்டு, சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாற்றுகள், String Operation எனச் சொல்லப்படும் பொறி வைத்து குறி பார்க் கப்பட்டு அதிரடியாக கையும் களவுமாக தெகல்கா வீடியோ மூலம் பிடிக்கப்பட்ட ஊழல் குற்றச்சாற்றுகள், நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் குதிரைபேர ஊழல் குற்றச்சாற்றுகள், கேள்வி கேட்பதற்குக்கூட பணம் கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்மீதான ஊழல் குற்றச்சாற்றுகள்.

அரசியல் ரீதியாக வேண்டுமென்றே முன்னாள் பிரதமர் சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்கள்மீது சுமத்தப்பட்ட செயின்ட்கிட்ஸ் ஊழல் குற்றச்சாற்று, தொலைத்தொடர்புத் துறை கருவிகள் உபகரணங்கள் வாங்கியதில் நடைபெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராம் மீதான ஊழல் வழக்குகள்.

சி.பி.அய். என்னும் மத்திய புலனாய் வுத் துறையால் கண்டுபிடிக்கப்பட்ட ஊழல் குற்றச்சாற்றுகள், CVAC எனப் படும் (Central Vigilance and Anti corruption) என்னும் மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை பொறி(Trap) ச் வைத்து பிடித்த ஊழல் குற்றச்சாற்றுகள்.

முதலமைச்சர் ஜெயலலிதா அவர் களின்மீது இருக்கும், ஊழல் குற்றச் சாற்று பட்டியல்கள், மருத்துவக் கல்லூரி அனுமதிக்கு கையூட்டுப் பெற்று, கத்தை கத்தையாக பணம் கைப்பற்றப்பட்ட கேதன் தேசாய் மீதான ஊழல் குற்றச் சாற்றுங்கள் என ஒரு மிகப்பெரிய பட்டி யலே உண்டு.

தலித் விரோத வலைப்பின்னல்

ஆனால், மேலே உள்ள இந்தப் பட் டியலின் எதற்குள்ளும் அடங்காத, விசித் திரமான, பொய்யான வேண்டுமென்றே புனையப்பட்ட ஒரு ஊழல் குற்றச்சாற்று தான் 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு குற்றச்சாற்று, ஏதோ அமைச்சர் ஆ.இராசா அவர்கள் 1.76 லட்சம் கோடி ரூபாய்களையும் தன் வீடு முழுவதும் ரகசியமாக நிரப்பி வைக்கும்பொழுதோ, அல்லது வெளிநாட்டு சுவிஸ் வங்கியில் போடும்போதோ பிடிபட்டதுபோன்ற ஒரு தோற்றத்தை அம்மையார் ஜெயலலிதா தலைமையில் இயங்கும் தலித் விரோத வலைப்பின்னல்(Anti Dalit Network) உருவாக்கி, இதற்காக நாடாளுமன்றத் தின் அன்றாட அலுவல்கள் முடக்கப் பட்டு, கோடிக்கணக்கில் மக்கள் வரிப் பணம் பாழடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தப் பிரச்சினையில் காங்கிரசின் மென்மையான அணுகுமுறைதான் பிரச் சினையை எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத் துவதற்குக் காரணமாக அமைந்துவிட் டது என்பதை மறுப்பதற்கில்லை! இந்த அடிப்படையில்தான் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு அய்யா கி. வீரமணி அவர்கள் அண்மையில் கலைஞர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி யில், விரட்ட விரட்ட ஓடுபவர்களைக் கண்டால், விரட்டுபவர் விரட்டிக் கொண்டே தான் இருப்பார்கள். கொஞ்சம் நின்று திரும்பியாவது பார்க்கவேண்டும் என்று சொன்னார்கள்.

பார்ப்பனிய முன்வரலாறு:

இந்த நேரத்தில் சில முன் வரலாறு களையும் தாம் நினைவுக்குக் கொண்டு வர வேண்டும். மிகப்பெரிய முற்போக்கு சிந்தனையாளர் என்று போற்றப்பட்ட ஜவகர்லால் நேரு அவர்களேகூட, இந்து சனாதனவாதிகளிடம் சரணடைந்து அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கொண்டு வந்த இந்து மசோதா திருத்த பில் தீர்மானத்தை ஏற்க மறுத்து, தீர்மானம் தோல்வி அடைந்த நிலையில், சமூகநீதியை நிலை நாட்ட முடியாத இந்த சட்ட அமைச்சர் பதவி எனக்குத் தேவையில்லை என முடிவெடுத்து அண் ணல் அம்பேத்கர் அவர்கள் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 1925 இல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புவாரி தீர்மானத்தை நிறை வேற்றியே தீரவேண்டும் என்ற ஒற்றைக் காரணத்துக்காக, எந்த தந்தை பெரி யாரால் திரு.வி.க. அவர்கள் மாநாட்டுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாரோ, அதே தந்தை பெரியார் கொண்டு வந்த வகுப்புரிமைத் தீர்மானத்தை, காங்கிரஸ் பார்ப்பனர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகி திரு.வி.க. அவர்களே தோற்கடித்த வரலாறும் உண்டு!

பொய்யாகப் புனையப்பட்ட இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாற்றில், பொதுமக்கள் மத்தியில் கோடிக்கணக் கான ஊழல், கோடிக்கணக்கான ஊழல் என்று தொடர்ந்து கோயபல்ஸ் பாணி யில் பத்திரிகைகளும், ஊடகங்களும், பிரச்சாரத்தை தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

1-ஜி, 2-ஜி, 3-ஜி என்றால் என்ன?

மக்களில் Common Mass என்று கருதப்படும் சாமான்ய மக்களுக்கு 1-ஜி, 2-ஜி, 3-ஜி அலைக்கற்றை, தொழில் நுட்பம் குறித்து அடிப்படைத் தகவல் கள்பற்றிய புரிதல் இல்லாமல் இருப்பதும் இந்தப் பொய்ப் பிரச்சாரத்துக்கு மிகவும் வாய்ப்பாக போய்விட்டது. தொழில்நுட்ப ரீதியான அந்தத் தகவல்களையும் பொதுமக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டும்.

1-ஜி என்பதுFirst Generation என்று சொல்லப்படும் முதல் தலைமுறை தொழில்நுட்பம். மிகக் குறைந்த அளவே அலைக்கற்றை வேகம் இருந்ததால், ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே செல்போன் சேவை இருந்தது.

இந்தச் சேவையை தனியார் நிறு வனங்களான மோட்டரோலா, ஆர்.பி.ஜி., பி.பி.எல்., போன்ற நிறு வனங்கள் மட்டுமே வழங்கி வந்தன. அப்பொழுது பி.எஸ்.என்.எல். என்னும் பொதுத் துறை உருவாகவில்லை. அப் பொழுது இருந்த அரசுத் துறையான தொலைத்தொடர்புத் துறை (DOT) இந்த செல் சேவையில் இறங்கவில்லை. ஒருவருக்கொருவர் பேசும் (வாய்ஸ் மெயில்) வசதி, பேஜர் சேவை வசதி (பேஜர் சர்வீஸ்) மட்டுமே 1-ஜி தொழில் நுட்பத்தில் வழங்க முடிந்தது. அப் பொழுது செல்போனின் வெளி அழைப்பு கட்டணம் ரூ.16 ஆக இருந்தது.

1-ஜி-க்கு பிறகு வந்த தொழில்நுட்பம் தான் 2-ஜி.

2-ஜி என்பது Second Generation என்று சொல்லப்படும், இரண்டாம் தலைமுறை தொழில்நுட்பம்.

2-ஜியின் அலைக்கற்றை வரிசை 900MHZ மற்றும 1800 MHZ

(1 மெகா ஹெர்ட்ஸ் என்பது 1000 கிலோ ஹெர்ட்ஸ், 1 கிலோ ஹெர்ட்ஸ் என்பது 1000 ஹெர்ட்ஸ்)

அதிக வேகம் உடையதால் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் இந்தச் சேவை கிடைக்க ஆரம்பித்தது. முதலில் தனியார் நிறுவனங்கள் மட்டும்தான் இந்தச் சேவையை வழங்கிக் கொண்டிருந்தன. பி.எஸ்.என்.எல். பொதுத்துறை 2002 ஆம் ஆண்டிலிருந்து செல்போன் சேவையில் நுழைந்தது. இந்த 2-ஜி அலைக்கற்றை தொழில் நுட்பத்தில் வாய்ஸ் கால் எனப்படும் பேசும் வசதி, எஸ்.எம்.எஸ். எனப்படும் குறுஞ்செய்தி சேவை, இண்டர் நெட் ப்ரவுசிங் எனப்படும் இணையத் தேடல் சேவை, புளூ டூத் (படங்களைப் பரிமாறிக் கொள்ளுதல்), எம்.எம்.எஸ். போன்ற மதிப்புக் கூட்டு சேவைகள் இந்த 2-ஜி தொழில் நுட்பத்தில் கிடைத்தன.

ஆரம்ப காலத்தில் இதில் அழைப்புக் கட்டணங்கள் அவுட்கோயிங் ரூ.1.80 ஆகவும், இன்கமிங் 0.90 பைசா ஆகவும், எஸ்.எம்.எஸ். கட்டணம் 0.80 பைசா ஆகவும் இருந்தன. தனியார் நிறுவனங் களான ஏர்செல், ஏர்டெல், ரிலையன்ஸ், டாடா இண்டிகாம், டொக்கோமோ, எம்.டி.எஸ். அய்டியா, யுனிநார், வீடியோ கான் உள்ளிட்ட நிறுவனங்களும் இந்த சேவையை வழங்கிக் கொண்டிருக் கின்றன.

2-ஜிக்குப் பின்னர் வந்த சேவைதான் 3-ஜி.

3-ஜி என்பது Third Generation எனப்படும் மூன்றாம் தலைமுறை தொழில் நுட்பம். இதனுடைய அலைக்கற்றை வேகம் 10,782 MHZ

2-ஜியைப் போல 10 மடங்கு அலைக்கற்றை வேகமுடையதுதான் 3-ஜி. அதிக வேகம் உடையதால் ஏராளமான நவீன சேவைகள் கிடைத்தன. தந்தை பெரியார் அவர்கள் இனிவரும் உலகம் என்ற தலைப்பில் கூறிய கருத்துகளில் ஒன்றான ஒருவருக்கொருவர் முகம் பார்த்துப் பேசும் வசதி எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படும் என்று கூறியது உண்மை ஆனது, இந்த 3-ஜி தொழில் நுட்பத்தால்தான்.

இந்த 3-ஜி தொழில்நுட்பத்தில் வீடியோ கால் எனப்படும் முகம் பார்த்துப் பேசும் வசதி, மொபைல் டி.வி. எனப்படும் மொபைல் தொலைக்காட்சி சேவை, VOD, GOD போன்ற சேவைகள், அதிவேக இன்டர்நெட் ப்ரவுசிங், 7.2 MbpS (Mega Bits per Second) டேட்டா வேகமுடைய 3-ஜி டேட்டா கார்டுகள், போன்ற பல சேவைகள் இந்த 3-ஜி தொழில்நுட்பத்தில் வழங்கப்படுகின்றன. இந்த 3-ஜி சேவையை 3-ஜியின் நுட்பம் கட்ட மைக்கப்பட்ட இரண்டு கேமராக்கள் உடைய செல்போன் செட்களில்தான்(3G Enabled Set) பெற முடியும்.

தொலைத்தொடர்புத் துறையில் மிகப்பெரிய புரட்சியாக அமைச்சர் ஆ.இராசா அவர்கள் முயற்சியால் இந்த 3-ஜி தொழில்நுட்பம் முதன்முதலாக பொதுமக்கள் துறையாம்; பொதுத் துறையான பி.எஸ்.என்.எல்.-க்கு மட்டுமே ஒதுக்கப்பட்டது. இப்பொழுதுதான் தனியார் நிறுவனங்கள் ஏலத்தில் எடுத் துள்ளன. இதுதான் 1-ஜி, 2-ஜி, 3-ஜி.யின் தொழில்நுட்ப வரலாறு!

(தொடரும்) - ஊமைக்குரல் -"விடுதலை” - 24-11-2010

தடை செய் ஜோதிடத்தை!


ஜோதிடம்

தன் திறமையிலும், உழைப் பிலும், நேர்மையிலும், தன்னம்பிக்கையிலும் நம்பிக்கை இல்லாதவர்கள் ஜோதிடர் களை நாடுகிறார்கள். தம் பெயர்களின் எழுத்துக்களைக் கூட்டிக் கொள்கிறார்கள், குறைத்துக் கொள்கிறார்கள், இடையில் இணைத்துக் கொள்கிறார்கள்.

குருட்டுப் பூனை விட்டத்தில் பாயாதா? கூரையைப் பிய்த்துக் கொண்டு தெய்வம் கொட்டாதா என்று மூடத்தனமான நப்பாசையில் மிதந்து தெப்பம் விடுகிறார்கள்.

மகாராஷ்டிர மாநில முதல் அமைச்சராக இருந்தவர் அசோக் சவாண். ஆதர்ஷ் வீட்டு வசதி குடியிருப்பு முறை கேட்டில் சிக்கி, முதல் அமைச்சர் பதவியைப் பறி கொடுத்து விட்டார்.

அந்தோ, பரிதாபம்! கடந்த மாதம்தான் தன் பதவி நிலைக்க வேண்டும் என்ப தற்காக ஜோதிடரை நாடி, அவரின் யோசனைப்படி தம் பெயரின் இடையில் ராவ் என்பதைத் திணித்து அசோக் ராவ் சவான் என்று மாற்றிக் கொண்டார். (தினமணி 10.11.2010, பக்கம் 1)

ஒரு மாதத்திற்குள் அவர் முதல் அமைச்சர் பதவி பறிபோனதுதான் மிச்சம். ஊழல் செய்தற்கு முன் பெயர் ராசி பார்த்து மாற்றம் செய்து கொள்கிறார்கள் என்பது தான் இந்த இடத்தில் அழுத்தமாகக் கோடிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டியதாகும்.

மும்பை வரை போவானேன். நம் ஊர் ஜெயலலிதா என்ன செய்தார்? தம் பெயரில் ஆங்கிலத்தில் கடைசியில் இன்னொரு ய யை நீட்டிக் கொண்டார். பெயரைத்தான் நீட்டிக்க முடிந்ததே தவிர, பதவியை நீட்டித்துக் கொள்ள முடியவில்லையே!

லால்பகதூர் சாஸ்திரி யின் மறைவுக்குப் பிறகு பிரதமர் பதவிக்கு இந்திரா காந்தியும், மொரார்ஜி தேசாயும் களத்தில் நின்றனர். காமராசர் இந்திரா காந் தியைப் பிரதமராக்குவதில் வெற்றி பெற்றார்.
இந்திராவை விட மூத்த, அதிக தியாகம் செய்த மொரார்ஜி தேசாயை காமராசர் ஆதரிக்காததற்குக் காரணம் என்னவென்று கேட்டபொழுது பல காரணங்களைச் சொல்லலாம். இந்த ஆள் எதற்கெடுத்தாலும் ஜோசியம் பார்க்கிறாரு. ஜோசியம் பார்த்தா நாட்டை ஆள முடியும்? என்று காமராசர் கூறினார். (ஆலடி அரு ணாவின் காமராசர்- ஒரு வழிகாட்டி நூல். பக்கம் 304).

ஜாதகப்படி மு. வரதராசனார் அவர்களுக்கு திருவேங்கடம் என்றுதான் பெயர் வைத்தனர். அதை மாற்றிக் கொண்டார் - அதனால் என்ன கெட்டுப் போய்விட்டார்?

மும்பையைச் சேர்ந்த ஜோதிடர் பெஜன் தருவாலாரும், ராஜகுமார் சர்மாவும், வாலாஷா என்பவரும், ஜோதிடத்தின் எல்லா அம்சங்களையும் ஆய்வு செய்து, பா.ஜ.க. தலைவரான அத்வானிதான் 15 ஆவது மக்களைவைத் தேர்தலில் ஜெயித்து முதல் இரண்டாண்டுகள் பிரதமராக இருப்பார் என்று கூறினர். அடுத்த பிரதமர் ஒரு பெண்தான் என்று மூக்கைச் சொறிந்துவிட்டனர் வேறு சில ஜோதிடர்கள். ஜெயலலிதாவும் கழுத்து வரை ஆசையைத் தேக்கி வைத்துக் கொண்டு தயாராகத்தான் இருந்தார். நடந்தது என்ன என்பது யாருக்குத் தான் தெரியாது.

ஜோதிடத்தை நம்பி நேபாளத்தில் ஓர் அரச குடும்பமே அழிந்தது - மீதிப் பேர் ஆட்சியையும் இழந்து நடுவீதியில் நிற்கிறார்கள். இதற்குப் பிறகும் ஜோதிடமா?

ஊருக்கெல்லாம் ஜோதிடம் சொன்ன தேவபிரசன்னம் புகழ் பணிக்கர் இப்பொழுது நீதிமன்றத்தில் கைகட்டி நிற்கிறார்.

தடை செய் ஜோதிடத்தை!

------------------- மயிலாடன் அவர்கள் 13-11-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

23.11.10

பெரியார் அய்யாவுடன் அய்யங்கார் மோதல்!



தஞ்சாவூரில் நடைபெற்ற வாலிப மாநாட்டுக்கு வருகை தந்த தந்தை பெரியார் அவர்களை அப்படியே சிதம்பரத்திற்கும் வர வேண்டும் என்று சில முக்கியஸ்தர்கள் வற்புறுத்தவே, தந்தை பெரியார் அவர்களும் அதற்கு இசைந்து சிதம்பரம் வந்து சேர்ந்தார்கள். இது 1928ஆம் வருடம் மார்ச் மாதத்தில் நடைபெற்ற சம்பவம்.

அப்பாடா... மேளதாள ஊர்வலம்!

மேளதாள வாத்தியம் முழங்க கடைவீதி வழியாக மிகப் பெரும் ஊர்வலமாக தந்தை பெரியார் அவர்கள் பொதுக்கூட்ட இடத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள். கூட்டத்திற்கு வக்கீல் இராமையா நாயுடு தலைமை தாங்கினார். தந்தை பெரியார் அவர்கள் சுமார் மூன்றரை மணி நேரம் பேச்சு மழை பொழிந்தார்.

பேச்சா அது - மழை! மழை!!

தந்தை பெரியார் அவர்களின் பேச்சு மழை முடிவடைந்ததும் திருவாளர்கள் முத்துகிருஷ்ணபிள்ளை, ரங்கநாதம் செட்டியார், காப்பிக்கடை நாராயண அய்யங்கார் ஆகியோர் சிறிதுநேரம் பேசினார்கள்.

அவர்கள் மாறுபாடான சில கருத்துகளைச் சொல்லி விடவே, அவற்றிற்கு மறு மொழி கூற சிறிது வாய்ப்புக் கொடுக்குமாறு தலைவர் ராமையா நாயுடு அவர்களை தந்தை பெரியார் அவர்கள் கேட்டுக் கொள்ளவே, அதற்கு அவரும் சம்மதித்தார்.

தக்க மறுமொழிகளை ஆதாரங்களுடன் தந்தை பெரியார் அவர்கள் கொட்டு கொட்டென்று கொட்டி முடித்து அமர்ந்தார்கள்.

வந்ததே வம்பு!

அந்த காப்பிக்கடை நாராயண அய்யங்காருக்கோ ஒரே ஆத்திரம் - அவரால் சும்மா இருக்க முடிய வில்லை. திடீரென்று எழுந்து நின்று தந்தை பெரியார் அவர்களைப் பார்த்து, நீங்கள் சாமியைக் கல்லென்று சொன்னீர்களே, இது சரியா? என்று கேட்டார்.

புறப்பட்டாரே பார்க்கலாம்!

உடனே தந்தை பெரியார் ஆம்; வேண்டுமானால் எல்லோரும் என்னுடன் வாருங்கள் காட்டுகிறேன் என்று கூறி மேஜை மீதிருந்த கைத்தடியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். எல்லோரும் கைதட்டி சிரித் தார்கள். அய்யங்கார் பதில் சொல்ல வகையில்லாமல் தலை குனிந்தார்.

மற்றொரு பார்ப்பனர் (பத்திரிகை நிருபர்): அந்த கல்லுக்கு மந்திர உச்சாடனம் செய்யப்பட்டிருக்கிறது என்று சொன்னார்.

பெரியார்: அப்படியானால், மொட்டைப் பாறையில் உடைந்த கல்லுக்குச் செய்த மந்திர உபதேசம் உண்மை யில் சக்தி உள்ளதானால், இதோ எதிரில் இருக்கும் சகோதரருக்கும் கொஞ்சம் அதே மந்திர உபதேசம் செய்து அவரை அந்தக் கல்லு சாமிக்குப் பக்கத்தில் இருந்து பூசனை செய்யும் படியாகவாவது செய்யக் கூடாதா? என்றார்.

அந்த அய்யரும் தலை கவிழ்ந்தார்.

சும்மா இருந்து தொலையக்கூடாதோ?

மறுபடியும் திரு.நாராயணய்யங்கார், இந்து மதம் இல்லை என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் நீங்களாவது ஒரு புதுமதம் சொல்லுவது தானே? என்றார்.

பெரியார்: நான் ஒரு புது மதத்தைப் போதிக்க வர வில்லை. ஒழுக்கத்திற்கு விரோதமான கொள்கைகளை மதம் என்றும், சாமி என்றும், புராணம் என்றும் பின்பற்றாதீர்கள். ஒழுக்கமாகவும், சத்தியமாகவும், மற்ற ஜீவன்களிடத்தில் அன்பாகவும், பரோபகார எண்ணத் துடன் இருந்தால் போதும் என்றுதான் சொல்லுகின் றேன். அதற்குத் தகுந்த கொள்கைகள் எந்த மத மானாலும் சரி, அது மதம் அல்லாவிட்டாலும் சரி என்றுதான் சொல்லுகின்றேன்.

அய்யங்கார்: இருக்கின்றதை மறைப்பதனால் புதிதாக ஒன்றை காட்ட வேண்டாமா? என்றார்.

அதோ அசிங்கம் - அதற்குப் பதில் இன்னொன்றா?

பெரியார்: வீட்டிற்குள் அசிங்கமிருக்கின்றது, நாற்றமடிக்கின்றது, எடுத்து எறியுங்கள் என்றால், அதற்கு பதில் என்ன அந்த இடத்தில் வைக்கின்றது என்று ஏன் கேட்க வேண்டும்? இந்து மதம் என்பதாக உலகமெல்லாம் நாறுகின்றதே அந்த துர்நாற்றம் போய்விட்டால் அதுவே போதும். நீங்களே இந்து மதம் என்பதாக ஒன்று இல்லை என்றும் சொல்லி ஒப்புக் கொண்டு விட்டீர்களே, இனி நான் என்ன சொல்ல வேண்டும்?

அய்யங்கார்: நீங்கள் இவ்வளவு சமத்துவம் பேசு கின்றீர்களே; உங்களுக்கு லட்ச லட்சமாக சொத்துகள் இருக்கின்றதே, அதை ஏன் எல்லாருக்கும் பங்கிட்டுக் கொடுக்க கூடாது? உமக்குத்தான் பிள்ளை குட்டி இல்லையே என்றார்.

பெரியார்: சிறீமான் அய்யங்கார் சொல்லுகின்ற படி எனக்கு ஒன்றும் அப்படி பெருவாரியான சொத்து கிடையாது. ஏதோ சொற்ப வரும்படிதான் வரக்கூடிய தாயிருக்கின்றது. அதையும் எனக்கு சரியென்று தோன்றிய வழியில் பொது நலத்துக்குத்தான் செலவு செய்து வருகிறேன். அல்லாமலும் இந்த தொண்டுக்கு வருமுன் பெருவாரியாக வியாபாரம் செய்து வந்தேன். வருஷம் ஒன்றுக்கு 1000 ரூபாய் கூட இன்கம்டாக்ஸ் செலுத்தி இருக்கிறேன். ஆனால் அவைகளை இப்போது அடியோடு நிறுத்தி விட்டேன். இந்தப் பிரச்சாரச் செலவு சில சமயம் மாதம் 200, 300 ரூபாய் வீதம் ஆகி வருகிறது. மற்றும் அநேக செலவுகளும் இருக்கின்றன. நான் ஒன்றும் அதிகமாய் அனுபவிப்ப தில்லை. நான் அநேகமாய் மூன்றாவது வகுப்பு வண்டியில்தான் போகிறேன். அப்படி இருந்தும் நான் ஒன்றும் மீத்து வைப்பதுமில்லை.

எச்சில் கிளாஸ் கழுவுகிறேனய்யா!

அய்யங்கார்: புரோகிதத்தைப் பற்றி இழிவாய்ப் பேசினீர்கள். நான் புரோகிதத்திற்கும் போவதில்லை, பிச்சைக்கும் போவதில்லை, காப்பிக்கடை வைத்து எச்சில் கிண்ணம் கழுவி ஜீவிக்கிறேன். எல்லாரையும் ஒன்றாக கண்டிக்கிறீர்கள். அப்படியானால் என்னதான் செய்கின்றது? எந்தப் புத்தகத்தைதான் படிக்கிறது?

பெரியார்: நான் குறிப்பிட்டு யாரையும் சொல்லுவ தில்லை. மனிதத் தன்மைக்கு விரோதமான குணம் யாரிட மிருந்தாலும், மனிதனின் சுபாவத்திற்கும், சமத்துவத் திற்கும், சுயமரியாதைக்கும் விரோதமான கொள்கைகளும், கதைகளும் எதிலிருந்தாலும் அவைகளை ஒதுக்கி சுட்டுப் பொசுக்க வேண்டும் என்றுதான் சொல்லுகிறேன் என்றார். தந்தை பெரியார் அவர்களிடம் விடுக்கப்பட்ட கேள்விகளையும், அதற்கு முறையாக தந்தை பெரியார் அவர்கள் அளித்த பதில்களையும் கேட்டுக் கொண் டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பெரிதும் ஆரவாரமாகக் கைதட்டி தந்தை பெரியார் அவர்களின் பதில்களை ரசித்தனர்.

---------------- நன்றி: - “விடுதலை” 12-11-2010

ஞானசூரியன்

ஞானசூரியன் -1

(ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி)

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு

முதல் பதிப்பு : 1928

(19ஆம் பதிப்பு : 2008) முன்னுரை, சிறப்புரையில் திருவாளர் வ.உ.சி, எம்.எல்.பிள்ளை, மறைமலை அடிகள் ஆகியோர் எழுதியவை மற்றும் குடிஅரசு செய்திகள்.

முன்னுரை

இந்த ஞானசூரியன் தன் பெயருக்கேற்ப, இந்து மதம் என்பதன் பெயரால் நடைபெற்று வரும் புரட்டுகளையும், ஆபாசங்களையும், ஆரியப் பார்ப்பனர்கள் சூழ்ச்சிகளையும், சமஸ்கிருதத்தில் உள்ள வேதம், ஆகமம், ஸ்மிருதி, உபநிஷத்து, புராணம் முதலியவைகளின் புரட்டுகளையும், ஆதாரத்தோடு விளக்கிக் காட்டித் தமிழ் மக்களிடம் அறிவுப் பயிரைச் செழித்து வளரச் செய்யும் சிறந்ததொரு நூலாகும்.

இதனை ஒரு முறை படிப்பவர்கள் ஜாதி, மதம், வருணாச்சிரம தருமம், யாகம், பூஜை திருவிழா முதலியவைகள் யாவும் ஆரியப் பார்ப்பனர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காகத் தமிழர்களை ஏமாற்றும் பொருட்டு ஏற்படுத்தி வைத்தவை என்பதைத் தெள்ளத் தெளிய உணர்ந்து, அவைகளில் நம்பிக்கை வைத்து ஏமாற்றும் தன்மை ஒழிந்து, பகுத்தறிவும், சுயமரியாதையும் உடைய வர்களாகச் சிறந்து விளங்குவார்கள் என்பது உறுதி.

இந்நூலைத் தமிழர்களுக்கு உபகாரஞ்செய்தவர், தமிழ், வட மொழிகளில் தேர்ந்த அறிவாளராகிய சுவாமி சிவானந்த சரஸ்வதி என்பவர். இதனை எழுதச் செய்து, முதன் முதலாக அதிகப் பொருட்செலவில அச்சிட்டு வெளியிட்டவர், பொதுஜன உபகாரியும், சுயமரியாதைத் தோழரு மாகிய கானாடுகாத்தான் தோழர் வை.சு.சண்முகம் அவர்களாவார்.

இவ்விருவர்களுக்கும் தமிழ் மக்களின் சார்பாக நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

இப்புத்தகத்தை ஒவ்வொரு தமிழரும் வாங்கிப் படித்து, ஆரியச் சூழ்ச்சியிலிருந்து விடுபட வேண்டும் என்னும் சிறந்த நோக்கத்துடனேயே மிகவும் குறைந்த விலையில் வெளியிடுகிறோம். தமிழர் ஒவ்வொருவரும் தவறாமல் வாங்கிப்படித்து உண்மை உணர்வார்களாக.

சிறப்புரைகள்

திருவாளர் வ.உ.சிதம்பரம் பிள்ளை (வக்கீல்) அவர்கள் எழுதுவது

ஞானசூரியன் கூறும் பொருள்களை நோக்குங்கால் ஞான சூரியன் ஞானசூரியன் என ஆண் பாலாற் கூறுதல் தகுதி யேயாம்.

அவன் வடமொழி வேதங் களிலும், மனுதர்ம சாஸ்திரத்திலும், காமியாகமம் முதலியவற்றிலுமுள்ள பல சுலோகங்களை எடுத்துக்கூறிப் பொருளுரைத்து, பொருத்தமான கதைகளைச் சொல்லி ஆரியரின் இழிதகை ஒழுக்கங்களையும், சாதிக் கோட்பாடுகளையும், கொடுமைகளையும் நன்கு விளக்குகின்றான். அவ்வேதம் முதலிய வற்றைத் தமவெனக் கொள்வோரும், அவற்றில் மதிப்பேனும், விருப்பேனும் உடையோரும் ஞானசூரியனைப் படிப்பாராயின், அவற்றைத் தமவெனக் கொள்ளார், மதியார், விரும்பார். பிராமணர்களின் யாகங்களிலும், விருந்துகளிலும் பன்றியூன், எருமையூன், பசுவூன் முதலிய பலவகை ஊன்களை உண்டும், பானங்கள் முதலிய பலவகைக் கள்களைப் பானஞ்செய்தும் வந்தவர்களென்றும், சகோதரன் மனைவியிடத்தும், விதவையிடத்தும், குதிரையிடத்தும், குழந்தைகள் பெற்றுச் சந்ததி விருத்தி செய்து வந்தவர்களென்றும், மேற்படி வேதம் முதலியவற்றிலிருந்து மேற்கொள்கள் எடுத்துக்காட்டி ருஜுச் செய்திருக்கின்றான். தாம் மதிக்கப்படுவதற்குரிய ஒரு சாதியார் என்று சொல்லிக்கொள்ள விரும்புவாராயின், பிராமணர் மேற்படி வேதம் முதலியவற்றை அக்கினி பகவானுக்கு ஆகுதி செய்தல் இன்றியமையாதது.

பிராமணப் புரோகிதர்களும், பூசாரிகளும் பிராமண ரல்லாதார்களுடைய பொருள்களைக் கவருவதற்காகத் தொன்றுதொட்டுச் செய்து வரும் சூழ்ச்சிகளையும், மோசங்களையும், கொலைகளையும் எடுத்துக்கூறிப் பிராமணரல்லாதவர்கள் இன்னும் பிராமணப் புரோகிதர் களையும், பூசாரிகளையும் விரும்புகின்றார்களா என அவன் வினவுகின்றான்.

இந்து சமயம் என்பதன் பொய்களையும், புரட்டு களையும், ஆபாசங்களையும், அச்சமயப் பெயரால் செய்யப்படும் சடங்குகளின் வாயிலாகப் பிராமணரல்லா தார்கள் தாழ்த்தப்படுவதையும் அக்கொள்கைகளினின்றும், தாழ்வினின்றும், பிராமணரல்லாதார்கள் தப்புவதற்குரிய அவசியத்தையும், வழிகளையும் அவன் நன்கு விளக்கு கின்றான்.

வடமொழி யாகமங்களிற் சிலவற்றைத் தமவெனக் கொண்டு பிறப்பால் சாதிவேற்றுமைகள் கற்பித்தும், சிவாலயங்களிற் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வணங்கியும் வருகின்ற சைவர்களும், ஞான சூரியன் கிரணங்களின்று தப்பவில்லை. தாம் மதிக்கப்படுவதற்குரிய ஒரு சாதியார் என்று சொல்லிக் கொள்ள விரும்புவாராயின், அச்சைவர் வடமொழி ஆகமங்களைத் தமவெனக் கொள்ளும் தவறை ஒழித்தலும், சிவாலயங்கள் சிலவற்றில் காணப்படும் சிவலிங்க உருவினை மாற்றலும் இன்றியமையாதவை.

சாதி பேதமே காணாத திருக்குறள் தமிழ் மக்களிடத்தும், சிவஞான போதசித்தாந்த சைவத் தமிழ் மக்களிடத்தும் ஞான சூரியன் கிரணங்கள் செல்லாதிருத்தல் தகுதியே. மனிதரெல்லாம் பிறப்பினால் ஒரே சாதியாரென்றும், பிறப்பை ஆதாரமாகக் கொண்டு சாதிகளை வகுத்தலும், உயர்வு, தாழ்வு ஏற்படுத்தலும் அநீதியென்றும் நிலைநாட்டுகின்றான் ஞான சூரியன் - தமிழ் மக்கள் துணிவும் அஃதே என்பது பின்வரும் திருக்குறளால் இனிது விளங்கும்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்

----------------கோயிற்பட்டி, வ.உ.சிதம்பரம்பிள்ளை 7.10.1927

*********

எம்.எல்.பிள்ளை என்று அழைக்கப்பட்ட

திருவாளர் கா.சுப்பிரமணிய பிள்ளை எம்.ஏ.எம்.எல். அவர்கள் எழுதியதன் சுருக்கம்.

தமிழ் மக்கள் இப்பொழுதுள்ள வடமொழி வேதாகமங்கள் இன்ன தன்மையனவென்று அறிந்து கொள் வதற்கு இந்நூல் பெரியார் ஒளி காட்டியாகத் திகழ்கின்றது. ஆரியப் பார்ப்பன வலையினின்று நம்ம னோர்கள் விடுதலை அடை வதற்கு இந்நூல் தலை சிறந்ததொரு கருவியாகுமென்று நான் மகிழ் கின்றேன்.

---------------சென்னை, கா.சுப்பிரமணியபிள்ளை

24.10.1927.



மறைமலை அடிகளார் கருத்து

ஞான சாகரம் பத்திராதிபர் சுவாமி வேதாசலம் அவர்கள் எழுதியதன் சாரம்:

-

வடமொழிப் பழைய நூல்களை நன்கு பயின்றறியமாட்டாமல், ஆரியப் பார்ப்பனர் அவற்றை உயர்த்துரைக் கும் மயக்குரைகளில் வீழ்ந்து, அவற்றைக் குருட்டுத் தனமாய்ப் பாராட்டிக் கொண்டிருக்கும் நம் தமிழ் மக்களின் மயக்க இருளை ஓட்டி, வடநூல்களின் ஊழலும், அவற்றின் கண் தமிழ் மக்களைப் பாழாக்கு வதற்குப் பார்ப்பனர் எழுதி வைத்திருக்கும் பொய்மாயப் புரட்டுகளும் நன்கு விளங்கக் காட்டுந் திறத்தது இஞ் ஞானசூரியன் என்னும் நூல் என்பதில் ஓர் எட்டுணையும் அய்யமில்லை. வடநூல்களிலிருந்து இதன்கண் எடுத்துக் காட்டியிருக்கும் மேற்கோள் களும், அவற்றிற்கெழுதியிருக்கும் தமிழுரை களும் முற்றிலும் உண்மை யென்பதில் அய்யமில்லை. இந்நூல் உயர்ந்த உண்மைப் பொருள் வாய்ந்தது.

--------------------பல்லாவரம் சுவாமி வேதாசலம்

7.10.1927

ஆரியர் சித்தாந்தம்

அரசர்களைக் கடவுளாகவும், கடவுள் அவதாரமாகவும், கடவுள் தன்மை பெற்றவர் களாகவும் பாவிக்க வேண்டும் என்பது ஆரியர்களின் சித்தாந்தமாகும். அரசரோடு எதிர்த்தால் அந்நாடும் அந்த நபர்களும் அழிந்து போகும் என்றும் நரகம் கிடைக்குமென்றும் அநேக ஆதாரங்கள் இருக்கின்றன.

(13-10-1935 குடி அரசு பக்கம் 9)

இந்து மதம் ஒழிகிறது

இந்து மதம் சீர்திருத்தம் அடைந்து வருகிறது என்றும், தீண்டாமை ஒழிக்கப்பட்டு வருகிறது என்றும் சில மூடர்களும், சூழ்ச்சிக்காரர்களும் சொல்லுகிறார்கள். அதை நாம் சிறிதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம். இந்து மதம் சீர்திருத்த மடைந்து வரவில்லை. இந்து மதம் ஒழிந்து வருகின்றது என்றுதான் சொல்லுவோம்.

(17-10-1935 குடி அரசு பக்கம் 11)

பெண்களும் - கற்பும்

பெண் தன்னைப் பற்றியும் தனது கற்பைப் பற்றியும் காத்துக் கொள்ளத் தகுதி பெற்றுக் கொள்ள விட்டுவிட வேண்டுமே ஒழிய, ஆண் காவல் கூடாது. இது ஆண்களுக்கும் இழிவான காரியமாகும்.

(3-11-1935 குடி அரசு பக்கம் 13)

சூத்திரர்கள் யார்?

தனது சரீரத்தால் வேலை செய்து அதன் கூலியினால் மாத்திரமே ஜீவனம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத் திலுள்ளவன் - இக் கூட்டத்தார் களுக்குத் தான் பார்ப்பன மதப்படி சூத்திரர்கள் என்கின்ற பெயர்.

(19-9-1937 குடி அரசு பக்கம் 9)

****************************************************************************



ஞான சூரியன் --2

முதல் அத்தியாயம்

சக்தி சத்தர் சனாதனப் பேரொளிச்

சித்தர் முத்தர் திருமிகு மேனியர்

சுத்த நெஞ்சுறுத் தூய்மைகண் டுய்ந்திடப்

பத்தி யாலவர் பாதம் பணிகுவாம்

செழுந்தமிழ்க் குடித்தீரரே; வீரரே;

எழுந்து மின்னே இழிதகை யோர்ந்துநாம்

அழுந்தி நாளும் அடிமைசெய் காரணம்

கொழுந் தறிவினிற் கூர்ந்துணர் வாமரோ.

நமது நாட்டின்கண் தமிழர்களாகிய (திராவிடர்கள்) நம்மவர்கள் கல்வி கற்பதில் சிறிது காலமாகவே ஊக்கங்கொண்டு உழைத்து வருகின்றனர். அதன் பயனாக, நம்மவர்களின் மனக்கண்ணை மூடியிருந்த அறியாமை என்னும் மாசு சிறிது சிறிதாக நீங்கிற்று. நீங்கவே, இதுவரையிலும் நம்மை ஏமாற்றி வந்த ஆரியப் பார்ப்பனர்களின் சமய நூற்களாகிய, சிரவுத, ஸ்மார்த்த தருமங் களின் மேற்பூச்சு விளங்கலாயிற்று. அதனால், அந்நூற்களில் நமக்கிருந்த மதிப்பு குறையலாயிற்று. எதிர்காலத்தில் நம்மவர்கள் அடையும்படியான மேல் நிலையைக் குறிக்கிற இத்தருணத்தில், ஆரிய சமாசத்தினர், இந்து சபையார், பிரம்மசமாசத்தினர் முதலிய பல குழுவினரும் மேற்சொன்ன நூற்களின் பழைய பூச்சைத் துடைத்துப் புதிதாகப் பூசி மினுக்குமாறு, வேஷத்துடன் நம்மவர்முன் காட்டி, நம்மவர்களை ஏமாற்ற முயன்று வருகிறார்கள். எனவே, இவர்களின் எண்ணத்தை உற்று நோக்குமிடத்து, மேற்குறித்த சமய நூல்களிலுள்ள மூட நம்பிக்கைகளை நம்மவர்களின் உள்ளத்தில் தழைத்தோங்கி வளரச் செய்து, நம்வர்களை என்றென்றைக்கும் அடிமைப் படுகுழியினின்றும் கரையேற வொட்டாமல் தடுக்க வேண்டுமென்பதேயல்லாது வேறில்லை என்றே கொள்ளக் கிடைக்கும். இவர்களின் முயற்சியும் சிறிது சிறிதாகப் பயன்கொடுத்துக் கொண்டே வருகிறது. இம்மைக்குரிய பயன்களுள் சிலவற்றை இவர்களின் வயப்பட்ட (சூத்திரர் என்று அழைக்கப்படுகிற) நம்மவர்கள் அடைகின்றார்களெனினும், பார்ப்பன நூற்களாகிய வேதம், ஸ்மிருதி முதலியவைகட்கு இவர்கள் சொல்லுகிற யுக்தி வாதங்களும், உரைகளும் அந்தந்த நூற்களுக்கு1 மகீதரர் முதலிய பழைய உரையாசிரியர்களின் கருத்திற்கு ஒத்திட்டுப் பார்த்த பிறகே ஒப்புக்கொள்ளத் தக்கவை. இதற்காக முயற்சிப்போர், தயானந்த திமிர பாஸ்கரம் முதலிய நூற்களின் ஆசிரியரான2 பண்டித ஜ்வால்ப்ரஸாத் மிஸ்ரஜி முதலிய மேதாவிகளைப்போல் இவர்களைக் கண்டிக்க முற்படுவார்கள். நாம் இங்கு எதைக்குறித்து ஆராயப்போகிறோம் என்றால், நமது நாட்டில் யாவராலும் பிராமணங்களாகக் கொள்ளப்படுகின்ற வேதம், ஆகமம், ஸ்மிருதி இவைகளில் சொல்லப்பட்டுள்ள விஷயங் களையும், அவைகளின் உண்மைக் கருத்துகளையுமேயாம். பகவான் புத்தன் அவதரிப்பதற்கு முன்னும் அதன் பின்னரும் உள்ள நமது தேச சரித்திரத்தைப் பதினாறு ஆண்டுகளாக ஆராய்ந்தவுடன், நமது தேசம் முழுவதும் நேபாளம், காஷ்மீரம், சிலோன் முதலிய பல தேசங்களிலும் சஞ்சரித்து, அந்தந்த தேசத்தார்களின் முற்கால, தற்கால வழக்கங்களையும் ஒழுக்கங்களையும் அறிஞர்களிடத்தும், சரித்திர வாயிலாகவும், நேரில் கண்டும் கேட்டும் அறிந்ததன் பயனாகத் தமிழ் மக்களாகிய நம்மவர்கள் நெடுநாட்களாகவே அடிமைப்படுகுழியில் தள்ளப்பட்டிருப் பதையும், கரையேற முயற்சி செய்யாதிருப்பதையும், அறிந்த யான் நம்மவர்களின் முன்னேற்ற வழியை எடுத்துக் கூறத் துணிந்தனன். இதனால் நம்மவர்கள் அறியாமை என்னும் நித்திரையை விட்டெழச் செய்து, சமய நூல்களில் மனத்தை ஒருமுகப்படுத்திக் கீழ்க் கூறுகின்ற பொருட்களைப் படித்தறியும்படி மன்றாடி வேண்டிக் கொள்ளுகிறேன். ஆராய்ச்சி இல்லாமல் ஒருவரை யொருவர் ஆட்டு மந்தையைப்போல் பின்பற்றி நடக்கும் இயற்கையுள்ள நம்மவர்களுக்கு, உண்மையை அறிய வேண்டுமென்னும் விருப்பமும், அதற்குரிய ஆற்றலும் மேன்மேலும் பெருகி வளரும்பொருட்டு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.

உயிர்களுக்கு உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற விருப்பம் இயற்கையிலேயே எற்பட்டுள்ளது. இதன் பொருட்டே முயற்சியும் நடைபெற்று வருகின்றது. ஆனால், அதற்கு எதிர்மறையான பலனை அனுபவிக்க நேருவதும் உண்டு. ஆயினும், எல்லா உயிர்களும் மேன்மையைத்தான் விரும்புகின்றன. இந்த மேன்மையும் இம்மைக்குரியது, மறுமைக்குரியது என இருவகைப்படும். மனிதன் தன்னால் பழக்கப்பட்ட எந்த விஷயத்திலும் நிறைந்த சுகத்தை அனுபவிக்காததனால், உயிர்களைப் பற்றிய ஆராய்ச்சிகள் முதன் முதலாக மனிதனது உள்ளத்தில் எழுந்தன. இவ்வாறு எழுந்ததன் பயனாகவே இப்போது பல வேற்றுமைப்பட்ட கொள்கையுடைய பல்வேறுவகைச் சமயங்களைக் காண்கிறோம். அவைகளில் இவ்வேற்றுமையினால் சமூக முன்னேற்றத்தில் மாறுபட்டிருந்தாலும், மேற்சொன்ன பிரிவினையானது எல்லாச் சமயத்தினராலும் பொதுவாக ஒப்புக்கொள்ளத் தக்கதேயாகும். இதில் சமுதாயத்தை (Social), கல்வித்துறை (Educational), ஒழுக்கம் (Moral), அரசியல் (Political) ஆகிய நான்கு வகையான முன்னேற்றங் களையும் இம்மைக்குரியது என்கிற முதலாவது இனத்திலும், தவம், யோகம், ஞானம், இவைகளை மறுமைக்குரியது என்கிற இரண்டாவது இனத்திலும் சேர்க்க வேண்டும். இம்முன்னேற்றங்கள் எல்லாச் சமயங்களுக்குள்ளும் ஒரே தன்மையா யிருப்பின், வேற்றுமைகளுக்கு வழியேயில்லை. ஆனால், உருவங் களுள் வேற்றுமை காணப்படுவதுபோலச் சமுதாய விஷயங்களிலும் வேற்றுமை காணப்படுகின்றது. மேற்கூறிய வேற்றுமைகளால்தான் மத வேற்றுமைகளும் உண்டாயின.

சமயங்களின் காலம்

இந்து சமயம் உற்பத்தியாகி இன்றைக்கு நூற்றுத் தொண்ணூற்றாறு கோடியே எட்டு லட்சத்து அய்ம்பத்திரண்டாயிரத்துத் தொள்ளாயிரத்தெழுபத்தாறு (196,08,52,976) ஆண்டுகள் ஆகின்றனவென்று, ஆரிய சமாசத் தலைவரான சுவாமி தயானந்த சரஸ்வதி கணக்கிட்டுக் கூறுகிறார். அதற்கு அவர் ஏழு மனுக்களையும் அவர்களின் அரசாட்சிக் காலத்தையும் ஆதாரமாகக் காட்டுகிறார். இவ்வளவு காலப் பழக்கமுள்ள இந்தச் சமயத்தைத் தங்கள் சமயமென ஒத்துக் கொள்வோரின் தொகை இருபத்தொன்றரைக் கோடியாகும். முகம்மதிய மதம் எற்பட்டு 1372 ஆண்டுகளாகின்றன. முகம்மதியர்களின் தொகை முப்பத்துமூன்று கோடியாகும். கிறிஸ்து மதம் உண்டாகி 1956 ஆண்டுகளாகின்றன. கிறிஸ்தவர்களின் தொகையோ அய்ம்பது கோடியாகும். 2498 ஆண்டாகப் புத்தரையும், திரிபீடக நூலையும் நம்புகின்றவர்கள் அறுபதுகோடி மக்கள் இருக்கிறார்கள்.

இனி இருபத்தொன்றரைக் கோடி இந்துக்களுள் ஒன்றரைக்கோடி மக்கள் பார்ப்பனர்களாவார்கள், ஏனையோர் பார்ப்பனரல்லாதவர்கள். இந்தக் கணக்குப்படி பார்ப்பனரல்லாதவர்களுள் பதினெட்டுப் பேர்களுக்கு ஒரு பார்ப்பனப் புரோகிதன் ஆகின்றான் என்று கணக்கிடலாமன்றோ? மேற்கூறிய ஒன்றரைக் கோடி பார்ப்பனர்களும், பார்ப்பனரல்லாதாரின் இனத்திலிருந்து ஒவ்வொரு காலங்களில் பார்ப்பனர் களாக மாற்றப்பெற்றவர்களும், தாங்களாகவே மாறினவர்களுமாவார்கள். குமாரில பட்டர், சங்கராச்சாரியார், இராமாநுசர், மத்துவர் முதலிய மதாச்சாரியார்கள் அநேக தடவைகள் சூத்திரர்களைப் பார்ப்பனராக்கியதாகச் சங்கர திக்விஜயம் முதலிய நூல்களாலும் தேச சரித்திரங்களாலும் அறியக் கிடக்கின்றது. உண்மையில் பார்ப்பனரல்லாதார் இந்துக்களல்லரென்றும், பார்ப்பனர்கள் தங்கள் சுயநலத்தின் பொருட்டு, இவர்களையும் இந்துக்க ளென்றும் கூறி ஏமாற்றிய தாகவும் கொள்ளவேண்டும். இப்படிக்கிருந்தால், உண்மை இந்துக்கள் (ஒன்றரைக் கோடி) எவ்வளவு குறைவு என்பதைக் காரணத்துடன் ஆராய்வோம்.

இந்துக்கள் தவிர, மற்ற எல்லா மதத்தினருக்கும் தங்களுக்கெனச் சொந்தமான ஒரு மதத்தலைவரும், அத்தலைவரால் பரம்பரையாக வெளியிடப்பட்ட மதக் கொள்கைகளும், இவைகளடங்கிய மத நூலும் அம்மதத்தைச் சார்ந்த அனைவருக்கும் பொதுவாக உண்டு. விளக்கமாகக் கூறுங்கால், முகம்மதியர் களுக்கு முகம்மதுநபி என்ற சமயத் தலைவரும், குரான் என்ற மத நூலும் அம்மதத்தில் பொதுவாக இருக்கின்றன. இவர்களுள் ஒவ்வொரு ஆண் மகனும், பெண்களும் தங்கள் குருவையும் மத நூலையும் மதத் கொள்கைகளையும் முறையே அன்புடன் வணங்கியும், போற்றியும் வருகிறார்கள். புத்த சமயிகளுக்குப் புத்தர் என்னும் மதத்தலைவரும், திரிபீடகம் என்னும் மத நூலும் இருப்பது யாவரும் அறிந்ததே. இவ்வாறே கிறிஸ்தவர்களுக்கும் கிறிஸ்து என்னும் மதத் தலைவரும் பைபிள் என்னும் மத நூலும் இருக்கின்றது. இந்துக்கள் நீங்கலாக மற்ற சமயத்தினரும் ஆண், பெண் வேற்றுமையின்றி ஒவ்வொருவருக்கும் தங்கள் மத நூல்கள் எந்தெந்த மொழியில் எழுதப்பட்டிருக்கின்றனவோ, அந்தந்த மொழியிலேயே அதைப் படிக்கவும், அதில் சொன்னபடி ஒழுகவும் அதிகாரமுண்டு. இதில் உயர்வு - தாழ்வு என்கிற வேற்றுமை காட்டப்படுவதேயில்லை. இவ்விதம் சமய நூற்களைக் கற்று, அதன்படி ஒழுகாத ஒருவனை நிந்திக்கவும் செய்கிறார்கள்.

******************************************************************************

ஞானசூரியன்

தொடர்-3

(ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி)

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு

முதல் பதிப்பு : 1928

(19ஆம் பதிப்பு : 2008) முன்னுரை, சிறப்புரையில் திருவாளர் வ.உ.சி, எம்.எல்.பிள்ளை, மறைமலை அடிகள் ஆகியோர் எழுதியவை மற்றும் குடிஅரசு செய்திகள்.)

ஒரு முகம்மதியன் தோட்டி வேலை செய்பவனா யிருந்தாலும், தான் முகம்மது மதத்தினன் என்கின்ற உரிமையால், மவுல்வி (மதபோதகன்) ஆக வேண்டு மென்றாலும் ஆகலாம். பணம் திரட்டிப் பெரிய பிரபு (சாயபு) ஆக வேண்டுமென்றாலும் ஆகலாம். துறவியாக வேண்டுமென்றாலும் ஆகலாம். தேவாலயம், பாடசாலை முதலிய இடங்களிலும் இவனைக் குறித்து யாதொரு வேற்றுமையும் பாராட்டுவதில்லை. இவ்விதமே புத்த சமயிகளுக்குள்ளும், கிறித்துவர்களுக்குள்ளும் எல்லோருக்கும் சமமான உரிமை இருப்பதை நன்கு உணர்தல் வேண்டும்.

இந்துக்களின் நிலைமையோ இவைகளினின்றும் எவ்வளவோ வேற்றுமை உள்ளதாகக் காணப்படுகின்றது. இந்து மதத்தினுடைய சாதிக்கோட்டையானது சமாதான காலங்களில் நல்லெண்ணத்துடன் பிரவேசிக்கின்ற நண்பனையும் பிரவேசிக்கவொட்டாமல் தடுக்கின்றது. முன் கூறப்பட்ட முகம்மதியர் முதலிய சமயத்தாரின் சமுதாயப் பெயர், அந்தந்தச் சமயத் தலைவனது திருநாமத்தைத் தலையில் சூடிக் கொண்டு விளங்குகின்றது. இந்துவென்னும் பொதுப்பெயரை, அதன் உண்மையை உணராமலேயே அதனை அநேகர் இன்றைக்கும் ஏற்றுக்கொள்கிறார்கள். இந்து என்றும், இந்தியர் என்றும் வழங்கிவரும் சொற்கள் நமது நாட்டிலிருந்து வழங்கிவரும் எந்த மொழியினின்றும் தோன்றினவல்ல. மற்ற வேற்று நாட்டாரால் நமக்கு அப்பெயர்கள் அளிக்கப்பெற்றன. இவற்றை நமக்குத் தந்தவர்கள பாரசீகர்கள். அவர்களின் மொழியில் இப்பதங்களுக்கு நாகரிகத்தன்மை இல்லாத வர்கள், கடவுள் நம்பிக்கையற்றவர்கள் திருடர்கள் என்பன முதலிய பல இழிந்த பொருள்கள் காணப்பெறலாம். இப்பெயரை நாம் மிகவும் வணக்கத்துடன் ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியுறுகின்றோம். இதில் வியப்பிற்கு இடமில்லை. ஏனென்றால், முதலில் நமது நாட்டில் புகுந்து ஆரியர்களால் அளிக்கப்பெற்ற 1தஸ்யூ (கொள்ளைக்காரன்), தாசன் (அடிமை), சூத்திரன் (திருடன்) முதலிய இழிவான பெயர்களை இங்குள்ள பழைய குடிகளின் கால்வழிகளாகிய நாம் இன்றும் பொறுமையுடன் ஏற்றுக்கொள்ளுகிறோம். ஒருவனை வஞ்சித்த

1. தஸ்யூ - தாசன், சூத்திரன் என்னும் பெயர்களை வேதங்களிலும், ஸ்மிருதிகளிலும் பலவிடங்களிலும் பார்க்கலாம்.

நம்மை மற்றொருவன் வஞ்சிக்கும்போது துக்கப்படுவது தகுதியன்று. இம்மதத்தில் (இந்து) இருக்கிற பலதிறப்பட்ட கொள்கைகளும் பெரும்பாலும் வெளிப்படை யாகையால், ஈண்டு விவரித்துக் கூறவில்லை. ஆனாலும், இந்துக்கள் எனப்படுவோரில் சிலர் தவிர, ஏனையோருக்கு இந்து மதத்தின் உருவம் இன்னது, அதை உணர்த்தவல்ல நூற்கள் இன்னின்னவை; அந்நூற்களால் தெரிந்துகொள்ள வேண்டியவை எவை என்பதைப் பற்றிய அறிவு சற்றேனு மில்லை. சனாதன தர்மம் (மிகப் பழைய தர்மம்) வருணாச்சிரம தர்மம் என்பன முதலிய சில பெயர்களும் இதற்குக் கொடுத்துத் தூயதாகக் கருதுகிறார்கள். ஆயினும், பெயருக்குத் தக்க பொருளைத் தருவதாக இல்லை. நாம் விரும்புகிற பொருள் மற்றொருவனிடம் இருக்கிறவரையில் நாம் அதை வைத்திருப்பவனுக்கு அடிமையாவோம். பணக்காரனது வாசலில் காத்துநிற்கிற பிச்சைக்காரனையும், தான் காதலித்த கட்டழகியின் ஏவற்படிக்குப் பாவைபோல் கூத்தாடுகிற காதலனையும் இவ்வடிமைத் தொழில் நிலைக்கச் செய்தது. இவ்விருவராலும் விரும்பப்படுகிற செல்வத்திற்கும், அழகுக்கும் முறையே பிரபுவும் பெண்ணும் உடையவர்களா யிருப்பதேயாம்.

அவ்வாறே நமது உள்ளத்தில் இருந்துகொண்டே நம்மை அடிமை யாக்குவது இந்த ஆசைதான். இதற்குரிய பொருளை அடைந்தவுடன், அதன் கண்ணிருந்த மேலான எண்ணமும், அத்துடன் அதைக் குறித்த ஆசையும் போய்விடுகின்றன.

இதனால்தான் அஸ்வாதீனேகாம (விரும்பிய பொருள் வசப்படாத வரையில் ஆசை) என்று பெரியோர்கள் மொழிந்தார்கள். பயனற்ற பொருளைக் குறித்துச் சிலர் புகழ்ந்து கூறுவதைக் கேட்டு, அத்தகைய பொருள்களிடத்தும் ஒவ்வொரு வேளை விருப்பம் வைப்பதுண்டு. இது ஆராய்ச்சி செய்யாமை யினாலேயே நிகழ்வது.

எல்லா மனிதர்களுடைய மனமும் 1ஞானவிழுப்பத்திற்கு அடிமையாய் இருக்கிறது. இது சாஸ்திரங்களுக்குள் இருக்கிறதென்றும், சாஸ்திரங்கள் ஞான ரத்தினக் களஞ்சியங்கள் என்றும் பெரும்பான்மையாக எல்லோருக்கும் தெரியும். ஆனால், உண்மையில் ஒன்றுக்கும் உதவாத தாயினும், ஒரு சுவடியைக் கையில் வைத்துக்கொண்டு, நீங்கள் விரும்புகிற பொருளைச் சேமித்து வைத்திருக்கிற களஞ்சியம் இதுவே; மோட்சம் இதற்குள்

1. ஞானத்தில் பிறவித்துன்பம் அடியோடு தொலைந்து பேரின்ப சித்தப் பெருவழியை நல்குவதாக இருத்தலிலென்க.

அடங்கியிருக்கிறது என்றிவ்வாறு புகழ்ந்து கூறி மக்களை நம்பச்செய்தும், அந்தச் சுவடி பொதுமக்களுக்குத் தெரியாத ஒரு மொழியில் எழுதியதாகவும் இருந்தால், அந்தச் சுவடியும் மொழியும் எவன் வசம் இருக்கிறதோ, அவனுக்கு மனிதர்கள் அடிமையாவது திண்ணமே. பொருளாக விருந்தால் கொள்ளையடித்தோ மற்றெவ்விதமாகவோ கைப்பற்றி விடுவார்கள். கல்வியானது அதையுடைவன் விரும்பிக் கொடுக்காதவரையில் எங்ஙனம் அடைய முடியும்? உண்மையாக அந்தச் சுவடியில் பொதுமக்களுக்கு நல்ல பயனைக் கொடாததும், தீய ஒழுக்கங்களைப் பழக்குவதும், தீய வழியில் செலுத்துவதுமான கொள்கைகள் நிறைந் திருந்தாலும், எல்லோராலும் விரும்பத்தக்கது. இது ஒன்றேயென்று புகழ்ந்து கூறி, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிற காலம் வரையில், அதை வைத்துக் கொண்டிருப்பவன் கழுதைக்குச் சமனாக இருந்தாலும், அவனை எல்லோரும் வணங்குவார்கள்.

இவ்வாறே தீய எண்ணங்களையுடைய பார்ப்பனர்கள், வேதம் எல்லா விருப்பங்களையும் தரவல்லது எனக் கூறிக்கொண்டு, அது யாருக்கும் பயன்படாத மொழியிலிருப்பதால், அதனைப் புகழ்ந்துகூறிக் காப்பாற்றி வருவதோடு, நம்மவர்களைக் குறித்து,

பத்யுஹ்வா ஏதத்ஸ்மசானம்

சூத்ரஸ் தஸ்மாத் சூத்ரஸமீபேநாத்யேதய்வம்

அதாஸ்ய வேதமுபஸ்வருண்வதஸ்த்ர

புஜதுப்யாம்ஸ் ரோத்ரபூரணம்

வேதத்தைக் கேட்கிற சூத்திரனது காதுகளில் ஈயத்தையும், மெழுகையும் உருக்கி விட வேண்டும்.

சூத்திரன் நடமாடுகிற இடம் சுடலையாதால், அவன் பக்கத்தில் வேதமோதக் கூடாது.

வேதாச்சாரணே ஜிஹ்வாச்சே தோதாரணே சரீரபேத

வேதத்தைச் சொல்லுகிற சூத்திரனது நாக்கை அறுத்தெறிய வேண்டும். அதன் பொருளையுணர்ந்து வைத்திருக்கிற நெஞ்சைப் பிளக்க வேண்டும்.

1. பார்ப்பனர்கள் தங்கள் இனத்தாரைத் தவிர, மற்ற யாவரையும் சூத்திரர்கள் என்று சொல்லுகிறார்கள். மனுஸ்மிருதி முதலிய நூற்களும் அவர்களுடைய கூற்றுக்கு அனுகூலமாகவே இருக்கின்றன.

இவ்வாறு நல்லோர்கள் காதினால் கேட்கவும் பெறாத அநேகக் கொடிய விதிகளை ஏற்படுத்தி, இந்த விதிகளும் வேதத்திலுள்ளது; வேதம் கடவுளால் பிராமணர்களாகிய எங்களுக்குச் சொந்தமாகத் தரப்பெற்றது என்று வாய்ப்பறை சாற்றித் திரிவதோடு, தங்களது மோசவலையில் சிலரைச் சிக்கவைத்து அவர்கள் மூலமாகவும், சில இடங்களில் (தங்களுக்குச் சமூக பலமுள்ள இடங்களில்) தாங்களாகவும் தங்களுக்குக் கீழ்ப்படியா நம்மவர்களைப் படுத்திய பாடு இவ்வளவெனச் சொல்லத்தரமன்று. மகாமேதாவிகளாகிய சிலரும் உயிருக்காகப் பயந்தோ, மற்றெதனாலோ, நான் பிராமண தாசன் என்று சொல்லியிருப்பது போஜசம்பு முதலிய நூற்களால் காணக்கிடக்கின்றது. மகாகவியும் பெரிய வள்ளலுமான போஜராஜர் பிராமணர்களைப் புகழ்ந்து கூறியிருப்பதை இரண்டாவது அத்தியாயத்தில் விவரமாகக் கூறுகிறேன். எத்தகைய பெரியாரையும் ஏமாற்றும்படியான இந்திரஜால வித்தையைக் கற்ற பார்ப்பனர்களின் மோசக் கருத்து, எவ்வளவு தூரம் பலனைக் கொடுத்து வருகிறதென்பது எல்லோருக்கும் அனுபவமானதால், அதிகம் சொல்லத் தேவையில்லை. இக்காலத்தில் இந்து என்று வெட்கமின்றித் தங்களைக் குறித்துச் சொல்லித் திரிகின்ற பலரும் இம்மோசவலைக்குள் அகப்பட்டவர்களே.

ஆனால், மோசம் பண்ணுவதற்குக் காலம் எப்பொழுது வாய்க்குமோ? பட்டப்பகலில் பலர் சேர்ந்திருக்கும்போது களவாடுவது கடினமன்றோ? அதைப்போலவே பார்ப்பனர் களுக்கும் தங்களது ஜாலம் பலிக்கிற காலம் மலை யேறிவிட்டது.