Search This Blog

Showing posts with label புரட்சிக்கவிஞர். Show all posts
Showing posts with label புரட்சிக்கவிஞர். Show all posts

17.1.15

தமிழுக்கு இலக்கியம் இல்லை எனலாமா பெரியார்? புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பதில்

தமிழுக்கு இலக்கியம் இல்லை எனலாமா பெரியார்?


(தமிழ் மொழி, இலக்கியங்கள் குறித்த தந்தை பெரியாரின் கருத்துகளுக்கு திடீர்த் தமிழ்ப் பற்றாளர்களும், அதைப் பயன்படுத்திக் கொள்ளத் துடிக்கும் பார்ப்பனியமும் காட்டும் எதிர்ப்புகளுக்கு அன்றே மிகத் தெளிவாக பதில் அறைந்திருக்கிறார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். )

குயில் இதழ்களிலிருந்து புரட்சிக் கவிஞரின் கேட்டலும் கிளத்தலும்..... 

கே: சிலப்பதிகாரம் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது ஆரியத்தைத் தமிழரிடம் புகுத்தும் நோக்கமுடையது என்று பெரியார் சொல்லலாமா?


கி: கதையமைப்பு நன்று. தமிழர் வாழ்க்கை முறைகள் சில நல்லன. பொருந்தாதவை பகுத்தறிவுக் கொவ்வாதவையாய் இருக்கின்றன. பாடம் சொல்லும் புலவர்கள் இவைகளை மாணவர்கட்கு எடுத்து விளக்குவதில்லை.

அதனால் ஆரியம் தமிழகத்தில் வலியுறுகின்றது. தமிழர் ஒழுக்கம், கலை, நாகரிகம், பண்பாடுகள் குறைவுபடுத்தப்படுகின்றன. புதியதொரு சிலப்பதிகாரம் எழுதிக் கொள்ளலாமன்றோ!


கே: தொல்காப்பியம் ஒரு தமிழனால் செய்யப்படவில்லை. தமிழர் ஒழுக்கம், கலை, நாகரிகம் அதில் மறுக்கப்படுகின்றன என்று கூறலாமா பெரியார்?


கி: ஆயிரம் முறை கூறலாம். வெள்ளை வாரணனாரும் பிறரும், தொல்காப்பியத்தில் பார்ப்பனரைப் பற்றிய செய்யுட்களை இடைச் செருகல் செய்துள்ளார்கள் என்று கூறினார்கள்.

இடைச் செருகல்களை நீக்கிப் பதிப்பிக்கலா-மன்றோ புலவர்கள்! செய்யட்டும் செய்த பிறகு பெரியார் அவ்வாறு கூற மாட்டார்.

                        


------------------------------------புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் (குயில் 16.2.1960) 

* * *

கே: தமிழரசர்கள் முட்டாள்கள்; காட்டுமிராண்டிகள் என்று பெரியார் சொல்லலாமா?

கி: ஏன் சொல்லக் கூடாது? தெருவில் கிடக்கும் நாய் விட்டையில் சிவனைக் கண்டான். கண்டவன் சும்மாவா இருந்தான். கோவில் கட்டி அதில் நிறுவிக் கும்பிடவும் வைத்தான்.இப்படி ஒரு தமிழரசன்.

வடநாட்டினின்று ஆரியப் பார்ப்பனர்களை அழைத்து தமிழர் மேல் ஏறிச் சவாரி செய்யச் சொல்லுகிறான். இப்படி ஒரு தமிழரசன்! இப்படிப்பட்டவர்கள் எல்லாம் பிற்கால மன்னர் தாமே அதற்கு முற்காலத்தில் இருந்தவர்கள் நாகரிகம் உள்ளவர்களல்லவா என்று கூறலாம்.

நாகரிகம் உள்ளவர்கள் நாகரிகம் இல்லாதவர்கள் ஆகிய இருவகையாரில் கொள்கையில் வெற்றி பெற்றவர்கள் எவர்?

நாகரிகம் இல்லாதவரல்லவா? அவர் கட்டிய கோவில், அவர் காட்டிய நாய் விட்டைகள் தாமே இன்று ஆட்சி நடத்துகின்றன?


தமிழகத்தில் பற்றுள்ள புலவர்கள், நாகரிக-மில்லாதவர் கண்ட கோவில் நாய் விட்டை-களை ஒதுக்கியும், நாகரிகம் கொண்டிருந்த மன்னரின் நாட்டுத் தொண்டைப் போற்றியும் நூற்கள் செய்ததுண்டா? செய்ய வேண்டு-மல்லவா! அவ்வாறு அவர்களைச் செய்யத் தூண்டுவதுதான் பெரியாரின் பேச்சு!


கே: தமிழுக்கு இலக்கியம் இல்லை எனலாமா பெரியார்?


கி: இராமாயணத்தையும் பாரதத்தையும் ஆரியரின் காட்டுமிராண்டித்தனத்தைப் பின்பற்றி எழுந்த புராணம் முதலியவற்றையும் நம் இலக்கியம் நம் இலக்கியம் என்று கூறுவதன்றி தமிழர் இலக்கியங்கள் இன்னின்னவை என்று எடுத்துக் காட்டும் வலி இருந்ததா புலவர்களிடம்? அமைச்சர்களிடம்?


தமிழிலக்கியத்தை முன்னுக்குக் கொண்டு வாருங்கள், அவைகளைப் பின்பற்றி இலக்கியத்தைக் குவியுங்கள். சீர்திருத்தக்-காரர்களை எதிர்ப்பதன் மூலம் வயிறு வளர்க்க எண்ணாதீர்கள் என்பதுதான் பெரியார் சொல்வதன் பொருள்.


      ----------------------------------புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் (குயில் 23.2.1960)

30.4.14

ஜாதி - மதவெறியாளர்களுக்கு எதிராக சிந்தனையூட்டும் நாள்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 124-ஆம் ஆண்டு பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை

ஜாதி - மதவெறியாளர்களுக்கு எதிராக சிந்தனையூட்டும் நாள் தமிழர் தலைவர் பேட்டி
 

செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் பேட்டி

 

பாரதிதாசன் படத்திற்கு குமரி ஆனந்தன் மாலை அணிவித்து மரியாதை

சென்னை, ஏப். 29- புரட் சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 124-ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (29.4.2014) அவரது சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார்.

புரட்சிக்கவிஞர் பாவேந் தர் பாரதிதாசன் அவர்களின் 124-ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (29.4.2014) சென்னை காமராசர் கடற் கரை சாலையிலுள்ள புரட் சிக்கவிஞர் சிலைக்கு திரா விடர் கழகத் தலைவர் கி.வீர மணி அவர்கள் மலர் மாலை அணிவித்தும், மலர் தூவி யும் மரியாதை செய்தார்.

புரட்சிக்கவிஞர் சிலைக்கு மாலை அணிவித்தவுடன் தமிழர் தலைவர் செய்தியா ளர்களிடம் கூறும்போது:-

புரட்சிக் கவிஞர் அவர்க ளுடைய பிறந்த நாளான இன்று (29.4.2014) ஒரு புதுமை நாள் என்பது மட்டு மல்ல. இன்றைக்கு நாட்டை மதவெறியும், ஜாதி வெறி யும் கப்பிக்கொண்டு இருண்ட எதிர்காலம் சூழ்ந்து விடுமோ என்று அஞ்சுகின்ற இந்தக் காலத்தில் புரட்சிக் கவிஞருடைய கருத்துக்கள் மிகவும் தேவை.

தந்தை பெரியார் அவர்களுடைய சுயமரியாதைக் கொள் கையை ஒரு சூரணமாக்கி இலக்கியத்திலே தந்த பெரு மைக்குரியவர் புரட்சிக்கவி ஞர். இருட்டறையில் உள்ள தடா உலகம் என்று அன் றைக்குக் கேட்டார், அதை விரட்டுவது பகுத்தறிவே என்று சொன்னார். அப்படிப் பட்ட அந்த பகுத்தறிவை வலியுறுத்திப் பாடிய கார ணத்தால் உலகக் கவிஞராக உயர்ந்திருக்கக்கூடிய அவருக்கு உரிய விளம்பரம் தரப்படாவிட்டாலும்கூட, என்றென்றைக்கும் அவரு டைய இடத்தை எவரும் பறிக்க முடியாது.

புரட்சிக் கவிஞர் அவர்கள் மிகப் பெரிய சமுதாயப்புரட்சியை உருவாக்கித் தனித்த ஒரு தன் மையோடு மதவெறியை மாய்த்து மனித நேயத்தை மானுடத்தைக் காப்பாற்று வதற்காக மிகப்பெரிய அள விலே மானிடப்பரப்பையே தன்னுடைய அளவு கோலாக, தன்னுடைய நாடாக, தன் னுடைய கனவாக அமைத் துக் கொண்டவர்கள், அந்த வகையில் மானுடத்திற்கு மிகப்பெரிய மன்பதை உல கத்திற்கு அரிய கருத்துக்க ளைச் சொன்ன அந்தக் கவி ஞருடைய பிறந்த நாள் என் பது சமுதாயத்தினுடைய எழுச்சி மிகுந்த நாள். அவர் வாழ்க! அவர் புகழ் வாழ்க இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கூறினார்.




இன்று  - ஏப்ரல் 29- புதுவை தந்த புரட்சிப் பாவலர், ஒப்புவமையற்ற பெரியாரின், ஒப்புவமை யற்ற புரட்சிக் கவிஞரின்  124ஆவது பிறந்த நாள்! இந்நாள் (1891).

தனது நன்றி உணர் வைக் காட்டுவதற்காக  பாரதிதாசன் என்று  தன்னை அடக்கத்துடன் அழைத்துக் கொண்ட கவிஞர் கனக சுப்புரத்தினம் - ஓர் புரட்சி இலக்கியத்தில் எவரும் எட்ட முடியாத பெரும் இமயத்தின் உச்சியிலும் உச்சி!
சுயமரியாதை கொள் தோழா, என்று அறிவுறுத் தியதால் ஆரிய ஊடகத்தாலும், இன உணர்வு, மொழி உணர்வற்ற நமது ஏடுகளாலும் இன்னும் இருட்டடிக்கப்பட்டாலும் இணையிலாச் சூரியனைப் போன்று பகுத்தறிவு உலகத்திற்கு ஒளியூட்டும் ஓர் ஒப்புவமை இல்லா உயர் கவிஞர் அவர்.
விளம்பர சடகோபம் எதிர்பார்த்து எவருக்கும் ஆழ்வாராகிட துடிப்போர் உண்டு; ஆனால், தன் னேரிலா தன்மானப் பெருங் கவியாக, தனித்தே நின்று, தகத்தகாய ஒளியுடன் இன்றும் என்றும் வாழுபவர் நம் புரட்சிக் கவிஞர்!
பண்பாட்டுப் படையெடுப்புதான் நம் திராவிடர் இனத்தை வீழ்த்தியது என்பதை தனது சொடுக்கு வரிக் கவிதைகளால் மிடுக்குடன் எடுத்துரைக்கத் தயங்காதவர் நமது போற்றதலுக்குரிய புரட்சிக் கவிஞர்!

இதோ ஒரு சிறு எடுத்துக்காட்டு:

பகவத்கீதை பகர்ந்த கண்ணனை
நல்வட மதுரைக் கச்சென நவில்வர்
திருக்குறள் அருளிய திருவள்ளுவரோ
தென் மதுரைக்கோர் அச்சென செப்புவர்
இன்னணம் நல்கூர் வேள்வியர் இயம்பினார்
இதனால் அறிவதென்ன வென்றால்
இரு வேறு நூற்கள் இருவேறு கொள்கைகள்
இருவேறு மொழிகள் இருவேறு பண்பாடு
உள்ளன உணர்தல் வேண்டு மன்றோ?
கீதையைக் கண்ணன் தோதுள நான்மறை
அடிப்படை தன்னில் அருளினன் என்க!
அதுபோல் வள்ளுவர் அருமைக் குறளை
எதனடிப் படையில் இயற்றினார் என்றால்
ஆரூர்க் கபிலர் அருளிய எண்ணூல்
அடிப்படை தன்னில் அருளினர் என்க!
எண்ணூல் தன்னைச் சாங்கியம் என்று
வடமொழியாளர் வழங்குகின் றார்
பரிமே லழகர் திருக்கு றளுக்குச்
சாங்கியக் கருத்தைத் தாம் மேற்கொண்டே
உரைசெய் தாரா? இல்லைஎன்று ணர்க!
ஆதலின் அவ்வுரை அமைவில தாகும்!
சமயக் கணக்கர் மதிவழி கூறாது
உலகியல் கூறிப் பொருளிது வென்ற
வள்ளுவர் எந்த மதத்தையும் சார்கிலார்!
சாங்கியம் மதமன்று தத்துவ நூலே!
பரிமே லழகர் பெருவை ணவரே
மதமிலார் நூற்கு மதமுளார் உரை செயின்
அமைவ தாகுமோ? ஆய்தல் வேண்டும்


- இப்படி மற்ற புலவர்கள், இலக்கிய மேதைகள் கூட சொல்ல அஞ்சும் உண்மைகளை அப்படியே உலகுக்குச் சொல்லி, அதனால் தன் புகழ் பலிபீடத் தில் ஏற்றப்பட்டாலும் கவலை இல்லை; ஏற்ற கருத்தை எவர் எதிர்ப்பினும் அஞ்சாமல் அயராமல் வெளியி டுவதே எம்பணி என்று வாழ்ந்து, வரலாற்றைப் படைத்த  வைர நெஞ்சக் கவிஞர் எம் புரட்சிக் கவிஞர் ஒரு வற்றாத ஜீவநதி!
பெரியார் என்ற தலைக் காவிரியின் கிளைத்த தனித்த ஆறு! வாழ்க! வாழ்கவே!!

-----------------கி.வீரமணி தலைவர் திராவிடர் கழகம் சென்னை
                                -------------------”விடுதலை”   29.4.2014


28.4.13

புரட்சிக் கவிஞரின் சிந்தனைகள்!

புரட்சிக் கவிஞர்
புரட்சிக் கவிஞர் பிறந்த நாள்: 29.4.1891 மறைவு: 21.4.1964

ஆதி சைவர்கள் என்று தம்மைச் சொல்லிக் கொள்பவர்கள் - ஆதிக்குப் பின் யார் என்றால் காதில் வாங்காத வர் போல் சென்று விடுவார்கள் என்பதை
-ஆதி சைவர்கள் என்பார்      ஆதிக்குப்பின் யார்? என்றால் காதினில்  வாங்காரடி -சகியே       காதினில் வாங்காரடி -    எனக் கவிஞர்  குலத்தால் தம்மை உயர்ந்தவர் என்று சொல்லிக் கொண் டிருப்பவரை  எள்ளி நகையாடுகிறார்.
பொருளே குறிக்கோள்  பார்ப்பனர்கள் நடத்தும் சடங்கும், மந்திரமும் அவர் தம் வயிறு வளர்ப்பதற்கேயன்றி உண்மையான பயனை நல்குவன அல்ல என்னும் கருத்தை,
பெரிய தொரு சடங்குண்டே ! மந்திரமுண்டே அந்த எலாம்  செய்யத்தான் வேண்டும் ஆனால்
பெரும்பாலும் அகட்டிடுவேன் கூலி மட்டும் எந்த மட்டும்  கொடுக்கணுமோ  குடுக்கவேணும்  என்றுரைத்தான் எல்லோரும் சிரிப்பில் ஆழ்ந்தார்
-எனக்கவிஞர் மந்திரத்தை விடப் பொருளிலேயே கருத்தாய் இருக்கும் பார்ப்பானின் செயலை எள்ளி நகை யாடுவது நகைப்பை விளைக்கிறது.
*************
தமிழ்த் திரைப்படம்
தமிழ்த்திரைப்படத்தின் தகுதியைத் திறனாய்வு செய்யும் போக்கில் எள்ளி நகையாடுகிறார்,  அத்திம்பேர், அம்மாமி எனப் பேசும் ஆரியத்தமிழும் , கடவுளர்கள் அட்டை முடி , காகிதப் பூஞ்சோலை,   கண்ணாடி, முத்து வடம் முதலான காட்சிகளும் தமிழ் படத்தில் நீங்காத இடத்தைப் பெற்றிருக்கின்றன புதுமை சிறிதும் இல்லை பரமசிவன் அருள் புரிய வந்து வந்து போவார், கற்புடைய பெண் களுக்குத் துன்பம் வரும் பின் தீரும்     இதுதான் இன்றைய தமிழ்த் திரைப் படங்களின் நிலை என உரைப்பதன் வாயிலாக நகைச்சுவை  புகட்டுகிறார் கவிஞர்.
*************
அறியாமை
பாண்டியன்  பரிசு காப்பியத்தில் வேலன் பேழையுடன் வருவதை எதிர் நோக்கியிருக்கும் வீரர்களின் அறி யாமையை காட்டும் பகுதி நகைச்சுவை மிக்கது . கழுதையிடம் உதைபட்டு விழுபவனையும், கல்தூணை மற் போருக்கு அழைப்பவனையும், ஆலடியில் நின்றிருந்த கழுதை தன்னை அங்கொருவன் தொட்டுதையும் பட்டு வீழ்ந்தான்
காலடி ஓசை காட்டாதொருவன் சென்று
கல்தூணை மற்போருக் கழைக்க  லானான்
-எனக்காட்டி நிலவு ஒளியிலும் இப்படி
என்றால் மிகு  இருட்டென்றால் என்ன ஆவாரோ?  எனக் கவிஞர் உசா வுவது நகைச்சுவையை மிகுவிக்கின்றது.
*************
பண்டிதர்கள்  பழைய மனப் போக்குடையவர்கள்;  பகுத்தறிவுக்குப் பொருந்தி வராத பழைய கதைகளின் குறைகளுக்கெல்லாம் விளக்கம் சொல் லிச் சரி செய்ய முயல்வது அவர்கள் இயல்பு . இதனை இல்லத்தலைவி வீட்டுப் பணிகள் அனைத்தையும் தணிக்கை செய்வதற்கு ஒப்பிடுகிறார்.
பண்டிதர்கள் பழங்கதையின் ஓட்டைக்  கெல்லாம்
பணிக்கையிடல் போல்  அனைத்தும்                   தணிக்கை  செய்தே
-எனக்  காட்டும்போது பழமையை எள்ளுவதன் வாயிலாகப் பகுத்தறிவுக் கருத்தை உணர்த்துவதோடு நகைச் சுவையும் தோன்ற வைக்கிறார்.
*************
பாயவந்த சிறுத்தையின் மேல் பாய்ச்சுவதற்கும் கத்தியை எடுத்ததும் சிறுத்தை ஓடி விடுகிறது. அதன் ஓட்டத்திற்குப் பத்தரிசி என்றதும் ஓடிப் பெறுகின்ற பார்ப்பானின் ஓட்டத்தினை உவமையாக்குகிறார் கவிஞர்.
கத்தியினை மேலெடுத்துக்
காட்டினையோ இல்லையோ
பத்திரிக் கோடுகின்ற
பார்ப்பான் போல் ஓடிற்று
வந்த சிறுத்தையது
வாலடங்க ஓடியது _ எனக் கூறுவது பெருஞ் சிரிப்பை நல்குகிறது.
*************
உடம்பில் மட்டுமல்லாது உலகிலு ள்ள எல்லாப் பொருளிலும் முப்பட்டை போடும் அறியாமையைக் கவிஞர் -_
காடி உப்புச்சட்டி கூழ்ப்பானை சீப்பே,
கண்ணாடி குமிழ்ஊசி அரிவாள் கத்தி
கரியடுப்பு மின்விசிறி மின் விளக்கு
நண்ணுமதின் மேற்கவிழ்ப்புத் துடைப்பக் கட்டை
நடையன்கள் மாடாடுதொழுவம் தொட்டி
பிண்ணாக்கு வைக்கோற் போர் பந்தற் கால்கள்
பின்னியபாய் தலையணைகள் போர்வை வேட்டி
தண்ணீர்ச்சால் கிணறு சாக்கடைகள் திண்ணை
தப்பாமல் முப்பட்டை போட வேண்டும்
-_ எனக் காட்டிச் சிரிப்போடு சிந்தனையையும் தூண்டுகிறார்.
இயற்கையின் படைப்பாகிய மலைமீதும் நாமத்தைப் போட்டு, பல நூற்றாண்டுகளாய் மலை வைணவருக்கே உரியது எனக் கூறுவோரையும் நெற்றியில் மார்பில் தோளில் நெடுங்கழுத்தில் சுண்ணாம்பு பற்றிடப் பூசிச் செம்மண் கோடுகள் பாய்ச்சி மூளை அற்றான் போல் வான் பருந்தை அரிகரீ என்றண்ணாந்து
மற்றுமோர் பேதை நானும் மனிதன்தான்
என்று வந்தான்.
எனப் பழமையிலும் அறியாமையி லும் ஆழ்ந்து கிடக்கும் நிலையினைக் கூறுவது சிறப்புக்குரியது.
*************
கற்கண்டு நாடகத்தில் சிறு தொண் டப்பத்தன் கதை சொல்லப்படுகிறது. கதையில் இறைவனுக்கும் சிறு தொண்டப் பத்தனுக்கும் நடக்கும் உரையாடல் நகைச்சுவை பயக்கிறது. சிறு தொண்டப்பத்தன் வீட்டில் சமையல் செய்யப்பட்டிருக்கும் பூசனிக் காய் அய்யருடைய தொப்பையாகவும் கத்திரிக்காய் அய்யருடைய பூசை மணியாகவும் இறைவனுக்குத் தோன்று கிறது. இதனை, பூசனிக்கா அய்யரோட
தொப்பையல்லோ பக்தா - அது
தொப்பையல்லோ பக்தா பூசனிக்கா கறி எனக்கு
வேண்டாமென்றார்
எனக் கவிஞர் காட்டுகிறார்.
*************
இரணியன் அல்லது இணையற்ற வீரன் நாடகத்தில் இரணியன் தூணை உதைத்தவுடன் நாராயணனாக வேடமிட்டு ஒருவன் வெளிப்படுகிறான். அவனைப் பார்த்து, அடே! நான் தூணை உதைத்தேன் நாராயணனாகிய நீ வந்தாய்! உன்னை உடைத்தால் உன்னிடமிருந்து தூண் வெளி வருமா பார்க்கிறேன்! என்று கூறுவது வீரத் தால் விளைந்த வெகுளிநகை எனலாம்.
*************
மதத்தின் பேரால் தேவையற்ற குறியீடுகளை உடம்பில் இட்டுக் கொள்வதை, சைவன் சுயமரியாதைக் காரனானபின், அவனை நிறுத்துப் பார்த்ததில், நிறையில் காற்பலம் குறைவு ஏற்பட்டது. விபூதியிடுவது நீக்கியதால் எனக் கவிஞர் சுட்டிக்காட்டுவது நகைச்சுவை பயக்கிறது.
*************
நினைக்க நினைக்க எனக்குக் கோபம் வருகிறது. ராமனுடைய கணை யாழியைக் கடலைத் தாண்டிச் சென்று சீதையிடம் கொடுத்த குரங்குகள் உள்ள இந்த தேசத்தில், புதுச்சேரியிலிருந்து நேஷனல் சிகரெட்டைக் கொண்டு போய்த் தோழர் அழகிரிசாமியிடம் கொடுக்க ஒரு குரங்குகூட அகப்பட வில்லையே என்பதில் கவிஞரின் நகைச்சுவை தெரிகிறது.
*************
கண்ணபிரானைப் பற்றிய சொற் பொழிவு (உபந்நியாசம்) நடக்கிறது கண்ணன் வாயைக் காட்டியதும் அவன் வாயில் ஈரெழு பதினான்கு உலகமும் இருப்பதை நேரில் தாய் கண்டாள் என்று சொற்பொழிவாளர் கூறியதும் கூட்டத்திலிருந்த ஒருவர் கேள்வி கேட்கிறார்.
ஒரு கேள்வி: ஏனையா, வாய்க்குள் ஈரேழு லோகங்களும், புகைபோல தெரிந்தனவா? திருத்தமாகவா?
உபந்நியாசகர்: முட்டாளே! அசல் உலகங்கள்! உலகத்தில் உள்ள ஒன்று விடாமல் தெரிந்தன என்று தாய் ஆச்சரியப்பட்டாள்.
மற்றொரு வேண்டுகோள் அய்யா! உபந்நியாசகரே! இந்தக் கடிதத்தை அந்த அம்மாவிடம் கொடுத்து, தயவு செய்து (வாய்க்குள் தெரிவதால்) சுலபமாய்ச் சென்னை பாரிஸ் வெங்கடாசல அய்யர் வீதி நெ.17 வீட்டின் குறட்டில் போட்டுவிடச் சொன்னால்போதும், அவசரமான லெட்டர் ஸ்டாம்பு வாங்கச் காசில்லை.
சிறுவன் வாயில் முழுமையும் தெரி யுமா? எவ்வளவு அறியாமை! மக்களின் அறியாமையைக் கிண்டல் செய்யும் துணுக்குகளில் ஒன்று இது.

                  ----------------------நன்றி:- “விடுதலை” ஞாயிறுமலர் 28-4-2013

15.1.13

தமிழர்க் கொரு திருநாள் - புரட்சிக்கவிஞர்

தமிழர்க் கொரு திருநாள்
    தமிழர்க் கொரு திருநாள் - அது தைத்திங்கள் முதல் நாள்
    சமயத்துறை அறவே - உயர்
    தமிழ் வாழ்த்தும் பெருநாள்.

    நமை ஒப்பார் யாவர்? - நம்
    தமிழ் ஒப்பது யாது?
    கமழ் பொங்கல் நன்னாள் - புதுக்
    கதிர் கண்ட பொன்னாள்!

    ஏரோட்டும் இரு தோள் - ஒரு
    சீர் போற்றும் திருநாள்!
    ஆரோடும் உண்ணும் - நெல்
    அறுவடை செய் பெருநாள்!

    போராடும் கூர் வாள் - பகை
    போக்குவ தோர் பெருநாள்!
    ஊரோடும் உறவோ - டும்
    உள மகிழும் திருநாள்.

    மாடுகளும் கன்று - களும்
    வாழியவே என்று
    பாடுகின்ற நன்னாள் - கொண்
    டாடுகின்ற பொன்னாள்!

    வீடுதெரு வெங்கும் - எழிற்
    சோடனை விளங்கும்
    நீடுதமிழ் நாடு - புகழ்
    நீட்டுகின்ற திருநாள்!

    ----------------புரட்சிக்கவிஞர்- ”குயில்”: 12.1.60

    7.8.12

    புதுவையிலேயே புரட்சிக் கவிஞருக்குப் புறக்கணிப்பா?





    புதுச்சேரிக்குப் பெரும் புகழ் - புரட்சிக் கவிஞரை ஈன்றெடுத்தது தான். அந்தப் புதுவையிலேயே புரட்சிக் கவிஞருக்கு இருட்டடிப்பு - புறக்கணிப்பு என்றால் எப்படி பொறுத்திட முடியும்?

    புதுச்சேரியில் மத்திய பல்கலைக் கழகம் ஒன்று இருக்கிறது. பெரும் பாலும் தமிழ் தெரியாத பிற மாநிலத் தவர்கள்தான் இதற்குத் துணை வேந்தர்களாக நியமிக்கப்படுவது வழக்கம்.

    மத்திய அரசு என்றாலே பொதுவான கருத்து  - மாநில உணர்வு களைப் புறக்கணிப்பது என்பதுதானே! அந்த வகையில் இப்பொழுது புதுச் சேரி பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக இருப்பவர் தரீன் - கருநாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரைப் பற்றி ஏராளமான புகார்கள் ஒரு புறம். கெடு முடிந்தும் துணை வேந்தராகத் தொடர்ந்து கொண்டு இருப்பது எந்த சட்டத்திலோ?


    தமிழ் நாட்டில்  - மனோன்மணியம் சுந்தரனார் அவர்களின் நீராரும் கடலுடுத்த என்று தொடங்கும் பாடலை கடவுள் வாழ்த்திற்குப் பதிலாக மொழி வாழ்த்தாகப்பாட ஆணை பிறப்பித்தவர் மானமிகு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.

    அது போல புதுவை மாநிலத்தின் அரசு விழாக்களில் பாடப்படும் பாடல் புரட்சிக் கவிஞரின் வாழ்வினில் செம்மையைச் சேர்ப்பவள் நீயே எனத் தொடங்கும் பாடலாகும்.

    புதுவைப் பல்கலைக் கழகத்திலும் இந்தப் பாடலே பாடப்பட்டும் வந்தது. கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த இந்தத் தரீன் என்ன செய்தார் தெரியுமா?

    தானே ஒரு பாடலை எழுதி, அதனைத் தமிழில் மொழி பெயர்க்கச் செய்து, அந்தப் பாடல்தான் பாடப் படவேண்டும் என்ற ஒரு நிலையை உருவாக்கி விட்டார்.

    புரட்சிக் கவிஞர் பிறந்த ஊரிலேயே இப்படி ஒரு புரட்டல் வேலை நடந்திருக்கிறது. எந்த மாநிலத்தில் பல்கலைக்கழகம் இருக்கிறதோ, அந்த மாநில அரசு ஏற்படுத்தியுள்ள நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டாமா?

    மற்றவற்றிற்கெல்லாம் மரபுகள் பற்றிப் பேசும் பேர்வழிகள் தமிழ் என்று வந்துவிட்டால் மட்டும் மாற்றிப் பேசுவார்களா?

    எப்படி இது அனுமதிக்கப்பட்டது? புதுவை பல்கலைக் கழகத்தில் தமிழ் உணர்வு படைத்தவர்கள் யாரும் இல்லையா?

    இந்தப் பிரச்சினையையும் திராவி டர் கழகம்தான் கையில் எடுத்துக் கொள்ள வேண்டுமா?
    சிந்திப்போம் - செயல்படுவோம்!

                            ---------------------"விடுதலை” 7-8-2012

    29.4.12

    புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் செய்த பாவம் என்ன?

    பாவேந்தர் செய்த பாவம் என்ன ?

    மு. பழனி இராகுலதாசன்
    ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர்

    பெங்குயின் வெளியீட்டகம் உலகளாவிய அளவிலும், இந்திய அளவிலும் மிக முக்கியப் பங்களிப்பைச் செய்து வருகிறது. அறிவார்ந்த வாசகர் உலகம் அதற்கு உரிய நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது. 2009 என்று ஆண்டு குறிப்பிட்டு பெங்குயின் வைக்கிங் வெளியீட்டகம் The Rapids of a Great River என்ற தலைப்பில் ஒரு தொகுப்பு நூல் ஆங்கிலத்தில் வெளி யிட்டுள்ளது. இந்தத் தலைப்பை ஒரு மகாநதியின் பிரவாகம் என்று நாம் தமிழில் ஆக்கிக் கொள்ளலாம்.

    இந்நூலில் சங்க இலக்கியக் கவிதை கள் தொடங்கி 1974 ல் பிறந்தவரான கவிஞர் குட்டி ரேவதியின் கவிதைகள் வரை தமிழ்க் கவிதைகள் தொகுக்கப் பட்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்க் கப்பட்டுள்ளன.

    தொகுப்பு நூல் என்பது (Anthology) முழுநூல் அல்ல. இது எல்லாருக்கும் தெரிந்த விசயமே; எல்லாரும் உடன் படுகிற விசயமும் ஆகும். தொகுப்பாசிரியர் எல்லாரும் இது பற்றிக் கருத்து தெரிவித்துப் பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வார்கள். இது மாதிரியான குறிப்பு ஏறத்தாழ தொகுப்பு நூல்கள் எல்லாவற்றிலும் இடம் பெறத்தான் செய்கின்றன.

    இந்த நூலின் தொகுப்பாசிரியர்கள் இதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது. எனவே, எல்லாரும் குறிப்பிடுவது போலவே இவர்களும், ‘An anthology such as this, however representative it needs to be must, in the end, The subjective. We are aware that readers familiar with Tamil poetry may find a few of their favourite poems missing’ என்று பாதுகாப்பாக, எச்சரிக்கையாகக் குறிப்பிடுகிறார்கள்.

    ஒரு தொகுப்பு நூல் என்பது முழுமையானதாக இருக்க முடியாது என்பதும், சில கவிதைகள் அல்லது சில கவிஞர்கள் விடுபட்டுப் போவது என் பதும் நமக்கும் புரியத்தான் செய்கிறது.

    இந்தத் தொகுப்பு நூலின் அடிப் படையான நோக்கம் குறித்து தொகுப் பாளர்கள் தெளிவுபடுத்தும் இடத்தில், தமிழ்க் கவிதை என்பது மிக நீண்ட வளமான மரபை உடையது. இதில் பழைமையும் உண்டு; புதுமையும் உண்டு. பழைமைக்கும் புதுமைக்குமான தொடர்பை, இணைப்பைத் தெளிவு படுத்தும் நோக்கத்துடனேதான் நாங்கள் இந்தத் தொகுப்பைத் தொகுத்தளித்திருக்கிறோம் என்று குறிப்பிட் டிருக்கிறார்கள்.

    தொகுப்பாளர்களின் ஆர்வத்தை, உழைப்பை, நோக்கத்தைப் பாராட்டத் தான் வேண்டும். இது ஓர் அரிய முயற்சி என்பதில் எந்தவித அய்யப்பாடும் கொள்வதற்கில்லை.

    நூலின் முதலாவது பாகத்தில் கவிதைகள் சங்க இலக்கியத்தில் தொடங்கி கோபால கிருஷ்ண பாரதி யுடன் முடிகிறது. நூலின் இரண்டாம் அத்தியாயம் மகாகவி பாரதியில் தொடங்கி, குட்டி ரேவதியுடன் நிறைவு பெறுகிறது.

    நாம் கேட்கும் கேள்வி இவ்வளவு பெரிய, அரிய முயற்சியில், நல்ல முயற்சியில் புரட்சிக் கவிஞர் பாரதி தாசனுக்கு இடம் இல்லையே, ஏன்? என்பதுதான். பாவேந்தர் ஏன் சேர்க் கப்படவில்லை? காரணம் என்னவாக இருக்கக்கூடும்? என்று எப்படி யோசித்துப் பார்த்தாலும் சரியான காரணம் நமக்குப் புலப்படவில்லை.

    முதலாம் அத்தியாயத்தை கோபாலகிருஷ்ண பாரதியுடன் நிறைவு செய்து கொண்டது சரியே; அதே போல, இரண்டாம் அத்தியாயத்தை மகாகவி பாரதியுடன் தொடங்கிக் கொண்டதும் சரியே. இரண்டாவது அத்தியாயத்தில், பாரதியிலிருந்து குட்டி ரேவதி வரை புதுமைத் தமிழ் பிரவாகம் எடுத்து வருகிறது என்று கணித்து, தொகுப்பு முயற்சியில் இறங்கியதும் சரியே!

    ஆனால், புதுமைத் தமிழ் என்று வரும்போது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இடம் பெற்றிருக்க வேண்டும்தானே! பாவேந்தரின் அரசியலை விட்டு விடுவோம். அவரது ஆரிய எதிர்ப்பு, திராவிட ஆதரவு என்ற நிலைப்பாடுகளையும் விட்டுவிடுவோம். அரசியல், இனப் பாகுபாடுகளை யெல்லாம் தாண்டி, விலக்கிச் சிந்திக்கும்போது பாவேந்தரின் குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, அமைதி (நாடகம்) ஆகிய மூன்றும் ஒருபுதிய அணுகுமுறைப் படைப்புகள் என்பதில் என்ன சந்தேகம்? இயற்கையைப் பாடிய ஏந்தல் என்றும் உலகம் முழுவதிலும் பாராட் டப்படுகிறது ஆங்கிலக் கவிஞர் வொர்ட்ஸ் வொர்த் என்பவரையும் தாண்டி, ஏன் வென்று நிற்கிற கவிஞர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். மகாகவி பாரதியாரைத் தேர்வு செய்துவிட்டு,, அடுத்து, தொகுப்பாளர்கள், பாரதி தாசன், கவிமணி, நாமக்கல்லார் எல் லாரையும் விட்டு விட்டு, ஒரே பாய்ச் சலாக நா. பிச்சமூர்த்திக்கு வந்து விடுகிறார்கள்.

    பாரதிக்கு அடுத்ததாக பிச்ச மூர்த்தியைத் தேர்ந்து எடுப்பதற்குக் காரணமாக தொகுப்பாளர்கள் சொல் லும் போது He broke free of traditional forms while introducing new themes என்று குறிப்பிட்டுக் கொள் கிறார்கள். பிச்சமூர்த்தி தொடங்கி குட்டி ரேவதி வரையிலான புதுக் கவிதைக்காரர்கள் செய்துள்ள யாப்புப் புரட்சி ஒரு வகையான ஆசிரிய யாப்பு மாற்று வடிவமே என்ற கருத்தை தொகுப்பாசிரியர்கள் அறியமாட்டார் கள் போலும்.

    கம்பன் நமக்களித்த விருத்தப்பா வகைகளையும், பாவேந்தர் பாண்டியன் பரிசு நூல் முலமும், குடும்ப விளக்கு மூலமும், அழகின் சிரிப்பு மூலமும் அளித்துள்ள விருத்தப்பா வகைகளை யும் ஒப்பிட்டுப் பார்த்தால்தான், பாவேந்தர் எத்தனை எத்தனை விருத் தப்பா புதுமைகளையும் எளிமை களையும் படைத்துத் தந்துள்ளார் என்று தெரிய வரும்!

    மகாகவி பாரதியை எடுத்துத் தொகுத்துவிட்டு, அடுத்து, ஒரே பாய்ச்சலாக பிச்சமூர்த்திக்கு வருகி றோமே. இடையில் சுப்புரத்தினம் என்ற பெயரை விடுத்து, பாரதி தாசன் என்ற பெயர் புனைந்து, தமிழ்க் கவிதை உலகில் ஈடும் இணையும் சொல்லிக் காட்டமுடியாத அளவில் அரசோச்சினாரே ஒருவர், அவரை விட்டுவிட்டு வருகிறோமே என்ற சிந்தனையே, இந்தத் தொகுப்பாளர்களுக்குப் பெயரளவில் கூட இல்லாமல் போனது தான் வெகு ஆச்சரியம்!

    மகாகவி பாரதியின் மறு அச்சுத் தான். மகாகவியை எடுத்துக் கொண் டால், அது பாரதிதாசனையும் எடுத்துக் கொண்டது மாதிரிதானே என்றாவது சமத்காரமாக முன்னுரையிலாவது விவாதித்திருக்கலாம்.

    மகாகவி பாரதி பற்றிய வாழ்க்கைக் குறிப்பை, நூலின் பிற்பகுதியில் எழுதும்போது, மகாகவி பாரதி தனது பாண்டிச்சேரி வாசத்தின் போது அவர் அரவிந்தரைச் சந்தித்தார். வ.வே.சு. அய்யரைச் சந்தித்தார் என்றெல்லாம் எழுதுகிறார்கள். ஆனால் பாரதியாரும், பாரதிதாசனும் புதுச்சேரியில் சந்தித்துக் கொண்டார்கள் என்று எழுதவில்லை. இந்த இடத்தில் கூட ஒரு சிறு குறிப்பாகவாவது தொகுப்பாளர்கள் புரட்சிக்கவிஞரின் பெயரைக் குறிப்பிட்டிருக்கலாம்.

    நூலின் முன்னுரையிலும் பாவேந்தரின் பெயர் இல்லை. பாரதியார் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளுக்கு இடையிலும் இல்லை; கவிதைகள் வரிசையிலும் இல்லை.

    ஆம், நூலின் எந்த இடத்திலும் பாவேந்தர் குறிப்பிடப்படவில்லை. ஆமாம், அந்த அளவுக்கு புரட்சிக் கவிஞர் செய்த பாவம் என்ன?

    - ---------------- நன்றி: ஜனசக்தி 11-2-2010

    குறிப்பு:- இன்று புரட்சிக்கவிஞர் அவர்களின் பிறந்த நாள் நினைவாக இக்கட்டுரை பதிவு செய்யப்படுகிறது------ தமிழ் ஓவியா

    18.11.11

    வாய்க்குள் ஈரேழு லோகங்களும் புகைபோல் தெரிந்தனவா? திருத்தமாகவா?



    ஈரேழு லோகமாம்!


    கண்ணன் வாயைக் காட்டியதும் அவன் வாயில் ஈரேழு பதினான்கு உலகமும் இருப்பதை நேரில் அவன் தாய் கண்டாள் என்று சொற்பொழிவாளர் கூறியதும் கூட்டத்திலிருந்து கேள்வி கேட்கிறார்:

    ஒரு கேள்வி: ஏனையா, வாய்க்குள் ஈரேழு லோகங்களும் புகைபோல் தெரிந்தனவா? திருத்தமாகவா?

    உபந்யாசகர்: முட்டாளே! அசல் உலகங்கள்! உலகத்தில் உள்ள ஒன்று விடாமல் தெரிந்தன என்று தாய் ஆச்சரியப்பட்டாள்.

    மற்றொரு வேண்டுகோள்: அய்யா! உபந்நியாசகரே! இந்தக் கடிதத்தை அந்த அம்மாவிடம் கொடுத்து, தயவு செய்து (வாய்க்குள் தெரிவதால்) சுலபமாய்ச் சென்னை - பாரிஸ் வெங்கடாசல அய்யர் வீதி நெ.17 வீட்டின் குறட்டில் போட்டு விடச் சொன்னால் போதும் அவசரமான லெட்டர், ஸ்டாம்பு வாங்கக் காசில்லை.


    ---------------- புரட்சிக் கவிஞர் - (பாரதிதாசன் கதை, பக்கம் 100)

    26.10.11

    தீபாவளி பற்றி பாரதிதாசன்

    தீபாவளிபற்றி புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கவிதை

    மானம் உணரும் நாள்

    *நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா?*

    நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு?

    நரகன் என்பவன் நல்லனா? தீயனா?

    அசுரன் என்றவனை அறைகின்றாரே?

    இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே?

    இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது?

    இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர்

    பன்னு கின்றனர் என்பது பொய்யா?

    இவைக ளைநாம் எண்ண வேண்டும்.

    எண்ணா தெதையும் நண்ணுவ தென்பது

    படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா?

    வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்

    கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்.

    ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும்

    தூயது தூயதாம் துரும்பிரும் பாகாது!

    'உனக்கெது தெரியும், உள்ளநா ளெல்லாம்

    நினைத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா?

    என்று கேட்பவனை, 'ஏனடா குழந்தாய்!

    உனக்கெது தெரியும் உரைப்பாய் என்று

    கேட்கும் நாள், மடமைகிழிக்கும்நாள்,**அறிவை

    ஊட்டும் நாள் மானம் உணரு நாள் இந்நாள்.

    தீவா வளியும் மானத் துக்குத்

    *தீபாவாளி ஆயின் சீ என்று விடுவிரே! *

    - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

    26.5.11

    தமிழர்கள் நசுக்கப்பட வேண்டும் ஏன்? - புரட்சிக்கவிஞர்

    தமிழர்கள் நசுக்கப்பட வேண்டும்


    தமிழருக்கு புரட்சி மனப்பான்மை அவர்கள் தம் பகைவரால் நசுக்கப்படுவதிலிருந்து உண்டாகும்; ஆகையால் தமிழர் தம் பகையால் அடையும் எவ்விதத் தொல்லைகளையும் நான் வரவேற்கின்றேன்.

    ஆயிரக்கணக்கான ஆண்டு களாகவே தமிழர் சீரழிந்து வருகின்றார்கள்; தம் சீரழிவுக்குக் காரணம் இன்னதுதான் என்பதை அவர்கள் அறிந்து வந்தும் அவர்களின் மிதமிஞ்சிய ஆத்திகப் புத்தியானது அந்தச் சீரழிவும் நல்லதே என்று திருப்தியடைய வைத்தது.

    அளவு கடந்த கடவுள் வழிபாடு, அதிலிருந்து அதே வீதத்தில் அரச வழிபாடு, அதிலிருந்து எடுத்தற்கெல்லாம் பயம், பின்னர் சுயநலம் _ இந்த நோயில் தமிழர்களை ஆதி தொடங்கியே அமிழ்த்தி வந்தனர் தமிழர்களின் எதிரிகள்;

    ஆதி முதல், தமிழர்க்கு எதிர்த்துப் போராடும் சக்தி உண்டாக அவர்கள் நெஞ்சுக்கு ஒரு நிமிட நேரம் வஞ்சகத்தால் செல்வாக்கைடந்த ஒரு மூளை திரைமறைவில் வேலை செய்யும்! அதன் விளைவாகப் பகிரங்க ஏதேச்சதிகாரம், தூக்குமரம், சித்ரவதைகள் இவைகளைக் கண்டபின்னும், அரச வணக்கம் _ வறுமையிற் செம்மை _ விதி இந்த நம்பிக்கை! அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்ற ஜபம்! நெஞ்சு , பஞ்சு படும்பாடு! நரம்புகள் துடைப்பக்குச்சி!

    சென்ற நூற்றாண்டில்தான் இந்த ஏமாந்தவர் மேலும், ஏமாற்றுகிறவர் மேலும் ஆதிக்கம் செலுத்த மூன்றாவது வர்ணம் இந்தியாவில் குதித்தது. இதனால் தமிழர் தம் நிலையை அறியச் சிறிது வெளிச்சமும் தமிழரின் எதிரிகட்குத் தமது தந்திர சூழ்ச்சிகட்குத் தக்க லாபம் ஏற்படலாயிற்று.

    இப்போது தமிழர் அத்தனை மோசமில்லை. காதைப் பிடித்துத் தூக்கினாலும் இப்போது தமிழன் தன் சகிப்புத் தன்மையை விட்டுக் கீ என்று கத்துகிறான்!

    தமிழரின் எதிரிகள் இப்போது ஒரு தப்பு செய்திருக்கிறார்கள். அவர்கள் நினைப்பு:

    அரச வணக்கம், அதிகாரி வணக்கம், பயம், சுயநலம் இவை இன்றைக்கும் தமிழன் சொத்து.

    அந்தக் காலத்தில், தமிழனின் தமிழ்க் கலைகளையெல்லாம் மாய்த்து அவைகளைக் கடல் கொண்டு போனதாகத் தமிழர் களைக் கொண்டே சொல்லி வைக்க, அதை நம்பினார்கள்.

    தமிழச்சி ஒருத்தியைச் சரிப்படுத்திக் கொண்டு, 8000 தமிழர்களை நமது மூதாதைகள் படுகொலை செய்து வெற்றி பெறவில்லையா? தமிழர்களைப் புகழ்வதன் மூலம் தமிழர் தலைகளைப் பலியேற்ற நினைத்ததில் இன்றுவரை வெற்றி காண வில்லை.

    தேசத்தை அயலானிடம் காட்டிக் கொடுத்ததிலும், அதனால் சிறுபான்மையோராகிய நம் சுகபோகத்தைக் காத்துக் கொண்டதிலும் வெற்றி மேல் வெற்றி.

    சில ஆண்டுகளாகக் கூடத் தமிழருக்குத் தைத்த குல்லாய்களுக்குத் தமிழர் மூக்கைப் பிடித்துக்கொண்டுதானே தலை தாழ்த்தினார்கள்.

    காசைப் பிடுங்கிக்கொண்டு காற் செருப்பைக் காட்டும் ஆளுக்கு. எம்பெருமான் ஜீயர் திருவடிகளே சரணம் என்று சொல்லும் இருட்டில் தானே தமிழர் குடித்தனம் பண்ணுகிறார்கள்.

    வந்தால் அரசபோகம், இல்லாவிடில் சென்னை கந்தசாமி கோயில் வீதியில் மூன்றணாவுக் கொரு பித்தளைச் செம்பு பார்ப்போம் ஒரு கை! எதிரிகளின் இந்த சிந்தனைகள் காலந்தவறியவை என்பது எனது அபிப்பிராயம்.

    தமிழரை வஞ்சித்து வஞ்சித்து அவர்களின் ஒற்றுமையைக் கலைத்துக் கலைத்து நலி செய்து நலி செய்து பழகிய அந்த எதிரிகள், இன்று தமிழரின் மண்டையை நோக்கி ஓச்சிய கோட்டடிதான் இந்திக் கட்டாயப் படிப்பு! அநேகமாக இன்று தமிழரால் ஒரு புரட்சி ஏற்படலாம். நலிந்த ஒரு தனிமனிதன் செத்துப் போவான்; ஆனால் நலிந்த ஒரு ஜாதி சாகா: எழுச்சியுறும். இது இயற்கைச் சட்டம். எனது இன்பக் கனவு!

    கனம் எஸ். இராமநாதன், கனம் சுப்ராயன், வரதராசலு, தோழர் திரு. வெ. கல்யாண சுந்தரமுதலியார் முதலியவர்கள் தங்களைத் தமிழர் என்று சரியாகவே நினைத்திருந்த காலம் உண்டு. அப்போது அவர்களால் தமிழர்கட்கு அதிக நன்மை யில்லை.

    நல்ல வேளையாக இப்போது தம்மைத் தமிழரின் எதிரிகள் என்று தப்பாக நினைக் கிறார்கள். இந்தக் காலத்தில் தான் அவர்களால் தமிழர்கட்கு விசேட நலன்கள் ஏற்படப் போகிறது. ஏனெனில் இப்படிப் பட்ட கனவான்கள் தமிழர்களின் எதிர்க்கட்சியில் இல்லாவிடில் தமிழரின் உயிராகிய தமிழைக் கொல்லத் தமிழரின் இயற் பகை நாயன்மார்கட்கு ஆணவம் தோன்றியிருக்குமா? அந்த ஆணவம் இல்லாவிடில் தமிழர் மனம் துடிக்க வழியேற்படுமா?

    துடிக்காத தமிழர்கள் ஒன்று படுவார்களா? நமது கனம் முதன் மந்திரியார் தமிழரின் உயிரின் மேல் தமது ஆக்ஞா சக்கரத்தை விடுவதையும் மேற்படி இந்தியைக் கட்டாய மாக்குவதையும் நான் வரவேற் கிறேன்; ஆனால் அவர் ஓர் அசந்தர்ப்பத்தில் மாட்டிக்கொண் டதாக நினைக்கலாம்.

    ஏற்றசமயம் வாய்த்த போது தமிழ்த் தன்மையின் ஆணி வேரைக் களைந்துவிட வேண்டும் என்பதும் அவர் மதத்தின் ஒரு கிளை. அவ்வாறு ஆணி வேரைப் பறிப்பதன் மூலம் அடியோடு தமது செல்வாக்கைப் பறிகொடுத்து விடலாகாது என்பதும் அம்மதத்தின் மற்றொரு சாகை!

    கனம் ஆச்சாரியார் ஆண் டார், அனுபவித்தார். பிள்ளை குட்டிகளைப் பெற்றார். கிருகஸ்தாச்சிரமம் திருப்தி கரமாகத் தீர்ந்தது. இனி வானப்பிரஸ்தாஸ்ரமம், பற்றற்ற இடம்! தியாகத்திற்கு ஏற்ற சந்தர்ப்பம்!

    அவர் சரியாக நினைப்பதா யிருந்தால்,

    விரோதிகளை அழிப்பதன் மூலம் எதுவரினும் வருக என்ற முடிவுக்குத்தான் அவர் வந்தாக வேண்டும். தமிழகத்தில் தமது செல்வாக்கை எண்ணி எத்தனை தியாகம் புரிந்தார்கள் ஆரியர்கள். ஆரிய ரத்தம் மாறிற்றா?

    கடித்துக் குடிக்கும் காப்பி ஏனத்தைக் கழுவும் ஆளும் இன்னும் ஆரிய ரத்தம் இருப்பதாகக் கூறுகிறான்! முதல் மந்திரியார் தமது லட்சியத்தில் பின்னடைவார் என்று நான் வருந்தவேயில்லை.

    -----(அன்றைய சென்னை ஆட்சியில் ராஜாஜி, இந்திமொழித் திணிப் புச்சட்டம் கொணர்ந்த போது எழுதப்பட்டது.) ------


    ------------------- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்(குடிஅரசு 10.10.1937 இதழில் வந்தது)

    13.9.10

    வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?


    திராவிடம் இது தமிழகம் என்பதன் திரிபு; ஆதலின் தமிழ்ச் சொல்லே. ஆரியம் அன்று. இதுபற்றிப் பல தடவைகளில் என்னால் எழுதப்பட்ட வெண்பாக்கள் இங்கே தரப்படுகின்றன.

    பாலி மொழியிற் பகர்ந்த மகாவமிச
    நூலில் ஒருசெய்தி நோக்குகின்றோம்! - மேலாம்
    தமிழ் என்ற சொல்லைத் தமிழோஎன் றார்! ஏன்?
    தமிழரல்லார் நாக்குத் தவறு.

    தமிழ் நாட்டை ஆசிரியர் தாலமி முன்னாள்
    தமிரிசி என்றுரைத்தார். தாம்ஓர் - தமிழரல்லர்!
    ஆதலினால் தோழா அயலார் ஒருசொல்லை
    ஓதலினால் மாறுபடல் உண்டு.

    தமிழென்று சாற்றுதற்கு மச்ச புராணம்
    த்ரமிளென்று சாற்றியதும் காண்க - தமிழா
    படியைப் ப்ரதிஎன்னும் பச்சைவட வோரிப்
    படியுரைத்தால் யார்வியப்பார் பார்.

    தமிழோவும் மற்றும் தமிரிசியும் வேறு
    த்ரமிள த்ரமில் எல்லாம் சாற்றின் - தமிழின்
    திரியே அவைகள்! செந்தமிழ்ச் சொல் வேந்தன்
    பிரிந்ததுண்டோ இங்கவற்றில் பேசு.

    திரிந்ததமிழ்ச் சொல்லும் தமிழ்ச்சொல்லே ஆற்றில்
    பிரிந்தவாய்க் காலும் பிரிதோ? - தெரிந்த
    பழத்தைப் பயம்பளம் என்பார் அவைகள்
    தழைந்த தமிழ்ச்சொற்கள் தாம்.

    உரைத்த இவை கொண்டே உணர்க தமிழம் திராவிடம்என்றேதிரிந்த தென்று! - திராவிடம்
    ஆரியர்வாய் பட்டுத் திரிந்தாலும் அந்தச்சொல்
    ஆரியச்சொல் ஆமோ அறி.

    தென்குமரிப் பஃறுளியும் சேர்வடக்கு மாமலையும்
    நன்கெல்லை கொண்ட நடுவிடத்தில் - மன்னும்
    பொருள்கள் பலவாம்! பொலிந்தனவே அந்தப்
    பொருள்கள் தமிழ்ப் பெயரே பூண்டு.

    திராவிடம் தன்னந் தனியா ரியமா?
    திராவிடம் இன்பத் தமிழின் - திரிபன்றோ!
    இன்பத் தமிழகத்துக் கிட்டார் திராவிடப் பேர்
    என்பார்சொல் ஏற்புடைய தன்று.

    திராவிடம் என்னல் தமிழின் திரிபே
    திராவிடம் ஆரியச்சொல் அன்று -திராவிடம்
    வெல்க என்று சொன்னால் நம் மேன்மைத் தமிழர்கள்
    வெல்க என்று விண்டதுவே யாம்.

    வந்தார் மொழியா திராவிடம்? மாநிலத்தில்
    செந்தமிழ்ச் செல்வமா அந்தச் சொல்! - முந்தியே
    இங்குள்ள நற்பொருள்கள் எல்லாவற் றிற்குமே
    எங்கிருந்து கொண்டுவந்தார் பேர்

    வேட்டி!

    இது வேஷ்டி என்ற வடசொல்லின் சிதைவாம். இவ்வாறு பார்ப்பனரும், பார்ப்பன அடியாரும் பகர்வர். வெட்டப்படுதலின் வேட்டி எனத் தூய தமிழ்க் காரணப் பெயர். வெட்டல் என்ற தொழிற் பெயரின் அல், இ-இறுதிநிலை கெட, வெட்டு என நின்று முதல் நீண்டது வேட்டு என. அது இ என்னும் பெயர் இறுதி பெற்று வேட்டி ஆனது. அறுக்கப் படுதலின் அறுவை என்றும், துணிக்கப்படுதலின் துணி என்றும், துண்டிக்கப்படுதலின் துண்டு என்றும் வருவதும் ஒப்பு நோக்கத்தக்கதாகும்.

    முட்டி

    இது முஷ்டி என்ற வடசொற் சிதைவாம். முட்டுதல், முட்டு, முட்டி என வந்தது காண்க.

    ஆசாரம் ஆசு+ஆர்வு+அம். குற்றத்தை ஆய்ந்து ஒழுகுவதோர் ஒழுக்கத்திற்குக் காரணப் பெயர். ஆர்வு என்பதில் வு தொக்கது.

    பெருவாயின் முள்ளியார் அருளிச் செய்த ஒழுக்கப் பகுதியின் தொகுப்புக்கும் ஆசாரக் கோவை என்று பெயர். இத்தொடர் தமிழானதால் அப் பெயர் வைத்தார்.

    அதி

    இஃது அதைத்தலில் முதனிலை வேறுபட்ட தமிழ்ச் சொல், அதைத்தல், அதை, அதி, என்பன வற்றிற்கு மிகுதி என்பது பொருள்.

    --------------------------புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - "குயில்", குரல்: 1, இசை: 7, 15.7.1958

    10.9.10

    பிள்ளையார் தருவாரா முத்தமிழை?



    ஈரோடு மதரசா இசுலாமியா உயர்நிலைப்பள்ளியில் பேச புரட்சிக் கவிஞரை அழைத்திருந்தார். ஈரோடு தமிழன்பன். 11.11.1963 காலையில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு அறிவியல் ஆசிரியர் வாசுதேவன் தலைமை வகித்தார். கவிஞர் ஈரோடு தமிழன்பன் வரவேற்புரை நிகழ்த்தியதும், புரட்சிக்கவிஞர் உவப்போடும், உணர்ச்சியோடும் பேசத் தொடங்கினார்.

    தாய்மொழியாகிய தமிழை விரும்ப வேண்டும்; கற்க வேண்டும். தமிழ்ப் பகைக்கு இடம் கொடுக்கக் கூடாது என்றெல்லாம் இளைய மாணவர்களுக்கு ஏற்ற நடையில் ஏற்ற முறையில் புரட்சிக் கவிஞர் பேசிக் கொண்டே வந்தவர், தமிழ்மொழியின் இலக்கியங்களை நன்கு உழைத்துக் கற்க வேண்டும் என்பதை வற்புறுத்த முற்பட்டார்.

    விலை போட்டு வாங்கவா முடியும் கல்வி! என்று பாடியவரல்லவா அவர்! அவர் சொன்னார், தமிழை கடையிலே வாங்கி வரும் மளிகைச் சரக்காக நினைத்து விடக்கூடாது; கடவுளை வழிபட்டு அதை எளிதாக எவனும் வாங்கிவிட முடியாது. யாரோ விநாயகரிடம் போய், யாரோ என்ன அவ்வையார் தான் நான் பாலும், தெளிதேனும், பாகும், பருப்பும் கொடுக்கிறேன்! நீ சங்கத் தமிழ் மூன்றையும் எனக்குக் கொடு என்று தந்திரமாகக் கேட்டாராம். அதாவது உனக்கு நான்கு தருகின்றேன்; நீ எனக்கு மூன்றைக் கொடு!

    எப்படி இருக்கிறது பாருங்கள்? பால், தேன், பாகு, முந்திரிப் பருப்பு எல்லாம் அஞ்சு ரூபாய்க்குள்ளே அகப்படுகிற கடைச் சரக்குகள்! பதிலாக முத்தமிழும் வேண்டுமாம்! தமிழென்ன அவ்வளவு மட்டச்சரக்கா? ஒவ்வொருவனும் எவ்வளவு முயற்சி எடுத்து, எவ்வளவு காலம் உழைத்து, எவரெவரிடம் போய், கற்று முடிக்க முடியாத தமிழை விநாயகராகப் பார்த்து இந்தா பிடி என்று கொடுத்து விட முடியுமா?

    எனவே மாணவர்களாகிய நீங்கள், தாய்மொழியாகிய தமிழ்மேல் பற்றுக் கொண்டு நன்றாகக் கற்க வேண்டும்; பிழையில்லாமல் கற்க வேண்டும் இப்படிப் புரட்சிக் கவிஞர் சொல்லி வந்த கருத்துகளை எம் மாணவர்கள் கருத்துகளாக ஏற்கவில்லை; பொன்னாய், வைரமாய்ப் புது முத்தாய் அள்ளி அள்ளிக் குவித்துக் கொண்டனர்; கொண்டாட்டம் போட்டனர்!

    படிக்கையிலே தொல்லை இருக்கும்; படித்து
    முடிக்கையிலே முற்றும் மகிழ்ச்சி முடிந்த பின்
    தொட்டதெல்லாம் வெற்றி, துயரின்றி வாழலாம்
    கட்டாயம் கல்வி பயில்.
    சொட்டுக் குழம்புக்கும் சோற்றுக்கும் கையிலொரு
    துட்டுக்கும் கண்ணயர்ந்து தூங்குவதற்கும் கட்டத்
    துணிக்கும் துடிக்கின்ற ஏழையையும் நல்ல
    பணக்கார னாக்கும் படிப்பு.

    புரட்சிக் கவிஞர் தமது குயில் ஏட்டில் எழுதி வெளியிட்டிருந்த கல்வி பற்றிய இவ்வெண்பாக்களையெல்லாம் அறிந்திருந்த எங்கள் மாணவர்கள் காட்டிய ஆர்வத்தை, அடக்கத்தை, அமைதியைக் கண்டு மனம் நெகிழ்ந்து போனார், பாராதிதாசன்.

    ---------------------நன்றி: பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள் நூல்

    30.4.10

    புரட்சிக்கவிஞரின்அறிவியல்பார்வை



    இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களில் பாரதிக்குப் பிறகு அறிவியலும், கவிதையுமாகத் தமிழ் பரப்பியவர் புரட்சிக்கவி பாரதிதாசன். எதிலும் சமுதாயக் கண்ணோட்டம், பகுத்தறிவு சீர்திருத்தக் கொள்கைகளுக்குக் குறைவில்லை. பாவேந்தரின் கவிதை, சிறுகதை, நாடகம், கட்டுரை, சொற்பொழிவு, துணுக்கு போன்ற எல்லா ஊடகங்களிலும் அடிநாதமாக இழையோடும் அறிவியல் கருத்தாழத்தையும், தமிழின் முன்னேற்றத்தையும் எடுத்தெழுதுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

    இந்நூற்றாண்டுக் கவியானபடியால் உலகில் நிகழ்ந்து வரும் விஞ்ஞானப் புரட்சியிலும் இரண்டறக் கலந்து, ஏவுகணைகள் முதல் சூரண மருத்துவம் வரை எத்தனையோ துறைகள் இவரது மனதில் உட்கடல் முத்துக்களாகப் பளீரிடுகின்றன. பொதுவாக அறிவியல் தமிழை மூன்று நிலைகளில் வகைப்படுத்தலாம். பாமரருக்குப் புரியுமாறு எழுதப்படும் விஞ்ஞானச் செய்தி; மாணவருக்குப் புகட்டத்தகும் அறிவியல் பாடம்; கற்றோருக்கன்றி மற்றோருக்குப் பொருள் விளங்காத உயர்தரத் தொழில்நுட்ப ஆய்வுக் குறிப்பு ஆகிய மூன்று தளங்களில் நின்று கவனித்தால் பாவேந்தரின் அறிவியல் கொள்கை களில் விஞ்ஞானத் தகவல் நிலையினின்று உயர்ந்து, அறிவியல் பாட நிலைக்கு எட்டமுயலும் வேகமும், வீரியமும் புலப்படும்.

    கால விரைவினைக்

    கடக்கும் வானூர்தி

    ஞாலப் பரப்பினைச்

    சுருக்கிற்று பார்நீ.

    தொலைபேசித் தொடர்பு

    தோழமை நட்பு

    அலைகடல் மலையை

    அறிந்து பெட்பு

    வானொலி யாலே

    வைய மொழிகள்

    தேனொலி யாயின

    திக்கெலாம் கனிகள்.

    ஏவுகணைகள்

    கோள்விட்டுக் கோளைத்

    தாவின எங்குமே

    நாம் செல்வோம் நாளை.

    இன்றைக்குச் செவ்வாய்க்கு மனிதன் குடிபெயரும் பிரயத்தனங்கள் வலுவடைந்து வருகின்றன. சந்திரனில் தளம் அமைத்துப் பூமியிலிருந்து புறப்பட்டுச் சென்று அங்கு ஓய்வு முகாமிட்டுச் செவ்வாய்க் கோளுக்குப் பயணம் தொடரும் பூர்வாங்க முயற்சிகள் ஆரம்பித்துள்ளன. பாவேந்தரும் செவ்வாய் உலக யாத்திரை (ஏழைகள் சிரிக்கிறார்கள் -பாரதிதாசன் சிறுகதைத் தொகுப்பு) குறித்து கற்பனை ஓவியம் தீட்டியிருக்கிறார்.

    1959ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் நாள் ஏவப்பட்ட ரஷ்யாவின், லூனா-2 எனும் விண்கலம் சந்திரனில் ஆர்க்கிமிடிஸ் குழியின் அருகே தரையை முட்டிற்று. இதுகுறித்துப் பாவேந்தர் நடத்திய குயில் (22.9.59) ஏட்டின் கேட்டலும் கிளத்தலும் பகுதியில் ஒரு வினா விடை இடம் பெற்றது. வான் இடத்தின் இரண்டாம் தலைவனான திங்களை மண்ணிடத்தில் உருசிய எறிகுண்டு பாம்பு தொட்டது என்றால் திங்களின் மானந்தானே கப்பலேறிற்று என்ற கேள்விக்கு மண்ணின் பெருஞ்செல்வந்தான் கரியாயிற்று எனப் பதிலிறுக்கிறார். புரட்சிக்கவி, சந்திரனைப் பாம்பு விழுங்குகிற புனைக் கதைகளைப் பொய்யாக்கி இம்மண்ணுலகப் போலிச் சாத்திரங்களை எரித்துவிட்ட விஞ்ஞான வரலாறு பாவேந்தர் வாக்கில் அங்கதமாக அறிவிக்கப்படுகின்றது.

    சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம் என்றார் பாரதி.

    நிலவில் மாந்தர் இறங்கும் நாள்

    நெடுநாள் ஆகாது என்று தீர்க்கதரிசித்தார், பாரதிதாசனார். கவிஞர் மேலும் வெண்ணிலாவில் தமிழ்ப் பெண் சென்று இறங்கவேண்டும் என்ற ஆர்வத்தினால் பாவேந்தராகிய ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது எனினும் நிலவினில் முதல் மனிதன் கால் வைத்தது இந்திய நேரப்படி 1969 ஜூலை 21ஆம் நாள். பாவேந்தர் மறைந்து சரியாக 5 ஆண்டுகள் 3 மாதங்கள் கழித்தே விண்வெளி வரலாற்றின் அந்த மகத்தான சாதனை அப்போலோ- 11 எனும் அமெரிக்கத் திட்டத்தினால் நிறைவேறியது.

    ஜப்பானில் விழுந்த குண்டு தப்பாது உலகழிக்கும் என்ற தலைப்பில் பகுத்தறிவு மலர் இதழில் பாரதிதாசன் எழுதின கவிதையின் சில வரிகளைக் கவனிப்போம்.

    இரோஷிமா நாகசாகி எனும் இரு ஊரில் வைய

    விரோதிகள் வீசின ராம் வெடிகுண்டை; எரி மலைத்தீ

    சரேலெனக் கவிழ்ந்த தைப் போல் சாவில்பல்லாயி ரம்பேர்

    ஒரே விஷப் புகை நெருப்பால் உருவிலா தழிந்தா ராமே

    இன்னும் ஒரு நூற்றாண்டுக்கும் இரண்டூரின் சுற்றுப்பக்கம்

    ஒன்றுமே முளையா தாமே! வாழ்தலும் ஒண்ணா தாமே

    அணுகுண்டு எதிர்ப்பை மிக ஆழமாக இதில் பதிவு செய்துள்ளார்.

    மேலும் உங்கள் தெரு கெட்ட தெரு எனும் தலைப்பில் தூய்மையான சுற்றுப்புறம் குறித்து ஆதங்கப்படுவதைக் கேளுங்கள்:

    உங்கள் தெரு வீட்டின்முன்னே

    மாடு கட்டி இருக்கும் - அங்கு

    உள்ள சாணி சிறுநீரில்

    கொசுக்கள் நோயைப் பெருக்கும்.

    அங்கங்கேயும் வீட்டெதிரில்

    குப்பைக் கூளம் கிடக்கும் - எனில்

    அதனை நாயும் கோழியும்போய்

    கிளறிக் காற்றைக் கெடுக்கும்

    தங்குழந்தை தெருவில் பகலில்

    வெளிக்குப் போகக் கண்டு - நல்ல

    தந்தையரும் இருட்டினிலே

    செய்வார் அந்தத் தொண்டு

    கிண்டலைப் பாருங்கள்.

    புகைபிடித்தல் உடலுக்குத் தீங்கு என்கிற கொள்கையோடு,

    புகைச்சுருட்டால்

    மூச்சுக் கருவிகள் முற்றும்நோய் ஏறும், பிள்ளை

    முத்தம் தரும்நே ரத்தில் வாய் நாறும்,

    ஓய்ச்சல் ஒழிவில் லா(து) இருமல் சீறும் - நல்.

    ஊரோ உன்னைச் சீ என்றே கூறும்

    எனப் புகை சுருட்டுக் கவிதையில், தீமையைச் சுட்டிக்காட்டுகிறார்.

    இதுகாறும் புரட்சிக்கவி பாரதிதாசனாரின் அறிவியல் தமிழுள்ளமும் ஆழ்ந்த கவிநெஞ்சமும் நுணுகி ஆராயப் பெற்றோம். அரசு மொழியாக, ஆட்சி மொழியாக, அறிவியல் மொழியாகத் தமிழ் செழிக்கவேண்டும்.

    -------------------நெல்லை சு.முத்து -நன்றி: தீக்கதிர், 26.4.2010

    1.8.09

    பாவேந்தரின் நகைச்சுவை உணர்வும் - வைணவ உணவும்




    வைணவ உணவு

    பாவேந்தர் ஒரு சமயம் கடலூரில் ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்தார்.

    அதே கூட்டத்தில் டார்பிடோ ஏ.பி.ஜனார்த்தனமும் கலந்து கொண்டார்.

    அன்று இரவு சுமார் 8 மணி அளவில் கடலூரில் இருந்து பாண்டிக்கு வந்த பேருந்து நடத்துநர் ஒருவர், பாவேந்தரின் பழனியம்மா அச்சகத்திற்கு வந்து, இதைக் கவிஞர் சாமி பழனியப்பனிடம் கொடுக்கச் சொன்னார்கள், என்று கூறி, என்னிடம் ஒரு கடிதத்தைத் தந்தார்.

    நான் கடிதத்தைப் பிரித்துப் படித்தேன்.

    அன்புள்ள பழனியப்பனுக்கு, இரவு கூட்டம் முடிந்ததும், தோழர் டார்பிடோவும் நானும் கடைசி வண்டியில் வருகிறோம்;

    எங்களுடன் இன்னும் இருவரும் வருவார்கள். எனவே, நான்கு அல்லது அய்ந்து பேருக்கு வைணவ உணவு தயாரித்து வைக்கச் சொல்லவும்.

    கடிதத்தைப் படித்து முடித்ததும், பாவேந்தரின் நகைச்சுவையை எண்ணிச் சிரித்தேன்.

    ஆம். அசைவ உணவைத்தான், அவர் வைணவ உணவு என்று குறிப்பிட்டிருந்தார்.

    பாவேந்தர் வீட்டிற்குச் சென்று விஷயத்தைச் சொல்லி நான்கு பேருக்கு அசைவச் சாப்பாடு சமைத்து வைக்கும்படி அம்மா அவர்களிடம் சொல்லி ஏற்பாடு செய்தேன்.

    பிறகு, பாவேந்தரும், டார்பிடோவும், இன்னும் இருவரும் வந்தனர்.

    டார்பிடோ என்னைப் பார்த்துப் புன்னகைத்தவாறே, என்ன சாப்பாடு? என்றார்.

    நான் சிரிப்பை அடக்கிக் கொண்டு வைணவம்தான் என்றேன்.

    அப்புறமென்ன? இந்த நகைச்சுவை விருந்தில் அனைவருமே கலந்து கொண்டோம்.


    --------------------- கவிஞர் சாமி பழனியப்பன் எழுதிய நினைவு மலர்கள் நூலிலிருந்து

    1.5.09

    புரட்சிக்கவிஞரின் பொருள்மிகுந்த துணுக்குகள்!

    புரட்சிக் கவிஞரின் பொருள்மிகுந்த துணுக்குகள்!

    (புரட்சிக் கவிஞர் என்றவுடன் அவரது கவிதைதான் நமக்கு நினைவு வரும்.ஆனால் நமது புரட்சிக்கவிஞர் அவர்கள் உரையாடல்கள், கட்டுரைகள், நகைச்சுவைத் துணுக்குகள் இப்படி எல்லா வழிகளிலும் பகுத்தறிவைப் பரப்பினார் என்பதற்கு சான்றாக இதோ உங்கள் சிந்தனைக்குச் சில)

    மேல்நாட்டில் பிறந்து வளர்ந்த ஓர் இந்தியர்:-

    (தோட்டியைக் காட்டி) இவர் யார்?

    உள்ளூரார் : இவர், வீட்டில் உள்ள அசுத்தங்களை எடுத்துப்போகிறார்.

    மே.இந்; (வண்ணானைக் காட்டி) இவர் யார்?

    உள்: இவர், வீட்டில் உள்ள அழுக்குத் துணிகளை எல்லாம் எடுத்துப் போகிறார்.

    மே.இந்: திரும்பவும் சலவைசெய்து வந்து கொடுப்பாரா?

    உள்: ஆஹா!

    மே இந்: (புரோகிதரைக் காட்டி) இவர் யார்?

    உள்: இவர் வீட்டில் உள்ள அரிசி, பருப்பு முதலியவைகளை மூட்டைகட்டிக்கொண்டு போகிறார்.

    மே.இந்: சமையல் செய்து கொண்டு வந்து கொடுப்பாரா?

    உள்: திரும்பக் கொடுப்பதில்லை.

    மே.இந்: அடித்துக் கொண்டா போகிறான்?

    உள் : ஆம்!

    மே இந்: அடித்துக்கொண்டு போவதைப் பார்த்துக் கொண்டா இருப்பார்கள்?
    உள்: ஆம்! ஆம்!

    மே.இந் : அடித்துக்கொண்டா.....

    உள் : எத்தனை தரம் சொல்லுவது? அடித்துக்கொண்டுதான் போகிறான்! அடித்துக்கொண்டுதான் போகிறான் ஆயிரம் வருடமாக இப்படி!

    --------------------------------------------------------------------------------------

    ராமு : சீனு சூத்திரன் திடீரென்று இறந்தான், ஒரு பிராமணன் அதற்காக வருந்தினான். சூத்திரப் பிரேதத்தைக் கட்டியழுத பிராமணனை நான் இன்றைக்குத் தான் பார்த்தேன்.

    குண்டு : சரி,அப்படியானால் பிரேதத்தில் காணாமற்போன பொன் அரைஞாண் கயிற்றை, அய்யர்தான் அமுக்கியிருப்பார்!

    ---------------------------------------------------------------------------------

    அர்ச்சகர் : பர்த்தாயாதில்லை கோவிந்த ராஜ ஸ்சுவாமி படுத்தபடி இருக்கிறார்! பார்த்தாய்விட்டதா?

    பக்தன் : இருங்கள் ஸ்வாமி! அவர்

    அர்ச்சகர் : அது

    பக்தன் : மகா சக்தி வாய்ந்தவர் என்கிறீர்களே - எழுந்திருப்பதே தகராறோ!

    -------------------------------------------------------------------------------------
    -
    பிராமணன் : பிராமணன் மகன் பிராமணன். நீ அறியாதவன். உன் தகப்பனாரைக் கேள்!

    சூத்திரன் : பிராமணனுக்கே பிராமணன் பிறக்கிறானா? இதை உன் தாயாரைக் கேட்டுப்பார்!


    -------------------------------------------------------------------------------------------

    ஒருவன் பல கொலைக் குற்றம் செய்து வந்ததன் பயனாய்ச் சர்க்காரால் தூக்கிலிடப்பட்டான். அவன் மகன் வெளியிட்ட கருமாதிப் பத்திரிகையின் படி அந்தக் கொலைகாரன் வைகுண்டம் போனதாய்த் தெரிகிறது. தக்க போலீஸ் காபந்து இருந்தாலொழிய, வைகுண்டத்திற்கு எவரும் போகவேண்டாம்!

    ------------------------------------------------------------------------------------


    சைவன் சுயமரியாதைக்காரன் ஆன பின் அவனை நிறுத்துப் பார்த்ததில் நிறையில் கால்பலம் - குறைவு ஏற்பட்டது, விபூதியிடுவது நீங்கியதால்!

    -----------------------------------------------------------------------------------

    பாதிரி : நீ ஏதாகிலும் பாபம் செய்தாயா? சொல்லி விடு, நான் சாமியிடம் சொல்லித் தீர்த்துவிடுகிறேன்.

    கிறிஸ்தவர் : ஆம்! சுவாமி, ஆம்! பெரிய பாவம்!

    பாதிரி : என்ன அப்படி!

    கிறிஸ்தவர் : பாதிரிகள் ஏழைகள் மட்டில் இரக்கம் உள்ளவர்கள் என்று நினைத்துவிட்டேன்!

    -------------------------------------------------------------------------------


    சுயராஜ்யவாதி : காங்கிரஸ் ஒன்றே சுயராஜ்யத்திற்கு ராஜபாட்டை!

    சுயமரியாதைக்காரன் : சுயமரியாதை இயக்கம், அந்த ராஜபாட்டையை உண்டாக்கும் முனிசிபாலிட்டி.

    ------------------------------------------------------------------------------------

    புரட்சிக் கவிஞர் பிறந்த நாளையொட்டி 29.4.1891 "விடுதலை" ஞாயிறுமலர் 25-4-2009 வெளியிட்டதிலிருந்து

    6.7.08

    கல்லும் - கடவுளும் ------- புரட்சிக்கவிஞர்



    புரட்சிக்கவிஞர் சொன்ன கதை

    பெரியவர் ஒருவர், சிறுவன் ஒருவனை அழைத்துக் கொண்டு வழிப்பயணம் போனார். காலில் கல் தடுக்கி சிறுவன் கீழே விழுந்து விட்டான். எழுந்த அவன், எரிச்சலுடன் கல்லை எடுத்து வீசி எறிந்தான். பெரியவர் குனிந்து கல்லை எடுத்துப் பார்த்தார்.

    அய்யய்யோ! தம்பி... மோசம் போனாய். சாமியை மிதித்தாய்! இப்போது அதை வீசி எறிந்துவிட்டாய். சாமி உன் கண்களை அவித்துவிடும். அந்தச் சாமிக் கல்லை எடுத்து வா. அதோ தெரியும் அங்காளம்மன் கோவில் முன் நட்டு வைத்து கும்பிடு! கும்பிடு! என்று அதட்டினார்.

    சிறுவன், கல்தானே தாத்தா! அதுக்குப் போய் கும்பிடு போட வேண்டுமா? என்று கேட்டான்.
    நீ கல்... கல் என்று மீண்டும் சொல்கிறாய். நன்றாக உற்றுப் பார். பூசை போட்டு, பொட்டும் வைக்கப்பட்டு இருக்கிறதே... தெரியவில்லையா? என்றார்.

    ஆமாம், தாத்தா என்று கூறி ஓடிச் சென்ற சிறுவன், அந்தக் கல்லை எடுத்து நட்டு, விழுந்து விழுந்து கும்பிட்டான். கன்னத்தில் போட்டுக் கொண்டான்.

    சிறுவன் செய்த பிழையைப் பொறுத்துக் கொள்ளச் சொல்லி பெரியவரும் சாமிக்கு கும்பிடு போட்டுவிட்டு நடந்தார். சிறுவன் பின்தெடர்ந்தான்.

    மதிய உணவு நேரம். சத்திரத்தில் சாப்பிட்டு விட்டுப் போய்விடலாம் என்று எண்ணி இருவரும் சென்று உண்ணத் தொடங்கினர். அப்போது, பெரியவர் வாயில் கல் ஒன்று சிக்கிற்று. தூவென்று துப்பினார்.

    சிறுவன், என்ன தாத்தா? என்றான்.

    கல் என்றார், தாத்தா.

    சிறுவன் ஓடிச் சென்று கை அலம்பினான். தாத்தா உமிழ்ந்த கல்லை எடுத்து ஓரமாய் வைத்துவிட்டு, அதன்முன் விழுந்து கும்பிட்டான்.

    ஏன்டா... மடையா.. சோற்றில் விழுந்த கல்லைக் கும்பிடுகிறாய்... அறிவு இருக்கிறதா, உனக்கு? ஆத்திரப்பட்டார் பெரியவர்.

    என்ன தாத்தா... தெருவில் கிடந்த கல்லை சாமி என்று சொல்லி கும்பிடச் சொன்னீர்கள். இந்தக் கல் சோற்றில் அல்லவா கிடந்தது. இந்தச் சாமி உயர்ந்த சாமியாயிற்றே! இதைக் கும்பிட வேண்டாமா? என்றான், சிறுவன்.

    தாத்தாவால் பதில் சொல்ல முடியவில்லை!



    --------------- நன்றி: "பெரியார்பிஞ்சு"

    22.5.08

    தமிழ்நாடு தலைதூக்க உயிரையும் தருவேன்

    பொதுத்தொண்டு செய்தோமா?

    அதிகாலை தொடங்கிநாம் இரவு மட்டும்
    அடுக்கடுக்காய் நமதுநலம் சேர்ப்ப தல்லால்,
    இதுவரைக்கும் பொதுநலத்துக் கென்ன செய்தோம்?
    என்பதைநாம் நினைத்துப்பார்ப் பதுவு மில்லை.

    வீட்டுத் தொண்டா பொதுத் தொண்டு?

    "இன்றைக்குக் கறிஎன்ன? செலவு யாது?
    ஏகாலி வந்தானா? வேலைக் காரி
    சென்றாளா? கொழுக்கட்டை செய்ய லாமா?
    செந்தாழை வாங்குவமா? கடைச் சரக்கை
    ஒன்றுக்கு மூன்றாக விற்ப தெந்நாள்?
    உன்மீதில் எனக்காசை பொய்யா? மாடு
    குன்றுநிகர் குடம் நிறையக் கறப்ப துண்டா?
    கொடுக்கலென்ன? வாங்கலென்ன? இவைதாம் கண்டோம்.

    தன்னலத்தால் என்ன நடக்கும்

    "தமிழரென்று சொல்லிக்கொள் கின்றோம் நாமும்;
    தமிழ்நாட்டின் முன்னேற்றம் விரும்பு கின்றோம்;
    எமதென்று சொல்கின்றோம் நாடோ றுந்தான்;
    எப்போது தமிழினுக்குக் கையா லான
    நமதுழைப்பை ஒருகாசைச் செலவு செய்தோம்?
    நாமிதனை என்றேனும் வாழ்நாள் தன்னில்,
    அமைவாகக் குந்திநினைத் தோமா? இல்லை;
    அனைவருமிவ் வாறிருந்தால் எது நடக்கும்?"

    பெரும்படியான தொண்டு செய்துள்ளோம்

    கரும்படியின் சாறுநிகர் மொழியாள் இந்தக்
    கனிந்தமொழி சொன்னவுடன் அவன்உ ரைப்பான்;
    "வரும்படிவீ தப்படிநான் தரும்ப டிக்கு
    வாக்களித்த படிகணக்கர் திங்கள் தோறும்
    கரம்படி வீதித்தமிழர் கழகத் தார்கள்
    கடைப்படியை மிதித்தவுடன் எண்ணி வைப்பார்
    பெரும்படியாய்ச் செய்ததுண்டு; படிக்க ணக்கைப்
    பேசிவிட்டாய் கண்டபடி" என்று சொல்ல.

    தமிழ் படிக்க வேண்டும் எல்லோரும்

    "அப்படியா! அறியாத படியால் சொன்னேன்;
    அந்தமிழர் படிப்படியாய் முன்னேற் றத்தை
    எப்படியா யினும்பெற்று விட்டால் மக்கள்
    இப்படியே கீழ்ப்படியில் இரார்க ளன்றோ?
    மெய்ப்படிநம் அறிஞரின் சொற்படிந டந்தால்,
    மேற்படியார் செப்படி வித்தை பறக்கும்.
    முற்படில் ஆகாததுண்டா? எப்ப டிக்கும்
    முதற்படியாய்த் தமிழ்படிக்க வேண்டும்" என்றாள்.

    தமிழ்நாடு தலைதூக்க உயிரையும் தருவேன்

    "இழந்தபழம் புகழ்மீள வேண்டும் நாட்டில்,
    எல்லோரும் தமிழர்களாய் வாழ வேண்டும்.
    வழிந்தொழுகும் சுவைத்தமிழே பெருக வேண்டும்.
    மாற்றலர்கள் ஏமாற்றம் தொலைய வேண்டும்.
    விழுந்ததமிழ் நாடுதலை தூக்க என்றன்
    உயிர்தனையே வேண்டிடினும் தருவேன்" என்றான்.
    "பழம்இடுவேன் சர்க்கரைப்பால் வார்ப்பேன் உங்கள்
    பண்பாடும் வாய்திறப்பீர் அத்தான்" என்றாள்.

    --------புரட்சிக்கவிஞர் அவர்கள் எழுதிய "குடும்பவிளக்கு" நூலிலிருந்து

    28.4.08

    ஜாதி ஆபத்து - எம்டன் கப்பல் வரவு

    மகாயுத்த ஆரம்ப காலத்தில் புதுவைத் துறைமுகத்தில் எம்டன் என்னும் செர்மனிக் கப்பல் வந்ததற்காகப் புதுவை வாசிகளில் ஏழைகளும் பணக்காரருமாகப் பலபேர்கள் குடும்ப சகிதம் மேற்கில் பத்துப் பதினைந்து மைல் தூரமுள்ள கிராமங்களுக்குப் போய்விட்டார்கள். அதிலொரு கிராமம் கூனிச்சம்பட்டு. கூனிச்சம்பட்டுக் கிராமத்தார் தங்களூரை நோக்கி அஞ்சி ஓடிவரும் புதுவை வாசிகளை வரவேற்று, அவர்கள் தங்கிச் சமையல் செய்து கொள்ளத் தாங்கள் வசிக்கும் வீடுகளிலேயே இடம் கொடுத்தனர். கூனிச்சம்பட்டுக் கிராமத்தார் தம்மை நாடி வந்தவர்கள் அனைவரும் மொத்தத்தில் பட்டினவாசிகள் என்று கருதினார்களேயன்றி அவர்களால் இவர் இன்ன ஜாதி என்பதை நினைக்க வில்லை. பட்டினவாசிகளும் தங்களுக்குத் தங்க; இடம் கொடுத்தவர்களும் இன்னவர் இன்ன ஜாதி என்பதை அலசிப் பார்த்துத் தத்தமக்கு ஏற்ற ஜாதிக்காரர் வீட்டில் தங்கினதாகவும் சொல்லமுடியாது. எனவே கூனிச்சம்பட்டில் புதுவை வாசிகள் தங்கியிருந்த வரைக்கும் தமது ஜாதிப் பைத்தியத்தினின்று நீங்கிச் சமத்துவ வாழ்வு வாழ்ந்தனர். வாசகர்கட்கு நன்றாய் ஞாபகம் இருக்கட்டும்; புதுவை வாசிகள் இரண்டொரு நாள் கூனிச்சம்பட்டியில் சமத்துவமாயிருக்க ஜெர்மனிக் கப்பல் புதுவைத் துறை முகத்துக்கு வரவேண்டியிருந்தது!


    அக்கப்பல் மறுநாள் போய்விட்டது! போய்விட்ட செய்தி கூனிச்சம்பட்டியிலிருந்த புதுவை வாசிகளுக்கு நிச்சயப்பட்டது. கூனிச்சம் பட்டிலும், அதன் அண்டைக் கிராமங்களிலும் சத்த வண்டிகள் தயாராயின. ஒரு ரெட்டியார் வீதி. அவ்வீதியில் புதுவைக் குடும்பம் பத்துக்கு மேல் தங்கியிருந்தன. அக்குடும்பங்களில் ஒரு குடும்பம் மிக்க தாழ்ந்த சாதி. பக்கத்து வீட்டில் இறங்கியிருந்த குடும்பம் உயர்ந்த ஜாதி. அதன் பக்கத்தில் நடுத்தரம். எதிர்த்த வீட்டில் தங்கியிருந்ததோ கொஞ்சம் சுமார். புதுச்சேரி வேளாளக் கிழவி ஒருத்தி - ஜெர்மனியான் கப்பல் வந்தாலும் வந்தது! இந்த இடத்தில் கீழ்ச்சாதி - மேல்ஜாதி என்று இல்லாமல் எல்லாரோடும் சரிசமானமாய் இருக்க நேரிட்டது என்று சொன்னாள்.

    பக்கத்து வீட்டில் நின்றிருந்த கீழ்ச்சாதி புதுவைப் பெண்ணின் காதில் இது விழுந்தது; அப்பெண், ஏன் முதலியார் வீட்டம்மா! அந்தக் கீழ்ச்சாதி நேற்று நினைப்பில்லாமல் போனதென்ன? இன்றைக்குத்தான் நினைப்பு வந்தது என்றால் உங்கள் மேல்ஜாதிப் பெருமையைச் சொல்லிக் கொள்ளாதிருந்தால் முழுகிப் போவது ஒன்றுமில்லையே என்றாள். இதுதான் சொன்னாள். கிழவிக்கு வந்தது கோபம்.

    தாழ்ந்த ஜாதியின் வர்ணனை ஆரம்பிக்கப்பட்டது. அந்த ஜாதிக்கே உரிமையென்று பல செயல்கள் வெளிவந்தன. தாழ்ந்த ஜாதிப் பெண் திகைத்தாள். அவளுக்குத் திட்டத் தெரியாது. நாணமும் பொறுக்க முடியவில்லை. கண்ணீர் விட்டாள். ஆனால் அவள் புருஷன் புதுவைக்கு போகச் சத்த வண்டியோடு வந்துவிட்டான். இதைக் கேள்விப்பட்டான். நன்றாகக் கிழவியைத் திட்டினான். கிழவியின் மருமகனான முதலியார் உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் காதில் கேட்டது. அவரும் வந்து தாழ்ந்த ஜாதி ஆண் பிள்ளையை எதிர்த்தார். அச்சண்டையில் அவரின் காரியக்காரனும் முதலியாருக்கு உதவி செய்தான். மேலும் தாழ்ந்த ஜாதிப்பாடல்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. தடிகள் உபயோகிக்கப்பட்டன. விஷயம் பரவிற்று. உள்ளூர்த் தாழ்ந்த ஜாதிக்காரர்களும் அங்கு நெருங்கினார்கள். மேல் ஜாதியாரும் நெருங்கினார்கள். இரண்டு நிமிஷத்தில் இரு பக்கத்திலும் பத்துப் பேர்கள் வீதம் நின்று, ஆயுதங்களைச் சுழற்றினார்கள். அடுத்த இரண்டாவது நிமிஷம் நூறுபேர் வீதம் இரு தரப்பிலும் சேர்ந்தார்கள். அதற்குமேல் உயர் ஜாதிக்காரருக்குக் கூட்டம் சேரவில்லை. எதிரிகளின் தொகை அதிகப்பட்டுக் கொண்டே வந்தது. முடிவு: 20 பேருக்கு ஆபத்தான காயம், ஒருவன் இறந்தான்; 15 பேருக்கு கைமுறிவு, கால்முறிவு! கூனிச்சம்பட்டில் ஆஸ்பத்திரி ஏது? புதுவை ஆஸ்பத்திரியை நோக்கி வண்டிகள் வரிசையாக நோயாளிகளையும் சொந்தக்காரர்களையும் ஏற்றிப் போய்க் கொண்டிருந்தன. வழியில் என்ன விஷயமென்று கேட்பவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வெட்கமாயிருந்தது.

    வெட்கக்கேடு. ஜெர்மனியின் அக்ரமமான சண்டைக் கப்பலுக்குத் தப்பித்துக் கொள்ளுவது சாத்தியம். ஆனால், மனு வகுத்த ஜாதி என்னும் அக்ரமத்திற்குத் தப்பி உயிர் பிழைப்பது முடியவில்லை.

    ---------- - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - "புதுவைமுரசு" 12.1.1931

    27.4.08

    புரட்சிக் கவிஞரைச் சுற்றி ஒரு பொய் வலை

    அண்மையில் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் புரட்சி கவிஞர் பாரதிதாசனைப் பற்றி ஒரு கருத் தரங்கு நடைபெற்றுள்ளது. இக்கருத்தரங்கில் `பாரதிக்குப் பின் பாரதிதாசன் என்ற தலைப்பில் முனைவர் சிவத்தம்பி பேசிய சில செய்தி களைத் `தினமணி ஏடு (9.2.2008) வெளியிட்டுள்ளது. முனைவர் சிவத்தம்பி, இடது சாரிச் சிந்தனையாளர் என்பது குறிப்பிடத் தக்கது.

    பொதுவாக இடதுசாரிச் சிந்தனையாளர்கள் பாரதிக்குப் பின் யாரையும் கவிஞர் எனக் கண்டு பாராட்ட மாட்டார்கள். பாரதியைப் போல வேறு எவரையும் அவர்கள் புகழ்ந்து பேசவும் மாட்டார்கள். பாரதி மார்க்சீயத்தின் மறுபதிப்பு என்பது அவர்கள் கருத்து. பொதுவுடைமையை யும் லெனினையும் பாரதி எப்படியெல்லாம் தரக் குறைவான சொற்களால் வசைமாரி பொழிந்துள்ளார் என்பதைப் பலரும் எடுத்துக் காட்டியுள்ளனர். சோவியத் ஒன்றியத்தில் ஏற்பட்ட புரட்சி `மாகாளி பராசக்தியின் கடைக்கண் பார்வையால் கிடைத்த பரிசு என்று கூறி யவர் பாரதியார்.

    முனைவர் சிவத்தம்பி`

    பாரதிக்குப் பின் பாரதிதாசன் என்ற தலைப்பில் உரையாற்றிய முனைவர் சிவத்தம்பி ``சமூக மாற்றத் துக்கான படைப்புகளில் பாரதிதாசனால் ஒரு கட்டத்துக்கு மேல் செல்ல முடியாதது ஏன் என்பது குறித்து மாணவர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

    தமிழகத்தில் ஆராய்ச்சி இரு வகைப்படும். ஒன்று ஆய்ந்தாய்ந்து அந்த ஆய்வின் வாயிலாகக் கிடைக்கும் தரவுகளைக் கொண்டு முடிவுகளைச் சென்றடைவது. டாக்டர் கால்டுவெல் பேராசிரியர் சதாசிவ பண்டாரத்தார், தேவநேயப் பாவாணர், டாக்டர் வ. சுப. மாணிக்கம் முதலானோர் இவ்வகையினர்.

    இரண்டாவது வகை ஆய்வு, முதலிலேயே முடிவு செய்து கொண்டு அந்த முடிவிற்கேற்றவாறு காரணங் களைத் தேடி அலைவது! (பேரா. வையாபுரியார் இதற்கு எ-டு). முனைவர் சிவத்தம்பி, பாரதிதாசன் ஒரு கட்டத் துக்கு மேல் செல்லவில்லை என்ற முடிவை முதலிலேயே எடுத்துக் கொண்டு விட்டுப் பின்னர், `ஏன் செல்லவில்லை என்பதைப்பற்றி மாணவர்கள் ஆராய வேண்டும் என்கிறார். அதாவது இந்தக் கோணத்தில்தான் ஆய்வு நிகழ்த்த வேண்டும் என்று சிவத்தம்பி ஆய்வாளர்களைக் கட்டாயப்படுத்துவது நேர்மையான அணுகுமுறையாகத் தோன்றவில்லை.

    பொதுவாகத் திராவிடர் இயக்கப் படைப் பாளிகளை, இடதுசாரிகள் சரியாக மதிப்பீடு செய்வதில்லை என்பது வருந்தத்தக்க உண்மையாகும். அறிஞர் அண்ணா, கலைஞர், புரட்சிக் கவிஞர் முதலான திராவிடர் இயக்கப் படைப்பாளிகள் வெறும் படைப்பாளிகள் மட்டுமல்லர்; தமிழ்ச் சமூகத்தில் நிலவிய ஏற்றத் தாழ்வுகளை எடுத்துக் காட்டி அவற்றை ஒழிப்பதற்காகக் கலை இலக்கியத் தளங்களிலும் நேரடிப் போராட்டங்களிலும் ஈடு பட்டுச் சிறையில் துன்பம் அனுபவித்து வெளிவந்த போராளிகளும் ஆவர். ஆகவே இவர்கள் படைப் பாளிகள் மட்டுமல்லர்; போராளிகளும் ஆவர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர், புலவர் குழந்தை, கலைஞர் ஆகியோருடைய நூல்கள் கொடுங்கோல் அரசுகளால் தடை செய்யப் பட்டன. இந்தப் பெருமை இந்தியத் துணைக் கண்டத்தில் வேறு எந்த இயக்கத்தினர்க்கும் இல்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். சமூக இழிவு களை ஒழித்துச் சமநிலை காண்பதற்காகத் திராவிடர் இயக்கப் படைப்பாளிகள் செய்த ஈகம் அளப்பரியதாகும்.

    சமூகத்துக்கான முழுப் புரட்சி சிந்தனை

    தந்தை பெரியார், எல்லைக் கோடுகளைக் கடந்து மானிடத்தை நேசித்த உலகளாவிய சிந்தனையாளர். மனித நேயத்தை மய்யப் பொருளாகக் கொண்ட அவருடைய சிந்தனைகள் - சமூக மாற்றத்திற்கான சிந்தனைகள் என்பதைவிடச் சமூகத்தின் முழுப் புரட்சிக்கான சிந்தனைகள் என்பதே பொருந்து வதாகும். பொதுவுடைமைச் சிந்தனைகளைத் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர் தந்தை பெரியார். சோவியத் ஒன்றியம் விரும்பி அழைத்த தலைவர் பெரியார்! மாவீரன் லெனினோடு பணியாற்றிய இந்தியப் பொதுவுடைமைவாதிகள் பெரியார் காலில் விழுந்து வணங்கிவிட்டுப் போயிருக்கிறார்கள்.

    இத்தகைய பெருமைகளுக்குரிய பெரியார் பெண் விடுதலை, தீண்டாமைக் கொடுமை இரண்டையும் ஒரு சேர வைத்துப் போராடி வெற்றி கண்டவர். கடவுள் மறுப்பு, கைம்பெண் மறுமணம், பெண் கல்வி, பெண்களுக்குச் சொத்துரிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, வருணாசிரம முறை தகர்ப்பு, பார்ப்பனீய ஒழிப்பு - என்று பல்வேறு தளங்களில் நின்று பெரியார் போராடினார்; வெற்றி கண்டார்.



    தந்தை பெரியார் வழியில் புரட்சிக் கவிஞர்


    தந்தை பெரியாரின் கொள்கைகளை அப்படியே கவிதையில் வடித்தவர் புரட்சிக் கவிஞர்.

    `கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே இங்கு
    வேரில் பழுத்த பலா! - மிகக்
    கொடிய தென்றெண்ணிடப் பட்டதண்ணே
    குளிர்வடிகின்ற வட்ட நிலா!


    என்று கைம்பெண்களுக்காகக் குரல் கொடுத்தவர் புரட்சிக் கவிஞர். கைம்பெண் மறுமணத்தை வலியுறுத்திப் பாடிய முதற்கவிஞர் பாரதிதாசனேயாவார்.

    இந்தியத் துணைக் கண்டத்தில் குடும்ப நலம்பற்றி யாரும் சிந்திக்காத தொன்மைக் காலத்திலேயே அதுபற்றிச் சிந்தித்தவர் தந்தை பெரியார். குடும்பக் கட்டுப்பாடு ஆண் - பெண் இருபாலார்க்கும் பொது வானது. பெண்களைவிட ஆண்கள் செய்து கொள் வது எளியது; நல்லது. மேலும் குடும்பக் கட்டுப்பாடு என்பது மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப் படுத்துவதற்காகவோ, உணவுப் பற்றாக் குறைக் காகவோ அல்ல; பெண்ணின் உடல் நலம் பேணப் படுவதற்காகவும், பெண் விடுதலை பெறுவதற்காக வும் சமுதாயப் பொதுப் பணிகளில் பெண்கள் ஈடுபட வேண்டும் என்பதற்காகவும் தந்தை பெரியார் குடும்ப நலத்தை வலியுறுத்தி ஊர்தோறும் சென்று மக்களை நல்வழிப்படுத்தி வந்தார்.

    ``காதலுக்கு வழி வைத்துக் கருப்பாதை சாத்தக்
    கதவொன்று கண்டறிவோம் இதிலென்ன குற்றம்?


    என்று புரட்சிக் கவிஞர். தந்தை பெரியாரின் கருத்துக் களைக் கவிதைகளாக்கினார். இந்தியாவில் முதன் முதலாகக் குடும்ப நலம் பற்றிப் பாடிய கவிஞர் பாரதி தாசனே யாவார்!
    புரட்சிக் கவிஞரின் `குடும்ப விளக்கு!


    குடும்ப விளக்கில் பாரதிதாசன் படைத்துள்ள பெண், கல்வியறிவு பெற்றவள்; தன் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக் கும் நல்ல ஆசிரியர்; தன் வாழ்வினையர் மீதும் குடும் பத்தின் மூத்த உறுப்பினர் மீதும் அன்பைப் பொழியும் அன்புப் பெட்டகம்! `இந்தப் பெண் பாரதி கண்ட புது மைப் பெண்ணைப் போல இல்லை; சமூக மாற்றம் பற் றிய சிந்தனை, குடும்ப விளக் குப் பெண்ணிடம் இல்லை என்கிறார் சிவத்தம்பி. காலங் காலமாகக் கல்வியறிவின்றிக் கிடந்த குடும்பப் பெண்களிடம் கல்வியறிவு மிக்க ஒரு சிறந்த பெண் மணியைப் பாரதிதாசன் படைத்துக் காட்டியிருக்கிறார். ஈராயிரம் ஆண்டுகளாக இருண்டு கிடந்த வீடு களில் ஒரு பெண் படித்தவளாகப் படைக் கப்பட்டிருப்பது பார்ப்பனர்க்குப் பிடிக்காமற் போகலாம்; சிவத்தம்பிக்குமா அப்படி?

    தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தில் உரையாற்றும்போது குறிப் பிட்டதைப்போலப் பாரதி கண்டது புதுமைப் பெண்ணாக இருக்கலாம்; ஆனால் தந்தை பெரியார் கண்டது புரட்சிப் பெண்! சமூக அவலங்களைக், கொடுமைகளை எதிர்த்து வீதிக்கு வந்து போராடும் நெஞ்சுரம் கொண்ட பெண்கள் கூட்டத்தை உருவாக் கியவர் தந்தை பெரியார்! அத்தகைய புரட்சிப் பெண்களைத் தாம் புரட்சிக் கவிஞர் தம் கவிதை களில் வைத்துப் போற்றி மகிழ்கிறார்!
    தமிழர்களின் விருந்தோம்பல் பண்பு!

    தமிழ் மக்களின் மிக உயர்ந்த பண்பு விரும் தோம்பல்; மானிடப் பற்றும் மனித நேயச் சிந்தனை யும் இதில் அடங் கிக் கிடக்கின்றன. விருந்தளிக்கும் செயலில் சிறந்து விளங்கும் குடும்ப விளக்குத் தலைவியை, மனித நேயச் சிந்தனையாளராகப் பார்க்க மறுக்கும் பார்வை பழுதுபட்ட பார்வை!

    ``அய்தீக ஆதர்ஷிக்கப்பட்ட (இந்தச் சமற்கிருதச் சொற்றொட ருக்கு நேர் எதிரானவர் பாரதிதாசன் என்பதைச் சிவத்தம்பி ஏன் புரிந்து கொள்ள வில்லை) பாரம்பரிய வழியானவராகவே பாரதிதாசன் காணப்படு கிறார் என்று சிவத்தம்பி குறிப்பிடுவ திலிருந்து அவர் எந்த இடத்தில் நின்று திறனாய்கிறார் என்பது விளங்கும். சிவத்தம்பி தமிழக வரலாற்றையும் தமிழ்ச் சமூக வரலாற்றையும் நன்கு கற்க வேண்டும். ஒரு நடுநிலைப் பார்வையோடு அருள்கூர்ந்து பாரதி தாசனைப் பாருங்கள்.

    புரட்சிக் கவிஞரின் கோட்பாடுகள் தந்தை பெரியாரிட மிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டவை. `சமூக மாற்றத் துக்கான படைப்புகளில் பாரதிதாசனால் ஒரு கட்டத்துக்குமேல் செல்ல முடியவில்லை என்பதற்குப் பதிலாகப் `பெரியாரால் செல்ல முடிய வில்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? சொல்லிப் பாருங்களேன்!

    பாரதிதாசன் ஒரு மட்டத்துக்கு மேல் செல்ல வில்லை என்று சிவத்தம்பி கூறுவது ஒரு சார்பு டையது. `சுருட்டுகின்றார் தம்கையில் கிடைத்த வற்றைச் சொத்தெல் லாம் தமக்கென்று சொல்வார் தம்மை வெருட்டுவது பகுத் தறிவே...

    என்றும் ``எல்லார்க்கும் எல்லாமும் என்றிருப்ப தான இடம் நோக்கி நடக் கின்றது இந்த வையம் என்றும் பாடு கின்ற புரட்சிக் கவிஞரைப் பற்றியா இவ்வாறு கூறுவது? பாரதி அடிப்படையில் ஓர் இந்துத்துவவாதி; ஆரியர் களுக்காகப் பரிந்துபேசும் ஆரியக் கவிஞர்.

    `பிச்சை வாழ்வுகந்து பிறனுடை ஆட்சியில்
    அச்சமுற்றிருப்போன் ஆரியன் அல்லன்

    என்று வெளிப்படையாகவே பாடியவர். இந்துத் துவப் பார்வை யோடுதான் சோவியத் ஒன்றியத்தை யும் பொதுவுடை மைக் கொள்கையையும் பார்த்தவர் பாரதி. ஆனால் பாரதி தாசன் அப்படியா?

    ``பொதுவுடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்;
    புனிதமோடு அதை எங்கள் உயி ரென்று காப்போம்! என்று பாடியவராயிற்றே பாரதிதாசன்!

    ``பாரடா உனது மானிடப் பரப்பை;
    ``மக்களை ஒன்று சேர்!
    மக்கள் கடலில் சங்கமமாகு

    என்றெல்லாம் பாடிய புரட்சிக் கவிஞரை ஒரு கட்டத்துக்கு மேல் செல்லவில்லை என்று கூறுவது வேடிக்கையாக இருக் கிறது. சிவத்தம்பி, பாரதிதாசனைச் சரியாகப் படிக்க வில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை இத் தகைய திறனாய்வுகளால் புரட்சிக் கவிஞரின் புகழை எவராலும் கெடுக்க முடியாது.

    பாரதிதாசனைப்பற்றிய ஓர் எதிர்மறைச் சிந்தனை, பாரதிதாசன் பல்கலைக் கழகத்திலேயே, பாரதி தாசன் உயராய்வு மய்யத்திலேயே ஒலித்திருப்பது வருந்துவதற்குரியது! பாரதிதாசன் ஒரு புரட்சிக் கவிஞர்! மனிதநேயர்! தமிழ் இனத்தின் மேம் பாட்டிற்காக அல்லும் பகலும் பாடுபட்ட ஒரு மாபெருங் கவிஞன்! அவன் காலத்தை வென்று வாழும் கவிஞன்! காரிரு ளால் அவனை மறைத்துவிட முடியாது!
    நெல்வயலில் ரோசா கூட்டங்களைதான்
    பாரதிதாசன் புகழைப் பரப்பவும் நிலைநிறுத்தவும் தோற்றுவிக்கப்பட்ட துறைகளிலேயே அவருக்கு எதிரான கருத்துரைகள் முளைவிடத் தொடங்கி விட்டன. இவை களையப்பட வேண் டியவை! நெல்வயலில் ரோசாச் செடிகள் கூடக் களைகள் தானே! பாரதிதாசனைப் போல ஒரு புரட்சிக் கவிஞர் அவருக்கு முன்னும் இல்லை; பின்னும் இல்லை என்னும் தந்தை பெரியாரின் மதிப்பீட்டைச் சிவத்தம்பியைப் போன் றோர் ஊன்றிக் கற்க வேண்டும். பத்தாயிரம் ஆண்டுத் தமிழ் இலக் கிய வரலாறு தந்தை பெரியாரின் கூற்றில் அடங்கி இருக்கிறது.


    -----------டாக்டர் ப. காளிமுத்து எம்.ஏ; பி.எச்.டி., -- 26-4-2008 "விடுதலை" ஞாயிறு மலரிலிருந்து.

    21.4.08

    பாரதி பார்வையில் பார்ப்பனர் - பாரதிதாசன்

    இன்று ஏப்ரல் - 21 புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு இக் கட்டுரையை பதிப்பிக்கிறோம். படியிங்கள். சிந்தியுங்கள்.


    பார்ப்பனர்களின் குணச்சித்திரம் குறித்து நாம் எழுதுவதைவிட, பாரதியார் எழுதிய விமர்சனத்தையே தந்துவிடலாம் என்று கருதி பாரதியாரின் மறவன் பாட்டு எனும் கவிதையை விரித்தோம்.

    என்ன ஆச்சரியம்! அந்தக் கவிதையில் பல வரிகள் நீக்கப்பட்டு வெற்றிடமாக விடப்பட்டிருந்தது. பார்ப்பனர்களைப் பாரதி எவ்வளவு உண்மையாகப் படம் பிடித்திருப்பான் என்பதை உணர முடிகிறது. பாரதியின் கவியில் பல வரிகளை அழித்த பிறகும் எஞ்சிய வரிகளில் பார்ப்பனரின் சுயரூபம் தெரியவே வருகிறது. இதோ அந்த வரிகள்:


    பேராசைக் காரனடா பார்ப்பான் - ஆனால்
    பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான்
    யாரானா லுங்கொடுமை .........................
    ...........................................................................
    பிள்ளைக்குப் பூணூலா மென்பான் - நம்மைப்
    பிச்சுப் பணங்கொடெனத் தின்பான்
    கொள்ளைக் கேசென்.........................
    ...........................................................................
    சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் - வெறுஞ்
    சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்?
    ...........................................................................
    ...........................................................................
    நாயும் பிழைக்கு மிந்தப் - பிழைப்பு;
    நாளெல்லாம் மற்றிதிலே உழைப்பு;
    பாயும் கடிநாய்ப் போலீசுக் - காரப்
    பார்ப்பானுக் குண்டிதிலே பீசு


    பாரதியின் கவிதையை அழித்து மாசுபடுத்திய சதிகாரர்களை எச்சரித்து புரட்சிக்கவிஞர் காத்திருக்கிறது கைவிலங்கு என்று எழுதிய வரிகள் இவை:


    பார்ப்பனர் உயர்வெனும்
    உள்ளப் பான்மை
    ஒழிய வேண்டும் என்றவர் உரைத்த
    சொற்களை மறைப்பதும்
    சுரண்டி மாற்றுவதும்
    அவர்க்குச் செய்யும் தீமை யாகும்.
    கவிஞர் விளைத்த கரும்பு களில்சில
    தமக்குக் கசப்பைத் தருவதாய் எண்ணி
    அவைகளை பாரதி அளித்தவை அல்ல
    என்று சிற்சிலர் இயம்பு கின்றனர்
    கயவர்க்குக் கைவிலங்கு காத்திருக் கின்றது!


    - பாரதிதாசன் கோவை மடக்குளம் பாரதி விழாவில் 11-9-1962 இல் தலைமை ஏற்றுப் பாடிய
    கவியரங்கக் கவிதையிலிருந்து...

    நன்றி: தமிழ்சான்றோர் செய்திமடல் -மே-2006

    19.12.07

    நால்வர்ணம் உண்மையா?

    முகத்தில் பிறப்பார் உண்டோ முட்டாளே
    தோளில் பிறப்பார் உண்டோ தொழும்பனே
    இடையில் பிறப்பார் உண்டோ எருமையே
    காலில் பிறப்பார் உண்டோ கழுதையே
    நான்முகன் என்பான் உளனோ நாயே
    புளுகடா புகன்றவை எலாம் போக்கிலியே!
    -----புரட்சிக்கவிஞர்.