Search This Blog

25.8.16

கோகுலாஷ்டமி கொண்டாடும் பக்தர்களே சிந்திப்பீர்! கண்ணன்... காமுகன்...

கோகுலாஷ்டமி கொண்டாடும் பக்தர்களே சிந்திப்பீர்! கண்ணன்... காமுகன்...



விஷ்ணு (கிருஷ்ணன்) மும்மூர்த்தி களில் ஒருவரான தேவன் விஷ்ணு வென்றால் - இரட்சிக்கிறவன் என்பது பொருளாம். புராணங்களில், விஷ்ணுவை மகாதேவன் என்று சொல்லப்படவில்லை. விஷ்ணுவுக்கு பல பெயர்களும் - அவதாரங்களும் உண்டாம்.
விஷ்ணுவின் மறுபெயர்கள்:
அச்சுதன் - சரவணச் செல்வன் - அரி அரிந்தமன் - உவணதேவன் - கடல்வண் ணன் - கமலக்கண்ணன் - கரியன் - கருட கேதனன் - கேசவன் - கொண்டல் வண் ணன் - சக்கரபாணி - சக்ராயுதன் - சக்கிரி - சங்கமேந்தி - சனர்த்தனன் - சம்பு - சலச லோசனன் - சாரங்கபாணி - சிறீதரன் - சவுரி - திருநாதன் - துளாய்மவுலி - நாராயணன் - நெடியோன் - பிச்சை - பஞ்சாயுதன் - பதுமநாதன் - பிரமன்றாதை - பிள்ளை கேள்வன் - பீதாம்பரன் - பூமிகொழுநன் - பெம்மான் - பெருமான் - மாதவன் - மாயன் - மால் - முகுந்தன் - முண்டகாசனைக் கேள்வன் - வலவன் - வனமாலி - விண்டு வேலைற்றுயின் றோன், என்பனவாம்
தச அவதாரப் பெயர்கள்
மச்சன் - கூர்மன் - வராகன் - நரசிங்கன் - வாமணன் - இந்திரவாசன், உலகளந்தோன், கிரிவிக்கிரன், பரசுராமன் - இராகவன், இராமன், நாகுத்தன் - பலபத்திரராமன், குண்டலன் அலகை முலையுண்டோன் - கண்ணன் - கிருஷ்ணன், கோவிந்தன், தாமோதரன், தேவகி மைந்தன், நந்தநந்த னன், பஞ்சவர்தூதன் - புத்தன், மதுசூதனன், முராரி, கோபாலன், கோபிநாதன் பலராமன் என்பதும் விஷ்ணுவின் பெயர்களே.
விஷ்ணு - சுய உருவை, நாலுகையு டையதாய் கறுப்பு நிறத்திற் செய்து, மஞ்சள் நிற ஆடையை அணிவித்து வணங்கு வார்கள். விஷ்ணு பக்தர்களில் சிறீ வைண வர், ராமாஞ்சி மதத்தார், எம்பெருமாள் மதத்தார், சாத்தாதிகள், எனப்பல வகுப்பாய் பிரித்து, மந்திரங்கள் சடங்குகளுடன் விஷ்ணுவை தெய்வமென்றும், சிறீமன் நாராயணனென்றும் போற்றி வணங்கி வருகிறார்கள்.
பிர்மாவுக்கு ஆயுள் கணித்திருப்பது போல், விஷ்ணுவுக்கும் ஆயுள் கணிக்கப் பட்டிருக்கிறது, விஷ்ணுவுக்கு ஆயுள் பதிநான்கு கோடியே நாற்பது லட்சம் (14,40,00,000) ஆண்டுகள். விஷ்ணுவின் ஜென்ம நட்சத்திரம் திருவோணம்.
விஷ்ணுவுக்கு மனைவி - வைப்பாட்டி யாரும் உண்டு. மனைவியின் பெயர் லட்சுமி. இவள் பிர்மாவின் உடன்பிறந்த சகோதரி. ருக்மணி, ராதை வைப்பாட்டிகள். இவையன்றி இளம் பெண்களைக் கற்பழித் துக் கறைப்படுத்தி, சீர்கெடச் செய்த காம சேட்டைகள் நிறைந்த கதைகள் ஏராளம் உண்டு. இத்தனையும் சேர்ந்ததயையே கிருஷ்ணலீலை என்கிறார்கள்.
கல்வியறிவும், நாகரீகமும்,  நாட்டு முன்னேற்றமும் பெற்றுள்ள இக்காலத்தில் புராணச் செயல்கள் உச்சம் பெற்றிருந்த காலங்களில் நடத்திய கிருஷ்ணலீலையைப் போல நடந்தேறச் சமயம் பெற்றால் இளம் பெண்களைப பெற்ற பெற்றோரின் கண் ணும் மனமும் இக்காதல் காட்சிகளைக் கண்டு சகிக்குமா? கொழுந்துவிட்டுத் தாவிப் படர்ந்து பற்றி எரியும் நெருப்பு முன் விழுந்த மெழுகு போல் பொங்கி உரு காதோ? இப்படி காமச்செயல் புரிவோரை இன்று எவரேனும் கண்டால் மனங்கனிய கடவுளென்று வணங்க மனம் இடம் தருமா? இக்காமக்கோட்டிக் காட்சி நாடகக் கதையை கண்கூடாகப் பார்க்கவும், கேட்கவும் கூடுகின்ற கூட்டம் அங்கங்கே எண்ணற்ற பல ஆயிரம் என்பது பொருந்துமல்லவா? இப்படி கண்ணன் காதல் கதையை உணர்ந்து அறியாதிருப்பது எத்தனை பரிதாபமென்பதை சற்று சிந்தியுங்கள்.
ஒருமுறை கிருஷ்ணன் நடத்திய காதற் செயலால் பார்வதியிட்ட சாபம் பலித்துப் பாம்பாய்ப்போன கதையும், தனக்கு மனை வியிருந்தும் திருப்தியின்றி ஒரு காட்டு வேடுவப்பெண்ணை இச்சித்து மோகித்துக் கூடிப் புணர்ந்ததை தன் மனைவி லட்சுமி கேள்விப் பட்டு கிருஷ்ணனை வாசல் வழியாய்  நுழைய விடாதபடி - வாயில் காவலருக்குக் கட்டளையிட கிருஷ்ணன் வேறுவழியாய் உட்புகுந்து வந்ததாயும் கதையுண்டு.
விஷ் ணு, கிருஷ்ணவதாரத்தில் நடத் திய காமச்சேட்டைகளும், ரிஷிபத்தினி களில் உண்டாக்கிய கற்பழிவும், நட்டமும் கணக்கற்றதாய்த் தெரிகிறது. இதன் உண் மையினை அய்ந்தாம் .. பாரதத்தில் மிகத் தெளிவாய் அறியலாம். அவற்றில் சிசு பாலன் அரசக் கூட்டத்தில் கிருஷ்ணவதார மெடுத்த விஷ்ணுவின் தீயச் செயல்களில், செவிசாய்த்து கேட்டு சகிக்க முடியாத - வெட்கத்துக்குரிய பெருங்குற்றங்களை அறவே தள்ளிவிட்டு அதில் கண்டபடியே கீழே விளக்கிக் காட்டியுள்ள சிலவற்றைப் பாருங்கள்.
பாரதம், சபாபர்வம் 27ஆம் பக்கம்: “சூதுவாது அக்கிரமம், கொலை, களவு, கள், காமம் முதலியவை நிறைந்த பாண்டமாகிய இந்தக் கரியக் கிருஷ்ணனை ஆக்கிரம கண்ணியனாக்கி, பூசைகொடுவென்று வியாசர் சொல்லுவது தகுதியா?”

“தன்னைப் பெற்ற தேவகியிடத்து ஒரு பெண்ணை உண்டாக்கி வைத்தான்...

“ஆச்சியர், வெண்ணையைத் திருடித் திருடித் தின்கிறபோது, கண்டுபிடித்து, அசோதையிடத்து வந்து முறையிட அசோதை யிவனைப் பார்த்து என்னடா கிருஷ்ணா வெண்ணையைத் திருடித் தின்பது தகுதியா எனக்கேட்க - தன் கையிலிருந்த வெண்ணையை நக்கி கொண்டே நான் அறியேன் என்று பொய்மை கூறினான். (பாரதம் - சபாபர்வம் 28ஆம் பக்கம் பார்க்கவும்)
ஆயர் மாதர்கள் இவன் செய்யும் துடுக்கனைத்தும் அசோதைக்குச் சொல்லி, தங்களுக்கு நன்மை கிடையாதிருப்பதை நினைத்து திருஷ்டாந்தத்துடன் பிடித்துப் போக வேண்டுமென்று தகுந்த முயற்சி யோடிருக்கும்போது ‘பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டுக் கொள்வான்’, என்ற பழமொழி போல (பாரதம் - சபாபர்வம் 29ஆம் பக்கம்) வெண்ணெய் திருடித்தின்ற இந்த கிருஷ்ணன் ஒரு நாள் அகப்பட்டுக் கொண்டு, பூனை வாயில் எலிபோல மன வருத்தமுற்றிருக்க, ஆயர் மாதர் இவனைப் பிடித்துக் கல்லுரலில் கட்டி அசோதைக்குத் தெரியப்படுத்த, அசோதை வந்து திருடர்க்கு தரப்படும் தண்டனையை அவ்விடத்தில் தானே செய்யக் கருதி இவனைத் தன் கையிலிருக்கும் பிரம்பாலும், ஆயர்மாதர் மத்தாலும் அடிக்க, கிருஷ்ணன் அடிபட்டு ஓவென்று அலறி இரண்டு கண்ணிலும் அருவிபோல ஜலம் வர அழுதான்...” தன் னந்தனியாக ஒரு மாது செல்வாளாகில் அவளைப் பின்தொடர்ந்து தன் கருத்துக் கிசைந்தவிடம் சமீபித்தபோது வேடரைப் போல் வீழ்ந்து கற்பழித்துத் திரிந்தான் - (பாரதம் - சாபபர்வம் 20ஆம் பக்கம் காண்க)

“தாயோடு பிறந்த அம்மானாகிய நஞ்சனை கிஞ்சித்தேனும் இரக்கமில்லாமல் கொன்று போட்டான்”.
“தன் தந்தையோடு பிறந்தவளை அத் தையென்று மதிக்காமல், அவளைக் கட்டிப் புணர்ந்தான்.
“இந்தக் கிருஷ்ணனுக்கு, ஏழு மனைவி கள் இருக்கிறார்கள். அவர்களிருக்க, பதினாயிரம் கோபிகாஸ்திரிகளை மனைவி களாக வைத்திருக்கிறான்” என்று சிசுபாலன் சொன்னான். அப்படிவெட்கத்திற்குரிய பற்பல குற்றங்களை விவரித்தபின் கிருஷ் ணனை நோக்கி நானாவித தண்டனைகளில், அவன் மீளவும் சொன்னதாவது. “அடா கொலையாளி, ஸ்திரிகளை கொலை செய்வது மகாபாதகமென்று பேதைகளுக் குத் தெரிந்திருக்க நீ அஃது உணராமல், உனக்குப் பாலூட்டும் தாயாகிய ஒரு ஸ்திரியை கொலை செய்தாயே!...”
“அடா பாவி உன் செயல்களில் ஒன்றாவது நன்னெறிக்கேதுவாக இருக் கின்றதா? நான் எவ்வளவு எடுத்துரைத்தேன். நல்ல யோக்கியதையுடையவனாய் இருப் பாயாகில் விடை கொடாதிருப்பாயோ. நீ தான் விடை கொடாமலிருந்தாலும் சபை யார் மவுனமாக இருப்பார்களோ? நான் கூறுவது உண்மையாய் இருப்பதினால், நீயும் சித்திரப் பதுமைபோல சற்றும் அசைவின்றி இருக்கின்றனையே என்றான்.
அவதரித்த விஷ்ணுவாகிய கிருஷ்ண னோவெனில்  சினந்து, சிசுபாலனைக் கொன்று போட்டானே ஒழிய, அதெல்லாம் பொய்யென்று மறுக்க, அவனாற் கூடாமற் போயிற்று. (பாரதம் - சபாபர்வம் 36 ஆம், 38ஆம் பக்கம்) அல்லாமலும் தன் குருவின் மனைவியை களவாய்க் கொண்டு போய், கானகத்தில் கூடியிருந்ததாகக் கதையுண்டு. இதல்லாமல், தன் தாயையும், சகோதரியை யும் மோகித்து பற்பலச் செயல்களைச் செய்ததாயும் தெரிகிறது.
கடைசியாய் கிருஷ்ணன் ஓர் ஆல மரத்திலேறி படுத்திருக்கையில், வேடன் ஒருவன் மிருகமென்றெண்ணி அம்பால் எய்ய - அம்பு பட்டு செத்து. உடல் கழுகு களால் கொத்தப்பட்டதாகவும், நரிகளால் பிடுங்கப் பட்டதாயும் கதையுண்டு.
பார்த்தீர்களா? - இத்துணைச் செய்தி களையும் நாம் கற்பனையாகக் கூறவில்லை. அவர்கள் எழுதி வைத்த புராணத்திலி ருந்தே கிருஷ்ணபரமாத்வாவின் வண்ட வாளங்கள் தெரிகின்றன. இதைப் பார்த்த பிறகும் படித்த பிறகும் கிருஷ்ண ஜெயந் தியைக் கொண்டாடப் போகிறீர்களா?
                                     ---------------------இரா.கண்ணிமை அவர்கள் எழுதிய கட்டுரை--’விடுதலை’  24-08-2016--http://viduthalai.in/page-2/128308.html
                ***********************************************************************

‘அட, கோகுல கிருஷ்ணா?’

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் தேய் பிறையின் எட்டாம் நாளில் (அஷ்டமி) ரோகிணி நட்சத் திரம் சேர்ந்த நேரத்தில், மகா விஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவரானகிருஷ்ணன்என் பவன் பிறந்தானாம். அன் றைய நாளை தமிழ்நாட்டில் கோகுலாஷ்டமி என்றும், கேரளாவில் அஷ்டமி ரோகிணி என்றும் கொண் டாடுகிறார்கள்.
இந்து மதத்தில் ஒரு யோக்கியமான, ஒழுக்கமான, நாணயமான கடவுளை உண்டாக்க முடியவில்லை என்பதற்கு இந்தக் கிருஷ்ண அவதாரக் கடவுள் ஒன்றே போதுமானது.
சிறிய வயதில் வெண் ணெய்யைத் திருடி, வாலிப வயதில்பெண்ணைத்திரு டியவன்என்றுஇந்தக் கடவுளைப்புகழுவதில் பக்தர்கள் வெட்கப்படுவதில் லையே, ஏன்?
கோகுலத்தில் அடுத்தவர் வீட்டுக்குள் திருட்டுத்தனமாகப் புகுந்து யாரும் அறியாவண்ணம் பால், தயிர், வெண்ணெய்யை உண்டு உடலை வளர்த்தவன் இவன்; சிறு வயதிலேயே திருட்டைக்கற்றுக்கொண் டவனைக் கடிந்து கொள்ளா மல் கடவுள் என்று கன்னத்தில் போட்டுக் கொள்ள வெட் கப்படுவதில்லையே ஏன்?
ஒருமுறை ஒரு வீட்டில் வெண்ணெய்யைத் திருடிய போது கையும் களவுமாகப் பிடிபட்டான். அவனை அவ னது தாயிடம் அழைத்துச் சென்றாள் மதுகரவேணி என்ற அந்தப் பெண். அப் பொழுது அந்தச் சிறுவன் கிருஷ்ணன் அப்பெண்ணின் முகத்தில் கரி இருப்பதாகச் சொல்லி, தான் துடைத்து விடுவதாகச் சொன்னான்; அந்தப் பெண் குனிந்தபோது, வெண்ணெய்யை அந்தப் பெண்ணின் வாயிலும், கையிலும் தடவி விட்டு, தன் தாய் யசோதையிடம் என்ன சொன்னான் தெரியுமா?
‘‘இந்தப் பெண் தன் கணவனுக்குத் தெரியாமல் வெண்ணெய்யைத் தின்று விட்டு, என்மீது பழியைப் போடுகிறாள். இதோ பாருங் கள், இவளின் வாயிலும், கையிலும் வெண்ணெய் ஒட் டிக் கொண்டு இருக்கிறது’ என்றானேபார்க்கலாம்! மகனின் வார்த்தைகளை நம்பி அந்தப் பெண்ணைக் கடிந்து கொண்டாள் தாயான யசோதை.
பிஞ்சிலேயேமுத்திப் போன இந்தப் பித்தலாட்டக் காரனை பெருமாளின் அவ தாரம் என்று சொல்லிப் பெருமையாகப் பேசுவதற்கு வெட்கப்படுவதில்லையே, ஏன்?
ஆம்! இந்துக்களால் ஒரு ஒழுக்கமான, யோக்கியமான, நாணயமான கடவுளைக் கற்பிக்கமுடியவில்லை.தங்களைப்போலவேதங் களின் கடவுளையும் கற் பித்துக்கொண்டு விட்டனரோ!
வெட்கக்கேடு - இந்தக் கேவலமானவனுக்குக் கோகு லாஷ்டமி விழாவாம்!
ஆமாம், ஒரு சந்தேகம் - பகவான் கிருஷ்ணன் பிறந்த அஷ்டமியை கெட்ட நாள் என்கிறார்களே, ஏனாம்? ஒருக்கால் அவன் கெட்டவனாக இருந்ததால், இருக்குமோ!
--------------------------- மயிலாடன் அவர்கள் எழுதிய கட்டுரை--’விடுதலை’   24-08-2016  http://viduthalai.in/e-paper/128300.html

12.8.16

நம் இயக்க முதற்கொள்கையும், முடிவான கொள்கையும் சாதி ஒழிப்பே!




- தந்தை பெரியார்

இன்றையத் தினம் இந்த ஊரிலே திராவிடர் கழகக் கட்டடம் கட்டப் பட்டதைத் திறப்பதன் காரணமாக இக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது.  இக்கட்ட டத்தைக் கட்டுவதற்கு சுமார் 10, 12 வருஷ மாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு இப் போது கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது.  இக்கட்டடத்திற்கு சுமார் ரூ 2000க்கு மேல் செலவாகி இருக்கிறது.  நமக்கும் பங்கு இருக்கட்டுமே, என்று ஒரு சிறு தொகையை நானும் கொடுத்திருக் கின்றேன். நம் கழகத்திற்கு இது போன்று 5000, 10,000 50,000 பெறும்படியான கட்டடங்கள் பலவும், ஒரு இலட்சம் முதல் 5 இலட்சம் வரை உள்ள கட்டடங்கள் சிலவும் இருக்கின்றன. இவற்றில் பல வாடகைக்கு விடப்பட்டு இருக்கின்றன. சிலவற்றில் கழகக் காரியங்கள், படிப் பகங்கள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. இவ்வளவு பெருகுவ தற்குக் காரணம் இது சர்வாதிகாரக் கழகமானதால் முடிந்தது; ஜனநாயகக் கழகமாக இருந்தால் ஆளுக்கு ஆள் பங்கு போட்டுக் கொண்டு போய் இருப்பார்கள். நம் இயக்கமானது, இந்நாட்டில் 100க்கு 99 மக்கள் நம்பிக் கடைபிடித்துக் கொண்டிருக்கும் காரியங் களுக்கு எதிராகக் கடவுள் இல்லை, மதம் இல்லை, சாஸ்திரம், தருமம் ஆகியன இல்லை என்று, 40 ஆண்டு காலமாகச்  சொல்லிக் கொண்டு வருவதாகும். இப்படிப் பிரசாரம் செய்து வருகின்ற இதன் தலைவர்கள் இதுவரை கொல்லப் படாமல் இருப்பது அதிசயமேயாகும். நமக்குத் தெரிய நம் கண்முன் நடந்ததைச் சொல்கிறேன். இந்த ஆட்சி மத சம்பந்தமற்றதாக இருக்க வேண்டும் என்று ஒரு வார்த்தை சொன்னதற்காகவே காந்தி கொல்லப்பட்டார். பொதுவாக சீர்திருத்தக் காரியம் செய்ய வந்த அனைவரும் கொலை செய்யப்பட்டே வந்திருக்கின் றனர்.
புராண காலம் தொட்டு, சரித்திர காலம் தொட்டு, இன்றும் கூட சீர் திருத்தவாதிகள் கொல்லப்பட்டே வந்திருக்கின்றனர்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த நாட்டில் புத்தரும், சமணரும் அறிவுப் பிரச்சாரம் செய்து, மக்களை அறிவுவாதிகளாக்கப் பாடுபட்டனர் மக்கள் தங்கள் அறிவைக் கொண்டு எதையும் சிந்திக்க வேண்டும். அவர் சொன்னார், இவர் சொன்னார், மிக நீண்டகாலமாக இருந்து வருகின்றது என்பதற்காக, எதையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. தங்கள் அறிவைக் கொண்டு சிந்தித்துச் சரியென்று பட்டால் அதன் பின் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்கள். இதன் காரண மாகவே அவர்கள் பார்ப்பனரால் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டு இருக்கின்றனர், கழுவேற் றப்பட்டு இருக்கின்றனர். இன்றைக்கும் கூட மதுரை, காஞ்சீபுரம், போன்ற பெரிய கோயில்களில் சமணர்களைக் கழுவேற்றி யதைத் திருவிழாக்களாகக் கொண்டாடிக் கொண்டு வருகின்றனர். நம் நாட்டில் மட்டும் தான் சீர்திருத்தவாதிகளுக்கு  இந்த நிலை என்பது கிடையாது.
பெரும் அறிவுள்ள நாடான அமெரிக்க நாட்டில், அய்ந்து கோடி மக்களின் ஓட்டு களைப் பெற்று ஜனாதிபதியான கென்னடி- சமுதாயத்தைச் சீர்திருத்த வேண்டும் என்று பாடுபட்டதற்காக சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நாம் ஒருவர் தான்- நம் இயக்கம் ஒன்று தான்- சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளை எடுத்துச் சொல்லிக் கொண்டு 40 ஆண்டு காலம் எந்த ஒரு சிறு பலாத்காரமும் இன்றி வளர்ந்து கொண்டு வருகின்றது என்றாலும், இன்னமும் நாம் செய்ய வேண்டிய காரி யங்கள் நிறைய இருக்கின்றன. நாம் முதன் முதல் பார்ப்பன வெறுப்பை மக்களிடையே ஏற்படுத்தினோம். நம் இயக்கப் பிரசாரத் திற்குப் பிறகு சகலமும் பார்ப்பன ஆதிக்கத் திலிருந்து போய் மிகக் குறைந்து போய் விட்டதோடு, சமுதாயத்தில் அவர்களுக் கிருந்த பெரும் அந்தஸ்து போனதோடு, இன்று பார்ப்பான் இந்நாட்டை விட்டுத் தானே போனால் போதும் என்றாகி விட்டது.  இன்று சமுதாயத்தில் பார்ப்பான் தனியாக நின்று, எதிலும் வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இப்படி எல்லாத் துறை களிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கமானது இன்று ஒழிக்கப்பட்டு விட்டது.
சரித்திரம் தோன்றிய காலம் முதல், அரசாங்கம் தோன்றிய காலம் முதல், சூத்திரன், பார்ப்பானுக்குத் தொண்டு செய்ய வேண்டியது; படிக்கக்கூடாது, பணம் சேர்க்கக் கூடாது, வீடுகட்டக் கூடாது சாஸ்திரத்தைக் காதால் கூட கேட்கக் கூடாது என்றிருந்தது. இது நேற்று வரை- இந்த ஆட்சி வருகிறவரை இருந்து வந்த ஆட்சி முறையாக இருந்தது. இவர்கள் ஆட்சி ஏற்பட்ட பின்தான் அது அடியோடு மாறிற்று.
நம்முடைய இயக்கத்தின் முதல் கொள்கையும், முடிவான கொள்கையும், ஜாதி ஒழிய வேண்டும் என்பதேயாகும்.  அதற்காக எந்தப் பாதகமான செயலையும் செய்யலாம்; கொலை கூடச் செய்யலாம்; எப்படி என்றால் பார்ப்பான் எப்படித் தன் தருமத்தைக் காப்பாற்றிக் கொள்ள, எந்த அதருமத்தையும் செய்யலாம் என்கின் றானோ, அதுபோல நம்முடைய இழிவை கீழ் சாதித்தன்மையை, மாற்றிக் கொள்ள நாம் எந்த அதருமத்தையும் செய்வது தவறு கிடையாது.
நேற்று, பத்திரிகையில் பார்த்தேன்; பஞ்சாலையைத் திறக்க வேண்டும் என்ப தற்காக நூற்றுக்கணக்கான பேர்கள் ரயி லைக் கவிழ்க்கச் சென்று கைது செய்யப் பட்டு இருக்கின்றனர். நாளைக்கு  இவர் களை விடுதலை செய்து விடுவார்கள். ஆந்திராவில் மொழி வழி பிரிய வேண்டும் என்பதற்காகப் பல அரசாங்க அலுவலகங் களுக்குத் தீயிட்டுக் கொளுத்தி இருக்கின் றனர், பல பஸ்களுக்குத் தீவைத்து இருக் கின்றனர்.  சாதாரணக் காரியங்களுக்கு இப்படிக் கிளர்ச்சிகள் செய்யும் போது, நாம் நம் இழிவை, மானமற்றத் தன்மையைப் போக்கிக் கொள்ள கிளர்ச்சி செய்வது, பலாத்காரத்தில் ஈடுபடுவது பெரிய தவறு ஒன்றுமில்லை. அவை எல்லாவற்றையும் விட மனிதனின் மானம் மிக உயர்ந்தது; அதற்காக உயிரைக்கூடக் கொடுப்பது தவறாகாது.
இந்த நாட்டில் மனிதன் தாழ்ந்தவனாக, சூத்திரனாக, பார்ப்பானுக்கு எதனால் இருக்கிறான் என்றால், கடவுளால், மதத்தால் தான். மத ஆதாரங்களைப் பார்த்தால் கடவுள் தான் சூத்திரனை உண்டாக்கி இருக்கிறான், தீண்டத்தகாதவனை உண் டாக்கி இருக்கிறான், பார்ப்பானை உண் டாக்கி இருக்கின்றான். அதோடு மட்டுமல்ல. பின்பற்றுகின்ற மதப்படியும் நீ பறையன், சூத்திரன், பார்ப்பானாக்கி இருக்கின்றான்.  கிறிஸ்துவன் உன் மதத்தைப் பின்பற்றுவது கிடையாது, நீ வணங்குகின்ற கடவுளை வணங்குவது கிடையாது. துலுக்கன் உன் மதத்தைப் பின்பற்றுவது கிடையாது, நீ வணங்கும் கடவுளை வணங்குவது கிடை யாது.  ஆனதால், அவனிடம் பறையன். சூத்திரன், பார்ப்பான், இல்லை. இந்து மதத்தைப் பின்பற்றுவதால் தான் இந்துக் கடவுள்களை வழிபடுவதால் தான் நீ சூத்திரனாகின்றாய். அவற்றை விட்டுவிட்டு என்று நீ வெளியேறுகின்றாயோ, அன்று தான் மனிதனாக முடியும்.
மதிப்பிற்குரிய கணேசன் அவர்கள் சாதி ஒழிய சில வழிகளைச் சொன்னார். அவர் சொன்ன அதுமட்டும் போதாது, அது சாதியை ஒழிக்காது. வேண்டுமானால், சமுதாயத்தை ஒன்றாக்கலாம்; முதலியார், ரெட்டியார், கவுண்டர், அகமுடையார், கள்ளர் என்பதில் கலப்பு மணம் செய்து கொள்வதால் நம் சூத்திரத்தன்மை நீங்கிவிடாது. நாம் முதலியாரை, செட்டியாரைப் பார்த்தால் குளிப்பது கிடையாது. அவர்கள் ஒருவர் வீட்டில் ஒருவர் சாப்பிடாமல் இருப்பது கிடையாது. அந்தஸ்தில்  பேதம் பாராட்டப் படுவது கிடையாது. சமமாகவே பாவித்துப் பழகி வருகின்றனர்.
சிலர் சாம்பலையும், மண்ணையும் பூசிக் கொண்டு சாதி ஒழிய வேண்டும் என்றால், எப்படி ஒழியும்? இந்தக் கோயில்களைக் கட்டியதே சாதிகளைக் காப்பாற்ற வேண் டும்  என்பதற்காகத் தான். சட்டத்திலே மாறவேண்டும். தீண்டாமை கிடையாது; கோயிலுக்குள் யார் வேண்டுமானாலும் போகலாம் யார் வேண்டுமானாலும் சாமி சிலையைத் தொடலாம்; பூசை செய்யலாம் என்றாக வேண்டும். அப்போது தான் சாதி ஒழியும்- தீண்டாமை ஒழியும்.
நாம் பல ஆண்டுகாலம் மக்களிடையே இருக்கிற இழிவு மானமற்றத் தன்மை ஆகியவற்றை எடுத்துச் சொல்லிப் பிரசாரம் செய்து பார்த்தாகி விட்டது. இன்னமும் மனிதன் மாறவில்லை. நம் பிரசாரத்திற்கு இருக்கிற விளம்பரத்தை விட சாதியைக் காப்பாற்ற வேண்டும் என்கின்ற பிரசாரத்திற்கு விளம்பரமும், பணக்காரர், பத்திரிகைக்காரர் ஆதரவும் இருப்பதால், நம் பிரசாரம் பரவ முடியா மல்- மக்களிடையே சொல்ல முடியாமல் இருக்கின்றது.
இனிக் காரியத்தில் இறங்க வேண்டும்; கிளர்ச்சியில் ஈடுபட வேண்டும். அப் போது தான் நம் இழிவைப் போக்கிக் கொள்ள முடியும். அதற்கு நம் மக்கள் தயாராக இருக்க வேண்டும். நம்மைத் தவிர இதை எடுத்துச் சொல்லவோ, இதற்காக கிளர்ச்சியில் ஈடுபடவோ, வேறு எவருமே கிடையாது. நம் இழிவைப் பற்றிக் கவலை காங்கிரசுக்கு இல்லை; ஜனசங்கத்துக்கு இல்லை; சுதந்திராவுக்கு இல்லை; இங் கிருக்கிற கம்யூனிஸ்ட்டுக்கும் இல்லை. நம் இயக்கம் ஒன்றுதான் இதற்காக உயிருக்குத் துணிந்து, எதிர்ப்புகளுக்கிடையே தொண் டாற்றிக் கொண்டு வருகின்றது. 

------------------------------------27.5.1969 அன்று ஒரத்தநாடு வட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற் பொழிவு. "விடுதலை", 18.6.1969

11.8.16

அட கூறு கெட்ட குமுதமே கேள்!

அட கூறு கெட்ட குமுதமே கேள்!
‘குமுதம்‘ இதழுக்கு இப்பொழுது அப்படி என்ன நெருக்கடி? திராவிடர் கழகத் தலைவர் மீது தரக்குறைவான வார்த்தைகளால் தாக்க வேண்டிய அவசியம் என்ன?
ஆடிட்டர் குருமூர்த்தியின் கையாளாக வேண்டிய “நெருக்கடி” என்ன? இந்து ஆன்மீகக் கண்காட்சி என்ற பெயராலே இந்து வெறித்தனத் தீயை விசிறி விடும் வேலையில் அவாள் ஈடுபட்டு கொண்டிருப்பதன் முகத் திரையை திராவிடர் கழகத் தலைவர் தார் தாராக கிழித்தார் என்ற ஆத்திரத்தில் குருமூர்த்திக் கும்பல்கள் நான்குகால் பாய்ச்சலில் ஈடுபடுவதைப் புரிந்து கொள்ள முடியும்.
விவேகானந்தர் ரதம் என்று சொல்லி அரசுப் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவியதைக் கண்டித்த காரணத்தால் ‘காச் மூச்சென்று’ அவாள் வட்டாரம் அலறுவது இயல்புதான்.
ஆனால் அவர்களின் அழுக்குக் குரலைக் கடன் வாங்கி இந்த வாரக் குமுதம் (17.8.2016) விழுந்து பிறாண்டுகிறதே!

திராவிடர் கழகத் தலைவர் மீது அப்படி என்ன குற்றச்சாட்டாம்?
திமுகவுக்கு ஆதரவாக இருப்பது,  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கருணாநிதியைப் புகழ்வது, பெரியார் புத்தகங் களை ஸ்டால் போட்டு விற்பது என்பது முதல் குற்றச்சாட்டு.
திமுக தவைர் கலைஞர் அவர்களைப் புகழ்வது என்ன பஞ்சமா பாதகமா? திமுக தலைவர் அவர்களிடம் மாறுபட்ட நிலையில் இருந்ததில்லையா? கண் மூடித்தனமாகப் புகழ்வதும் இல்லை, கண்மூடித்தனமாக எதிர்ப்பதும் திராவிடர் கழகத்தின் வேலையல்லவே.
வெளிநாட்டில் குமுதத்தின்  முதலாளி இருந்த சந்தர்ப் பத்தைப் பயன்படுத்தி கொள்ளையடித்த பூணூல் யார்? கம்பி எண்ண வேண்டிய அவசியம் ஏற்பட்ட போது முதல் அமைச்சராக இருந்த கலைஞரின் காலைப் பிடித்து கண்ணீரால் கழுவியவர்கள் யார் என்று நமக்குத் தெரியாதா?
பெரியார் புத்தகங்களை ஸ்டால் போட்டு வீரமணி விற்கிறாராம். அடேயப்பா எவ்வளவு பெரிய குற்றச்சாட்டு.

வேறு எதைப் போட்டு விற்க வேண்டுமாம்?
இதே குமுதம், புத்தக கண்காட்சிகளில் எதைப் போட்டு விற்கிறார்களாம்?
புதிய கல்விக் கொள்கைகளை வீரமணி எதிர்க்கிறாராம் - அதுவும் ஒரு குற்றச்சாட்டாம்.
குமுதத்தில் வேலை பார்க்கும் பார்ப்பனர் அல்லாதாருக்கும் சேர்த்துதான் புதிய கல்விக் கொள்கைகளை வீரமணி எதிர்க்கிறார். அன்று ஆச்சாரியார் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்தது தந்தை பெரியார் தலைமையிலான திராவிடர் கழகமே!

இன்றைக்கு அதே குலக்கல்வி புதிய  சூழ்ச்சியோடு முகமூடி அணிந்து வருகிறது.
ஆச்சாரியார் ஆட்சிக் காலத்தில் குலக்கல்வி திட்டத்தை  அன்று திராவிடர் கழகம் எதிர்த்தது போல, இன்று புதிய குலக்கல்வித் திட்டத்தையும் திராவிடர் கழகம் எதிர்க்கிறது,
அது கூடவே கூடாது. எங்கப்பன் தொழிலைத்தான் நாங்கள் செய்வோம் என்று குமுதம் சொல்லுகிறதோ!
குமுதத்தில் இதை எழுதியது பார்ப்பன கையா அல்லது அதன் தொங்கு சதையா?
மலம் கழிக்கும் பொழுது, பழத்தைச் சாப்பிடுகிறாயே என்று கேட்டால், நீ என்ன சொல்லுவது, நான் தொட்டுக் கிட்டுக்கூட சாப்பிடுவேன் என்று குமுதக் கோணாங்கி கூறினால், நாம் என்ன செய்யட்டும்! தாராளமாகத் தின்னுத் தொலையட்டும் என்று தான் சொல்ல வேண்டும்.
கருப்பு நிற ஆடை அணிந்து சபரிமலை செல்வோர் கோடிக்கணக்கில் பெருகி விட்டார்கள். சிவப்பு நிற ஆடை  அணிந்து மருவத்தூர் போகிறார்கள். இன்னொரு பெரியார் தேவையா? அப்ப வீரமணி வேஸ்ட்னு ஆகாதா?- கேட்கிறது குமுதம்.
ஆக மக்கள் மூடநம்பிக்கை நோய் பரப்பும் கொசுக்கடியிலிருந்து தப்பிக்க எவ்வளவுப் பெரிய அக்கறை இந்த குமுதத்துக்கு!

ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவன் ஒரு கடவுள் என்பார்கள் - அந்த அசிங்கத்தைக் கும்பிடப் போகிறோம் நாங்கள் என்றால் அதை கண்டிப்பவர் வீரமணி மட்டும்தான் என்று சொல்லுவது வீரமணி அவர்களுக்குப் பெருமைதான்.
ஆமாம்... இந்த அசிங்கத்தை குமுதம் ஆதரிக்கிறதா? எதிர்க்கிறதா? அல்லது நம்பித் தொலைக்கிறதா?
நாட்டில் எய்ட்ஸ் நோயாளிகள் எண்ணிக்கை பெருகு கிறது என்பதால் மருத்துவத்துறையே வேஸ்ட் என்று கூறலாமா?
பெரியார் கொள்கை மீது ரொம்ப அக்கறை உள்ளவர் போல காட்டிக் கொள்வது உண்மையென்றால், பெரியார் இருந்த காலத்தில் இந்தக் குமுதக் கோமாளிகள் காதொடிந்த ஊசி முனை அளவுக்காவது  அவருக்கு உதவி செய்தது உண்டா? ஆதரவு தெரிவித்ததுண்டா?
இந்த குமுதத்தின் யோக்கியதை என்ன தெரியுமா?
தந்தை பெரியார் மறைந்த போது நாடே துயரத்தின் உச்சியில் இருந்த போது, ஏடுகள் எல்லாம் கறுப்புக் கட்டம் கட்டித் தன் துயரத்தை வெளிப்படுத்தியிருந்தன. அந்தத் தருணத்தில் கூட இந்தக் குமுதம் எவ்வளவு அநாகரிகமாக நடந்து கொண்டது தெரியுமா?
தந்தை பெரியாரிடம் ஒரு கட்டத்தில் மாறுபாடு ஏற்பட்டபோது வெளியே சென்ற கோவை அய்யா முத்து அவர்கள், தந்தை பெரியாரைக் குறை சொல்லி எப்பொழுதோ எழுதிய கட்டுரையை தூசி எடுத்து வெளியிட்டு  தன் கேவலப் புத்தியை அநாகரிகமாக அப்பட்டமாக காட்டிக் கொண்டதுதான் இந்தக் கேடு கெட்ட குமுதம்.
கோயிலுக்கு செல்வோர் பற்றி கணக்குக் காட்டி திராவிடர் கழகத் தலைவரை குறை கூறுகிறது குமுதம் - இதே ‘குமுதம்‘ இன்னொரு காலக்கட்டத்தில் என்ன எழுதிற்று தெரியுமா?
கேள்வி: ஏராளமான கோயில்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறதே. பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கைகள் புதை குழிக்குள் போய்விட்டதா?
ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்
பதில்: புதிதாய்த் தோன்றுவது கோயில்கள் அல்ல உண்டியல்கள். பெரியாரின் கொள்கைகள் புதை குழியில் போவதற்கானவை அல்ல. புதைகுழியில் புதைய இருப் பவர்களைக்  காப்பாற்றுவதற்காக.
(குமுதம், 9.6.2010, பக்கம் 20)
அது மட்டுமா? டில்லியில் பெரியார் மய்யத்தை உருவாக் கினாரே திராவிடர் கழகத் தலைவர்  கி,வீரமணி  அவர்கள் அதைப் பற்றி எப்படி செய்தி வெளியிட்டது இதே குமுதம்?
“தலைநகரில் தமிழர் பெருமை” என்ற தலைப்பிட்டு டில்லி - பெரியார் மய்யம் படத்தையும் வெளியிட்டுப் புளகாங்கிதம் அடைந்ததே (குமுதம் 19.5.2010 பக்கம்: 60-61)
அந்த பெருமைக்குரிய சாதனையைச் செய்தவரும் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு வீரமணி தானே?
யாரோ பேச்சு பொழுது விடிந்தால் போச்சு என்பார்களே அது இதுதானா?
உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர், பெரியார் சிலைக்கு மாலை போடுகிறாராம்  வீரமணி- இப்படியும் ஒரு குற்றச்சாட்டு.
வழிபாட்டில் நம்பிக்கை இல்லைதான். அதனால்தான் பெரியார் சிலையையும் நாங்கள் வழிபடுவதில்லை. இந்த சாதாரண உண்மையைக் கூட தெரிந்து கொள்ளாத தலைப் பிராட்டைகளா இவர்கள்?
சரி.. கடவுள் தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார். அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று கதறும் கடவுள் பக்தர்களே!.
அந்த கடவுள் உண்மையில் இருந்தால் நீங்கள் நம்பும் கோயிலைச் சுற்றிலும் சென்ட்ரல் ஜெயில் காம்ப வுண்டை விட உயரமாக எதற்காக மதில் எழுப்புகிறீர்கள்? தனி ஆர்டர் கொடுத்து செய்து அல்லவா பெரிய பெரிய பூட்டைப் போட்டுப் பூட்டுகிறீர்கள்? அப்படி இருந்தும் திருடன் புருசன் பெண்டாட்டிக் கடவுள்களை அடித்துக் கொண்டு போகிறானே, அம்மனின் தாலியை அடித்துக் கொண்டு செல்கிறானே!  அதற்கு என்ன சொல்லுகிறீர்கள் என்று நாங்கள் கேட்க முடியாதா?
உங்கள் சிவபுரத்து நடராஜன் சிலையின் கையில் உள்ள தட்டு அமெரிக்காவில் உள்ள நார்டன் துரை சிகிரெட்டு சாம்பலை உதறும் ஆஷ்டிரேயாகப் பயன்படுத்துவது ‘பிரார்த்தனைக் கிளப்’ நடத்திய குமுதம் அறியுமா?
அன்றைய அம்பேத்கர் பிறந்த நாளில் தாலியகற்றும் நிகழ்ச்சியை திடலில் கழகம் நடத்துதியது குறித்தும் கேலி செய்துள்ளது.
ஆம் அதில் என்ன தப்பு? கல்யாணம் ஆனதற்கு பெண்களுக்குத் தாலி அடையாளம் என்றால், ஆணுக்கு என்ன அடையாளம்? அவன்தானே அதிகமாக ஊர் சுற்றுகிறான்? - ஓடு காலிகளுக்கு ஒத்தடம் கொடுக்கும் வேலையில் இறங்குவது தான் குமுதத்தின் வேலையா? கணவன் இறந்த பின் அந்தத் தாலியை அறுத்து முண்டச்சி என்று முத்திரை குத்தி மூலையில் முடக்குகின்றீர்களே?
விதவை என்று கூறி வீட்டில் நடக்கும் விழாக்காலங்களில் கூட எதிரே வரக்கூடாது என்று பெண்களின் மீது பெரிய அவமானத்தை இழிவை சுமத்தியிருக்கிறீர்களே - நீங்கள் எல்லாம் சகோதரிகளுடன் பிறந்தவர்கள்தானா? என்று கேட்பவர்கள் கேடானவர்களா? கேடு கெட்ட குமுதமே பதில் சொல் பார்க்கலாம்.
பெண்களின் அரை குறை ஆடைகளை அட்டைப் படமாக்கி கல்லாப் பெட்டியை நிரப்பும் ஏடுகள் எல்லாம் திராவிடர் கழகத்தைப் பற்றியோ, அதன் தலைவரைப் பற்றியோ பேச, எழுத அருகதை உண்டா?
பெண்கள் படத்தை கிட்டதட்ட நிர்வாணமாக்கி போடு கிறீர்களே என்று மக்கள் காரித்துப்பிய போது ஏன் - ஆண் களைக்கூட அப்படிப் போடுவோம் என்று சொல்லி கையை வைத்து மறைத்துக் கொண்ட ஆண்களின் நிர்வாணப் படத்தை - குமுதம் என்ற குட்டிச்சுவர் வெளியிட்டதுண்டே!
இப்படியும் ஒரு பிழைப்பா? வேறு பிழைப்பு இருக்கவே இருக்கிறது - செய்வது தானே!
அய்யப்பன் கோயில் பிரச்சினை, பெரியார் சிலைக்கு மாலை என்று ஆர்.எஸ்.எஸ். பேர்வழி எஸ்.குருமூர்த்தி எடுத்த வாந்தி¬யையே மறு சுழற்சியில் குமுதம் எடுத்தி ருப்பது மூலம் கோணிப்பைக்குள்ளிருந்த பூனைக்குட்டி வெளியில் வந்து விட்டதே. யாருடைய கையாளாகவோ, தொங்கு சதையாகவோ இருந்து கொண்டு குமுதம் குட்டிக்கரணம் அடிக்கும் மர்மக்குட்டு உடைந்து விட்டதே!
மத்திய பிஜேபி ஆட்சியை அணு அணுவாக தோலு ரித்துக் காட்டுகிறாரே வீரமணி.
செத்துப்போன பசுவின் தோலை உரித்த தாழ்த்தப் பட்டவர் தாக்கப்படுவது குறித்தும் - புதிய கல்வி என்ற குலக்கல்வி பற்றியும் அக்குவேறு ஆணிவேறாக அலசுகிறாரே-  பிரச்சாரம் செய்கிறாரே - அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுகிறாரே, போராட்டம் நடத்துகிறாரே என்ற ஆத்திரம் அலைமோதுகிறதோ. இந்த நேரத்தில் தலைவர் வீரமணி மீது சேற்றை வாரி இறைக்கின்ற காரணத்தைத் தமிழ்மக்கள் புரிந்து கொள்வார்கள்.  இதில் நம்மீது சேற்றை வாரி இறைப்பதன் பின்னணியில் ஆதிக்கக் கைகள் இருக்கின்றன என்பது தான் உண்மை.  யார் எந்தப் பக்கத்திலிருந்து வீசுகிறார்கள் என்பதையும் நாட்டு மக்கள் அறிவார்கள்.
தாங்களே முன்வந்து அடையாளம் காட்டிக்கொண்டது விபீடணக் கும்பல் - அதுவும் ஒரு வகையில் நல்லது தானே!
                              ----------------------------- 11-08-2016 ‘விடுதலை’ யில் கருஞ்சட்டை எழுதிய கட்டுரை