Search This Blog

30.4.12

மே தின வேறுபாடு - பெரியார்

தோழர்களே!

மே தினம் என்பதைப் பற்றி இங்கு இதுவரை 5, 6 தோழர்கள் எடுத்துச் சொல்லி விட்டார்கள். நான் முடிவுரை என்கின்ற முறையில் ஏதாவது பேச வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்.

மே தினம் என்பது இன்று உலகமெங் கும் எல்லா தேசங்களிலும் கொண்டாடப் படுவதனாலும், ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படு கின்றது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. ரஷ்யாவில் கொண்டாடப்படுவது போல் இங்கிலாந்தில் கொண்டாடப்பட மாட்டாது. ஸ்பெயினில் கொண்டாடப்படு வது போல் பிரெஞ்சில் கொண்டாடப்பட மாட்டாது.

அதுபோலவேதான் மேல் நாடுகளில் அய்ரோப்பா முதலிய இடங்களில் கொண் டாடப்படுவது போல் இந்தியாவில் கொண்டாடத்தக்க நிலைமை இல்லை.

ஏனெனில், ஒவ்வொரு தேசத்தின் நிலைமை வெவ்வேறான தன்மையில் இருந்து வருகிறது. எல்லா தேசமும் ஒரே விதமான பக்குவத்தை அடைந்துவிட வில்லை.

ஆரம்ப திசையில் இருக்கிற தேசமும், முடிவை எட்டிப் பார்க்கும் தேசமும் ஒரே மாதிரி கொண்டாட வேண்டும் என்று கருதுவதும் புத்திசாலித்தனமாகாது.

இன்று ரஷ்யாவில் மே தினத்தைக் கொண்டாடுவதின் முக்கிய நோக்கம் பெரிதும் தங்கள் தேசத்தை மற்ற தேசங்கள் பின்பற்ற வேண்டும் என்கின்ற ஆசையைப் பொறுத்ததாகும்.

இங்கிலாந்து, பிரெஞ்சு முதலிய தேசங் களில் கொண்டாடுவதின் நோக்கம் ரஷியாவைப் பல விஷயங்களில் பின்பற்ற வேண்டும் என்கின்ற கருத்தைக் கொண்டு அதற்கு பக்குவம் செய்வதற்கு ஆசைப் படுவதாகும்.

எப்படி இருந்தாலும் அடிப்படையான நோக்கத்தில் ஒன்றும் பிரமாதமான வித்தி யாசம் இருக்காது. அனேக துறைகளில் சிறப்பாக சமுதாயத்திலும், பொருளா தாரத்திலும் ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு, இம்சைப்படுத்தப்பட்ட அடிமை மக்கள் சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் அடைய வேண்டும் என்கின்ற உணர்ச்சியே மே தினக் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
அந்த உணர்ச்சி எல்லா மக்களுக்கும் ஏற்பட்டால் பிறகு அந்தந்த நாட்டு நிலை மைக்குத் தக்கபடி முயற்சியும் கிளர்ச்சியும் தானாகவே வந்துவிடும்.

ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்ட அடிமை மக்கள் என்பவர்கள்கூட ஒவ்வொரு தேசத் தில் ஒவ்வொரு விதமாகவே இருக்கிறார்கள். மேல் நாடுகளில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் என்பவர்கள் தொழிலாளிகள் என்கின்ற பெயரால் அவர்களது தொழில் நிலையையும், செல்வ நிலையையும் பொறுத்து இருக்கிறார்கள்.

அதனாலேயே இந்தக் கிளர்ச்சிக்கு தொழிலாளி, முதலாளி கிளர்ச்சியென்றும், வகுப்புப் போர் என்றும் சொல்லப்படு கின்றது.

ஆனால் இந்தியாவில் ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் என்பது தொழில் நிலையையும், செல்வ நிலையையும் முக்கியமாய் கொள்ளாமல், மக்களின் பிறவி நிலையையே பிரதானமாய்க் கொண்டு பெரும் பான்மையான மக்கள் ஒடுக்கப்பட்டும், தாழ்த்தப்பட்டும், அடிமைப்படுத்தப்பட்டும் இருப்பதால் தொழில் நிலைமையையும், செல்வ நிலைமையையும் நேரே நோக்கிக் கிளர்ச்சியோ, புரட்சியோ செய்வது முக்கியமானதாய் இல்லாமல் பிறவி பேதத்தையே மாற்றக் கிளர்ச்சியும், புரட்சியும் செய்ய வேண்டியது முக்கியமாய் இருக்கின்றது. ஆதலால் தொழிலாளி, முதலாளி கிளர்ச்சி என்கின்றதைவிட மேல் ஜாதி, கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும்.

ஏனென்றால், இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவியிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு விட்டது.

நாலாவது வருணத்தான் அல்லது கீழான ஜாதியான் அல்லது சூத்திரன் என்று சொல்லப்படும் பிரிவே தொழிலாளி. அதாவது சரீரத்தால் உழைத்து வேலை செய்வதன் மூலம் மற்ற ஜாதியாருக்கு வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்ய வேண்டும் என்கின்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டதாகும்.
அய்ந்தாவது ஜாதியான பஞ்சமன் அல்லது சண்டாளன் என்று சொல்லப்பட்ட ஜாதி யான் என்பவன் வாழ்நாள் முடிய மற்ற ஜாதியாருக்கு அடிமையாய் இருந்து தொண் டாற்ற வேண்டும் என்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டவன்.

இந்த இரு கூட்டத்தாரிடமும் கூலி கொடுக்காமலே வேலை வாங்கும் உரிமை மேல் ஜாதியானுக்கு உண்டு. அதுவும் மத சாஸ்திர பூர்வமாகவே உண்டு.

இது இன்றைய தினம் நிர்ப்பந்தத்தில் இல்லை என்று சிலர் சொல்லக் கூடுமானா லும், ஒரு சிறு மாறுதலோடு அனுபவத்தில் இல்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது.

பஞ்சம வகுப்பைச் சேர்ந்த மக்களாகிய சுமார் 6, 7 கோடி மக்களில் 100-க்கு 99 பேர்கள் இன்று அடிமையாக, இழி மக்களாக நடத்தப்படவில்லை என்று யாராவது சொல்ல முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். அதுபோலவே பார்ப்பனரல் லாதார் என்கின்ற இந்து மக்கள் ஆண், பெண் அடங்கலும் சூத்திரர்கள் - அதாவது சரீர வேலை செய்யும் வேலை ஆட்கள் என்ற கருத்தோடு அழைக்கப்படுவது மாத்திரமல்லாமல், ஆதாரங்களில் குறிக்கப்படுவதோடு, அந்தச் சூத்திரர்கள் என்கின்ற வகுப்பார்களே தான் இன்று சரீரப் பிரயாசைக்காரர்களாகவும், கூலிகளாகவும், உழைப் பாளிகளாகவும், ஏவலாளர்களாகவும், தொழி லாளர்களாகவும் இருந்து வருகின்றார்களா இல்லையா? என்று பாருங்கள்.

மற்றும் ஜாதி காரணமாகவே, தொழிலாளிகளாகவோ, சரீர பிரயாசைப்படும் உழைப்பாளிகளாகவோ இல்லாமலும், சரீரப் பாடுபடுவதைப் பாவமாகவும் கருதும் படியான நிலையில் சில ஜாதியார்கள் இருக் கிறார்களா இல்லையா? என்றும் பாருங்கள்.

இந்தியாவில் தொழிலாளி, முதலாளி அல்லது எஜமான், அடிமை என்பது பிரதான மாக பிறவி ஜாதியை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இந்தியாவில் மே தினக் கொண்டாட்டம் என்பது பார்ப்பான், (சூத்திரன்) பஞ்சமன் அல்லது சண்டாளன் என்கின்ற ஜாதிப் பிரிவுகள் அழிக்கப்பட வேண்டும் என்கின்ற நிலையில்தான் பெரியதொரு கிளர்ச்சியும், புரட்சியும் ஏற்பட வேண்டும் என்கின்ற கருத்தோடு இன்று கொண்டாடவேண்டியதாகும்.

இந்தியாவில் வகுப்புப் போர் என்பதற்குப் பதிலாக வேறு ஏதாவது சொல்ல வேண்டுமானால் ஜாதிப் போர் ஏற்பட வேண்டும் என்பதாகத்தான் சொல்ல வேண்டும்.

இந்தியாவில் ஒரு ஜாதியார் 100-க்கு 99 பேர்கள் நிரந்தரமாக தொழிலாளிகளாகவும், அடிமைகளாகவும், ஏழைகளாகவும், மற்றவர் களுக்கே உழைத்துப் போடுகின்றவர் களாகவும் இருப்பதற்குக் காரணம் பிறவியில் வகுக்கப்பட்ட ஜாதிப் பிரிவே அல்லாமல் வேறு என்ன? இதை அடியோடு அழிக்காமல் வேறு விதமான கிளர்ச்சிகள் எது செய்தாலும் தொழிலாளி, முதலாளி நிலை என்பது அனுபவத்தில் இருந்துதான் தீரும்.
இன்று முதலாளி, தொழிலாளி என்ப தற்கு நாம் என்ன வியாக்கியானம் செய் கிறோம்? பாடுபடாமல் ஊரான் உழைப்பில் பதவி, அந்தஸ்துடன் வாழ்வதையும், பாடுபடுகின்றவன் ஏழையாய், இழிமக்களாய் இருப்பதையும் தான் முறையே சொல்லு கின்றோம்.

ஆகவே, ஜாதியையும், அதற்கு ஆதார மான மதத் தன்மையையும் அழிக்காமல், வேறு எந்த வழியிலாவது முதலாளி, தொழி லாளி தன்மையை மாற்றவோ அல்லது அதன் அடிப்படையாய் அணுகவோ நம்மால் முடியுமா என்று பாருங்கள்.

இந்தியாவில் ஏழை மக்களுக்காக தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுகின்றேன் என்று சொல்லுகின்றவர்கள் யாரா னாலும் அதற்கு ஆதாரமும் அடிப்படையுமான ஜாதிப் பாகுபாட்டையும், மதத் தன் மையையும் ஒழிக்க சம்மதிக்க வில்லையானால் அவர்கள் எல்லோரும் யோக்கியர்கள் என்று நாம் சொல்லிவிட முடியாது. அரசியல் தலைவர் களில் எவரும் இதற்குச் சம்மதிப்பதில்லை.

ஏதாவது ஒரு தொழிற்சாலையில் நித்திய கூலிக்கோ, மாதச் சம்பளத்துக்கோ பாடுபடுகின்ற நான்கு தொழிலாளிகளைக் கூட்டி வைத்து பேசிவிடுவதனாலேயே அல்லது அத்தொழிலாளிகள் விஷயமாய் பேசி விடுவதனாலேயே அல்லது அவர் களுக்குத் தலைமை வகிக்கும் பெரு மையைச் சம்பாதித்துக் கொண்ட தினாலேயே எவரையும் உண்மையான தொழிலாளிகளுக்குப் பாடுபட்டவர்களாக கருதிவிடக் கூடாது. அவர்களெல்லாம் அரசியல், தேசியம் ஆகியவற்றின் பேரால் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம் செய்வது போல் தொழிலாளிகளின் பேரால் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம் நடத்துகின்றவர்களா கவே பாவிக்கப்பட வேண்டியவர்களாவார்கள்.

இந்து மக்களின் மதமும், அவர்களது ஜாதிப் பிரிவும் தொழிலாளி, முதலாளி தன்மையின் தத்துவத்தை நிலைநிறுத்தவே ஏற்படுத்தப்பட்டதாகும். இந்தக் காரணத் தாலேயேதான் மற்ற நாட்டு மே தினக் கொண்டாட்டத்திற்கும், இந்நாட்டு மே தினக்கொண்டாட்டத்திற்கும் பெருத்த வித்தியாசம் இருக்கின்றது என்று சொல்லுகிறேன். இந்த முதலாளி, தொழிலாளி நிலைமைக்கு வெள்ளையர், கறுப்பர்கள் என்கின்ற நிற வித்தியாசத்தைக் காரணமாகச் சொல்லிவிட முடியாது. ஏனெனில், தொழிலாளி முதலாளி வித்தியாசம் ஒழிக்கப்பட வேண்டும் என்கின்ற கருத்தை இந்தியர்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தவர்களே வெள்ளையர்களாகும். அந்த முறை மாற்றப் படக் கூடாது என்பதை மதமாகக் கொண் டிருக்கிறவர்களே கறுப்பர்களாகும்.

ஆகையால், இதில் வெள்ளையர், கறுப்பர் என்கின்ற கருத்துக்கு இடமில்லை. ஆனால் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்பதைத்தான் முக்கியமாய் வைத்துப் பேச வேண்டியிருக்கிறது.

இந்திய தேசியம் என்பதுகூட ஜாதி யையும், மதத்தையும் காப்பாற்றுவதையே முக்கியமாய்க் கொண்டிருக்கிறதினால்தான் அப்படிப்பட்ட தேசியம் ஒருநாளும் தொழிலாளி, முதலாளி நிலைமைகளை ஒழிக்க முடியாது என்பது மாத்திரமல்லாமல் இந்தத் தேசியம் தொழிலாளி, முதலாளி தன்மை என்றும் நிலைத்திருக்கவே பந்தோபஸ்து செய்து வருகிறது என்று அடிக்கடி சொல்லி வந்திருக்கிறேன். இன்று நம் நாட்டிலுள்ள பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்கின்ற கிளர்ச்சி பெரிதும் தொழிலாளி, முதலாளி கிளர்ச் சியேயாகும். இந்தக் கிளர்ச்சியின் பயனாகவே வருண தருமங்கள் என்பது அதாவது பிறவியிலேயே தொழிலாளி, முதலாளி வகுக் கப்பட்டிருப்பது ஒரு அளவு மாறி வருகின்றது. இந்தக் காரணத்தினால் தான் முதலாளி வர்க்கம் அதாவது பாடுபடாமல் ஊராரின் உழைப்பில் பலன் பெற்று வயிறு வளர்க்கும் ஜாதியாகிய பார்ப்பன ஜாதி அடியோடு அனேகமாய் எல்லோருமே இந்த பார்ப்பனரல்லாதார் கிளர்ச்சிக்கு பரம எதிரிகளாய் இருந்து கொண்டு துன்பமும், தொல்லையும் விளைவித்து வருகிறார்கள்.

இக்கிளர்ச்சியை வகுப்புத்துவேஷம் என்றுகூட சொல்லுகிறார்கள். பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாதார்கள் என்கின்ற இரு ஜாதியார்களுக்கும் பார்ப்பனர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிற நிபந்தனைகளைப் பார்த்தால் வகுப்புத் துவேஷம், வகுப்புக் கொடுமை என்பவை யாரால் செய்யப் பட்டு இருக்கிறது, செய்யப்பட்டும் வருகிறது என்பது நன்றாய் விளங்கும்.

நிற்க, தோழர் நீலாவதி அம்மையார் சொன்னதுபோல் முதலாளி, தொழிலாளி கொடுமை ஒழிய வேண்டும் என்பதில் ஆண், பெண் கொடுமையும் ஒழிய வேண்டி யதவசியமாகும். ஆண்கள் முதலாளிகளாகவும், பெண்கள் தொழிலாளிகளாகவும், அடிமைகளாகவும்தான் நடத்தப்பட்டு வருகிறார்கள். இதுவும் வெறும் பிறவி காரணமாகவே ஒழிய மற்றபடி இதில் வேறு காரணம் ஒன்றுமே இல்லை. ஆண், பெண் என்பதற்கு பிறவி காரணமாய்க் கற்பிக்கப் பட்டிருக்கிற பேதங்கள், நிபந்தனைகள் அடியோடு ஒழிக்கப்பட்டாக வேண்டும்.

இதற்கும் பெண் மக்கள் பெரியதொரு புரட்சிக்குக் கிளர்ச்சி செய்யவேண்டும். ஆண் மக்களோடு தைரியமாய்ப் போர் தொடுக்க வேண்டும். பெண்கள் போர் தொடுக்க ஆரம்பித்தால் ஆண் மக்கள் சரணாகதி அடைந்தே தீருவார்கள்.

நிற்க. இந்த மே தினத்தை நாம் ஒரு பெரிய பண்டிகை போல் கொண்டாட வேண்டும். ஏனெனில், நமது பண்டிகைகளில் அநேகம் இம்மாதிரி வெற்றிகளை ஞாபகப் படுத்துவதேயாகும். தீபாவளி, ஸ்ரீராம நவமி முதலிய பண்டிகைகள் எல்லாம் இந்நாட்டில் ஆரியர்கள் திராவிட மக்களை வென்ற நாள்களையும், வென்ற தன்மைகளையும் கொண்டாடுவதைத் தவிர வேறொன்றுமே முக்கியமாய் இல்லை. இதெல்லாம் தெரிந்த பலர்கூட இப்பண்டிகைகளைக் கொண்டாடு வது இந்நாட்டில் மக்கள் உற்சாகத்திற்கு வேறு மார்க்கம் இல்லாததே ஒழிய மற்றபடி மதம், பக்தி, சுயமரியாதை அற்ற தன்மை என்பவையோ அல்ல.

பெண்களையும், வேலை ஆள்களையும் சிறிதுகூட ஓய்வில்லாமல் அடிமை போல் நடத்துகிறோம். அவர்களுக்கு பண்டிகை, உற்சவம் ஆகியவை தான் சிறிது ஓய்வும், சந்தோஷமும் கொடுக்கின்றன.

தண்டவாளப் பெட்டியில் வைத்துப் பூட்டி வைப்பதுபோல் பெண் ஜாதிகளைப் பூட்டி வைக்கும் சிப்பாய்களெல்லாம் உற்சவம், பண்டிகை என்றால் சிறிதாவது தாராளமாய் வெளியில் விட சம்மதிக் கிறார்கள். உற்சவங்களில் அவர்கள் நிலை எப்படி ஆனாலும் கவலைப்படுவதில்லை. கண்ணெதிரிலேயே நசுக்கப்படு வதையும், கசக்கப்படுவதையும் பார்த்துக் கூட சகிக்கிறார்கள். ஆதலால் நம் பெண்களுக்கும், தொழிலாளிகளுக்கும் எவ்வளவுதான் நாம் பகுத்தறிவையும், சுயமரியாதைக் கொள்கைகளையும் போதித்தாலும் உற்சவமும், பண்டிகையும் அவர்களை விட்டு விலகவே முடியாது. எனவே நாம் இப்படிப்பட்ட பண்டிகைகள் சிலதை கொண்டாட ஏற்பாடு செய்தோமே யானால் மத சம்பந்தமான பண்டிகை, உற் சவம் ஆகியவைகளை மக்கள் கை விடுவதற்கு அனுகூலமாயிருக்கும்.

ஆகவே தோழர்களே, இதுவரை நாங்கள் சொன்ன ஒவ்வொன்றையும் சிந்தித்துப் பார்த்து, தங்களுக்கு சரியென்று தோன்றியபடி நடக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொண்டு, இக்கூட்டத்தை முடித்து விடுகிறேன்.

------------------காரைக்குடியில் நடைபெற்ற மே தினக் கொண்டாட்டத்தில் தலைவர் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய முடிவுரை - "குடிஅரசு" - சொற்பொழிவு - 12.05.1935

பார்ப்பனர்களுக்கு பார்ப்பனர் என்ற இன உணர்ச்சி அறவேயில்லை!


ஆமாம், நம்புங்கள் - பார்ப்பனர்களுக்கு பார்ப்பனர் என்ற இன உணர்ச்சி அறவேயில்லை!




நம்புங்கள் - பார்ப்பனர்களுக்குப் பாப்பான் என்ற இன உணர்ச்சியே கிடையாது - வெறும் மானுடப் பற்று தான். வேண்டுமானால், இந்த வார துக்ளக்கைப் (18.-4.-2012) புரட்டி பாருங்கள்.

கேள்வி: ராமர் பாலம் கற்பனையானது. கற்பனையான வழி பாட்டு அமைப்பை காப்பாற்றுவதற்காக நாட்டின் வளர்ச்சியை காவு கொடுக்கக் கூடாது. சேதுக் கால்வாய்த் திட்டத்தை உடனே செயல்படுத்தவேண்டும் என்கிறாரே ராமதாஸ்?

பதில்: ராமர் பாலம், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் புகைப்படத்திலேயே காணப் பட்டது. இன்றும் பலர் அங்கு போய் இந்தப் பாலத்தைப் பார்த்து வருகிறார்கள். அது பற்றிய குறிப்புகள், தமிழக அரசு நூல்களிலேயே இருக்கின்றன. அதன் புனிதத் தன்மை பற்றி, ராமர் சீதைக்கு விளக்கிச் சொல்வது, வால்மீகி ராமாயணத்தில் இடம பெறுகிறது. சேது கால்வாய்த் திட்டமோ - பொருளாதார ரீதியாகப் பயனளிக்காது என்று நிபுணர்கள் பலர் விவரித்துக் கூறி யிருக்கிறார்கள். இவையெல்லாம், ஏற்கெனவே துக்ளக் கில் விரிவாக அலசப்பட்ட விஷயங்கள். ராமதாஸ் பேசுவது உண்மையல்ல என்கிறார் சோ. அண்டப் புளுகு பேசுவதில் அக்கிரகார ஆசாமிகளை அடித்துக் கொள்ள அன்டார்டிகாவில் தேடினா லும் கிடைக்கமாட்டார்கள்.

இன்டோ-லிங்க்காம் - வைஷ்ணவா நெட்வொர்க் என்ற பார்ப்பன நிறுவனம் ராமன் பாலம் இருப்பதாக நாசா சொன் னதாக ஒரு கதையைக் கட்டிவிட்டது.

இந்தக் கட்டுக் கதையைக் கேள் விப்பட்ட மாத்திரத்தில் சேது சமுத் திரத் திட்டத்தின் தலைவர் என்.கே. ரகுபதி அமெரிக்காவில் உள்ள நாசா நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் கேட்டார். நீங்கள் வெளி யிட்டுள்ள படத்தால் இங்குப் பிரச்னை எழுந்துள்ளது. ஆதாம் பாலம் செயற்கையாகக் கட்டப் பட்டதா? அல்லது இயற்கையாக அமைந்த மணல் மேடா? என்று கேட்டார். அன்று மாலையே நாசாவிடமிருந்து தகவல் வந்துவிட்டது. இந்தியா இலங்கைக்கிடையே உள்ள பாலம் இயற்கையான மணல் படிவுகளால் உருவான மணல் திட்டுதான் என்று முகத்தில் அறைந் தாற்போல் பதில் கூறிவிட்டதே!

இந்தத் தகவலை சேது சமுத் திரத்திட்டத்தின் தலைவர் என்.கே. ரகுபதி செய்தியாளர்களிடம் தெரி வித்துவிட்டாரே. (தினமலர் 26--.7.-2007- பக்கம் 5)

அவாளின் தினமலரில் வெளிவந்த சேதிதான் இது!

உண்மை இவ்வாறு இருக்க சோ ராமசாமி துக்ளக்கிலும் திருவாளர் இல.கணேசன்வாள் சன் தொலைக் காட்சியிலும் புளுகுகிறார்களே! புளுகுதல் என்பது அவாளுக்கு புளியோதரையோ!

இராமநாதபுரத்திற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள மணல்திட்டு ராமன் கட்டிய பாலம் என்றால் ஆஸ்திரேலியா கண்டத்தின் கிழக்கே ஆயிரம் மைல் நீளத்திற்கு மேல் இருக்கும் மணல் திட்டை ராமன் தம்பி லட்சுமணன் கட்டினானோ!

இந்தக் கேள்விக்கு இந்த அறிவு ஜீவிகள் இது வரை பதில் சொல்லாதது ஏன்?

இன்னொரு கேள்வி பதில், இதே தேதி துக்ளக்கில்.

கேள்வி: ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று திடீ ரென்று தமிழக முதல்வர் கடிதம் ஏழுதுவதன் நோக்கம் என்ன?

பதில்: திடீரென்று கடிதம் எழுதவில்லை. ராமர் பாலம் பற்றி தனது முடிவான கருத்தைக் கூறி மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியது. ஆகையால் மத்திய அரசு இந்த விவகாரத்தில், இனியும் மழுப்பாமல் ஒரு முடிவான கருத்திற்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை ஒட்டித்தான் தமிழக முதல்வர் ராமர் பாலம் தேசியச் சின்னமாக அறிவிக் கப்பட வேண்டும் என்று கோரியிருக் கிறார் என்று மிக சாமர்த்தியமாக பதில் எழுதிட முயற்சிக்கிறார்.

இதே ஜெயலலிதா 2001 சட்டப் வேரவை மற்றும் 2004 மக்களவைத் தேர்தல் அறிக்கைகளில் ராமன் பாலம் என்று குறிப்பிட்டு இருந்தாரா? இல்லையே! அதை மறைப்பதேன் இந்த மனுதர்ம வியாதி.?

இந்திய தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாகக கிழக்கு நோக்கிக் கப்பல் செல்லவேண்டுமென்றால், இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. இதற்குத் தீர்வாக அமைவதுதான் சேது சமுத்திரத் திட்டம். இத்திட்டத்தின்படி ராமேசுவரத்திற்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் உள்ள ஆடம் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல்மேடுகள்,; பாறைகளை அகற்றி ஆழப்படுத்தும் கால்வாய் அமைப் பதுதான் சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம் என்று அ.இ. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளதே. அன்றைய மணல் மேடுகள், பாறைகள் அடங்கிய ஆடம்ஸ் பிரிட்ஜ் - திடீரென்று ராமன் பாலம் என்று செல்வி ஜெயலலிதாவுக்கு ஏதாவது அசரீரி வந்து கூறிற்றா?

இன்னும் ஒரு கட்டம் மேலே தாண்டி சேது சமுத்திரத் திட்டமே கூடாது என்கிற அளவுக்கு ஜெயலலிதா சென்றுவிட்டாரே. தமிழர்கள் இதனை அனுமதிப்பார்களா?

தமிழ்நாட்டின் வளர்ச்சி என்றால் இந்தப் பார்ப்பனர்களுக்கு ஏன் ரத்தம் கொதிக்கிறது? இதயம் சில நிமிடங்கள் நின்று விடுகிறது? தமிழர்கள் புரிந்து கொள்வார்களாக!

கேள்வி: மன்மோகன்சிங், வி.பி.சிங் ஒப்பிடுங்கள்.

பதில்: மன்மோகன்சிங் பதவியில் இருப்பதால் பல கெடுதல்கள் விளைந்தன. பல கெடுதல்களைச் செய்வதற்காகவே பதவியில் இருந்தார் வி.பி.சிங்.

புரிகிறதா? வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்த போது மண்டல் குழுவின் பரிந்துரைகளில் ஒன்றான பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்பதில் 27 விழுக்காடு வேலை வாய்ப்பில் கொடுக்கச் செய்தார் அல்லவா? அந்த ஆத்திரம் அவாளை இன்றுவரை பாடாய்ப் படுத்துகிறது - படுபாவி என்று மண்ணை வாரித் தூற்றுகின்றனர்.

நூற்றுக்கு நூறு இடங்களையும் முழுவதுமாக சுளைசுளையாக முழுங்கி ஏப்பமிட்ட கூட்டம் அல்லவா! - அதில் மண் விழுந்து விட்டதே என்கிற ஆத்திரம்! பாவம் இவர்களுக்கு பார்ப்பன உணர்ச்சியே இல்லை. நம்பித் தொலையுங்கள்.

கேள்வி: கலைஞரின் பார்ப்பன எதிர்ப்பு தி.மு.க.விற்கு சாதகமா? பாதகமா?

பதில்: காங்கிரசிற்கு இப்போது உப்பு சத்தியா கிரகம் எவ்வளவு தூரம் சாதகமாக இருக்குமோ, அவ் வளவு தூரம் தி.மு.க.விற்கு பார்ப்பன எதிர்ப்பு சாதகமாக இருக்கும். - இப்படி ஒரு துக்ளக் பதில்.

கலைஞரின் பார்ப்பன எதிர்ப்பால் ஒன்றும் ஆகப் போவதில்லை என்றால் எதற்காக துக்ளக்கில் பக்கம் பக்கமாக பார்ப்பனர் அல்லாதார் இயக்கமான திராவிடர் இயக்கம் பற்றியும், அதன் தலைவர்கள் குறித்தும் பார்ப்பனர்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டு இருக்க வேண்டும்? அந்த உப்பு சத்தியாக்கிரகத்தைப் பற்றி இப்பொழுது எதற்கு எதிர்த்து எழுதிக்கொண்டு இருக்கவேண்டும்?

பரவாயில்லை அந்தக் கால கட்டத்தில் பார்ப்பனர் எதிர்ப்பு சரியே என்று காலந் தாழ்ந்தாவது சோ அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளாரே!

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்றால் அதனை எதிர்த்து இப்பொழுதும் உச்சநீதி மன்றம் செல்பவர்கள் யார்?

தமிழ் செம்மொழியானால் வீட் டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் கிடைக்குமா என்று எழுதுபவர்கள் யார்?

இப்படிப்பட்ட பார்ப்பனர்கள்தான் - கலைஞர் ஏதோ பார்ப்பன எதிர்ப்புப் பிரச்சாரம் செய்வதாக பம்மாத்து அடிக்கின்றனர்.

இன்னொரு கேள்வியையும் கேளுங்கள்.

கேள்வி: இந்தக் கம்ப்யூட்டர் காலத்திலும் திராவிடம், ஆரியம், திரா விடப் பாரம்பரியம் என்று கலைஞர் பேசிக் கொண்டிருப்பது எதைக் காட்டுகிறது?

பதில்: தி.மு.க.வை அவர் வளர விடமாட்டார் என்பது: தெரிகிறது - இப்படி ஒரு பதில்.

கம்ப்யூட்டர் காலத்தில் இவர்கள் 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டு களுக்கு முன் ராமன் பாலம் கட்டி னான் என்று எழுதலாம்.

கம்ப்யூட்டர் காலத்திலும் பூணூலைத் தரிப்பதற்காகவே, புதுப்பிப்பதற்காகவே ஒரு நாளை (ஆவணி அவிட்டம்) கொண் டாடலாம்!
அதன் மூலம் தாங்கள் பிரா மணர்கள் - பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள், - இருபிறப்பாளர்கள் என்று கூறி நாட்டின் பெரும்பான்மை மக்களைச் சூத்திரர்கள் என்று கூறலாமாம்.

அதனை நாம் எதிர்த்துக் கேட்டால் - கம்ப்யூட்டர் கலத்தில் இப்படிக் கேட்கலாமா என்று கேள்வி கேட்கின்றனர்.
ஆக 2012_லும், நாங்கள் பிராமணர்கள்தான் என்று மார்பு நிமிர்த்திக் காட்டும் இறுமாப்பைத் திமிர் தண்டத்தை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆமாம். அன்று கலைஞர் வீட்டுக்கு ஓடோடிச் சென்று தேர்தல் கூட்டணிக்காகப் பேரம் பேசியபோது கலைஞர் ஆரியம்-திராவிடம் பேசக்கூடியவர் என்பது திருவாளர் சோ ராமசாமிக்குத் தெரியவில்லையோ!

----------------- மின்சாரம் அவர்கள் 21-4-2012 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

ஜாதியை ஒழிக்க ஜாதி விவரம் தேவை!

ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு அலுவலர்கள் வரும் பொழுது ஜாதிபற்றிய விவரங்களை (உள் ஜாதி உட்பட) சொல்லத் தயங்க வேண்டாம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இந்தியா முழுமையும் ஜாதிவாரி கணக்கெடுப்புத் தொடங்கப்பட்டு விட்டது. மக்கள் தொகைக் கணக்கெடுப் போடு இந்தத் தகவலும் சேகரிக்கப்பட வேண்டும் என்று சமூக நீதியாளர்கள் தரப்பிலிருந்து குரல் ஓங்கியது.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ஜாதி ஒழிய வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள் ஜாதிவாரி கணக்கெடுப்புத் தேவை என்று ஓங்கி ஒலித்தனர்.

ஜாதி இருக்க வேண்டும் - அதனை ஒழிக்கவே கூடாது என்று காலம் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கும் உயர் ஜாதி ஆதிக்க சக்திகளோ இத்தகைய கணக்கெடுப்புக் கூடாது என்று வரிந்து கட்டினர்.

இதிலிருந்து இதற்குள் புதைந்திருக்கும் மர்மம் என்ன என்பது சிந்திக்கத்தக்கதாகும்.

ஜாதி ஒழிக்கப்படவில்லையே!

ஜாதி ஒன்றும் சட்டப்படி ஒழிக்கப்படவில்லை. மத ரீதியாகவும், சாஸ்திரங்கள் அடிப்படையிலும் ஜாதி, இந்து சமூக அமைப்பில் கெட்டியாக பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டமும் தீண்டாமை ஒழிப்புப் பற்றிப் பேசுகிறதே தவிர, அதற்கு மூல வித்தான ஜாதி ஒழிக என்று எந்த இடத்திலும் கூறப்படவில்லை.

இன்னும் சொல்லப்போனால் அரசு பதிவேடுகளில் சூத்திரன் என்று இருந்தது; அதனை ஒழிப்பதற்குப் பாடுபட்டது - குரல் கொடுத்தது திராவிடர் இயக்கமே.

1901ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கூட சூத்திரர்கள் என்ற விவரம் தரப்பட்டு இருந்தது.

1927இல் சென்னையில் கூடிய பார்ப்பனர் அல்லாத இளைஞர்களின் முதல் மாநில மாநாட்டில் ஜே.எஸ். கண்ணப்பர், அரசு பதிவேடுகளிலிருந்து சூத்திரன் என்ற சொல் நீக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை முன் வைத்தார்.

சூத்திரன் என்றால் விபச்சாரி மகன் என்பது உட்பட ஏழு பொருள்களைக் கொண்டது (மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415).
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பகுதியை எரிக்கும் போராட்டத்தை அறிவித்து நடத்தினார் தந்தை பெரியார் (26.11.1957).
ஆனாலும் இன்றளவுக்கும் ஜாதி பாதுகாப்போடு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இருக்கத்தான் செய் கிறது.

அரசுக்குத் தேவை புள்ளி விவரங்கள்....

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் ஜாதி (Caste) என்ற சொல் இடம் பெற்றுள்ளது! இந்த ஜாதி முறையால்தான் பெரும்பாலான மக்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. சமூகத்தில் பிறவியின் அடிப்படையிலேயே ஏற்றத் தாழ்வு - நிலை நிறுத்தப்பட்டது. பிறப்பில் என்ன ஜாதியோ - அதுதான் சுடுகாடுவரை என்ற நிலை இருந்து வருகிறது.

இந்த நிலையில் ஜாதியின் காரணமாக பல வகைகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் உரிமை மறுக்கப்பட்டவர்களைப் பற்றிய புள்ளி விவரங்களை சேகரிப்பதன் மூலம் அத்தகையவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளை அளிக்க முடியும், அரசின் நல்வாழ்வுத் திட்டங்கள் இத்தகையவர்களுக்கும் போய்ச் சேர சரியான புள்ளி விவரம் தேவைப்படுகிறது.

நீதிமன்றங்களில் இடஒதுக்கீடு பற்றிய வழக்குகள் வரும்போது நீதிமன்றம் கேட்கும் முதல் கேள்வி - எந்தப் புள்ளி விவரத்தின் அடிப்படையில் (Criteria) இத்தனை சதவிகிதம் என்ற வினாவைத்தான் முன் வைக்கின்றது. அதற்காகவும் இந்தப் புள்ளி விவரம் தேவைப்படுகிறது.

ஓர் அரசுக்கு குடிமக்களின் சமூக, கல்வி, பொருளா தாரம், வேலை வாய்ப்பு நிலை எந்த அளவில் இருக்கிறது என்பதற்கு அடிப்படைப் புள்ளி விவரங்கள் அவசியம் தேவைப்படுகின்றன.

ஜாதியை ஒழிக்க ஜாதி விவரம் தேவை!

ஜாதி ஒழிக்கப்பட வேண்டுமானால் கல்வி, வேலை வாய்ப்புகளில் ஒடுக்கப்பட்ட - கீழ்ஜாதியாக ஆக்கப்பட்ட மக்கள் நூற்றுக்கு நூறு படித்தாக வேண்டும்; (சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் இடஒதுக்கீடு என்று அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பது மிக முக்கியம்).

அதற்கு ஜாதி பற்றிய புள்ளி விவரம் தேவைப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால் ஜாதியை ஒழிக்க - இந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்புத் தேவை. கல்வி வளர்ந்தால்தான் ஜாதி ஒழிய முடியும். மேலெழுந்தவாரியாகப் பார்த்து ஜாதி விவரத்தை சொல்லத் தயங்க வேண்டாம் என்று ஜாதி ஒழிப்பு இயக்கம் என்ற முறையில் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜாதி வாரிக் கணக்கெடுப்பில் ஒரு முக்கிய அம்சம் விடுபட்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஜாதியில் உள் ஜாதி பற்றிய விவரம் கேட்கப்படுவதில்லை என்பதுதான் அந்தக் குற்றச் சாற்று. ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்று தொடங்கப்பட்ட பிறகு - அதில் ஏன் இந்த விடுபடல்?

உள் ஜாதி

முதலியார் என்றால் அதில் இடஒதுக்கீடு பெறாத சைவ முதலியார்களும் உண்டு. இடஒதுக்கீடு பெறும் செங்குந்த முதலியார்களும் உண்டு. இதில் வெறும் முதலியார் என்றால் புள்ளி விவரம் சேகரிப்பதன் நோக்கமே அடிபட்டுப் போகிறதே! அதில் எது B.C யோ அதைக் குறிப்பிட்டுப் பதிவு செய்ய வற்புறுத்திடல் வேண்டும்.

தாழ்த்தப்பட்டவர்களில் அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு தமிழ்நாட்டில் உள்ளது. இந்த நிலையில் பொதுவாக தாழ்த்தப்பட்டவர் என்று சொன்னால் அது எப்படி சரியாகும்?

இத்தகைய தவறுகள் உடனடியாகத் திருத்தப்பட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!

இந்தியாவில் திராவிடர் கழகம் உள்ளிட்ட சமூகநீதி சிந்தனையாளர்களின் அழுத்தமான வலியுறுத்தலின் காரணமாகத்தான் இந்த ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு சம்மதித்தது என்பதையும் இந்நேரத்தில் நினைவூட்டுகிறோம்.

இந்த வாய்ப்பை வீணாக்கி, விழலுக்கிறைத்த நீராக்கி விடக் கூடாது!

------------------------------------கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் "விடுதலை” 24-4-2012

29.4.12

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் செய்த பாவம் என்ன?

பாவேந்தர் செய்த பாவம் என்ன ?

மு. பழனி இராகுலதாசன்
ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர்

பெங்குயின் வெளியீட்டகம் உலகளாவிய அளவிலும், இந்திய அளவிலும் மிக முக்கியப் பங்களிப்பைச் செய்து வருகிறது. அறிவார்ந்த வாசகர் உலகம் அதற்கு உரிய நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது. 2009 என்று ஆண்டு குறிப்பிட்டு பெங்குயின் வைக்கிங் வெளியீட்டகம் The Rapids of a Great River என்ற தலைப்பில் ஒரு தொகுப்பு நூல் ஆங்கிலத்தில் வெளி யிட்டுள்ளது. இந்தத் தலைப்பை ஒரு மகாநதியின் பிரவாகம் என்று நாம் தமிழில் ஆக்கிக் கொள்ளலாம்.

இந்நூலில் சங்க இலக்கியக் கவிதை கள் தொடங்கி 1974 ல் பிறந்தவரான கவிஞர் குட்டி ரேவதியின் கவிதைகள் வரை தமிழ்க் கவிதைகள் தொகுக்கப் பட்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்க் கப்பட்டுள்ளன.

தொகுப்பு நூல் என்பது (Anthology) முழுநூல் அல்ல. இது எல்லாருக்கும் தெரிந்த விசயமே; எல்லாரும் உடன் படுகிற விசயமும் ஆகும். தொகுப்பாசிரியர் எல்லாரும் இது பற்றிக் கருத்து தெரிவித்துப் பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வார்கள். இது மாதிரியான குறிப்பு ஏறத்தாழ தொகுப்பு நூல்கள் எல்லாவற்றிலும் இடம் பெறத்தான் செய்கின்றன.

இந்த நூலின் தொகுப்பாசிரியர்கள் இதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது. எனவே, எல்லாரும் குறிப்பிடுவது போலவே இவர்களும், ‘An anthology such as this, however representative it needs to be must, in the end, The subjective. We are aware that readers familiar with Tamil poetry may find a few of their favourite poems missing’ என்று பாதுகாப்பாக, எச்சரிக்கையாகக் குறிப்பிடுகிறார்கள்.

ஒரு தொகுப்பு நூல் என்பது முழுமையானதாக இருக்க முடியாது என்பதும், சில கவிதைகள் அல்லது சில கவிஞர்கள் விடுபட்டுப் போவது என் பதும் நமக்கும் புரியத்தான் செய்கிறது.

இந்தத் தொகுப்பு நூலின் அடிப் படையான நோக்கம் குறித்து தொகுப் பாளர்கள் தெளிவுபடுத்தும் இடத்தில், தமிழ்க் கவிதை என்பது மிக நீண்ட வளமான மரபை உடையது. இதில் பழைமையும் உண்டு; புதுமையும் உண்டு. பழைமைக்கும் புதுமைக்குமான தொடர்பை, இணைப்பைத் தெளிவு படுத்தும் நோக்கத்துடனேதான் நாங்கள் இந்தத் தொகுப்பைத் தொகுத்தளித்திருக்கிறோம் என்று குறிப்பிட் டிருக்கிறார்கள்.

தொகுப்பாளர்களின் ஆர்வத்தை, உழைப்பை, நோக்கத்தைப் பாராட்டத் தான் வேண்டும். இது ஓர் அரிய முயற்சி என்பதில் எந்தவித அய்யப்பாடும் கொள்வதற்கில்லை.

நூலின் முதலாவது பாகத்தில் கவிதைகள் சங்க இலக்கியத்தில் தொடங்கி கோபால கிருஷ்ண பாரதி யுடன் முடிகிறது. நூலின் இரண்டாம் அத்தியாயம் மகாகவி பாரதியில் தொடங்கி, குட்டி ரேவதியுடன் நிறைவு பெறுகிறது.

நாம் கேட்கும் கேள்வி இவ்வளவு பெரிய, அரிய முயற்சியில், நல்ல முயற்சியில் புரட்சிக் கவிஞர் பாரதி தாசனுக்கு இடம் இல்லையே, ஏன்? என்பதுதான். பாவேந்தர் ஏன் சேர்க் கப்படவில்லை? காரணம் என்னவாக இருக்கக்கூடும்? என்று எப்படி யோசித்துப் பார்த்தாலும் சரியான காரணம் நமக்குப் புலப்படவில்லை.

முதலாம் அத்தியாயத்தை கோபாலகிருஷ்ண பாரதியுடன் நிறைவு செய்து கொண்டது சரியே; அதே போல, இரண்டாம் அத்தியாயத்தை மகாகவி பாரதியுடன் தொடங்கிக் கொண்டதும் சரியே. இரண்டாவது அத்தியாயத்தில், பாரதியிலிருந்து குட்டி ரேவதி வரை புதுமைத் தமிழ் பிரவாகம் எடுத்து வருகிறது என்று கணித்து, தொகுப்பு முயற்சியில் இறங்கியதும் சரியே!

ஆனால், புதுமைத் தமிழ் என்று வரும்போது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இடம் பெற்றிருக்க வேண்டும்தானே! பாவேந்தரின் அரசியலை விட்டு விடுவோம். அவரது ஆரிய எதிர்ப்பு, திராவிட ஆதரவு என்ற நிலைப்பாடுகளையும் விட்டுவிடுவோம். அரசியல், இனப் பாகுபாடுகளை யெல்லாம் தாண்டி, விலக்கிச் சிந்திக்கும்போது பாவேந்தரின் குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, அமைதி (நாடகம்) ஆகிய மூன்றும் ஒருபுதிய அணுகுமுறைப் படைப்புகள் என்பதில் என்ன சந்தேகம்? இயற்கையைப் பாடிய ஏந்தல் என்றும் உலகம் முழுவதிலும் பாராட் டப்படுகிறது ஆங்கிலக் கவிஞர் வொர்ட்ஸ் வொர்த் என்பவரையும் தாண்டி, ஏன் வென்று நிற்கிற கவிஞர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். மகாகவி பாரதியாரைத் தேர்வு செய்துவிட்டு,, அடுத்து, தொகுப்பாளர்கள், பாரதி தாசன், கவிமணி, நாமக்கல்லார் எல் லாரையும் விட்டு விட்டு, ஒரே பாய்ச் சலாக நா. பிச்சமூர்த்திக்கு வந்து விடுகிறார்கள்.

பாரதிக்கு அடுத்ததாக பிச்ச மூர்த்தியைத் தேர்ந்து எடுப்பதற்குக் காரணமாக தொகுப்பாளர்கள் சொல் லும் போது He broke free of traditional forms while introducing new themes என்று குறிப்பிட்டுக் கொள் கிறார்கள். பிச்சமூர்த்தி தொடங்கி குட்டி ரேவதி வரையிலான புதுக் கவிதைக்காரர்கள் செய்துள்ள யாப்புப் புரட்சி ஒரு வகையான ஆசிரிய யாப்பு மாற்று வடிவமே என்ற கருத்தை தொகுப்பாசிரியர்கள் அறியமாட்டார் கள் போலும்.

கம்பன் நமக்களித்த விருத்தப்பா வகைகளையும், பாவேந்தர் பாண்டியன் பரிசு நூல் முலமும், குடும்ப விளக்கு மூலமும், அழகின் சிரிப்பு மூலமும் அளித்துள்ள விருத்தப்பா வகைகளை யும் ஒப்பிட்டுப் பார்த்தால்தான், பாவேந்தர் எத்தனை எத்தனை விருத் தப்பா புதுமைகளையும் எளிமை களையும் படைத்துத் தந்துள்ளார் என்று தெரிய வரும்!

மகாகவி பாரதியை எடுத்துத் தொகுத்துவிட்டு, அடுத்து, ஒரே பாய்ச்சலாக பிச்சமூர்த்திக்கு வருகி றோமே. இடையில் சுப்புரத்தினம் என்ற பெயரை விடுத்து, பாரதி தாசன் என்ற பெயர் புனைந்து, தமிழ்க் கவிதை உலகில் ஈடும் இணையும் சொல்லிக் காட்டமுடியாத அளவில் அரசோச்சினாரே ஒருவர், அவரை விட்டுவிட்டு வருகிறோமே என்ற சிந்தனையே, இந்தத் தொகுப்பாளர்களுக்குப் பெயரளவில் கூட இல்லாமல் போனது தான் வெகு ஆச்சரியம்!

மகாகவி பாரதியின் மறு அச்சுத் தான். மகாகவியை எடுத்துக் கொண் டால், அது பாரதிதாசனையும் எடுத்துக் கொண்டது மாதிரிதானே என்றாவது சமத்காரமாக முன்னுரையிலாவது விவாதித்திருக்கலாம்.

மகாகவி பாரதி பற்றிய வாழ்க்கைக் குறிப்பை, நூலின் பிற்பகுதியில் எழுதும்போது, மகாகவி பாரதி தனது பாண்டிச்சேரி வாசத்தின் போது அவர் அரவிந்தரைச் சந்தித்தார். வ.வே.சு. அய்யரைச் சந்தித்தார் என்றெல்லாம் எழுதுகிறார்கள். ஆனால் பாரதியாரும், பாரதிதாசனும் புதுச்சேரியில் சந்தித்துக் கொண்டார்கள் என்று எழுதவில்லை. இந்த இடத்தில் கூட ஒரு சிறு குறிப்பாகவாவது தொகுப்பாளர்கள் புரட்சிக்கவிஞரின் பெயரைக் குறிப்பிட்டிருக்கலாம்.

நூலின் முன்னுரையிலும் பாவேந்தரின் பெயர் இல்லை. பாரதியார் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளுக்கு இடையிலும் இல்லை; கவிதைகள் வரிசையிலும் இல்லை.

ஆம், நூலின் எந்த இடத்திலும் பாவேந்தர் குறிப்பிடப்படவில்லை. ஆமாம், அந்த அளவுக்கு புரட்சிக் கவிஞர் செய்த பாவம் என்ன?

- ---------------- நன்றி: ஜனசக்தி 11-2-2010

குறிப்பு:- இன்று புரட்சிக்கவிஞர் அவர்களின் பிறந்த நாள் நினைவாக இக்கட்டுரை பதிவு செய்யப்படுகிறது------ தமிழ் ஓவியா

தோழர் இரவிக்குமாருக்கு..... பதிலடி

தோழர் இரவிக்குமாருக்கு.....


திராவிட இயக்கத்தின் மீது அவதூறுகளை அள்ளி வீசிட பார்ப்பனர்கள் மடி கட்டி நிற்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

வெளிநாடுகளில் இருந்து கொண்டே பார்ப்பனர்கள் திராவிடர் இயக்கத்தின் மீதும் அதன் ஒப்பற்ற தலைவர்கள் மீதும், ஆத்திர நெருப்பை அள்ளிக் கொட்டுகின்றனர்.

அதில் ஒன்றுதான் உடையும் இந்தியா? ஆரிய திராவிடப் புரட்டும், அந்நிய தலையீடும் என்ற அதற்குப் பதிலடி கொடுத்து உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா? என்ற அரிய வரலாற்றுக் கருவூலத்தைக் கொடுத் துள்ளார் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

இந்தப் பார்ப்பனர்களோடு சேர்ந்து கொண்டு, கூட்டத்தில் கோவிந்தா போடும் ஒரு கூட்டம் கிளம்பி இருக் கிறது. அதுதான் தமிழ்த் தேசி யவாதிகள் எனப்படுவோர். பார்ப்பனர்களின் தொடையில் உட்கார்ந்து கொண்டு எரியீட்டி பாய்ச்சிக் கொண்டு திரிகிறார்கள்! பார்ப்பன ஊடகங்கள் நன்கு காற்றடைத்து வானில் பறக்க விடுகின்றன - அத்தகையவர்களை.

தைமுதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதை ரத்து செய்து - ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பின் அடிப்படையில் - கிருஷ்ணனுக்கும் நாரதனுக்கும் பிறந்த அறுபது பிள்ளைகள்தான் தமிழ் வருடங்கள் (ஒரு ஆண்டுக்குக் கூட தமிழ்ப் பெயர் கிடையாது.) என்ற அடிப்படையில் சித்திரை முதல் தேதிதான் தமிழ் வருஷப் பிறப்பு என்று பார்ப்பன அம்மையார் முதல்-அமைச்சராக இருந்து சட்டம் இயற்றிய இந்தக் கால கட்டத்தில், அய்ம்பொறிகளையும் அடக்கி ஆமையாக ஒடுங்கிய போதே இந்தத் தமிழ்த் தேசியவாதிகளின் ஆரிய முகவரி அவிழ்ந்து தொங்கி விட்டதே!

இப்பொழுது இன்னொரு பக்கத்தி லிருந்தும் இட்டுக்கட்டும் வேலை.

கொஞ்ச நாளில் சொந்தக் காரணங்களுக்காகவும் அரசியல் போக்கிற்காகவும் பதுங்கி இருந்தது போல காட்டிக் கொண்ட தோழர் ரவிக்குமார் மறுபடியும் தன் முகத்தைக் காட்டத் தொடங்கிவிட்டார்.

சண்டே இந்தியன் (20.-4.-2012) இதழில் திராவிட இயக்கத்தின் மீதும் அதன் ஒப்பற்ற தோற்றுநர் வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் மீதும் அபாண்டமான அவதூறுகளை அள்ளி வீசியுள்ளார். இது அவருக்குத் தேவையிலலாத வீண் வேலை.

பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கையில் தாழ்த்தப்பட்டோர் குறித்து தியாகராயர் ஒரு வார்த்தையும் பேசவில்லை, பிராமணரல்லாதார் என்பதில் தாழ்த்தப்பட்டோர் உள்ளடக்கப்பட்டிருந்தனர் என நம்புவதற்கு ஒரு ஆதாரமும் அந்தப் பிரகடனத்தில் இல்லை என்று அடித்துக் கூறி, திராவிடர் இயக்கத்திற்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் எந்த விதப் பாத்தியமும் இல்லை. அந்த இயக்கத்தால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எந்த ஒரு பயனும் கிடையாது என்று மங்களம் பாடி முடித்துவிட்டார்.

தியாகராயரின் அந்த அறிக்கையைப் பற்றி இந்து ஏடு என்ன தலையங்கம் தீட்டியிருக்கிறது தெரியுமா? தேசிய நலனுக்கு ஆபத்து (Perilous to the National Cause) என்று எழுதியது! பார்ப்பானுக்கு ஆபத்து என்றால் - அது தேசிய நலனுக்கு ஆபத்துதானே! - பார்ப்பனருக்குத் தெரிந்தது நம் மக்களுக்குத் தெரிய வில்லையே. என்ன செய்வது!

ஜாதி ஒழிப்பு சிந்தனை திராவிட இயக்கத்தவரிடம் இல்லை என்றெல்லாம் மனம் போனபோக்கில் எழுதித் தள்ளியுள்ளார்.

வரலாற்றில் எல்லா வகையான ஆதிக்கத்தையும் நிலைநிறுத்தி - இந்நாட்டின் பெரும்பான்மையான மக்களை சூத்திரர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும் இழித்துத் தள்ளி, உரிமைகளற்ற வெறும் கூடாக ஆக்கிய ஆரியத்தை எதிர்த்து போர்கள் பல இதற்கு முன் நடந் திருந்தாலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் தோற்றுவிக் கப்பட்ட திராவிடர் இயக்கம் மிகப் பெரிய எழுச்சியையும், மாற்றத்தையும் மலர்வித்தது என்பதை மனச்சாட்சி உள்ளவர்களும் வரலாற்றைக் கோணலாகப் பார்க்காமல் நேர்மையாகப் பார்ப்பவர்களும் அறிவார்கள்.

பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து பார்ப்பனர் அல்லாதாரை ஒன்று திரட்டும் நோக்குடைய ஓர் அறிக்கையில் அனைத்தும் தாம் நினைப்பதெல்லாம் இடம் பிடித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியானதுதானா?

அந்த இயக்கத்தின் பிற்காலச் செயல்பாடுகளில் செறிந்திருந்த நடவடிக்கைகளை நாணயமான கண் கொண்டு பார்த்து எடை போட வேண்டாமா?
1917 இல் சென்னையில் நடைபெற்ற மாகாண முதல் ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டு உரையில் வெள்ளுடை வேந்தர் என்ன பேசினார்?

பிறப்பினால் உயர்வு, தாழ்வு கற்பிப்பது திராவிட மரபன்று; திருவள்ளுவர் முதலிய திராவிடத் தலைவர்கள் பிரம்மனின் முகத்துதித்தோம் யாம் என்று பெருமை பேசினாரில்லை. பிறப்பினால் ஏற்றத் தாழ்வு கற்பித்தோரும், நால்வகைச் சாதி இந்நாட்டில் நாட்டினோரும் ஆரியரே! அவ்வருணாசிரமக் கோட்டையை இடித்தெறிய 2400 ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய புத்தர் முயன்றார். முடியவில்லை. பின்னர் வந்த பற்பல சீர்திருத்தவாதிகள் முயன்றனர்; தோற்றனர். இராமானுஜரும் புரோகிதர் கொடுமைகளைக் களைந்தெறிய ஒல்லும் வழி முயன்றார். தோல்வியே கண்டார். பார்ப்பனர் பிடி மேன்மேலும் அழுத்தமுற்றே வந்தது. தீண்டாமை - அண்டாமை - பாராமை முதலிய சமுதாயச் சீர்கேடுகளும் படிப்படியே பரவிப் பெருகலாயின. அத்தகைய பலம் பொருந்திய சாதிக் கோட்டையைத் தகர்த்தெறிய இதுவே தக்க காலம்; இதுவே தக்க வாய்ப்பு- _ இப்படிப் பேசியவர்தான் வெள் ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர்.

ஜாதி பற்றிய சிந்தனை அவருக்கில்லை என்று எழுதுவது அசாத்திய கற்பிதமே!

எத்தனையோ எடுத்துக் காட்டுகளைச் சொல்ல முடியும்.

கோயில்களில் எல்லாச் சாதியினரும் குருக்களாக இருக்க வேண்டும். அதற்கான தகுதிகளைப் பிராமணர் அல்லாதார் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆகமப் புரோகித பாடசாலைகள் ஏற்படுத்தப்பட்டு, திராவிட பாஷையிலேயே புத்தகங் களும் எழுதிப் பயிற்றுவிக்கப் படவேண்டும் என்று தம் கருத்தைத் திராவிடனில் எழுதி மக்களிடையே சமுதாயச் சமநிலை உணர்வைத் தூண்டினார்.

வெள்ளுடை வேந்தர் தியாக ராயரின் வாழ்வும், பணியும் - முனைவர் பி.அரசு - பக்கம் 86)

பிராமணர்கள் கடவுளின் முகத்திலிருந்து தோன்றியவர்கள். மற்ற இனத்தார் பிற உறுப்புகளில் இருந்து தோன்றியவர்கள் என்று கூறப்படும் மனுநூலைக் கண்டித்துத் திராவிடர் பண்பாடு இதற்கு மாறுபட்டது என்பதை விளக்கினார். திருவள்ளுவர், அவ்வையார் போன்றோரின் கருத்துக்களை எடுத்துக் கூறி மக்கள் அனை வரும் சமம் என்ற கருத்தை வலியு றுத்தினார்.

(வெள்ளுடை வேந்தர் தியாக ராயரின் வாழ்வும், பணியும் - முனைவர் பி.அரசு - பக்கம் 85)

இதற்கு மேலும் தியாகராயரின் சமூகச் சிந்தனைக்கும், ஜாதி பற்றிய அவரின் கோட்பாட்டுக்கும் எடுத்துக் காட்டுகள் தேவைப்படாது.

ஒரு வேடிக்கை. ஜாதி ஒழிப்புச் சிந்தனையாளர்களை ஜாதிச் சிறையில்அடைத்து அவர்களைச் சிறுமைப்படுத்துவதனால், ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட நம் சமுதாய மக்கள் எந்தப் பலனைத் தட்டிப் பறிக்கப் போகிறார்களாம்? வேறு எதைத்தான் சாதிக்கப்போகிறார்கள்? எந்தப் பார்ப்பனராவது தன் சொந்த இனத்தின் தலைவர்களைக் காட்டிக் கொடுக்கிறார்களா? கொலைகாரரையே ஜெகத்குரு என்றுதானே தூக்கிக் கொண்டு ஆடுகிறார்கள்?

நண்பர்கள் யார்? பகைவர்கள் யார்? என்பதை அடையாளம் காண்பதில் கூட நம் தோழர்களுக்குத் தடுமாற்றம் இருக்கலாமா?
இன்னும் எத்தனை பெரியாரும் அம்பேத்கரும் தோன்ற வேண்டுமோ தெரியவில்லையே!

ஓர் அபாண்டம்

நீதிக்கட்சிக்குத் தலைமை வகித்த பி.தியாகராஜ செட்டி மேலும் ஒரு துரோகத்தையும் செய்தார். 1821 செப்டம்பரில் கடிதமொன்றை பிரிட் டிஷ் ஆட்சியாளருக்கு எழுதினார்! ஆதி திராவிடத் தொழிலாளர்களை நகரை விட்டு அப்புறப்படுத்தி விடலாம் என்று பிரிட்டிஷ் அரசுக்கு அந்தக் கடிதத்தில் தியாகராஜ செட்டி ஆலோசனை தெரிவித்திருந்தார் என்று தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் முண்டமாக எழுதியுள்ளார். எம்.சி. ராஜாவை சாட்சி போட்டு எழுதியுள்ளார்.

எப்பேர்ப்பட்ட மனிதர் இவருக்குச் சாட்சியாகக் கிடைத்துள்ளார்? அண்ணல் அம்பேத்கரின் முதுகில் குத்திய புண்ணியவான்தான் இவருக் குக் கிடைத்த அக்மார்க் சாட்சியோ!

இன்னும் சொல்லப்போனால் நீதிக்கட்சிதான் முதன் முதலாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சர்பதவியை அளித்து மகிழ்ந்தது. அந்த வாய்ப்பினைப் பெற்றவர்தான் இந்த மயிலை சின்னத்தம்பி ராஜா (எம்.சி.ராஜா).

இவரும், ஜான் ரத்தினமும் சேர்ந்து ஏற்பாடு செய்த கூட்டம்தான் பிரசித்தி பெற்ற சென்னை சேத்துப்பட்டு ஸ்பர்டாங் சாலை பொதுக்கூட்டம் (7-.10.-1917). பிட்டி தியாகராயரும், டாக்டர் டி.எம்.நாயரும் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் அது. நாயரின் புகழ் பெற்ற உரையாக அது என்றும் பேசப்படும்.

டாக்டர் நாயர் தொடங்கும் போதே எப்படிப் பேசினார்? என் மாபெரும் - முதுபெரும் தலைவர் பிட்டி தியாகராயச் செட்டி யார் வள்ளலார் அவர்களே! என் ஆதி திராவிடர் தோழர்களே!, தோழி யர்களே! உங்கள் அனைவருக்கும், உங்கள் மாலை மரியாதைகளுக்கும், உங்கள் உற்சாக ஆரவாரங்களுக்கும் என் தாழ்மையான நன்றி கலந்த வணக்கம்.

உங்களை ஆதி திராவிடர்களென பெருமையோடு விளித்தேன். காரணம் இந்நாட்டில் இரு இனங்களுண்டு. ஒன்று இந்நாட்டின் சொந்தக்காரர் களான நம் திராவிடர் இனம். மற்றொன்று நாம் அசட்டையாய்த் தூங்கிக் கொண்டிருக்கும்போது வீட்டுக்குள் நுழைந்துவிடும் திருடன் போன்ற ஆரியர் இனம் என்றெல்லாம் பேசினார்.

நான்காம் ஜாதியான சூத்திரர்களும், அவர்ணஸ்தர்களான பஞ்சமர்களும் தான் இந்நாட்டின் கறுப்பர்களான திராவிடர்கள் என்றார்.

1917 இல் பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியோர் கலந்து கொண்டு பேசிய சென்னை ஸ்பர்டாங் சாலையில் கூடியிருந்த பஞ்சமர்களைப் (ஆதி திராவிடர்களை) பஞ்சைகள் என்றும், இழிசினர் என்றும், வீணர்கள் என்றும் இந்து ஏடு எழுதியுள்ளதைக் கண்டித்து நான்பிராமின் ஏடு எழுதியது (14-.10.-1917).

மாநகராட்சியின் ஆளுகைக் குட்பட்ட முறையில் பல பள்ளிகள் தொடங்கப்பெற வேண்டுமென்றும், அவற்றில் இலவசக் கல்வி அளிக்க வேண்டுமென்றும் தியாகராயர் பலமுறை எடுத்துக் கூறி வந்தார். அதன் விளைவாக மாதிரிப் பள்ளிகள் பல ஏற்படுத்தப்பட்டன. 1915_-16 ஆம் ஆண்டுகளில் பல பள்ளிகள் சிறப்பாகத் தாழ்த்தப்பட்ட (பஞ்சமர்) மக்களுக்காக நடத்தப்பட்டன. அவற்றில் அவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்கப்பட்டது. மாதிரிப் பள்ளிகளில் பாடத்திட்டம் வகுத்தல், பள்ளிகளைச் சீர்படுத்துதல் ஆகிய வற்றைக் கவனிக்க அமைக்கப் பட்ட குழுவில் தியாகராயர் உறுப்பினராக இருந்து அரும் தொண்டாற்றினார்.

முதன் முதலாக பள்ளிகளில் இலவச உணவை அறிமுகப் படுத்தியது நீதிக்கட்சித் தலைவரான தியாகராயர் மாநகராட்சித் தலைவராக இருந்தபோதுதானே!

சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் அறிமுகப் படுத்தப்பட்டு, பிறகு வேறு சில இடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

இந்த உணவுத் திட்டத்தால் பலன் பெற்றவர்கள் பெரும்பாலும் யாராக இருக்க முடியும்? இந்தத் திட்டத்தால் மாணவர்கள் வருகை 3075 லிருந்து 3705 ஆக உயர்ந்ததே!

பஞ்சமர் என்று அந்தக் காலக் கட்டத்தில் அழைக்கப்பட்ட ஆதி திராவிடர்களின் பிள்ளைகளை சென்னை மாநகராட்சி தன் மாதிரிப் பள்ளிகளில் சேர்க்க முனைந்தது. இதைக் கண்டித்தும், தாழ்த்தப் பட்டவர் குழந்தைகளுக்குத் தனிப் பள்ளிக் கூடம் அமைக்கப்பட வேண்டும் என்றும் இந்து நேசன் என்ற தேசிய ஏடு எழுதியது (18-.1.-1918)

உண்மைகள் இவ்வாறு இருக்க வாய் புளித்ததோ, மாங்காய் புளித் ததோ என்று சகட்டு மேனிக்கு எழுத லாமா? நிதானம் தேவையில்லையா?

------------------------- -சந்திப்போம் மீண்டும். கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் 28-4-2012 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

24.4.12

ராஜபக்சேவின் வாலை நிமிர்த்த முடியாது


இலங்கை அதிபர் ராஜபக்சேவைச் சந்திக்கவும், இலங்கையில் ஈழத் தமிழர்களின் நிலைப்பாட்டை நேரில் அறிந்து கொள்ளவும் இந்தியாவிலிருந்து குழுக்கள் சென்று வந்திருக்கின்றன - அதிகாரிகள் மட்டத்திலும் அத்தகைய குழுக்கள் சென்று வந்ததுண்டு.

இவையெல்லாம் விளக்கெண்ணெய்க்குக் கேடாக முடிந்தவையே தவிர, பிள்ளை பிழைத்த பாடில்லை. சுருக்கமாகச் சொல்லப் போனால் இன வெறியில் இட்லரைத் தூக்கிச் சாப்பிட்ட வராகத்தான் ராஜபக்சே இருந்து வருகிறார்.

தமிழன் என்று ஒருவன் இருந்தால்தானே - ஓர் இனம் இருந்தால்தானே - உரிமைக்காகக் குரல் கொடுப்பார்கள் - அந்த இனத்தையே பூண்டோடு அழித்து விட்டால் அப்பொழுது பிரச்சினையே ஏற்படாது அல்லவா! அந்தத் திட்டத்தோடு அமைந்ததுதான் ராஜபக்சேயின் ஒவ்வொரு செயல்பாடும். ஊரையும், உலகத் தையும் ஏமாற்ற அவ்வப்பொழுது கபட நாடகம் ஆடுவார் - அவ்வளவுதான்.

ஜெனிவா - மனித உரிமைக் குழுவின் தீர்மானத்துக்குப் பிறகுதான் ராஜபக்சேவின் பாச்சா பலிக்கவில்லை.

உலக மக்கள் ராஜபக்சேயின் உண்மை முகத்தை அதிகார பூர்வமாகத் தெரிந்து கொண்டு விட்டனார்.

பிரிட்டன் தொலைக்காட்சியின் (பிரிவு - 4) வெளிப்படுத்திய - இன அழிப்புக் கொடூரக் காட்சிகள் உலக மக்களின் மனச்சான்றினைத் தட்டி எழுப்பிவிட்டன.

இன்றைக்கு உலகம் முழுவதும் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை (Genocide) ஓரளவு தெரிந்துகொண்டு இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் வெளிநாடுகள்தான் - அதிலும் பிரிட்டனும், அமெரிக்காவும்தான்.

இந்தியாவின் பிரதமராக இருந்த திருமதி. இந்திராகாந்தி அவர்கள் இலங்கையில் நடப்பது இனப்படுகொலையே என்று விளித்தார். அதற்குப் பிறகு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவர்கள். இந்நிலையிலிருந்து தடம் புரண்டு ஓரினமே முற்றிலும் அழிக்கப்படுவதற்குத் துணை போய் விட்டனர். இதன் மூலம் மனித உரிமைக்காகக் குரல் கொடுக்கும் உன்னத நாடு இந்தியா என் னும் புகழைக் குப்புறப் புரட்டித் தள்ளி விட்டனர்.

உலகை உய்விக்கும் உன்னதக் கொள்கை என்று - முற்போக்குச் சிந்தனையுடையவர்கள் மதித்து வந்த - கம்யூனிஸ்டு நாடுகள் தடம் புரண்டு, அந்தத் தத்துவத்தைக் குழி தோண்டிப் புதைத்து விட்டன.

திருமதி சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் ஒரு குழு இலங்கை சென்று மீண்டது, அதன் ஈரம் காய்வதற்கு முன்னதாகவே - தமிழர் பகுதிகளி லிருந்து இராணுவத்தை வெளியேற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று மட்டையடியாகக் கூறிவிட்டார் ராஜபக்சே!

ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தைக் கிழித்துக் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்து விட்டார்; வடக்கு- கிழக்கு மாகாண இணைப்புப் பற்றி அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டு இருந்தது.

அதனை நீதிமன்றம் வாயிலாக செல்லாது என்று ஆக்கிக் கொண்டு விட்டார்.

13ஆவது திருத்தம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு அலையாதீர்கள் என்று அடித்துச் சொல்லி விட்டார்.

இதற்குமேல் என்ன இருக்கிறது? இதற்குப் பிறகு இந்தியாவோ, அய்.நா.வோ என்ன செய்ய வேண்டும் என்பதுதான் இப்பொழுது உலக நாடுகள்முன் செங்குத்தாக எழுந்து நிற்கும் பிரச்சினை.

உலக நாடுகளுக்கே சவால்விட்டு நிற்கிறது இலங்கை சிங்கள அரசு. இப்பொழுது இது ஏதோ ஈழத் தமிழர் பிரச்சினையல்ல; அதையும் தாண்டி உலக நாடுகளைச் சவாலுக்கு இழுக்கும் மனித உரிமைப் பிரச்சினை.

அமெரிக்கா நற்பெயரைத் தட்டிக் கொண்டு போய் விட்டது. நியாயமாக அந்த இடத்தில் இந்தியா இருந்திருக்க வேண்டும்; கோட்டை விட்டு விட்டது; இனியாவது நற்புத்தி வருமா? எங்கே பார்ப்போம்!

------------------"விடுதலை” தலையங்கம் 24-4-2012

உலகப் புத்தகநாள் சிந்தனை -இவர்தாம் புரட்சிக்கவிஞர் பார்!

இன்று உலகப் புத்தக நாள் (ஏப்ரல் 23)

அது மட்டுமா? சுவைத்தேன், படித்தேன் என்று பருகிப் பரவசம் அடையும் வண்ணம் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் புதுமை இலக்கியங்களைப் படைத்து, புதியதோர் உலகு செய்த பெரியார் லட்சிய இலக்கியச் சிற்பி! புரட்சிக்கவிஞர் பிறந்தது, மறைந்தது எல்லாமே இந்த ஏப்ரலில்தான்! (பிறந்தது ஏப்ரல் 29 - 1891) மறைந்தது ஏப்ரல் 21 (1964).

நவில்தொறும் நூல் நயம் என்று வள்ளுவர் கூறுவதை நான் சுவைப்பது தந்தை பெரியார்தம் பொருள் பொதிந்த - கருத்துச் சுரங்கமான எழுத்துக் கொண்ட புத்தகங்களையும், புரட்சிக்கவிஞரின் புத்திலக்கியங்களையும்தான்!

எத்தனை முறை அக்கவிதைகளைக் கேட்டாலும் சலிப்பு வராது; மாறாக புத்துணர்வே தோன்றும். திரும்பத் திரும்ப அவர்தம் சுயமரியாதை ஊற்றுகள் பொங்கும் கவிதைகளைப் படிக்கும் போதெல்லாம், பயில்தொறும் பண்புடையார் தொடர்பைப் புதுப்பித்துக் கொண்ட பேருவகை பொங்கவே செய்யும்.

அகத்திலும் புறத்தைப்பற்றிச் சிந்திக்கும் புரட்சிப் பாவலர் அவர்!

காதல் நினைவுகள் - அகம் பற்றியவைதானே! அங்கேயும் படுக்கை அறைக்கு குடும்ப விளக்கான தலைவியையும், தலைவனையும் எப்படி அழைத்துச் சென்று, அங்கேயும் பொதுத் தொண்டுக்கான பாடத்தைச் சொல்லிக் கொடுக்கும் வகுப்பாக அல்லவா ஆக்கிவிட்டார்!

ஆம், குடிசெய்வார்க்கு பருவம் மட்டுமா இல்லை; இடமும், சூழலும் கூடத் தனியே தேவை இல்லையே!

மற்ற கவிஞர்கள் காதல் ரசத்தைப் பிழிந்து தரும் இடமாக மட்டுமே காட்டுவர் அவ்விடத்தை - ஆனால், புரட்சிக்கவிஞரோ...!

உங்கள் வியப்பை, ஆர்வத்தை வளர்த்திட விரும்பவில்லை நான், குடும்ப விளக்கு இலக்கியத்தில் இதோ ஒரு ஒளிக்கீற்று!

கட்டிலண்டை மங்கை

தொண்டையினில் ஒன்றுமே அடைக்க வில்லை;

துணைவனவன் சிறுகனைப்புக் கனைக்க லுற்றான்;

அண்டையிலே மங்கைபோய் அத்தான் என்றாள்.

அத்தானா தூங்கிடுவான்? உட்கார் என்றான். திண்தோளில் சந்தனத்தைப் பூசு கின்றாள்; சேயிழைக்கு முல்லைமலர் சூட்டு கின்றான்;

கண்டான்! கண் டாள்! உவப்பின் நடுவிலே,

ஓர் கசப்பான சேதியுண்டு கேட்பீர் என்றாள்!

பொதுத்தொண்டு செய்தோமா?

மிதிபாகற் காய்கசக்கும்; எனினும் அந்த

மேற்கசப்பின் உள்ளேயும் சுவைஇ ருக்கும்;

அதுபோலத் தானேடி! அதனாலென்ன?

அறிவிப்பாய் இளமானே என்றான் அன்பன்;

அதிகாலை தொடங்கிநாம் இரவு மட்டும்

அடுக்கடுக்காய் நமதுநலம் சேர்ப்ப தல்லால்,

இதுவரைக்கும் பொதுநலத்துக் கென்ன செய்தோம்? என்பதைநாம் நினைத்துப்பார்ப் பதுவு மில்லை.

வீட்டுத் தொண்டா நாட்டுத் தொண்டு?

இன்றைக்குக் கறிஎன்ன? செலவு யாது?

ஏகாலி வந்தானா? வேலைக் காரி

சென்றாளா? கொழுக்கட்டை செய்யலாமா?

செந்தாழை வாங்குவமா? கடைச் சரக்கை

ஒன்றுக்கு மூன்றாக விற்ப தெந்நாள்?

உன்மீதில் எனக்காசை பொய்யா? மாடு

குன்றுநிகர் குடம் நிறையக் கறப்ப துண்டா? கொடுக்கலென்ன? வாங்கலென்ன? இவைதாம்

கண்டோம்.

தன்னலத்தால் என்ன நடக்கும்?

தமிழரென்று சொல்லிக்கொள்கின்றோம் நாமும்; தமிழ்நாட்டின் முன்னேற்றம் விரும்புகின்றோம்; எமதென்று சொல்கின்றோம் நாடோ றுந்தான்; எப்போது தமிழினுக்குக் கையாலான நமதுழைப்பை ஒருகாசைச் செலவு செய்தோம்? நாமிதனை என்றேனும் வாழ்நாள் தன்னில், அமைவாகக் குந்திநினைத் தோமா? இல்லை; அனைவருமிவ் வாறிருந்தால் எது நடக்கும்?"

பெரும்படியான தொண்டு செய்துள்ளோம்

கரும்படியின் சாறுநிகர் மொழியாள் இந்தக் கனிந்தமொழி சொன்னவுடன் அவன்உ ரைப்பான்; வரும்படிவீ தப்படிநான் தரும்ப டிக்கு வாக்களித்த படிகணக்கர் திங்கள் தோறும் கரம்படி வீதித்தமிழர் கழகத் தார்கள் கடைப்படியை மிதித்தவுடன் எண்ணி வைப்பார் பெரும்படியாய்ச் செய்ததுண்டு; படிக்க ணக்கைப் பேசிவிட்டாய் கண்டபடி என்று சொல்ல.
தமிழ் படிக்க வேண்டும் எல்லாரும்

அப்படியா! அறியாத படியால் சொன்னேன், அந்தமிழர் படிப்படியாய் முன்னேற் றத்தை எப்படியா யினும்பெற்று விட்டால் மக்கள் இப்படியே கீழ்ப்படியில் இரார்க ளன்றோ? மெய்ப்படிநம் மறிஞரின் சொற்படிந டந்தால், மேற்படியார் செப்படி வித்தை பறக்கும். முற்படில் ஆகாததுண்டா? எப்ப டிக்கும் முதற்படியாய்த் தமிழ்படிக்க வேண்டும் என்றாள்.


படிக்க படிக்க எவ்வளவு சுவை பார்த்தீர்களா?

புரட்சிக்கவிஞரின் கருத்தாழம், எதுகை, மோனைகள் நிறைந்த இலக்கியம் இவை போன்று ஏராளம்! ஏராளம்!!
நூலைப் படி, நூலைப்படி என்றவரும் அவரே!

உலகப் புத்தக நாளில் புரட்சிக்கவிஞரை உங்கள் இல்லத்துள்ளும், உள்ளத்துள்ளும் அழையுங்கள்!
விருந்து அவர் தருவார்!

உண்ணுங்கள்; பிறகு எண்ணுங்கள்!

--------------------வாழ்வியல் சிந்தனைகள் பகுதியில் கி.வீரமணி அவர்கள் 23-4-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

23.4.12

அட்சய திருதியையா? - ஓர் எச்சரிக்கை




அட்சய திருதியை என்ற ஒன்று சமீப காலங்களில் ஒரே களேபரம்.

ஜோதிட சாத்திரப்படி - 15 திதிகளில் இந்த அட்சய திருதியைக்கு விசேஷமான பலன்கள் உண்டாம்.

சித்திரை மாதத்தில் சுக்லபட்சத்தில் சூரியன் மேஷ ராசியிலும், சந்திரன் ரிஷப ராசியிலும் அமையும் நாள் இதுவாம்.

இவை எல்லாம் எந்த விஞ்ஞானத்தில், வானியலில் சரி என்று நிரூபிக்கப்பட்டுள்ளன? சூரியன் என்ற நட்சத்திரத்தை கோள்களின் பட்டியலில் வைத்தபோதே ஜோதிட சாஸ்திரத்தின் அஸ்திவாரம் நொறுங்கிப் போய்விட்டதே!

சென்னை - கோட்டூர்புரத்தில் உள்ள பெரியார் ஆய்வகத்தின் ஒரு பிரிவான பிர்லா கோளரங்கத்திற்குச் சென்று இந்த அட்சய திருதியைக்குச் சான்று பெற்றுவரத் தயாரா?

இவர்கள் குறிப்பிடும் திதிகளும் சரி, நட்சத்திரங்களும் சரி இவை ஒன்றிலாவது தமிழ்ப் பெயர் உண்டா?

இவை எல்லாம் பித்துக்குள்ளிப் பார்ப்பனர்களின் கிறுக்கல் சமாச்சாரங்கள் அல்லவா!

எந்த வாய்ப்புக் கிடைத்தாலும் அதனைப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் மூடத்தனத்தைப் பரப்பி, அதனை மூலதனமாகக் கொண்டு பக்தி வியாபாரம் செய்து மக்களைச் சுரண்டும் பார்ப்பன சதி இவையில்லாமல் வேறு என்னவாம்?

ஒரு அப்துல்கலாமோ - ஒரு மயில்சாமி அண்ணாதுரையோ - இந்த ஜோதிடப் பித்தலாட்டமான அட்சய திருதியை சரிதான் என்று சொன்னதுண்டா?

மாறாக மறுத்துதான் வந்திருக்கிறார்கள்!

அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் பதவிக்காக வேட்பு மனு தாக்கல் செய்த நேரம் -பி.ஜே.பி.யைச் சேர்ந்த பிரமோத் மகாஜன் - நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து விண்ணப்பிக்க வேண்டுகோள் விடுத்தபோது, அப்துல்கலாம் நகைத்தார் - எனக்கு அவற்றில் நம்பிக்கை இல்லை என்று அவருக்கே உரித்தான நயத்தக்க நாகரிகத்துடன் மறுத்தாரே!

விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவேண்டும் - இது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் (51-ஏ எச்) கூறும் நிலையில், இதுபோன்ற அட்சய திருதியைகளை தடை செய்வதுதானே நல்லதோர் அரசின் கடமையாக இருக்க முடியும்?

அட்சய திருதியையில் ஒரு குன்றிமணி அளவு தங்கமாவது - கடன் வாங்கியாவது வாங்கவேண்டுமாம் - அப்படி வாங்கினால், ஆண்டு முழுவதும் செல்வலட்சுமி அவர்கள் வீட்டில் தாண்டவமாடுவாளாம்.

இதுவரை அப்படி வாங்கியவர்கள் வீட்டில் செல்வம் பொங்கி வழிகிறது என்பதற்கு ஆதாரம் உண்டா? புள்ளி விவரங்கள் உண்டா?

ஏற்கெனவே கடன் பட்டு விழி பிதுங்கிக் கிடக்கும் பாமர மக்களை கடன் வாங்கித் தங்கத்தை வாங்கத் தூண்டுவது சமூக விரோதச் செயல் அல்லவா!

அதுவும் தங்கத்தின் விலை நாளும் ராக்கெட் வேகத்தில் விண்ணில் விர்ரென்று ஏறிக்கொண்டு இருக்கிறது.

அட்சய திருதியை என்று சொல்லி அந்நாளில் தங்கத்தை வாங்கினால் க்ஷேமம் என்று நகை வியாபாரிகள் விளம்பரங்களை பக்கம் பக்கமாக வெளியிட்டு பாமர மக்களின் மூக்கைச் சொறிந்து விடுகிறார்கள். ஆதாயம் இல்லாமலா ஆற்றைக் கட்டி இறைப்பார்கள்?

புதுச்சேரியில் நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கத்தினர் கடந்த நான்கு ஆண்டுகாலமாக நல்லதோர் பணியைச் செய்து வருகிறார்கள்.

பொதுமக்களே, உஷார்! உஷார்!! அட்சய திருதியை என்று விளம்பரம் செய்து, நகை வியாபாரிகள் போலியான நகைகளை உங்கள் தலையில் கட்டுகிறார்கள் - ஏமாறாதீர்கள்! ஏமாறாதீர்கள்!! என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

தங்கம் அரசின் கஜானாவில் இருக்கட்டும் - மக்களைத் திவாலாக்கும் அட்சய திருதியை என்னும் கண்ணிவெடியில் சிக்கவேண்டாம்! சிக்கவேண்டாம்!!

-----------------------"விடுதலை” 23-4-2012

பகுத்தறிவைத் தூண்டுவதே படிப்பின் நோக்கமாகட்டும்!

தந்தை பெரியார் அவர்கள் மாணவர்களுக்கு அறிவுரை கூறும் முறையில் குறிப்பிட்டதாவது:-

பேரன்புமிக்க தலைமை ஆசிரியர் அவர்களே, மாணவ ஆசிரியர்களே!
நீங்கள் மாணவ ஆசிரியர்களாக இருந்தாலும் நீங்கள் வருங்காலத்தில் ஏராளமான மாணவர்களைப் பயிற்றுவிக்கப் போகின்றவர்கள் உங்களுக்கு ஏதாவது கூற விழைகின்றேன்.

நமது நாட்டில் படிப்பு அறிவுக்குப் பயன்படுவது என்பது மிகவும் கஷ்டமாகப் போய்விடுகின்றது. தண்டவாளத்தில் திருப்பி விட்ட ரயில் எப்படி ஒழுங்காகப் போகின்றதோ, அதே போல ஏதோ ஒரே பாதையில் போகின்றதே ஒழிய, அறிவை வளர்க்கவோ, மக்களுக்கு இன்றியமையாத கருத்துக்கு ஆவன செய்வதாகவோ இல்லை.
நமது நாட்டு மக்களை பொதுவாக பெரிது, சிறிதாகப் பிரிக்கலாம். ஒரு சாராரை அறிவுவாதிகள் என்றும் மற்றொரு சாராரை நம்பிக்கைவாதிகள் என்றும் பிரிக்கலாம். நம்பிக்கைவாதிகள் நம்ப வேண்டியவை என்று மற்றவர்களைக் கட்டாயப்படுத்தி நம்பச் செய்வார்கள். அறிவுவாதி அப்படி அல்ல. எதுவாக இருந்தாலும் அறிவு கொண்டு அலசிப் பார்ப்பவன் அறிவுவாதிகளின் செயலால்தான், ஆராய்ச்சியால் தான், நாட்டுக்குப் பயன் உள்ளவை நடைபெறும். இந்த நாட்டில் அரசாங்கம் நம்பிக்கைவாதிகளின் கையில் சிக்கி 1,000, 2,000 ஆண்டுகளாக மாற்றமே அடையவில்லை.

மனிதன் ஓட்டுகின்ற பக்கம் நடக்கின்ற மிருகம் அல்ல. மற்ற எல்லா ஜீவன்களுக்கும் இல்லாத பகுத்தறிவு உடையவன் சூழ்நிலைக்குத் தக்கவாறு நடந்து கொள்ளக் கூடியதும், தவறு காணப்பட்டால் திருத்திக் கொள்ளக் கூடியதும் ஆன அறிவு பெற்றவன். மிருகங்களுக்கு இப்படி இல்லை.
நம் நாட்டின் அறிவு மற்ற நாட்டார்கள் அறிவைவிட மோசமானது. ஒரு கூட்டத்தார் உழைப்பிலேயே மற்ற ஒரு கூட்டத்தார் வாழ ஏற்றபடி அமைக்கப்பட்டு விட்டது.

மற்ற நாட்டில் நம்பிக்கைவாதிகள் இருந்தாலும் ஓரளவுக்குத்தான் நம்பிக்கையைப் பயன்படுத்து வார்களாக அதுவும் சிலர்தான் இருப்பார்கள். நம் நாட்டிலே நேர்மாறாக உள்ளது.

நம் நாட்டுமுறை நமது முன்னோர்கள் முறை, நமது பழக்க வழக்கங்கள் என்ற முறையில் தான் நமது அறிவு சென்று கொண்டு இருக்கின்றதே ஒழிய, வளர்ச்சிப் பற்றிய சிந்தனையோ, முயற்சியோ இல்லை. இதன் காரணமாகவே 1,000, 2,000 ஆண்டுகளாக காட்டு மிராண்டிகளாக இருக்கின்றோம்.

நம் நாட்டார் கடவுள் மீது நம்பிக்கை வைத்து கண்மூடித் தனமாக பின்பற்றி வந்தார்களே ஒழிய, கடவுள் என்றால் என்ன? என்று சிந்திக்கவே இல்லை. கடவுள் செயல் அதிகாரம் என்ன? நம்முடைய செயல் அதிகாரம் உரிமை என்ன? என்று எண்ணி ஒருவன் கூட பிரித்துப் பார்ப்பதே இல்லை.

மனிதனுடைய வாழ்க்கைக்கு அவனுடைய முயற்சி முக்கியம். அவன் வளரத் தகுந்தவன் அவனில் வெகு பேருக்கு அறிவின் சக்தி பற்றி தெரியவே தெரியாது. இப்படிப்பட்ட மனிதனை அறிவாளி மிருகத்தைவிட உயர்ந்தவன் என்று சொல்ல முடியுமா?

அடுத்து தங்களுக்கு மதம் இருக்கின்றது என்று கூறுகின்றான். தூங்குவது, உண்ணுவது, உடை உடுத்துவது முதல் அத்தனையும் மதப்படி, ஆனால், மதம் என்றால் என்ன என்று நமக்குத் தெரிய வேண்டாமா? மதம் என்றால் என்ன? எப்போது உண்டானது? யாரால் உண்டாக்கப்பட்டது? அது இன்றைக்குப் பயன்படுமா?என்று சிந்திக்க வேண்டாமா? ஆறு மாதத்துக்கு முன் வாங்கிய ரயில்வே கைடை எடுத்துப் பார்த்துவிட்டு ரயிலுக்குப் போனால், ரயில் தப்பி விடுகின்றது. ஆனால், 2,000 ஆண்டுகளுக்கு முன் உண்டானது எங்கள் மதம் என்று கட்டிக் கொண்டு அழுகின் றார்களே ஒழிய, இது இந்தக் காலத்துக்குப் பொருந் துமா என்பதை சிந்திக்கின்றார்களா? கிடையாது.

அதுபோலவே மனிதன் ஒவ்வொருவனுக்கும் ஜாதி இருக்கின்றது. அந்த ஜாதியால் மனித சமுதாயம் என்ன பலன் அடைந்தது என்று எவன் எண்ணிப் பார்க்கின்றான். ஆனால், கூறுகின்றான் படிப்பு எதுக்கு என்றால், அறிவுக்கு என்கின்றான். படித்தவன் எவன் இவற்றைப் பற்றி சிந்திக்கின்றான்?
உதாரணமாக, நீங்கள் பள்ளிக்கூடத்தில் வானசாஸ்திரம், பூகோள சாஸ்திரத்தை கற்பிக்கப் போகிறீர்கள். இப்படி பள்ளிக்கூடத்தில் பாடம் சொல்லிக் கொடுக்கும்போது கிரகணம் எப்படி உண்டாகின்றது என்பதை விஞ்ஞான அறிவு கொண்டு விளக்குவான். ஆனால், வீட்டில் போய் பார்த்தால் கிரகணத்தினால் தோஷம் ஏற்படாமல் இருக்க மூக்கைப் பிடித்துக் கொண்டு மந்திரம் ஜெபிப்பான்.
ஆசிரியர்கள் விளக்கு ஏற்றி வைப்பது இருளைப் போக்க என்று கூற வேண்டுமே ஒழிய விழுந்து கும்பிட அல்ல என்று கற்பிக்க வேண்டும்.

இன்றைய நடப்பு அனுபவங்களை வைத்துக் கொண்டு பார்த்தால், 1,000, 2,000 ஆண்டுகளுக்கு முன் இருந்த நமது முன்னோர்கள் அறிவு எவ்வளவு மோசமானது என்பது நமது அறிவு அவர்களை விடப் பன்மடங்கு உயர்ந்தது என்று விளங்கும்.
அறிவு வளர்ச்சியில் நாம் கவனம் செலுத்தாமல் 1,000, 2,000 ஆண்டுகளாக இருந்து வந்ததின் காரணமாகவே இன்றைய விஞ்ஞான உலகில் நாம் மட்டுமே காட்டுமிராண்டிகளாகவே இருக்கின்றோம்.

தோழர்களே, பையனுக்கு 5-ம் 5-ம் எவ்வளவு என்பதை விளக்க இரண்டு கைவிரல்களையும் எண்ணச் செய்து ஒரு கையில் 5 இன்னொரு கையில் 5ஆக இருகையிலும், 10 விரல் இருப்பதால் 10 என்று விளக்கலாம். பத்தும் பத்தும் என்ன என்பதை விளக்க காலில் உள்ள 10 விரலையும், கையில் உள்ள பத்து விரலையும் எண்ணச் செய்து இருபது என்று விளக்கலாம்.

இன்னும் 20-ம் 20-ம் என்ன? என்பதை விளக்க இன்னொரு ஆளையும் கூட்டிக் கொண்டு வந்தால் அவன் விரலையும் எண்ணி விளக்குவது? 100-ம் 100-ம் என்ன என்க? எத்தனை பேரை கூட்டி வருவது?

எனவே, 5-ம் 5-ம் என்பதை விளக்க இரண்டு கை விரல்களையும் எண்ணிக் காட்டி விளக்குவது 10-ம் 10-ம் 20 என்க கால் விரல்களையும், கை விரல்களையும் எண்ணிக் காட்டி விளக்குவது மாணவனை சிந்தனை செய்து விளக்கிக் கொள்ள செய்யப் பயன்படும். அதிலிருந்து மற்றவர்களுக்கும் கண்டு பிடிக்க சிந்தனை செய்யத் தூண்டி 2ஓ50-100, 10ஓ100-1000 என்று தானாகவே கண்டுபிடிக்கப் பழகுவதுதான் அறிவைத் தூண்டுவதாகும் என்று எடுத்துரைத்தார். மேலும் பேசுகையில், மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் பற்றியும் தெளிவுபடுத்திப் பேசினார்.

----------------25.10.1961 அன்று பரமக்குடி பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - விடுதலை 4.11.1961

குறிப்பு:-இன்று உலக புத்தகதினம். வாசிப்போம்,மற்றவர்களையும் வாசிக்க வைப்போம். அறிவு பெறுவோம். அனைவருக்கும் இனிய புத்தக தின வாழ்த்துக்கள் ---தமிழ் ஓவியா

21.4.12

தி.மு.க. தலைமைக்கு மிக முக்கிய வேண்டுகோள்! -கி.வீரமணி


தி.மு.க. தலைவருக்கும், தோழர்களுக்கும், தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

திராவிடர் இயக்க நூறாவது ஆண்டு நடக்கும் இந்த முக்கியமான கால கட்டத்தில், தி.மு.க.வின் பொறுப் பாளர்களாக உள்ள பலரின் நடவடிக்கைகளைப்பற்றி ஏடுகளில், ஊடகங்களில் வரும் பல்வேறு செய்திகள் நம்மைப் போன்ற தாய்க் கழகத்திற்கும், உண்மையான திராவிடர் இயக்கப் பற்றாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் அளவற்ற, வார்த்தைகளில் வடிக்க முடியாத துன்பத்தையும், மனவேதனையையும் தருகிறது!
ஏற்கெனவே தி.மு.க.வை அழிப்பதே தமது பிறவிப் பயன் என்ற ஆரிய ஊடகங்களுக்கு அவல் பாயசம் சாப்பிட்டதுபோல சில நிகழ்வுகள் கிடைப்பதோடு விரிசல் என்று ஏகமாக விளம்பரப்படுத்தி, கட்டடத்தையே, கட்டுமானத்தையே காணாமற் போகச் செய்ய இத் தருணத்தை விட்டால் வேறு நல்ல தருணம் வாய்க்காது என்று கருதி, பரபரப்புப் பசியைத் தீர்த்துக் கொள் ளுகின்றன.

கல்லில் செதுக்கிய அய்யாவின் அறிவுரை

அய்யா அறிவு ஆசான் தலைவர் தந்தைபெரியார் கூறிய அறிவுரை கல்லில் செதுக்கியதாகும்.

தி.மு.க.வை எதிரிகளால் அழிக்க முடியாது; இவர்களே ஒருவருக்கொருவர் அழித்துக் கொண்டால் தான் முடியும். தி.மு.க. கெட்டியான பூட்டு; அதற்குக் கள்ளச் சாவி போட்டுவிட யாரையும் அனுமதிக்கக் கூடாது.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதில் முன்னிரண்டும் கூட முக்கியமில்லை. கட்டுப்பாடுதான் முக்கியம்; மிகவும் முக்கியம். எனவே இயக்கத்தை - கட்சியைக் காப்பாற்ற   கட்டுப்பாட்டையே தலைமை காப்பாற்றிட தயவு தாட்சண்யம் காட்டாமல் கட்டுப் பாட்டிற்காக தேவையான நடவடிக்கை எடுக்கத் தயங்கக் கூடாது என்றார்கள்.
 
இனமான பேராசிரியர் அன்பழகன் அவர்கள் அப்போது தலைமையை எதிர்த்துக் கூறிய ஒரு கருத்துக்காக அவர்மீதே நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, அவரை கண்டித்து அறிக்கைவிடத் தயங்கவில்லை தந்தை பெரியார் அவர்கள்.
அப்போது அவ்வறிக்கையில் குறிப்பிட்டார்கள். எனக்கு  திரு. அன்பழகன் அவர்கள்மீது கோபமோ, வெறுப்போ இல்லை; கழகக் கட்டுப்பாட்டிற்காகத்தான் இப்படி எழுதிட வேண்டியுள்ளது. தலைமை இடத்தில் திரு. அன்பழகன் அவர்கள் இருந்து திரு. கலைஞர் கருணாநிதி அவர்கள் இப்படிக் கூறியிருந்தால் இதே போல அவர்மீதும் கட்டுப்பாட்டை மீறிக் கருத்துக் கூறியதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் எழுதியிருப்பேன் என்று விளக்கமாக அவ்வறிக்கையில் குறிப்பிட்டார்கள். தி.மு.க. என்ற இயக்கம் காப்பாற்றப்பட வேண்டிய அவசியத்தை அன்று 1969-இல் தந்தை பெரியார் அவர்கள் விளக்கியதை, இப்போது அவர் தம் தொண்டன் என்ற முறையில் அதேபோல் தி.மு.க. என்ற மகத்தான திராவிடர் இயக்கத்தை அதற்கு சோதனை ஏற்படும் கட்டத்தில் அதனை நினைவூட்டும் கடமையும், பொறுப்பும் உண்டு நமக்கு என்பதால் இதனை எழுத நேரிட்டு விட்டது.

ஆளும் கட்சியின்மீது பலவகைகளிலும், அதிருப்திகள் தலை எடுக்கும் இக்கால கட்டத்தில், அவற்றை மடை மாற்றம் செய்யும் வகையில் தி.மு.க.வில் உள்கட்சிப் பிரச்சினை என்பதை ஊடகங்கள் பெரிதுபடுத்துவதை அரசியலில் அனைத்தும் அறிந்த கலைஞர் அவர்களுக்குத் தெரியாததல்ல. மேலும் அந்த அறிக்கையில் தந்தை பெரியார் குறிப்பிடுகிறார்: கலைஞர் அவர்களின் தலைமையை நான் ஏற்க மாட்டேன் என்று கூட்டத்திற்குத் தலைமை வகித்த க.அன்பழகன் என்று சொல்லியிருப்பதாகப் பத்திரிகைகளில் படித்தேன்.
இது மிகவும் கண்டிக்கத்தக்கதோடு, இதற்கு ஒழுங்கு நடவடிக்கையை தி.மு.க. கட்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.
சுவரை வைத்துக் கொண்டுதான் சித்திரம் எழுதவேண்டும் என்பது போல கட்சியின் மரியாதை குறையுமானால், தலைக்குத் தலை தன் தன் இஷ்டப்படிப் பேச, நடக்க இடம் கொடுத்து வந்தால், பொதுத் தொண்டுக்குக் கண்டிப்பாய் அதில் இடம் இருக்காது.

கட்சித் தலைவரின் முதற் கடமை கட்சியின் கவுரவத்தைக் காப்பதுதான் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் கட்சி சாதாரண கட்சியானாலும், நான் உப தலைவரை நீக்கினேன், காரியதரிசியை நீக்கினேன். அதனால் எனக்கோ, கட்சிக்கோ ஒரு கெடுதியும் ஏற்பட்டுவிடவில்லை.
பொதுமக்களுக்கு ஒன்று மட்டும் சொல்லுகிறேன். தி.மு..கழகத்திற்கு உழுது பயிரிட்டவர் அறிஞர் அண்ணாதான். இதற்கு நீர் பாய்ச்சி நல்ல விளைச்சலை உண்டாக்கியவர் கலைஞர்தான். கட்சிக்குக் கலைஞர் இல்லாவிட்டால் பதவிக்கு ஏராளமான மெம்பர்கள் கிடைக்கலாமே ஒழிய, கட்சியைக் கட்டிக் காக்க கட்சி அங்கத்தினர்களில் பத்து பேர் ஆதரவை உடைய அங்கத் தினர் யாருமில்லை என்பதுதான் என் கருத்து. இதை நான் தி.மு.க. அங்கத்தினர்களுக்கே சொல்லுகிறேன்.
எனவே, இன்று தி.மு.க.விற்கு வேண்டிய கட்டுப் பாடு, ஒழுங்கு முறை நடவடிக்கைதான்.
தி.மு.க.வினால் மக்களுக்கு ஆக வேண்டிய காரியம் ஏராளம் இருப்பதால், இதை நானாக எனது சொந்த முறையில் கடமையை முன்னிட்டு எழுதுகிறேன்.
அங்கத்தினர்கள் மன்னிப்பார்களாக!

                   -------------14.3.1969 அன்றைய விடுதலையில் கையொப்பமிட்டு தந்தை பெரியார் அவர்களின் அறிக்கையில் காணப்படும் ஒரு சிறு பகுதி இது.

மறுநாளும் இது குறித்து நீண்ட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார் அய்யா.

தி.மு.க. என்பது வெறும் கண்ணீரால் மட்டுமே வளர்ந்த இயக்கம் அல்ல. செந்நீர் விட்டும், பல்லாயிரம் தொண் டர்கள், தோழர்கள் தியாகத்தால் வளர்ந்தோங்கிய மகத் தான ஆலமரம் ஆகும். விழுதுகள் அதனைக் காப்பாற்றிட மட்டுமே பயன்பட வேண்டும். அதன் வேரினை அசைக்க என்றும் வீணர்களுக்குத் விழுதுகளே துணை போகக் கூடாது. தெரிந்தோ, தெரி யாமலோ!
நோயாளியைக் காப்பாற்றிட அறுவை சிகிச்சை அவசியம்
சில நேரங்களில் இயக்கக் கட்டுப்பாட்டைக் காப் பாற்றிட, கடும் சிகிச்சை - அது அறுவை சிகிச்சை யானாலும் செய்துதானே தீர வேண்டும் - நோயாளியை நோயிலிருந்து காப்பாற்றிட.
இயக்கமே எப்போதும் பிரதானமானது என்பதை அறியாதவர் அல்ல அதன் தலைவர் கலைஞர் அவர்கள். இயக்கம் இருந்தால் தான் எவருக்கும் மதிப்பும், மரியாதையும்; இந்த எண்ணம் எல்லோருக்கும் புரியும். எனவே கட்டுபாட்டைக் காப்பாற்ற இயக்க பாசம் - கொள்கைப் பாசத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, மற்ற பாசங்கள் குறுக்கிட இடந் தராமல் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்து, பல் குழுவும், பாழ்  செய்யும் உட்பகையும் இயக்கத்தைத் தின்று விடாமல் காப்பாற்றிட முன்வர வேண்டுமென உரிமை யுடன், உண்மை உணர்வுடன், தந்தை பெரியார் அவர்களின் சிந்தனை வழிபட்ட நிலையில் கேட்டுக் கொள் ளுகிறோம். தி.மு.க. வரலாற்றில் அண்ணாவுக்குப் பிறகு அவரது உழைப்பு பல சோதனைகளை வென்று அவ்வியக் கத்தைக் காப்பாற்றி இருக்கிறது!

இப்போதும் விரைந்த விவேகமான முடியும் நடவடிக்கையும் தான் இன எதிரிகளை வாயடைக்கச் செய்யும் நிலை ஏற்படும்.

                ------------------------கி.வீரமணி  தலைவர், திராவிடர் கழகம் --"விடுதலை” 21-4-2012

20.4.12

சேது சமுத்திரத் திட்டம் உச்சநீதிமன்றம் என்ன செய்யப்போகிறது?


உச்சநீதிமன்றம் என்ன செய்யப்போகிறது?

சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான பிரச்சினை ஒரு முக்கிய புள்ளிக்கு நகர்ந்திருக்கிறது. அறிவியலுக்கு மாறான ஒரு பிரச்சினையைக் கொண்டு வந்து போட்டு அத்திட்டத்தை முடக்கப் பார்த்தனர்.

17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராமனால் கட்டப்பட்ட பாலத்தை இடித்து சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது என்று இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் கூறக் கூடிய மதவாத சக்திகள் இந்தியாவில் இருக்கின்றன.

இந்தியா முன்னேற்றம் பெறாமல் இருப்பதற்கு இந்த மதவாத புத்திதான் முக்கிய காரணம் என்று பல வரலாற்றாளர்களாலும் கூறப்பட்டுள்ளது - நூற்றுக்கு நூறு உண்மைதான் என்பதை இந்த அடாத செயல் மேலும் நிரூபிக்கிறது.

மக்களிடத்தில் அறிவியல் மனப்பான்மையைத் தூண்ட வேண்டும். அது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் (51 ஹ- () கூறுகிறது.

ஒவ்வொரு குடிமகனுக்கும் இதனை அடிப்படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறதே - ஒரு மத்திய அரசு தொடக்கத்திலேயே ராமன் பாலம் என்ற கருத்தோட்டம் கிளம்பியபோது, முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டாமா?


மெத்தப் படித்த மேதாவிகள் நிறைந்த உச்ச நீதி மன்றம், ராமன் பாலம் என்ற கருத்துருவை முன் வைத்த அந்தக் கணத்திலேயே அதனைத் தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற மனு தாக்கல் செய்யப்பட்ட அந்தத் தருணத்திலேயே அனுமதிக்கத் தகுந்ததல்ல, உகந்ததல்ல என்று தள்ளியிருக்க வேண்டாமா?

பிரபல வரலாற்று ஆசிரியர் ஆர்.எஸ். சர்மா (ராம் சரஸ் சர்மா) என்ன கூறுகிறார்?

இராமாயண காலத்தில் பாலம் கட்டியதற்கு அகழ்வாராய்ச்சிச் சான்றோ, இலக்கியச் சான்றோ இல்லை. பாலம் போல தோன்றும் மணல் திட்டுகளின் காலம் பதினேழரை லட்சம் ஆண்டுகள் பழையது என்று வைத்துக் கொண்டாலும், அந்தக் காலத்தில் மனிதர்களே இல்லை. கிடைத்துள்ள சான்றுகளின் படி இராமாயணம் எழுதப்பட்டது கி.மு. 400 ஆகும் என்று எழுதியுள்ளார்.

உச்சநீதிமன்றம் இது தொடர்பாக வரலாற்று ஆசிரியர்கள், கடல்சார் பொறியாளர்கள் போன்றவர்களின் கருத்துக்களைக் கேட்பதுதானே முறைமை?

வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் விதண்டாவாதம் பேசும் வெறியர்களின் கூற்றுக்கு உச்சநீதிமன்றம் செவி சாய்த்ததேகூட தேவையற்றதே!

தொல்பொருள் ஆய்வுத் துறையினர், ராமன் என்பதே கற்பனைப் பாத்திரம் - அப்படி இருக்கும் போது ராமன் பாலம் எங்கிருந்து வந்தது? என்று அறிக்கை கொடுத்த நேரத்தில், மத்திய அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுத்த கொடுமையை என்னவென்று சொல்ல!

உனக்கு ரத்தக் கொதிப்பு இருக்கிறது என்று பரிசோதித்துச் சொன்ன மருத்துவர் மீது கோபப்பட்ட நோயாளிகளின் நிலைக்கு மத்திய அரசு ஆளாகலமா?

பாதி பி.ஜே.பி. மனப்பான்மையோடு மத விடயத்தில் காங்கிரஸ் தள்ளாடுவதால்தான் இந்த நேரக் கேடும், பொருள் கேடும், மக்கள் நலக்கேடும் ஆகும்.

நாக்பூரில் உள்ள நீரி என்ற தேசிய சுற்றுச் சார்பு பொறியியல் ஆய்வு நிலையம் தேர்வு செய்த பாதைதானே கடல் நீர்த்தடம் 6 ஆவது பாதை.

இந்தப் பாதையை ஏற்றுக் கொண்டதும் பி.ஜே.பி. ஆட்சிதானே? இப்பொழுது எங்கிருந்து வந்து குதித்தான் இந்தத் தசரதராமன்?

இதில் உச்சநீதிமன்றம் தெளிவாக இருந்து மதச் சார்பற்ற கண்ணோட்டத்தோடு, விஞ்ஞான மனப் பான்மையோடு செயல்படும் என்று இந்தியா மட்டுமல்ல - உலகமே எதிர்பார்க்கிறது. இந்தியா இன்னும் மதவாதக் குட்டையில் கிடக்கிறதா? அல்லது விஞ்ஞான மனப்பான்மையோடு செயல்படுகிறதா? என்பது இதன் மூலம்தான் உறுதி செய்யப்படும்.

--------------------"விடுதலை” தலையங்கம் 20-4-2012

உ.வே.சா.வின் தமிழ்ப் பற்றின் தன்மை?


உ.வே.சா


ஓர் ஏழை வேலைக் காரனைப் பார்த்து சோறு தின்றாயா என்று கேட்கலாம்; ஆனால் ஒரு கனவானைப் பார்த்து போஜனம் ஆயிற்றா என்று கேட்க வேண் டும். துறவிகளைப் பார்த்து பிக்ஷை ஆயிற்றா என்று கேட்க வேண் டும்

--------------- 1942இல் வானொலியில் உ.வே.சா.வின் பேச்சிலிருந்து இது தரப்படுகிறது.

இதன் மூலம் உ.வே. சாமிநாதய்யரின் தமிழ்ப் பற்றின் தன்மையும், வருணாசிரமக் கண்ணோட்டமும், முதலாளித்துவ மனப்பான்மையும் பளிச் என விளங்குமே!

இப்பொழுது உ.வே.சா. எங்கிருந்து வந்தார்? இந்த விமர்சனம் எதற்காக? என்ற வினாக்கள் எழுலாம்.

திருவல்லிக்கேணி கலாச்சார அகாதமி சார்பில் கஸ்தூரி சீனிவாசன் நூலகத்தின் பொன் விழா மற்றும் உ.வே. சாமி நாதய்யரின் படத்திறப்பு விழாவும் நடைபெற்றுள்ளன.

உ.வே.சா. படத்தினைத் திறந்து வைத்த தினமணி ஆசிரியர் திருவாளர் கே. வைத் தியநாதய்யர் உரையாற்றுகையில் தமிழ் செம்மொழியானதற்குக் காரணம் உ.வே.சா என்று பேசியுள்ளார்.

இது உண்மை என்றால் தமிழ் செம்மொழியாக எவ்வளவோ ஆண்டுகளுக்கு முன் வந்திருக்க வேண்டுமே! ஏன் வரவில்லை? மத்தியில் பிஜேபி ஆட்சியின்போது ஏன் கொண்டு வரப்படவில்லை?

தி.மு.க. ஆட்சியில் முதல் அமைச்சர் கலைஞர் அவர்களின் தளரா முயற்சியால் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தமிழ் செம்மொழி ஆனதை மனந்திறந்து ஏற்றுக் கொள்ள முடியாத ஆற்றாமையால் இப்படிப் பேசி யுள்ளார் என்றே கருத வேண் டும்.

கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் வரவேற்புக் குழு ஒன்றில் அங்கம் வகிப்பதற்கு இதே வைத்தியநாதய்யர் எப்படியெல்லாம் முரண்டு பிடித்தார் என்பது நமக்குத் தெரியாதா?

தமிழ்செம்மொழியானால் வீட்டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் வருமா என்று கேட்ட தினமலர்; செம்மொழி மாநாட் டுக்கு எதற்காக அரசு விடுமுறை என்று எழுதிய துக்ளக்குக்கு தினமணி சவுக்கடி கொடுத்திருந்தால் இப்பொழுது தமிழ் செம்மொழி ஆனது பற்றிப் பேச திருவாளர் வைத்தியநாத அய்யர்வாளுக்குத் தகுதி வந்திருக்கக் கூடும்.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் தமிழ் செம்மொழி ஆனதை சாக்காகக் கொண்டுதான் இப்பொழுது சமஸ்கிருதமும் அந்தப் பட்டியல் இடம் பிடித்தது என்பதை எந்தப் பார்ப்பனராவது அவர்களின் எந்த ஏடாவது - இதழாவது தெரிவித்ததுண்டா?

இன்னொரு கூடுதல் தகவல்:

தமிழைச் செம்மொழி என அறிவிக்க வேண்டும் என்று 1918ஆம் ஆண்டில் நீதிக்கட்சி மாநாட்டுத் தீர்மானம் கூறுகிறது.

1918 மார்ச் 30, 31 ஆகிய நாட்களில் தஞ்சை, திருச்சி பார்ப்பனரல்லாதார் முதல் மாநாடு நடைபெற்றது. அம்மா நாட்டுத் தீர்மானங்களில் ஒன்று.
தீர்மானம் 8(ஆ)

எல்லாப் பழைமையான மொழிகளைப் போல பழைமையான, வளமான, உயர்தரமாக உருவாக்கப்பட்ட பல, திறன்பட்ட இலக்கியங்களைக் கொண்டது தமிழ் மொழி. இது பல்கலைக்கழகத்தால் பாரசீக, அரேபிய, சமஸ்கிருத மொழிகட்கு ஈடாக மதிக்கப்பட்டுச் செம்மொழி என ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

முன்மொழிந்தவர்: திரு. ஜே.பி. நல்லுசாமி பிள்ளை பி.ஏ.பி.எல். மதுரை.

வழிமொழிந்தவர்: திரு. ந.மு. வேங்கடசாமி நாட்டார். தமிழ்ப் பண்டிதர், எஸ்.பி.ஜி. கல்லூரி, திருச்சிராப்பள்ளி.

ஆதரித்தவர்: திருமதி. அலர்மேலு மங்கை தாயாரம் மாள், சென்னை.

தீர்மானம் நிறைவேறியது. அரசு ஆணையிலும் பதிவு செய்யப்பட்டது.

--------------- மயிலாடன் அவர்கள் 19-4-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

19.4.12

கட்டாய திருமணப் பதிவுச் சட்டமும் பெரியாரும்


கட்டாய திருமணப் பதிவுச் சட்டம்


அனைத்துத் திருமணங்களையும் கட்டாயம் பதிவு செய்யும் சட்டம் ஒன்றினைக் கொண்டு வர மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இது மிகவும் வரவேற்கத் தக்கதாகும்.

திருமண முறைகள் பல வகைகளில் நடை பெற்றாலும் கூட, அதையும் தாண்டி கட்டாயப் பதிவு என்பது மிகவும் அவசியமே!


ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு ஏற்பாடுகள் இருப்பதைப் பற்றிக் குழப்பிக் கொள்ளாமல் பிறப்பு - இறப்புப் பதிவைப் போல திருமணத்தையும் பதிவு செய்து கொள்வதால் பல்வேறு சிக்கல்களிலிருந்து சமூகம் விடுபட முடியும்.

வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் திருமணம் செய்து கொண்டால் - சுயமரியாதை திருமணச் சட்டம் கூட செல்லுபடியாகாது. சுயமரியாதைத் திருமணம் என்பது இந்தியத் திருமணச் சட்டத் திருத்தமே. இந்த நிலையில் மத மாற்றம் செய்து கொள்ளாமல் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் சிறப்புச் சட்டத்தின் கீழ் (ளுயீநஉயைட ஆயசசயைபந ஹஉவ) பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற நடைமுறை இருந்து வருகிறது.

இவை எல்லாவற்றையும் புறந்தள்ளிய திருமணம் என்றால் கட்டாயப் பதிவு என்பது ஒரு ஒழுங்கு முறையின் கீழ் கொண்டு வருவதற்குப் பெரிதும் உதவும். மற்ற மற்ற நாடுகளிலும் இது நடைமுறையில் உள்ளதுதான்.

இப்பொழுது பெரும்பாலும் பதிவுத் திருமணம் எதற்குப் பயன்படுகிறது? பெற்றோர்கள் ஒப்புதல் இல்லாத காரணத்தால் காதல் இணையர்கள் சட்டப்படி திருமணம் செய்து கொள்ள பதிவுத் திருமண முறை பயன்பட்டு வருகிறது.

மிக எளிய முறையில் திருமணம் நடைபெற வேண்டும்; திருமணத்திற்கு வீண் செலவு செய்யக் கூடாது. அதிக பட்சமாக 10 அல்லது 15 நாட்கள் வருமானம் என்னவோ அந்த அளவுக்குத்தான் திருமணத்திற்குச் செலவு செய்ய வேண்டும் என்று தந்தை பெரியார் கூறுகிறார். நான் ஒரு நிமிடம் அரசனாக இருந்தால், திருமணத்திற்காக அதிகம் செலவு செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிப்பேன் என்கிற அளவுக்குக் கூட தந்தை பெரியார் சென்றிருக்கிறார்.

போலி கவுரவத்திற்காகவும், அடுத்தவர்கள் மெச்ச வேண்டும் என்பதற்காகவும் கடன் வாங்கியும் கல்யாணம் செய்து கொள்ளும் போக்கு நாட்டில் இருந்து வருகிறது.

கல்யாணத்துக்காகக் கடன் வாங்குவது, அந்தக் கடனை அடைப்பதற்காகவே சம்பாதிப்பது என்கிற தீய வட்டத்துக்குள் தங்கள் வாழ்க்கையைச் சுருக்கிக் கொள்ளும் தன்மையிலிருந்து நம் மக்களை மீட்க வேண்டும் என்று தந்தை பெரியார் விரும்பினார். அதனால்தான் சுயமரியாதைத் திருமணத்திற்குத் தலைமை தாங்கி நடத்தி வைக்கும் தந்தை பெரியார் அவர்கள் இது போன்ற அவசியமான - மேலான கருத்துகளைக் கூறி வந்துள்ளார்.

திருமண மேடையை சமுதாய மாற்றத்திற்கான இடமாக மாற்றி அதில் மாபெரும் வெற்றி கண்டவர் தந்தை பெரியாரே!


செய்யாறை அடுத்த வாழ்குடை என்கிற ஊரில் ஒரு திருமணத்தில் மூன்றரை மணி நேரம் உரை ஆற்றி யுள்ளார் பெரியார் என்றால் அது என்ன சாதாரணமா?

கட்டாய பதிவுத் திருமண முறை வந்துவிட்டால், தனியாக திருமண விழா என்ற ஒன்று தேவை யில்லாமல் போய்விடுகிறது. இன்னும் சொல்லப் போனால் வரவேற்பு விழா என்பது கூட அவசிய மில்லாத ஒன்றுதான்.

தந்தை பெரியார் மிகச் சரியாக வழிகாட்டியுள்ளது போல, திருமணம் செய்து கொண்ட இணையர்கள், இந்தத் தேதியில் பதிவு முறையில் தங்களுக்குத் திருமணம் நடந்தேறியது என்று உற்றார் உறவினர் களுக்கும், நண்பர்களுக்கும் ஓர் அஞ்சல் அட்டையில் அறிவித்துவிடலாமே.

கட்டாய திருமணப் பதிவுச் சட்டம் நிறைவேற்றப் பட்டால் படிப்படியாக - தந்தை பெரியார் அறிவுறுத்திய - வழிகாட்டிய அந்தத் திசையில் சமூகம் நடை போடத் தொடங்குவதற்கு அதிகமாகவே வாய்ப்புண்டு.

ஏழை, எளிய மக்கள், கிராமப்புற மக்கள் அவதிப் படாமல் கிராம நிருவாக அதிகாரி மட்டத்தில் (VAO) பதிவு செய்வது குறித்தும் யோசிக்கலாமே!

--------------------"விடுதலை” தலையங்கம் 19-4-2012