Search This Blog

12.4.12

தமிழ்வருஷப் பிறப்பு - பெரியார்

60 வருடங்களுக்கு மானங்கெட்ட கதை

ஆரிய சம்பந்தமான கதைகள், சேதிகள் ஆகியவைகளில் எதை எடுத்துக் கொண்டாலும் அதில் ஆபாசம், அசிங்கம், விபசாரம், இயற்கைக்கு மாறுபட்ட வண்டத்தனமான சங்கதிகள் முதலிய வை இல்லாமலிருப்பது மிக மிக அதிசயமாகும்.

சில வாரங்களுக்கு முன்னால் மாரியம்மன் என்னும் ஒரு பெண் தெய்வத்தைப் பற்றி வெளியான வியாசம் வாசகர்களால் படிக்கப்பட்டிருக்கலாம். அதற்கும் சில வாரங்களுக்குமுன் பண்டரிபுரத்தைப் பற்றி எழுதப்பட்டிருந்த வியாசம் படிக்கப்பட்டிருக்கலாம்.

இப்போது இன்னும் சிறிது நாட் களுக்குள் வருஷப்பிறப்பு வரப் போகிறது. இந்த வருஷப் பிறப்புக்குச் சம்பந்தப்பட்ட தமிழ் வருஷங்களின் யோக்கியதையை மானமுள்ள தமிழ்மக்கள் படித்துப் பார்க்க வேண்டும் என்கின்ற ஆசையாலேயே இதை நான் எழுதுகிறேன்.

இந்த வருஷப் பிறப்புக் கதை நாகரிகம் உள்ள மக்களால் எழுதப்பட்டிருக்க முடியுமா? இதைப் படித்துப் பார்க்கும் அந்நியன் இந்தக் கதை சம்பந்தப்பட்ட மக்களை என்ன என்று நினைப்பான்? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஒரு முக்கிய சம்பவத்தை ஞாபகப் படுத்தக் கூடியதாகவும், சரித்திரத்திற்கு பயன்படத்தக்கதாகவும், நாகரிகமுள்ள தாகவும் உள்ள வருஷக் கணக்குகள் இருக்கின்றன. உதாரணமாக அவர்களது வருஷங்களுக்கு கி. மு., கி. பி., ஹிஜரி என்கின்ற பெயர்களும் அதற்கு நல்ல கருத்துகளும் இருக்கின்றன.

ஆனால் தமிழனுக்கும், நாதியற்ற தமிழனுக்கு என்ன வருஷம் இருக்கிறது? அதற்கு என்ன கருத்து என்று பார்ப்போமானால் தமிழன் என்கின்ற பெயர் வைத்துக்கொண்டு இந்த நாட்டில் வாழ்வதற்கு வெட்கமில்லையா? என்று தான் தோன்றும். தமிழனின் நிலையை ஆரியர்கள் தங்கள் சாமர்த்தியத்தால் மானங்கெட்ட காட்டுமிராண்டி, லம்பாடி சமூகமாக ஆக்கிவிட்டதால் இவ்வளவு இழிவு ஏற்பட்ட இந்தக் காலத்திலும் தமிழனுக்கு சூடு, சொரணை ஏற்படுவ தில்லை.

கோவிலுக்கு தேவதாசிகளை விட்டவன் தமிழனே என்றால் மற்றபடி தமிழனால் ஆக்கப்படவேண்டிய இழி செயல் வேறு என்ன இருக்கிறது?
இது மாத்திரமா? மோட்சம் என்றால் தமிழன் எதையும் செய்ய முன் வருகிறான்.

ஆ பயன் அய்ந்து என்று சொல்லிக் கொண்டு மாட்டு மூத்திரம், சாணி எல்லாவற்றையும் காசு கொடுத்து வாங்கிக் குடிக்கிறான் மற்றும் கேரள நாட்டில் நடப்பதை எழுதவே கை நடுங்குகிறது. ஏன் என்றால், ஒரு தடவை விடுதலை எழுதிவிட்டு ரூ.1500 செலவு செய்தும் ஆசிரியருக்கும், சொந்தக்காரருக்கும் 9, 9 மாத தண்டனை கிடைத்தது. அக்கிரமம் செய்கிறவர்களுக்குப் பெரிய வேட்டையும், பதவியும் கிடைக்கிறது; எடுத்துக் காட்டுபவருக்கு செலவும், ஜெயில் வாசமும் கிடைக்கிறது.

மனுதர்மத்தைவிட ஒருபடி முன்னால் போய்விட்டது நமது தேசிய ஆட்சி. ஆதலால் அதைச் சொல்லப் பயந்துகொண்டு நிறுத்திக் கொள்ளுகிறேன்.

ஆரியர்களால் எழுதப்பட்டு இன்று நம் இலக்கண, இலக்கியங்களில் முன்னிடம் பெற்று நம் பண்டிதர்களுக்குப் புலவர் (வித்வான்) பட்டம் பெற ஆதார மாயிருக்கும் நூல்களில் இருப்பதையே சொல்லுகிறேன். படித்துப் பாருங்கள். இந்த ஆபாசமுறை மாற்றப்பட வேண் டாமா? நம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்றதை மறந்து இனிமேலாவது ஒரு நாகரிகமான முறையில் நமது வருஷ முறையை அமைத்துக்கொள்ள வேண் டாமா என்பதை வலியுறுத்தவே மேலும் கீழும் குறிப்பிடப்படுவனவாகும்.

நம் வருஷப் பிறப்புக்குத் தமிழ் வருஷப் பிறப்பு என்று சொல்லிக் கொள்ளுகிறோம். இது நியாயமா? தமிழ் வருஷப் பிறப்பு கதையைப் பாருங்கள்.

வருடப் பிறப்புக் கதை

நாரதப் பிரம்ம ரிஷி அவர்களுக்கு ஒரு நாள் காமஇச்சை ஏற்பட்டதாம். எங்கு போனால் இது தீரும்? என்று ஞான திருட்டியினால் பார்த்து சாட்சாத் கிருஷ்ண பகவானிடம் போனால் தமது காம இச்சை தீரும் என்று கருதி கிருஷ்ணனிடம் ஓடோடி ஓடினாராம். கிருஷ்ண பகவான் நாரத முனி சிரேஷ்டரே எங்கு வந்தீர்? என்றாராம். அதற்கு நாரதர் ஒன்றும் இல்லை என்று தலையைச் சொரிந்து கொண்டு பல்லைக் காட்டினாராம். கிருஷ்ண பகவான் சும்மா சொல்லும் என்றாராம். நாரதர், எனக்கு எப்படியோ இருக்கிறது. உமக்கு அறுபது ஆயிரம் கோபிகள் (வைப்பாட்டிகள்) இருக்கிறார்களே, அதில் ஒன்று கொடுங்களேன் என்று கேட்டாராம். உடனே கிருஷ்ண பகவான் இது தானா பிரமாதம் இன்று இரவு எனது அறுபது ஆயிரம் கோபிகளில் நான் இல்லாத வீட்டிற்கு போய் அங்கு உள்ள கோபியை அனுபவித்துக் கொள்ளுங்கள் என்றாராம். உடனே நாரத பிரம்மம் கிருஷ்ண பகவானுக்கு ஒன்று போக 59999 கிடைத்ததாகக் கருதிக் கொண்டு மகிழ்ச்சிப் பெருக்குடன் கோபிகள் வீட்டுக்கு சென்றாராம். அங்கு சென்று எந்த வீட்டைப் பார்த்தாலும் அங்கெல்லாம் கிருஷ்ண பகவான் கோபியுடன் படுத்துக்கொண்டிருப்பதைக் கண்டு வெட்கப்பட்டு வெகு கோபத்துடன் கிருஷ்ண பகவான் வீட்டுக்கு வந்தார். வழியில் என்ன நினைத்துக்கொண்டு வருகிறார் என்று யோசித்தால் அது மிகவும் வேடிக்கையானது. அதாவது இப்படி நம்மை மோசம் பண்ணின கிருஷ்ணனையே இன்று அனுபவிப்பது என்று தான் கருதிக்கொண்டு வருகிறார் என்று தெரியவருகிறது.

அதாவது, பகவானே நான் சென்ற கோபி வீட்டில் எல்லாம் நீர் இருந்தீர். ஆதலால் சும்மா வந்துவிட்டேன். அதன் நிமித்தம் நான் தேவரீரையே அனுபவிக்க ஆசைப்படுகிறேன் என்று சொன்னதோடு பகவானைப் பெண்ணாகக் கொண்டு அனுபவிக்க அழைத்தால் ஒரு சமயம் வரமாட்டாரோ என்று கருதிப் போலும், பகவானே, என்னைப் பெண்ணாய்க் கொண்டு தாங்கள் அனுபவிக்க வேண் டும் என்கின்ற எண்ணம் கொண்டேன் என்று கெஞ்சினார். பகவான் உடனே கருணை கொண்டு ஸ்ரீமதி நாரத அம்மாளை அனுபவித்தார். எத்தனை காலம் அனுபவித்தார் என்று தெரிய யாராவது வாசகர் ஆசைப்படலாம். இந்த நாரத அம்மையுடன் கண்ணன் 60 வருஷம் லீலை செய்தார். அப்புறம் என்ன ஆயிற்று என்றால் ஆணாயிருந்தால் என்ன, பெண்ணாயிருந்தால் என்ன, பகவான் கிரீடை செய்தால் அது வீணாகப் போகுமோ? போகவே போகாது. எனவே அந்த 60 வருஷ லீலைக்கும் வருஷத்திற்கு ஒரு பிள்ளை வீதம் நாரத அம்மாளுக்கு 60 பிள்ளைகள் பிறந்தன. இந்த 60 பிள்ளைகளும் தகப்பனைப் பிடித்துக் கொண்டு எங்களுக்கு என்ன கதி? என்று கேட்டன. பகவான் அருள் சுரந்து நீங்கள் 60 பேரும் 60 வருஷங் களாக ஆகி ஒவ்வொருவர் ஒவ்வொரு வருஷத்திற்கு உலகாளுங்கள் என்று கருணை சாதித்தார். அதிலிருந்து 60 வருஷங்கள் ஏற்பட்டு அவைகளுக்கு இந்த 60 பிள்ளைகள் பெயர் வைக்கப்பட்டு வருஷம்தோறும் அப்பெயர்கள் மாறி மாறி வருகின்றன.

ஆகவே, இந்த 60 வருஷங்கள் பகவானும் ரிஷியும் ஆன ஆணும் ஆணும், ஆண் பெண்ணாகச் சேர்ந்து பிறந்த குழந்தைகள். இதற்காகத்தான் நாம் வருஷப்பிறப்பு கொண்டாடுகிறோம்.

இப்படி ஆணும் ஆணும் சேர்ந்ததால் பிறந்த அதிசயமான பிள்ளைகளானாலும் இந்த வருஷப் பெயரையோ, எண்ணிக் கையையோ கொண்டு 60 வருஷத்திற்கு மேற்பட்ட காலத்தைக் கண்டு பிடிக்க முடிவதில்லை. அதனால்தான் தமிழ னுக்கு சரித்திரம் இல்லை என்பதோடு தமிழர் சரித்திர காலத்திற்கு விவகாரம் இல்லாமலும் இல்லை.

ஆகையால் இனியாவது தமிழர்கள் இந்த 60 வருஷ முறையைக் காரித் துப்பிவிட்டு கி.பி.யையோ, ஹிஜரி யையோ, கொல்லத்தையோ, விக்கிர மாதித்தனையோ, சாலிவாகனனையோ அல்லது வேறு ஏதாவது ஒரு சனி யனையோ குறிப்பு வைத்துக் கொள் ளுவார்களா? என்றும் அவ்வளவு சூடு சொரணை தமிழனுக்கு உண்டா என்றும் கெஞ்சிக் கேட்கிறோம்.

--------------- தந்தை பெரியார் -" குடிஅரசு" - கட்டுரை - 08.04.1944

15 comments:

தமிழ் ஓவியா said...

சொற்பொழிவாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள் தந்தை பெரியார் பணிமுடிப்போம்!


1938 முதல் 2012 வரை கழகத்தின் பிரச்சாரப் பயணங்கள்

தமிழகம் தழுவிய அளவில் பெரும் விழிப்புணர்வு!

சொற்பொழிவாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்
தந்தை பெரியார் பணிமுடிப்போம்!

கழகத் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

5 முக்கிய நோக்கங்களை முன்னிறுத்தி திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்ட பிரச்சாரப் பெரும் பயணம் குறித்தும், இவற்றில் ஈடுபட்டுச் சிறப் பாகக் கடமையாற்றிய தோழர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

வஞ்சிக்கப்பட்ட தமிழ்நாட்டின் உரிமைக் காப்புப் பிரச்சாரப் பெரும் பயணம் - திராவிடர் கழகத்தின் சார்பில் மார்ச் 23இல் தொடங்கி ஏப்ரல் 11இல் முடிக்கப் பெற் றுள்ளது.

அனேகமாக தமிழ்நாட்டின் முக்கிப் பகுதிகளில் இந்தப் பிரச்சாரம் நடத்தப்பட்டு பெரும் அளவுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இலக்குகள் அய்ந்து

1. ஈழத் தமிழர்கள் - தமிழக மீனவர்கள் பாதிப்பு

2. காவிரி நீர்ப்பிரச்சினை

3. முல்லைப் பெரியாறு பிரச்சினை

4. சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்

5. தமிழிலும் அகில இந்திய நுழைவுத் தேர்வுகள் எழுதும் உரிமை

இவற்றை முன்னிறுத்தி இந்தத் தொடர் பிரச்சாரம் நடைபெற்றுள்ளது. இந்த அய்ந்து பிரச்சினைகளும் தமிழ் நாட்டின் மிக முக்கியமான உரிமைப் பிரச்சினைகள் என்பதை எவரும் ஒத்துக் கொள்வர்.

தமிழ் ஓவியா said...

ஒவ்வொரு கால கட்டத்திலும்...

இதில் அரசியலுக்கு இடமில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்ட சமூகப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகம் தமிழர்களின் உயிர் நாடிப் பிரச்சினைகளை முன்னெடுத் துச் சென்றுள்ளது - வழக்கம் போலவே!

ஒவ்வொரு கால கட்டத்திலும் தமிழ்நாடு, தமிழினம் ஒடுக்கப்பட்ட மக்கள் வஞ்சிக்கப்பட்ட நிலை, ஈழத் தமிழர் வாழ்வுரிமை, சமூகநீதி, மதவாத எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு போன்றவற்றை முன்னிறுத்தி தொடர் பிரச்சாரம் என்கிற பெருமை மிக்க கடமையினை ஆற்றி வருவது திராவிடர் கழகமே!

அந்த அடிப்படையில்தான் இந்தப் பிரச்சாரப் பயணங்களும் மேற்கொள்ளப்பட்டன.

அணித் தலைவர்கள்

மானமிகு தோழர்கள் கழகப் பொதுச் செயலாளர் சு. அறிவுக்கரசு, துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் துரை. சந்திரசேகரன், தலைமைக் கழகப் பேச் சாளர்கள் டாக்டர் அதிரடி க. அன்பழகன், தஞ்சை இரா. பெரியார்செல்வன், இராம. அன்பழகன் ஆகியோர் தலைமையில் இந்தப் பிரச்சாரப் பயணம் பயனுள்ள வகை யில் அமைந்தது கண்டு பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த அணித் தலைவர்களுடன் இணைந்து உரையாற்றிய கழகச் சொற்பொழிவாளர்கள், மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடத்தும் கலைஞர்கள், ஒருங் கிணைப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள், ஓட்டுநர்கள், உதவியாளர்கள் அனைவருக்கும் கழகத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளையும், வாழ்த்து களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் மிகச் சிறப்பான முறையில் நிகழ்ச்சி களை ஏற்பாடு செய்தமைக்காக அவர்களையும் மிகவும் பாராட்டுகிறோம்.

மாவட்ட மாநாடுகளோ!

மதுரை, கரூர், திருச்சி, கடலூர், தாம்பரம் ஆகிய இடங்களில் ஒவ்வொரு அணியின் பிரச்சாரம் நிறைவு அடைந்த பொதுக் கூட்டங்களில் பங்கு ஏற்கும் வாய்ப் பினை நான் பெற்றேன்.
மாநாடுகள் போல் அவை அமைந்திருந்தன. மாவட்ட மாநாடாக அறிவித்திருக்கலாமோ என்றுகூட நான் எண்ணியதுண்டு.

உயிர்ப்புடன் கழகம்

நமது கழகத் தோழர்களின் களப்பணிகள் எந்த அளவு சிறப்பாக இருக்கின்றன என்பதற்கும், நமது கழகச் சொற்பொழிவாளர்கள் எந்த அளவுக்குத் தகவல்களைத் திரட்டித் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கும், கழகம் எந்த எந்த அளவுக்கு வீரியத்துடன் இருக்கிறது என்பதற்கும், பொது மக்களின் எதிர்பார்ப்பும், மதிப்பீடும் எந்த அளவு கழகத்தின்பால் இருக்கின்றன என்பதற்கும் இந்தத் தொடர் சுற்றுப் பயணம் மிகச் சிறந்த எடுத்துக்காட்டும், நிரூபணமும் ஆகும்.

1938 முதல் 2012 வரை

1938இல் இந்தி எதிர்ப்பையொட்டி அஞ்சா நெஞ்சன் அழகிரி அவர்களை அணித் தலைவராகவும் (தலைவர் அய்.குமாரசாமி பிள்ளை, யுத்த மந்திரி திருமலைசாமி) கொண்டு தமிழர் பயணம் ஒன்றினை தந்தை பெரியார் அவர்கள் திருச்சியில் தொடங்கி வைத்தார்.

குலக்கல்வித் திட்ட ஒழிப்பை முன்னிறுத்தியும் நாகப்பட்டினத்திலிருந்து 1954இல் பிரச்சாரப் படை ஒன்று கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டதுண்டு. ஆச்சாரியார் ஆட்சியை விட்டு விலகி ஓடியதற்கு அந்தப் பெரும் பயணம் ஒரு முக்கிய காரணியாக இருந்தது.

1938 தொடங்கி 2012 வரை நமது கழகம் நடத்தும் பிரச்சாரப் பயணம் என்பது வரலாற்றுக்குத் திருப்பம் தரும் (நுயீளைடினநள) நிகழ்வுகளாகும்.
தேவைப்படும் பொழுதெல்லாம் இனியும் இது தொடரும். மீண்டும் அனைவருக்கும் பாராட்டுகள்! தந்தை பெரியார் பணி முடிப்போம்!
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!! 12-4-2012

தமிழ் ஓவியா said...

வென்றார் சூகி


66 வயதை அடைந்த சூகி மியான்மாவில் நடைபெற்ற 44 இடங்களுக்கான இடைத் தேர்தலில் 43 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று, உலக மக்களின் கண்களையும், கருத்துக்களையும், தன் பக்கம் மிக அதிகமாகவே ஈர்த்துள்ளார்.

21ஆம் நூற்றாண்டில் எதேச்சதிகாரத்துக்கு இடமில்லை என்பதற்கான வெளிச்சம் மிகுந்த அடையாளம் இது. 1990இல் மியான்மாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் சூகியின் தேசிய குடியரசுக் கட்சி 86 விழுக்காடு பெற்று மாபெரும் வெற்றியை ஈட்டியது என்றாலும், அதனைப் புறந்தள்ளி இராணுவ ஆட்சி, தன் நங்கூரத்தைப் பாய்ச்சியது.

சூகியின் கட்சி, தில்லுமுல்லுகள் செய்து வெற்றி பெற்றதாக இராணுவ ஆட்சி சொன்னது நல்ல கொழுத்த நகைச்சுவையாகவே கருதப்பட்டது - விமர்சிக்கவும் பட்டது.

இராணுவ ஆட்சி நடைபெறும் ஒரு நாட்டில், ஒரு ஜனநாயகக் கட்சி தில்லுமுல்லு செய்யும் என்று சொன்னால் அதைக் கேட்பவர்கள் எள்ளி நகையாடவே செய்வர்.

என்ன செய்வது! இராணுவ ஆட்சி, தன் அதிகாரத்தை விட்டுக் கொடுக்குமா? ஊரையும், உலகத்தையும் ஏமாற்றத்தான் தேர்தல் நாடகம் எல்லாம்!

குழிபறித்ததும் அல்லாமல், ஆளை அந்தக் குழியிலேயே தள்ளிய குதிரை போல இராணுவ ஆட்சி, வெற்றி பெற்றவர்களை சிறையில் தள்ளி, தன் ஆணவத்தினைக் காட்டிக் கொண்டது.

சூகியின் தந்தையும் ஒரு போராட்ட வீரர். அன்றைய பர்மாவை வெள்ளையர்களிடமிருந்து மீட்கப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்.

சுதந்திர பர்மாவின் முதல் ஆட்சித் தலைவராகப் பதவியேற்கவிருந்த அவர் எதிரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அந்த வகையில் சூகி இயல்பாகவே போராட்டக் குணம் கொண்டவராக இருந்தார். 8.8.1988இல் அன்றைய பர்மாவில் இராணுவ ஆட்சியை எதிர்த்து மக்கள் போராட்டம் வெடித்தது. சூகியும் அதில் பங்கு கொண்டார் விளைவு - வீட்டுக் காவல் சூகிக்கு!

சிறை வைக்கப்பட்ட சூகிக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அந்தப் பரிசை நேரில் சென்று பெற்றுக் கொள்வதற்குக்கூட மியான்மா இராணுவ ஆட்சி அனுமதிக்கவில்லை. அவரின் மூத்தமகன் அலெக்சாண்டர்தான் சூகி சார்பில் சென்று நேரில் நோபல் பரிசைப் பெற்றுக் கொண்டார்.

இன்னும் பெரிய கொடுமை, புற்றுநோயால் அவதிப்பட்ட லண்டனில் இருந்த தன் கணவரைச் சென்று சந்திக்கக்கூட மியான்மாவின் இராணுவ ஆட்சி அனுமதிக்கவேயில்லை. கணவரின் மரண நிகழ்ச்சியில்கூட கலந்து கொள்ள முடியாத ஒரு கொடுங்கோல் ஆட்சியின் கீழ் வீட்டுக் காவலில் இருந்தார்.

சூகி, இங்கிலாந்து செல்ல வேண்டுமானால் மீண்டும் மியான்மாவுக்குத் திரும்பக் கூடாது என்ற நிபந்தனையை விதித்தது இராணுவ ஆட்சி. அதனை சுதந்திரமும், சுயமரியாதை எண்ணமும் கொண்ட சூகி ஏற்றுக் கொள்ளவில்லை. மடிந்தாலும், தம் தாய் நாட்டிலேயே மடிவது என்பதிலே தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார்.

இப்படி அவரின் குடும்ப வாழ்வு, பொது வாழ்வு இரண்டிலும் துயரமான நிகழ்வுகள் ஏராளம்! ஏராளம்!!

இருந்தாலும் அந்நாட்டு மக்கள் அவரை நேசித்தார்கள் - நேசித்துக் கொண்டும் இருக்கிறார் கள். டாவ் என்று அன்பாக அழைக்கிறார்கள், போற்றுகிறார்கள். பர்மிய மொழியில் அந்தச் சொல்லுக்கு அத்தை என்று பொருள், வித்தியாச மான அழைப்புதான்.

இப்பொழுது நடைபெற்ற தேர்தல் இடைத் தேர்தல்தான்; இராணுவ ஆட்சி முறையான முழு தேர்தலை நடத்தும் பட்சத்தில் ஆங்சாங் சூகியின் தேசிய குடியரசுக் கட்சி மகத்தான வெற்றி பெற்று ஜனநாயக ஆட்சியை மலரச் செய்யும் - ஆட்சித் தலைவராகவும் மலர்ந்து மணம் வீசுவார் சூகி என்பதில் அய்யமில்லை.

அந்தக் கால கட்டம், உலகில் எஞ்சியிருக்கும் சர்வாதிகாரிகளுக்கு - இனவெறி ஆட்சி நடத்து வோருக்கு சாவுமணி அடிக்கும் என்பதில் அய்யமில்லை. வாழ்க சூகி! 12-4-2012

தமிழ் ஓவியா said...

சித்திரையில் எங்கிருந்து குதித்தது உழவர் பெருவிழா?


சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்த கூத்து போதாதென்று இந்நாள் 16,564 கிராமங்களில் உழவர் பெருவிழாவாம்.

சித்திரையில் எங்கிருந்து வந்தது உழவர் பெரு விழா? காய்ந்து கருவாடாகிக் கிடக்கும் வயல் வெளிகளில் உழவர்கள் திருவிழா கொண் டாடுவார்களா?

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்து அனைத்துக் கிராமங்களிலும் சமத் துவப் பொங்கலை நடத்திட முதல் அமைச்சராக விருந்த மானமிகு கலைஞர் அவர்கள் ஆணை பிறப்பித்தார்கள் அல்லவா - அதற்கு ஏட்டிக்குப் போட்டியாக எதையாவது நடத்த வேண்டுமே - அதற்காகத்தான் இந்த மாய்மாலம்! தி.மு.க. ஆட்சியில் எதைச் செய்திருந்தாலும், அதற்கு எதிராகச் செய்ய வேண்டும் என்ற குரூர மனப்பான்மைதான் இதிலும் குடிகொண்டு இருக்கிறது. ராஜாஜி முதல் அமைச்சராக இருந்தபோது அவர் செருப்புக் காலோடு ஏர் உழுத காட்சியை அரசு செய்திப் படத்தில் காட்டியபோது ஊரே சிரித்தது.

சித்திரையில் உழவர் பெருவிழா என்கிறபோது இதுதான் நினைவிற்கு வந்து தொலைகிறது.13-4-2012

தமிழ் ஓவியா said...

திருவள்ளுவர் ஆண்டு எங்கே வந்தது?


தை முதல் நாள் - தமிழ்ப் புத்தாண்டு என்று அடிப்படையில்தான் திருவள்ளுவர் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆங்கில ஆண்டில் 31அய் கூட்டி அறிஞர் பெரு மக்களால் அறிவிக்கப்பட்டது.

தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக ஏற்காத நிலையில் அதிமுக அரசு திருவள்ளுவர் ஆண்டினை எப்படி ஏற்றுக் கொண்டு (2043) விளம்பரங்களைச் செய்கிறது? திருவள்ளுவர்மீதும் கை வைத்தால் தமிழர்களின் கடுமையான விமர்சனத்துக்கும், எதிர்ப்புக்கும் ஆளாக நேரிடுமே என்ற அச்சத்தாலா? ஆத்திரப்பட்டு ஒன்றைச் செய்தால் இப்படித்தான் அவதிப்பட நேரும்!
13-4-2012

தமிழ் ஓவியா said...

பி.பி. மண்டல்


இது பெரியார் மண், இந்த மண்ணிலிருந்து ஏராளம் நான் தெரிந்து கொண்டு இருக்கிறேன். பெரியார் தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களுக் காக அயராது பாடுபட் டார். வடக்கே பிற்படுத் தப்பட்ட மக்களுக்காக லோகியா குரல் கொடுத் தார் - பிற்படுத்தப்பட்ட மக்களை ஓ சூத்திரர் களே! என்று தான் விளிப்பார்.

உயர் ஜாதிக்காரர் களின் கைகளில் இருக் கும் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பதவிகள் நம் மக்களுக்கு முட்டுக் கட்டை போட்டுக் கொண்டு தானிருக்கும்.

மார்க்ஸிஸ்டுகள் ஆளும் மேற்கு வங்கத் திலும், ஜனசங்கம் ஆளும் ராஜஸ்தானிலும் பிற்படுத் தப்பட்ட மக்கள் பற்றிய சிந்தனையே கிடையாது.
காகா கலேல்கர் தலைமையில் பிற்படுத்தப் பட் டோருக்கான முதல் ஆணையம் அமைக்கப் பட்டது. அந்த அறிக்கை யின் பரிந் துரைகள் செயல்படுத்தப்பட வில்லை.

நாங்கள் எங்கள் பரிந் துரைகளை அறிக்கை யாகக் கொடுக்கத்தான் முடியும். அதனை செயல் படுத்த வைப்பது உங்கள் கைகளில் குறிப்பாக பெரி யார் பிறந்த இந்த மண்ணில் தான் இருக் கிறது.

ஜாதியால் பிரிந்து கிடக்கக் கூடாது. இந்து மதம்தான் ஜாதியை உண்டாக்கியது. ஜாதியை மறந்து இந்தியா முழுமை யும் உள்ள பிற்படுத்தப் பட்ட மக்கள் ஒன்று சேர வேண்டும்

இப்படி குரல் கொடுத் தவர் யார் தெரியுமா? இரண்டாவது பிற்படுத்தப் பட்டோர் நல ஆணையத் தின் தலைவரான பிந்தேஸ் வரி பிரசாத் மண்டல் (பி.பி. மண்டல்) ஆவார்.

அந்தப் பதவியில் இருந்தபோதே அரிமா குரல் கொடுத்தார். எங்கே? சென்னை பெரியார் திடலில். எப்பொழுது? 30.6.1979 அன்று. பெரியார் திடலில் கொடுக்கப்பட்ட வரவேற்பின்போதுதான் இவ்வாறு குறிப்பிட்டார்.

அந்நிகழ்ச்சியில் பங்கு கொண்டு உரையாற்றிய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக் கையைச் செயல்படுத்தா மல் விட மாட்டோம் என்று மண்டல் முன்னிலையில் சூளுரைத்தார்.

ஆம், இதற்காக 42 மாநாடுகளையும் 16 போராட் டங்களையும் அகில இந்திய அளவில் நடத்தி வெற்றியும் கண்டது - திராவிடர் கழகம் ஆனால் வெற்றியை நேரில் காணும் வாய்ப்பு மண்டல் அவர்களுக்கு கிட்ட வில்லை! இன்று அவரின் நினைவு நாள் (1982). - மயிலாடன் 13-4-2012

தமிழ் ஓவியா said...

சித்திரை1 தமிழ்ப்புத்தாண்டு ஆபாசத்தைஏற்றுக்கொள்கிறீர்களா?
தமிழா, தமிழனாக இரு!
கிருஷ்ண ஜெயந்திக்கும், ஆயுத பூஜைக்கும் வாழ்த்துச் சொல்லும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு என்று சட்டம் செய்வதோ, அதற்கு வாழ்த்துச் சொல்லுவதோ ஆச்சரியமான ஒன்றல்ல!

சித்ரா பவுர்ணமிக்கு தீபம் ஏற்றச் சொல்லி கட்சிக்காரர்களுக்கு அறிக்கை கொடுத்தவராயிற்றே! பக்தர்கள் மண் சோறு சாப்பிடுவது கண்டு புளகாங்கிதம் அடையக் கூடியவராயிற்றே!

அதனால்தான் துக்ளக் சோ ராமசாமி போன்றவர்கள் ஜெயலலிதாவுக்கும் திராவிட இயக்கத்துக்கும் எவ்வித ஒட்டும் உறவும் இல்லை; பெரியார், அண்ணா கொள்கைகளை ஏற்றுக் கொண்டவரல்லர் என்று வெளிப் படையாகக் கருத்துத் தெரிவித்தும்கூட, அதனை இதுவரை மறுக்கவில்லை என்பதிலிருந்தே செல்வி ஜெயலலிதா சோ கூட்டத்தின் கருத்தை ஏற்றுக் கொண்டு விட்டார் என்ற முடிவுக்கு எளிதாகவே வந்துவிடலாம்.


தமிழ்க்கடல் மறைமலையடிகள் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள் 1921இல் கூடி எடுத்த முடிவல்லவா தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பது!

அதில் கலந்து கொண்ட தமிழறிஞர்களும் சாதாரணமானவர்களா? தமிழ்த் தென்றல் திரு.வி.க., தமிழ்க் காவலர் கா. சுப்பிரமணியம் பிள்ளை, சைவப்பாதிரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் நா.மு. வேங்கடசாமி நாட்டார், பசுமலை நாவலர் சோமசுந்தர பாரதியார் இவர்களைவிட முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா தமிழ்ப் புலமையும் - ஆய்வும் கொண்டவரா?

இந்தப் பெரும் புலவர்களின் முடிவைக் கீழே தள்ளி மிதித்துவிட்டு, சித்திரை முதல் நாளில் தமிழ்ப் புலவர்களுக்குச் சிறப்பு செய்யப்படும் என்றால், இதைவிடக் கேலிக் கூத்து வேறு எதுவாக இருக்க முடியும்?

நாவலர் சோமசுந்தரபாரதியார் தலைமையில் திருச்சியில் கூட்டப்பட்ட மாநாட்டில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று கூறப்பட்டு, தந்தை பெரியார் அவர்கள் அதனை ஏற்று மகிழ்ந்தார் என்பதைவிட வேறு என்ன வேண்டும்?

உண்மையான திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்து அதன் கொள்கைகளை ஏற்று மதிக்கும் மனப்பான்மை இருந்தால், தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்தை (23.1.2008) ரத்து செய்யும் (23.8.2011) எண்ணம் வருமா?

2001இல் (சனவரி 6) மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூரில் உலகத் தமிழர்கள் ஒன்றுகூடி தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம் என்று பிரகடனப் படுத்தினார்களே - அந்தத் தமிழ் உணர்வை மதித்திருக்க வேண்டாமா?

சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அம்மையாருக்குத் தாளம் போடுவோரைக் கேட்கிறோம்; நாரதனுக்கும் - கிருஷ்ணனுக்கும் பிறந்த 60 பிள்ளைகள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற ஆபாசத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா? இதுகுறித்து கழகம் எழுப்பிய கேள்வியின் பக்கம் எந்தக் கொம்பரும் தலை வைத்து படுக்கவில்லையே ஏன்? ஏன்?

ஆண்களின் சராசரி வயது 68 ஆகவும் பெண்களின் சராசரி வயது 71 ஆகவும் வளர்ந்து விட்ட ஒரு கால கட்டத்தில், 60 ஆண்டுகளுக்குள் முடங்கி விட்ட ஒரு சுழற்சியை ஏற்றுக் கொள் வதைவிட அறிவின்மையும், அறிவியல் மனப் பான்மையற்ற தன்மையும் வேறு உண்டா?


21ஆம் நூற்றாண்டிலும் இந்த அவலமா? இதில் குறிப்பிடத்தக்க வெட்கக் கேடு என்னவென்றால் தமிழ்த் தேசியவாதிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் சூராதி சூரர்கள் (?) வாயே திறக்காத அவலம்தான்! திண்டுக்கல் பூட்டுப் போட்டு கெட்டியாகப் பூட்டி விட்டார்கள் போலும்!

தமிழா, இனவுணர்வு கொள்!
தமிழா, தமிழனாக இரு!!

--------------- "விடுதலை” தலையங்கம் 13-4-2012

தமிழ் ஓவியா said...

சித்திரைப் புத்தாண்டின் பலன்! பூஜை போட்டுப் பயன் என்ன? பணமும், நகையும் கோவிந்தா!


ஆலந்தூர், ஏப். 14- புத்தாண்டு வழிபாட்டுக்காக சாமி படத்திற்கு முன் வைக்கப்பட்டிருந்த நகை, பணம் கொள் ளையடிக்கப்பட்டது. பூஜை போட்டதன் பலன் என்ன கிடைத்தது? பணமும், நகையும் கொள்ளை போனதுதான் மிச்சம். இதுதான் சித்திரைப் புத்தாண்டிற்குக் கிடைத்த பலன்.
சென்னையை அடுத்த துரைப்பாக்கம் பாண்டியன் நகரை சேர்ந்தவர் ராஜவேல் (வயது 52). கார்பெண்டர். இவர் ஆண்டு தோறும் தனது வீட்டில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நகை, பணம் வைத்து வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது.

கடவுள் படத்திற்கு முன்பு

அதேபோன்று இந்த ஆண்டும் தமிழ் புத்தாண்டு கொண்டாடுவதற்காக வீட்டில் 15 பவுன் தங்க நகைகள், ரூ.25 ஆயிரம் ரொக்கப்பணத்தை கடவுள் படங்களுக்கு முன் வைத்து விட்டு வழிபாட்டுக்காக உறவினர்களை அழைக்கச் சென்றார்.

உறவினர்களை அழைத்து விட்டு இரவு வீட்டுக்கு வந்த அவர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது 15 சவரன் தங்க நகைகளும், ரூ.25 ஆயிரம் ரொக்கமும் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது. இதுகுறித்து துரைப்பாக்கம் காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடவுளிடம் ரூ.3.50 கோடி நோட்டுகள்

அதேபோல தமிழ்ப் புத்தாண்டை யொட்டி கோவை, காட்டூர் அம்பிகை முத்துமாரி அம்மனுக்கு ரூபாய் நோட்டு களால் அலங்காரம் செய்யப்பட்டது. இந்த அலங்கார ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.3.50 கோடி. இதில் ரூ.100, ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பயன் படுத்தப்பட்டன. மனிதனுக்கு பகுத்தறிவு இருந்தால் இதுபோன்று கடவுள் முன்பு பணத்தையும், நகையும் வைக்கலாமா? இந்த இடம் கொள்ளையர்களுக்குத் தெரிய வில்லையோ என்னமோ தெரியவில்லை.

அத்துணையையும் வாரி சுருட்டிக் கொண்டிருப்பான் கடவுள் உட்பட. திருடர்கள் எத்தனை கடவுள்களை கடத்தி கோவில் உண்டியல்களையும் கொள்ளை அடித்து வருகின்றனர் என்பது மக்கள் அறியாத தல்ல. இன்னமுமா கடவுள் மூடபக்தியில் மக்கள் மூழ்கித் திரிவது? சிந்திக்க வேண்டாமா?14-4-2012

தமிழ் ஓவியா said...

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு இல்லையா?

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்ட

வாழ்வியற் களஞ்சியம் என்ன சொல்கிறது?

முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கலைஞர் பதில்

சென்னை, ஏப்.15- சித்திரைதான் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்று கூறும் முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு திமுக தலைவர் கலைஞர் அவர்கள் தரும் ஆதார பூர்வமான பதிலடி இதோ!

உடன்பிறப்பே,

அரசியலுக்காகவும் - சுய விளம்பரத் துக்காகவும் நான் தமிழ்ப் புத்தாண்டை மாற்றியதாக - தமிழறிஞர்களுக்கு விருது வழங்கிய விழாவில் என்னைப் பற்றிய அர்ச்சனையைத் தான் ஜெயலலிதா முழு நேரமும் பாடியிருக்கிறார். தை மாதம் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என் பதைச் சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று ஜெயலலிதா மாற்றியி ருக்கிறார்.
அதற்கு என்ன ஆதாரம் சொல்லி யிருக்கிறார் என்றால், சித்திரையே வா! நம் வாழ்வில் நல் முத்திரை பதிக்க வா என்று சொல்லும் மரபு இருக்கிற காரணத் தால் சித்திரை மாதமே தமிழ்ப் புத்தாண் டுக்கு உரிய பொருத்தமான நாள் ஆகும் என தெய்வத்திரு மதுரை ஆதீனம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார் என்று ஜெய லலிதா பேசியிருக்கிறார். மதுரை ஆதீனம் குறிப்பிட்டு விட்டாராம்! எப்படிப்பட்ட ஆதாரம்?

சித்திரை மாதம் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதற்கு இதுதான் ஆதாரமா?

மேலும் சித்திரை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்க நாள் என்று நானே கடந்த காலத்தில் கூறியி ருக்கிறேன் என்பதை ஜெயலலிதா ஆதாரமாகச் சொல்கிறார். தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் என்று தி.மு. கழக ஆட்சியில் 2008ஆம் ஆண்டு அறிவித்து அதனைச் சட்டமாக ஆக்கும் வரை - சித்திரை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டாக அதிகார பூர்வமாகக் கருதப்பட்டு வந்தது. அந்த நேரத்தில் சித் திரைத் திருநாள்தானே தமிழ்ப் புத் தாண்டு என்று அழைக்கப்பட்டு வந்தது. அந்த நிலையில் அப்படித்தானே அழைத் திருக்க முடியும்!

தை மாதம் முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாகச் சட்டத்தின் மூலம் மாற்றி அமைத்தார் கருணாநிதி. யார் கேட்டது இந்தச் சட்டத்தை? இந்தச் சட்டத்தினால் மக்களுக்கு என்ன பயன்? என்று ஜெயலலிதா பேசி யிருக்கிறார்.

ஜெயலலிதாவிடம் கேட்டது யார்?

தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதை மாற்றி ஜெயலலிதா வந்ததும் வராததுமாக சித்திரைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் கொண்டு வந்தாரே, அவரிடம் யார் கேட்டது இந்தச் சட்டம் வேண்டும் என்று? அவர் மாற்றிய சட்டத்தினால் மக்களுக்கு என்ன பயன்? என்று நாம் திருப்பிக் கேட்க முடியாதா?

சென்னைப் பல்கலைக் கழக நூற் றாண்டு மண்டபம் அரசு விழாக்களுக் குத்தான் வழங்கப்படும். கட்சி நிகழ்ச்சி களுக்குத் தரப்பட மாட்டாது. நடை பெற்றதோ அரசு விழா. 13ஆம் தேதி அங்கே நடைபெற்ற விழாவில் ஜெய லலிதா என்னென்ன பேசியிருக்கிறார்?

அரசு விழாவில் பேசியதெல்லாம் எனக்காக செய்யப்பட்ட அர்ச்சனைகள் தான்!

முதலமைச்சர் என்றால் அதுவும் ஜெய லலிதா என்றால் எங்கே வேண்டுமானா லும், எது வேண்டுமானாலும் பேசலாமா?

தமிழ் ஓவியா said...

தமிழ் மொழியை உலகம் முழுவதும் பரப்புவதற்காக அ.தி.மு.க. ஆட்சிக் காலத் தில் மதுரையிலும், தஞ்சையிலும் உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தினார்களாம்! ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

தி.மு. கழக ஆட்சியில் சென்னையிலும், கோவையிலும் நடந்த உலகத் தமிழ் மாநாடு தமிழ் மொழியை உலகம் முழு வதும் பரப்புவதற்காக அல்லவா? கோவை மாநாட்டிற்குப் பெயரே தமிழ்ச் செம்மொழி மாநாடுதானே?

தஞ்சையில் ஜெயலலிதா முதலமைச்ச ராக இருந்த போது நடத்திய உலகத் தமிழ் மாநாட்டின் லட்சணம் என்ன என்பது தமிழர்களுக்குத் தெரியாதா?

அந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்த வெளி நாட்டுத் தமிழறிஞர்கள், கா. சிவத்தம்பி உட்பட எந்த அளவிற்கு அவ மானப்படுத்தப்பட்டார்கள்? மாநாட்டில் கலந்து கொள்ள விடாமல் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.

மத உணர்வை புண்படுத்துவதாம்

23-8-2011 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் பேசும்போதே, ஜெயலலிதா தமிழ்ப் புத்தாண்டைத் தை மாதம் தொடங்க எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் சித் திரையில் தொடங்குவதற்குப் பல ஆதாரங் கள் உள்ளன. கருணாநிதி, தன் சுய விளம் பரத்துக்காக, மக்கள் மன உணர்வைப் புண்படுத்தும் வகையில் கொண்டு வரப் பட்ட சட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது என்று கடுமையாகச் சாடியிருக்கிறார்.
பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத் தில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா ஆதாரபூர்வமாக பேசுவதாக எண்ணிக் கொண்டு, சித்திரையில் தொடங்கி பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில், அம்மாதத்தின் பௌர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அம்மாதத்தின் பெயராகும். உதாரணமாக, சித்திரை மாதம் பௌர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் சித்திரை ஆகும். இதே போன்று வைகாசி மாதம் பௌர்ணமி அன்று விசாகம் நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் வைகாசி ஆகும். இப்படி ஒவ்வொரு மாதத்திற்கும் இந்த அடிப் படையிலேயே பெயர்கள் வைக்கப்பட்டன என்று சொல்லியிருக்கிறார். ஜெயலலிதா வின் பேச்சு எந்த அளவிற்கு உண்மை என்பதைப் பார்க்கலாம்! தை மாதத்தில் பௌர்ணமி பூசம் நட்சத்திரத்தில்தான் வருகிறது. ஆனால் அந்த மாதத்திற்குப் பூசம் என்ற பெயர் உள்ளதா? மாசி மாதத் தில் பௌர்ணமி மகம் நட்சத்திரத்தில் தான் வருகிறது. ஆனால் அந்த மாதத் திற்கு மகம் என்று பெயர் இல்லையே? பங்குனி மாதத்தில் பௌர்ணமி உத்திரம் நட்சத்திரத்தில்தான் வரும். அந்த மாதத் திற்கு உத்திரம் என்று பெயர் இல்லை. 27 நட்சத்திரங்களில் சித்திரை, கார்த்திகை தவிர மற்ற பெயர்களில் மாதப் பெயர்கள் இல்லையே; இதற்கெல்லாம் முதலமைச்சர் நாளை சட்டப்பேரவையில் விதி 110இன் கீழ் அறிக்கை படிப்பார் என்று நம்புவோமாக!

சென்னைப் பல்கலைக் கழகத்தால் 1912ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட தமிழ்ப் பேரகராதியில் சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று கூறப்பட்டதாக முதலமைச்சர் ஜெயலலிதா பேசியிருக்கிறார்

தமிழ் ஓவியா said...

வாழ்வியற் களஞ்சியம் என்ன சொல்கிறது?

ஆனால் அவரே கூறியபடி அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் - முதலமைச் சர் ஜெயலலிதா புரவலராக இருந்த நேரத்தில் - வெளியிடப்பட்ட வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 13 - பக்கம் 43இல் ஆடிப் பட்டத்தில் தேடி விதைத்து உழைத்து உணவுப் பொருள்களைத் திரட்டிய மக்கள் உத்தராயணம் தொடக்க முறும் தைத் திங்கள் முதல் நாளன்று நன்றியுணர்வுடன் மழைக்கும் வேளாண் மைப் பெருக்கத்திற்கும் காரணமான சூரியனை வழிபடுகின்றனர். சங்கராந்தி யன்று கடவுளுக்குச் சிறப்பான வழி பாடுகள், விழாக்கள் ஆகியன செய்ய வேண்டுமென்று பிருகுசங்கிதை என்னும் நூல் கூறுகின்றது. ஒரு தேவநாள் என்பது ஒரு மானிட ஆண்டு என்றும், அத்தேவநாளின் பகற்பொழுதின் தொடக் கமே தை முதல் நாள் என்றும் அதுவே விழாவாகச் சிறப்பித்துச் செய்யப்படு கின்றது என்றும் ஆகமங்களிலிருந்து அறிய முடிகின்றது. என்று கூறப்பட்டி ருக்கிறது என்பதை அம்மையாருக்கு மிகவும் பிடித்த ஆகம உதாரணத் திலிருந்தே குறிப்பிட்டுக் காட்டுகிறேன்.

2004ஆம் ஆண்டு, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்து, அவரே அணிந்துரையும் வழங்கியுள்ள செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி - நான்காம் மடலம் - மூன்றாம் பாகம் - 111ஆவது பக்கத்தில் தை என்பதற்கு பொருள் கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதாவிற்கு பேச்சு தயாரித்துக் கொடுத்தவர்கள் அந்த நூலையாவது வாங்கி அம்மையாரிடம் காட்டி யிருக்கலாம் அல்லது அவர்களே படித்துப் பார்த்திருக்கலாம். அந்த நூலில் தை என்பதற்குப் பொருளாக தமிழாண் டின் தொடக்க மாதம்(first month of Tamil era)திருவள்ளுவராண் டின் தொடக்க மாதம் (first month of Tiruvalluvar era) என்றுள்ளது. மேலும் அங்கேயே இச் சுறவ மாதமே தமிழாண்டின் தொடக்கம் என்றும் அச்சிடப்பட்டுள்ளது.

அதுபோலவே செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் பேரகரமுதலி - மூன்றாம் மடலம் - இரண்டாம் பாகம் நூலும் அம்மையாரின் அணிந்துரையுடன் வெளியிடப்பட்டுள்ளது. அங்கேயும் சித்திரை என்பதற்குப் பொரு ளாக தமிழாண்டின் முதல் மாதமாகக் கருதப்படும் மேழம் என்று கூறிவிட்டு - சுறவமே தமிழாண்டின் தொடக்கம்; மேழத்தைக் கொள்வது பொருத்த மன்று என்று எழுதியுள்ளார்கள். சுறவம் என்றால் தை மாதம்; மேழம் என்றால் சித்திரை மாதமாகும்.

மறைமலை அடிகளாரின் திட்ட வட்டம்

மேலும் ஜெயலலிதா பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில் பேசும்போது, 1935ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூ ரியில் நடைபெற்ற கூட்டத்தில், திருவள்ளு வர் காலம் இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதென்பது எளிதிற் பெறப்படும். கிறிஸ்து பிறப்பதற்கு 30 ஆண்டுகட்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்து கண்ட முடிவாகும் என மறைமலை அடிகளார் கூறியதாக அய்ந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை ஒட்டி வெளியிடப்பட்ட மலரில் சிறுவை நச்சினார்க் கினியன் கூறியிருக்கிறார் என்று குறிப்பிட் டிருக்கிறார். ஆனால் கிறிஸ்து பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு அல்ல, 31 ஆண்டுகளுக்கு முன்புதான் திருவள்ளுவர் பிறந்தார் என்பதுதான் மறைமலை அடிகளாரின் கருத்து மாகும். அந்தக் கருத்தைத்தான் அரசு ஏற்றுக் கொண்டு பின்பற்றி வருகின்றது. இதைத்தான் மறைமலை அடிகளாரின் மகனும், மறைமலையடிகள் வரலாற்றினை நமக்குத் தொகுத்து வழங்கியவருமான மறை. திருநாவுக்கரசு அவர்கள், மறைமலை அடிகளின் கருத்துப் படி திருவள்ளுவர், கிறித்துவுக்கு 31 ஆண்டுகள் முற்பட்டவர் என்று திட்டவட்ட மாகத் தெரிவித்துள்ளார்.

(தொடரும்) 15-4-2012

தமிழ் ஓவியா said...

அண்ணா காமராசர் பெயர்கள் எங்கே?


சென்னை விமான நிலையத்தின் வெளிநாட்டு முனையத்திற்கு அண்ணாவின் பெயரும் உள்நாட்டு முனையத்திற்கு காமராசர் பெயரும் பிரதமர் மாண்பு மிகு வி.பி.சிங் அவர்களால் சூட்டப்பட்டு இருந்ததே-

புத்தம் புதுப் பொலிவாக இப்பொழுது ஒளிரும் சென்னை விமான நிலையத்தில் தமிழினத்தைச் சேர்ந்த இத்தலைவர்களின் பெயர்கள் காணப் படவில்லையே - என்ன காரணம்?

இருட்டடிப்பா? திட்டமிட்ட சதியா?

இல்லை, பூணூல் அதிகாரிகளின் சூழ்ச்சியா? இன்னொரு கூடுதல் தகவல்! மெட்ரோ ரயில் பணிகள் நடந்து கொண்டு இருப்பதன் காரணமாக சென்னையில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன.

மாற்றங்களை சுட்டிக்காட்டும் கைகாட்டிகளில் ஜெமினி பாலம் என்று போடப்பட்டுள்ளதே! அப்படி ஒரு பாலம் சென்னையில் இல்லையே. நாம் அறிந்த தெல்லாம் அண்ணா மேம்பாலம் தானே! 15-4-2012

தமிழ் ஓவியா said...

தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு தமிழறிஞர்கள் சொன்னது என்ன?


அம்மையார் குறிப்பிட்டுள்ள 1981ஆம் ஆண்டு மதுரையில் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முன்னின்று நடத்திய அய்ந்தாவது உலகத் தமிழ் மாநாட்டினையொட்டிய மலரினை என் வீட்டிலே உள்ள நூலகத்தி லிருந்து தேடிப்பிடித்து சிறுவை நச்சினார்க்கினியன் எழுதிய கட்டுரை 407ஆம் பக்கத்தில் வந்ததை முழுவதும் படித்தேன். அதில் அம்மையார் குறிப்பிட்ட பகுதி 408ஆம் பக்கத்தில் இருந்தாலும், 407ஆம் பக்கத்திலே அவரே என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

தை பிறந்தால் வழி பிறக்கும்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழகத்தின் நெடுநாளைய பழமொழி. சூரியன் சுற்றும் நிலையின் கணக்கினைக் கொண்டு, அந்நாளில் தை முதல் ஆனி ஈறாக ஒரு பகுதியும் ஆடி முதல் மார்கழி ஈறாக மற்றொரு பகுதியும் விளங்கின. ஆடி முதல் மார்கழி ஈறாக உள்ள காலம் இருள் நிலை கொண்டது. தை முதல் ஆனி ஈறாகக் கொண்ட காலம் பகல் நிலை கொண்டது. ஆண்டின் இரவுக் காலமாகிய ஆடி முதல் மார்கழி ஈறாக உள்ள காலத்தில் - அதாவது ஆடிக் காற்றிலும், அடுத்துள்ள அய்ப்பசி மழையிலும், மார்கழிப் பனியிலும் குளிரிலும் இடர்ப்படும் பொழுது மக்கள் உள்ளத்தில் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கை ஒலி பேரொலியாய்க் கேட்கிறது. இந்த இரவு நிலை மாறிப் பகல்நிலை பெற்றுப் பயன்தரும் தைப் பிறப்பு நாளைப் புத்தாண்டின் புனித நாளாய், பிறப்பு நாளாய்ப் பழந்தமிழர் கொண்டாடி வந்தனர்.

இன்றுங்கூட, தைப் பிறப்பைத் தனிப் பெருஞ்சிறப்பாகத் தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆகவே நாம் தைத் திங்களையே ஆண்டின் முதல் திங்களாய்க் கணக்கெடுத்துச் செயற்படுத்துவோம் என்று அவரே எழுதியிருப்பதை அம்மையாருக்குப் பேச்சு எழுதிக் கொடுத்தவர்கள் பார்க்க மறந்து விட்டார்களா? அல்லது பார்த்து விட்டு அம்மையார் மாட்டிக் கொண்டு விழிக்கட்டும் என்று மறைத்து விட்டார்களா?

திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்பது, ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழறி ஞர்களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மை என்பதால் - தைத் திங்கள் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்று அறிவித்து நடைமுறைப்படுத்திட கழக அரசு முடிவு செய்துள்ளது என்று 23-1-2008 அன்று ஆளுநர் உரையில் அறிவிக்கப் பட்டது. 1-2-2008 அன்று சட்டப் பேரவையில் சட்டம் நிறைவேற்றப் பட்டது.

செம்மொழிக்கும் ஆபத்தோ

இதே நிலை தொடருமேயானால் தமிழுக்குச் செம்மொழி என்ற தகுதியை எப்படி கொடுக்கலாம்? அது கருணாநிதி செய்து கொண்ட சுய விளம்பரம், அரசியலுக்காகச் செய்து கொண்ட ஏற்பாடு என்று சொன்னாலும் சொல்லக்கூடும். ஏனென்றால் செம்மொழி என்றாலே, அம்மையாருக்கு அவ்வளவு பாசம்! எட்டிக்காய் தின்றது போல! ஆட் சிக்கு வந்த முதல் நாள் செம்மொழித் தமிழாய்வு நூலகத்தையே தூக்கி வெளியிலே போட்டவர் ஜெயலலிதா. இன்றளவும் அந்த நூலகத் திற்கு இடம் கொடுத்தபாடில்லை.

தமிழ் ஓவியா said...

சென்னைத் தீவுத் திடலில் 6.3.2006 அன்று நடைபெற்ற அய்க்கிய முற்போக்குக் கூட்டணி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் திருமதி.சோனியாகாந்தி அவர்கள், மத்தியிலே அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஏற்பட்டவுடன் தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்திருக்கிறோம். அதன்மூலம் வரலாற்றுப் புகழ்மிக்க தமிழ் மொழிக்கு பாரம்பரியமும் கலாச் சாரப் பெருமையும் தரக்கூடிய மிகப் பெரிய தகுதியினை இந்திய அரசு தந்திருக்கிறது. தமிழ் மொழியைச் செம்மொழியாக்கிய அந்த வர லாற்றுச் சாதனையின் முழுப் பெரு மையும், பங்கும் டாக்டர் கலைஞர் அவர்களையே சாரும். தமிழைச் செம்மொழியாக்குவதில் அவரது பங்கு மகத்தான ஒன்று என்பதை இந்த மேடையிலே நான் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன் என்று பாராட்டினார். இப்படி யெல்லாம் இவனுக்குப் பாராட்டுக் கிடைக்க லாமா என்ற வயிற்றெரிச்சல் காரண மாகத்தான் தேடித் தேடிப் பார்த்து கழக ஆட்சியில் நம்மால் செய்யப் பட்ட சாதனைகளையெல்லாம் மாற்றுவதற்கான முயற்சியிலே ஈடுபட்டுள்ளார். அதிலே ஒன்றுதான் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு நாளை மாற்றுகின்ற செயலாகும்.

புரட்சிக் கவிஞர் என்ன சொன்னார்?

சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத் தாண்டா? தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டா? என்ற கேள்வியை எழுப்பி, நித்திரையில் இருக்கும் தமிழா சித்திரையல்ல உனக்குப் புத்தாண்டு அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே அறிவுக்கொவ்வாத அறுபதாண்டுக் கணக்கு தரணியாண்ட தமிழருக்குத் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு

என்று பாட்டிலே பாடி வைத்த பாவேந்தர் பாரதிதாசன், என்னு டைய சுய விளம்பரத்திற்காக அவர் பாடியதா இக்கவிதை!

தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக ஏற்காத நிலையில், அ.தி.மு.க. அரசு திருவள்ளுவர் ஆண் டினை என்ன செய்யப் போகிறது? தி.மு.கழக ஆட்சியில்தான் 1969இல் திருவள்ளுவர் ஆண்டு ஈராயிரம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. 1972இல் கழக ஆட்சி நடைபெற்ற போதுதான் திருவள்ளுவர் ஆண்டு என்பதை ஏற்று, அரசு இனிமேல் நடைமுறைப்படுத்திட வேண்டும் என்று ஆணையிடப்பட்டது. 1971ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும், 1972ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசிதழிலும் மற்றும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவலகங் களிலும் திருவள்ளுவர் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரு கிறது. ஏன் இன்றளவும் கழக நாளிதழ் முரசொலியின் முகப்பில் திருவள் ளுவர் ஆண்டு 2043 என்றுதான் எழுதப்பட்டுள்ளது. எனவே திருவள் ளுவர் ஆண்டு தொடங்கும் தை முதல் நாள்தான் தமிழர்க்குப் புத்தாண்டு நாள்.

தமிழ் ஓவியா said...

டாக்டர் மு.வ. என்ன சொன்னார்?

மலேசியா நாட்டில் வாழ்கின்ற தமிழர்கள் தை முதல் நாளையே தங்களது புத்தாண்டாகக் கொண் டாடி வருகிறார்கள். தமிழறிஞர் டாக்டர் மு. வரதராசனார் அவர்கள், முன் காலத்தில் வருடப் பிறப்பு சித்திரை முதல் நாளாக இருந்த தில்லை. தை முதல் நாளைத்தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள். அந்த நாள் முதல் எல்லாருடைய வாழ்வும் பல வகையிலும் புதிய வாழ்வாக இருக்க வேண்டும் என்று ஏற்படுத்தி வீட்டில் புதுமை, தெருவில் புதுமை, ஊரெல் லாம் புதுமை, மனதிலும் புதுமை, புதிய பச்சரிசியைப் பொங்குவார்கள். புதிய ஆடைகளை வாங்கி உடுப் பார்கள். தெருவில் புது மண் போட்டு, செம்மண் இட்டு, ஒழுங்கு செய்வார்கள். ஊரெல்லாம் திருவிழா நடத்துவார்கள். இப்படி நகரங்களில் புத்தாண்டுப் பிறப்பாகப் பொங்கல் கொண்டாடுகிறார்கள் - என்று விளக்கியிருக்கிறார்.

முதலமைச்சர் ஜெயலலிதா, தன் பேச்சுக்கு ஆதாரமாக விஞ்ஞான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு, சித்திரை மாதம் வான நூலையும், பருவங் களின் சுழற்சியையும் அடிப்படை யாகக் கொண்டது என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்.

அதற்கு விடையளிப்பது போல, சவுதி மன்னர் பல்கலைக் கழக லேசர் துறை பேராசிரியர் விஞ்ஞானி டாக்டர் வ. மாசிலாமணி அவர்கள் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற தலைப்பில் எழுதியுள்ள நீண்ட தொரு கட்டுரையில்,
ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகச் சூழலில், கிராமத்து வானியல் விஞ்ஞானிகளின் கணக்குப்படி தைத் திங்கள் வையத்திற்கு எல்லாம் புத்துணர்வு கிட்டும் மாதம் என்று சரியாகவே கணக்கிட்டிருக் கிறார்கள். அதனால்தான் மார்கழி கடைசி நாள் பழையனவும், சோம் பலும் கழியும் போகியாகவும் தை முதல் நாளை சூரியனுக்கு நன்றி சொல்லும் பொங்கலாகவும் கொண் டாடியிருக்கிறார்கள். ...... சூரியன் தென்கோடி சென்று நின்று திரும்பி நம்மையெல்லாம் நோக்கும் நாள் தான் உலக உயிர்கள் புத்துணர்ச்சி பெறும் நாள். அந்த நாள் ஜனவரி 14. அந்த நாளைக் கொண்டு துவங்குவது தான் வானியல் வழியான சரியான ஆண்டுத் துவக்கம். ஜனவரி 14-க்கு அதாவது தை முதல் நாளுக்கு இத் துணை சிறப்பு இருக்கிறது. இந்தக் கட்டுரை படிக்கும் விஞ்ஞான ஆர்வலர் கள் மற்றும் மாணவர் களுக்கு ஒரு வேண்டுகோள். இண்டர் நெட் போய் யீநசாநடடி என்று தட்டுங் கள். கட்டாயம் புத்தாண்டுக்கு தைத் திங்களே பொருத்தம் என்பீர்கள் -என்று விளக்கியிருக்கிறார்.

காழ்ப்புணர்ச்சியே காரணம்!

எனவே தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப்புத்தாண்டின் துவக்கம் என்பதை மாற்றி சித்திரை என்று ஜெயலலிதா அறிவித்துள்ள செயல் வழக்கம் போலவே அவரு டைய காழ்ப்புணர்ச்சி, கழக அரசு நடைமுறைப்படுத்திய செயல்களுக் கெல்லாம் ஊறு தேட முற்படுகின்ற சூழ்ச்சிகளிலே ஒன்றே தவிர வேறல்ல!

தமிழ்ப் புத்தாண்டு தைத் திங்கள் முதல் நாள் என்று நான், சுய விளம்பரத்திற்காகச் செய்தேனா? அல்லது அதை மாற்றி சித்திரைத் திங்கள் என்று தற்போது அறிவிக்கும் இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, சுய விளம்பரத்திற்காகச் செய்கிறாரா என்பதை; பல்கலைக் கழக நூற் றாண்டு விழா மண்டபத்தை என்று மில்லாமல் இப்போது புதிதாக தி.மு.க.வினரையும் முன்னாள் முதல மைச்சரையும் ஏசிப் பேசி அரசியலுக் காகப் பயன்படுத்தியுள்ள அநாகரிகச் செயல் குறித்து ஜெயலலிதாவின் கும்பல்தான் விளக்க வேண்டும்!

அன்புள்ள,
மு.க 16-4-2012