Search This Blog

15.1.13

தமிழர்க் கொரு திருநாள் - புரட்சிக்கவிஞர்

தமிழர்க் கொரு திருநாள்
    தமிழர்க் கொரு திருநாள் - அது தைத்திங்கள் முதல் நாள்
    சமயத்துறை அறவே - உயர்
    தமிழ் வாழ்த்தும் பெருநாள்.

    நமை ஒப்பார் யாவர்? - நம்
    தமிழ் ஒப்பது யாது?
    கமழ் பொங்கல் நன்னாள் - புதுக்
    கதிர் கண்ட பொன்னாள்!

    ஏரோட்டும் இரு தோள் - ஒரு
    சீர் போற்றும் திருநாள்!
    ஆரோடும் உண்ணும் - நெல்
    அறுவடை செய் பெருநாள்!

    போராடும் கூர் வாள் - பகை
    போக்குவ தோர் பெருநாள்!
    ஊரோடும் உறவோ - டும்
    உள மகிழும் திருநாள்.

    மாடுகளும் கன்று - களும்
    வாழியவே என்று
    பாடுகின்ற நன்னாள் - கொண்
    டாடுகின்ற பொன்னாள்!

    வீடுதெரு வெங்கும் - எழிற்
    சோடனை விளங்கும்
    நீடுதமிழ் நாடு - புகழ்
    நீட்டுகின்ற திருநாள்!

    ----------------புரட்சிக்கவிஞர்- ”குயில்”: 12.1.60

    3 comments:

    தமிழ் ஓவியா said...

    விஷம் கக்கும் வேதிய விரியன் பாம்பு


    ஒன்று தமிழர்களின் தேசியத் திருநாளான பொங் கலன்று பொங்கிப் பிரவாகித்துள்ளது. அந்த நல்ல' பாம்பு வேறு யாருமல்லர். திருவாளர் சோ' இராமசாமிதான்.

    (1) காங்கிரசில் ஊழல்வாதிகள் அதிகம்; ஆனால் பா.ஜ.க.வில் நேர்மைவாதிகள் அதிகமாம்.

    எந்த அளவு மீட்டரை வைத்துச் சொல்லுகிறார். அவாளுக்கே வெளிச்சம். இராமாயண காலத்திலிருந்து - மனுவாதி காலத்திலிருந்து ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் குல்லூகப் பட்டர் கும்பலாயிற்றே!

    (1) மகா யோக்கியர் அடல் பிஹாரி காலத்தில் என்ரான்' ஊழலில் ஆரம்பித்து பெங்களூரு எடியூரப்பா காலந்தொட்டு ஊழல் சாக்கடை யார் என்று தெரியாதா?

    (2) அடுத்தவன் மனைவியை என் மனைவி என்று கூறி வெளிநாட்டுக்கு ஆள் அனுப்பிய கும்பல் எது?

    (3) பெரிய முதலாளிகளிடத்தில் பெருந்தொகை பெற்றுக் கொண்டு, அவர்களுக்காகக் கேள்வி கேட்டதில் முதல் பரிசைத் தட்டிச் சென்றது பா.ஜ.க.வின் பார்ப்பனக் கும்பல்தானே!

    தமிழ் ஓவியா said...

    (4) சவப்பெட்டியில் கூட ஊழல் செய்யக் கூடிய ஒண் ணாம் நம்பர் பேர்வழிகள் யார்? யார்? யானை லத்தியில் என்ன முதல் லத்தி, இரண்டாம் லத்தி? ஊழல் செய்வதில் காங்கிரஸ் அதிகம் - பிஜேபி கொஞ்சம் என்று சொல்லு வதன் மூலம் ஊழல் முத்திரையிலிருந்து சோவாலேயே' பிஜேபியைக் காப்பாற்ற முடியவில்லை என்றுதானே பொருள்?

    (5) ஊழல் என்பது வெறும் பணப் பிரச்சினைதானா?

    மதச்சார்பின்மை கூறும் இந்திய அரசமைப்புச் சட்டத் தின்மீது சத்தியம் கூறிப் பதவிப் பிரமாணம் எடுத்த பிஜேபி கும்பல் 450 ஆண்டு கால வரலாற்றுப் புகழ் பாபர் மசூதியை இடித்தது எந்த அடிப்படையில் சரி? தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த வழக்கிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள முயன்றாரே அத்வானி, அதற்கு என்ன பெயராம்?

    உலக நாடுகளின் முன் வெட்கித் தலை குனியச் செய்ய வில்லையா? பாபர் மசூதி இடிப்பு வழக்கை நேர்மையான முறையில் சந்திக்கத் திராணியின்றி 20 ஆண்டுகாலமாக ஓடி ஒளிந்து திரியும் கேவலத்திற்கு என்ன பெயர்?

    (1) குஜராத் முதல்வர் மோடிக்குப் பிரதமர் ஆகும் எல்லாத் தகுதிகளும் இருக்கின்றன என்கிறார், சோ.

    ஆமாம். இந்தியாவுக்கு ஒருவர் பிரதமராகும் தகுதி என்ன தெரியுமா? இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறு பான்மை மக்களைக் கொன்று குவிக்க வேண்டும்.

    (2) சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெண்களை வன்புணர்ச்சி செய்யத் தங்குதடையற்ற லைசென்சு கொடுக்கப்பட வேண்டும். கர்ப்பிணிப் பெண்களாக இருந்தால் அவர்களின் வயிற்றைக் கிழித்து, அந்தச் சிசுவைத் தீயில் பொசுக்கிக் குத்தாட்டம் போட வேண்டும்.

    இப்படிப்பட்ட 'வீராதி வீரர்', 'சூராதி சூரர்' மோடியன்றி - இந்தியாவுக்குப் பிரதமர் ஆக வேறு தகுதியுள்ள ஒருவர் கிடைப்பது என்பது அரிதினும் அரிதாயிற்றே.

    இன்னொன்று, அப்படிப் பிரதமர் ஆகக் கூடியவர் உச்ச நீதிமன்றத்தில் நீரோ மன்னன் என்று மகுடம் சூட்டப்பட வேண்டும். சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சக அமைச்சர் 28 ஆண்டு காலம் கடுங்காவல் தண்டனை பெற்றிருக்க வேண்டும்.

    வெளிநாட்டு அரசுகள் அப்படிப்பட்ட பேர்வழிக்கு விசா மறுக்கும்' அளவுக்கு அநாகரிக ஆட்சி புரிந்தவராக இருக்க வேண்டும்.

    (1) அதிமுக ஆட்சியில் ஆசிரியர்கள் நியமனம், அரசு ஊழியர் நியமனம், போலீஸ் தேர்வு ஆகியவற்றில் எந்த ஒரு புகாரும் நிகழவில்லை, தமிழ்நாடு தேர்வாணையத் தலைவராக நட்ராஜ் நியமிக்கப்பட்ட பின் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார். இதுவும் சோ'வின் காண்டக்ட் சர்டிபிகேட்' - அதிமுக ஆட்சிக்கு.

    (2) தனது ஆட்சி வந்தவுடன் அதற்கு முந்தைய ஆட்சியில் நியமனம் செய்யப்பட்டவர்களை ஆயிரக்கணக்கில் சீட்டுக் கிழித்து அனுப்பி ஆனந்தப்பட வேண்டும். பல்லாயிரக்கணக் கான மக்கள் நடுரோட்டில்' நிற்க வேண்டும். அல்லது பல குடும்பங்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்.

    இந்தப் பாதிப்புப் பட்டியலில் எந்த ஒரு பார்ப்பானும் இடம் பெறப் போவதில்லையே.

    நட்ராஜ் தேர்வாணையத் தலைவராக வந்ததும் நிருவாகம் அவ்வளவு சுத்தமாம்!. தேர்வின்போது கேள்வித்தாள் அவுட்' என்ற சாதனையை விஞ்ச வேறு சாதனை உண்டோ சொல்வீர்!

    உதயசந்திரன் அய்.ஏ.எஸ். என்ற நேர்மையான அதிகாரியை தேர்வாணையத்திலிருந்து வெளியேற்றிய மர்மம் என்ன? சோ' கும்பலுக்குத்தான் வெளிச்சம்.

    இப்பொழுது கூட தமிழ்வழியில் படித்தவர்களுக்குப் பணியமர்த்தம் செய்வதில் ஏகப்பட்ட குளறுபடிகள். ஆயிரம் இருந்தாலும் நட்ராஜ் தோளில் பூணூல் தொங்குகிறதே - சோ'வின் பேனா புகழ்மாலை தொடுக்கத்தானே செய்யும்!

    (1) அ.தி.மு.க. ஆட்சியில்தான் சட்டம் ஒழுங்கு சீரடைந்து இருக்கிறதாம் - பேசி இருக்கிறார் சோ.

    இதைச் சொல்லாமல் இருந்திருந்தால் கூட ஓ, 'சோ' சொல்வதில் கொஞ்சம் உண்மை இருக்குமோ என்று சில அப்பாவிகள் நம்பக் கூடும்.

    அதிமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு அழகைச் சிலாகித் துள்ளாரே - இது ஒன்று போதும் சோ' என்பவர் மிகப் பெரிய பொய்யர் என்று விளங்கிக் கொள்வதற்கு. பொழுது விடிந்து பொழுது போனால் கொலை, கொள்ளை, திருட்டு என்ற வைபவங்கள்' தானே ஏடுகளை ஆக்ரமித்துள்ளன?

    டில்லியில் ஒரு மாணவியின் பாலியல் வன் கொடுமைக்குஆளான செய்தியால் நாடே கிடுகிடுத்ததே. அதிமுக ஆட்சியில் எத்தனை எத்தனைக் கொடூரங்கள் இந்த வரிசையில். பார்ப்பன ஊடகங்கள் அந்தச் செய்திகளைக் கழுத்தை நெரித்துக் குழியில் போட்டு மூடி விட்டனவே!

    சோவும், அவரின் துணைவியாரும் அக்னிக் கரங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட அம்மையாரின் ஆட்சியாயிற்றே - காப்பாற்ற வேண்டாமா?

    மத்திய அமைச்சரவையில் தி.மு.க. இடம் பெற்றிருந்தும் தமிழன் நலம் சார்ந்த காவிரி, முல்லைப்பெரியாறு, மத்தியத் தொகுப்பிலிருந்து மின்சாரம் ஆகியவற்றைப் பெற்றுத் தரவில்லையாம்.

    தமிழ் ஓவியா said...

    (1) மத்திய ஆட்சியில் அதிமுக இருந்தபோது காவிரி நீர்ப் பிரச்சினையைத் தீர்த்ததா?

    மத்தியில் அதிமுக ஆட்சி இருந்த காலத்தில் அந்தக் காலகட்டம் எனக்குப் பெரிதும் மன உளைச்சலை ஏற்படுத்திய காலகட்டம் என்ற பிரதமர் வாஜ்பேயிக்கு சோ'வின் பேச்சு சமர்ப்பணம் ஆவதாகுக.

    தமிழர்களின் நீண்டகால கனவுத்திட்டமான தமிழர்கள் நலன் சார்ந்த சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை - ராமன் பாலம் என்று சொல்லி முடக்கும் கூட்டமா, தமிழ்நாட்டின் நலன் பற்றிப் பேசுவது?

    (2) கருணாநிதி சங்கர மடத்தை அடிக்கடி இழுப்பார். அங்கு யாரும் வாரிசுகளை நியமிப்பது இல்லை. சிறுவனாக இருக்கும்போது வேதங்கள் அறிந்திருக்க வேண்டும். குடும்பத்தில் பாசம், ஆசை இல்லாதவராக இருக்க வேண்டும். பல கட்டுப்பாடுகள் இருக்கின்றனவாம் - இதுவும் சோ'வின் பேச்சுதான்.

    (3) அப்படி எல்லாம் 'பொறுக்கி' எடுக்கப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியார்கள் கதை கூவத்தை விட நாறவில்லையா?

    காமகோடிகளின் காம விகாரத்தை பார்ப்பனப் பெண் எழுத்தாளரான அனுராதா ரமணனை அல்லவா கேட்க வேண்டும்!

    ஜெயலலிதாவைப் பாராட்டும் திருவாளர் சோ' காஞ்சி சங்கராச்சாரியார்களை எதற்காக கைது செய்து ஜெயிலில் தள்ளினாராம்?

    உப்புக்கண்டம் பறிகொடுத்த பழைய பாப்பாத்தி போல முழிக்கிறார் திருவாளர் சோ'.

    மானமிகு கலைஞர் அவர்கள் காலத்தில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு, தமிழ் செம்மொழி அங்கீகாரம், சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதப் பார்ப்பனர்களின் சுரண்டலிலிருந்து மீட்பு, சிதம்பரம் கோயிலில் தேவாரம், திருவாசகம் பாடலாம் என்ற ஆணை - வடலூர் வள்ளலாரின் சத்ய ஞானசபையிலிருந்து பார்ப்பனரை வெளியேற்றியது - பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் - இவையெல்லாம் சூத்திரக்' கலைஞரின் சூத்திரர்' பண்பாட்டுக்கான - தந்தை பெரியார் கொள்கை வழிச் செயல்பாடுகள் அல்லவா? சோ' பாம்பு விஷம் கக்காமல் என்ன செய்யும்?

    தமிழன் தன் தோலைக் கிள்ளிப் பார்த்தாவது சொரணை பெற வேண்டாமா?

    தமிழா, இனவுணர்வு கொள்!

    தமிழா, தமிழனாக இரு!!


    - மின்சாரம் - 16-1-2013