Search This Blog

30.8.09

பா.ஜ.க.வின் பரிதாபமும், பார்ப்பனர்களின் பார்வையும்




பாரதிய ஜனதா கட்சியில் இன்று நிலவும் உள்கட்சிச் சண்டையில் பெரும்பாலும் பார்ப்பனர்களின் பார்வை எப்படி இருக்கும் என்பதை திருவாளர் சோ ராமசாமி மூலம் தெரிந்துகொள்ளலாம்.

ஜஸ்வந்த் சிங் எழுதிய நூலில் படேலைப்பற்றி குறை சொல்லப்பட்டுள்ளது என்பதை அந்தக் கட்சியினர் பெரிதுபடுத்துகின்றனர். அதற்குக் காரணம் படேல் இந்துத்துவாவாதிகளுக்குச் சாய்காலாக இருந்து வந்ததுதான். ஜின்னா புகழப்பட்டு இருக்கிறார் என்பதைவிட படேல் குறை சொல்லப்பட்டிருக்கிறார் என்பதுதான் இவர்களைப் பொறுத்தவரை தூக்கலாக இருக்கிறது.

இந்த உண்மையைத் துக்ளக் தலையங்கத்திலும் சோ ஒப்புக்கொண்டும் எழுதியுள்ளார். சர்தார் படேலை பா.ஜ.க. ஒரு முன்னோடியாகக் கருதுகிறது என்பது ஊரறிந்த விஷயம், இதை ஜஸ்வந்த் மட்டும் அறியாதவரா என்ன? இதன்மூலம் எங்களப்பன் குதிருக்குள் இல்லை என்று கூறி தன் அடையாளத்தைக் காட்டிக் கொண்டுள்ளார்.

பார்ப்பனர்களின் எண்ணமெல்லாம் அத்வானியோ, நரேந்திர மோடியோ பா.ஜ.க.வின் தலைமைப் பீடத்துக்கு வரவேண்டும் என்பதுதான்.

ஏனிந்த இருவர்மீது மட்டும் இவர்களுக்குப் பற்று, பாசம்? இவர்கள்தான் ஆர்.எஸ்.எஸின் தீவிரத்தன்மை கொண்டவர்கள் _ இந்துத்துவா என்னும் உலைக் களத்தில் தயாரிக்கப்பட்ட குரூரமான ஆயுதங்கள்.


பா.ஜ.க.வின் ஆட்சிமன்றக் குழுவிலும், தேர்தல் குழுவிலும் நரேந்திர மோடிக்கு இடம் இல்லை என்ற நிலையில், இதனைக் கண்டித்து எழுதியவர்தான் இந்த சோ (துக்ளக், 14.2.2007, தலையங்கம்).

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் என்ற ஒன்றைக் கற்பித்து சிறுபான்மை மக்களான 2000 முஸ்லிம்களைக் குரூரமான முறையில் கொன்று குவிப்பதற்கும், அவர் களின் வீடுகளையும், வணிக நிறுவனங்களையும் எரியூட்டி சாம்பல் ஆக்கியதற்கும் பின்னணியில் இருந்தது நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சியே! சகல அதிகாரங்களையும், சக்திகளையும் பயன்படுத்தி இந்தப் படுகொலைகளும், திட்டமிட்ட நாச வேலைகளும் நடந்தன.

குற்றவாளிகள்மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மீண்டும் பல வகையில் புலன் விசா ரணை நடத்தி வழக்குகளை நடத்தவேண்டும் என்று உச்சநீதிமன்றமே ஆணையிட்டுள்ளது என்றால், நிலைமையைப் புரிந்துகொள்ளலாமே!

இவ்வளவுக் குரூரமான ஒரு ஆசாமி பதவி விலக வேண்டும் என்று பிரதமராக இருந்த வாஜ்பேயியே விரும்பிய நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போட்டவர் அத்வானிதான் என்ற உண்மைகளும் வெளியில் வந்துவிட்டன.

அத்வானியோ, மோடியோ தான் தலைமைப் பொறுப்புக்கு வரவேண்டும் என்று பார்ப்பன சக்திகள் விரும்பியதற்குக் காரணமே ஹிட்லர் பாணியில் சிறுபான்மை மக்களை முற்றிலுமாக அழிக்கக் கூடிய மனநோயாளிகள் இவர்கள்தான் என்று உறுதியாக அடையாளம் கண்டதுதான் - நம்பியதுதான்.

அத்வானி தலைமையில் தானே பா.ஜ.க. தோற்றது? மோடி பிரச்சாரம் செய்தும்தானே தோற்றது? என்ற கேள்வி எழலாம். உண்மைதான். அவ்விருவரின் முயற்சிகள் இல்லையென்றால், இந்தளவுகூட வெற்றி கிட்டியிருக்காது. தோல்வி இன்னமும் கடுமையாக இருந்திருக்கும் என்று சப்பைக் கட்டு கட்டும் (துக்ளக் தலையங்கம், 2.9.2009) சாமர்த்தியத்தை ரசிக்கவேண்டும்.

கொலைக் குற்றவாளியாக நிறுத்தப்பட்ட ஒருவனின் வழக்குரைஞர் _ என் கட்சிக்காரர் அந்த இடத்தில் இருந்ததால்தான் குறைந்த அளவு கொலைகள் விழுந்தன. வேறு யாராவது இருந்திருந்தால் அன்றைய சூழலில் மேலும் பல கொலைகள் விழுந்திருக்கும்; அதனால் என் கட்சிக்காரரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரினால் எப்படியிருக்கும்? இந்தப் பாணியில் தான் இந்த ஞாயிற்றுக்கிழமை வக்கீலான திருவாளர் சோ வக்காலத்துப் போட்டு எழுதுகிறார்.

என்னதான் சாமர்த்தியத்தைக் காட்டினாலும், எடுத்துக்கொண்ட வழக்கின் பலகீனம் அவரைக் குப்புறத் தள்ளிவிட்டது; பிள்ளை பிழைத்தபாடில்லை; விளக்கெண்ணெய்க்குக் கேடாகத்தான் முடிந்துள்ளது.

கட்சியின் சகலப் பொறுப்புகளிலிருந்து விலகு வதாகவும், திட்டமிட்டிருந்த ரத ஊர்வலத்தையும் கைவிட்டதாகவும் அத்வானி கூறும் நிலை ஏற்பட்டுவிட்டது.

லஸ்கர் தீவிரவாதிகள் 160 பயணிகளுடன் விமானத்தைக் கடத்திய நிகழ்வில், தீவிரவாதிகளை விடுதலை செய்ததும், அவர்களைப் பத்திரமாக காந்தகாரில் கொண்டு விட்டதும் தமக்குத் தெரியாது என்று உள்துறை அமைச்சராக இருந்த ஒருவர் (அத்வானி) எழுதுகிறார் என்றால், எப்படிப்பட்ட நாணயக்காரராக இருக்கவேண்டும். இத்தகைய வர்கள்தான் சோ போன்ற பார்ப்பனர்களின் கண்ணில் பிரமாதமான மனிதர்கள், வெட்கக்கேடு!


-------------------"விடுதலை" தலையங்கம் 29-8-2009

2 comments:

அஹோரி said...

திராவிடத்த சொல்லி ஒரு கயவன் பிள்ளைகளுக்கு , ஆயிரம் வம்சாவழிக்கு சொத்து சேர்த்து கிட்டு இருக்கார்(ன்) . நமக்கு இன்னும் பிராமணன் மேல தான் காண்டு.

நம்பி said...

//அஹோரி said...

திராவிடத்த சொல்லி ஒரு கயவன் பிள்ளைகளுக்கு , ஆயிரம் வம்சாவழிக்கு சொத்து சேர்த்து கிட்டு இருக்கார்(ன்) . நமக்கு இன்னும் பிராமணன் மேல தான் காண்டு.
August 30, 2009 11:14 PM //

இந்து இந்து...என்று சந்து பொந்துக்களிலெலாம் மதவெறி வாட்ச் மேன்களாக இருக்கும் பூணூல் ஊத்தாச்சாரியார்களின் காஞ்சி சங்கரமடத்திற்கு சேர்த்துள்ள 5000 கோடியை விடவா..?

பார்ப்பான்...சோம்பேறி பார்ப்பானுக்காக பிச்சையெடுத்து, பிடுங்கி சேர்த்த சொத்தே இவ்வளவு தேருதே!...அம்மாடியோ!