Search This Blog

25.8.09

ஜெயேந்திர சங்கராச்சாரி கடைந்தெடுத்த பொய்யர்-சோ ஒரு நாணயங்கெட்ட, யோக்கிய தன்மை இல்லாத நபர்



திராவிடர் கழகம் இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கிறதா? கிறித்து,இஸ்லாம் மதங்களை விமர்சிக்கவில்லையா?

சங்கராச்சாரிகள் தாழ்த்தப்பட்டவகளுக்காக பாடுபடுகிறார்கள் என்று சொல்லப்படுவது உண்மையா?

சங்கராச்சாரியார் பேச்சைகேட்டு துக்ளக் “சோ” ஆள்காட்டி வேலை பார்த்தது உண்மையா?

சங்கராச்சாரி வேண்டிக் கொண்டதால்தான் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு காய்ச்சல் வந்ததா?

இவ்வளவுக்கும் பிறகும் பெரியார் தொண்டர்களின் பெருந்தன்மை எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்ளவும்,

இது போல் பல உண்மைச் செய்திகளை அறிந்து கொள்ள


("எதிரொலி" நாளேட்டில் அன்றாடம் சுயமரியாதைக் கருத்துக்களை கட்டுரைகளாக வடித்து வரும் சின்னக் குத்தூசி - ஞானி அவர்கள் - கஞ்சி சங்கராச்சாரியை நேரில் கண்ட கருத்தாழ மிக்க பேட்டி)

1983 ஆம் ஆண்டு உண்மை நாடுவோர் வெளியிட்டுள்ள சங்கராச்சரியாரின் முகத்திரையை கிழித்தெறிந்த “சின்ன சங்கராச்சாரி –யார் ?” என்ற நூலில் உள்ள கட்டுரைகள் இங்கு பதிவு செய்யப் படுகிறது. நமது வாசகர்கள் ஊன்றிப் படித்து உண்மையை அறிய வேண்டுகிறோம் -

நன்றி


*************************************************************************************
சின்ன சங்கராச்சாரி - யார்?


பகுதி - 4



"சோ" மறுப்பு:

(15.4.83 'துக்ளக்' இதழில் சோ வெளியிட்ட மறுப்பு அறிக்கை இது)

அன்புடையீர், வணக்கம்.

தாங்கள் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணியுடன் நடத்திய கலந்துரையாடல் அறிவார்ந்த கருத்துச் செறிந்த, இரண்டு வழக்குரைஞர்களின்போராகவே இருந்தது.

ஆனால், 3.4.83 'எதிரொலி' நாளிதழில் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை சின்னக்குத்தூசி கண்டெழுதியுள்ள கலந்துரையாடலில்சங்கராச்சாரியார், 'நான்தான் சோவை வீரமணியிடம் அனுப்பினேன். நான் எழுதிக் கொடுத்த கேள்விகளைத்தான் சோ, வீரமணியிடம் கேட்டார்" என்றுகூறியுள்ளார்.

இது எவ்வளவு அபத்தம் என்பதை எண்ணி நான் மிகவும் வருந்துகிறேன். 'லாஜிக்' என்பார்களே, 'தர்க்கவாதத்' துறைக்கு தாங்கள் முடிசூடா மன்னர்போன்றவர் என்பதை, தர்க்கவியலைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்தவர் உணர்வர். இது தங்களை மகிழ்விக்க வேண்டுமென்று எழுதப்படவில்லை.ஏனென்றால், 'துக்ளக்' படிப்பவர்கள் அப்படிப்பட்டவர்களல்ல என்பதைத் தாங்கள் பன்முறை கூறியுள்ளீர்கள்.

எனவே, என் போன்ற பலர் இதுபோல் சங்கராச்சாரியார் கூறியதைக் கேட்டு வருந்துகிறோம். வீரமணி சொல்லியிருக்கிற பதில்களையெல்லாம் இவர் உணர்ந்து அதற்கு மறுவினாவையும் தங்களிடம் அனுப்பியதுபோல், சங்கராச்சாரியார் கூறியுள்ளமை குறித்து தாங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்என்பதை அறிய என் போன்றவர்கள் ஆவலாயுள்ளோம்.

காஞ்சி சங்கராச்சாரியின் பேச்சைத் தாங்கள் தெளிவுறுத்தி, 'தன்னிலை விளக்கம்' அளிப்பின் என் போன்றோர் தெளிவுற ஏதுவாகும்.

----------------அ.மகிமை, வேலூர் 63

(ஆசிரியர் குறிப்பு: இந்த வாசகர் குறிப்பிட்டிருப்பது போல், இந்த விஷயம்பற்றி நான் விளக்கமளிப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது.)



டியர் மிஸ்டர் வாசகரே!

ஆசார்ய சுவாமிகள் கூறியுள்ளதாக 'எதிரொலி'யில் வெளியாகியுள்ளதை நானும் படித்தேன்.

ஆசார்ய சுவாமிகளிடமே நேரில் சென்று, இது பற்றி அவருடைய கருத்தைச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டேன்.

பிரசுரத்திற்காக அல்லாமல் சில கருத்துக்களை எதிரொலியின் பிரதிநிதிகளுடன் பேசிக் கொண்டிருந்ததாக சுவாமிகள் கூறினார். ஆனால் தான்சொல்லாதவற்றை ஆங்காங்கே சேர்த்தும், சொல்லிய சிலவற்றை ஆங்காங்கே விட்டும், சம்பாஷணையின் சில பகுதிகளை முற்றிலுமாக விட்டும்'எதிரொலி' கட்டுரை வெளியிட்டிருக்கிறது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

துக்ளக்கில் வெளியான வீரமணி பேட்டியைப் பற்றி பேசுகையில், 'இந்து மத நம்பிக்கைகளைப் பற்றித்தான் எல்லோரும் தாக்குவீர்கள். மற்றமதங்களைப் பற்றிக் கேட்டால், பதில் கூறாமல் நழுவி விடுவீர்கள். வீரமணியை சோ பேட்டி கண்ட போது இப்படித்தான் நடந்திருக்கிறது. சரியாகவே பதில் சொல்லவில்லை' என்று சுவாமிகள் குறிப்பிட்டிருக்கிறார் அவ்வளவுதான்.

நடக்காத ஒன்றை நடந்ததுபோல் கூற வேண்டிய அவசியமும், நடந்தவற்றை நடக்காததுபோல் காட்டும் அவசியமும் கட்சி சார்புள்ள பத்திரிகைகளுக்குவேண்டுமானால் ஏற்படலாம்.

ஸ்ரீ சங்கராச்சார்ய சுவாமிகளுக்கு அந்த மாதிரி ஏற்பட நியாயம் இல்லை. இன்னொரு விஷயத்தையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சென்னையில்ஆசார்ய சுவாமிகள் முன்னின்று வெற்றிகரமாக நடத்திய கலாச்சார விழா, ஊர்வலம் போன்றவைகளுக்கு பிறகு எதிரொலி இந்தக் கட்டுரையைவெளியிட்டுள்ளது. ஆசார்ய சுவாமிகளைச் சந்தித்த போதே அதுபற்றி வெளியிடாமல் திடீரென்று அந்த விழாவுக்குப் பிறகு வெளியிடுவானேன்?

வீணாக அவருடைய பெயரை சர்ச்சைக்குரிய வகையில் இழுத்திருப்பது வருந்தத்தக்க விஷயம்.

--------------------------சோ.

*********************************

சின்னக்குத்தூசி எழுதிய பதில்

காஞ்சி காமகோடிபீடம் ஜீனியர் சங்கராச்சாரியாரை அவரது விருப்பத்திற்கிணங்கவே நாம் சந்திக்க நேர்ந்தது. ஏழெட்டு தடவைகள் அவர் சொல்லிஅனுப்பிய பின்னரே, நாம் அவரை சந்திக்க ஒப்புக் கொண்டோம்.

சங்கராச்சாரியார் போன்ற துறவிகள் குறைந்தபட்சம் பொய் சொல்லாத நேர்மையானவர்களாகவாவது இருப்பார்கள் என்று நாம் நம்பினோம். ஜீனியர்சங்கராச்சாரியார் நமது நம்பிக்கையின் அஸ்திவாரத்தையே தகர்த்துத் தூள்தூளாக்கி விட்டார்.

பொய்யர், கடைந்தெடுத்த பொய்யர் என்பவருக்கு ஒரு உதாரணம் வேண்டும் என்றால் காஞ்சி ஜீனியர் சங்கராச்சாரியாரை கண்ணை மூடிக்கொண்டுஉதாரணம் காட்டி விடலாம். அந்த அளவுக்கு அவர் தம்மை வடிகட்டிய பொய்யர் என்று துக்ளக் சோ மூலம் அடையாளம் காட்டிக்கொண்டிருக்கிறார்.

காஞ்சி சங்கராச்சாரியார் நம்முடன் பேசியது என்ன என்பதற்கு இரண்டு பேர் சாட்சியம் உண்டு. ஒருவர் பரீக்ஷா நாடக அமைப்பின் தலைவர் ஞாநி.மற்றொருவர் காஞ்சி சங்கராச்சாரியாரின் அத்யந்த சீடரும் கார்ப்பரேஷன் பாங்கின் கெல்லீஸ் கிளை நிர்வாகியுமான சீனிவாசன்.

காஞ்சி ஜீனியர் நம்மிடம் உரையாடியபோது "நான் தான் சோவை வீரமணியிடம் அனுப்பினேன். நான் எழுதிக் கொடுத்த கேள்விகளைத்தான் சோவீரமணியிடம் கேட்டார்" என்று சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை!

ஆனால் இப்போது அவர் சோவிடம் அப்படிச் சொல்லவில்லை என்று மறுப்புத் தெரிவித்து விட்டார். சங்கராச்சாரியார் அப்படி மறுப்புச் சொல்லியிருந்தால் அவரைப்போல ஒரு கடைகெட்ட பொய்யரை துறவி என்று நம்பி சந்திக்கச் சென்றதற்காக வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளநேரிடும்.


நம்மிடம் பேசியபோது மணியன் உள்ளிட்ட பலரையும் அவன், இவன் என்றே அவர் தரக்குறைவாகப் பேசினார்.

"மணியனுக்கும் எனக்கும் ஸ்நானப் பிராப்தி கூட கிடையாது. மணியன் பிசினஸ் பேர்வழி. இப்போது இந்து மதத்தை ஆதரிப்பதால் பிசினஸ் நடக்கிறது. நாளைக்குகருணாநிதி ஆட்சிக்கு வந்தால் மணியன் கருணாநிதியின் பின்னால் போய்விடுவான்" என்று ஜீனியர் கூறியதை எல்லாம் நாம் நாகரீகம் கருதி நமது பேட்டிக்கட்டுரையில் குறிப்பிடாமலே விட்டுவிட்டோம்.

அது மட்டுமல்ல; பெரியார் கொள்ளையடித்துப் பணம் சேர்த்து வைத்திருப்பதாகவும் ஜீனியர் சொன்னார். அப்போது நாம் ஜீனியரிடம்,

"அப்படிச் சொல்லாதீர்கள். அகில இந்தியாவில் பெரியார் ஒருவர்தான் பொதுமக்கள் தாங்களாக விரும்பி தமக்கு அளித்த சொத்தை எல்லாம் தன்வாழ்க்கைக்கு என்று பைசாகூட எடுத்துக் கொள்ளாமல் கோடிக்கணக்கில் சேர்த்து, அதைப் பொதுமக்கள் நன்மைக்காகவே டிரஸ்ட் எழுதிவிட்டுப்போன தலைவர்.


பெரியாரின் சிக்கனம் பிரசித்தி பெற்ற ஒன்று; கஞ்சன் கருமி என்றெல்லாம் சொல்லும்படியாக ஒவ்வொரு பைசாவையும் செலவழிப்பதற்கு முன் பலமுறையோசித்து செலவு செய்து, சிக்கனத்திற்கே ஓர் இலக்கணமாக திகழ்ந்தவர் பெரியார்

.பெரியார் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் அப்படிப்பட்ட பெரியார் மக்கள் தமக்கு தந்த பொருள் எதையும் தமது குடும்பத்தாருக்கு உயில் எழுதிவைத்து விடாது, பொது நன்மைக்கே ஏற்பாடு செய்துவிட்டுப் போனார்.

ஆனால் பெரியாரின் சமகாலத்தில் திருவண்ணாமலை குகையில் ஒரு அரை நிஜாருடன் ஒரு சிறுவன் உட்கார்ந்தான். அந்த அரைநிஜார் சிறுவனே பின்னர் ரமணமகரிஷி என்றும் பகவான் ரமணர் என்றும் அழைக்கப்பட்டவர்.

அரை நிஜாருடன் குகையில் வந்து அமர்ந்த ரமணருக்கும் மக்கள் கோடிக்கணக்கில் காணிக்கை என்ற பேரில் ஏராளமாய் சொத்தை சேர்த்துத்தந்தார்கள். அந்த பகவான் ரமணரிஷி இறந்து போவதற்குள் என்ன செய்தார் தெரியுமா? தனது தம்பியின் பெயருக்கு உயில் எழுதி வைத்துவிட்டுப்போனார்.


ஆகவே, பெரியார் பற்றி அப்படி எல்லாம் சொல்லாதீர்கள்" என்று ஒரு நீண்ட பிரசங்கம் என்று சொல்லத்தக்க அளவுக்கு ஒரு விளக்கம் தந்தோம்.

ஜீனியர் சங்கராச்சாரி உடனே "கொள்ளையடித்த பணம் என்று நான் சொல்லவில்லை. கொள்ளைப் பணம் வைத்துவிட்டுப் போயிருக்கிறார் என்றுதான்சொன்னேன். கொள்ளை அழகு என்று சொல்வதில்லையா அதுபோல்; நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டு விட்டீர்கள்" என்று தம்மைத் திருத்திக்கொண்டார்.

நாம் 'எதிரொலி'யில் எழுதிய பேட்டிக் கட்டுரையில் இந்தப் பகுதியையும் விட்டுவிட்டோம். காரணம், அவரே வருத்தம் சொல்லிவிட்ட பிறகு அதைஏன் எழுத வேண்டும் என்ற நாகரீகம் கருதி பிரசுரிக்காமல் விட்டோம்.

அது போலவே,

"குன்றக்குடி அடிகளார் என்ன பேசுகிறார் என்றே அவருக்குப் புரியவில்லை! சமயத்தைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பார். திடீர் என்று மார்க்ஸ் லெனின் என்று போய்விடுவார்" என்று ஜீனியர் கூறியதையும் நாம் அன்று பிரசுரிக்கவில்லை.


இப்படி நாம் பிரசுரிக்காமல் விட்ட பகுதிகள் அனைத்துமே காஞ்சி ஜீனியரின் உண்மை உருவத்தை தோலுரித்துக் காட்டக் கூடிய பகுதிகள்தாம்.

எனினும் நாகரிகம் கருதி நாம் அதனை எல்லாம் பிரசுரிக்காமல் விடுத்தோம். ஆனால் சோவுக்கு ஜீனியர் சங்கராச்சாரி தெரிவித்துள்ள மறுப்பை படித்தபிறகு, இந்த மாதிரி பொய்யர்களிடம் நாகரீகமாவது புடலங்காயாவது என்ற வருத்தமே மேலோங்கி நிற்கிறது.

"நான்தான் சோவை வீரமணியிடம் அனுப்பினேன். நான் எழுதிக்கொடுத்த கேள்விகளைத்தான் சோ வீரமணியிடம் கேட்டார்" என்று சொல்லவில்லைஎன்று மறுப்புத் தெரிவித்திருக்கிறார் சங்கராச்சாரி.

சங்கராச்சாரி எவ்வளவு பொய்யரோ அந்த அளவுக்கு சோ ஒரு நாணயங்கெட்ட, யோக்கிய தன்மை இல்லாத நபர் என்பதும் சோ துக்ளக்கில் எழுதியுள்ள விளக்கத்திலிருந்து புலனாகிறது.


" 'சங்கராச்சாரியாரை நேரில் கேட்டேன்; அவர் அப்படிச் சொல்லவில்லை' என்று மறுப்பு தெரிவித்து விட்டார்" என்று எழுதியிருந்தால் சோவை நம்மால்மதிக்க முடியும்!

'எதிரொலி'யில் சங்கராச்சாரியார் பேட்டி வந்த மறுநாளோ அதற்கு மறுநாளோ, சோ 'எதிரொலி'க்கு போன் செய்து ஞாநியிடமும் நம்மிடமும்

"சங்கராச்சாரியார் அப்படித்தான் சொன்னாரா? அதைப் படித்ததிலிருந்து ரொம்ப வேதனையா இருக்கின்றது" என்றெல்லாம் பிரலாபித்தார் சோ!

அதுமட்டுமல்ல;

"சங்கராச்சாரியார் சொன்னதை நீங்கள் நம்பிவிட்டீர்களா?" என்று வேறு திரும்பத் திரும்பக் கேட்டார். அப்படிப்பட்ட 'சோ' இப்போது என்னஎழுதுகிறார்?

நடக்காத ஒன்றை நடந்ததுபோல் கூறவேண்டிய அவசியமும், நடந்தவற்றை நடக்காததுபோல் காட்டும் அவசியமும் கட்சி சார்புள்ள பத்திரிகைகளுக்குவேண்டுமானால் ஏற்படலாம். ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகளுக்கு அந்த மாதிரி ஏற்பட நியாயமில்லை" என்று எழுதி இருக்கிறார் சோ.





எதிரொலி பற்றிய, அவநம்பிக்கையையும், சங்கராச்சாரியார் மீது தமக்குள்ள நம்பிக்கையையும் இந்த இரண்டு வாக்கியங்கள் மூலம் கோடிட்டு காட்டிஇருக்கிறார் சோ.

இந்த இரு வாக்கியங்களும் சோ எவ்வளவு நாணயங்கெட்ட மனிதர், யோக்கியத்தன்மை இல்லாதவர் என்பதையே தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. கட்சிப்பத்திரிகை என்றால் திரித்தும் மறைத்தும்தான் எழுதும். சங்கராச்சாரியார் அப்படிப்பட்டவர் அல்ல என்பதுதான் சோ வின் நம்பிக்கை என்றால்,

எதிரொலிக்குப் போன் செய்து

"சங்கராச்சாரியார் அப்படித்தான் சொன்னாரா?" என்று கேட்க வேண்டிய அவசியம் என்ன?

"சங்கராச்சாரியார் அப்படிச் சொன்னதை நீங்கள் நம்பி விட்டீர்களா?" என்று நம்மிடம் கேட்க வேண்டிய அவசியம் என்ன?

சரி, சங்கராச்சாரியார் அப்படி எல்லாம் சொல்லக் கூடியவர் அல்ல என்று உண்மையாகவே அவர் நம்பும் பட்சத்தில் சங்கராச்சாரியரிடம் போய் "நீங்கள்அப்படிச் சொன்னீர்களா?" என்று கேட்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது?

கட்சிப் பத்திரிகை என்றாலே அப்படித்தான் திரித்து எழுதும் என்று எழுதுகிற "சோ" யோக்கியரானால்,

"எதிரொலிக்கு டெலிபோன் செய்து 'நீங்கள் நம்பிவிட்டீர்களா?' என்று கேட்டிருக்க மாட்டார். அதுபோலவே, "ஸ்ரீசங்கராச்சாரிய சுவாமிகளுக்கு அப்படிஏற்பட நியாயமில்லை" என்று இப்போது விளக்கம் எழுதும் சோ நாணயம் வாய்ந்த மனிதர் என்றால்,

சங்கராச்சாரியாரைச் சந்தித்து "நீங்கள் அப்படிச் சொன்னீர்களா?" என்று கேட்டிருக்க மாட்டார்.
ஆனால், சோ எப்படிப்பட்டவர்?

இந்த மாதிரி பிறருக்காக உளவு பார்ப்பது காட்டி கொடுப்பது போன்றவற்றில் இவர் கைதேர்ந்தவராகவே இருக்கிறார்.

சங்கராச்சாரியாருக்காக வீரமணியிடம் வேவு பார்த்தது முதல் முறையாக நடந்தது அல்ல. அ.தி.மு.க. மந்திரிசபையிலிருந்து விலகிய சவுந்திர பாண்டியன் "சோஎன்னுடைய நடவடிக்கைகளை சி.அய்.டி. மாதிரி கண்காணிக்கிறார்; உளவு பார்க்கிறார்" என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

அப்போது சோ துக்ளக் ஏட்டின் முதல் பக்கத்திலேயே "அப்படி சி.அய்.டி. வேலை பார்த்தது உண்மை" என்று ஒப்புக் கொண்டார். "ஒரு பெரிய மனிதருக்காக,ஒரு நல்லவருக்காக, நான் அந்த மாதிரி நடந்து கொள்ள வேண்டியது ஆயிற்று" என்று பகிரங்கமாக தமது ஒட்டுக் கேட்கும் வேலை உளவு பார்க்கும்வேலை பற்றி ஒப்புக் கொண்டிருக்கிறார்.

"சங்கராச்சாரியார் அப்படிச் சொன்னதை நீங்கள் நம்பிவிட்டீர்களா?" என்று சோ நம்மிடம் கேட்டபோது, நாம் "நம்பவில்லை" என்றே தெரிவித்தோம்.அதுமட்டுமல்ல.

"இப்போதே மறுப்பு எழுதி அனுப்பிவிடுவேன். ஆனால் நீங்கள் "சங்கராச்சாரிமீது சோ கடும்தாக்கு" என்று போட்டுவிடுவீர்கள். அதனால்தான்யோசிக்கிறேன்" என்று சொன்னபோது கூட "வேண்டாம்; நீங்கள் துக்ளக்கிலேயே போடுங்கள்" என்று பதில் சொன்னோம்.

சங்கராச்சாரியார் சொன்னது என்ன?" என்பது குறித்து சங்கராச்சாரியைச் சந்தித்த மறுநாளே வீரமணி அவர்களைச் சந்தித்து நாம் சொன்னோம். அப்போது சோ பற்றி சங்கராச்சாரி சொன்னது குறித்து சொல்லி இருக்கிறோம்.

அத்தனைக்கும் பிறகுதான் சோவை வீரமணி அவர்கள் பெரியார் கல்விச்சாலைக்கு அழைத்துப் பேசவைத்து, விடுதலையில் சோவின் முழுப் பேச்சையும்பிரசுரித்தார்.

பெரியார் சீடர்களின் பெருந்தன்மை, பரந்த மனோபாவம், காழ்ப்புணர்ச்சி அற்ற தன்மை ஆகியவைகளுக்கு வீரமணியின் இந்தச் செய்கை சாட்சியம் கூறிநிற்கிறது.


ஆனால், "சொல்லவில்லை" என்ற பொய்பேசும் சங்கராச்சாரிகளும், அதற்கு சப்பைக்கட்டு கட்டும் சோக்களும் எதற்கு சாட்சியம்அளிக்கிறார்கள்?

பிராமணர்கள் அது சங்கராச்சாரியாக இருந்தாலும், நகைச்சுவை நடிகர் சோவாக இருந்தாலும், இனம் என்று வரும்போது எப்படி ஒருவருக்கொருவர்விட்டுக் கொடுக்காமல் ஒற்றுமையாக செயல்படுகிறார்கள் என்பதற்கே சாட்சியமாக இருக்கிறது.

---------------------நூல்:-"சின்ன சங்கராச்சாரி - யார்?" - பக்கம்: 21-32

0 comments: