Search This Blog

1.8.09

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் உடைமைகள்



கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிவதா?


தந்தை பெரியார் அவர்களின் நூல்கள் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் உடைமைகள் என்பதை தந்தை பெரியார் அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள்.

ஸ்தாபனத்திற்கு உள்ள சொத்துகள் ஒரு லட்ச ரூபாய்தான். அதாவது சில கட்டடங்கள் 2 அச்சு நிலையங்கள், 2 பத்திரிகைகள், புத்தகங்கள், உரிமைகள், ரொக்க நிதிகள் (விடுதலை, 2.10.1952).

இதன்மூலம் பெரியார் அறக்கட்டளையின் சொத்துகள் என்பதில் பத்திரிகைகளும், புத்தகங்களும் வந்துவிட்டனவே!

பெரியார் எழுதி வைத்துள்ளாரா என்று கேட்கும் கோணல் புத்திக்காரர்களுக்குப் புத்தி கற்பிக்க இந்தப் பகுதி போதுமானதே!

தோழர் வே. ஆனைமுத்து அவர்களை பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்ட பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் (மூன்று தொகுதி) கூட தந்தை பெரியார் அனுமதி பெற்று தொகுக்கப்பட்டவைதான்.

இதுகுறித்து அந்நூலின் முதல் தொகுதியில் பதிப்பாசிரியர் முன்னுரையில் பதிப்பாசிரியர் தோழர் வே. ஆனைமுத்து அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

பெரியார் அவர்களின் சொற்பொழிவுகளையும், எழுத்துகளையும் தொகுக்கும் பணியினை சிந்தனையாளர் கழகத்தார் அன்புடன் என்பால் ஒப்புவித்தனர். இந்த ஏற்பாடுகள் அனைத்துக்கும் பெரியார் அவர்கள் மனமுவந்து 9.1.1972 இல் முழு ஒப்புதல் அளித்தார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதே!

இதிலிருந்து தெரியும் உண்மை பெரியார் எழுத்துகளை வெளியிடுவதாக இருந்தால், சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் தேவை என்பது பாலபாடம்.

தந்தை பெரியார் மறைந்த நிலையில், தமது சொத்துகள் பெரியார் நூல்கள், பத்திரிகைகள் என்று குறிப்பிடப்பட்ட நிலையில் (விடுதலை, 2.10.1952) அந்தச் சொத்துகளுக்கு உரிமை உடையதான பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் அனுமதியைப் பெறுவது என்பது கட்டாயமாகிவிட்டதே!

பெரியார் எழுத்துகளை வெளியிட விரும்புவோர், தந்தை பெரியார் அவர்களின் இந்த ஏற்பாட்டை மதிக்கவேண்டாமா?

தந்தை பெரியார் அவர்களின் எழுத்துகள் மட்டுமல்ல, உலகில் பல தலைவர்களின் எழுத்துகள் எல்லாம்கூட இந்த வகையில்தான் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்க நாட்டின் மசாசூசெட்டில் உள்ள டெக்கான் பதிப்பகம், காந்தியாரின் சத்திய சோதனை (My Experiments with Truth) என்ற தன்வரலாற்று நூலை நவஜீவன் அறக்கட்டளையுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது. அது ஒன்றுதான் அமெரிக்காவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட பதிப்பாகும். இந்த வெளியீட்டுக்கான அனுமதி நவஜீவன் அறக்கட்டளைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி நூல்கள் வர்த்தமானன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

அந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பின்வரும் பகுதி மிகவும் முக்கியமானதாகும்.

நவஜீவன் அறக்கட்டளை அனுமதியுடன் அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் அவர்களின் ஆணைப்படி வெளியிடப் பெறுகிறது

என்று குறிப்பிடப்பட்டுள்ளதே!

இதன் பொருள் என்ன? பொருளோடு சிந்திப்பவர்களுக்கு விளங்காமற் போகாதே!

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நூல் வெளியீட்டுப் பதிப்பகம் பண்டித ஜவகர்லால் நேரு அவர்களின் The Discovery of India என்ற ஆங்கில நூலை வெளியிட்டுள்ளது. இப்பதிப்பின் அனைத்து உரிமைகளும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நூல் வெளியீட்டுப் பதிப்பகத்திற்கே உரியது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் எழுத்து மூலமான அனுமதியின்றி எவரும் நூலாக வெளியிடவோ, மின்னணு தொழில்நுட்பம் மூலமாகவோ அல்லது பிரதி எடுக்கும் இயந்திர வழியிலோ, பதிவு செய்யவோ தேவைப்படும்போது எடுத்துக்கொள்ளும் வகையில் தகவல் பதிவு செய்யவோ கூடாது என்று அந்த நூலிலேயே அச்சிடப்பட்டுள்ளதே.

ஒரு நூலை மட்டுமல்ல; அதன் ஒரு சிறு பகுதியை வெளியிடக்கூட முன் அனுமதி பெறவேண்டும் என்று கூறப்பட்டு இருப்பதை ஒரு முறைக்கு இருமுறை படிக்கட்டும்!

இதன் காரணத்தைக் கொஞ்சம் அறிவைச் செலுத்திச் சிந்திக்கவேண்டாமா?

உலகின் மிகப்பெரிய பகுத்தறிவுச் சிந்தனையாளரான பெட்ரஸ்டு ரஸல் அவர்களின் புகழ்பெற்ற நூல்The Ethical Philosophy of Bertrand Russell by Ramendra Nath ீ

இந்த நூலின் பதிப்புரிமைபற்றி அந்த நூலிலேயே குறிப்பிடப்பட்டுள்ளதே!

All Rights Reserved including Right of Reproduction in whole or in part in any Form.

Copy right c 1993 by Ramendranath

உலகச் சிந்தனையாளர்கள், தலைவர்களின் எழுத்துகள் பதிப்புரிமை பெற்று சம்பந்தப்பட்டவர் அல்லது அமைப்பின் உரிமைக்குப் பாத்திரமாக உள்ளது.

இந்த வரிசையிலே உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் எழுத்துகள், அவர் ஏற்பாடு செய்து வைத்திருந்த அமைப்பின்கீழ் தந்தை பெரியார் அவர்களின் காலத்திலிருந்தே வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த நடப்புகள் எல்லாம் தெரியாமல் தந்தை பெரியார் எழுத்துகளை யாரும், எப்படி வேண்டுமானாலும் மானாவாரியாக வெளியிடலாம் என்பது பொறுப்பற்ற செயலாகும்.

மாபெரும் புரட்சியாளரின் ஒரு அரைப் புள்ளியை மாற்றினால்கூட கருத்துகள் மாறுபட்டுவிடும். புத்தருக்குப் பின் தோன்றிய ஜாதகக் கதைகள் என்கிற அனுபவம் ஏற்கெனவே வரலாற்றில் எச்சரித்துக் கொண்டு இருக்கிறது. வரலாற்றின் இந்தப் பாடத்தைப் புரிந்து கொள்ளத் தவறுபவர்கள் பகுத்தறிவுவாதிகளாக இருக்க முடியாது.

தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளில் உண்மையான அக்கறையும், மதிப்பும் உள்ளவர்களாக இருக்கும் யாரும், தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்குத் திரிபுவாதம் வந்துவிடக்கூடாது, இடைச்செருகல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதிலே கவனமாக, கவலையாக இருப்பார்கள்.

பாரதியார் கவிதைகளுக்கு அதுபோன்ற ஆபத்து வந்துவிட்டது என்பதை அவரின் கொள்ளுப்பேத்தி விஜயபாரதி வெளியிட்ட அறிக்கையையும் (சண்டே எக்ஸ்பிரஸ், 18.1.2009) படித்த பிறகாவது புத்தி கொள்முதல் பெறவேண்டாமா?

பெரியார் நூல்களை அரசுடைமை ஆக்கவேண்டும், யாரும் வெளியிடலாம் என்று திறந்துவிடவேண்டும் என்று சொல்கிறவர்கள் யார்? யார்? அவர்கள் தந்தை பெரியார்பற்றி வெளியிட்ட நூல்களை எல்லாம் அவ்வாறு பொதுவுக்கு விட்டவர்கள்தானா?

பெரியார் நூல்களை யாரும் வெளியிடலாம் என்று கட்டுரை தீட்டுவதிலும், கருத்துத் தானம் செய்வதிலும் துள்ளிக் குதிக்கும் திருவாளர் எஸ்.வி. ராஜதுரை பெரியார் சுயமரியாதை சமதர்மம் என்ற ஒரு நூலை எழுதி வெளியிட்டுள்ளாரே! அந்த நூலில் உரிமை நூலாசிரியர் என்று போட்டு இருப்பது ஏன்?

தந்தை பெரியார் அவர்களின் கருத்துகள் அடங்கிய நூல்தானே யாரும் வெளியிடலாம் என்று ஏன் நினைக்கவில்லை? பதிப்புரிமை நூலாசிரியர் என்று போட்டு தன் சொத்தாக ஆக்கிக் கொண்டதேன்?


ஊருக்குத்தான் உபதேசமா? சொந்தக் காரியம் என்று வந்த பிறகு மணிப்பர்சைத் தடவிப் பார்ப்பது ஏன்?

அதுபோலவே, பெரியார் ஆகஸ்ட் 15 என்று திருவாளர் எஸ்.வி. ராஜதுரையால் எழுதப்பட்ட நூலிலும்Copy Right By the Authour Ï.300 என்று மிக விழிப்பாகப் பொறிக்கப்பட்டுள்ளதே!

இவர்கள்தான் தந்தை பெரியாரின் எழுத்துகளை, பெரியாரால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பின் சார்பில் வெளியிடுவோரைப் பார்த்து பழிப்புக் காட்டுகிறார்கள்.

என்னே, சிறுபிள்ளை விளையாட்டு!

இதில் மார்க்சிஸ்ட்டுகள் வேறு தொடை தட்டுகிறார்கள். தந்தை பெரியாரைப்பற்றி எப்படி எப்படியெல்லாம் கொச்சைப்படுத்தியவர்கள் இவர்கள்; இன்று காலத்தின் நெருக்கடி கருதி ஒரு மாற்றம் தெரிகிறது வரவேற்கிறோம்.

அதேநேரத்தில், அவர்கள் பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ளவேண்டாமா? அவர்களுடைய கட்சி நூல்களில் எல்லாம் பதிப்புரிமை என்று போடுவதேயில்லையா? சாமானிய மக்களுக்காக சரித்திரம் படைக்கப் போவதாகக் கூறும் அவர்கள், அத்தகைய நூல்களை யார் வேண்டுமானாலும் வெளியிட்டுக் கொள்ளலாம் என்று கதவைத் திறந்துவிட வேண்டியதுதானே.


Documents of the History of the Communist Party of India (1948-1950) copy right 1976 The people’s Publishing House Private Limited, New Delhi என்றுதானே வெளியிட்டுள்ளார்கள்.

என்.சி.பி.எச். என்ற நிறுவனம் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த அமைப்புதானே அவர்கள் வெளியிடும் நூல்களை யார் வேண்டுமானாலும் வெளியிடலாமா? அதற்கு அனுமதி உண்டா?

ஊருக்கு இளைத்தவர் தந்தை பெரியார்தானா? வீரமணிதானா? பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்தானா?

இது ஒரு உருக்குமலை, மோதிப் பார்க்க யாரும் விபரீத ஆசை கொள்ளவேண்டாம்!

தந்தை பெரியார் அவர்கள் காலத்தில் வெளிவந்த நூல்களின் எண்ணிக்கையைவிட, இந்தக் காலகட்டத்தில் இருமடங்கு முந்நூறுக்குமேல் நூல்கள் வெளியிடப்பட்டு, மக்கள் மத்தியில் பெரியார் நகர்வுப் புத்தகச் சந்தைகள் மூலமாகவும், புத்தகக் கண்காட்சிமூலமாகவும் மக்களிடம் கொண்டு செல்லப்படுகின்றன என்பது உண்மையை மதிப்பவர்களுக்கு மிக நன்றாக தெரியும்.

சவால்விட்டே கேட்கிறோம், சுயமரியாதை இயக்க 80 ஆம் ஆண்டு விழாவில் (செங்கற்பட்டு) பங்கேற்ற தமிழக முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களே இலட்சோப லட்ச மக்கள் கூடிய அந்த மாபெரும் விழாவில் கூறினாரே! (18.2.2008).

உலகத்திலேயே உள்ள எல்லா கட்சி அமைப்புகளைப்பற்றியும் சொல்லவேண்டுமானாலும், எந்த ஒரு அமைப்பிலும் இவ்வளவு விஷயங்கள் சேகரித்து வைத்து, அதை எதிர்காலத்திற்கு தரக்கூடிய இந்த ஆற்றல் நம்முடைய வீரமணியாருக்கு இருப்பதைப்போல வேறு யாருக்கும் இருப்பதாக நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். அவரிடத்திலே எங்களைப் போன்ற கட்சிகளெல்லாம் இதற்காகப் பாடம் படிக்கவேண்டும் என்றாரே! நூல் எழுதுவது, வெளியிடுவது என்பதில் கடல் போன்ற அனுபவம் வாய்ந்த திராவிட இயக்கத்தின் இன்றைய மூத்த தலைவரான கலைஞரே இப்படி கூறுகிறார் என்றால், சாதாரணமா?

சந்திரசேகரப் பாவலர் எழுதிய இராமாயண ஆராய்ச்சி தனித்தனிக் காண்டமாக வெளியிடப்பட்டு இருந்தது. அந்த ஏழு நூல்களையும் ஒரே தொகுதியாக்கி வெளியிட்டது யார்? 718 பக்கங்களைக் கொண்ட அந்த நூலின் விலை என்ன தெரியுமா? வெறும் 200 ரூபாய்தான்.

ஆனால், ராஜதுரையாரின் 814 பக்கங்களைக் கொண்ட நூலின் விலை ரூ.600.

இவர்கள்தான் பெரியார் கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்களாம்.

கடவுள், மதம், பெண்ணுரிமை, ஜாதி தீண்டாமை என்ற தலைப்புகளில் பெரியார் களஞ்சியம் என்ற தலைப்பின்கீழ் இதுவரை 31 தொகுதிகளை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ளது. 300 பக்கங்களுக்குமேல் உள்ள அந்த நூலின் நன்கொடை என்ன தெரியுமா?

நூலகப் பதிப்பு ரூ.80. மக்கள் மதிப்பு ரூ.50. மக்களிடத்தில் உண்மையிலே தந்தை பெரியார் கருத்துகள் செல்லவேண்டும் என்ற எண்ணத்தோடு நூல்களை வெளியிடுவது பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனமே!


பெரியார் பெயரைச் சொல்லி அதிக விலைக்கு நூல்களைப் போட்டு வியாபாரம் செய்து சட்டைப் பையை நிரப்புபவர்கள் எல்லாம் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தையோ, அதன் செயலாளர் மானமிகு வீரமணி அவர்களையோ குறைகூறத் தகுதி உடையவர்கள்தானா?

எந்த நூலை வாங்கினாலும், அதன் தொகை இந்த அமைப்புக்குத்தான் வந்து சேரும்.

மானமிகு வீரமணிக்குப் போய்ச்

சேராது. ஆனால், அங்கு நிலை என்ன?

பணம் அனுப்பவேண்டிய முகவரி: தா.செ. மணி, பெரியார் படிப்பகம், மேட்டூர் அணை என்றுதானே இருக்கிறது.

இங்கு வருவது நிறுவனத்துக்கு; அங்குப் போய்ச் சேருவதோ தனியாருக்கு.

கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய ஆசைப்படக் கூடாது, எச்சரிக்கை!

----------------வளரும்

-----------------கலி. பூங்குன்றன் பொதுச்செயலாளர்,திராவிடர் கழகம் -"விடுதலை" 31-7-2009

3 comments:

சுனா பானா said...

தாங்கள் குறைந்த விலைக்கு பெரியார் நூல்களை வெளியிடுவதாக கூறியுள்ளீர்கள். அதே காரியத்தை மற்ற அமைப்புகள் செய்தால் பெரியார் கருத்துக்கள் மக்களிடமே பரவுவது வேகமாக நடக்குமே.

பாவேந்தர் பாரதிதாசன் பாடலகள் பொதுவுடைமை ஆக்கப்பட்டதனால் தானே பல பதிப்பகங்கள் அதை பல்வேறு வடிவங்களிலும் குறைந்த விலையில் வெளியிட முடிந்தது. பல்லாயிரக்கணக்கானோரிடம் சென்றடைகிறது. அதை போல பெரியாரின் எழுத்துக்களும் பொதுவுடைமை ஆனால் தானே பட்டி தொட்டியெல்லாம் கொண்டு சேர்க்க முடியும்.

தமிழர் தலைவர் தந்தை பெரியார் என்று தானே பெரியாரை அழைக்கிறோம். அப்படி இருக்கும் போது, தமிழர்கள் அனைவருக்கும் தானே பெரியாரி உரிமையானவர். அந்த அடிப்படையிலும், பெரியார் கருத்துக்கள் பல்வேறு புத்தக வடிவங்களில், பல்வேறு பிரச்சார முறைகளில் மக்களை சென்றடைய செய்வதற்கு பெரியாரின் எழுத்துக்களை பொதுவுடைமை படுத்துவது தானே நல்லது.

தமிழ் ஓவியா said...

இது தொடர்பாக மேலும் கருத்துக்களை அறிந்து கொள்ள கீழ்கண்ட சுட்டிகளைப் படிக்க வேண்டுகிறேன்.

1.http://thamizhoviya.blogspot.com/2009/07/blog-post_2339.html

2.http://thamizhoviya.blogspot.com/2009/08/blog-post.html

3.http://thamizhoviya.blogspot.com/2009/08/blog-post_6272.html

நன்றி

bala said...

//கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய ஆசைப்படக் கூடாது, எச்சரிக்கை//

ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட முண்டங்கள்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்களான கம்மனாட்டி.பூங்குன்றன் மற்றும் தமிழ் ஓவியா அய்யாமார்களே,

ஏண்டா சொறி பிடித்த வெங்காய வெறி நாய்களா,கண்ணாடி வீட்டிலிருந்து கல்லலெறியக்கூடாது என்றால் கான்க்ரீட் வீட்டிலிருந்து கல்லெறியலாம்னு சொல்றீங்களாடா.முதலில் எதுக்குடா கல்லெறியணும்னு உங்களுக்கு அரிப்பெடுக்குது?

உங்களைச் சொல்லியும் குத்தமில்லை.நீங்க வளர்ந்த இடமும்,விதமும் உங்களை கீழ்த்தரமானவர்களாக மாற்றியுள்ளன.தாடிக்கார தீவிரவாதி கிழவனின் பாசறை அப்படிப்பட்ட மோசமான இடம்'என்ன செய்வது?

பாலா