Search This Blog

12.11.08

சோட்டாணிக்கரை பகவதி அம்மனுக்கு மாதவிலக்கு - அன்று பக்தர்கள் கூட்டம் குவியுமாம்! "கல்கி" இதழின் அரிய கண்டுபிடிப்பு

கல்கியின் தரம்

ஆன்மீகக் கட்டுரைகள் வெளியிடுவதில கல்கிக்கு என்று ஒரு தனித் திறமை உண்டு. இப்போது கூட அம்பிகையின் அருள் வடிவங்கள் என்று ஒரு தொடரை அது வெளியிட்டு வருகிறது. சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோயில என்று ஒரு திருத்தல மிருக்கிறதாம். அந்த அம்மனுக்கு மாதம் மூன்று நாள் மாதவிலக்கு உண்டாம். அந்த மூன்று நாள்கள் அங்கே பக்தர்கள் கூட்டம் குவியுமாம்!

கல்கியின் சார்பில் - ஸ்வீட்டா, ஸ்டையா, ஸ்மார்ட்டா நாப்கின் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டால் - சோட்டாணிக்கரை மாதவிலக்கு மகாத்மியம் பற்றி சாங்கோ பாங்கமாக - ஒரு தரம் உயர்ந்த கட்டுரையை அதில் பிரசுரிக்கலாம். அது தரம், குணம், மணம், நிறம் ஆகியவற்றில் கல்கியின் தரத்தை எடுத்துக் காட்டுவதாக அமையும்!


------------------------------ நன்றி: முரசொலி 10.11.2008

2 comments:

Thamizhan said...

பெண்களை மாத விலக்கு என்பதால் அர்ச்சகராக முடியாது,உள்ளே நுழையக் கூடாது என்று ஒதுக்கி,ஒடுக்கி வைக்கும் இந்து மதம் அம்மனுக்கு நேப்கின் கட்டி வேடிக்கை பார்ப்பதை அறிவு ஜீவிகள் வாழ்த்தி வணங்கட்டும்,
உலகம் சிரிக்கட்டும்.

தமிழ் ஓவியா said...

வருகை தந்ததுக்கு நன்றி.