Search This Blog

14.11.08

வெடிகுண்டுக் கலாச்சாரத்தை விதைத்து வளர்த்து வரும் இந்து மதவெறி ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார்கள்




இந்துப் பயங்கரவாதம் கைது செய்யப்பட்ட
"சங்கராச்சாரியா" முன்னாள் ராணுவத்தினர்

இராணுவமே இந்து மயமாகிவிட்டதோ!


ஜம்மு பகுதியில் சங்கராச்சார்யா என்று கூறிக் கொண்டு இந்துப் பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வந்த சுதாகர் துவிவேதி, தயானந்த பாண்டே என்னும் சுவாமி அம்ருதானந்ததேவ் தீர்த்த மகராஜ் என்றும் தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் பாண்டே சங்கராச்சாரியா மும்பைக் காவல் துறையினரால் கைது செய்யப் பட்டு மும்பைக்குக் கொண்டு வரப்படுகிறார். சிறீகாந்த் பிரசாத் புரோகித் எனும் போர்ப்படை அதிகாரியை இந்துப் பயங்கரவாதத்தில் ஈடு படத் தூண்டியவர் இவர்தான் எனக் காவல்துறையினர் கண்டு பிடித்துள்ளனர்.


புரோகித்தின் குரு

இவரைத்தான் குரு என்று புரோகித் கூறியுள்ளார். டெல்லிக்குப் பக்கத்தில் எட்டு ஏக்கர் பரப்பில் ஆசிரமம் கட்டிக் கொண்டு இந்துக்களுக்குக் கொடுமை செய்தவர்களைப் பழிவாங்கவேண்டும் என்று தூண்டி வந்தவர். மாலேகான் குண்டுவெடிப்புச் சதி தொடர்பாக கைது செய்யப்பட்ட அனைவருமே இந்த பாண் டேவைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். இவர்தான் சதிச் செயலில் ஈடுபடத் தூண்டுகோல் என்றே கூறியுள்ளனர்.

பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் பகுதியில் இந்து மதப் பெருமைகளைப் பரப்பிடவும் காஷ்மீரில் ஏற்பட்டுள்ள அபாய நிலையை நாடு முழு வதும் பரப்பிடவும் காஷ்மீரை விட்டு வெளியேறியுள்ள இந்துப் பார்ப்பனர்களின் மறு வாழ்வுக்கு உதவிடவும் என்கிற நோக்கங்களுடன் இவர் செயல்படுவதாகத் தெரிவித்துக் கொண்டுள்ளார். காஷ்மீர்ப் பகுதியில் போர்ப்படையில் கைதான புரோகித் பணியாற்றி உள்ளார். அங்குதான் பான்டேயைத் தன் குருவாக புரோகித் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இந்துப் பயங்கரவாதியான இந்தச் சங்கராச்சார்யா தனது குருவாக வாரணாசியிலுள்ள நரேந்திரானந்த் சரசுவதியைக் கூறுகிறார். ஆனால் அவரோ இவரைத் தன் சீடன் அல்ல என்கிறார் இந்த நபர். 5-6 மாதம் விமானப் படையில் பணி புரிந்து நிதிக் கையாடல் ஒழுங் கீனங்களுக்காக வெளியேற்றப் பட்டவர் என்று நரேந்திரானந்த சரசுவதி கூறியுள்ளார்.

68 பேர் சாவுக்கும் காரணம்


இந்நிலையில் மற்றும் ஒரு இந்து பயங்கரவாதக் குண்டு வெடிப்பு சம்பந்தப்பட்ட சதிச் செயலுக்காக இவர்களை விசாரிக்க அரியானா மாநிலக் காவல் துறை முயல்கிறது. இந்தியா பாகிஸ்தான் இடையே ஓடிக் கொண்டிருக்கும் சம் ஜவுதா விரைவுத் தொடர் வண் டியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடந்த இரண்டு குண்டு வெடிப்புகளில் 68 பேர் கொல்லப் பட்ட சதிகளில் பான்டே, புரோகித், பிரக்யா ஆகியோர் ஈடுபட்டதாகத் தெரிய வருகிறது. இந்தக் குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட சூட்கேஸ் குண்டு கள் பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேசம் இந்தூரில் தயாரிக்கப்பட்டவை எனக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இவர்கள் மீது விசாரணை நடத்த அரியானா மாநிலக் காவல்துறை முடிவு செய்துள்ளது.

கேரளாவில் குண்டுகள்

கடந்த 11 ஆம் தேதி கேரள மாநிலம் கன்னூரில் இரண்டு ஆர்.எஸ்.எஸ். காரர்கள் வெடி குண்டு தயாரிக்கும்போது விபத்து ஏற்பட்டு இறந்து போனார்கள். அந்தப் பகுதியில் கேரளக் காவல் துறையினர் விசாரணை செய்தபோது, இந்துக் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள ஒரு கட்டடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 125 வெடி குண்டுகளைக் கைப்பற்றினர். இந்த இடமும் வெடி குண்டு வெடிப்பு நடந்த இடமும் பக்கத்துப் பக்கத்து இடங்களாகும். இந்துக் கோயில் இந்தச் செயல்களுக்கு பாது காப்பு தந்துள்ளதோ?

இரண்டு வாரங்களுக்கு முன்பு இதே மாவட்டத்தில் 12 அய்ஸ்கிரீம் வெடி குண்டு களைக் கைப்பற்றி கேரளக் காவல்துறை விசாரித்து வருகிறது. இப்படியாக இந்தியா முழுவதுமே வெடிகுண்டுக் கலாச்சாரத்தை விதைத்து வளர்த்து வரும் இந்து மத வெறி ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார்கள். இந்த ஆபத்திலிருந்து மீளும் நடவடிக்கைகள் எப்போது எடுக்கப்படும் என்பது கேள்வி.

--------------------நன்றி: "விடுதலை" 14-11-2008

0 comments: