Search This Blog

11.7.08

பார்ப்பனியத்தை எதிர்த்துப் போராட முன்வரவேண்டாமா?

கைது செய்!

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் உலக நன்மைக்காக சகஸ்ஹர சண்டி ஹோமம் நடை பெற்றதாம். அதில் பா.ஜ.க. வின் அகில இந்தியத் துணைத் தலைவரும், மனித வள மேம்பாட்டுத் துறை முன்னாள் அமைச்ச ருமான முரளிமனோகர் ஜோஷியும் பங்கு கொண்டு வேத மந்திரங்களை பய பக்தியுடன் படித்தாராம்.

இப்படி அடிக்கடி உலக நன்மைக்காக பூஜை களையும், ஹோமங்களை யும் நடத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால், கண்ட பயன் பூச்சியமே! உணவுப் பொருள்களையும், பட்டா டைகளையும் நெருப்பில் போட்டு நாசப்படுத்தியது தான் மிச்சம்.


உணவுப் பொருள் களின் விலை உச்சத்தில் இருக்கிறது; இரவு சாப்பாடு இல்லாமல் படுப்ப வர்கள் இந்திய மக்களில் நான்கில் ஒருவர் என்று கூறப்படுகிறது.
77 விழுக்காடு மக் களின் நாள் வருமானம் ரூ.20-க்கும் கீழாக இருக் கிறது.
2004-05 ஆம் ஆண்டுக்கான தேசிய சுகா தாரத்துறை ஆய்வின்படி 57.8 விழுக்காடு கர்ப் பிணிப் பெண்களும், 56.1 விழுக்காடு திருமணமான பெண்களும், 79.1 விழுக் காடு குழந்தைகளும் ரத் தச் சோகையால் பாதிக் கப்பட்டுள்ளனர். சத்துணவு இல்லாமையால் ஏற்பட்டுள்ள கொடிய விளைவு இது.

இந்த நிலையில் - யாகம், ஹோமம், தீபம் என்ற பெயரால் சத்துள்ள உணவுப் பொருள்களை, கொஞ்சம்கூட நெஞ்சில் ஈரமின்றி நெருப்பில் கொட்டி பாழ்படுத்து கிறார்களே - இதற்குப் பெயர்தான் பக்தியா? இப்படி நாசப்படுத்தினால் தான் கடவுள் கருணை காட்டுவாரா?
இவ்வளவுக்கும் பவுதீகத்தில் பிஎச்.டி. பட்டம் பெற்ற பெரிய படிப்பாளி இந்த ஜோஷி - என்றாலும் அவரைப் பிடித்து ஆட்டும் பார்ப்பனத்தனம், இந்த மூடத்தனமான காரியங்களைச் செய்விக்கிறது.

உணவுப் பொருள்களை பாழ்படுத்துபவர்களை - உணவுப் பொருள் நாசம் தடுப்புச் சட்டத்தின்கீழ் - (Essential Commodities Act) சட்டத்தின்படி கைது செய்யவேண்டாமா?
பட்டினி கிடக்கும் மக்கள் இந்தப் பார்ப்பனியத்தை எதிர்த்துப் போராட முன்வரவேண்டாமா?


------------------- மயிலாடன் அவர்கள் 11-7-2008 "விடுதலை" நாளிதழில் எழுதிய கட்டுரை

3 comments:

வால்பையன் said...

கண்டிப்பாக கைது செய்யவேண்டும்
உணவு பொருள்கள் விலையேற்றத்திற்கு இது போன்ற காரியங்கள் தான் காரணம்

வால்பையன்

tamiloviya said...

தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி. தொடர்ந்து கருத்து தெரிவிக்கவும்.

bala said...

//கண்டிப்பாக கைது செய்யவேண்டும் //

ஆமாங்கய்யா.கண்டிப்பா கைது செய்ய வேண்டும்.அப்படியே ஊரெங்கும் போஸ்டர்,கட் அவுட் வைத்து,பேப்பர் விலையை உயர்த்தி, ஊரையே நாறடிக்கும் மஞ்ச துண்டு,மானமிகு கருப்பு சட்டை கும்பலையும் கைது செய்து பாதாள சிறையில் அடைக்கலாம்.

பாலா