Search This Blog

31.7.08

வசியம் செய்ய முடியுமா?



இந்து மதஸ்தர்களின் நாட்டில் வழங்கும் மூட நம்பிக்கைகளுக்கு இந்து மதமே காரணம். கிறிஸ்து நாட்டிலும், மகமதிய நாட்டிலும் வழங்கும் மூட நம்பிக்கைகளுக்கு அந்தந்த மதங்களே காரணம், அது போலவே புத்த நாட்டில் வழங்கும் மூடநம்பிக்கைகளுக்குப் புத்த மதமே காரணமென அறிக. புத்தர் இதைச் சொல்ல வில்லை; அதைச் சொல்ல வில்லை என்று சொல்லும் மதப் பாசாங்குகளை ஒழித்து, எல்லாவித மதங்களும் மூட நம்பிக்கைகளெனத் தெளிதலே உத்தம புருஷருக்கு அடையாளமென அறிக. எந்த விவேகசாலி 1,000, 2,000 வருஷங்களுக்கு முந்திச் சொல்லிய போலிச் சித்தாந்தங்களையும், கோட் பாடுகளையும் பண்டை நீதி யையும், நெறியையும் கொண்டு இந்த நாளில்தனது மானிட வாழ்க்கையை நடத்த முயலுவான்?

Hypnotism - அதாவது மயக்க வித்தை என்று கூறும் ஓர்விதத் தூக்கம், பண்டைக் காலம் முதல் மெஸ்மரிசமென்று வழங்கி வந்தது. ஜெர்மன் டாக்டர் மெஸ்மர் என்றவர் இந்த வித்தையை மிக்க சாமர்த்தியமாகக் கற்றுத் தெரி வித்தார். இந்த வித்தையின் விஷயமென்னவெனில் மனித னுக்குள் ஒருவித நுட்பச் சக்தி யுண்டு. அந்தச் சக்தியைக் கொண்டு மற்றொருவனை விழிப்பில் தூங்க வைக்கக் கூடும். அந்த ஓர்விதத் தூக்கத்தில் கண்களுக்குத் தெரியாத வஸ்துக்கள் தெரியும், மறந்து போன விஷயங்களும் ஞாபகத் துக்கு வரும், எதைச் செய்யச் சொன்னாலும் அந்தத் தூக்கத் திலிருப்பவன், செய்வான். சர்க் கரையை அந்தத் தூக்கத்திலுள்ளவனை பார்த்து கசக் கின்றதென்று சொன்னால், கசப்புக்கு வேண்டிய செய்கை களையும் சைகைகளையும் செய்வான்.

அந்த நிலைமையிலுள்ள வனுக்குச் சில நோய்களும் தீரும் என்று இந்த மெஸ்மர், விஞ்ஞான முறைப்படி விளக்கி வைத்ததாக ஒரு காலத்தில் எண்ணி வந்தபடியால் அது மெஸ்மரிசமென்று வழங்கப் பட்டது. மெஸ்மர் இந்த நடவடிக்கைகளுக்கு ஒரு சக்தி காரணமென்று கூறிவந்தார். இது அவருடைய யோச னையே ஒழிய விஞ்ஞானமல்ல. இந்தச் சக்தியைப் பார்த்து வருமில்லை; பரீட்சித்தவரு மில்லை. இந்தப் புதிய மனுஷ சக்தி மனித காந்த சக்தி என்று அழைக்கப்பட்டது. இது வெறும் உத்தேசமாக முடிந்தது மனிதனுக்குள் காந்த சக்தி யொன்று இருப்பதாகத் தெரியவில்லை. இந்த இப்நா டிச மயக்கத்தில் செய்யும் நடவடிக்கைகளுக்கு உசாவுதலே அல்லது தூண்டுதலே போதுமான காரணமெனத் தற்போது விஞ்ஞானிகளால் எண்ணப்படுகிறது. இதனைச் சற்று விளக்குவோம்.

விழிப்பில் நாயை வுஸ் வுஸ் என்று உசாவினால் ஓடு கிறது. மனிதனை அடியென்றா லும், சுடு என்றாலும் இந்த உசுப்பினாலேயே அடிக்கின் றான்; சுடுகின்றான். இந்த நடத்தைகள் விழிப்பில் உசாவு தலால் காட்டும் நடத்தை யாகும். அதுபோலவே ஓர்விதத் தூக்கத்தில் - அதாவது இப் நாடிச தூக்கத்தில், அதாவது, மயக்கத் தூக்கத்தில் உசா வினால் அந்தத் தூக்கத் திலுள்ளவன் செய்யச் சொன் னதையும், சொல்லச் சொன் னதையும் ருசிக்கச் சொன்ன தையும் செய்கின்றான், சொல் லுகின்றான்; ருசிக்கின்றான். இந்த மயக்கத்தில் விழிப்புக் குரிய நடத்தைகள் இல்லாத படியால் உசாவிய சொல்லுக் குரிய நடத்தைகளைக் காட்டு கின்றான். சாதாரண விழிப்பில் சர்க்கரை என்றால், அதற்குரிய ருசியின் ஞாபகம் உண்டா கின்றது. அதுபோலவே இப் நாடிச மயக்கத்தில் மண்ணை வாயில் போட்டுச் சர்க்கரை என்றாலும் சர்க்கரைக்குரிய ஞாபகம் உண்டாகின்றது. விழிப்பில் ஞாபகத்துக்கு வராத விஷயங்களும், இந்த மயக் கத்திலே ஞாபகத்துக்கு வருகிறது; மறந்துபோன விஷயங் களும் இந்தப் இப்நாடிச தூக்கத்தில் தோன்றுகின்றது.

விழிப்பில் தோன்றி மறைந்த விஷயங்களும் இந்தத் தூக்கத்தில் தோன்றி மறைவதுண்டு. ஒரு சிறு பெண் குழந்தையாய் இருக்கும்போது, யாரோ ஒரு வர் சமஸ்கிருத பாஷையோ, அராபிக் பாஷையோ, லத் தீனோ, கிரீக்கோ, ஈபுருவோ, அவள் அருகாமையில் படித்து வந்தார். அவள் காது மூலமாகக் கேட்டிருந்த சொற்கள் அவள் மனத்தில் அவளுக்குத் தெரி யாமலே படிந்திருந்தது. அவள் அநேக வருஷத்திற்கு பிறகு இந்த மயக்கத்தில் அல்லது வலியில் (Histeria) தான் இளமையில் கேட்ட பாஷையை உச்சரிக்க ஆரம்பித்தாள். இவள் ஆதி வாழ்வை அறி யாதார், இது என்ன விந்தை என்று அதற்குத் தகுந்த கதை களைக் கட்டுகின்றார்கள். அவள் முன் ஜன்மத்தில் படித்த பாஷையை உளறுகிறாள் என்ற கதைகளைக் கட்டுகின்றார்கள். விஷயங்களை உள்ளதை உள்ள படி விசாரித்துணராமல், பேய்க் கதையும் அவை களுக்குப் பரிகாரமாக மந்திர தந்திரங்களும் எழுகின்றன.

காணாத பொருளைக் கண்டுபிடிக்கும் கதையிலும், விழிப்பில் ஞாபகத்திற்கு வராத விஷயம் இப்நாடிசத்தில், அதாவது மயக்கத்தில் ஞாபகத்திற்கு வரும் விஷயமே காரணம்.

------------------- ம. சிங்காரவேலர் அவர்கள் எழுதிய கட்டுரை

0 comments: