Search This Blog

19.7.08

குசேலருக்கு வெட்கமிருந்திருக்காதா?



கிருஸ்ணபகவானுக்கு புத்தி உண்டா?

குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்தன. குடும்பம் பெருத்துவிட்டது.அதனால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடினார் என்று புராணக்கதை சொல்லுகிறது. குசேலர் பெண் சாதி குறைந்தது வருடத்திற்கு ஒரு பிள்ளையாகப்பெற்று இருந்தாலும் கைகுழந்தைக்கு ஒரு வருடமாவது இருக்குமானால், மூத்த பிள்ளைக்கு 27 -வது வருடமாவது இருக்கும் 20 வயசுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பேராவது இருந்திருப்பார்கள் இந்த 7 பிள்ளைகளும் ஒரு காசு கூட சம்பாதிக்காத சோம்பேறிகளாகவா இருந்திருப்பார்கள்? 20 வருடத்திற்கு மேம்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு பிச்சைக்குப் போகக் குசேலருக்கு வெட்கமிருந்திருக்காதா? அல்லது பிச்சை போட்ட கிருஸ்ணபகவானுக்காவது "என்ன பெரிய வயது வந்த பிள்ளைகளை தடிப்பயல்களாட்டமாய் வைத்துக் கொண்டு பிச்சைக்கு வந்தாயே,வெட்கமாக இல்லையா?" என்று கேட்கக்கூடிய புத்தி இருந்திருக்காதா?


--------------தந்தைபெரியார் - "84 ஆம் ஆண்டு பெரியார் பிறந்த நாள் மலர்" பக்கம் 43

5 comments:

சந்தர் said...

பெரியார் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். இருந்தாலும் குழந்தைகள் ஒவ்வொன்னாத்தான் பொறக்கணுமா? இரட்டை, மூன்று, நான்கு, (ஏன் ஐந்து ஆறு கூட பிறந்திருக்கின்றன.) ஒவ்வொரு வருடமும் இரண்டு என்றாலும் கடைசி குழந்தை பிறந்த போது முதல் குழந்தைக்கு 13 வயது தான் ஆகியிருக்கும். இதெல்லாம் பகுத்தறிவோடு யோசித்தால் புரியும்!!!

தமிழ் ஓவியா said...

உங்க பகுத்தறிவு ஆராய்ச்சியை நினைத்து உடம்பெல்லாம் புல்லரிக்கிறது தோழரே.

bala said...

தமிழ் ஓவியம் அய்யா,

இதை விடுங்க.நம்ம சமத்துவ பெரிய மாமாவான மஞ்ச துண்டு அய்யாவே ஏறத்தாழ 30 குட்டிகள் போட்டிருக்காரே அய்யா.என்ன, பல தாரங்கள்,பல துணைவிகள் மூலமா.பகுத்தறிவோட, காரியங்கள் பல செய்து சாதனை படைத்த வரலாற்று நாயகன் தான் நம்ம இனமானத் தலைவர் அய்யா.என்ன இருந்தாலும்,நம் திராவிட தமிழ் இனத்தின், "குட்டிகள் பல போடும்" திறமையைக் கண்டு பங்க்ளாதேஷ் பசங்களே அசந்து போறாங்கன்னா,அது நமக்கு பெருமை தானே.பாக்டீரியா கும்பல் தோத்துது போங்க.வாழ்க திராவிடம்.

பாலா

சந்தர் said...

//உங்க பகுத்தறிவு ஆராய்ச்சியை நினைத்து உடம்பெல்லாம் புல்லரிக்கிறது தோழரே//
கிருஸ்ணபகவானுக்கு புத்தி உண்டா? என்ற உங்கள் ஆராய்ச்சியைப் படித்து FULLஆக அரித்ததனால் வந்த வினை.

தமிழ் ஓவியா said...

புல்லானாக்கூட் ப்ரவாயில்லை. 5,6 குழந்தைகள் என்ன கிருஸ்ணபகவான் 27 பிள்ளைகளை ஒரே நேரத்தில்கூடப் பெத்துக்கலாம். ஒரு வயது குழந்தைகளைக் கூட்டிக்கிட்டு பிச்சை எடுக்க போகட்டும் நண்பரே.

ஆண்டுக்கு ஒரு குழந்தை என்று யதார்த்தமான உண்மையைச் சொன்னா
எகத்தாளம் பேசுகிறீர்கள்.