Search This Blog

1.7.08

சிரிக்க மட்டுமல்ல. . . ! சிந்திக்கவும் .........!

வெளிநாட்டில் மார்க்ட்வெய்ன் என்ற பெரிய எழுத்தாளர் ஒருவர் இருந்தார். அவர் தன்னுடைய தோற்றம் அழகாய் இருப்பது, ஆடம்பரமாக உடைகள் அணிவது, பகட்டான நடிப்பது போன்றவை எல்லாம் இல்லாமல் எளிமையாக இருந்தவர்.

அவருடைய நாட்டில் தோற்றப் பொலிவுக்கு மிகவும் முக் கியத்துவம் கொடுத்து நடந்து கொள் வார்கள். அதிலும் உடை விஷயத்தில் கோட், சூட், டை போன்றவற்றை அணிந்து செல்வதில் மிகவும் அக்கறை காட்டுவார்கள்.

ஒரு முறை, மார்க்ட்வெய்ன் அவர்கள், தனது நண்பர் ஒருவருடைய இல்லத்திற்குச் சென்று, பேசிக் கொண்டிருந்தார். பேசி முடித்தபின் வீட்டுக்குக் கிளம்பிய பொழுது, நண்பரின் மனைவி, மார்க்ட்வெய்னிடம் வந்து, "என்ன இன்று நீங்கள் 'டை' கட்டாமல் எங்கள் வீட்டிற்கு வந்து விட்டீர்கள்? அதை யெல்லாம் நீங்கள் அணிவதில்லையா?" என்று கேட்டார்.

பதில் சொல்ல முடியாமல் அமைதியாக மார்க்ட்வெய்ன் வீட்டுக்கு வந்து விட்டார்.

சிறிது நேரத்தில் நண்பரின் மனைவி, வீட்டுக் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, கதவை திறந்து பார்த்தார்.

எதிரே - மார்க்ட் வெய்ன் வீட்டு வேலைக்காரர் நின்று கொண்டிருந்தார்.

நண்பரின் மனைவியிடம் அவர், "எங்கள் முதலாளி உங்கள் வீட்டுக்கு சற்று முன் வந்திருந்த போது ஏன் 'டை' கட்டாமல் வந்திருந்தார் என்று கேட்டீர்களாம். அதனால் இதை உங்களிடம் கொடுத்து, அவர் உங்கள் வீட்டில் எவ்வளவு நேரம் இருந்தாரோ அவ்வளவு நேரம் வைத்தி ருந்து பிறகு வாங்கிவரச் சொன்னார், இந்தாருங்கள்!" என்று மார்க்ட் வெய்னின் 'டை'யை மட்டும் நீட்டியபடி நின்றார்.

அழகு என்பது, உடையிலோ அழகு பொருள்களால் அலங்கரித்துக் கொள்வதிலோ இல்லை. நமது சிந்தனையிலேயும், அதை வெளிப்படுத்தும் நடத்தையிலேயும் தான் இருக்கிறது.

----------- நன்றி: "பெரியார் பிஞ்சு"

0 comments: