Search This Blog

9.7.08

'பரிகாரம்' செய்வதாக கூறி பெண்ணை நிர்வாண பூஜைக்கு அழைத்த ஜோதிடருக்கு அடி உதை!



பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணை நிர்வாண பூஜைக்கு அழைத்ததாக ஒரு ஜோதிடரை சட்டையை பிடித்து இழுத்து, நடு ரோட்டில் வைத்து தாக்கினார்கள். ஈரோட்டை அடுத்த ரங்கம்பாளையத்தில் பிரம்மரிஷி என்கிற ஜோதிட நிலையம் வைத்து இருப்பவர், கிரி எஸ். அய்யர். இவரிடம் ஜோதிடம் பார்ப்பதற்காக ஈரோடு வீரப் பன்சத்திரம் பகுதியை சேர்ந்த கணவன் மனைவி நேற்று முன்தினம் வந்தார்கள். ஓட்டல் வியாபாரத்தில் நொடிந்து போய் இருப்பதாகவும், அதற்கு பரிகாரம் தேட ஆலோசனை கூறும்படியும் ஜோதிடரிடம் கேட்டனர். அவர்களிடம் பேசிய ஜோதிடர் பூஜைக்காக எலுமிச்சை பழம் வேண்டும் என்று கூறினார். உடனே எலு மிச்சை பழம் வாங்குவதற்காக அந்தப் பெண்ணின் கணவர் வெளியே சென்றார். அதன் பிறகு அவர் அந்தப் பெண் ணுடன் தனியாக பேசிக் கொண்டு இருந்தார். கணவர் வந்ததும் சிறு பூஜை செய்து விட்டு, மீண்டும் நாளை வரு மாறு கேட்டுக்கொண்டார்.

நிர்வாண பூஜை

அவர்கள் வெளியே வந்ததும், அந்தப் பெண் அழத் தொடங்கினார். அவருடைய கணவர் என்ன நடந்தது என்று விசாரித்தபோது, ஜோதிடர் தன்னிடம் ஆபாசமாக பேசியதாகவும், தொழில் பெருகி, செல்வம் அதிகரிக்க ஒருநாள் முழுவதும் நிர்வாணமாக இருந்து பூஜை செய்ய வேண் டும் என்று கூறியதாகவும் அழுது கொண்டே கணவரி டம் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், நேரடியாக கேட்டால் ஜோதி டர் சரியான பதில் கூறமாட் டார். அவரது வழியிலேயே சென்று பிடிக்க திட்டமிட் டார். அவர் பூஜை செய்ய அழைத்தபடி நேற்று தனது மனைவி மற்றும் உறவினர்களு டன் ஜோதிட நிலையத்துக்கு வந்தார். முதலில் கணவன் மனைவி மட்டும் அங்கு சென்றார்கள். அவர்கள் வந்ததும், ஜோதிடர் கிரி, பூஜைக்கு பூ வாங்கி வரும்படி கூறினார். மனைவியை அங்கு விட்டு விட்டு, கணவர் மட்டும் புறப்பட்டு சென்றார். உடனடியாக கதவை தாழிட்ட ஜோதிடர், அந்தப் பெண்ணிடம் நிர் வாணமாக இருக்கும்படி கூறியதாக தெரிகிறது.

நடுரோட்டில் அடி உதை

அதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த அந்தப் பெண் அருகில் கிடந்த நாற்காலியை எடுத்து ஜோதிடரை தாக்கினார். சத்தம் கேட்டு அங்கு நின்று கொண்டு இருந்த உறவினர்களும் ஓடி வந்து ஜோதிடரை அடித்து உதைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பகுதியில் ஏராளமானவர்கள் கூடினார்கள். அவர்களுடன் வந்த உறவுப் பெண் அந்த ஜோதிடரை நடுரோட்டில் சட்டையை பிடித்து இழுத்து தாக்கியதால், வேடிக்கை பார்க்க கூட்டம் திரண்டு விட்டது.

இது பற்றி தகவல் அறிந்த தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜோதிடரை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றார்கள். அங்கு காவல் நிலைய ஆய்வாளர் சுப்பிரமணியம் விசாரணை நடத்தி வருகிறார்.

ஜோதிடர் கிரி எஸ்.அய்யர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர். கடந்த 10 ஆண்டுகளாக ஈரோடு ஜீவா நகரில் வசித்து வருகிறார். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளார்கள்.

இச்சம்பவம்பற்றி தாலுகா காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

1 comments:

Chittoor Murugesan said...

தமிழ் ஓவியா அவர்களே !
ஜோதிடம் என்பது இருவகை. சுய நலப்புலிகள் சொல்லும் ஜோதிடம் வேறு . ஜோதிடம் என்பதை பார்ப்பனர்கள் தம் கட்கத்தில் ஒளித்து வைத்து நாற்றம் பிடிக்கச்செய்து அன்னியர் படையெடுத்து வந்ததுமே அன்னியரின் கட்கங்களை முகரச்செல்லும்போது ஏற்கெனவே தமது கட்கத்தில் உறுத்திக்கொண்டிருந்த ஜோதிடத்தை குப்பையில் போட்டு விட்டு ஓடினர்.

அதை சில சூத்திரர்கள் எடுத்து பத்திரப்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். மருத்துவம் நல்லதே ! மருத்துவர்கள் கிரிமினல்களாக இல்லையா ? அதே போலத்தான் ஜோதிடமும். ஜோதிடம் நல்லதே ! சில ஜோதிடர்களும், பல ஜோதிட ஆர்வலர்களும் சுய நலப்புலிகளாக இருப்பதால் ஜோதிடமே கயவாளித்தனமாகி விடாது .

உண்மையில் உண்மைகளை அறியும் பொறுமை இருந்தால் கீழ்காணும் வலைப்பூவை படித்துப்பாருங்கள்

www.anubavajothidam.blogspot.com