Search This Blog

5.2.09

தமிழின அழிப்பினை நிறுத்த நார்வேயில் தீப்பந்தப் பேரணி




நார்வேயில் தீப்பந்தப் பேரணி:
5 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் பங்கேற்பு


உடனடி போர் நிறுத்தத்தினைக் கோரியும், தமிழின அழிப்பினை நிறுத்தவும், சிறீலங்கா அரச பயங்கர வாதத்தைக் கண்டித்தும், தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமையை வலியுறுத்தியும், நார்வே உட்பட்ட இணைத் தலைமை நாடுகளின் நீதியற்ற நடவடிக்கையைக் கண்டித்தும் நார்வே தலைநகர் ஒஸ்லோவில் மாபெரும் தீப்பந்தப் பேரணி நடைபெற்றது. கடும் பனித் தூறலுக்கும் உடல்வெட்டும் குளிருக்கும் மத்தியிலும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான நார்வே வாழ் தமிழர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

ஒஸ்லோ Youngstorget இலிருந்து நேற்று புதன்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கிய பேரணி, நார்வே நாடாளுமன்றத்தைச் சென்றடைந்து அங்கு பொதுக்கூட்டத்துடன் இரவு 8 மணிக்கு நிறைவடைந் தது.

நார்வே பிரதான கட்சிகளில் ஒன்றான வலதுசாரிக் கட்சியின் தலைவர் அர்ணா சூல்பர்க், தொழிற்கட்சியின் முக்கிய உறுப்பினரும் ஒஸ்லோ நகர சபை உறுப்பினருமான துறொண்ட் ஜென்ஸ்றூட், நார்வேஜிய தொழிற்சங்க ஒஸ்லோ பிரதேச துணைத் தலைவர் ஆர்ண ஹாலோஸ் மற்றும் செங்கட்சியைச் சேர்ந்த விஜொணார் மொக்ஸ்னஸ் ஆகியோர் பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினர்.

தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையை ஆதரிப்பதாகத் தெரிவித்த வலதுசாரிக் கட்சியின் தலைவர் அர்ணா சூல் பர்க், உடனடி போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டு, நீதியான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.

பேரணியில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் சிறீலங்கா அரசைக் கண்டனம் செய்!

சிறீலங்காவிற்கு 61 ஆவது ஆண்டு சுதந்திர நாள்! தமிழினத்திற்கு 61 ஆண்டு கால அடக்குமுறை வாழ்வு!

சிறீலங்கா ஒரு பயங்கரவாத தேசம்!

தமிழின அழிப்பினை நிறுத்து

இணைத்தலைமை நாடுகளே, தமிழின உரிமைக்காகப் போராடும் விடுதலைப்புலிகள் மீது அழுத்தம் பிரயோகிக்காதே!

தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமையை ஏற்றுக் கொள்

புலிகளே தமிழர்களின் பாதுகாவலர்

எங்கள் போராட்டம் சுதந்திரத்திற்கானது


போன்ற பதாகைகளைத் தாங்கி நின்றதோடு அவற்றை முழக்கங்களாகவும் எழுப்பினர். நார்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தினால், வலது சாரிக்கட்சி தலைவர் அர்ணா சூல்பர்க் மூலம் நார்வே அரசாங்கத்திற்கு கோரிக்கை மனு வொன்று அளிக்கப்பட்டது.

அம்மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:

சிறீலங்கா அரச பயங்கர வாதத்திற்கும் தமிழின அழிப்பிற்கும் எதிரான இறுதி வழியாகவே தமிழீழ மக்களின் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் தோற்றம் பெற்றது.

1948 இல் தமிழ் தேசிய இனத்தின் இறைமையைப் பறித்து, பவுத்த சிங்கள பெரும்பான்மை இனத்தின் கைகளில் கையளித்தது பிரித்தானியா.

இலங்கைத்தீவின் இன்றைய இன முரண்பாட்டிற்கு அடித்தளம் பிரித்தானியாவினால் இடப்பட்டதாகும். எனவே, சிறீலங்காவின் 61 ஆவது ஆண்டு சுதந்திர நாள், தமிழர்களுக்கு 61 ஆண்டுகால அடக்குமுறை வாழ்வின் குறியீட்டு நாளாகும்.

ஆயிரமாயிரமாக இங்கு திரண்டுள்ள நார்வே தமிழ் மக்களாகிய நாம், தமிழீழ விடு தலைப்புலிகளுக்கான எமது ஆதரவினை வெளிப்படுத்துவ தோடு, தமிழீழ மக்களின் தன் னாட்சி உரிமையையும் வலியுறுத்தி நிற்கின்றோம் என்று அம்மனுவில் மேலும் தெரிவிக் கப்பட்டுள்ளது.


--------------------நன்றி:-"விடுதலை" 5-2-2009

0 comments: