Search This Blog

28.2.09

இலங்கை போரை நிறுத்துக 5 கண்டங்களைச் சேர்ந்தவர்கள் போர்க்குரல்!

இலங்கையில் உடனடியாகப் போரை நிறுத்தி விட்டு தமிழர்கள் வாழும் பகுதி களில் தன்னாட்சி அதி காரத்துடன் கூடிய அரசை அமைக்கப் பேச்சு வார்த் தைகளைத் தொடங்க வேண்டும் என்று 5 கண்டங்களைச் சேர்ந்த 50 கட்சிகள் அங்கம் வகிக்கும் ஃபோர்த் இன் டர்நேஷனல் என்ற அமைப்பு இலங்கை அரசைக் கேட்டுக் கொண்டிருக்கிறது.

ஆம்ஸ்டர்டாம் நகரில் பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற்ற ஃபோர்த் இன்டர்நேஷனல் அமைப் பின் பன்னாட்டுக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்படுவதற்குக் காரணமான போரை இலங்கை அரசு உடனே நிறுத்தவேண்டும். விடு தலைப்புலிகளுடன் போர் நிறுத்தம் செய்து கொள்ள வேண்டும். தமிழர்கள் வாழும் பகுதி களில் தன்னாட்சி அதி காரத்துடன் கூடிய இடைக்கால அரசை ஏற் படுத்துவதற்கான பேச் சுகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் உழைப்பாளர் கட்சி களின் தலைவர்களான நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என்று அத்தீர் மானத்தில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

இந்தத் தீர்மானத் தைக் கொண்டு வந்து நிறைவேற்றிய உழைப் பாளர் கட்சிகள் அனைத் தும் மெக்சிகோ, இலங்கை, ஜப்பான், பிரான்ஸ், ஜெர் மனி, இங்கிலாந்து, இத்தாலி, அமெரிக்கா, தென் னாப்பிரிக்கா, கனடா, பிலிப் பைன்ஸ், பிரேசில், கிரீஸ், போர்ச்சுகல், அல் ஜீரியா, ஸ்வீடன், டென் மார்க் உள்ளிட்ட நாடு களில் செயல்பட்டு வருபவை ஆகும்.

இலங்கையைச் சேர்ந்த நவசம சமாஜ கட்சித் தலைவர் முனைவர் விக்ரமபாகு கருண ரத்னே என்பவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இலங்கை இனப்படு கொலை குறித்து விவா திக்கப்பட்டது. வன்னிப் பகுதியில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப் படுவது குறித்து கருண ரத்னே விரிவாக விளக்கினார். அங்கு நடைபெறும் நிகழ்வுகள் குறித்துப் பல் வேறு நாடுகளின் தலை வர்களும் விளக்கங் களைக் கேட்டுத் தெளிவு படுத்திக்கொண்ட பிறகே தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. பிரான்ஸ் நாட்டின் தொழிற்சங்கத் தலைவர் பியரி ரோசர், பெல்ஜியம் நாட்டின் தொழிற்சங்கத் தலைவர் எரிக் டவுசைன்ட் ஆகியோரும் இத் தீர்மானத்தில் கையெழுத்திட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

--------------- "விடுதலை" 28-2-2009

0 comments: