Search This Blog

27.2.09

உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் நுழையும் படி போலீசாருக்கு உத்தர விட்டது யார்?


உயர்நீதிமன்றத்தில் காவல்துறை - வழக்கறிஞர்கள் மோதல்

வழக்கறிஞர்கள் பணிக்குத் திரும்பவேண்டும்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

* நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் ஆணை
* சட்டத்துக்கு மேம்பட்டவர்கள் யாருமில்லை - குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும்
* மருத்துவமனையில் இருந்த நிலையிலும் முதலமைச்சரின் மின்னல் வேகச் செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை


சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் - காவல்துறை மோதல் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற ஆணை மற்றும் நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில், கடந்த 19 ஆம் தேதி (பிப்ரவரி 2009) நடைபெற்ற விரும் பத்தகாத வன்முறை, வழக்கறிஞர்கள் - போலீஸ் துறையினர் மோதல்பற்றி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ் ணன், நீதிபதி சதாசிவம், ஜே.எம். பாஞ்சால் ஆகி யோர் கொண்ட ("பெஞ்ச்") அமர்வுக்குமுன் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது விசாரணையை ஏற்று விசாரித்த நீதிபதிகள், உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் நுழையும் படி போலீசாருக்கு உத்தர விட்டது யார்? என்பதுபற்றி 24 மணிநேரத்துக்குள் இந்த நீதிமன்றத்திற்குத் தமிழக அரசு தெரிவிக்க வேண்டுமெனக் கூறி, அடுத்த நாள் (26.2.2009) விசாரணையைத் தள்ளி வைத்தனர்.

தலைமை வழக்கறிஞரின் விளக்கம்

நேற்று, மீண்டும் விசாரணை நடந்துள்ளது. 6 பக்க அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்தது. அரசு வழக்கறிஞரிடம், ஆயு தம் ஏந்திய 200 காவலர்கள் அந்த வளாகத்திற்குள் நுழைந்தது யாருடைய ஆணையின் பேரில்? என்று கேட்ட கேள்விக்கு - காலை 9 மணிக்கு டெபுடி கமிஷ னரும், துணைக் கமிஷன ரும்தான் அந்த முடிவை எடுத்துள்ளனர் என்று கூறி விலாவாரியாக சம்பவங் களை விளக்கினர்.

வாதாடிய திரு. ஜி.இ. வாகன்வதி என்ற தலைமை அரசு வழக்கறிஞர் (சொலி சிட்டர் ஜெனரல்) குறிப்பிட்ட தாவது:

122 போலீஸ் மற்றும் தீயணைப்புப் பணியாளர்கள், ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி, 77 வழக்குரைஞர் கள், 10 நீதிமன்றப் பணி யாளர்கள், 4 செய்தியாளர் கள், 3 சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்பட பலரும் அடிபட்டு காயமுற்றுள்ளனர் என்ற தகவலையும் பெஞ்ச் முன்னால் எடுத் துக் கூறியுள்ளார்.

வழக்கறிஞர்கள் அளித்த தகவல்கள்


மூத்த வழக்குரைஞர் திரு. ஹரிஷ் சால்வே, காவல்துறையினர் வெறி பிடித்தவர்கள்போல் ஆனார்கள் என்று குறிப்பிட்டு (மனு தாரர்களுக்கு ஆஜரானவர்) உள்ளார்.

மற்றொரு மூத்த வழக் குரைஞர் திரு. கே.கே. வேணுகோபால், போலீஸ் கற்களை வீசி, தடியடியை மேற்கொண்டது என்று கூறி, உடனே தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் நீதிபதி, போலீஸ் கமிஷனருக்கு தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு - காவல் துறையினர், நீதிமன்ற வளாகத்திற்குள் எப்படி அனுமதியின்றி நுழைந்துள்ளார்கள் என்று கேட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு மூத்த வழக்குரைஞர் கே. சுப்பிரமணியம் ஒரு குறிப்பிட்ட வாதத்தை எழுப்ப முயன்ற போது, தலைமை நீதிபதி குறுக்கிட்டு, கோர்ட் ஹாலுக்குள் நுழைந்து அங்கு விசாரணை நடைபெறாத வண்ணம் வழக்கறிஞர்கள் நடந்துகொள்ளவேண்டிய அவசியம் கிடையாது; சட்டத்திற்கு மரியாதை ஏற்படுத்தவேண்டியவர்கள் அவர்கள் என்று குறிப்பிட் டுள்ளார்கள்.

தலைமை நீதிபதியின் ஆணை

விசாரணைக் குழு (Inquiry Panel) இதுபற்றி, அனுமதியின்றி நுழைந்து விட்ட காவல்துறை அதிகாரிகள்மீது உரிய நடவடிக்கை எடுப்பதுபற்றி ஆராயவேண்டும்.

அதேபோல, வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு (மார்ச் 2 ஆம் தேதி) நீதிமன்றங்களுக்குத் திரும்பவேண்டும்.

மீண்டும் மார்ச் 3 ஆம் தேதி விசாரணை தொடரும் என்று அறிவித்துள்ளார் தலைமை நீதிபதி அவர்கள்.

நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா விசாரணை

அந்த பெஞ்ச் ஆணையில், உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி திரு. ஸ்ரீ கிருஷ்ணாவை ஒரு நபர் விசாரணைக் குழுவாக நிய மித்து, 2 வாரங்களுக்குள் அவர் விசாரணை நடத்தி, பரிந்துரைகளைத் தரவேண் டும்; அவருக்கு உதவியாக 2 சி.பி.அய். காவல்துறை அதிகாரிகள் துணை புரிவர் என்றும்,

விசாரணைக்கு வசதியாக, சென்னை உயர்நீதி மன்றச் சம்பவங்களில் தொடர்புடைய 5 மூத்த போலீஸ் அதிகாரிகள் மாற்றப்படுவார்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்!

மோதல் சம்பவத்தின் போது, உயர்நீதிமன்ற வளாகத்தில் சேதப்படுத்தப்பட்ட காவல் நிலையத்தை உச்ச நீதிமன்ற ஆணை இல்லாமல் சீர்படுத்தக்கூடாது; மோதல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க உயர்நீதி மன்றம் அனுமதித்த குழு கலைக்கப்படுகிறது.

எனினும், வாகனங்கள், உயர்நீதிமன்றச் சொத்து களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழு தனது பணியைத் தொடரலாம்.

வழக்கறிஞர்களுக்கு வேண்டுகோள்

பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாவதைக் கவனத்தில் கொண்டு, அவர்களின் நலன் கருதிப் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பும்படி வழக்கறிஞர்களை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணையை ஏற்று, தமிழக அரசு, அதில் குறிப் பிடப்பட்ட 5 காவல்துறை அதிகாரிகள் சென்னையை விட்டு உடன டியாக மாறுதல் (Transfer) செய்து விட்டது!

மருத்துவமனையில் உள்ள முதலமைச்சரின் விரைந்த செயல்பாடுகள்

மருத்துவமனையில் உள்ள முதல்வர் - அந்த ஆணை அரசுக்கு வந்த வுடன் அதனை மின்னல் வேகத்தில் அன்று மாலையே செயல்படுத்தியது மிகவும் வரவேற்கத் தக்கது!

நிதியமைச்சர், சட்ட அமைச்சர் போன்ற அனைவரையும் உடனே அழைத்து, அவ்வாணையைச் செயல்படுத்த என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்ய ஆணையிட்டார்கள்.

தமிழ்நாடு அரசு 25 லட்ச ரூபாய் டெபாசிட் செய்யவேண்டும் - சில நிவாரணங்கள் செய்ய என்பதற்கும் உடனடியாக ஆணை பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், வழக் குரைஞர்களான நண்பர்கள் - உச்சநீதிமன்ற ஆணையினை மதித்து, உடனடியாக வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு தமது நீதிமன்றப் பணிகளுக்குத் திரும்ப வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!

சில காவல்துறை அதிகாரிகள் அதீதமாக நடந்து கொள்வதுபற்றியும், குற்றம் புரிந்தவர்களைக் கண்டறியவும்தான் ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் போடப்பட்டுள்ளது! இரண்டு வாரங்களில் அந்த அறிக்கை விசாரணை முடிந்து, பரிந்துரை வந்தவுடன் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள்மீது - அது காவல்துறையாயினும், காவல் நிலையத்திற்குத் தீ வைத்து, தீயணைப்பு வீரர்களை செயல்படாமல் தடுத்தது போன்ற செயல்களுக்குக் காரண மான தீயசக்திகள் யாராயினும் அவர்கள்மீது உரிய சட்ட நடவடிக்கை தவிர்க்க இயலாத ஒன்று.

சமூக நலனில் அக்கறை உள்ளோரின் கடமை!

தவறு செய்தவர்கள் காவல்துறையில் சிலர் உள்ளதால், மொத்த காவல் துறையையே கண்டிப்பதோ அல்லது அதைச் செயல் இழக்க, விரக்தி அடைந்து நமக்கென்ன வந்தது என்று ஒதுக்குவதோ, கண்டும் காணாதபடி நடந்து கொள்ளும் நிலைமைக்குத் தள்ளப்படும் அபாயகரமான ஒரு நிலைமை உருவாவதை சமூகநலன், பொதுநலன் அக்கறை உள்ள எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது!

சட்டத்திற்கு மேம்பட்டவர்கள் யாருமில்லை


வழக்கறிஞர்களிலும் தவறு செய்யும் சிலர், தங்களை சட்டத்திற்கு மேம்பட்டவர்கள் என்பது போன்ற நினைப்பில், அத் தொழிலுக்குரிய சில மரபு வழிப்பட்ட மரியாதை, கட் சிக்காரர்களுக்கு (Clients) தாங்கள் ஆற்றவேண்டிய கடமை ஆகிய இவைகளைப் புறக்கணித்துவிடக் கூடாது.

அத்துடன் சில அரசியல் கட்சிகளுக்கு இவர்கள் பகடைக் காய்களாகிவிடக் கூடாது.

சமூகநீதியால் விளைந்த இந்த இளம் பயிர்களை, அவர்கள் வளர்ந்துவரும் காலங்களை அழித்துவிடத் திட்டமிட்டு கண்ணிவெடி வைக்கும் ஆதிக்கச் சக்திகளிடம் இவர்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது!

காவல் நிலைய எரிப்பு போன்ற சமூக விரோதச் செயல்களை எவரும் நியாயப்படுத்திடவும் முடியாது; கூடாது!

நீதிமன்ற வளாகத்துக்குக் காவல்நிலையம் வர மூலகாரணம் எது?

முன்பெல்லாம் இல்லாத காவல்நிலையம் அங்கு ஏற்பட எது மூலகாரணச் சம்பவம் என்று சற்றுப் பின்னோக்கி யோசித்தால், அது விளங்கும்.

நீதிமன்றத்திற்கு வந்து திரும்பும்போது பலர் குத்திக் கொலை செய்ய முயன்ற (கூலிப்படையால்) நிலைமை யெல்லாம் மலிந்ததால்தானே அங்கு காவல் நிலையம் ஏற்படுத்த வேண்டுகோள் விடுத்திருக்க முடியும்; தலைமை நீதிபதி - நீதிமன்ற அனுமதியோடுதானே அங்கு காவல் நிலையம் திறக்கப்பட்டது!

உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் காவல் நிலையம் எப்படி வந்தது? உத்தரவிட்டது யார்? என்று உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி கேட்டபோது,

தமிழ்நாடு அரசு சார்பாக வாதாடிய கூடுதல் சொலி சிட்டர் ஜெனரல் ஜி.இ. வாகன்வதி, 2007 ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பினைப் படித்துக் காட்டினார்; அதில், 252 பேர்களைக் கொண்ட காவல் நிலையம் ஒன்றினை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் அமைத்திட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது; ஆகவே, அதனைக் குறைத்திட இயலாது என்று குறிப்பிட்டார். (ஆதாரம்: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, 27.2.2009)

சு.சாமி வருகை - அதன் பின்னணி குறித்து விசாரணை தேவை

எல்லாவற்றிற்கும் மேலாக விசாரணையில் - இம்மாதம் 17 ஆம் தேதி, சுப்பிரமணிய சுவாமி நீதி மன்றம் வந்ததன் விளைவாக இத்தொடர் சம்பவங்கள் உருவாகியுள்ளன என்பதால், விசாரணையை அதனை வைத்தே தொடங்குவதும், உண்மைகளைக் கண்டறிவ தும் விசாரணைக் கமிஷனுக்கு அவசியம் ஆகும். நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா அவர்களுக்கு அனைத்துத் தரப்பினரும் முழு ஒத்துழைப்புக் கொடுப்பர் என்பது உறுதி!

தமிழக முதல்வர் மருத் துவமனையில் இருந்து கொண்டே, அமைதி திரும்பவும், பரிகார நடவடிக்கைகளைத் தங்கு தடை, தாமதம் சிறிதுமின்றி எடுத்து வருவதும் மிகவும் பாராட்டத்தக்கதாகும்.


---------------- "விடுதலை” 27.2.2009

0 comments: