Search This Blog

23.2.09

ஈழப் பிரச்சினையில் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன?




காங்கிரசை கூட்டணிக்கு அழைத்துள்ளார் ஜெயலலிதா
அதிமுகவுடன் கூட்டணி சேரும் இடதுசாரிகளின் நிலை என்ன?
சேலத்தில் செய்தியாளர்கள் மூலம் தமிழர் தலைவர் எழுப்பிய வினா


திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியே வர வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அழைப்பு விடுத்திருக்கிறார். காங்கிரஸ் இல்லாத அணியுடன் இருப்போம் என்று சொல்லிச் சென்ற இடதுசாரிகள் நிலை என்ன? அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள பேசிக் கொண்டிருக் கின்ற மற்றவர்களின் நிலை என்ன? என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் செய்தியாளர்கள் பேட்டியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலத்தில் 21.2.2009 அன்று திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி வருமாறு:

கேள்வி: திமுக அரசை கலைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் கூறியுள்ளாரே?

தமிழர் தலைவர்:

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பொறுப்புக்கு வந்தது. அன்றைக்கு அடுத்த நாளில் இருந்தே அதிமுக பாடுகின்ற பழைய பாட்டு இது. கீறல் விழுந்த கிராம ஃபோன் பிளேட்டின் வரிகள். அதற்கு மக்களிடமும் மரியாதை இல்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை.

கேள்வி: காங்கிரஸ் - திமுக கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளாரே?

தமிழர் தலைவர்:

எங்களுக்கு அதைப்பற்றி எந்த கருத்தும் இல்லை. இதுவரை அதிமுகவிற்கு எந்தவிதமான தெளிவும் இல்லை. அவர்கள் ஆசைகளை குதிரைகளாக்கி சவாரி செய்கிறார்கள் என்பதுதான் உண்மை. இதைப்பற்றி சிந்திக்க வேண்டியவர்கள். நாங்கள் மூன்றாவது அணி அமைப்போம் என்று அதிமுகவோடு சென்ற இடதுசாரிகளும் இப்பொழுது செல்ல திட்டமிட்டுப் பேசிக் கொண்டிருக்கின்றவர்களும் சிந்திக்க வேண்டிய ஒரு விசயம்.

எனவே காங்கிரசைப் பொறுத்த வரையிலே அவர்களுடைய நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி விட்டார்கள். இடதுசாரிகளின் நிலைதான் பரிதாபகரமானது.


கேள்வி: என்ன காரணத்திற்காக காங்கிரஸ் வர வேண்டும் என்று சொல்லியிருப்பார்கள்?

தமிழர் தலைவர்:

என்ன காரணத்தைக் கொண்டு அழைத்திருக்கிறார்கள் என்பதை அவர்களைத்தான் நீங்கள் கேட்க வேண்டும். காங்கிரசை ஒரு நேரம் அழைப்பார்கள். இன்னொரு நேரம் மக்களோடுதான் எங்களுடைய கூட்டணி என்று சொல்லுவார்கள். இன்னும் போகப் போக பல்வேறு பதில்கள் வெளி வரும்.

கேள்வி: ஈழப் பிரச்சினையில் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன?

தமிழர் தலைவர்:

ஈழத் தமிழர் நல உரிமைப் பாதுகாப்பு துணைக் குழு மூலம் டெல்லி சென்று குடியரசு தலைவர், மற்றும் சோனியாகாந்தி ஆகியோரை சந்தித்துப் பேசினோம்.
எங்களிடம் உறுதிமொழிகூறினார்கள். மீண்டும் இந்தப் பிரச்சினை வந்திருக்கிறது. இப்பொழுது சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. எனவே அதனுடைய அமைப்பாளர் சட்டமன்றத்தில் இருக்கிறார். நாங்கள் சுற்றுப்பயணத்தில் இருக்கின்றோம். சுற்றுப்பயணம் முடிந்தவுடனே இதனுடைய தொடர் நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன என்பதைப் பரிசீலித்து செயல்படுவோம்.


கேள்வி: அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தப் பிரச்சினையில் தலையிட வேண்டும் என்று சொல்லி மனு கொடுத்திருக்கின்றார்களே!

தமிழர் தலைவர்:

ஈழப் பிரச்சினையிலே மற்றவர்கள் யார் எதைச் செய்தாலும் நாங்கள் அதைக் குறை கூறுகிறவர்கள் அல்லர். அதே நேரத்திலே அதை நாமும் சேர்ந்து நல்லனவற்றை வரவேற்க வேண்டும்.
கலைஞர் அவர்கள் மிக முக்கியமான உதாரணத்தைச் சொன்னார்கள். இரண்டு அணிகளாக இருக்கிறார்கள் என்பதினாலே ஈழத் தமிழர் பிரச்சினை பலகீனமாகியிருக்கிறது என்று யாரும் கருதத் தேவையில்லை.
கத்தரிக்கோலினுடைய இரண்டு பிளேடுகள் எப்படி சிறப்பாக இருக்கிறதோ அது போல பணியாற்றுவோம் என்று கூறியிருப்பதைக் கவனிக்க வேண்டும்.


இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் பேட்டி அளித்தார்.


---------------------நன்றி:"விடுதலை" 22-2-2009

2 comments:

Anonymous said...

If "Doctors without Borders" kind of organization taking 1000s of doctors and medical supplies go to Jaffna, Vanni, and Mannar area in Boats from Tamilnadu, who can stop it.. NO body, Neither India nor Srilanka can stop them. That is what Tamilnadu has to do right now.

Senthil

Anonymous said...

http://www.senate.gov/fplayers/CommPlayer/commFlashPlayer.cfm?fn=foreign022409&st=1050

Go to the link the learn the hearings.

Senthil