Search This Blog

9.4.08

சாதியைப் பாதுகாக்கவே - சடங்குகள்

சடங்குகள் ஏற்படுத்தியதன் நோக்கமெல்லாம் அவற்றால் சாதியை நிலை நாட்டவே அன்றி வேறல்ல. எதற்காகச் சடங்குகளைச் செய்ய வேண்டும்? அதனால் என்ன பயன் என்று கேட்டால் ஒன்றும் தெரியாது என்று சொல்லுவார்களே ஒழிய அதன் அவசியம் இன்னதென்று சொல்ல முடியாது. யாரைக் கேட்டாலும் இது எங்கள் சாதி வழக்கம் அது அவர்கள் சாதி வழக்கம் என்று தான் சொல்லுவார்கள். அவரவர்கள் சாதியைப் பாதுகாக்கவே ஒவ்வொரு விதமான சடங்குகள் என்பதாக ஆக்கி நிரந்தரமாக நம்மைப் பிரித்து வைக்கவே இந்தச் சடங்கு முறையை ஏற்படுத்தினார்கள்.இன்று வன்னியர் ஜாதியை எடுத்துக் கொள்ளுங்களேன். அதிலேயும் எத்தனை பிரிவு தெரியுமா? திருமணங்களிலே பானைகள் அடுக்குவதும், 10-பானைகள் அடுக்குவதும், பந்தல் முட்டுகிறவரைக்கும் பானை அடுக்குவதும் இப்படியாக இன்னும் பல வழக்கங்கள் உண்டு. இதில் நீ என்ன வன்னியர் என்று கேட்டால் பந்தல் முட்டு வன்னியர் என்பான். பந்தல் முட்டு வன்னியர் என்றால் பந்தல் முட்டும் வரைக்கும் பானையை அடுக்கும் வழக்க முடையவர் என்பதாகும். இந்த வழக்கமெல்லாம் எங்கள் பக்கம் பவானி பகுதியில் கேட்டால் சொல்லுவார்கள். ஆகவே சாதியைப் பாதுகாக்கவே இந்தச் சடங்குகளை ஏற்படுத்தினான். அப்படிப் பாதுகாக்கவே இந்தச் சடங்குகளை ஏற்படுத்தினான். அப்படி இருக்க எதற்காக இந்தச் சடங்குகள் வேண்டும்? திருமணத்திற்கு மாலை மாற்றிக் கொண்டாலே போதுமானதாகும்.

--------- "வாழ்க்கைத் துணைநலம்" என்ற நூலில் தந்தைபெரியார் அவர்கள் எழுதியது

0 comments: