Search This Blog

21.4.08

பகுத்தறிவாளர் யார்?

1. எண்ணம், சொல், செயல் ஆகியவற்றின் அடிப்படையாகப் பகுத்தறிவையே முன்னி றுத்தி, தன்னம்பிக்கையுடன் இயங்குபவர்.

2. மனஉறுதியும், தெளிவான சிந்தனையும் பெற்றவர்.

3. அஞ்சாமையுடன் அறிவுக்கு முதலிடம் தந்து ஆக்கப்பணிகளில் ஈடுபடுபவர். நல்ல நோக்கத்துடன் தீமையைக் களைந்திட அறிவுப்பணி ஆற்றவும் தயங்காதவர்.

4. எங்கும் எதிலும், யாரிடத்திலும் என்றும் உண்மையை ஆராய்ந்து அறிவோர்.

5. சிந்தனையே அனைத்து ஆற்றல்களையும் அளிக்க வழி வகுக்கும் மாமருந்து என உணர்வோர்.

6. கடவுள், மதம், சாதி முதலிய பொய்மைகளினின்றும் விடுபடுவதுடன் - நாடு, இனம், மொழி, மரபு, இலக்கியம் முதலான எல்லைகட்கும் அப்பாற்பட்டு இயங்குபவர்.

7. ஆண், பெண் வேறுபாடுகளைக் கருதாதவர்; பொதுஉரிமையுடன் கூடிய பொதுவுடைமைச் சமுதாயம் அமைக்கப் பாடுபடுபவர். புரட்சி - மனப்பான்மை மிக்கவர்.

8. அடக்கமும், அமைதியும் உடையவராய்த் தற்பெருமையும், தாழ்வு மனப்பான்மையும் இன்றி வாழ்வோர்.

9. துன்பம், தடை, சிக்கல், ஒழுக்கம், அச்சம், பிணி முதலியவற்றை அறிவியல் முறையில் அகற்றக் கற்றவர்.

10. மனித உடல் பல நுட்பங்கள் பொருந்திய பொறி (இயந்திரம்) என்னும் உண்மையைக் கருத்தில் கொண்டு உடலை ஓம்பி, எந்நிலையிலும் மாள அஞ்சாதவர்.

11. பெயர், புகழ், வீண் பெருமை ஆகியவற்றுக்காக ஆடம்பரமான வாழ்வு நடத்தாமல், தற்புகழ்ச்சியைத் துறந்து, பிறர் நலம் பேணுபவர்.

12. மனிதரைச் சமநோக்குடன் அணுகி, மதிக்கும் இயல்பும், உண்மை அன்பும், தன்னலமின்மையும், வினைத்தூய்மையும், மிக்கவராய் ஊக்கமுடன் உழைப்பவர்.

13, தான் ஏற்றுக் கொண்ட பொறுப்பு ஒவ்வொன்றிலும், சமுதாய முன்னேற்றத்திற்காகத் தொண்டாற்றுபவர்


---------------பெரியார் - பகுத்தறிவாளர் நாட்குறிப்பு -1985

0 comments: