Search This Blog

2.4.08

இராமனின் சின்னப்புத்தி!

தம்பீ' வா! நான் சீதையுடன் அனுபவித்ததைக் கேள்!

'அந்தரங்க மித்திரனான லட்சுமணன் சமீபத்திலிருந்தாலும் விரகதாபம் மேலிட்டு இந்திரிய சுவாதீனமற்று பிரலாபித்தார்'.

(பக்கம் 2)

காமம் வாட்டுகிறதே

'சீதையைவிட்டுப் பிரிந்து தவிக்கும் என்னைப் பல வித பட்சிகளும் மிருகங்களும் சப்திக்கும் வசந்த காலம் அதிமாக வாட்டுகிறது.' (பக்கம் 4)

இங்கேதான் இன்பம் அனுபவித்தோம்

'முன்னொரு சமயத்தில் சீதை ஆசிரமத்தில் இருக்கும் பொழுது இந்த பட்சியின் சப்தத்தைக் கேட்டு ஆசை மிகுந்த என்னை அழைத்துப் பலவிதமான இன்பங்களை அனுபவித்தாள், ஆகையால் அவளைவிட்டுப் பிரிந்த பிறகே இது இவ்வளவு துக்கத்தைத் தருகிறது.'

(பக்கம் 5)

தகுந்த நேரத்தில் கவர்ந்து சென்றானே

'நாம் நகரத்திலிருக்கும்பொழுது இராவணன் சீதையை எடுத்துப் போகாமல், ஏகாந்தத்தில பரம சுகங்களை அனுபவிக்கத் தகுந்த இந்தக் காட்டில் வந்திருக்கும்பொழுது எடுத்துப் போனானே.' (பக்கம் 6)

அவளுடன் சுகிப்பவனே பாக்கியசாலி

'இப்படிப்பட்ட அழகிய தேசங்களிலும் காலங்களிலும் பிரிய நாயகியுடன் இஷ்டபோகங்களை அனுபவிப்பவர்களே பாக்கியசாலிகள்.' (மேற்படி பக்கம்)

என்னைப் பார்த்தால் சேர்ந்து சுகம் கொடுப்பாள்

'என்னைப் பார்த்தால் உண்டாகும் ஆனந்தத்தால் மலர்ந்த கண்களுடன் சீதையும் இப்படியே என்னைச் சேர்ந்து சுகத்தைக் கொடுப்பாள் அல்லவா?' (பக்கம் 7)

பட்சிகளைப் பார் என் காமத்தை வளர்க்கிறது

'பட்சிகள் சந்தோஷமேலிட்டு விளையாடுவதற்கு ஒன்றை ஒன்று கூப்பிடுவதைப் பார்த்தால் எனக்கு ஆசையை வளர்ப்பதற்கே இப்படிச் செய்கின்றன என்று எண்ணுகிறேன்.' (மேற்படி பக்கம்)

வசந்த ருதுவில் யாரிடமும் வசப்பட்டுவிடுவாளோ?

'ஜானகி இருக்குமிடத்தில் வசந்தகாலம் உண்டானால் அவளும் பிறர்க்கு வசப்பட்டு என்னைப்போல் துக்கப்படுவாளல்லவா? அவளைக் கொண்டுபோய் வைத்திருக்குமிடத்தில் ஒரு வேளை வசந்தருது உண்டாகாது... அவளிருக்குமிடத்தில் வசந்தருது உண்டென்றே ஒப்புக்கொண்டாலும் பிறர்களால் பயமுறுத்தப்பட்டு துன்பப்படுகையில் அவள் என்ன சுகத்தை அனுபவிப்பாள்?'

(மேற்படி பக்கம்)

ஆனாலும் அவள் எண்ணங்கள் என்னிடம்தான்

'சீதையின் மனதும் பிராணனும் எண்ணங்கள் யாவும் என்னிடத்திலேயே வேரூன்றி இருக்கின்றன. சீதையுடன் சேர்ந்திருக்கும் பொழுது எனக்கு மிகுந்த சுகத்தையும் ஆனந்தத்தையும் கொடுத்தது, இந்த காற்றேயல்லவா?' (மேற்படி பக்கம்)

சீதையிடம் சுகம் கண்டாலொழிய உயிர்வாழேன்

'அழகுள்ள ஜானகியை அடிக்கடி ஞாபகம் செய்து எனக்கு அவளிடத்தில் உள்ள ஆசையை வளர்க்கின்றன இந்த பம்பை நதியில் அடிக்கும் சுகமான காற்றை சீதையும் என்னிடத்திலிருந்து அனுபவித்தால் ஒழிய நான் பிழைக்க மாட்டேன்.' (மேற்படி பக்கம்)

குறிப்பு : இவ்விதம் ராமன் சீதையின் மீது காமம் கொண்டு கதறுகிறான். அதுவும் யாரிடம்? தன்னுடைய தம்பி லட்சுமணனிடம் கூறுகிறான். இவன் எப்படியெப்படி, எங்கெங்கே சீதையுடன் சேர்ந்து படுத்திருந்தானோ அதைத் தன் தம்பியிடம் கூறுகிறான். மனிதப் பிறவியில் கூட யாராவது இப்படிக் கூறக் கேட்டிருக்கிறோமா? அதிலும் தன்னுடைய தம்பியிடமே இந்த விஷயங்களைக் கூறுகிறவன் கடவுளின் அவதாரம் என்பதாகக் காணமுடியவில்லை. இதனால், பார்ப்பனர்கள் கடவுளர்களின் யோக்கியதை, அவதாரங்களின் அநாகரிகம், பார்ப்பனப் பழக்க வழக்கங்கள முதலியன விளங்குகின்றன.

இராமன் ஒரு இடத்தில், "நான் அயோத்தியில் இருக்கும் போது இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றிருந்தால் அக்கறை இல்லை. நானும் சும்மா இருந்திருப்பேன். ஆனால் இங்கு சரியான இடத்தில் அதாவது எப்பொழுதும் கூடி இன்பம் அனுபவிக்கத் தகுந்த யாரும் இல்லாத இந்த இடத்தில், நான் சீதையிடன் எப்பொழுதும் சுகம் அனுபவிக்க ஆசை கொண்டிருந்த சமயம் பார்த்துக் கவர்ந்து கொண்டு போய்விட்டானே" என்ற கருத்தில் துக்கப்படுகிறான். ஆகவே இராவணன் சீதையை அயோத்தியிலேயே தூக்கிச் சென்றிருந்தால் இராமன் சும்மா இருந்திருப்பான் என்றும் தெரிகிறது! மேலும் இராமன் காட்டுக்கு வந்தது சீதையுடன் சதாகாலமும் சேர்ந்து இன்பம் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக வந்திருப்பான் என்றும் தெரிகிறது.

இப்படிக் கடவுள் அவதாரத்தைப் பார்ப்பனர்கள் கொஞ்சமும் அறிவில்லாத முறையில் சித்திரித்து எழுதுவதால், கடவுளுக்கும் கடவுள் அவதாரம் என்பதற்கும் எந்த அளவில் பெருமையைக் கொடுப்பதாக இருக்கிறதென்பதைச் சிந்தியுங்கள்.

மேலும் இராமனைப் பற்றி வால்மீகி கூறுகையில், பல இடங்களிலும், ராமன் ஆண்மை அற்ற பேடி என்பதையும் அலி என்பதையும் குறிப்பிடும்படியாகவே சொல்லுகிறார். இதைச் சீதைக்கூட இராமனைக் குறிப்பிடுகையில் இராமன் ஆண்மையற்றவன், வீர்ய மில்லாதவன் என்று (அயோத்தியா காண்டம் 30 ஆவது சர்க்கத்தில்) கூறுகிறாள்.

ஆனால், இராமன் சீதையை விட்டுப் பிரிந்தவுடன் தான் சீதையிடம் இப்படி அனுபவித்தேன், அப்படி அனுபவித்தேன் என்று காம லீலையில் தன்னைப் பெருமையாகக் கூறிக் கொள்கிறான். இப்படிப்பட்டவனுக்கு, கல்யாணம் ஆகி 12 வருடம் காட்டிற்கு வந்து 13 வருடம் ஆக 25 வருடத்தில் சீதைக்கு கர்ப்பமே தரிக்கவில்லை, ஆனால் சீதை பெண்மைத் தன்மை அற்றவள் என்று கூறுவதற்கும் முடியவில்லை, ஏனெனில்,


சீதையை இராவணனிடமிருந்து மீட்டு வந்த ஒரு மாத காலத்தில் சீதையின் வயிற்றை பிபை சான்ஸ்' ஆக (எதிர்பாராதவிதமாக) பார்த்துவிட்டான். சீதையின் வயிறு பெரிதாக இருந்தது ஏன் வயிறு பெரிதாய் இருக்கிறது என்று கேட்ட இராமனுக்கு சீதை, 'என் வயிற்றில் பிள்ளை இருக்கிறது' என்றாள். இராவணனிடமிருந்து மீட்டு வந்த ஒரு மாத காலத்தில், சுமார் 4 மாத காலத்தில் உண்டான கர்பபம் எப்படி வந்தது? எங்கிருந்து வந்தது? யாரால் உண்டாக்கப்பட்டிருக்க வேண்டும்?

எனவே, அது எப்படி இருந்தாலும் சீதை பெண்மைத்தன்மை உள்ளவள் என்பதை இதன்மூலம் அறிகிறோம். மேலும், இதுவரை கர்ப்பம் உண்டாக்க வல்லமை இல்லாத ராமன் பேடி என்பதும் விளங்குகிறது. அப்படிப்பட்டவன் காமத்தில் கைகண்டவன்போல் ஏதேதோ கூறிப்பிதற்றுகிறான் ஏன்? தன்னைப் பற்றிய உண்மைகள் வெளியில் தெரிந்துவிடுமோ எனற சந்தேகம்.

மேலும், இப்படி அவன் பிதற்றும் பொழுது தன்னை அறியாமலே தன்னை அலி என்பதையும் ஒரு இடத்தில் ஒப்புக்கொள்ளுகிறான்.

ஆரண்யகாண்டம் 64 ஆவது சர்க்கத்தில் இராமன் கூறுகிறான், 'என்னை வீர்யமற்றவன், கையாலாகாதவன் என்று அவமதிக்கிறார்கள்' என்று பிறர் தன்னைப் பேடி என்று கூறுகிறார்களே என்று வருத்தமுறுகிறான்.

இப்படி ராமன் தன்னைப் பேடி என்று மக்கள் உணர்ந்துவிட்டார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு அதை எப்படியும் மறைக்க வேண்டும் என்பதற்காக ஆண்மையுள்ளவன் போல் பிதற்றுகிறான். எனவே இராமன் பேடி என்பதில் அய்யமில்லை.

--------தந்தைபெரியார் அவர்களால் (எல்லா ஆதாரங்களைப் பொறுத்தே)
தொகுக்கப்பட்டவை ---நூல்-"இராமாயணக் குறிப்புகள்"

0 comments: