Search This Blog

4.4.08

இராமன் படத்தைக் கொளுத்த வேண்டும்

இருபது லட்ச வருடங்களுக்கு முன் ராமன் , அயோத்தி இருந்தனவா? இந்த நாள் - கோள் இருந்தனவா? ராவணன் இருந் தானா? பார்ப்பனர்கள் ராமநவமி என்று சொல்லி கொண்டு வருடத் திற்கு ஒரு நாள், போலி நாளை மக்களிடம் விளம்பரப்படுத்திக் கொண்டு ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாட்டம் நடத்துகின்றார்கள். இதை அரசாங்கம் அனுமதிப்பதுடன் அதற்காகச் சில இடங்களில் ஒரு நாள் லீவும் கொடுக்கிறார்கள்.

ராமன் பிறந்தநாள் என்று சொல்லப்படுவது இன்றைக்கு 20 லட்சம் (20,00,000) ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த 20லட்ச வருடங்களில் உலகத்தில் உள்ளது எல்லாம் நாசமடைவதும்-உலகமே மாற்றமடைவதும் போன்ற காரியங்கள் நடந்து இருக்கவேண்டும். அப்போது மனித சமுதாயம்-மனிதன்- காடுமேடு- உலக பூகோளம் மலை- சமுத்திரம் போன்ற யாவும் அழிவும்-மாற்றமும் அடைந்து விடும் . இது யாவரும் அறிந்ததும்- புராணக்கூற்றும் -சரித்திர உண்மையும் ஆகும்.

இப்படிப்பட்ட நிலையில் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் அயோத்தி என்ற ஊரும், தசரதன் என்ற ஒரு அரசனும், அவனுக்கு அனேக பெண்டாட்டிகளும் இருந்தனர்; அவனுக்கு ராமன் என்று ஒரு பிள்ளை பிறந்தான். அதற்கு வருடம் - மாதம் - தேதி - கிழமை நாள் - கோள் இன்ன இன்னது என்பதும் அவை மாத்திரம் அல்லாமல் அந்த 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் திராவிடநாடு, பாண்டியநாடு -இலங்கை நாடு என்பவை இருந்தன என்பதும் எப்படி உண்மையாக இருக்கமுடியும்?

20 லட்சம் வருடங்களாகக் கோள்கள் மாறாமல் மறையாமல் இருக்கமுடியுமா? பார்ப்பனர்கள் தங்கள் சுகவாழ்வுக்காக எதையும் சொல்லுவார்கள் - செய்வார்கள் என்று இருந்தாலும் பார்ப்பனர் அல்லாத மற்ற மக்கள் - அறிவாளிகள், பூகோளம் விஞ்ஞானம் படித்த சரித்திர ஆராய்ச்சிக்காரர்கள் இவற்றை எப்படி நம்புகிறார்கள் என்பது நமக்குப்புரியவில்லை.

இந்தக் கற்பனைப் புளுகை நமது மாணவர்கள் எப்படி நம்புகிறார்கள் என்பதும் அதிசயமாக உள்ளது.

வடநாட்டில் ராவணனைக் கொளுத்தினார்கள் என்றால், தென்னாட்டில் ஏன் ராமனைக் கொளுத்தக் கூடாது? ஒரு பொய்யான கற்பனைக் கதையில் இருந்து தென்னாட்டு மக்களை அவமானமும், இழிவுபடுத்தலுமான காரியத்தை பார்ப்பனரும் வடநாட்டாரும் செய்தால் அதற்கு அவர்களுக்கு உரிமை இருந்தால், அதற்குப் பதிலாக அவர்களுக்கு புத்தி வரும்படியான காரியத்தை நாம் ஏன் செய்யக்கூடாது? ஆகவே மாணவர்கள்,இளைஞர்கள், திராவிடர்கழகத் தோழர்கள் , கட்டாயமாகச் சிந்தித்து நல்லபடி யோசித்து, எனக்காக என்றே அல்லாமல், தங்களுக்குச் சரி என்றும் அவசியம் என்றும் தோன்றினால், இராமன் படத்தைக் கொளுத்த வேண்டும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

நமது (பார்ப்பனரல்லாத) மக்கள் ஆதரவு, பார்ப்பனர்களுக்கு இருப்பதால் இதுபோன்ற (பார்ப்பனப்)பிரச்சாரம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இந்தப்படியான பித்தலாட்டங்களில் ஏமாறாமலும் நம்மை இழிவு படுத்தும் இதுபோன்ற காரியங்களைத் தடுக்கவும்தான் நாம் ராமன் படத்தைக் கொளுத்துவது போன்ற செயல்களில் இறங்கவேண்டும்.

----------தந்தைபெரியார்- நூல்: "இந்துமதப் பண்டிகைகள்" பக்கம் 9-11

நாய் விற்ற காசு குறைக்காது; கருவாடு விற்ற காசு நாறாது என்பது போல் தமிழர்களை இழிவுபடுத்தும் இராமாயணக் கதைகளை தற்போது சன் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது. இதன் மூலம் சன் தொலைக்காட்சிக்கு வருமானம் வேண்டுமானால் கிடைக்கலாம்.ஆனால் இவர்களின் வருமானத்துக்கு வழி செய்த திராவிட இயக்கத்தின் வழித்தோன்றல்களில் ஒருவரான இவர்களின் தந்தை முரசொலி மாறனுக்கு,அவரின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தியுள்ளார்கள் என்பதை எப்போதுதான் உணர்வார்களோ?

உணமையிலே முரசொலி மாறான் அவர்களுக்கு இவர்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்ரு விரும்பினால் அவரின் கொளகையை மதித்து உடனடியாக இராமாயண ஒளிபரப்பை நிறுத்திக் கொள்ள வேண்டும். பெற்றெடுத்த தகப்பனின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதே நமது அன்பான வேண்டுகோள்.

0 comments: