Search This Blog

19.4.08

சச்சி ராமாயண் மீதான தடை செல்லாது உச்சநீதிமன்றம் 1976-இல் வழங்கிய தீர்ப்பு

தந்தை பெரியார் அவர்கள் எழுதிய ``ராமாயணா - எ ட்ரூ ரீடிங் (Ramayana-A True Reading) (`ராமாயணப் பாத்திரங்கள் என்ற நூலின் மொழி பெயர்ப்பு) என்ற ஆங்கில நூலையும் அதன் இந்தி மொழி பெயர்ப்பையும் உத்திரப்பிரதேச மாநில அரசு தடை செய்தது. இதை எதிர்த்து உத்திரப்பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தடை செல்லாது என்று அது தீர்ப்பு அளித்தது. தீர்ப்பை எதிர்த்து உ.பி. அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. சுப்ரீம் கோர்ட்டும் உ.பி. அரசும் இந்த நூலுக்கு தடை விதித்தது செல்லாது என்று தீர்ப்புக் கூறி அப்பீலை தள்ளுபடி செய்தது. நீதிபதி கிருஷ்ண அய்யர் அவர்கள் அளித்த தீர்ப்பின் விவரம் இங்கே தரப்படுகிறது. செப்டம்பர் மாதம் தந்தை பெரியார் பிறந்த நாளன்று (17-9-1976) இந்தத் தீர்ப்பு வந்தது. ஆனால், அன்றைய தினம் இத்தீர்ப்பை `விடுதலை யில் வெளியிடக் கூடாது என்று தணிக்கை அதிகாரிகள் கூறி விட்டனர்).

``சில வழக்குகள் சமுதாய ஒழுங்கீன முறைகேடுகளுக்கு அப்பாற்பட்டதாக முகப்பி லேயே இருக்குமென்றாலும், ஜனநாயகத்தின் அடிப்படை யான சுதந்திர உரிமைகளை அசைக்கும் வழக்காக இந்த வழக்கு அமைந்துள்ளது.

இந்த மேல் முறையீட்டு வழக்கானது உத்திரபிரதேச அரசு பிரிவு 99-ஏ குற்ற விசாரணை முறையீட்டுச் சட்டத்தின்கீழ் தமிழகத்தின் பகுத்தறிவு இயக்கத்தின் தந்தை யும் அரசியல் மேதையுமான பெரியார் (ஈ.வெ.ரா.) அவர் களின் ராமாயணத்தை (சுயஅயலயயே -ஹ கூசரந சுநயனபே) ஆங்கிலத்திலிருந்து இந்திப் பதிப்பாக்கிய புத்தகத்தை அரசாங்கம் பறிமுதல் செய்ய பிறப்பிக்கப்பட்ட ஆணை சம்பந்தப்பட்டதால் உயர்நீதி மன்றத்தின் தனி அனுமதி பெற்று வந்திருக்கிறது.

உத்திரபிரதேச அரசின் முறையீட்டுப்படி இந்தப் புத்தகமானது வேண்டு மென்றே கெட்ட எண்ணத் தோடு இந்திய குடிமக்களின் ஒரு பகுதியாகிய இந்துக் களுடைய உணர்ச்சிகளின் புனிதத் தன்மையைக் கெடுக்க வேண்டுமென்று வெளியிடப் பட்டதால் இந்திய தண் டனை சட்டம் 295 பிரிவு (ஏ) பிரகாரம் தண்டனைக்கு உட்படுத்தக்கூடிய குற்றம் ஆகும். இந்த அறிவிப்பு ஆணையின் பிற்சேர்க்கை, சம்பந்தப்பட்ட புத்தகத்தின் ஆங்கில, இந்திப் பதிப்புகளில் குறிப்பிட்ட பக்கம் வரிகளில் உள்ள செய்திகள் சமுதாயத் தின் ஒழுக்க உணர்ச்சிகளைத் தகர்ப்பதாகவும் தெரிவித்து இருக்கிறது.

`இந்த வழக்கில் சம்பந்தப் பட்ட புத்தக வெளியீட்டாள ரான எதிர்மனுதாரர் உயர் நீதிமன்றத்திற்கு மனு செய்து கொண்டதன் பேரில், அரசின் அறிவிப்பு ஆணையை நீதி பதிகளின் குழு ஒன்று செல் லுபடியாகாதென தீர்ப்பளித் துள்ளது.

பாதிக்கப்பட்ட உத்திரப் பிரதேச அரசு உயர்நீதிமன்றத் தின் தனி உரிமை பெற்று வழக்கை அதன் வழக்கறி ஞரைக் கொண்டு முறையிட் டது. வழக்கறிஞரின் வாதப் படி அரசின் அறிவிப்பாணை செல்லுபடி ஆகக் கூடியது எனவும், தள்ளுபடி செய்யப் படுவதற்கான எந்தக் கார ணமும் இல்லை எனவும், இந்தப் புத்தகமானது பெரும் பான்மையான இந்துக்களின் புனித உணர்ச்சிகளைப் புண் படுத்துவதாகவும், கடவுள் அவதாரங்களை ராமன், சீதை மற்றும் ஜனகன் முதலியோர் களை இழிவுப்படுத்துவதாக வும் அமைந்துள்ளது. உயர் நீதிமன்றம் பெரும்பான்மை யான நீதிபதிகளின் தீர்ப்புப் படி அரசின் அறிவிப்பு ஆணையை 99 ஏ குற்றமுறை விசரணை சட்டத்தில் குறிப் பிடப்பட்டுள்ள பறிமுதல் செய்யப்படுவதற்கான காரணங்களை அரசு தெளி வாக்கவில்லை என்ற ஒரு காரணத்தினால் மட்டும் அரசுக்கு எதிரிடையாக தீர்ப் பளிக்கப்பட்டு இருக்கிறது.

பறிமுதல் செய்வதற்கான விளக்கம்

குற்றமுறைப் பிரிவு 99 ஏ தெளிவாக ஆராயப்பட்டால் அரசின் அறிவிப்பாணையின் குறைபாடுகளைத் தெரிந்து கொள்ளலாம். சட்டத்தின் கூறுகளை உற்று நோக்குங் கால், புத்தகம் பறிமுதல் செய்யப்படுவதற்கான காரணங்களை மூன்று தலைப்புகளாக பிரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. அச் சட்டத்தின் பிரகாரம் எந்த ஒரு புத்தகமோ அல்லது எந்த ஒரு ஆவணமோ எந்த ஒரு செய் தியை உள்ளடக்கியிருந்தாலும் அந்தச் செய்தியானது இந்திய குடிமக்களிடையே வேற் றுமை உணர்ச்சிகளை வளர்க் கும் விதத்திலோ, பகைமையை வளர்க்கும் விதத்திலோ இருந் தாலும் சம்பந்தப்பட்ட அர சின் கருத்தானது அவற்றை பறிமுதல் செய்யப்படுவதற் கான காரண விளக்கங்களை கொண்டிருப்பதாக இருக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட மாநில அரசு அறிவிப்பு ஆணையின் மூலம் வெளியிடப்பட்ட புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டு மென உத்தரவு இட வேண்டும்.
சட்டத்தில் மூன்றாவது பிரிவாக காட்டப்பட்டுள்ள செய்தி வினாக்கள் அறிவிப்பு ஆணையில் தரப்பட்டுள்ளன என்பதை முடிவு செய்தல் வேண்டும். உயர்நீதிமன்றம், அரசின் ஆணையில் இந்த விளக் கங்கள் தரப்படவில்லை யென தள்ளுபடி செய்யப் பட்டதானது சரியில்லை என அரசு தரப்பில் ஆஜாராகும் வழக்கறிஞர் வாதித்து, அரசு ஆணையின் பிற்சேர்க்கையில் அது விளக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

நம் விருப்பத்திற்கேற்ற சட்ட விளக்கம் முறை அல்ல

மேலும் அரசு வாதிடு கையில் சம்பந்தப்பட்ட புத்தகத்தில் சம்பந்தப்பட்ட பக்கங்களில் உள்ள வரிகள் பறிமுதல் செய்யப்படுவ தற்கான போதுமான விளக் கங்களோடு இருப்பதுதான் அரசின் சில அறிவிப்பு ஆணையில் இடப்பட்டுள்ள விளக்கம் தேவையில்லை எனவும், தவிர்க்க முடியாதது எனவும் குறிப்பிட்டார்.

அறிவிப்பு ஆணையின் பிற்சேர்க்கையில் பறிமுதல் செய்யப்படுவதற்கான காரணங்கள் கூறப்பட்டிருப் பதால் அதுவே சட்டத்தின் மூன்றாவது பகுதியைப் பூர்த்தி செய்வதாக அமைகிறது. ஆகவே, சம்பிரதாய முறைப் படி தனி விளக்கம் கூறுவது தகுதியானது அல்ல என்றும், எதிர் மனுதாரரின் வழக் கறிஞர் எடுத்துக்காட்டிய சட்டப் பிரிவுகளில் விளக்கங் கள் தரப்பட வேண்டுமென வலியுறுத்தி கூறப்பட்டிருப் பதின் காரணமாக, அவற்றை நிராகரித்துவிட்டு நம் விருப் பத்திற்கு உட்பட்ட வகையில் சட்ட விளக்கம் கூறி பறிமுதல் செய்யப்பட்டது சரியானது என வாதிடுவது முறையல்ல. அது அடிப்படை ஜீவாதார உரிமையான பேச்சு சுதந் திரத்தைப் பறிப்பதும் சட்டத் திற்கு புறம்பானதுமாகும் என வாதிட்டார்.

அரசு தரப்பில் வாதிட்ட வழக்குரைஞர் வெளி யிடப்பட்டுள்ள சில பகுதிகள் அரசு ஆணையின் பிற்சேர்க் கையில் காட்டப்பட்டுள்ள மாதிரி தெய்வீகத்தன்மை வாய்ந்த ராமன், சீதை, ஜனகன் முதலியவர்களை இழிவுப் படுத்தும் விதத்திலும், உத்தரபிரதேசத்தில் வாழும் இந்துக்களின் உணர்ச்சிப் புண்படுத்தும் வகையிலும் இருப்பதால், கோர்ட்டார் அவர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.

எங்கள் கடமை


நாங்கள் அவருடைய வாதத்தை ஆராயுங்கால் ஜீவா தார உரிமைகள் விலங்கிடப் பட்டுள்ளதா? இல்லையா? என்பதனையும், எந்த அடிப் படை உணர்வுகளால் உந்தப் பட்டு உத்திரப்பிரதேச அர சால் பறிமுதல் செய்யப்படு வதற்கு ஆணையிடப்பட் டுள்ளது என்பதனையும் தெளிவுபடுத்த வேண்டும்.

நமது இந்திய நாடானது மதச்சார்பற்ற நாடு. எந்த ஒரு மதத்தினையும் தழுவியது அல்ல. இந்த நாடானது எந்த ஒரு மக்களின் நம்பிக்கையைப் பற்றிக் கவலைப்படுவதிலும், சட்டம், ஒழுங்கு இவற்றை நிலை நாட்டுவதிலும் நாட் டங்கொண்டு அக்கறை கொண்டுள்ளது. அதே நேரத்தில் எந்த ஒரு வகுப்பு மக்களின் உணர்ச்சிகளைப் புண்படுத்தும்படியான தூண் டும்படியான வெளியீடுகள் அல்லது பேசப்படுகின்ற சொற்களைப் பற்றிக் கவலைக் கொண்டு, மூர்க்கத்தனமான செயல்களை நடை பெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமைக்கு ஆளாக்கப்பட்டி ருக்கிறது. எந்த ஒரு அரசும் அமைதியையும், பாதுகாப் பையும் கட்டிக்காப்பது அவ சியம். அப்படி அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் எந்த ஒரு வடிவிலோ பங்கம் ஏற்பட்டு ஆபத்து விளையுமேயானால், அந்த அரசு நீதித்துறையை நாடவேண்டியுள்ளது.
உயர்நீதிமன்றத் தீர்ப்பு தவறல்ல

எங்கள் முன்னால் உள்ள இந்த மேல் முறையீட்டு வழக்கை, சட்ட ரீதியாகவும் பார்க்கின்ற நேரத்தில் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு தவறானது அல்ல. பல்வேறு உயர்நீதி மன்றங்கள் இது சம்பந்த பட்ட பிரச்சினையைப் பல் வேறு விதங்களில் முடிவு செய்து தீர்ப்பளித்துள்ளன. தனிப்பட்ட ஒரு மனிதன்மீது கடுமையான நடவடிக்கை அல்லது தடைச் சட்டத்தின் மூலம் கொண்டுவரப் படுமே யானால், அதனால் ஏற்படும் குற்ற விளைவுகளை எதிர் நோக்க வேண்டியுள்ளது.

எனவே, குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 99 ஏ ஏற்படுத்திய அறிஞர்கள், அரசிற்கு முன்னேற்பாடான அதிகாரங்களை வழங்கி உள்ளார்கள். சட்ட ரீதியாகச் சொல்லப்பட்ட வழிமுறை களுக்கு உட்பட்டுத்தான் பயன்படுத்த வேண்டும். இந் தியக் குடிமக்களின் இரு சாராரிடையே பகைமையை வளர்க்கும். அல்லது ஒரு மதத்தினரின் உணர்ச்சியைப் புண்படுத்தும் வெளியீடுகள் இருக்குமேயானால், சட்ட ரீதியாக அரசு இதனை உன் னிப்பாகக் கவனித்து நட வடிக்கை எடுக்க சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட இந்தப் பிரிவு நிர்ப்பந்திப்பதும் அல் லாமல், 99 ஏ எந்தக் காரணத் திற்காகப் பறிமுதல் செய்யப் படுகிறது என்பதனையும் விளக்க வேண்டுமென உரைக் கிறது. எந்தக் காரணத்திற்காக அரசு செயல்பட்டிருக்கிறது என்பதனை கண்டிப்பாக விளக்கப்பட வேண்டுமென சட்டம் நிர்ப்பந்திப்பதால், காரணத்தை விளக்காமல் அரசு அறிவிப்பாணையில் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்வது கூடாது.

சட்டரீதியாக ஒரு பிரச் சினை கட்டாயமாக்கப்படுமே யானால் அதன் பிரகாரம் அரசு செயல்பட்டே தீர வேண்டும். சட்ட ரீதியாக ஒரு வெளியீட்டை ஒரு மாநில அரசு பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பிக்குமேயா னால், அது ஒரு சாதாரண பிரச்சினை அல்ல. மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டுமென்பதனை மாநில அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
பிரச்சினைகள் விடுபட்டால் சட்டம் செயலிழந்து விடும்

இதுபோல பிரச்சினை களில் ஏதாவது ஒன்று விடுபடு மேயானால், சட்டம் அங்கு செயலிழந்து விடுகிறது.

மன்னர் ஆட்சியிலிருந்து மக்களாட்சிக்கு நாம் திரும்பி வருகின்றபோது, மக்களின் உரிமைகளை உன்னிப்பாகக் கவனிப்பதோடு, பாதுகாக்கப் படுவதும் முறையானதாகும். சட்ட ரீதியாக இப்படித்தான் செயல்பட வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படும் போது, அப்படிச் செய்யாமல் செயல் பட்டுவிட்டு விளக்கங்கள் கூறுவது தகுதியானாதும் முறையானதும் அல்ல. குற்ற வியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 99 சி படி பாதிக்கப் பட்டவர்கள் உயர்நீதிமன்றத் தில் மேன் முறையீடு செய்து தடை உத்தரவைத் தகர்க்க மனு கொடுக்கும் நேரத்தில், அரசு எந்தக் காரணத்திற்காக செயல்பட்டிருக்கிறது என்ப தனைக் கருத்தில் கொண்டு தீர்ப்பளித்தல் முறையான தாகும்.

நீதிமன்றம் அரசு அறிவிப் பாணையில் உள்ள கருத் துகளைக் கொண்டு கவனித்து, தனது எல்லைக்கு அப்பாற் பட்ட விளக்கமான விசா ரணை செய்ய இயலாது. சட்ட ரீதியாகச் சில சலுகைகள் தனிப்பட்ட ஒருவருக்குக் கொடுப்பதற்குச் சட்டம் குறிப்பிட்ட அளவு இடமளிக் குமேயானால், அதனைத் தடை செய்ய வெளியீட்டை தடை செய்ய அதிகாரம் யாருக்குமில்லை.

நாங்கள், தடை செய்யப் படுபவரின் கருத்தை விரிவாக எடுத்துரைத்து செயல்பட வேண்டுமெனச் சொல்ல வரவில்லை. சில வழக்குகளில் குறிப்பாக சொல்லப்படுமேயா னால், அதுவே போதுமானது. மற்ற வழக்குகளில் விரிவான விளக்கம் தேவைப்படுகிறது. சொல்லப்படாமல் விடப் படுமேயானால் அந்த ஆணை முறையானது அல்ல.
தனி மனித உரிமை பறிக்கப்படக் கூடாது

தனி மனிதனுக்குக் கொடுக் கப்பட்டுள்ள உரிமை பறிக்கப்படுவதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 99 ஏ -யைப் பயன்படுத்துவது சரியானது அல்ல. தேச நலனைப் பாதுகாப்பதற்குத் தனி மனித உரிமையைக் கட் டுப்படுத்த வேண்டுமென்பதில் அய்யமில்லை.
தனி மனித சுதந்திரத்தைப் பற்றி கோட்பாடுகள், அரசி யலமைப்பில் குறிக்கப்படும் போது, காரணம் பொருந்திய கட்டுப்பாடுகளை விதித்துத் தானிருக்கிறார்கள்.

குற்றமுறை பிரிவு 99 ஏ ஏற்படுத்தப்படும்போது, அர சியலமைப்பை கருத்தில் கொண்டுதான் செய்யப்பட்டி ருக்கிறது. பொதுமக்களின் நன்மையினை கருத்தில் கொண்டு பொதுமக்களின் அமை தியைக் காப்பதற்காக புது ஆணை பிறப்பிக்கப்படும் போது தனி மனித உரிமை பற்றிக் கவலை கொள்ளாமல் மூடத்தனமான கொள்கைகள் தடை செய்யப்பட வேண்டும். அந்த மாதிரியான வெளியீடு கள் சமுதாயத்தில் வெளியி டப்படுமேயானால், பொது மக்களின் அமைதியையும், நன்மையையும் முன்னிட்டு தடை செய்யப்படுதல் அவசி யம்.
கண்மூடித்தனமான, மூடத்தனமான கொள்கைகள் கண்டிக்கப்பட்டு பயமில்லா மல் வெளிக்காட்டப்படுமே யானால், பொருளாதாரக் கொள்கையையோ, மேற் கண்டவாறு பயமில்லால் வெளிக் கொணரப்பட்ட செய் திகளையோ தடை செய்யக் கூடாது. இதுதான் குற்ற முறை 99-ஏ பிரிவில் வலி யுறுத்தப்பட்டிருக்கும் செய்தி யாகும்.

தடை செய்வதானால் காரண காரியத்தோடு விளக்கம் வேண்டும்

நம்முடைய அரசியல் அமைப்பு இந்த மாதிரியான பாராட்டத்தக்க கொள் கையை அடிப்படையாகக் கொண்டு எழுந்த காரணத்தி னால் கடமை தவறாது, சட்ட ரீதியாக அது கவனிக்கப்பட வேண்டுமென்பதே ஆகும்.

சமுதாயத்திற்குத் தீங்கு விளைவிக்கும் எந்த வெளியீட் டையும் தடை செய்து அதன்மூலம் பொது மக்களின் அமைதியைக் காக்க அதி காரம் வழங்கப்பட்டிருக் கிறது.
எனவே, குற்றமுறை 99-ஏ பிரிவில் வலியுறுத்தல் பட்டி ருக்கும் செய்தியாகும் பிரிவின் படி நிர்வாகம் செயல்பட தடை செய்யப்பட வேண்டிய விஷயம் காரண காரியங் களோடு விளக்கப்பட வேண் டுமென்பதேயாகும். அரசின் அறிவிப்பாணை இம் முறையில் இருந்து தவறி யிருக்குமேயானால், அது பிறப்பிக்கப்பட்ட சில கொள் கைகள் நகைப்பிற்குள்ளாக்கு வதாக இருக்கலாம்.

அம்மாதிரியான சிலர் சுவாமி விவேகானந்தரின் எங் களுடைய மதம் அடுப்பங் கரையிலும், எங்களுடைய தெய்வம் பானைகளாகவும் இருப்பதால் எந்த மதமும் என்னைத் தொடுவதற்கு அருகதையற்றதற்காக இருக் கிறது என்ற சொல்லும், நன் புனிதத் தன்மையுடையவனாக இருக்கிறேன் என்று பண்டித ஜவகர்லால் நேரு தன்னுடைய (Disocovery of India) என்ற புத்தகத்தில் பக்கம்339-இல் மேற்கோளாகக் காட்டப் பட்ட செய்திகளும் புண்படுத் துவதாக இருக்கிறது என்று சொல்லலாம். பொதுமக் களின் நன்மையை முன்னிட்டு சில தடைகள் விதிக்கப்படுவ தால் தனி மனிதனுக்கு நெருக் கடி நேரத்தில் விதிக்கப்படும் தடைகளைப்பற்றி குறிப்பிட வில்லை. அப்படியில்லாத நேரத்தில் காலத்தில் விதிக்கப் படும் தடைகளைப்பற்றித் தான் குறிப்பிடுகிறோம்.

முறைகேடான வழிகளில் அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடாது
தற்போது வெளியிடப் பட்டுள்ள புத்தகத்தைப்பற்றி, மாநில அரசு தடை விதிக்க வேண்டிய காரண காரியங் களை குற்றமுறை பிரிவு 99 ஏ பிரகாரம் நிர்பந்திக்கப்படுவ தால் காட்டப்பட்டிருக்க வேண்டும்.

குற்றமுறை பிரிவு 99-ஏ பிரகாரம் கொடுக்கப்பட் டுள்ள அதிகாரத்தை ஒவ் வொரு மாநில அரசும் பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தி இருப்பதால், அதனைப்பற்றி தெளிவான விளக்கத்தைதர கடமைப்பட்டிருக்கிறோம். இந்தியாவானது பலதரப் பட்ட சமுதாயத்தையும், பல தரப்பட்ட மதத் தன்மையை யும், பகுத்தறிவாதிகளையும், கண்மூடித்தனமான மூடநம் பிக்கைக் கொண்டவர்களை யும் கொண்டுள்ளது. எந்த ஒரு மாநில அரசும் இதனைக் கருத்தில் கொண்டு எந்த ஒரு வெளியீட்டையும் தடை செய்யும்போது முறைகேடான வழிகளில் அதிகாரத்தைப் பயன்படுத்தாது என நம்பு கிறோம்.

இந்த ஒரு நடைமுறை தடையானது நெருக்கடி பிரகடனத்திற்கு முற்பட்ட தாக இருப்பதால், இந்த அரசின்மேல் முறையீட்டை தள்ளுபடி செய்கிறோம்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப் பட்டிருந்தது.

நன்றி: "விடுதலை" 10-11-2007

0 comments: