Search This Blog

28.4.08

நமக்குத் தோன்றும் அவசர சமாதான மார்க்கம்

நமக்குத் தோன்றும் அவசர சமாதான மார்க்கம் என்ன வென்றால் -முதலாவதாக, பிறவியால் கீழ்-மேல் உயர்வு-தாழ்வு கற்பிக்கும் ஜாதிமுறை என்பதை அடியோடு போக்கடிக்க
வேண்டும்.

கோயில் முறை எடுக்கப்பட்டு பிரார்த்தனை இடங்களாக - உருவ சம்பந்தமே இல்லாத பொது மண்டபங்கள் இருக்கலாம்.

உற்சவங்கள் ஒழியவேண்டும்
கண்காட்சி அமைய வேண்டும்


மடம் மடாதிபதி, குரு ஆகியவகைளும், கோயில் சொத்து,
மடசொத்து ஆகியவைகளும் எடுபடவேண்டும்.

உற்சவங்களை நிறுத்தி, கண்காட்சி விழாக்கள் நடத்த
வேண்டும்.

யாவருக்கும் ஒரு மாதிரி உடை, ஒரு மாதிரி சாயல் ஏற்படுத்த
வேண்டும். நகரங்களில் தொழிற்சாலைகள் தவிர மற்ற
கட்டடங்கள், குடி இருக்கும் வீடுகள் ஒன்று இரண்டு மூன்று
தரத்துக்கு அடங்கிய ஒன்று போன்ற அளவு வசதி உள்ளதாக
இருக்க வேண்டும்.


மொழிகளில் மக்களை மதிப்பிட ஒருமை பன்மை உயர்வு
தாழ்வு குறிப்பு ஆகிய சொற்கள் இருக்கக் கூடாது.

ஆண், பெண் தன்மையில் கண்டிப்பாய் தங்கள் வாழ்க்கைத்
துணையை அவரவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ள
விட்டுவிடவேண்டும்.

யாவருக்கும் ஆரம்பக் கல்வி 10 வயதுக்கும் கொடுக்கப்பட்டே
ஆக வேண்டும்.

எஸ்.எஸ்.எல்.சி க்கு மேல் பொது உத்தியோகத்துக்குப் படிப்பு
யோக்கியதை வைக்காமல் சம்பளத்தையும் அதிக வித்தியாசம்
ஆக்காமல் திட்டப்படுத்த வேண்டும்.லாபம் வரையறுக்கப்பட வேண்டும்


அவசியமில்லாத வசதிகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது.
லாபம் வரையறுக்கப்பட்டுவிடவேண்டும்.

அதிக பெறுமானமுள்ள நகைகள் அணிந்துகொள்ள
அனுமதிக்கக்கூடாது.

தனிப்பட்டவர்கள் லேவாதேவி செய்ய அனுமதிக்கக்
கூடாது.

உணவு, உடை, ஸ்டோர்கள் (விற்பனை இடங்கள்) தனிப்
பட்டவர்களுக்கு இல்லாமல் சர்க்காருடையதாக ஸ்தல
ஸ்தாபனங்களுடையதாக சர்க்கார் ஆதிக்க கூட்டுறவு
ஸ்தாபனங்களுடையதாக இருக்க வேண்டும்.

சரி பகுதி பெண்களுக்கே!


பண்ட உற்பத்தியை சர்க்கார் காண்ட்ராக்ட்டுக்கு
(குத்தகைக்கு) விட்டு சேகரிக்கலாம்; அல்லது தொழிற்
சாலை உற்பத்திகளை சர்க்கார் வாங்கிக்கொள்ளலாம்.

உத்தியோகங்கள், சரிபகுதி பெண்களுக்குக் கொடுக்க
வேண்டும்.

ஆசிரியர் பயிற்சி 100-75 க்கு குறையாமல் பெண்களுக்கு
கொடுக்கப்பட வேண்டும்.

ஆண்களுக்கு ஆசிரியர் வேலை கொடுப்பதானால் பெண்
ஆசிரியர்களது கணவன்மார்களுக்குக் கொடுக்கலாம்.

சர்க்காருக்கு ஏராளமான வீடுகள் சொந்தமாக இருக்கவேண்டும். அதற்காகவே நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்ஒதுக்கிவைத்து தனி இலாகா வேலை செய்ய வேண்டும்.

தச்சர் , கொத்தர்களை சர்க்கார் சாதாரண மேஸ்திரிகள்
கீழ்பயிற்சி கொடுத்து அதிகமாக உண்டாக்கவேண்டும்.

காடுகளில் மரம் 'சைஸ்' ( தேவைக்கு ஏற்றபடி ) செய்ய
வேண்டும்.

இயந்திர வசதிகள் பெருகவேண்டும்!


இயந்திரவசதி மூலம் செய்தால் 500 பேர்கள் உள்ள தச்சுப் பட்டறையில் 1 நாளைக்கு 1000 ஜன்னல் கூடும் 1000 நிலவுக்கூடும் செய்யலாம். உதாரணமாக ஓர் இயந்திரம் 25 அடி நீளமுள்ள 1புஞூ3பு கனமுள்ள சட்டங்கள் 24 பக்கம் பக்கமாக வரிசை வைத்து கம்பி அளவுபோட, இயந்திரத்தை திருப்பினால் 5 நிமிடத்தில் தொளையைப் போட்டு இணைப்பைச் செலுத்தி அளவுப்படி துண்டும் போட்டுவிடுகிறது. பிறகு ஆம்கள் எடுத்துச் சேர்த்து, கம்பிகோர்த்து ஆப்பு இறுக்கி அடுக்க வேண்டியதுதான். இப்படியே கட்டடத்துக்கு வேண்டிய மற்ற காரியங்களையும் செய்து , ஒரு நாளைக்கு பல வீடுகள் முடிக்கலாம்.
பேதம் பெருமளவு குறையும்!ஒரு 10 ஆண்டில் வீடு கஷ்டம் இந்த ஒரு இலாகாவால் ஒழிந்துவிடும்.


அதுபோல் ஏராளமான தண்ணீரை இறைக்கும் இயந்திரம் மோட்டார், எண்ணெய், இன்ஜீன் செய்து வாடகைக்குச் சர்க்கார் உதவி செய்யலாம் இப்படியே பல இலாகாக்களால் 10 ஆண்டில் உணவு, உடை, வீடு குறை நீக்கலாம்.

இவற்றால் எல்லா மக்களிடையேயும் பேத உணர்ச்சி போதாமை, கவலை , மனிதனுக்கு மனிதன் அன்பில்லாமை வெறுப்பு, பொறாமை ஆகியவை பெரும் அளவுக்கு குறையும்.

இது குறைந்த இடங்களில் திருப்தி, மகிழ்ச்சி, ஒற்றுமை, அன்பு வளரும். கொள்ளை, திருட்டு, மோசம், துரோகம், வஞ்சகம் ஆகிய காரியங்களுக்கு அவசியமும் இடமும் இருக்காது. இப்படிப்பட்ட தன்மைக்கு எந்தப் பேர் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்.


--------------கவிஞர் கலி.பூங்குன்றன் - நூல்: "பெரியார் ஒரு வாழ்க்கை நெறி"

0 comments: