Search This Blog

31.5.08

கலைவாணரும் பழைய சோறும்





ஒரு நாள் காலையில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், தன்னுடைய வீட்டில் அமர்ந்து பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த அவரது நண்பரும் முன்னாள் அமைச்சருமான என்.வி. நடராசன், ``என்னங்க மதுரம் உங்களுக்கு டிபன் எதுவும் செய்து தரலையா? பழைய சோறு சாப்பிடுறீங்க...
கலைவாணர் எதுவும் பேசாமல், வேலைக்காரரைக் கூப்பிட்டு, ``இந்தா... இந்த ஒரு ரூபாய்க்கு பழைய சோறு வாங்கிட்டு வா என்றார். ரொம்ப நேரம் கழித்து வந்த வேலைக்காரர். ``ஐயா நானும் எங்கெங்கோ அலைஞ்சிட்டேன் ஒரு இடத்திலேயும் பழைய சோறு கிடைக்கல என்றார்.
``கேட்டீங்களா நடராசன்.. எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காத அற்புதப் பொருள்.. அதனால்தான் இதை சாப்பிட்டேன்! என்று கலைவாணர் சொன்னதைக் கேட்டு நடராசன் மட்டுமின்றி மதுரமும் அசந்து விட்டார்.


----------------------- "தினத்தந்தி"- 3.5.2008

0 comments: