Search This Blog

27.5.08

மக்களை ஏய்த்துவிட்டான் கம்பன்


திருவள்ளுவர் படத்தைத் திறக்க
தந்தை பெரியார் கூறிய இலக்கணம்


ஈரோடில் 1948 இல் நடைபெற்ற திராவிடர் கழக 19 ஆவது மாநாட்டில் திரு.வி.க. தலைமையில் தந்தை பெரியார் அவர்கள் திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைத்து திருக்குறள்பற்றி அரிய உரை ஆற்றினார்.

திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைப்பதற்கு இலக்கணம் வகுத்துக் கூறிப் பேசிய பேச்சின் சிறு பகுதி:

"உண்மையாகவே ஒரு உணர்ச்சியுடன் திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைப்பதாயிருந்தால், முதலில் கம்பனுடைய படம் ஒன்றைக் கொளுத்திச் சாம்பலாக்கிவிட்டுப் பிறகுதான் திருவள்ளுவரைப்பற்றிப் பேசத் தொடங்கவேண்டும். திருவள்ளு வருடைய கொள்கைகளையும், அவருடைய பாட்டின் அருமையை யும் அவற்றால் திராவிட நாடு பெற்றிருக்கவேண்டிய பலனையும் கம்பனது ராமாயணம் அடியோடு கெடுத்துவிட்டது. பார்ப்பன சூழ்ச்சிக்குப் பலியான கம்பனால் இந்நாட்டில் நிலவியிருந்த திராவிட கலாசாரமே பாழாக்கப்பட்டுப் போய்விட்டது. ஆரியப் பண்புகளையும், ஆரிய நடைமுறைகளையும் போற்றிப் புகழ்ந்து அவற்றை திராவிட மக்கள் ஏற்கும்படி அழகுற தமிழில் பாடி மக்களை ஏய்த்துவிட்டான் கம்பன்."

("விடுதலை", 5.11.1948)

0 comments: