Search This Blog

19.5.08

பெயர் சூட்டுவதில் மதம்

நம்மைப் பொறுத்தவரையில் தமிழர்களைப் பொறுத்தவரையில் நம்முடைய பெயர்கள் என்பவைகள் எப்படி இருந்து வந்தன என்றால், மதச்சார்பு அற்றதாக, மதத்திற்கு ஏற்பட்டு வெறும் பெயமுட்டுக் குறிச்சொல் என்கிற முறையிலே தான் இருந்து வந்திருக்கின்றன. மத சம்பிரதாயத்தின் அடிப்-படையிலே தமிழர்களுக்குப் பெயர் இருந்ததில்லை; தமிழ்ப் பெயர்களைப் பார்த்தால் இது நன்றாகத் தெரியவரும். இன்னும் சொல்லப்போனால், தமிழர்களின் நூல்களில்-2000, 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நூல்களில் மதம் இருக்காது. அது போலவே தமிழர்களின் சரித்திரப் பெயர்களை எடுத்துப் பார்த்தாலும் அதிலே மத-கடவுள் சார்புப் பெயர்கள் இல்லை. சேர, சோழ, பாண்டியர்கள் என்பவர்களிலும் முற்-பட்ட மூவேந்தர்களிலும் மதப் பெயர்கள் இல்லை.

நாளாக ஆக, மத ஆதிக்கம் வந்து குவிந்து விட்டது. மத, புராண, கடவுள் சம்பந்தமான காரியங்களுக்குச் செல்வாக்கு ஏற்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் இந்துமத ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்கிற தன்மையில் இந்தப்படியான மதப் பெயர்களைப் புகுத்திவிட்டார்கள்.

அதுவும் குறைந்தது இந்த 50 ஆண்டு காலத்துக்குள்ளாக ரொம்பவும் புகுந்து விட்டது. அதுவும் இந்து மத சம்பந்தமான பெயர்கள் அதிகமாக ஏராளமாக புகுந்ததெல்லாம் பெண்களிடத்தில் தான் ஆகும். எந்தப் பெண்களுக்கும் கடவுள் பெயர் மத சம்பந்தமான பெயர் என்று வந்து புகுந்துவிட்டது.

இந்தப்படியாக, மனித நபரைக் குறிக்கும் குறியீட்டுச் சொல் என்பது மதப் பெயர்களைக் கொண்டதாக ஏன் ஆகிவிட்டது என்றால், மதத்திற்கு-மத ஆதிக்கம் வளர்வதற்கு இதை-இந்தப்படியான பெயர் சூட்டுவது என்பதை ஒரு பிரச்சார சாதனமாக வைத்துக்கொண்டார்கள்.
நீங்கள் சாதாரணமாகப் பார்த்திருக்கலாம், இந்தப் பெயர் சூட்டுவது என்பதிலே கூட இந்து மதத்தின் வர்ணாசிரம முறை இருந்து வந்திருக்கிறது. அழகான பெயர்கள் எல்லாம் மேல் சாதிக்காரர்கள் என்பவர்கள் வைத்துக் கொள்ளுவதும் அதாவது, மேல் சாதித் தன்மையைக் குறிக்கும் கடவுள் மத சம்பந்தமான பெயர்களை மேல் சாதிக்காரர்கள் என்பவர்கள் வைத்துக் கொள்ளுவது என்றும், அந்த மேல்சாதித் தன்மையைக் குறிக்கும் பெயர்களை கீழ் சாதி மக்கள் என்போர்-அதாவது சூத்திரர், பஞ்சமர் எனப்படுவோர்கள் மேல்சாதிக்கு உரிய பெயர்களை வைத்துக்கொள்ளக்கூடாது-வைத்துக் கொள்வது பாவம் என்றும் கருதப்பட்டு வந்தது. சாதாரணமாக இராமன், கிருஷ்ணன், லட்சுமி, சரசுவதி, பார்வதி என்கிற பெயர்களை மேல்சாதிக்காரர்கள் பெயரா-கவும், கருப்பன், மூக்கன், வீரன், காட்டேரி, பாலாயி, கருப்பாயி என்பது போன்ற பெயர்-கள் கீழ்சாதி மக்கள் வைத்துக்கொள்ள வேண்டிய பெயர்கள் என்பவைகளாகவும் இருந்து வந்திருக்கின்றன.

வர வர மதத்திற்கும், மதத்தன்மைக்கும் எதிர்ப்பும், தங்களுடைய இழிவையும் பற்றிய மான உணர்ச்சியும், மக்களுக்கு ஏற்பட-ஏற்பட, இந்தப்படியான எதிர்ப்பை ஒழிப்பது என்கிற முறையில், எல்லோரும் எல்லாப்பெயர்-களையும் வைத்துக்கொள்ளலாம் என்கிறதான நிலைமை வந்தது.

சாதாரணமாக, இந்த இழிசாதி மக்கள் என்பவர்களின் பெயர்களுக்குக் கடைசியில் சாமி, அப்பன் என்ற சொற்கள் வரக்கூடாது. ஏனென்றால், மேல்சாதிக்காரர்கள் என்பவர்கள் பெயர் சொல்லிக் கூப்ழடும் போது இழிசாகு மகனை சாமி என்றும், அப்பன் என்றும் கூப்பிட வேண்டியிருக்காது என்பதால், அது மேல்சாதிக்காரர்களின் அந்தஸ்துக்கு மட்டம் என்பதால், அந்தப்படியான பெயர்களை இழிசாதி மக்கள் வைத்துக் கொள்ளக்கூடாது; அப்படியே வைத்துக்கொண்டாலும்அந்த சாமி அப்பன் என்ற சொல்லை விட்டுவிட்டு, மேல்சாதிக்காரர்கள் ராமா, கந்தா என்று தான் அழைப்பார்கள். இப்படியாகப் பெயர்கள் என்பவைகள் கடவுளின் பேராலும், மத சாத்திர சம்பிரதாயத்தின் பேராலும், அவை வகுத்த வர்ணாசிரம மேல்-கீழ் சாதிமுறை பிரகாரமே வழங்கி வந்து, மேற்கண்டவைகளுக்கு இவைகள் ஒரு பாதுகாப்பாகவும், ஆதாரமாகவும், அஸ்திவாரமாகவும் நின்று நிலவி வருகின்றன.
இன்னும் பல பெயர்களைப் பார்த்தால் மிக ஆபாசமாக இருக்கும். வைக்கப்படுகிற பெயர் கடவுள் பெயராக இருக்கிறதா என்று தான் கவனிப்பார்களே தவிர, அப்படி வைக்கப்-பட்டிருக்கிற பெயர்களுக்கு என்ன அர்த்தம்? அது மிக ஆபாசமான அர்த்தமுடையதாக இருக்கிறதே என்ற கவலைப்பட மாட்டார்கள்.

சாதாரணமாக, ஆதிகேசவலு, குஞ்சதபாதம், குஜலாம்பாள், துரோபதை என்கிறதாக-வெல்லாம், பெயர் வைக்கின்றார்களே! அந்தப் பெயர்களின் பொருளை விரித்துப் பார்த்தால் அதில் எவ்வளவு பாசமும், அறிவற்றதுமான காரியங்கள் இருக்கின்றன!.

இப்படியாக மத, சாத்திர, கடவுள் அடிப்படையிலேயே வளர்ந்து வந்த பெயர்முறைகள் இன்று கொஞ்சம் மறையத் தொடங்கியிருக்கின்றன. மக்கள் சமுதாயத்துக்கு மான உணர்ச்சியும், இந்தக் கடவுள், மத சாத்திரங்கள் எனபவைகளின் பேரால் தாங்கள் அழுத்தப்பட்டும், அடிமைப்படுத்தப்பட்டும், இசூஷீட்தி மக்களாக்கப்பட்டும் இருக்கிறதை, கடவுள், மத, சாத்திரத் துறையிலே இழிசாதி மக்கள், பொருளாதாரத் துறையிலே ஏழைமக்கழ் அறிவுத் துறையிலே கீழ் மக்கள் என்பதாக இருக்கிற நிலைமையை உணர்ந்து, மக்கள் தங்கள் இழிவையும், ஏழ்மையையும், அடிமையையும் ஒழிக்க வேண்டும்; இவைகளிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்கிற மான உணர்ச்சி, பகுத்தறிவு உணர்ச்சி ஏற்பட்டு வருவதால், இந்தப்படியான தங்கள் இழிவுக்கும், ஏழ்மைக்கும், கீழ்நிலைக்கும் காரணமாக எந்தெந்த அமைப்பு முறைகள் இருக்கின்றனவோ அந்த அமைப்பு முறைகளை நம்முடைய விடுதலையைக் கோமு மாற்ற வேண்டும்-ஒழிக்க வேண்டும் என்கிற தன்மையில் தான் திருமணத்துறை, சாதித்துறை, கிரகப் பிரவேசம் என்கிற புதுமனை புகுவிழா சங்கதி, திருவிழாத்துறை, சங்கீத இலக்கியத்துறை எல்லாத் துறைகளிலும் மாற்றம் ஏற்படுத்தும் முயற்சி கிளர்ச்சி நடத்துவது போல, இந்தப் பெயர்த்துறையிலம் இதுமாதிரியான மாறுதல் உணர்ச்சியோடு காரியம் நடத்ததப்படுகின்றது.

சாதாரணமாக குழந்தைகள் பிறக்கும் போதிலிருந்தே இந்த மாதிரி பெயர் வைத்துவிட்டால் நல்லது. அதுவே பழக்கத்தில் வந்து விடும். இப்போது என் பெயரையே எடுத்துக்-கொள்ளுங்களேன். இது இந்து மதம் என்கிறதன் சார்புப் பெயர்தான். இவைகளை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுகிற எனக்கே இந்தப் பெயர் இருக்கிறது. இந்தப் பெயர் கூடாதுதான்-ஆனால் இந்தப் பெயராலேயே 73 வருடம் இதையே என்னைக் குறிக்கும் குறியீடாகக் கொண்டு வந்தாகி விட்டது. அதுமட்டு-மல்லாமல்; இந்தப் பெயர் என்பது மிகவும் விளம்-பரமாகிவிட்டது; யார் ராமசாமியா! அட!. அது தான் இந்த ஆள்! என்கிற மாதிரி ஒரு முக்கியமானதாகிவிட்டது. இனி பெயரை மாற்றுவது என்றால், இனி ஏற்படுத்துகிற புதுப்பெயர் என்பது இந்தப் பெயர் அளவில் என்னைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாக இருக்க முடியாது. புதுப் பெயரால்-பெயர் வைக்கிற தத்துவத்தின்படி. இன்னாருக்கு இந்தப் பெயர் என்ற புரிந்து கொள்ளுகின்ற மாதிரியில் முடியாது. ஆகவேதான், சொல்கிறேன். குழந்தையாய் இருக்கும் போதே புதுமைப் பெயர், பகுத்தறிவு சான்ற பெயர் சூட்டவேண்டும் என்று இனி வருங்கால சந்ததிகளை உலகத்துக்கு அறிமுகப்படுத்துவதே புதுமையான பகுத்தறிவான பெயராக ஆரிய மத, சாத்திர, கடவுள் தன்மை கொண்ட பெயர் அற்றதான மாதிரியில் வைக்கவேண்டும் என்று கூறிக்கொண்டு, இந்தக் குழந்தைக்கு இன்ப நிலா என்று பெயர் சூட்டுகிறேன்.

(15.03.1953) அன்று உளுந்தூர்பேட்டை பெயர் சூட்டு விழாவில் தந்த பெரியார் அவர்கள் ஆற்றிய உரை. 23.3.1953 விடுதலை இதழிலிருந்து வெளியானது)

0 comments: