![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9Bs1wUcLXB9R7NrrMZmXMx_J3yWvXZIed4eWdOydzRwEGnb4MK9CP5afePbxW7agSXGoOLEnWIbB3OCfh-TK5p84TQEOWuoWY03dnbMsuwXjuA9OG_XaH8s6jPnKw_8WFRnKupQW1-9Rk/s400/hand1.jpg)
1949-ல் தந்தை பெரியாரை விட்டு அண்ணா பிரிந்து திராவிட முன்னேற்றக்கழகம் அமைத்தார். 1967-ல் அண்ணாவின் திராவிட முன்னேற்றக்கழகம் தமிழ் நாட்டில் ஆட்சியைப் பிடித்தது. 18 ஆண்டுகள் பிரிவு தந்தை பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையில். அண்ணா முதல்வரானதும் திருச்சிராப்பள்ளி சென்று தந்தை பெரியாரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அண்ணா அங்கு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் அண்ணா “என்னை இந்த நாட்டுக்கு அறிமுகப்படுத்தியதே அவர்தான். முதல்வரானதும் நான் அவரைப் பார்க்காவிட்டால் அது மனிதப் பண்பே ஆகாது” என்றார்.
-------------------------- அண்ணா சில நினைவுகள், கவிஞர். கருணாநந்தம்.
0 comments:
Post a Comment