Search This Blog

21.11.08

இல்லாத விடுதலைப்புலிகளைப்பற்றி வாய் கிழிய முழங்கும் ஜெயலலிதா மாலேகான் குண்டுவெடிப்பு பற்றி வாய் திறக்காதது ஏன்?






ஏன்? ஏன்? ஏன்?

அப்பாவிகளான ஈழத் தமிழர்கள் சிங்கள இராணுவ குண்டு மழையிலிருந்து காப்பாற்றப்படவேண்டும்; சொந்த மண்ணிலேயே அம்மக்கள் ஏதிலிகளாகி, காடுகளிலும், வனாந்தரங்களிலும் பசி, பட்டினியோடு நாளும் செத்துக் கொண்டுள்ள நிலையில், போர் நிறுத்தம் ஏற்படவும், தமிழர்களுக்கு நிவாரண உதவி போய்ச் சேரவேண்டு மென்றும் குரல் கொடுத்தால், அப்படிப் பேசுகிறவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளின் தீவிரவாதத்திற்குத் துணை போகிறவர்கள் என்று அறிக்கை விடும் அறிக்கை அரசி ஜெயலலிதா அவர்கள் கடந்த இரு வாரங்களுக்கு மேல் மகாராட்டிரத்தில் மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தையொட்டிய புலன் ஆய்வில், இந்துத்துவ, ஆர்.எஸ்.எஸ். சாமியார் சாத்வி பிரக்யாக்சிங், இராணு வத்தின் முக்கிய பொறுப்பிலிருந்து பல்வேறு வெடிகுண்டு பயிற்சிப் பாசறைகளை நடத்திய லெப்டினன்ட் கர்னல் புரோகித், மகந்த் என்ற பெயரில் உலவி இந்து இராணுவப் பயிற்சி அளித்த தயானந்த் பாண்டே என்ற பார்ப்பனர் போன்றவர்களின் தீவிரவாதங்கள் பகல் வெளிச்சம்போல் தெரியும் நிலையில், கண்டன அறிக்கை விடாதது ஏன்? ஏன்? இறையாண்மைக்கு, மக்கள் அமைதி வாழ்விற்கு இந்த ஆர்.எஸ்.எஸ். குண்டுவெடிப்பு கலாச்சாரம், ஹவாலா மோசடி போன்றனவும் சவால்கள் அல்லவா?

அதை ஏன் இதுவரை கண்டிக்க முன்வரவில்லை செல்வி ஜெயலலிதா? மோடி ராஜ்ஜியத்திற்கு மோசம் வரும் என்பதாலா?

இங்கு இல்லாத விடுதலைப்புலிகளைப்பற்றி வாய் கிழிய முழங்கும் அவர், நமது நாட்டின் இராணுவத்தையே இந்து மயமாக்கும் கொடுமை கண்டு வாய் திறக்காதது ஏன்? ஏன்? ஏன்?


--------- 21-11-2008 "விடுதலை" இதழில் "கருஞ்சட்டை" யின் அர்த்தமுள்ள கேள்விகள்.

2 comments:

தேவன் மாயம் said...

தமிழ்த்துளியில் என் முதல் கவிதையை
தற்போது பதிந்துள்ளேன்.படித்து விட்டு உங்கள் கருத்தை எழுதவும்!
அன்பு தேவா.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கு
நன்றி.