Search This Blog

10.2.09

தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது சிறுநீரகங்களுக்கு நல்லதா?




உடல் ஆரோக்கியமாக உள்ளவர்கள் தினமும் 2 லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் போது மானது. மேலும் குழம்பு, ரசம், மோர் போன்ற திரவ உணவுகள் மூலமும் உடலுக்கு நீர்ச்சத்து கிடைத்து விடுகிறது.

எனக்குத் தாகமே எடுப்பதில்லை; அதனால் நான் தண்ணீரே பெரும்பாலும் குடிப்பதில்லை என ஆரோக்கியமாக உள்ள சிலர் பெருமிதமாகக் கூறிக் கொள்வது உண்டு. ஒரு சிலர் 6 மணி நேரத்துக்கு தண்ணீர் குடிக்காமல் இருப்பார்கள். இது தவறு.

ஏனெனில் ஆரோக்கியமாக உள்ளவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் உடலிலிருந்து கழிவுகள் முழுமையாக வெளியேறாது. இதனால் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படும். ஆரோக்கிய மாக உள்ளவர்களுக்கு தினமும் 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை சிறுநீர் வெளியேறினால் இயல்பு நிலை என்று அர்த்தம். இதய நோய் - சிறுநீரக நோய் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப் படி, குடிநீரின் அளவை நிர்ணயித்துக் கொள்வது அவசியம். ஏனெனில் கூடுதல் தண்ணீர் வெளியேற்ற இதயம் அதிகமாக ரத்தத்தை பம்ப் செய்ய வேண்டியிருக்கும்.

காலையில் எழுந்தவுடன்...: காலையில் எழுந்த வுடன் தண்ணீர் குடிப்பதில் தவறில்லை. உடலுக்கு நல்லது. நன்றாக பசி எடுக்கும். உடல் ஆரோக்கியமாக உள்ளவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் போதுமானது. அதற்கு மேல் உடலுக்கு குடிநீர் தேவை இல்லை.

சிறுநீர் கழிக்கும் இடைவெளி...: ஆரோக்கியமாக உள்ளவர்கள் 4 முதல் 6 மணி நேரத்துக்கு ஒரு முறை தான் சிறுநீர் கழிக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறையோ சிறுநீர் கழிக்க நேர்ந்தால், அதை அடிக்கடி எனக் கொள்ளலாம். சிறுநீரகத்தில் காச நோய், மது நிறைய குடித்தல், புகைப் பழக்கம், சிறுநீர்த் தொற்று, முதுமை என அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு.

முதுமையில் புராஸ்டேட் சுரப்பி (விந்துச் சுரப்பி) வீக்கம் காரணமாகவும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை ஏற்படலாம். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முறையான சிகிச்சை தேவை.

கெடுதல் இல்லை: குளுகுளு அறையில் (ஏ.சி.) இருக்கும்போது, தேர்வு எழுதக் கிளம்பும்போது நேர்காணலுக்குக் காத்திருக்கும்போது, பெண் பார்க் கக் கிளம்பும்போது, அவசர அவசரமாக பஸ்ஸுக்கோ அல்லது ரயிலுக்கோ கிளம்பும்போது சிறுநீர் கழிக் கும் உணர்வு ஏற்படுவது இயல்பானது. இது கெடுதல் இல்லை. இதற்கு சிகிச்சையும் தேவை இல்லை.

--------------நன்றி:-"விடுதலை" 9-2-2009

1 comments:

manjoorraja said...

பயனுள்ள கருத்துகள்.

நன்றி.