Search This Blog

5.6.08

குறி பார்த்தல்

மூடநம்பிக்கைகளில் சிலவற்றை, விஞ்ஞான முறைப்படி விசாரித்து வந்ததில் அவை இரண்டு காரணங்களால் உண் டாகியிருக்க வேண்டுமென அறிந்தோம். அவையாவன:

வெறும் பழக்க வார்த்தைகளைக் கொண்டே பல மூடநம்பிக்கைகள் நிலைத்து வருகின்றன. இரண்டாவது, ஏகதேச சந்தர்ப்பங்களிலிருந்து மூடநம்பிக்கைகள் பிறந்திருக்க வேண்டுமெனவும் தெரிந்து கொண்டோம். சில மூடநம் பிக்கைகளுக்கு நமது ஆசையே காரணமாய் இருக்கலாம் எனவும் தெரிந்தது. இந்தக் காரணமொன்றே பல பொய் நம்பிக்கைகளின் மேல் வைத் துள்ள விஸ்வாசத்திற்கு ஆதார மென அறிதல் வேண்டும். நமது ஆசையின்படியே விஷயங்கள் நமக்கு அனுகூலமாகவே வேண்டுமென்ற மனப்பான்மை பெரும்பாலாருக்குண்டு.

இந்த மனப்பான்மை யாலேயே ஜோசியத்தின் மேலும், ஜாதகத்திலேயும், குறி சொல்லும் விஷயங்களிலேயும், கைப்பார்ப்பதிலேயும், மை போட்டுப் பார்ப்பதிலேயும் நம்மவர்களில் பலருக்கு நம் பிக்கை ஏற்படுகின்றது. கஷ்டப் படாமலே நமக்குச் செல்வம் வராதா? நாம் முயற்சி செய்யாமலே நம்மை விட்டுப் பிரிந்தவர்கள் திரும்பிவர மாட்டார்களா? உழைப்பின்றிச் சம்பத்தும், செல்வமும், கீர்த்தியும் வராதா? என்ற நோக்கங்கள் நமது மனத்தில் அடுத் தடுத்து எழுவதால் ஆரூடம் என்ன தெரிவிக்கின்றது. குறி சொல்லுகிறவன் நமக்கு என்ன ஆதாரமளிக்கின்றான்? கைரேகை என்ன குறிக்கின்றது? என்று அவாக் கொண்டு இந்த மோச வார்த்தைகளின்மேல் நம்பிக்கை வைக்கின்றோம்.

குறி சொல்லும் விஷயங்களில் நமது பாமர ஜனங்களுக்கு மிகுந்த நம்பிக்கை யுண்டு. நமக்குப் பல குறைகள் நேரிடுகின்றன. இந்தக் குறை களை நீக்கிக் கொள்ள ஆசை மேன்மேலும் உண்டாவது சகஜம். இந்த ஆசையால் குறி சொல்லுகிறவன் சொல்லை நம்ப நேரிடுகின்றது. அவன் சொல்லுவது மெய்யோ, பொய்யோ, நம்முடைய கோரிக் கையின்படி நிறைவேறும் என்று அவன் சொல்லுகின்ற படியால், அவன் சொல்லின் மேல் நம்பிக்கை ஏற்படுகிறது. குறி சொல்வார் யார் என்று பார்ப்போம்.

குறி மேடையில் குறி சொல்லுகின்றவர்களில் பலர் நரம்பு வியாதியால் பாதிக்கப் பட்டுள்ளனர். அவர்கள் எளிதில் கோபம், சந்தோஷம் அடைவார்கள். இவர்களு டைய ஆடம்பரங்கள் பாமர ஜனங்களின் மனத்தை உருகச் செய்து விடுகின்றன. உடுக்கை, சிலம்பு முதலிய வாத்தியங்கள் குறிகேட்க வந்திருப்போரை ஓர்வித மயக்க முண்டாக்கக் கூடியதாக இருக்கின்றன. குறி சொல்லும் இடங்களில் மதுரை வீரன் படமும், அதில் குதிரைச் சவாரி நாய்களுடன் செல்வதாக வரையப்பட்டுத் தொங்கவிட்டிருக்கும். குறி சொல்பவனும், பகல் வேஷத் திற்குரிய திருநீறு, குங்குமம் திரேக முழுமையும் பூசி கொண்டு, கழுத்தில் பொன், உத்திராக்கம், கைகளில் பொன் தோடா, பட்டாடை முதலிய வஸ்திரங்களை அணித்து, உடுக்கைச் சிலம்புடன் அவன் இஷ்ட தேவதையை வசிய மாக்க முயற்சி செய்வான்.
இந்த வேஷங்களைக் கண்டோர் மயங்கி விடுகின்றார்கள். இவர்கள் மயக்கத்தை அதிகரிக்க, உடுக்கையையும், சிலம்பையையும் உரத்துத் தட்ட ஆரம்பிப்பான். அவ னுக்கு ஆவேசமும் வருவதாக நடிப்பான். இந்த ஆவேசத்திற்கு வேண்டிய மதுபானமும் அருந்துவதோடு, புட்டியிலும் சாராயம் மதுரை வீரனுக்காகப் படையல் போட்டிருக்கும். வேலை ஒன்றுமில்லாத வீணர் கள் அந்தக் குறிமேடைகளில் சென்று பக்திவான்களைப் போல நடிப்பார்கள். இந்தச் சூதை அறியாத பெண்கள் தங்கள் குறைகளைத் தெரிவிப் பார்கள். இவைகளை ஏதோ அலட்சியமாகக் கேட்டு, அதற்கு ஏதோ ஓர் பரிகாரத்தைத் தெரிவிப்பான். இந்த பித்தலாட்டங்களுக்கு ஏமாந்து கையிலிருக்கும் பணத்தையோ, நகையையோ, தட்சணையாகக் கொடுப்பார்கள். இந்த விதமாக அந்தப் பெண்கள் மதிமோசம் போவார்கள்.


முக்கியமாக, ஸ்தீரிகள் பிள்ளை வரம்பெறக் குறி மேடைகளுக்குப் போவதைப் பார்க்கலாம் அல்லது தனக்கும் தனது புருஷனுக்குமுள்ள மனஸ்தாபத்தைக் குறித்துக் குறி கேட்கப் போவதுமுண்டு. இந்த இரண்டு விஷயங்களைக் குறி சொல்லுகிறவன் எப்படித் தீர்ப்பானோ என்று விசாரிப்பதே கிடையாது. இதைப் போன்ற மூடநம்பிக்கையைக் காண் பதரிது. பிள்ளை பிறப்பதற்கு ஆண் பெண் இருவர் திரேகம் தக்க பருவத்தில் இருத்தல் வேண்டும் ஆயிரக்கணக்கான ஸ்தீரி புருஷர்களுடைய திரேகம் பக்குவப்பட்டு இருப்பதால், அவர்களுக்குச் சந்ததி விருத்திக்குத் தடையொன்றுமில்லை. ஆனால், ஏகதேச மாக ஏதோ ஒருவர் இருவ ருக்குத் திரேக பக்குவமில் லாமல் இருக்கும்; அதனால் கர்ப்பம் தரிக்க முடியாமற் போகும். இதனையும் தீர்த்துக் கொள்ள அவுஷதங்களும், சிகிச்சைகளும் இருக்கின்றன.

மலட்டு ஸ்தீரி புருஷர் சிற்சில சிகிச்சையால், சந்தான விருத்தி பெறுகிறார்கள். அப்படியும் சிலருக்குக் குணப் படுவதில்லை. மலட்டு ஸ்தீரி புருஷர்களைப் போல் மலட்
டும் ஆடும், மாடும், புழுப் பூச்சிகளும், செடிகளும், மரங் களும் உலகில் ஏகதேசமாக இருக்கின்றன. விளையாத நிலங்களும் சில இருக்கின்றன. இவைகளை ஏதாவது செடி, மரம், புழு, பூச்சி, ஆடு, மாடு களை உற்பத்தி செய்ய மதுரை வீரனால் முடியாதிருக்க, ஸ்தீரி புருஷர்களை மாத்திரம் பிரஜா விருத்தி செய்வதென்றால் யார் நம்புவது? இதை உன்மத்தர் கள்தான் நம்பக்கூடும்! பிரஜாவிருத்திக்குத் தடையை நீக்க டாக்டர்களுக்கே தெரியுமே அல்லாது மோசக் காரர்களாகிய குறி சொல்கின்றவர்களுக்கு ஒன்றும் தெரியா. மதுரை வீரன் படத் தாலும் உடுக்கை சிலம்பாலும், தீபத்தின் சுடர் அசைவாலும் மலட்டுத்தனம் நீங்குமாயின் இவ்வளவு சுளுவாகக் கோடானு கோடி கறம்பு நிலங்களை விளைய வைக்கலாமே!


---------- ம. சிங்காரவேலர் அவர்கள் எழுதிய கட்டுரை

0 comments: