Search This Blog

13.6.08

பள்ளிகளில் சாதிகளையும், மதத்தையும் முதலில் கேட்பது ஏன்?


கேள்வி : சாதி, மதச் சண்டை களினால் மனித குலம் அழியும் போது, அதை ஒழிக்காமல் பள்ளிகளில் சாதிகளையும், மதத்தையும் முதலில் கேட்பது ஏன்?



பதில் : சாதி, மதங்களை ஒழிக்கவேண்டியது மிகவும் அவசியம் பள்ளிகளில் சாதிகளைக் கேட்பது அவர்கள் சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்களா? தாழ்த்தப்பட்டவர்களா? மலைவாழ்மக்களா என்று அறிந்து அவர்களுக்கு தனி முன்னுரிமை கொடுத்து உதவுவதற்காகத்தான்!

ஜாதி கூடாது ஒழிக்கப்பட வேண்டும். ஆனால் அந்த ஜாதி முறையினால்தான் நம் பிள்ளைகள் படிக்கமுடியாமல் காலங்காலமாய் தடுக்கப்பட்டனர்.

அதை மாற்று வதற்கு இந்த ஏற்பாடு ஒரு கால கட்டம் வரை தேவை. அம்மை நோயினை அழிக்க அம்மைக் குத்திக் கொள்வதுபோல.

---------ஆசிரியர் தாத்தா {தி.க.தலைவர்.கி.வீரமணி} பதில்கள் - "பெரியார் பிஞ்சு" செப்டம்பர் --2003

0 comments: