Search This Blog

3.6.08

வாரியாருக்கு வாயடைப்பு!






நான் திருவாரூரில் படித்துக் கொண்டிருக்கும் போது எங்கள் ஊருக்கு காலட்சேபம் செய்ய திருமுருக கிருபானந்த வாரியார் அடிக்கடி வருவார். அவரைக் கலாட்டா செய்ய வேண்டுமென்பதற்காகவே, பள்ளிக் கூடத்திற்கு டிமிக்கி கொடுத்துவிட்டு நண்பர்களுடன் செல்வேன்.

காலட்சேபத்தில் கதை கூறும்போது வாரியார் அவர்கள், உயிருள்ள ஒன்றையும் - மிருகங்களையோ, பறவைகளையோ கொன்று மனிதன் சாப்பிடுவதற்காக கடவுள் படைக்கவில்லை என்றார். நான் எழுந்து, சிங்கத்திற்குக் கடவுள் என்ன உணவைப் படைத்தார் என அவரிடம் கேட்டேன்.

வாரியார் என்னை உட்காரும்படி அடக்கிவிட்டு, தாவரங்களுக்கு உயிர் இருக்கிறதே, அதைச் சாப்பிடலாமா? என்று மாமிசம் உண்போர் கேட்பார்கள். காய்கறிகளைப் பறித்தபின் அவைகளின் வளர்ச்சி தடைப்படுவதில்லை. ஆனால், மனிதன் காய்கறிகளைத் தாராளமாக உண்ணலாம்; இது யாருக்கும் தெரியாது என்றார்.

உடனே நான் எழுந்து, கீரைத்தண்டை வேரோடு பறித்து உண்கிறோம்; அது எப்படி, என்று கேட்டேன். மறுபடியும் என்னை அடக்கி உட்கார வைத்தார் வாரியார்.
அன்று நான் எழுப்பிய கேள்விக்கு இன்றுவரை பதில் கிடைக்கவில்லை. அதனால், நானும் என் கொள்கையை மாற்றிக் கொள்ளவில்லை என்றார்
.
------------------------ கலைஞர்

0 comments: