Search This Blog

3.6.08

குமரியின் மீது கடைக்கண் பார்வை வைக்கின்ற அளவுக்கு எனக்கு வயது இல்லை இப்போது! --- கலைஞர்


கலைஞர் 50


குளித்தலை தொகுதி வேட்பாளராக 1957இல் ஜெயித்து தமிழக சட்டசபையில் நுழைந்த கலைஞர் கருணாநிதிக்கு இந்த ஆண்டு சட்டசபையில் அவரது பொன்விழா ஆண்டு. இந்த 50 ஆண்டுகளில், சட்டசபையில் கருணாநிதி உதிர்த்த நகைச்சுவை முத்துகள் பலப் பல, அவற்றில் சில முத்துகள் மலரும் நினைவுகளாக இங்கே...!

பீர் முகம்மது: விவசாயக் கூலிகளுக்குக் கருத்தடை ஆபரேஷன்கள் அதிக அளவில் செய்யப்படுகின்றன. இதனால் விவசாயிகள் எண்ணிக்கை குறைந்துவிடும் ஆபத்து இருக் கிறது. அரசு இதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும்!

கருணாநிதி: கருத்தடை செய்து கொள்ள வேண்டும் என்று அரசு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. பீர் முகம்மது கூட அவரது தந்தைக்கு 33வது பிள்ளை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். (8.3.68).
-------------------- ###########--------------

கே.விநாயகம்: மெரீனா கடற்கரையின் ஒரு பகுதியில் லவ்வர்ஸ் பார்க் இருக்கிறது. அங்கு மற்றவர்கள் நுழையாமல், காதலர்கள் சுதந்திரமாக இருக்கும் நிலையை அரசு ஏற்படுத்தித் தருமா?

கருணாநிதி: இந்த விஷயத்தில் விநாயகத்துக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும். (14.3.69)
-----------------------################ ---------------

ஜேம்ஸ்: மத்திய மாநில அரசுகளுக்கு இடையே அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்வது பற்றி ஆராய அமைக்கப்பட்டு இருக்கும் ராஜமன்னார் குழு, ஒன் சைடெட் லவ் போலத் தான் இருக்கிறது.

கருணாநிதி: ஒன் சைடெட் லவ்வின் கஷ்ட நஷ்டங்களை நான் கண்டதில்லை! (26.2.70)

---------------------####################--------------

அப்துல் லத்தீப்: கூவம் ஆற்றில் முதலைகள் இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. அதனால், அங்கே அசுத்தம் குறைக்கப்பட்டு இருக்கிறது. அசுத்தத்தைப் போக்க கூவம் ஆற்றில் அரசு முதலைகள் விடுவது பற்றி ஆலோசிக்குமா?

கருணாநிதி: ஏற்கெனவே அரசாங்கம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் முதலை கூவம் ஆற்றில் போட்டு இருக்கிறது. (8.12.71)

-----------------------#################---------------

கோவை செழியன்: ஆண்டவன் எல்லோருக்கும் சொந்தம். ஆகவே, கோயில்களை எல்லாம் தேசிய மயமாக்கிவிட்டால் பிரச்சினை இருக்காது அல்லவா?

கருணாநிதி: ஆண்டவர்களைத் தேசிய உடைமையாக்கும் உத்தேசம் இல்லை. ஆண்டவன்தான் அனைவரையும் தேசிய மயமாக்கி ரட்சிக்க வேண்டும். (18.12.71)

------------------------###################-----------------------

காமாட்சி: மதுரை மீனாட்சிக்கு வைரக் கீரிடம், வைர அட்டிகை... இன்னும் இருக்கிற பல நகைகளின் மொத்த மதிப்பு எவ்வளவு?

கருணாநிதி: மீனாட்சிக்கு இருக்கிற சொத்தின் மதிப்பைச் சொன்னால், காமாட்சிக்குப் பொறாமை ஏற்படுமே! (14.3.73)

------------------------#####################--------------

கருணாநிதி: நாங்கள் விலைவாசிப் போராட்டத்தில் ஈடுபட்டோம். அதுவும் ஒரு நாள் அடையாள மறியல்தான் செய்தோம். அதற்கே எங்களைப் பிடித்துக் காங்கிரஸ்காரர்கள் மூன்று மாதம் ஜெயிலில் போட்டு விட்டார்கள்.

அனந்தநாயகி: அப்படிப் போட்டதால்தான் நீங்கள் இன்றைக்கு இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறீர்கள்!

கருணாநிதி: அதனால்தான் நாங்கள் இப்போது அப்படிச் செய்யவில்லை. சிறைக்கு வந்த அன்றைக்கே விடுதலை செய்து விடுகிறோம். (23.3.73)

-----------------------##################### --------------

சோனையா: தமிழ்நாட்டில் ஆபாசப் படங்களை, புத்தகங்களை வெளியிட்டதற்காக எத்தனை பேர் மீது வழக்கு போடப்பட்டு இருக்கிறது. தண்டிக்கப்பட்டவர்கள் யார் என்பதை அறிய விரும்புகிறேன்.

கருணாநிதி: பல பேர் மீது வழக்கு போடப்பட்டு இருக்கிறது. ஆனால், அந்த விவரங்களைக் கூறி, உறுப்பினர்களிடையே அவற்றை வாங்கிப் படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்ட நான் விரும்பவில்லை. (27.3.73)

------------------########################------------------

பி.ஹெச். பாண்டியன்: புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது!

கருணாநிதி: புல் என்பது புல்லா, க்ஷரடட-லா (16.2.89)

------------------------##############################--------------

பி.ஹெச். பாண்டியன்: ஹைக் கோர்ட்டில் நீதிபதிகள் என்றைக்கு ஓய்வு பெறுகிறார்கள் என்ற செய்தியை ஓர் ஆண்டுக்கு முன்பே வாங்கி விட்டால், வழக்குகள் தேங்காது. இதற்கு முதல்வர் என்ன சொல்கிறார்?

கருணாநிதி: காலிகள் ஏற்படாமல் தடுப்பதற்குப் பாண்டியன் சொன்னது நல்ல யோசனைதான்! (7.4.89)

----------------------##################-------------------

ஆர். சிங்காரம்: இந்தச் சட்டமன்றத்தில் நிலைய வித்வான்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள்தான் எப்போது பார்த்தாலும் வாசித்துக் கொண்டே இருக்கிறார்கள். இது நியாயம்தானா? புதிய வித்வான்களுக்கு வாய்ப்புத் தர வேண்டாமா? நாங்கள் எல்லாம் புதிய வித்வான்கள்!

கருணாநிதி: நான் ஏறத்தாழ 25 ஆண்டுகளாக இங்கே இருக்கிறேன். நானும் பழைய நிலைய வித்வான் தானா? நான் வாசிக்கலாமா, கூடாதா? (4.5.89)

-----------------------#####################---------------------

நூர் முகம்மது: கன்னியாகுமரி மக்களின் கோரிக்கைப்படி முதல்வருடைய கருணை கொண்ட கடைக்கண் பார்வை குமரியின் மீது திருப்பப்பட்டு, அம்மக்களின் குறை தீர்க்கும் வகையில் தொழிற் சாலையை அமைக்க, முதல்வர் முன் வருவாரா?

கருணாநிதி: குமரியின் மீது கடைக்கண் பார்வை வைக்கின்ற அளவுக்கு எனக்கு வயது இல்லை இப்போது! (6.5.89)

------------------------###############---------------------

பி.வி.ராஜேந்திரன்: உப்பு உற்பத்தி மரணப் படுக்கையில் கிடக்கிறது. மரணமே அடைந்து, அது சவப்பெட்டிக்குள் சென்று கொண்டு இருப்பதை உணர்கிறீர்களா?

கருணாநிதி: தேர்தல் அறிக்கையில் சொன்னது எல்லாம் சவப்பெட்டிக்குள் போய்விட்டதா என்று கேட்கிறார்கள். சவப்பெட்டிக்குள் போனாலும் அது அழுகாமல் இருக்க, அதற்கும் உப்புதான் தேவை! (20.1.90)

--------------------##################------------------

ரகுமான்கான்: இந்திரா காந்தியைக் கொலை செய்ய முயற்சித்ததாகப் பொய் வழக்கு போட்டார்கள். கலைஞர், பேராசிரியர் போன்றவர்கள் எல்லாம் கூட ஜாமீனில்தான் இருக்கிறார்கள்!

கருணாநிதி: தவறான தகவல்! என்னையும் பேராசிரி யரையும் அந்த வழக்கில் விடுதலை செய்து விட்டார்கள். இவர்தான் விடுதலை செய்ய மறுக்கிறார். (9.4.90)

--------------------------#######################------------------

வி.பி.துரைசாமி: ஆஞ்சநேயர் கோயிலில் அசையும் சொத்து எவ்வளவு? அசையா சொத்து எவ்வளவு?

கருணாநிதி: அசையும் சொத்து, அங்கே வந்து போகும் பக்தர்கள். அசையாச் சொத்து ஆஞ்சநேயர்! (24.4.90)

------------------------#######################-------------------

குமரி அனந்தன்: நான் தொலைபேசியில் பேசியபோது, டிராக் நம்பர் செவன் என்று குரல் வருகிறது. இப்படி ஒரு குரல் வந்ததுமே எனக்கு அய்யப்பாடு...

கருணாநிதி: குமரி அனந்தனுக்கு அப்படியொரு கர்ண கடூரமான வார்த்தை காதிலே விழுந்திருக்கிறது. சில நேரங்களில் காதல் வசனங்கள் கூட கிராஸ் டாக்கிலே கேட்கலாம். அதையும் முயற்சித்துப் பாருங்கள். (7.5.90)

-----------------------#######################--------------------

------------------- நன்றி: ஆனந்த விகடன், 16.5.07

0 comments: