Search This Blog

6.12.08

மும்பை கலவரத்திற்கு மூலகாரணம் என்ன?




மூல காரணமா?

மும்பை கலவரத்திற்கு பாபர் மசூதி இடிக்கப்பட்டதும், குஜராத் கலவரமும்தான் மூல காரணமா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு திராவிடர் கழகத் தலைவர் கூறியதாவது:-

மும்பை கலவரத்தில் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் என்பவர் என்ன சொல்லியிருக்கிறார்.

எங்களிடம் நரேந்திர மோடி, பிரவீன் தொகாடியா ஆகி யோர்களின் படங்களைக் காட்டினர். குஜராத் கலவரம் சிறுபான்மையினர்க்கு எதிராக எப்படியெல்லாம் நடத்தப் பட்டது. சிறுபான்மையினர் எப்படியெல்லாம் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டனர் என்பதற்கான காட்சிகளை எல்லாம் திரையிட்டுக் காட்டி எங்களை மூளைச் சலவை செய்தனர் என்று கூறியிருக்கிறாரே இதனை அலட்சியப் படுத்த முடியுமா?

பாபர் மசூதி இடிப்பில் முதல் குற்றவாளி (First Accused) அத்வானிதான். அவர்தான் பிற்காலத்தில் இந்தியாவின் உள்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் வந்தார்.

16 ஆண்டுகளாக குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. தீர்ப்புகள் வந்து அவர்கள் தண்டிக்கப்பட்டு இருந்தால், தேர்தலில் கூட இவர்கள் நிற்க முடியாதே என்றார். இதற்குக் காங்கிரஸ்மீது குற்றம் சுமத்துகிறீர்களா என்று செய்தியாளர் எழுப்பிய வினாவுக்கு, ஆம், இதற்குப் பொறுப்பு காங்கிரஸ்தான் - அதன் தலைமையிலான ஆட்சிதான் என்பது எங்களின் குற்றச்சாற்று என்றார்.

மற்றபடி வன்முறைக்கு யார் காரணமாக இருந்தாலும், அவர்கள் குற்றவாளிகள்தான். பயங்கரவாதத்தை யார் செய்தாலும் அது பயங்கரவாதம்தான். அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதே எங்கள் நிலை.

-------------------- "விடுதலை" 6-12-2008

2 comments:

nagoreismail said...

சரியான கருத்து

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே