Search This Blog

1.12.08

ஜாதியை முற்றாக ஒழிக்கவேண்டும்


பெரியாரும் -ஜாதி ஒழிப்பும்

இணையங்களிலும் ஊடகங்களிலும் உள்ளவர்கள் பெரியார் கொள்கைகள் என்ன வென்றே தெரியாமல் தமது மனம் போன போக்கில் இதுதான் பெரியார் கொள்கை என்று எழுதி வருகிறாகள்.
அதுவும் குறிப்பாக இரட்டை நாக்குப் பேர்கவழிகளாம் பார்ப்பனர்கள் தொடர்ந்து பெரியார் கொள்கைகளைக் கொச்சைப் படுத்து எழுதி வருவது அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஜாதி -இட ஒதுக்கீடு தொடர்பாக அவர்கள் வைக்கும் வாதங்கள் கொஞ்சம் கூட நேர்மையும் நாணயமும் இல்லாதவை. அதுவும் நம்மைப் பார்த்து ஜாதியைக் கட்டிக் கண்டு அலைபவர்கள் என்றெல்லாம் பேசுவது அவர்கள் எந்தத் தரத்தில் உள்ளார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக அறிந்து கொள்ள முடிகிறது.

ஜாது பற்ரி பெரியாரின் கொள்கை என்ன? என்பதைப் பார்ப்போம்.

"தந்தை பெரியார் அவர்களின் கொள்கை - அதாவது திராவிடர் கழகத்தின் கொள்கை என்பது ஜாதியை முற்றாக ஒழிக்கவேண்டும் என்பதாகும்

இந்தப் போராட்டத்தில் திராவிடர் கழகம் பல காலக் கட்டங்களிலும் பல வடிவங்களில் போராடி வந்திருக்கிறது.

உணவு விடுதிகளில் "பிராமணாள் போர்டு" அழிப்பு - இராமாயண எதிர்ப்பு, மனுதர்மம் எரிப்பு, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவு எரிப்புப் போன்ற போராட்டங்களைத் தொடர்ந்து திராவிடர் கழகம் நடத்தி வந்துள்ளது. ஜாதி ஒழிப்பு மாநாடுகளையும், இடைவிடாத பிரச்சாரங்களையும் செய்து வருகிறது

ஜாதி ஒழிப்பில் மிக முக்கிய கரு - கோயில் கருவறைக்குள் பார்ப்பனர்கள் மட்டுமல்லாது தாழ்த்தப்பட்டவர் உள்ளிட்ட அனைத்து ஜாதியினருக்கும் கோயிலில் அர்ச்சகர் உரிமை ஈட்டுவதற்கான போராட்டத்தைத் தந்தை பெரியார் அவர்கள் தொடங்கிக் கொடுத்தார்கள். அந்தப் போராட்டக் களத்திலேயே தன் இறுதி மூச்சையும் துறந்தார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் காலத்திலும் சரி, அதனைத் தொடர்ந்து அன்னை மணியம்மையார் அவர்களின் காலத்திலும் சரி, அதற்குப் பிறகும் சரி, இதற்காகப் பல வடிவங்களிலும் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வந்துள்ளோம்.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலிலும்கூட, திராவிடர் கழகத்தின் ஆதரவுக்கு இந்தப் பிரச்சினையை நிபந்தனையாக வைத்த நேரத்தில், தி.மு.க. தலைவர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள், திராவிடர் கழகத்தின் நிபந்தனையை ஏற்று, திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டிலும், தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும், அதனை ஏற்றுக்கொண்டதோடு, ஆட்சிக்கு வந்த நிலையில், அமைச்சரவையின் முதல் கூட்டத்திலேயே இதற்கான தீர்மானத்தை ஒருமன தாக நிறைவேற்றி அதன்பின் தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் சட்டமும் நிறைவேற்றப்பட்டது. (G.O. (MS) No.118 Tamil Development Culture and Religious Endownments (RE 4-2) 23rd May 2006).
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் பல முக்கிய கோயில்களில் 69 விழுக்காடு அடிப்படையில் அர்ச்சகர்ப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு, அதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் முக்கிய கோயில்களில் எல்லாம் தாழ்த்தப்பட்டவர் உள்பட அனைத்து ஜாதியி னரும் அர்ச்சகராகும் புரட்சிகரமான மாறுதல் உருவாக இருக்கிறது.

ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில், சமுதாய அமைப்பில் இது ஒரு மாபெரும் திருப்புமுனை; அழிக்க முடியாத வரலாற்றுக் கல்வெட்டாகும்.

ஜாதி ஒழிப்புத் திசையில் அடுத்தகட்டமாக பல முக்கிய தீர்வுகள் காணப்பட வேண்டியுள்ளன.

(அ) இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு இருக்கிறதே தவிர, ஜாதி ஒழிப்புக்கு இடம் இல்லாத வகையில் இருந்து வருகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் "ஜாதி" (Caste) என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது
1973 டிசம்பர் 8, 9 ஆகிய நாள்களில் சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியார் அவர்களால் கூட்டப்பட்ட "தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில்" கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சாதி என்பது எந்த இடத்திலும் இல்லாது செய்யப்படவேண்டும்; நடப்பிலும் இல்லாது பார்த்துக் கொள்ளப்படவேண்டும்; சாதி உணர்ச்சி அறவே மறையும்படிச் செய்யவேண்டும்; இதனை வெறும் மன மாற்றத்தால் மட்டுமே செய்ய முடியுமென்று தத்துவார்த்தம் பேசி காலங்கடத்தாமல், "தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது; அதனை எந்த ரூபத்தில் கடைபிடித்தாலும் அது சட்ட விரோதம்" என்று அரசியல் சட்டத்தின் 17 ஆவது விதி கூறுகிறதே, அவ்விதியில் உள்ள "தீண்டாமை" (“Untouchability”) என்பதற்குப் பதிலாக, "சாதி" (“Caste”) என்ற சொல்லை மாற்றி, சாதி ஒழிப்பை அரசியல் சட்டமே பிரகடனப்படுத்துவதாக அமைய வேண் டும் என்று 1973 இல் டிசம்பரில் நடைபெற்ற அந்த மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட அந்தத் தீர்மானத்தைச் செயல்படுத்த வைக்க திராவிடர் கழகம் தொடர்ந்து பாடுபடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது

(ஆ) கிராமப்புறங்களில் குறிப்பாக தேநீர்க் கடைகளில் இன்னும் இரட்டை தம்ளர் முறை இருப்பது மனிதத் தன்மைக்கும், அரசின் சட்டத் திற்கும் பெரும் சவாலும் அவமானகரமானதுமாகும். மிகக் கடுமையான முறையில் இரும்புக்கரம் கொண்டு இந்த முறையை ஒழித்துக்கட்ட வேண்டும்என்று இக்கூட்டம் தமிழ்நாடு அரசை வற்புறுத்துகிறது.

(இ) ஜாதி ஒழிப்பு இணையர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு ஜாதிப் பட்டம் கொடுக்காமல், அவர்களுக்குப் பல்வேறு தனிச் சலுகைகளும், குறிப்பிட்ட விழுக்காடு இட ஒதுக்கீடு கல்வி, வேலை வாய்ப்பிலும் அளிக்க ஆவன செய்யுமாறுமாநில, மத்திய அரசுகளை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

இட ஒதுக்கீடு பெறும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத் தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோரைக் குறிப்பிடும்பொழுது அவர்களின் தனிப்பட்ட ஜாதியைக் குறிப்பிடாமல், S.C., S.T., B.C., M.B.C.என்கிற முறையில் குறிப்பிடலாம் என்று இப்பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது

(ஈ) திராவிடர் கழகத்தைச் சேர்ந்த இருபால் இளைஞர்களும், ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்வதையே முதன்மை நோக்கமாகவும், செயலாகவும் கொள்ளுமாறு இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
(உ) இட ஒதுக்கீட்டினால் ஜாதி உணர்வு வளரும் என்ற பிரச்சாரம் இட ஒதுக்கீட்டை எதிர்ப்போர் தொடக்க முதலே சொல்லி வரும் புரட்டுப் பிரச்சாரமாகும்.
கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு பெற்று வளர்ந்து வருவோரிடையே ஜாதி மறுப்புத் திருமணங்கள்தான் பெருகி வருகின்றன என்பதை திராவிடர் கழகப் பொதுக்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

(ஊ) ஜாதியின் மிச்ச சொச்சங்களை ஆணி வேர், சல்லி வேர், பக்க வேர் உள்பட அழித்திடும் பணியில் போர்க்கால அடிப்படையில் திராவிடர் கழகம் ஈடுபடுவதை முதன்மையாகக் கருதி, அதற்காகப் பிரச்சாரம், போராட்டம், நிபந்தனை என்கிற முறையில் - எந்த விலையும் கொடுத்து, அர்ப்பணிப்புத் தன்மையுடன் முழு மூச்சில் வீச்சில் பாடுபடுவது என்று திராவிடர் கழகப் பொதுக்குழு கட்டளைத் தீர்மானமாக நிறைவேற்றிப் பிரகடனப்படுத்துகிறது.

(எ) ஜாதியை மய்யமாகக் கொண்டு அரசியல் கட்சிகளைத் தொடங்கும் - நடத்தும் அமைப்புகளை அடையாளம் கண்டு நிராகரிக்கு மாறு தமிழினப் பெருமக்களை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. ஜாதி உணர்வு - தமிழின உணர்வை அழித்துவிடும் என்பதால், ஜாதி உணர்வுக்கு இடம் கொடுக்கவேண்டாம் என்று தமிழர்களை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

(ஏ) முதற்கட்டமாக நாடு தழுவிய அளவில் ஜாதி ஒழிப்பு விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், இதற்காகப் போராட இளைஞர் களைத் தயார்படுத்தும் தன்மையிலும் பிரச்சாரப் பொதுக்கூட்டங் களையும், ஜாதி ஒழிப்பு மாநாடுகளையும் திட்டமிட்ட வகையில் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.


-----------3-5-2008 இல் நடந்த திராவிடர் கழகப் பொதுக்குழு நிறைவேற்றிய தீர்மானங்களிலிருந்து.


ஜாதி ஒழிய பெரியார் கூறும் கருத்து உற்று நோக்கக்கூடியது. தன் வாழ்நாளெல்லாம் ஜாதி ஒழியப் போரடிய அந்தப் போராளியின் வாக்குமூலம் இது; படியுங்கள்.

"உண்மையில் எனது தொண்டு சாதி ஒழிப்புத் தொண்டுதான் என்றாலும், அது நமது நாட்டைப் பொறுத்தவரையில் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் ஒழிப்புப் பிரச்சாரமாகத் தான் முடியும். இந்த நான்கும் ஒழிந்த இடம் தான் சாதி ஒழிந்த இடமாகும். இவற்றில் எது மீறி இருந்தாலும் சாதி உண்மையிலேயே ஒழிந்ததாக ஆகாது.

ஏன் எனில், சாதி என்பது இந்த நான்கில் இருந்தும் ஆக்கப்பட்டதே ஆகும். இப்போது சொல்லுவேன்; நாகரிகத்திற்காகச் சிலர் சாதி ஒழிய வேண்டும் என்று கூறுகின்றார்கள். ஆனால், அவர்கள் மேற்கண்ட நான்கையும் ஒழிக்கத் துணிவு கொள்ள மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களால் நமக்கு ஒரு பயனும் ஏற்படாது. சில சமயங்களில் அவர்கள் நமக்கு எதிரிகளாகவும் ஆகக்கூடும். மனிதனை மடையனாக, அடிமையாக ஆக்கப்பட்ட பின்புதான் சாதி புகுத்தப்பட்டதாகும். சுதந்திர உணர்ச்சியும், அறிவும் ஏற்படாமல் சாதியை ஒழிக்க முடியாது. மடமைக்கும் அடிமைத் தன்மைக்கும் ஆக்கம் அளித்துச் சாதியை நிலை நிறுத்துவது தான், சாதியை ஒழியாமல் பாதுகாப்பதுதான் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் என்பவைகளாகும்.

உண்மையில் சாதி ஒழிய வேண்டும் என்று கருதுபவர்கள், இந்த நான்கு ஒழிப்புக்கும் சம்மதித்தவர்களாகவே தான் இருப்பார்கள்."


-------93ஆம் பிறந்த நாள் விழா 'விடுதலை' மலர் 17.9.1971.


பெரியாரைப் போல் ஜாதி ஒழிவதற்காக உழைத்தவர்கள் வரலாற்றில் வேறு எவருமில்லை. எனவே அருள் கூர்ந்து பெரியாரின் உண்மை உழைப்பை உணருமாறு வெண்டி முடிக்கிறேன்.
நன்றி

5 comments:

bala said...

//ஜாதியை முற்றாக ஒழிக்க வேண்டும்//

ஜாதி வெறி பிடித்து அலையும் கருப்பு சட்டை பொறிக்கி நாய்,திராவிட முண்டம்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

கண்டிப்பாக ஒழிக்க வேண்டும்.அதற்கு முதலில் ஜாதி வெறி பிடித்து சமூகத்தை சீரழிக்கும் வெறி நாய்களான கரூப்பு சட்டை தாடிக்காரனின் சீடர்களை நாட்டை விட்டு சோமாலியாவுக்கு துரத்த வேண்டும்.ஜாதி கண்டிப்பாக பிறகு ஒழிந்து விடும்.ஜாதியை வைத்து பிஸினஸ் செய்து கொள்ளை அடிக்கும் மானமிகு போன்ற மோசடி பேர்வழிகளும்,அவன் அடி வருடி பிரியாணிக்காக வெறி பிடித்து குரைத்துக் கொண்டு, சமூகத்தை கடித்துக் குதறும் தமிழ் ஓவியா போன்ற பொறிக்கிகள் இருக்கும் வரை ஜாதி ஒழியாது.இந்த மூஞ்சிகள் திருந்தாது,ஏனெனில்,வளர்ப்பு அப்படி, என்ன செய்வது.

பாலா

தமிழ் ஓவியா said...

ஜாதியை முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற பதிவில் சான்றுகளுடனும், வராலாற்றில் நடந்த சம்பவங்களையும் குறிப்பிட்டு ஜாதி ஒழிப்புக்கு பெரியார் இயக்கம் பாடுபட்டதை தெளிவாக எழுதியிருந்தோம்.

அதை நேர்மையாக நாணயமாக விமர்சிக்க வேண்டும் அல்லது இதில் குறை இருக்கிறது, தவறு என்றாவது சொல்லவேண்டும்.

அப்படிப்பட்ட விமர்சனங்கள் எதுவுமே இல்லை பாலாவின் பின்னூட்டத்தில்.

வெறிநாய் ஊளையிடுவது போல் ஊளையிட்டிருக்கிறார்.

இதுக்கு மருத்துவம் ஊசி மாத்திரையெல்லாம் கொடுத்தால் சரிப்பட்டு வராது. வெறிநாயை கிராமத்தில் ... செய்வதை பார்த்திருக்கிறேன். அந்த வைத்தியம்தான் இந்த மாதிரி பார்ப்பன வெறியனுக்கு சரியான சிகிச்சை முரையாக இருக்கும்.

ஜாதி வெறி பிடித்து அலைவது யார் என்பதை பார்ப்பன கூட்டத்தின் தலைவரான சங்கராச்சாரியாரின் அந்தியந்த நண்பர் தாத்தச்சாரி அவர்கள் குறிப்பிட்டுள்லதை ஏற்கனவே வேறு ஒரு பின்னூட்டத்தில் தந்திருந்தேன். அதையே மீண்டும் தருகிறேன்.

பார்ப்பன பாலாவுக்காக அல்ல.என் தமிழன் வரலாறைத் தெரிந்து கொள்வதற்காக.

ஜாதி வெறி பிடித்து அலைபவர்கள் பார்ப்பனர்கள் தான் என்பது உலகறிந்த விஜயம்.

இன்றுவரை ஜாதியைக் கட்டிகாப்பாற்றி வருவதும் பார்ப்பனர்கள் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த விஜயம்.

இது குறித்து அதாவது ஜாதியைக் கட்டிக் காத்து வருவது யார் என்பதை நாம் சொல்லுவதைவிட சங்கராச்ச்சாரியின் அந்தியந்த நண்பர் தாத்தாச்சாரி அவர்கள் சொல்வது பொருத்தமாக இருக்கும்.
அப்போதாவது இந்த பார்ப்பனக்கூட்டம் ஒத்துக் கொள்ளுமா? பார்ப்போம்.

ஊண்றிப் படித்து உண்மையை அறிக.

இதோ தாத்தாச்சாரி பேசுகிறார்:

"கலாச்சாரத்தின் முதல் மாற்றம் கல்யாணத்தில் தொடங்கியது. தமிழர்களின் கல்யாணமுறை எப்படி இருந்தது என தெரிந்து கொண்டால்தானே அது எவ்வாறு மாறியது என்பதையும் தெரிந்து கொள்ளமுடியும்.

இலக்கியங்களை சித்தரிப்பது போல களவியல் என்பதுதான் பழந்தமிழர்களின் திருமணமுறை. அதென்ன களவியல்?

பெண்ணொருத்தி பூப்பெய்துகிறாள். உறவுப் பெண்கள் சுற்றிலும் மகிழ்ச்சி பொங்க முற்றுகையிட்டிருக்கிறார்கள். பெண்மை, தாய்மை என்னும் பெருமைக்கெல்லாம் அடிப்படையே இந்த திருநாள்தானே! அதனால்தான் சுற்றத்தின் முகத்தில் மகிழ்ச்சி. அந்த யுவதியின் முகத்தில் வெட்கம்.

இதை பக்கத்து வீட்டுக் காளை பார்த்து பூரிக்கிறான். அவளது அழகு அவனை அழைப்பதாய் அவனுக்குத் தோன்றுகிறது. பெண்மையின் முதல் வெட்கத்தின் முகவரி அவள் முகத்தில் தெரிகிறது. அதை படிக்க அந்தக் காளை ஆசைப்படுகிறான்.

சுற்றிலும் உறவினர்கள் பெண்களின் பாதுகாப்பு.. அன்ன நடை போட்டா அவளை அடைய முடியும்?

பொறுத்திருக்கிறது காளை. பொழுது சாயத் தொடங்கிய உடன் பாயத் தயாராகிறது. ராத்திரியின் மெல்லிய ஒளியில் தன் ராணியை நெருங்கியவன் நேரம் காலம் பார்ப்பதில்லை.

ஒரே தூக்கு! அந்த ஆளான அழகை தன் இளங்கரங்களில் ஏந்தி சிற்சில நொடிகளில் சீறிப்பாய்ந்து மறைகிறான்.

ருதுவான மங்கை மாயமாய்ப் போன பின்னே.. தேடுகிறார்கள். சுற்றுவட்டாரத்தையே அப்பெண்ணின் ஆண் உறவினர் கூட்டம் அணு அணுவாய் அலசுகிறது.

கடைசியில் அந்த ஜோடி ஜொலித்துக் கொண்டிருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விடுகிறது கூட்டம்.

பக்கத்து வீட்டு காளை அவளை பருகி நெடுநேரம் ஆகியிருந்தது.

கையும் களவுமாக பிடித்தபின் என்ன தண்டனை தெரியுமா?


கன்னியை தூக்கிக்கொண்டு ஓடிய அந்தப் பக்கத்து வீட்டு காளைக்கு தமிழ்க்கூட்டம் என்ன தண்டனை கொடுத்தது தெரியுமா?

"இதோ பாரடா.. நீ அவளை தொட்ட முதல் ஆண்மகன் அதனால் அவள் உனக்குரியவள்தான் உன்னுடன்தான் வாழ வேண்டும் அவள்" என இரண்டு பேரையும் சேர்த்து வைத்தது தீர்ப்பு.

இஃது களவியல் என்றால்.. தமிழர்களின் இன்னொரு சிறப்பு, சங்கப்பாடல் ஒன்று சொல்கிறது பாருங்கள் காதலை அஃதாவது கற்பியலை.

"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைகேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே...’’

நானும் நீயும் யார் யாராகவோ இருந்தோம் என் தந்தையும் உன் தந்தையும் எந்த முறையில் சொந்தக்காரர்கள் என்றும் தெரியாது நானும், நீயும் எங்கிருந்து வந்தோம் எனவும் இப்போது தெரியவில்லை.

ஆனாலும்.. இந்த அறிமுகங்கள் எல்லாம் தேவையே இல்லாமல் அன்பு கொண்டோம்.. எப்படி தெரியுமா.. செம்மண்ணிலே பெய்யும் மழைநீரும் செந்நிறம் அடைந்துவிடுகிறதே அதுபோல அன்பு கொண்ட நம் நெஞ்சங்கள் இரண்டும் பிரிக்க முடியாதபடி கலந்துவிட்டது.

இப்படி காதல் வாழ்க்கையிலும் நாகரிகத்தின் சிகரத்தில் இருந்தனர் தமிழர்கள்.

இவ்வாறு களவியல், கற்பியல் இரண்டு விஷயங்களிலுமே முன்னணியில் இருந்த தமிழர்களின் கல்யாணங்களில் "தாலி" வந்த கதை சுவாரஸ்யமானது.

திருநெல்வேலி போன்ற பனைமரங்கள் அதிகம் இருந்த பகுதிகளில், ஒரு ஆண் பெண்ணை திருமணம் செய்துகொண்டான் என்றால்.. பனையோலை ஒன்றை சிறிய அளவில் நறுக்கி அதில் "இந்தப் பெண் இந்த ஆணுக்கு உரியவள்" என எழுதி ஒரு நூலில் கோர்த்து கழுத்தில் கட்டி விடுவார்கள்.

பனைமரத்துக்கு தால் என்றும் பெயர் உண்டு. பனையோலையில் எழுதிக் கட்டுவதால் அந்த சிறு ஓலைக்கு தாலி என்று பெயர் வந்தது. பிறகு இந்தத் தாலியில் பெயருக்கேற்றவாறு பனையோலை இல்லாமல்.. பவுன் கட்டித் தொங்கவிட்டதெல்லாம் மாற்றத்தின் அடையாளங்கள்.

"இவ்வளவு கஷ்டப்பட்டு களவியல் செய்கிறீர்களே.. இவ்வளவு மகிழ்ச்சியுடன் காதல் மணம் புரிகிறீர்களே? இவற்றையெல்லாம் முறைப்படி சடங்குகள் செய்து விழாக்களாக கொண்டாடினால்தானே மகிழ்ச்சி என்றும் கூடும்?’’

கல்யாண கலாச்சாரத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்தனர் பிராமணர்கள்.

ஒன்றா, இரண்டா? எக்கச்சக்க சடங்குகள் என்னென்ன... ஒவ்வொன்றாய் சொல்கிறேன்.

1) திருமணத்துக்கு முன்பே இந்த பெண்ணுக்கு இவன்தான் கணவன் என்பதை நிர்ணயிக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் பெண் தரப்பில் பொருள்களை மாப்பிள்ளை வீட்டாருக்குக் கொடுக்கவேண்டும். இதற்கு பெயர் நிச்சயதாம்பூலம்.

2) கல்யாணச் சடங்குகள் ஆரம்பிக்கின்றன.

முதலில் காசி யாத்திரை.

சந்நியாசம் வாங்கவேண்டுமென்றால்.. மகனே கல்யாணத்துக்கு முன்னரே நீ சந்நியாசம் வாங்கிவிட வேண்டும். அதைவிட்டு கல்யாணத்துக்குப் பிறகு துறவறம் போகிறேன் என சொல்லி பெண்ணின் வாழ்வை படுத்தாதே என சூத்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

அதனால் கல்யாணத்துக்கு முன் காசியாத்திரை என்றொரு சடங்கு.

அதாவது மாப்பிள்ளை குடைக்கம்பை பிடித்துக்கொண்டு காசிக்கு புறப்படுவதுபோல பாவ்லா செய்யவேண்டும.; மாப்பிள்ளையை சமாதானப்படுத்தி மறுபடி திருமணத்துக்கு அழைத்துப் போவார்கள்.

3) ஊஞ்சலாட்டுதல்

"குழந்தாய்.. நீ பெண்ணோடு சந்தோஷமாக இருக்கும்போது அவருடன் ஊஞ்சல் பலகையில் அமர்ந்து ஆனந்தமாய் ஆடுவாயாக" என்பது வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது கல்யாணம் என்றால் மஹஸ் அதாவது (festivel) கொண்டாட்டம் இதற்காகத்தான் ஊஞ்சல்.

4 மாலை மாற்றுவது:

இது டீத்திரியர்களின் கலாச்சாரம் மணமகனும், மணமகளும் சுக துக்கங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளவேண்டும் என்பதன் அடையாளமாகத்தான் மாலை மாற்றிக் கொள்வார்கள்.

5) திருஷ்டி சுத்தி போடுவது மணமக்களுக்கு யார் கண்ணும் பட்டுவிடக் கூடாது என்பதற்காக உறவினர்கள் எல்லாம் மணமக்களுக்கு திருஷ்டி கழிப்பார்கள்.

6) நீராஜனம் எனப்படும் ஆரத்தி எடுப்பது.

7) இது முக்கியமானது. பெண்ணும், பையனும் இப்போதுதான் நேருக்கு நேராக பார்த்துக் கொள்ளவேண்டும். மந்த்ரங்கள் ஒலிக்க.. பெண்ணை உட்கார வைத்து அவள் தலையில் தண்ணீரை மெல்ல மெல்ல ஊற்றிக் குளிப்பாட்ட வேண்டும்.

8) பிறகு.. முழுக்க நனைந்த அவளை.. உள்ளே அழைத்துச் சென்று மணமகனே அவளுக்கு புடைவை உடுத்திவிட வேண்டும்.

அவளது நனைந்த புடைவையை களைந்துவிட்டு.. புதுப் புடைவையை மணமகன் உடுத்திவிடும்போது.. இந்த சேலை வளர்வதுபோல் நம்முடைய மகிழ்ச்சி சந்ததியெல்லாம் வளரவேண்டும் என்பதற்காகத்தான் இப் புடைவைச் சடங்கு.

இன்னும் இருக்கும் கல்யாணச் சடங்குகளையும்.. அவை மறுபடியும் எப்படி மாறின என்பதையும் அடுத்துப் பார்ப்போம்.




கல்யாண கலாச்சாரத்தில் பிராமணர்கள் கொண்டு வந்த சடங்கு சம்பிரதாயங்களில் இதுவரை ஏழு பார்த்தோம். எட்டாவது சடங்கு பாணிக்ரஹனம்.

பாணிக்ரஹனம் இதுதான் முக்கியமான சடங்கு. கைத்தலம் பற்ற கனாக்கண்டேன் தோழி என ஆண்டாள் பாசுரம் போலவும், மேற்கத்திய கலாச்சாரத்தில் 'கை' பற்றுவதுபோலவும் அமைந்தது இச்சடங்கு.

மணமகள் - மணமகனை கைப்பிடிப்பது! இனி வாழ்விற்கு நீதான் இணை, துணை, எல்லாம் நீயே என்ற அர்த்தத்தில் இருவரும் கைப்பிடித்துக் கொள்வதுதான் கல்யாணத்தின் முக்கிய அம்சம்.

9 கைத்தலம் பற்றிய பின், மணமகள் 7 அடி எடுத்து வைக்கவேண்டும். எதற்காக தெரியுமா?

முதல் அடி அன்னம் பெருகவேண்டும் என்பதற்காக. இரண்டாவது அடி அந்த அன்னம் உண்டபின் செரிக்க வேண்டும், மூன்றாவது அடி கணவனுக்காக விரதங்கள் அனுஷ்டிக்க வேண்டும் என்பதற்காக. நான்காவது, குடும்பம் சந்தோசமாக விருத்தியாக வேண்டும் என்பதற்காக. 5 வது அடி வீட்டில் மாடுகள் பெருகவேண்டும் என்ற வேண்டுதலுக்காக. 6 வது அடி வைப்பது குடும்பத்தில் அய்ஸ்வர்யம் (செல்வம்) கொழிப்பதற்கு. 7 வது அடி இந்த சகல சவுபாக்கியங்களும் சேர்ந்து கிடைக்க. தாலிக்கு அதாவது, நம் குடும்பம் இனிமேல் ஒன்று உன் அப்பா யாரோ என் அப்பா யாரோ.. ஆனால், இன்று முதல் நாம் ஒன்று என சங்கப் பாடல் படித்தோமே? அதே பொருளுக்காக யாகத்தை நெருங்குவதுதான் 7 வது அடி.

இந்த சடங்குகளோடு தமிழ்த் தாலியையும் சேர்த்தனர். இப்படியாகத் தூக்கிப் போவது, காதலிப்பது என சம்பிரதாயங்களில் சிக்காமல் இருந்த தமிழ் திருமண முறையும், பிராமண திருமண முறையும் திருமணம் செய்துகொண்டன.

இதன் விளைவாக தமிழனின் களவியல், கற்பியலில் மந்த்ர இயல் புகுந்தது. சடங்குகள் பிறந்தன. கல்யாணம் என்பது வேதக் கட்டளைப்படி நடக்கும் விழா ஆனது.

மேலோர்க்கு யாத்த கரணம்
கீழோர்க்கு ஆன காலமும் உண்டே....

என்கிறது தொல்காப்பியம்.

கரணம் என்றால் கல்யாணம். அதாவது, மேலோர்களான பிராமணர்கள் வகுத்த கல்யாண கர்மாக்கள்.. மற்றவர்களுக்கும் வழக்கத்தில் இருந்தது. விளக்கம் என்னவென்றால் தொடர்ந்து 10 நாள்கள் வரை நடக்கும் கல்யாணச் சடங்குகளை பிராமணர்கள் தங்களால் சூத்திரர்கள் என அழைக்கப்பட்ட தமிழர்களுக்கும் பண்ணி வைத்தனர்.

மந்த்ர பூர்வமான கல்யாணத்தில் இடமில்லை. ஆனால், தமிழர்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கும்போது அவர்களின் வழக்கத்துக்கு விரோதமாக செயல்பட இயலாதென்பதால் தாலியை -பனை ஓலை கயிறை - மெல்ல மந்த்ர மஞ்சளில் இழைத்து மாங்கல்யமாக்கி விட்டார்கள், தங்களுக்கும் சேர்த்து.

மேற்கூறிய தொல்காப்பிய வாசகத்தில் கவனிக்கவேண்டிய பதம் ஒன்று உண்டு. 'மேலோர்க்கு யாத்த கரணம் கீழோர்க்கு ஆன காலம் உண்டே’’

என்பதில் கீழோர்க்கு ஆன காலம் உண்டே என்பதை மட்டும் உற்றுப் பாருங்கள். பிற்பாடு - இந்த கல்யாண முறையில் மாற்றம் வந்துவிட்டது- ஒன்றாக இருந்த காலம் உண்டு என்று தெரிய வரும்.

ஏன் மாறிப் போனதுமுதல் காரணம் தனக்கும் கீழானவர்கள் அதாவது சூத்திரர்களின் கல்யாணச் சடங்குகளும் ஒன்றாக இருக்கலாமா? அவர்களுக்கும் நாமே கல்யாணம் செய்து வைப்போம் அதனால் சடங்குகளில் சிற்சில மாற்றங்களைக் கொண்டு வருவோம் என நினைத்தார்கள் பிராமணர்கள்

இரண்டாவது காரணம் இவ்வளவு நீண்ட சடங்குகளை நடத்தி திருமண விழாவை பத்து நாள்கள் நகர்த்திச் செல்ல தமிழர்களுக்கு பொறுமையோ அல்லது விருப்பமோ இல்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் கன்னியை தூக்கிக் கொண்டோடி சுகித்து திடீர் திருமணங்களை நடத்திக்கொண்ட களவியல் மரபுக்காரர்களாயிற்றே!

அவனது கண்களும், அவளது கண்களும் சந்தித்துக்கொண்ட சிற்சில நொடிகளில்.. மவுனப் புன்னகையே மந்திரமாக.. கற்பியல் முறையில் காதல் மணம் கண்டவர்களாயிற்றே!

அதனால் தமிழர்களுக்கு அந்த நீண்ட நெடிய சடங்குகளில் பிடிப்பு வரவில்லை. கல்யாண கலாச்சாரங்களுக் கிடையில் விவாகரத்து ஏற்பட்டுவிட்டது.

இத்தகைய காரணங்களால்.. சூத்திரர்களை தனியாகப் பிரித்து வைத்த பிராமணர்கள் கல்யாண முறை மட்டுமல்லாது அனைத்து வகையிலும் சூத்திரர்களை கீழ்ப்படுத்தினார்கள்.

இப்படி செய்வதற்கு அவர்கள் கையில் கசங்காமல் இருந்த மனு ஸ்மிருதி தான் ரொம்ப உதவியாக இருந்தது.

மனு மூலம் சூத்திரர்களை கெடுபிடி செய்த பிராமணர்கள இந்தக் கொடுமைக்கும் அதிகமான கொடுமைகளை இன்னொரு பிரிவினருக்குச் செய்தார்கள்.

யாருக்கு சத்திரியர்களுக்கா...? வைஸியர்களுக்கா...? இல்லை, இல்லை சண்டாளர்களுக்கு.

சண்டாளர்களா? யாரவர்கள்?

மனு கூற்றுப்படி சண்டாளர்கள் யார் என்பதை என் எழுத்தில் என்னால் கூற முடியவில்லை. என்னிடம் மகாத்மா காந்தி கூறியதை அப்படியே உங்களுக்குத் தருகிறேன்.


யார் அந்த சண்டாளர்கள்?
துரோகம் செய்தவனை கொலை பாதகனை, பத்தினிகளை வேட்டையாடுபவனைதான் பொதுவாக சண்டாளன் என்று சாடுவோம்.

ஆனால், மனு யாரைச் சொல்கிறது தெரியுமா? சூத்திரர்களுக்கு கீழ்பட்டவர்கள் எல்லா விதத்திலும் ஒடுக்கப்பட வேண்டியவர்கள். வர்ணாஸ்ரம பேதத்தின் கடைசி கூட்டத்தினர் இப்படியாக அருவருப்புடன் வர்ணிக்கப்படும் தலித்துகளைத்தான் மனு தனது அகராதியில் பஞ்சமர்கள் என்று சண்டாளர்கள் என்றும் குறிப்பிட்டார்.

ஏன் அவர்களைச் சண்டாளர்கள் என குறிப்பிடவேண்டும்? அவர்கள் அப்படி என்ன பாவம் செய்தார்கள்?

இதற்கான பதிலைத்தான் தானே எழுதிட முன் வரவில்லை அண்ணல் காந்தியடிகள் எனக்கு உரைத்த பதிலை அப்படியே உங்களுக்குத் தருகிறேன் எனக் குறிப்பிட்டேன்.

முதலில் காந்தியாரை நான் சந்தித்த சந்தர்ப்பம் பற்றி விரிவாகச் சொல்லுகிறேன்.

இந்திய நேரத்தின் விடுதலைக்கு முந்தைய காலம் சுதந்திர போராட்டத்தை விடவும் காந்தியடிகள் சமூக சீர்திருத்த போராட்டத்தில்தான் அதிகம் ஈடுபட்டிருந்தார் அந்த வகையில் எங்கள் ஊரான கும்பகோணத்திற்கு தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரத்துக்காக காந்தி பலதடவை வந்தார்.

அப்படி ஒரு தடவை வந்தபோது ஊரிலுள்ள நான் உட்பட சில பிராமண இளைஞர்கள் ஒன்று கூடினோம். காந்தி சனாதன தர்மத்தை சாய்க்க வருகிறார் அவரை நாம் எதிர்க்கவேண்டும் அவரது பிரச்சாரத்தை முறியடிக்கவேண்டும் என திட்டம் தீட்டப்பட்டது.

உடனடியாக அந்த கூட்டத்தின் தீர்மானங்கள் செயலாக்க வடிவம் பெறத் தொடங்கின. அதில் முதல் திட்டம்தான் முதன்மையான காந்தியடிகளுக்கு கருப்புக் கொடி காட்டுவது தான்.

திட்டப்படி காந்தியடிகள் கும்பகோணம் நகருக்கு வந்தபோது, நானும் சில சனாதன இளைஞர்களும் ஒன்று சேர்ந்து கருப்புக்கொடிகளைப் பிடித்துக்கொண்டோம்.

தீண்டாமை ஒழிப்பில் ஈடுபடும் காந்தியாரே திரும்பிப் போங்கள!; சனாதன வர்ணாஸ்ரமத்தை எதிர்க்காதீர்கள்! என்று நாங்கள் பல முழக்கங்களை போட்டோம்.

காந்தி மேடைக்கு வந்துவிட்டார். அவரது பேச்சைக் கேட்க நிறைய பேர் கூடியிருக்கிறார்கள.; நாங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக முழக்கங்களை எழுப்பி கருப்புக் கொடிகளை உயர்த்திக் காட்டினோம்.

அப்போதைய கும்பகோணம் காங்கிரஸ் தலைவர் பந்தலு அய்யர் என நினைக்கின்றேன். காந்தி பந்துலு அய்யரை தன் அருகே அழைத்தார் என்ன விவகாரம்? எனக் கேட்டார். அய்யரும் எங்களின் எதிர்ப்புணர்வை சுட்டிக்காட்டி, 'உங்களை தீண்டாமைக்கு எதிராக பேச வேண்டாம் என்கிறார்கள.; கொஞ்ச நேரம் போராடிவிட்டு போய்விடுவார்கள.; நீங்கள் பேசுங்கள் என காந்தியடிகளிடம் தெரிவித்தார். ஆனால், காந்தி அவ்வாறு எங்களை அலட்சியப் படுத்தவில்லை.

எங்களை நோக்கி கையசைத்து கூப்பிட்டார். போனோம.; முன்வரிசையில் நான்தான் இருந்தேன். Why are you demonstrating young men? எனக் கேட்டார்

நாங்கள் போராட்டம் பற்றிச் சொன்னோம். அதற்குப் பிறகு காந்தி முதலில் எங்களிடம் பதிலளிக்க ஆரம்பித்தார்.

நான் தீண்டாமை முற்றாகவேண்டாம் என்கிறேன். பஞ்சமர்கள் என பட்டம் கட்டி அவர்களை கொடுமைபடுத்துவதை விட்டுவிடுங்கள். அவர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் இவ்வுலகில் வாழ உரிமை உண்டு. அவர்களை தீண்டத் தகாதவர்கள் என ஒதுக்கிவைக்காதீர்கள். அவர்களையும் பொது இடங்களில் அனுமதியுங்கள். கோயில்களில் நுழைய விடுங்கள் என பிரச்சாரம் செய்யவந்தேன்.

இதையெல்லாம் வர்ணாஸ்ரமம் பேசும் நீங்கள் எதிர்க்கிறீர்கள.; நீங்கள் மனு ஸ்மிருதி படித்துள்ளீர்களா? மனவில் பஞ்சமர்களை சண்டாளர்கள் என அபாண்ட வார்த்தையால் குறிப்பிட்டுள்ளார்கள். ஏன் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்கள்.

அந்த காலத்தில் பிராமணர்கள் சூத்திரர்களை தங்களது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். அதாவது, தாங்கள் இட்ட கட்டளைகளை சிரமேற்கொண்டு செய்து முடிக்கக்கூடிய அளவுக்கு சூத்திரர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள். இத்தகைய காலகட்டத்தில் பிராமண சமூகத்துப் பெண்கள் சிலருக்கு சூத்திரர்கள் மீது பரிதாபம், அனுதாபம் ஏன் ப்ரியம் ஏற்பட்டது.

தனது வீட்டிலுள்ள பிராணர்களுக்கு தெரியாமல் அப்பெண்கள் சூத்திரர்களுடன் நட்பு பாராட்டினார்கள். உறவு கொண்டாடினார்கள். ஏன் கல்யாணம் கூட பண்ணிக் கொண்டார்கள். சூத்திரர்களை கடுமையாக நடத்திவந்த பிராமணர்கள் தங்கள் வீட்டு பெண்களில் சிலரே அவர்களுடன் வாழ்க்கை அமைத்துக்கொண்டதை பெரும் அவமானமாக கருதினார்கள். பிராமண ஸ்திரீகளுக்கும் சூத்திர ஆண்களுக்கும் பிறந்த சந்ததியை அதனால்தான் சண்டாளர்கள் என பெயரிட்டு ஒதுக்கிவைத்தனர்

நாளடைவில் பிராமண ஆண்கள் சூத்திர பெண்களை கள்ளத்தனமாக உறவு கொண்டனர். இவர்களுக்கு பிறந்த சந்ததியினருக்கும் அதே சண்டாளர்கள் என்றுதான் பெயர். அதனால்தான் சண்டாளர்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து நீ என் கண்ணில்பட்டாலே தீட்டு, அபச்சாரம் என புறந்தள்ளி வைத்தார்கள். பிராமணர்கள் நான் சொல்வது வெகு காலம் முன்பு.

இப்படி வளர்ந்த சந்ததியைத்தான் இப்போது நீங்கள் தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கி வைக்கிறீர்கள.; அவர்களின் தாயார் தகப்பனார் யார் என எண்ணிப் பாருங்கள். இதெல்லாம் புஸ்தகத்தில்தான் இருக்கிறது. நானாக சொல்லவில்லை என எங்களிடம் ஆங்கிலத்தில் சரசரவென பேசிமுடித்தார் காந்தியடிகள்.

முன்வரிசையில் இருந்த நான் திரும்பிக்கொண்டேன்.



என்ன?.. அண்ணல் காந்தியடிகள் பல வருடங்களுக்கு முன் சண்டாளர்கள் என்றால் யார் என சொன்னதை போன அத்தியாயத்தில் கேட்டீர்களா?

நீங்கள் இப்போது கேட்டதை நான் பற்பல வருடங்களுக்கு முன்னால் காந்தி வாயால் கேட்டு லேசாக அதிர்ந்தேன்.

பிறகு.. நான் மநுவுக்குள் மூழ்க ஆரம்பித்தேன் 'சண்டாளர்கள் என குறிப்பிட்ட மநு அவர்களைப் பற்றி மேலும் என்ன சொல்லியிருக்கிறது என்பதுதான் தேடல்.

பிராமண வீட்டுப் பெண்கள் சூத்திரர்களோடு ப்பிரியப்பட்டார்கள் அல்லவா?.. அதே காரணத்துக்காக அவர்கள் சமூகத்திலிருந்து தனியே பிரிக்கப்பட்டார்கள்.

சமூகம்
ஆமாம்.. தொழில் முறையில் பிரிவு பிரிவுகளாக வாழ்ந்த மக்களை பிராமணர்கள் பார்த்தார்கள் 'நாளைய சந்ததியில் இவர்கள் தொழில் மாறிவிட்டால் என்ன சொல்லி அழைப்பது’-சிந்தித்தார்கள் ய ளவயடெந ளடிஉநைவல அதாவது நிலையான ச_கக் கட்டுமான அமைப்பு வேண்டுமென்றால் அது சாதியாக பிரிக்கப்பட்டால்தான் உறுதியுடன் இருக்கும் என்பது பிராமணர்களின் கணிப்பு அதற்காக?

பிறப்பின் அடிப்படையில் ஜாதியை வளர்த்தார்கள் சூத்திரனுக்கு பிறந்தவன் நாளை தொழில் மாறினாலும் சூத்திரன்தான் வைசியனுக்கு பிறந்தவன் பிறகு வணிகத்தை மறந்தாலும் அவன் வைசியன்தான் சத்திரியனுக்கு பிறந்தவன் பின்னாளில் ராஜ்யமின்றி நடுத்தெருவில் நின்றாலும் அவன் சத்திரியன்தான்.

இதுதான் அவர்கள் வகுத்த stable society
----------- நூல்: அக்னி ஹோத்ரம் ராமானுஜதாத்தாச்சாரியார் எழுதிய "இந்து மதம் எங்கே போகிறது?"

தாத்தாசாரியின் ஒப்புதல் வாக்குமூலம் மூலம் ஜாதி வெறியர்களாக வெறிபிடித்து அலைந்தது பார்ப்பனர்கள்தான் என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது.

அசோக் said...

//ஜாதியை முற்றாக ஒழிக்க வேண்டும்//

Yes the heading is correct, First you try to remove saying about "பார்ப்பனர்".
//ஜாதி வெறி பிடித்து அலைபவர்கள் பார்ப்பனர்கள் தான் என்பது உலகறிந்த விஜயம்.//
They are not only doing, all the cast people are doing the same...

மணி said...

bala like parppu velai paartha paapaanukku ellam ean menakettu pathil podukireergal.

to destroy the caste system what is the plan/activities of DK nowadays. (not periyar days)

how you see the ma.ka.ee.ka's 1993 karuvarai nulaivu poraatam in sree rangam temple?

தமிழ் ஓவியா said...

//They are not only doing, all the cast people are doing the same...//

ஜாதிகளைப் பார்ப்பனர்கள் தான் உண்டாக்கினார்கள் வெறி பிடித்து அலைபவர்களும் பார்ப்பனர்கள் தான் என்பதை இராமானுஜ தாத்தாச்சாரி "இந்து மதம் எங்கே போகிறது? என்ற நக்கீரன் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலில் எழுதியுள்ளார்.
பார்ப்பனர்களைப் பார்த்துத்தான் மற்ரவர்களும் ஜாதி என்னும் நோயை வாங்கிக் கொண்டார்கள். பார்ப்பானை அதாவாது சொல்லிக் கொடுக்கும் வாத்தியாரைச் சரிப்படுத்தினால் மானவர்கள்(மற்ற ஜாதியினர்) தானகவே சரியாகிவிடுவார்கள்.

இது குறித்து பெரியாரின் கருத்து உற்று நோக்கக் கூடியது. பெரியாரின் கருத்தை அப்படியே தருகிறேன். ஊண்றிப் படித்து உண்மையை உணர வேண்டுகிறேன்.

"மறைந்த பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களும், நானும் நெடுநாட்களாக நண்பர்கள் என்பது மாத்திரமல்ல; பல விஷயங்களில் எனது கருத்தும் அவரது கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். சாதி ஒழிப்பு என்ற விஷயத்தில் மாத்திரமே நாங்கள் ஒத்தக் கருத்துடையவர்கள் என்பது அல்ல.

இந்து மதம், இந்து சாஸ்திரங்கள், இந்துக் கடவுள்கள், தேவர்கள் என்பவர்கள் பற்றி இந்து மதப்புராணங்கள் இவைகளைக் குறித்தும்கூட, எங்கள் இரண்டு பேர் கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

அது மட்டுமல்ல, அவற்றைப் பற்றி நான் எவ்வளவு உறுதியாகவும், பலமாகவும் என் அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கின்றேனோ, அவ்வாறு தான் அவரும் மிகவும் உறுதியாகவும், பலமாகவும், லட்சியங்களைக் கடைப்பிடித்தார்.

என் பிரச்சாரத்தில் சாதி ஒழிய வேண்டுமென்று மாத்திரம் நான் சொல்லவில்லை. அதற்கு முக்கிய அடிப்படையான மதம், ஆதாரம் ஒழிய வேண்டும் என்றுதான் நானும் சொல்லி வருகிறேன். அவரும் அப்படித்தான் சொன்னார்...

நம்மிடையே பல சாதிகள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், உண்மையில் பல சாதிகள் கிடையாது. நாம் இரண்டே சாதிகள்.

ஒன்று பார்ப்பனர்கள்; இன்னொன்று சூத்திரர்கள். அவ்வளவுதான். மதப்படியும், சாஸ்திரங்கள்படியும், நாம் இரண்டே பிரிவுகள்தான். அவைகளில் பிற்படுத்தப்பட்ட மக்கள், பஞ்சமர்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்ற பிரிவெல்லாம் இல்லை. இவை பார்ப்பனர் நலனுக்காக, தொழில் காரணமாக என்று பிரித்த பிரிவுகளேயாகும்.

இவை பிறவி சாதிகள் அல்ல. இதை நீங்கள் நன்றாக உணர வேண்டும். நீங்களும் நாங்களும் சூத்திரர் என்ற ஒரே சாதிதான்.

இப்படிப்பட்ட நாம், இப்படி நமது இழிவைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதற்கு இன்னொரு காரணம், நம்மில் அநேகர் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு, அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசையினால் துணிவுடன் இதை எடுத்துச் சொல்லாமல் பயந்து, தங்கள் சுயநலத்திற்கு எதையும் விட்டுக் கொடுத்து விடுகிறார்கள். ஆகையால் பார்ப்பனர்களின் பதவி, அதிகாரத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள்.

அப்படிப் போகிறவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால், அதன் மூலம் நமது கொள்கைகளை விட்டுக் கொடுத்துவிட்டு வருகிறார்களே என்பது குறித்துதான் எனது கவலை எல்லாம்.

உங்களுக்குச் சொல்ல வேண்டியது இன்னொன்றும் உண்டு.

அநேக மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களில் தவறாக நினைக்கிறார்கள்:

‘பார்ப்பனரல்லாத மக்கள்தான் தங்கள் எதிரிகள் என்றும் பார்ப்பனர்கள்கூட அல்ல' என்றும்! இது, மிகவும் தவறான எண்ணமாகும். இதற்குக் காரணம், பார்ப்பன ஆட்சியில் பல அதிகாரங்களும், பண விநியோகமும் இருப்பதால் பார்ப்பானுக்கு நல்ல பிள்ளையாகவும் அவனது விஷமப் பிரச்சாரத்தை நம்புவதும் ஆகும்.

நாங்கள் வேறு என்றும், நீங்கள் வேறு என்றும் எண்ணக்கூடாது. சூத்திரர்கள் ஓர் இனமாக இருந்தால், தங்களுக்கு ஆபத்து என்று கருதி, பல இனமாக ஆக்கிவிட்டார்கள். ஆகவே, இப்படியெல்லாம் உங்களை எண்ணும்படி வைப்பது பார்ப்பனர்கள் சூழ்ச்சிதானே ஒழிய வேறில்லை.

இப்படிப்பட்ட கருத்தைப் பார்ப்பனர்கள்தான் தூண்டி விடுகிறார்களே ஒழிய வேறில்லை.

பார்ப்பான் எதை எதைச் செய்கிறானோ, அவற்றையெல்லாம் இவன் (பார்ப்பான் அல்லாதவன் சூத்திரன்) அவனைப் பார்த்து அதேபோல் செய்கிறானே தவிர வேறில்லை.

ஆகவே, அவன் அதைச் செய்யவில்லை என்றால், மற்றவர்கள் அதைச் செய்யமாட்டார்கள்.

ஒரு உதாரணம் சொல்ல விரும்புகிறேன். ஈரோட்டில் எங்கள் தெருவில் தண்ணீர் குழாய் இருக்கிறது. அதில் எல்லோரும் தண்ணீர் எடுக்க வருவார்கள். ஒரு பார்ப்பாரப் பெண் வந்தால், அவள் கையில் ஒரு செம்பில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து அதை அந்தக் குழாய்க்கு மேல் ஊற்றிக் கழுவிவிட்டுப் பிறகுதான் குடத்தை வைத்துத் தண்ணீர் பிடிப்பாள். அதைப் பார்த்து நம்மவன் வீட்டுப் பெண் பிள்ளையும் அப்படியே செம்பில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி விட்டுப் பிறகுதான் குடத்தை வைத்துத் தண்ணீர் பிடித்துக் கொண்டு போவாள். அதைப் பார்த்து எங்கள் பக்கத்து வீட்டு சாய்பு (முஸ்லிம்) பொம்பளையும் செம்பில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து குழாய் மேல் ஊற்றிக் கழுவி விட்டுத்தான் குடத்தை வைத்து தண்ணீர் பிடிக்கிறாள்.

முதலாவது பார்ப்பாரப் பொம்பளை தண்ணீர் ஊற்றுவது, மற்றச் சாதிக்காரர்கள் குழாயைத் தொட்டுவிட்டார்களே, தீட்டுப்பட்டு விட்டதே என்பதற்காக ஊற்றிக் கழுவுகிறாள். இதைப் பார்த்து அதை அப்படியே காப்பி அடித்துச் செய்கிற மற்ற பெண்களுக்கு நாம் எதற்காக இப்படிச் செய்கிறோம் என்று தெரியாமலேயே செய்து கொண்டு வருகிறார்கள்.

அதுபோலத்தான் பார்ப்பனரல்லாதாரில் சாதி வெறியும், பிற்போக்கு மனப்பான்மையும் கொண்டுள்ளவர் நிலைமை - அவர்களது இந்த மாதிரியான நடத்தைக்குக் காரணம்.

அறியாமையும், பார்ப்பானைப் பார்த்துக் காப்பி அடிப்பதுமே தவிர, அகம்பாவம் (பார்ப்பனர்களைப் போல்) கிடையாது. சொல்லிக் கொடுக்கும் வாத்தியாரைச் சரிப்படுத்தினால், மாணவன் தானே சப்பட்டு விடுவான்!

பார்ப்பான்தான் நமக்கு முக்கிய எதிரி. பார்ப்பன மதம், பார்ப்பனப் புராணங்கள், பார்ப்பன சாஸ்திரங்கள், பார்ப்பனக் கடவுள்கள் இவைதான் நமக்கு எதிரிகளேயொழிய வேறில்லை. ‘பார்ப்பனரல்லாதார் அல்ல நமக்கு எதிரிகள்' என்பதை ஆதிதிராவிடர் ஆகிய நீங்கள் தெளிவாக உணர வேண்டும்.

--------------புதுடெல்லியில் 15.2.1959 அன்று அம்பேத்கர் பவனத்தில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவு.


படியுங்கள்,சிந்தியுங்கள்.

நன்றி.