Search This Blog

22.12.08

ஜாதியும் ஹோம்ரூலும்

ஹோம்ரூலும், சுய ஆட்சியும் பிராமணர்கள் கையில் கொடுத்து விட்டால் உண்மையாகவே அது அபாயகரமான ஆயுதமாகக் காட்டிவிடும். அவர்கள் இந்நிலத்து மக்கள் என்று தங்களை அழைத்துக் கொள்வதும் பிராமணர்களாகித் தாங்களும் பிராமணர்களல்லாதவரும் சகோதரர்களாயிருந்தார்களென்று சொல்லிக் கொள்வதும் சுத்தப்பொய் விருத்தாந்தமேயாகும்.

பிராமணர்களல்லாத இந்துக்களோடு கலியாண சம்பந்தங்கள் செய்து கொள்ள வேண்டுமென்று அவ்வளவு தூரம் நான் பிராமணர்களைக் கேட்கவில்லை. தற்காலம் உடனுண்ணல் மாத்திரம் போதும். தம்முள் வித்தியாசம் பாராட்டாது ஒருங்கு சேர்ந்து உண்ணாத மக்கள் ஒருவரையொருவர் நேசித்தல் எங்ஙனம் கூடும்? ஒருங்கு உட்கார்ந்து உண்ணாதமக்களுள்ள இராச்சியம் என்று அழைத்த ஒரு தேசமுண்டோ?

இனி, பிராமணர்கள் ஹோம்ரூலும், சுய ஆட்சியும் கொடுக்கப்படுவார்களானால் விரோதிகள் இத்தேசத்திற்கு வந்து விட்டால் யார் போர் புரிவார்கள். ஒருகால் அவர்கள் சகோதரர்களாகிய தமிழரும் க்ஷத்திரியருமே. சீக்கியர்களும் இராஜ புத்திரர்களும் நன்றாய் போர்புரிந்திருப்பின் பிராமணர்கள் இந்துக்கள் செவ்வனே அமர் நடத்தினார்களென்றும் அதற்கு பிரதி பலனாக பிராமணர்களாகிய நாங்கள் ஹைகோர்ட் ஜட்ஜிகளாகவும், போர்டு மெம்பர்களாகவும் நியமிக்கப்பட வேண்டுமென்றும் சொல்லுவார்கள்.

-------------------------திராவிடன், 17.10.1917

1 comments:

kajaneethan said...

நல்லா எழுதுறிங்க தொடர்ந்து எழுதுங்க