Search This Blog

17.10.08

தமிழர் பிரச்சினையில் அம்பலமானார் ஜெயலலிதா!



சிங்கள அரசுக்கு ஆதரவாக ஜெயலலிதா அறிக்கை
தமிழா, இப்பொழுதாவது புரிகிறதா? முதல்வர் கலைஞர் எழுப்பும் இனமான வினா
ஜெயலலிதா அறிக்கை வெட்கப்படத்தக்கது பழ. நெடுமாறன் கண்டனம்
ஜெயலலிதாவை வரலாறு மன்னிக்காது! சுப. வீரபாண்டியன் கண்டனம்

தமிழர் பிரச்சினையில் அம்பலமானார் ஜெயலலிதா!


சென்னை, அக். 17- சிங்கள அர சுக்கு ஆதரவாக ஜெயலலிதா அறிக்கை விட்டிருப்பதைக் கண்டித்து தமிழக முதல்வர் கலைஞர் அவர்களும், பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன் ஆகியோரும் ஜெயலலிதாவைக் கண்டித்து அறிக்கை விடுத்துள்ளனர்.

செல்வி ஜெயலலிதா தமிழர் விரோத அறிக்கை விட்டிருப்பது தொடர்பாக முதல்வர் கலைஞர் கேள்வி - பதில் முறையில் அளித்திருக்கும் விளக்கம் இது:

கேள்வி: இலங்கைத் தமி ழர் பிரச்சினைக்காக தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு திரு வை.கோ. வராவிட்டாலும், அனைத்துக் கட்சிக் கூட்டத் தில் அறிவிக்கப்பட்ட இரண்டு வாரத்தில் இலங்கை யில் போர் நிறுத்தம் ஏற்பட்டு நிலையான அமைதிக்கான பேச்சுவார்த்தைகளுக்கு வழி வகுத்து இலங்கைத் தமிழர்கள் பாதுகாக்கப்பட இந்திய அரசு முன்வராவிட்டால்; தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும் என்ற தீர்மானத்தை அவரும் ஏற்றுக் கொண்டுள்ள காரணத்தினால் தானே அவரது கட்சி நாடா ளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகத் தயார் என்று கூறியிருக்கிறார்?

கலைஞர்
: ஆம்; அவர் அனைத்துக் கட்சிக் கூட்டத் துக்கு வராவிட்டாலும் தனது உணர்வை வெளிப்படுத்தி இருப்பதைப் படிக்கும்போது நமக்குப் புல்லரிக்கிறது; எனவே வரவேற்கத்தக்க அறிவிப்பு! ஆனாலும் ஒன்று; தி.முக.வினர் மத்திய அமைச்சர்கள் பதவியிலிருந்தும் விலக வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினாலே, அமைச்சர் பதவியும் தானாகவே போய் விடும் என்பது அவருக்குத் தெரியாதா என்ன? பா.ஜ.க. அமைச்சரவையிலே தி.மு.க. அங்கம் பெற்றிருந்தபோது, அமைச்சரவைப் பதவிகளை துறந்துவிட்டுத் தான் தம்பிகள் டி.ஆர்.பாலு, ஆ. ராஜா ஆகியோர் வெளியே வந்தார்கள் என்பதை நினைவூட்டுகிறேன்.

கேள்வி: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்காக நாம் எடுத்த முடிவு கண்டு அங்கமெலாம் பதற அம்மையார் ஜெயலலிதா விடுத்துள்ள அனல் கக்கும் அறிக்கையில், இலங்கையில் தற்போது நடக்கும் யுத்தம் விடுதலைப் புலிகள் என்னும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான யுத்தம். இந்த யுத்தத்தில் அங்கு வசிக்கும் அப்பாவித் தமிழர் களைப் பாதுகாப்பான இடங் களுக்குச் செல்லவிடாமல் விடுதலைப்புலிகள் அமைப்பு அவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாகச் செய்திகள் கூறுகின்றன என்று குறிப்பிட்டிருக்கிறாரே?

கலைஞர்: அம்மையாரின் இந்த அறிக்கையை திரு. வைகோ. ஏற்றுக் கொள்கிறாரா?

கேள்வி: மக்களவை உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள் என்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத் தீர்மானத்தில் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, மத்திய அமைச்சர்களைப்பற்றி ஒரு வார்த்தை கூட அதில் இல்லை என்று ஜெயலலிதா அறிக்கையிலே சொல்லி இருக்கிறாரே?

கலைஞர்: அம்மையார் முதலில் அந்தத் தீர்மானத்தை மீண்டும் மீண்டும் படித்துத் தெளிவு பெற வேண்டுகிறேன். தீர்மானங்கள் செயல் வடிவம் பெறவும், இலங்கையில் இரண்டு வார காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்யவும் இந்திய அரசு முன்வரா விட்டால், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும் என்றுதான் தீர்மானவாசகம் இருக்கிறதே தவிர, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என் பதில் மாநிலங்களவை உறுப்பினர்களும், மத்திய அமைச்சர்களும் அடங்குவார்கள் என் பதை; நான் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமென்று இல்லை. மாநிலங்கள் அவை உறுப்பினர்க்கும் அத்தீர்மானம் பொருந்தும் என்பதால்தானே, திருமதி கனிமொழி - 29-10-2008 தேதியிட்டு தனது பதவி விலகல் கடிதத்தை இரண்டு வார காலக்கெடு இருந்த போதிலும் முன்கூட்டியே அனுப்பியிருக்கிறார்?

கேள்வி: தமிழினத்தை இலங்கையில் அழிந்து போகாமல் காப்பாற்ற தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தை - கண் துடைப்பு நாடகம் - கபட நாடகம் - மோசடி நாடகம் - செவிடன் காதில் ஊதிய சங்கு என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஜெயலலிதா அவர்கள் ; அதே அறிக்கையில் கபட நாடகம் என்ற சொற்றொடரை மட்டும் பத்து இடங்களுக்கு மேல் பயன்படுத்தியிருக்கிறார்; அதோடு விடாமல் தனக்கும் கபட நாடகத்தை அரங்கேற்றத் தெரியும் என்பதை கனிமொழி நாட்டு மக்களுக்கு உணர்த்தி இருப்பதாக ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறி உள்ளதுபற்றி?

கலைஞர்
: இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று - இந்தக் குறளின் பொருளை அம்மையார் உணர்ந்து கொள்ளவேண்டும் என்பதே என் எண்ணமாகும்.

கேள்வி: உண்மையிலேயே கனிமொழிக்கு இலங் கைத் தமிழர்கள் மீது அக்கறை இருக்குமானால், ராஜ்யசபா தலைவரிடம் தன் ராஜினாமா கடிதத்தை இன்றைய தேதியிட்டுக் கொடுத்திருக்க வேண்டும் என்கிறாரே ஜெயலலிதா?

கலைஞர்: அனைத்துக் கட்சித் தலைவர்கள் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு உரிய விளைவு ஏற்பட அந்தக் கூட்டத்திலேயே, அந்தத் தீர்மானத்திலேயே இரண்டு வாரங்கள் காலக் கெடு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஜெய லலிதா காலக்கெடுவைப் பற்றிக் கவலைப்படாமல் ராஜினாமா கடிதத்தை உடனடியாக மாநிலங்கள் அவைத் தலைவரிடம் கனிமொழி ஏன் கொடுக்க வில்லை என்று கேட்கிறார். ஜெயலலிதாவின் அவசரத்திற்குக் காரணம் - இலங்கைத் தமிழர் பிரச்சினையின் மீதுள்ள அக்கறை அல்ல; கனிமொழி எப்படியாவது மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து இந்தக் காரணத்தையொட்டி வெளியே வந்து விடமாட்டாரா என்ற நல்லெண்ணம்(?) தான் காரணம்.

கேள்வி: பொழுது போக்குக் கூட்டம் போல அனைத்துக் கட்சிக் கூட்டம் நடை பெற்றுள்ளது - மத்திய அரசுக்கு இரண்டு வார கால அவகாசம் கொடுத்து இருப்பது மிகப் பெரிய மோசடி நாடகம் என்றெல்லாம் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?

கலைஞர்: தமிழகத்திலே உள்ள இருபதுக்கும் மேற்பட்ட கட்சிகள் கலந்து கொண்டு மூன்றரை மணி நேரத்திற்கு மேல் செலவிட்டு விவாதித்த கூட்டத்தை அம்மையார் பொழுதுபோக்குக் கூட்டம் என்கிறார்! இதற்கு அந்தத் தலைவர்கள்தான் பதில் கூற வேண்டும்.

கேள்வி: தற்போது மத்தியிலே உள்ள அரசு கருணாநிதி சொன்னதைச் செய்யக் கூடிய அரசு என்று ஜெயலலிதா சொல்லியிருப்பதைப் பற்றி?

கலைஞர்: வாஜ்பாய் அமைச்சரவையிலே அதிமுக அங்கம் வகித்தபோது பிரதமரை ஒரு நாள் கூட அமைதியாகத் தூங்க விடாமல் செய்தவர் ஜெயலலிதா. அதற்கு மாறாக தற்போதுள்ள கூட்டணி அரசு தோழமை உணர்வுடன் செயல்படுகிறது என்பதைச் சொல்கிறார் போலும்!

கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றியும் - அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் பற்றியும் - கருத்து வெளியிட்டு அறிக்கை வழங் கியுள்ள ஜெயலலிதா - மத்திய அமைச்சர்கள் மூலமாக கருணாநிதிக்கு வருமானம் வரு கிறது என்று கூறியுள்ளாரே?

கலைஞர்: தன்னைப் போலவே பிறரை நினைக்கும் தயாபரி அல்லவா ஜெயலலிதா!

கேள்வி: கருணாநிதியின் கபட நாடகத்தைக் கண்டு தமிழர்கள் ஏமாறத் தயாராக இல்லை என்று அறிக்கையிலே ஜெயலலிதா சொல்கிறாரே?

கலைஞர்: கபடம் என்றால் வஞ்சகம் என்று அகராதியில் பொருள் கூறப்பட்டுள்ளது. அந்தப் பொருளுக்கு தமிழகத்திலே பொருத்தமானவர் யார் என்பதை தமிழர்கள் நன்றாகவே அறிவார்கள்.

ஜெயலலிதாவின் அறிக்கையை யாராவது பாராட்டுவார்களா? ஏன் பாராட்டமாட்டார்கள்? இதோ, இன்று வெளிவந்துள்ள இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கிலப்பத்திரிகையில் ஜெயலலிதா நம்முடைய தீர்மானத்திற்கு பதிலாக மறுப்பறிக்கையைப் பாராட்டி, இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் மூத்த ஆலோசகர் பாசில் ராஜபக்சே என்பவர் கொடுத்த பேட்டி வெளி வந் துள்ளது. அதில் அவர் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா? (நிலைமையை நாங்கள் கவனித்து வருகிறோம். இந்திய அரசு ஏதாவது அறிக்கை வெளியிடுகிறதா என்பதை நாங்கள் பார்ப்போம். அது மாத்திரமல்ல, கருணாநிதிக்கு எதிராக ஜெயலலிதா பேசியிருப்பதை ஞாபகத்திலே வைத்துக் கொள்ளுங்கள்).

இந்த அளவிற்கு சிங்கள அரசுக்கு ஆதரவாக ஜெயலலிதா இருப்பதை அவர்களே ஒத்துக் கொண்டு சொல்லியிருப்பதைப் படிக்கும்போது, தமிழா, இப்போதாவது புரிகிறதா? உண்மை யில் காட்டிக் கொடுக்கின்ற கபட நாடகம் ஆடுவது யார் என்று?

---------------------------------------------------------------------------------------

பழ. நெடுமாறன்

இலங்கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்த வேண்டுமென்று கேட்பதன் மூலம் புலிகள் அமைப்பைக் காப்பாற்று வதற்கான முயற்சியில் முதல்வர் கருணாநிதி ஈடுபட்டிருப்பதாக அதிமுக பொதுச்செயலா ளர் ஜெயலலிதா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஈழத் தமிழர்கள் மீது குண்டு மழை பொழிந்து சிங்கள இராணுவம் நடத்தி வரும் கொடிய போரை உடனடியாக நிறுத்தி அப்பாவி மக்களைக் காப்பாற்ற வேண்டுமென அனைத்துக் கட்சிகளும் இணைந்து கூட்டாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், அதைத் திசை திருப்பும் வகையில் முதல்வரை மட்டுமே பிரித்துக் குற்றம் சாட்டுவது என்பது உள் நோக்கம் கொண்டதாகும்.

தங்கள் மக்களையும் தங்களையும் காப்பாற்றிக் கொள்ள விடுதலைப்புலிகளுக்கு வலிமை உண்டு என்பதை ஜெயலலிதா உணரவேண்டும். உலக நாடுகள் பலவும் சிங்கள அரசின் போர் வெறியைக் கண்டித்து உள்ள நிலையில், கொஞ்சமும் மனித நேய உணர் வின்றி சிங்கள அரசுக்கு ஆதரவாகப் பேசுவதை ஜெயலலிதா நிறுத்திக் கொள்ளவேண்டும்.

விடுதலைப்புலிகள் இயக்கம் தோன்றுவதற்கு முன் இருந்த தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட இனவெறிப் படுகொலைகளைச் சிங்கள வெறியர்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இவர்களிடமிருந்து தங்கள் மக்களைக் காப்பாற்றுவதற்காகத்தான் விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தினார்கள் என்ற வரலாற்று உண்மையைக்கூட உணராமல் ஜெயலலிதா பேசுவது வெட்கக் கேடானது.

இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிடும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை என ஜெயலலிதா வக்காலத்து வாங்குகிறார். பாகிஸ்தானின் உள் விவகாரத்தில் இந்திய அரசு ராணுவ ரீதியாகத் தலையிட்டு வங்கதேசம் சுதந்திர நாடாக ஆக உதவி புரிந்தது என்பதை ஜெயலலிதா உணராமல் போனது ஏன்?

இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிட்டு சிங்கள இராணுவத்திற்கு ஆயு தங்களை அள்ளித் தந்தும் உளவுத் தகவல்களை அளித்தும் ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்க உதவி புரியும் இந்திய அரசுக்கு, அந்தப் போரை நிறுத்தும்படி கூற அதிகாரம் இல்லை என்று கூறுவது அறிவுக்குப் பொருந்தாத வாதமாகும்.

தமிழர்களுக்கு எதிரான - இனவெறி அழிப்பை நடத்திக் கொண்டிருக்கும் இராஜபக்சே யின் ஊதுகுழலாக ஜெயலலிதா ஒலிக்கிறார். இரண்டு முறை முதலமைச்சராக இருந்தவர் - அண்டை நாட்டில் நடை பெறும் தமிழர் படுகொலைகளைப் பற்றி எதுவும் அறிந்து கொள்ளாமல் தமிழ்ப் பகைவர்களின் கைப்பொம்மையாக மாறிச் செயல்படுவதைத் தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.


சுப.வீரபாண்டியன்


தமிழீழ மக்களுக்குச் சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்களின் விடுதலைப் போராட்டக் கோரிக்கையைப் புரிந்து கொள்வதாகவும் சில நாள்களுக்கு முன்பு அறிக்கை விடுத்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இப்போது அதற்கு நேர் எதிராகவும், முன்னுக்குப் பின் முரணாகவும் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

தன் ஆட்சியில் ஈழத்தமிழர்களின் ஆதரவாளர்களை விரட்டி விரட்டி வேட்டையாடிப் பொடா சிறையில் தள்ளிய அவர், திடீரென்று தமிழீழ மக்களுக்காகப் பொய் ஒப்பாரி வைத்து ஓலமிட்ட போதே நமக்கு அய்யம் எழுந் தது. இப்போது மீண்டும் தன் கோர முகத்தை அவரே வெளிப்படுத்தியிருக்கிறார்.

இலங்கையில் தற்போது நடக்கும் யுத்தம் விடுதலைப் புலிகள் என்னும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான யுத்தம். போரை நிறுத்தவேண்டும் என்பதன் மூலம், கருணாநிதி விடுதலைப்புலிகள் அமைப்பைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார் என்கிறார் ஜெயலலிதா. போரில் செத்து மடியும் ஆயிரக்கணக்கான மக்களும், அகதிகளாய் தெருவில் நிற்கும் இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களும் அவர் கண்ணில் படவே இல்லை. தமிழினத்தில் பிறந்திருந்தால் அந்தக் கொடுந்துயரம் அவர் நெஞ்சைச் சுட்டிருக்கும். இப்போது அவரிடம் சிங்கள இனவெறிப் பாசமே மேலோங்கி நிற்கிறது.

சில நாட்களுக்குள் இப்படி ஒரு முரண்பட்ட அறிக்கையை அவர் ஏன் வெளியிட நேர்ந்தது? அக்டோபர் 6 ஆம் தேதி மயிலை மாங்கொல்லையில் நடைபெற்ற திமுக கூட்டத்திற்குப் பிறகே, தமிழகம் எங்கும் ஒரு புத்தெழுச்சி புறப்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்தத் தலைவன் குரல் கேட்டுத்தான் தமிழகம் எழுந்தது. அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடந்த அக்டோபர் 14 -க்குப் பிறகு, அந்த எழுச்சி இன்னும் பன் மடங்காகப் பெருகிறது. உலகத் தமிழர்களெல்லாம் ஒவ்வொரு நாளும் தலைவர் கலைஞருக்குத் தங்கள் நன்றியைத் தெரிவிக்கின்றனர். இவை அனைத்தையும் கண்டு பொறுக்க முடியாத ஆற்றாமைதான் இப்படி அறிக்கையாய் வந்து விழுகிறது.

கலைஞருக்கு எதிராக அரசியல் நடத்துவதாய் நினைத்துக் கொண்டு, தமிழினத்திற்கு எதிராக அரசியல் நடத்தும் ஜெயலலிதாவை வரலாறும், வருங்காலமும் மன்னிக்காது.

இவ்வாறு சுப.வீரபாண்டியன் தமது அறிக்கையில் குறிப் பிட்டுள்ளார்.


---------------நன்றி: "விடுதலை" 17-10-2008

1 comments:

bala said...

//தமிழினத்திற்கு எதிராக அரசியல் நடத்தும் ஜெயலலிதாவை வரலாறும், வருங்காலமும் மன்னிக்காது//

திராவிட முண்டம் கருப்பு சட்டை பொறிக்கி அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

ஆமாம்,வரலாறு,வருங்காலம் இரண்டும் முண்டம் சுமப்.வீரபாண்டியனை கேட்டுவிட்டு தான் யாரை மன்னிக்கவேண்டும்,யார் யாரை மன்னிக்கக் கூடாது என்று தீர்மானிக்கும் பாருங்க.என்ன ஒரு அகம்பாவம்?முதலில் இந்த மானமிகு முண்டம்,சும்பை.வீரபாண்டியன் முண்டம் மற்றும் இந்த மூஞ்சிகளின் அடிவருடி தமிழ் ஓவியா போன்ற முண்டங்களை இலங்கைக்கு நாடு கடத்தவேண்டும்.இல்லாவிட்டால் உலகம்,தமிழ்நாட்டை மன்னிக்காது.

பாலா