Search This Blog

29.10.08

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக 24 மணிநேர உறங்கா நிலைப் போராட்டம்




இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக

சுவிஸ் தமிழ் இளைஞர்கள்
நடத்திய 24 மணிநேர உறங்கா நிலைப் போராட்டம்


சுவீஸ், அக். 28- சுவிசில் உள்ள தமிழ் இளைஞர்கள் அமைப்பினர் நடத்திய 24 மணிநேர உறங்காநிலைப் போராட்டத்தில் 35-க்கும் அதிகமான இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். 24.10.2008 அன்று வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்குத் தொடங்கி மறுநாள் (சனிக்கிழமை) இரவு 7 மணிவரை இந்தப் போராட்டம் நடைபெற்றது.

வன்னியில் சிறீலங்கா படையினரது போர் முன்னெடுப்புகளினால் இடம்பெயர்ந்து அல்லலுறும் தமிழ் உறவுகளை நினைவுகூர்ந்தும் மற்றும் தமிழ்நாடு முழுவதும் மாணவச் சமுதாயத்தால் மேற்கொள்ளப்படும் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்திற்கு ஆதரவைத் தெரிவித்தும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

உறங்காநிலைப் போராட்டத்தின் தொடக்க நாளில் பங்கேற்ற இளையோர்களுக்கு எங்களையும் கொஞ்சம் பாருங்களேன் எனும் ஒளிப்பட நாடாவும் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தமிழ் இன உணர்வாளர்களின் உரையும் காண்பிக்கப்பட்டது. இளையோர்களின் பெற்றோர்களினது உணர்வு மிக்க கருத்துகளோடு உறங்கா நிலைப் போராட்டம் நிறைவுபெற்றது.

0 comments: