Search This Blog

13.10.08

மாட்டுச் சாணியை உருட்டி கொழுக்கட்டை ஆக்கி சாமியாக கும்பிடுகிறார்களே!!

வேடிக்கை வாதம்

சுயமரியாதைக்காரர்.:


மாட்டுச் சாணியை உருட்டி கொழுக்கட்டை போல் ஆக்கி சாமியாக வைத்துக் கும்பிடுகிறார்களே! இதன் காரணம் என்ன? அந்தச் சாணி நாற்ற மடிப்பதில்லை என்கின்ற காரணம்தானே?

பார்ப்பான்:

ஓய்! உமக்கென்னங்காணும் தெரியும்? பசுஞ்சாணியில் ஜர்ம்ஸ் (பூச்சி)களைக் கொல்லும் சக்தி இருக்கிறது ஓய்!

சு.ம.:

சு.ம:
இது எந்த டாக்டர் சொன்னார் உமக்கு? அல்லது இது எதிலிருக்கிறது?

பார்ப்பான்:
ஓய், ஓய், இந்தக் காலத்து டாக்டர்களையெல்லாம்விட, இந்தக் காலத்து சைன்ஸ் புத்தகங்களையெல்லாம்விட, அந்தக் காலத்து பெரியவாளும், சாஸ்திரங்களும் எவ்வளவோ மேலானது தெரியுமா? இதற்கெல்லாம் ஆதாரம் கேட்காதேயும். இப்படிக் கேட்டவர் வெகு பேருக்கு வாய் புழுத்துப் போய்விட்டது.

சு.ம:

ஓ! ஓ! அப்படியா? பகுத்தறிவில்லாத மாட்டுச் சாணிக்கே ஜர்ம்சைக் கொல்லுகிற சக்தி இருந்தால், அதைவிட உயர்ந்த பிறவியான பகுத்தறிவுள்ள மனுஷன் சாணிக்கு இன்னமும் என்ன என்னவோ சக்தி இருக்கலாமே; பின்னை அதை...

பார்ப்பான்:

சீச்சீ. நீர் என்ன? சுயமரியாதைக்காராக்கும், உம்மிடம் யார் பேசுவார்?

---------------'குடிஅரசு' 20.11.1943

0 comments: