Search This Blog

18.10.08

யோக்கியமான பார்ப்பனர் ஒருவராவது உண்டா?




வரப்போகும் சட்டசபைத் தேர்தலுக்குப் பார்ப்பனரல்லாதார்களுக்கு விரோதமாகப் பார்ப்பனர்கள் எல்லோரும் அதாவது, உத்தியோக பார்ப்பனர், வக்கீல் பார்ப்பனர், மிதவாதப் பார்ப்பனர், பஞ்சாங்கப் பார்ப்பனர், வாத்தியார் பார்ப்பனர், ஒத்துழையாமைப் பார்ப்பனர் ஆகிய எல்லோரும் ஒன்றுகூடி அவரவர்கள் தங்களுக்குள் எவ்வித அபிப்பிராய பேதமும் இல்லாமல், ஏதாவது கொஞ்சம் இருந்தாலும் அதை அடியோடு மறந்துவிட்டு ஒரேமாதிரி பிரசாரம் செய்து வருகிறார்கள் என்பதைப்பற்றி பலதடவை எழுதி இருக்கிறோம். உதாரணமாக உத்தியோகப் பார்ப்பனர்கள் விஷயமாய், சர்.சி.பி. அய்யர் அவர்கள் ஜினிவா மகாநாட்டுக்கு அனுப்பப்பட்டபோது 'இந்து', 'சுதேசமித்திரன்' ,'சுயராஜ்யா'முதலிய பார்ப்பனப் பத்திரிகைகள் இது சமயம் போகிறாரே என்று ஓலமிட்டதிலிருந்தே தெரிந்திருக்கலாம்.

மிதவாதப் பார்ப்பனர்கள் விஷயத்தில் மகா மகாகனம் சீனிவாச சாஸ்திரியார் "இந்திய ஊழிய சங்கம் வெந்து போனதற்காக பணம் சேர்க்கிறேன்" என்கிற பேரால் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கு சென்று பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைப் பற்றி வைது பேசுவதிலிருந்தே தெரியலாம். வக்கீல் பார்ப்பனர்கள் விஷயத்தில் "ஜமீன்தார் தொகுதிக்கு நிற்கிறேன்" என்ற பெயரை வைத்துக்கொண்டு பார்ப்பன ரல்லாதார் இயக்கத் தலைவரையே தோற்கடிக்க ஜமீன்தார்கள் இடம் பிரசாரம் செய்வதிலும் பணம் செலவு செய்வதிலுமே பார்க்கலாம். உபாத்தியாய பார்ப்பனர்கள் விஷயத்திலோ என்றால், உபாத்தியாயர்கள் ஆங்காங்கு 'உபாத்தியாயர்கள் மகாநாடு' ஒன்று கூட்டி அதற்குப் பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்கு விரோதிகளாயிருப்பவர்களையும் பார்ப்பனர்களையுமே அழைத்து தலைமை வகிக்கச் செய்து ஒவ்வொரு உபாத்தியாயரும் தேர்தல்களில் பார்ப்பனர்களுக்கே வேலை செய்யவேண்டும் என்று இரகசியத் தீர்மானங்கள் செய்துகொண்டு போவதிலிருந்தும் அவர்கள் அக்கூட்டங்களில் பேசுவதிலிருந்தும் தெரிந்துகொள்ளலாம்.

பஞ்சாங்கப் பார்ப்பனர்கள் என்கிற விஷயத்திலோ லோக குருக்கள், மகந்துகள், மடாதிபதி என்கிற ஆசாமிகள் பணம் கொடுப்பதிலிருந்தும் அவர்களது காரியஸ்தர்களுக்கும் முக்கிய சிஷ்யர்களுக்கும் ஊர் ஊர்களில் இருக்கும் ஆசாமிகளுக்கும் இரகசிய 'சிறீமுகங்கள்' அனுப்பும் விஷயத்திலிருந்தும் நன்றாய் அறிந்து கொள்ளலாம். ஒத்துழையாமைப் பார்ப்பனர் என்றும் யோக்கியமான பார்ப்பனர் என்றும் சொல்லிக் கொள்பவர்களிலோ இவற்றையெல்லாம் விட ஆபத்தாயிருக்கிறது. உதாரணமாக, மகாத்மா காந்தியின் சிஷ்ய கோடிகளின் சட்டாம்பிள்ளையாகிய தமிழ்நாட்டுக் காந்தி சிறீமான் சி.ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் அவர்களுடைய பார்ப்பன சிஷ்யர்களும் செய்துவரும் பிரசாரம் மற்றெல்லாவற்றையும் விட மீறினதாயிருக்கிறது. சிறீமான் ஆச்சாரியாரின் கோடு கட்டிய குறள்களும் 'கருப்பாயி, பாவாயி' சம்பாஷணைகளும் பொய்மான் வேட்டை, வியாசங்களும், 'கள்ளு நிறுத்தும் பிரசாரங்களும்' எவ்வளவு விஷமத் தன்மை பொருந்தியிருக்கிறது என்பதை நாம் விளக்கிக் காட்ட வேண்டியதில்லை.

சிறீமான்கள் சத்தியமூர்த்தி சாஸ்திரிகளும் எம்.கே. ஆச்சார்ய சுவாமிகளும் கலம் கலமாய் பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளுவதும் சரி, நமது ஆச்சாரியார் அவர்கள் இரண்டு வரி எழுதி கோடு கட்டுவதும் சரி, பத்து கல எழுத்தின் விஷம் இந்த இரண்டு வரி எழுத்தில் இருக்கும். உதாரணமாக,"நாட்டுக்கு நல்ல காலம் வந்து விட்டது. சுயராஜ்யக் கட்சியார் கள்ளை நிறுத்திவிட ஒப்புக் கொண்டார்கள். ஓடுங்கள், ஓடுங்கள் எல்லோரும் ஓடிப்போய் சுயராஜ்யக் கட்சிக்கு ஓட்டு செய்துவிட்டு வாருங்கள்" என்பது போல் எழுதிக் கொண்டிருந்தார். இவற்றையெல்லாம்விட ஒரு பெரிய விஷயம் இவரது குறள்களுக்கு மகாத்மாவின் மேலொப்பமும் வாங்கி விட்டார். பிறகு என்ன காரணத்தாலோ கொஞ்சகாலம் அஞ்சாத வாசமாய் இரகசிய பிரசாரத்திலிருந்தவர்கள் இப்போது மறுபடியும் தைரியமாய் வெளிப்பட்டு வெளிப்படையான பிரசாரத்திலிறங்கியிருக்கிறார். இறக்கினவர்தான் தனியாக ஊர் ஊராய்ப் போகாமல் கூட ஒரு பார்ப்பனரல்லாத பிரசாரகரையும் அழைத்துக் கொண்டுபோய் அவரை மனதாரப் பொய்யும் புளுகும் அளக்கச் செய்து இவர் பக்கத்திலிருந்து அந்த பொய்களை பாமர ஜனங்கள் நம்பும்படி செய்து கடைசியாக சுயராஜ்யக் கட்சிக்கு ஓட்டுச் செய்யுங்கள் என்று சொல்லி உறுதிப் படுத்திவிட்டு வருகிறார். சமீபத்தில் சேலம் ஜில்லா சுயராஜ்யக் கட்சி அபேட்சகருக்காக சேலத்திற்கு தானும் சிறீமான் கந்தசாமிப் பிள்ளை யுமாய் கூட்டம் கூட்டி அக்கூட்டத்தில் தான் பக்கத் துணையாய் இருந்து கொண்டு சிறீமான் கந்தசாமிப் பிள்ளை அவர்களை விட்டு ஜஸ்டிஸ் கட்சியின் பேரில் பொய்யும் புளுகும் சொல்லி வையும்படி செய்திருக்கிறார். அவற்றில் ஒரு புளுகு மலையாள மாப்பிள்ளை மூடு வண்டிக் கொடுமையைப் பற்றி சட்டசபையில் கேள்விகேட்டதில் ஜஸ்டிஸ் கட்சியார் மாப்பிள்ளைகளுக்கு விரோதமாய் கை தூக்கினார்கள் என்றும், ஜஸ்டிஸ் கட்சியார் உப்புவரியை இரட்டிக்க மன்றாடி போராடி உயர்த்தினார்கள் என்றும், பல தியாகிகளை வைதார்கள் என்றும், கள்ளுகளை ஒழிக்கவில்லை என்றும், கல்விக்கு ஒன்றும் செய்ய வில்லை என்றும் பேசச் செய்திருக்கிறார். உண்மையில் மலையாளக் கலவரத்தின் மூடுவண்டி சம்பவத்தைப் பற்றி கேள்வி கேட்டவர் ஒரு பார்ப்பனரல்லாதார் என்பதும் அதுவும் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பதும் அதிலும் ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகளின் உத்தியோகத் தோரணை காரியதரிசியான சிறீமான் ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் என்பதும் நமது ஆச்சாரியாருக்குத் தெரியும். உப்பு வரியை இரட்டிக்க மன்றாடிப் போராடினார்கள் என்பதும் அடியோடு பொய். உப்பு வரியை உயர்த்தவும் குறைக்கவும் சென்னை சட்டசபைக்கு அதிகாரமே இல்லை. அது சுயராஜ்யக் கட்சியாரும் சுயேச்சைக் கட்சியாரும் சேர்ந்து மெஜார்ட்டியாய் உட்கார்ந்திருந்த இந்தியா சட்டசபைக்குக் கட்டுப்பட்ட விஷயம்; அவர்களது அதிகாரத்திற்கு கட்டுப்பட்டது. இதுவும் நமது ஆச்சாரியாருக்குத் தெரியும். மந்திரிகள் கள்ளை ஒழிக்கவில்லை என்பதும் தப்பு, சட்டசபையின் மூலம் கள்ளை ஒழிக்க முடியாது என்று சிறீமான்கள் ஆச்சாரியாரும் சத்தியமூர்த்தியும் எத்தனையோ தடவை எழுதியும் பேசியும் இருக்கிறார்கள். மகாத்மா காந்தியும் சட்டசபை மூலம் கள்ளை ஒழிக்க முடியாதென்றே சொல்லியிருக்கிறார். அப்படியிருக்க, மந்திரிகள் கள்ளை ஒழிக்கவில்லையென்று சொல்வதில் எவ்வளவு புரட்சி இருக்கிறது. தவிர சிறீமான் தாஸ் முதலானவர்களை கிரிமினல் குற்றவாளிகள் என்று ஜஸ்டிஸ் கட்சியார் சொன்னார் என்று சொல்லுவதும் பெரும் பொய். சிறீமான் தாசைப் பற்றி அவர்கள் யாரும் கொலைக்காரர், திருடர் என்று சொல்லவே இல்லை. சிறீமான் சீனிவாசய்யங்காரைப் போலவே சிறீமான் தியாகராய செட்டியாருக்கும் ஒத்துழையாத்திட்டம் பிடிக்காததால் அத்திட்டத்தின் கீழ் போனவர்களை தனிமரியாதை கொடுத்து ஆதரிக்கக் கூடாது என்று சொன்னார். தேசபந்து தாசர் நாக்பூர் கொடி சத்தியாக்கிரகத்தில் ஜெயிலுக்குப் போனவர்கள்; கஞ்சிக்கில்லாத தத்தாரிகள் அவர்களை ஆதரிக்கக்கூடாது என்று தேசபந்து தாஸ் சொன்னார். அப்படி சொன்னவருடைய உருவத்தை சுதேசமித்திரன் ஆபீசில் வைக்கப்பட்டிருக்கிறது. இதைப்பற்றி சொல்லுவதற்கு ஆள்கள் நமது பார்ப்பனர்களுக்குக் கிடைப்பதில்லை.

தவிர, பார்ப்பனரல்லாதார் படிப்புக்கு ஜஸ்டிஸ் கட்சியார் யாதொரு கவலையும் எடுத்துக்கொள்ளவில்லையென்றும் சொல்லி யிருக்கிறார். இது மேற்கண்டவைகள் எல்லாவற்றையும்விட வேண்டுமென்றே மனதறிந்து சொல்லும் பெரிய பொய். கடவுள் என்று ஒருவர் இருப்பது உண்மையாயிருந்தால் இந்த வார்த்தைகள் சொல்லும் போதே சொன்னவர் கண்களையும் வாயையும் சொல்லச் செய்தவரின் கண்ணையும் குயுத்தியையும் உடனே பிடுங்கி இருப்பார் என்றே சொல்லவேண்டும். ஜஸ்டிஸ் மந்திரிகள் வந்த பிறகு நமது மாகாணத்தில் இலவசக் கல்வியும் கட்டாயக் கல்வியும் ஏற்பாடு செய்து அனேக இடங்களில் அமுலில் கொண்டு வந்திருக்கிறார்கள். 5 வயது முதல் 12 வயது வரை ஒவ்வொரு குழந்தையும் கண்டிப்பாய் படிக்க வைத்தாக வேண்டும். இல்லாவிட்டால் பெற்றோர்களுக்கு தண்டனை என்று சட்டமும் செய்திருக்கிறார்கள். அதன் மூலம் படிக்கும் லட்சக்கணக்கான பிள்ளைகளில் 100-க்கு 99 பேர் பார்ப்பனரல்லாதார். இதுவும் நமது ஆச்சாரியாருக்கு நன்றாய்த் தெரியும். இந்த மாதிரி "உயர்ந்த தத்துவமுள்ளவர்கள், பொதுவானவர்கள், உண்மையான தேசபக்தர்கள்" என்று சொல்லப்பட்ட கூட்டத்தைச் சேர்ந்த மேற்கண்ட பார்ப்பனர்களின் விஷமப் பிரசாரமே இப்படி இருந்தால் மற்ற சாதாரணப் பார்ப்பனர்களின் விஷமப் பிரசாரங்கள் எவ்வளவு பொய்யையும் புளுகையும் கொண்டிருக்கும் என்பதை வாசகர்களே யோசித்துப் பார்க்கட்டும்.

தவிர, சிறீமான் ஆச்சாரியார் பேசம்போது "சிறீமான் முனுசாமிக் கவுண்டர் எக்காரணம் பற்றியும் ஜஸ்டிஸ் கட்சியார் மாய வலையில் அகப்படமாட்டார்; காங்கிரஸ் கட்சியிலேயே இருப்பார்" என்று பொது ஜனங்களுக்கு ஜாமீன் கொடுத்திருக்கிறார். இதன் இரகசியம் என்ன? சிறீமான் முனுசாமிக் கவுண்டர் ஒரு சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டால் தங்கள் அடிமையாக இருக்கவேண்டுமென்று கவுண்டரிடம் உறுதிமொழி வாங்குவதுதானே. காங்கிரஸ் கட்டளைகள் என்ன அவ்வளவு யோக்கியமானது? காங்கிரசின் யோக்கியதையையும் நாணயத்தையும் பார்க்க ஒரே ஒரு உதாரணம் போதாதா? சட்டசபையை விட்டு எல்லோரும் வெளிக் கிளம்பினதும் மறுபடியும் உள்ளே நுழைந்ததும் யோசித்துப் பார்த்தால் சிறீமான் ஆச்சாரியார் போன்றவர்கள் கடுகளவாவது யோக்கியப் பொறுப்புள்ளவர்களாயிருப்பார்களானால் சுயராஜ்யக் கட்சி அபேட்சகருக்கு ஓட்டுப் போடும்படி சொல்ல மனம் வருமா?

சிறீமான் சர்.பி. தியாகராய செட்டியார் அவர்கள் ஒரு காலத்தில் "அரசியல் பார்ப்பனர்கள் எல்லாம் அயோக்கியர்கள் என்று சொன்னார்" என்று சமீபத்தில் டாக்டர் வரதராஜூலு நாயுடுகார் எழுதியிருந்தார். இதிலிருந்து சிறீமான் செட்டியாருக்காவது ஒரு வித தெளிவு இருந்ததாய் தெரிய வருகிறது. ஆனால் நமக்கு வேறு எந்த இயல் பார்ப்பனர்கள் தான் யோக்கியர் என்று சொல்ல முடியாமல் இருக்கிறது. ஆதலால் வரப்போகும் தேர்தல்களில் பார்ப்பனரல்லாத பொதுமக்கள் எந்தக் காரணம் கொண்டும் ஏமாந்து போய் பார்ப்பனருக்கு ஓட்டுச் செய்து தங்கள் சமூக முன்னேற்றத்திற்கே தடையும் அழிவையும் தேடிக் கொள்ளாமல் கண்டிப்பாய் பார்ப்பனரல்லாதாருக்கே ஓட்டுச் செய்து தங்கள் சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமாய்க் கோருகிறோம்.


------------------- தந்தைபெரியார் - "குடிஅரசு" 24.10.26

2 comments:

bala said...

திராவிட முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி தமிழ் ஓவியா அய்யா,

தமிழ் நாட்டு, கருப்பு சட்டை, வெறி பிடித்த பாசறை சொறி நாய்களில், ஒரு நாயாவது நல்ல நாயாக,இருக்கிறதா என்றால் இல்லையென்று தான் சொல்ல வேண்டும்.நாய்கள் தானே,பிரியாணிக்காக குலைக்கின்றன என்று ப்ளூ க்ராஸ் போல,சும்மா சொல்லி விட முடிகிறதா என்ன?சொறியோடு வெறியும் பிடித்து கூட்டம் கூட்டமா,கருப்பு யூனிஃபார்ம் போட்டு, வன்முறையல்லவா செய்கின்ற இந்த ஈனப் பிறவிகள்?சொல்லுங்கள்,திராவிட முண்டங்களே,கழிசடைகளே,கபோதிகளே,பொறிக்கிகளே, இந்த குற்றச்சாட்டு உண்மை தானே.

பாலா

தமிழ் ஓவியா said...

பார்ப்பானுக்குபைத்தியம் முற்றிவிட்டது என்பதற்கு ஒரு எடுத்துக்க்காட்டுத்தான் இந்த பார்ப்பானப்பொறுக்கி பாலா .

பைத்தியகாரனுக்கும், பார்ப்பானுக்கும் வேறுபாடு இல்லை. என்று நாம் சொல்லி வருவதற்கு சான்றாக இன்று வந்துள்ள செய்தியை உங்களின் பார்வைக்கு வைக்கிறோம்.


"

பைத்தியம் பிடிப்பது எப்படி என்பதுபற்றிய ஆய்வு
தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களிடம் நடத்தப்பட்டது

காரணமான மரபணு கண்டறியப்பட்டது

சென்னை, அக். 18- மனநோய்ப் பாதிப்பு எப்படி ஏற்படுகிறது, அதற்குக் காரணமான மரபணு எது? என்பதுபற்றிய ஆய்வு கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஸ்கார்ஃப் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் அமைப்பு இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளது.

இதற்காகத் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் 441 பேரிடம் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இவர்கள்தான் யாரிடமும் நெருங்காமல் ஒதுங்கித் தனித்து வாழும் இயல்பைக் கொண்டிருக்கிறார்கள் என்பதால், முதிய, வயதான பார்ப்பனர்களிடையே மட்டும் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது என்கிறார் இதன் இயக்குநரான மருத்துவர் தாரா ரங்கசாமி.

ஏற்கெனவே இதுபோன்ற ஆய்வு மங்கோலிய இனத்தைச் சேர்ந்த சீனர்கள், காகேசிய இனத்தைச் சேர்ந்த அய்ரோப்பியர்கள் ஆகியோரிடம் செய்யப்பட்டுள்ளது. சில அறிகுறிகள் தென்பட்டன என்றாலும், தமிழகப் பார்ப்பனர்களிடம் கிடைத்தவை குறிப்பிடத்தக்கவையாக அமைந்துள்ளன. உலக மக்களில் ஒரு விழுக்காட்டினர்க்கு மனநோய்ப் பாதிப்பு உள்ளது. இளம் வயதில் உள்ளோர்க்கு இப்பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கான மரபணு 1 என்பதுபற்றி ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவைபற்றி விரிவான ஆய்வுகள் மற்ற இனத்தவரிடமும் மேற்கொள்ளப்படுமாம்.

மக்களுக்குப் பைத்தியம் பிடித்தால் வீட்டில் இருப்பதை வீதியில் எறிவார்கள்; பார்ப்பனர்களுக்குப் பைத்தியம் பிடித்தால், வீதியில் இருப்பதை வீட்டுக்குள் எடுத்துப் போடுவார்கள் என்று பெரியார் பார்ப்பனர்களில் உள்ள பைத்தியங்களைப்பற்றிக் கூறுவார். மனநோய் மருத்துவமனையில் கூடப் பார்ப்பனப் பைத்தியங்களுக்குத் தனி வார்டு இருந்தது என்பது வரலாறு. இப்போது, பைத்தியம் பிடிக்கக் காரணம் எது என்பதைப் பார்ப்பனர்களிடையே மட்டும் ஆய்வு செய்திருக்கிறார்கள் என்கிறது செய்தி!

இதிலும்கூட "அவாள்" தனித்தன்மை பெற்றவர்கள்தான் போலிருக்கிறது."

----------"விடுதலை" 18-10-2008 பக்கம் -3