Search This Blog

29.10.08

ஜெய் சிறீ ராம் எனக் கத்திக் கொண்டு தெருக்களில் கும்பலாக ஓடிவரும் கூலிப்படைகள்




வெறுப்பே வரலாறாய்....


கத்திகள், துப்பாக்கிகள், மண்ணெண்ணெய் டின்கள் முதலியவற்றைத் தூக்கிக் கொண்டு ஜெய் சிறீ ராம் எனக் கத்திக் கொண்டு தெருக்களில் கும்பலாக ஓடிவரும் கூலிப்படைகள் அடுத்த மதக்காரர்களை அடித்துக் கொல்வதைப் பார்க்கிறோம். ஏதோ, பழங்கால படைவீரர்களைப் போல இவர்கள் நடமாடுகிறார்கள்.

மதவெறுப்பு என்பது சமீபகாலங்களில் நாடு முழுவதும் ஏற்பட்டு வருகிறது. காலித்தனங்களில் ஈடுபடும் குண்டர்களுக்கு இது மத நம்பிக்கையின்பாற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றையெல்லாம் இந்தக் காலிகள் எங்கே கற்கிறார்கள்? நம் கல்வி முறையின் கோளாறாக இருக்கலாம். அல்லது கல்வி அறிவற்ற தன்மையால் இருக்கலாம். பள்ளிகளில் உள்ள வரலாறு பாடப்புத்தகங்கள் முழுக்கவும் புராணத்தையும் வரலாற்றையும் கலந்து அளிப்பதால் வேறுபாடு காண முடியாத நிலையில் நம் மாணவர்கள் உள்ளனர். பள்ளிக்கூட ஆசிரியர்களே வரலாறு எனப் புராணக் கதைகளை அள்ளி விடுகிறார்கள். மெய்யான வரலாற்றை கதை என்று கூறிவிடுகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ். மேற்கு டில்லியில் நடத்தும் சரசுவதி சிசுமந்திர் ஒன்றில் சண்டே டைம்ஸ் (ஏடு) ஆய்வு நடத்தியது. இந்துக்களுக்கும் இசுலாமியர்களுக்கும் இடையே நடந்த சண்டைதான் வரலாறு என்றுதான் அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். தெற்கு டில்லியில் உள்ள சரசுவதி பாலமந்திரில் படிக்கும் மாணவர் களிடையே சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தபோது, இந்தியாதான் உலகிலேயே பழமையான நாகரிகத்தையும் கலாச் சாரத்தையும் கொண்டது என்றுதான் அவர்களுக்கு கூறப்பட்டுள்ளது.

அதேபோல டில்லியின் ஒக்லா பகுதியில் உள்ள (இசுலாமிய) மதரசாவில் படிக்கும் சிறார்கள் அசோகர் புத்தர், சந்திரகுப்தர் என்கிற பெயர்களைப் பற்றியே தெரியாமல் உள்ளனர். 1000-க்கும் மேற்பட்ட டில்லி மதரசாக்களில் இதுதான் நிலை. இந்த மாணவர்கள், கல்லூரிகளுக்குச் சென்று கணினி அறிவியல், இயற்பியல், இங்கிலீஷ் படித்தாலும் வரலாற்றைப் பொறுத்தமட்டில் அதே நிலைதான். இந்திய வரலாற்றின் முக்கிய சம்பவங்கள் குறித்தும் கூட ஒன்றும் தெரியாத நிலைதான்.

நேரு நகரிலுள்ள சரசுவதி பால மந்திரில் மத்திய அரசின் பாடப்புத்தகங்கள் சொல்லித் தரப்படுகின்றன. பள்ளிக்கூட முதல்வரின் அறையில் பாரத மாதா படமும், கோதண்டராமன் படமும் இருக்கின்றன. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கே கூட, ராமன் என்பது சரித்திர புருஷன் என்றே கற்பிக்கப்பட்டுள்ளது. அசோகரின் அகிம்சைக் கொள்கையைப் பற்றிக் கண்டித்துத்தான் பாடம் நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கோழைகளை உருவாக்கும் கொள்கை என்றே கற்பிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஜெர்மனி சர்வாதிகாரி இட்லரை அவருடைய நாட்டுப்பற்றுக்காகப் போற்றிப் புகழ்கிறது. முசுலிம்களை இந்த நாட்டின்மீது படையெடுத்து வந்தவர்கள் எனக் கற்பிக்கப்பட்டுள்ளது. அதைவிட ஒன்று, ஈரானிலும், சீனாவிலும் முதன் முதலில் குடியே றியவர்கள் இந்தியச் சத்திரியர்கள் என்றுதான் கற்பிக்கப்பட்டுள்ளது!

சேது சமுத்திரக் கால்வாய்பற்றி ஒன்றுமே தெரியாத 12 ஆம் வகுப்பு மாணவன், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ராமன் பாலம் கட்டினான் என்கிறான். ராமன் சரித்திர மனிதன் என்பதற்கு அயோத்யா கோயில்தான் ஆதாரம் என்கிறான். ராம சரித மானஸ் தவிர வேறு என்ன ஆதாரம் கேட்கிறீர்கள் - ராமன் வாழ்ந்தான் என்பதற்கு? எனக் கேட்கிறார் ஆசிரியராக இருக்கும் ஒருவர். வித்யபாரதி எனும் அமைப்பால் இந்தியா முழுமைக்கும் நடத்தப்படும் 30 ஆயிரம் பள்ளிகளிலும் இந்த மாதிரியான உண்மைகள்தான் சொல்லித் தரப்படுகின்றன. இது ஆர்.எஸ்.எஸ்.ஸின் கல்வித் திட்டத் தலைமைப்பள்ளி. இந்த உண்மைகளை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் 30 லட்சம் மாணவ - மாணவியர்க்கு இந்தக் கல்விக் கோயில்களின் மூலமாக கற்பித்து வருகின்றனர்.

உயர் கல்வியின் முக்கியத்துவம்பற்றி நேரு பண்டிதரின் காலத்தில் உணரப்பட்டு உயர் கல்வி நிலையங்கள் அமைக்கப்பட்டன. அய்.அய்.டி. அய்.அய்.எம். போன்ற நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன. தர்மா மாஜேப் எனும் (இந்து, முசுலிம் சொற்கள்) சொற்கள் மிகவும் ஆபத்தானவை என்றும் அவை கல்விக் கூடங்களை நெருங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்றும் நேரு கூறினார். தொடக்கக் கல்வியின் நேர்மை அவர் காலத்தில் உணரப்படவில்லை. இப்போது நிலைமை மோசமடைந்து விட்டது. வெறுப்பும் வரலாறும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையன. ஒவ்வொரு முறை வரலாறு திரும்பும்போதும், வெறுப்பின் அளவு கூடிக்கொண்டே போகிறது.

---------------- நன்றி: ஷோபன் சக்சேனா
" டைம்ஸ் ஆப் இந்தியா" - 27-10-2008

0 comments: