Search This Blog

21.10.08

600 கோடி பகுத்தறி வாளர்களும், பெரியாரை நோக்கி வர வேண்டும்.- சத்யராஜ்



சென்னை, அக். 20- நான் போகாத கோயில் இல்லை, கும்பிடாத சாமி இல்லை. எல்லா மதக்கடவுளையும் கும்பிட்டேன். எந்த சாமியும் என் தலையில் முடிவளர வைக்கவில்லை என்று பிரபல திரைப்பட நடிகர் சத்யாஜ் சென்னை - பெரியார் திடலில் கூறி விளக்கவுரையாற்றினார்.

சென்னை - பெரியார் திடலில் செப்டம்பர் 7 அன்று நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக மாநாட்டில் நாத்திக நன்னெறிச் செம்மல் இனமுரசு நடிகர் சத்யாஜ் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

எனக்கு இரண்டு ஆசிரியர்கள்

மேடையிலும், மேடைக்கு முன்பாகவும் அமர்ந்திருக்கின்ற தந்தை பெரியாரின் தொண்டர்களுக்கு என்னு டைய பணிவன்பான வணக் கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என்னை அறிமுகப் படுத்திய தோழர் ஒருவர் சொன்ன பொழுது, நான் தந்தைபெரியாராக சிறப்பாக நடித்தேன் என்று சொன்னார்.

பொதுவாக ஒரு மாண வருக்கு ஒரு ஆசிரியர் அமைந்தாலே சிறப்பாக செய்தி போட்டுவிடுவான். ஆனால் எனக்கு இந்த பெரியார் படத் தில் நடிக்கும்பொழுது இரண்டு ஆசிரியர்கள் கிடைத் தார்கள் (பலத்த கைதட்டல்).

தந்தை பெரியார் அவர்கள் பொதுக்கூட்டத்தில் பேசும் பொழுது வயிற்று வலியால் துடித்த காட்சியைப் பட மாக்கவேண்டும். பெரியார் எப்படி வலியால் துடித்தார் என்ற காட்சி எனக்குத் தெரி யாது. அதைப்பற்றி நான் தெரிந்துகொள்ள நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்களிடம் கேட்டேன்.

ஆசிரியர் நடித்துக் காட்டியபொழுது அழுதுவிட்டார்

இதைத் தெரிந்துகொள்வதற்கு எதற்குங்க இன்னொ ருத்தர். நானே நடித்துக் காட்டுகிறேன் என்று சொல்லி, அதை நடித்துக்காட்டும் பொழுது அப்படியே அழுது விட்டார் ஆசிரியர் அவர்கள். (கைதட்டல்) அது மாத்திரமல்ல, அந்த ஷூட்டிங் ஸ்பாட் டில் இருந்த எல்லாருமே அழுதுவிட்டோம்.

முதல்வர் கலைஞர் நடித்துக்காட்டினார்

அந்த அளவுக்கு அவருக்கு அய்யாமீது ஈடுபாடு. அதற்குப் பிறகு நமது தமிழக முதல மைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களைப் பார்க்கச் சென் றோம். 1967-ல் முதல் தடவையாக திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து, பேரறிஞர் அண்ணா அவர்களும், நாவலர் அவர்களும், பேரா சிரியர் அவர்களும், டாக்டர் கலைஞர் அவர்களும், திருச்சிக்குச் சென்று அய்யா அவர்களைப் பார்த்தபொழுது அய்யா அவர்கள் எப்படி வரவேற்றார்? எப்படி பேசினார்? என்பதை முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் அப்படியே நடித்திக்காட்டினார்கள்.
இந்த இரண்டு பேருடைய நடிப்பைப் புரிந்து கொண்டு நான் நடித்துவிட்டேன் (கைத்தட்டல்). அதனால் இந்த பெரியார் படத்தில் நடித்ததற்கு எவ்வளவு சிறப்புகள் கிடைத்தாலும் அது தமிழர் தலைவரையும், தமிழினத்தலைவரையுமே அந்தப் பெருமை சாரும் (கைதட்டல்).

600 கோடி பெரியார் தொண்டர்களுக்கு நன்றி

நான் பொதுவாக இங்கு வந்திருக்கின்ற பெரியார் தொண்டர்களுக்கு வணக்கம், நன்றி என்று சொன்னேன். பெரியார் திடலில் இருக்கின்ற பெரியார் தொண்டர்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் இருக்கின்ற 600 கோடி பெரியார் தொண்டர்களுக்கும் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன் (பலத்த கைதட்டல்).

600 கோடிபேரும் பெரியாரின் கொள்கையால் பின்பற்றுகின்ற பகுத்தறிவாளர்கள். எவன் ஒருவன் தலைவலி வந்தவுடன் ஒரு மாத்திரையை எடுத்து வாயில் போட்டானோ அவனுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை (பலத்த கைதட்டல்). இங்கு மண்டபத்தில் உட் கார்ந்திருக்கின்ற கருப்புச் சட்டை போட்ட நாமெல்லாம் ரொம்ப சாதாரணமான பெரியார் தொண்டர்கள். நம்மைவிட பெரியார் தொண்டர்கள்

இன்று பெரியார் கொள்கையை யார் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால், இன்றைக்கு பிள்ளையார் சிலையை கடலில் கொண்டு போய் போட்டு கரைக்கிறார்கள் - பாருங்கள். அவர்கள்தான் நம் எல்லோரையும் விட பெரிய பெரியார் தொண்டர்கள். நாமெல்லாம் அவர்கள் முன்னாலே கைகட்டி நிற்க வேண்டும் (கைதட்டல்). அய்யா எதற்காக பிள்ளையார் சிலையை வாங்கிப் போட்டு உடைத்தார்? அதற்கு எந்த சக்தியும் இல்லை.

பிள்ளையாரை உடைத்துப் பார்

அது ஒரு பொம்மைதான். நீ வேண்டுமானால், உடைத்துப் பார். அது திரும்ப ஒன்றுமே செய்யாது என்று நிரூபிப்பதற் காகத்தான் பிள்ளையாரை உடைத்தார். நாம் அதையெல்லாம் செய்யாமல் உட்கார்ந்திருக்கின்றோம். நாம் உடைத்த பிள்ளையாரைக்கூட ஒட்ட வைத்து விடலாம். அந்த பிள்ளையாரைக் கொண்டுபோய் கடலில் போட்டுவிட்டால் ஒன்றுமே செய்ய முடியாது.

பெரியார் சிலையை கடலில் கரைக்கும் பொழுது கிரேனை வைத்துத் தூக்குகிறார்கள். அந்தக் கிரேனை வெள்ளைக்காரன் கண்டுபிடித்தது.

அங்கே மத நல்லிணக்கம்

அவன் வேறு மதத்தைச் சார்ந்தவன். இப்படி ஒரு அந்த நிகழ்ச்சியிலே மத நல்லிணக்கம் நடந்துகொண்டிருக்கின்றது. அதற்கெல்லாம் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொண்டு நிகழ்ச்சியை நான் ஆரம்பிக்கின்றேன் (கைதட்டல்). 600 கோடி பேரும் பகுத்தறிவாளர்கள் என்று சொல்லுவதற்கு இது ஒன்று தான் காரணம்.

இளைஞர்களிடையே ஒரு மோகம்

இன்றைக்கு இளைஞர்களிடையே ஒரு மிகப்பெரிய மோகம். இருக்கிறது. ஜிம்முக்குப் போய் உடம்பைத் தேறச்செய்து கட்டுடலாக்க வேண்டு மென்று கடவுள் நம்பிக்கை உள்ள இளைஞர்களுக்கு ஒரு டெஸ்ட்டு வைக்க விரும்புகிறேன்.

வெளிநாட்டில் இருக்கிற இரண்டு வெள்ளை எலியைப் பிடித்து ஒரு எலிக்கு ஒரு மருந்தை கொடுப்பான், இன்னொரு எலிக்கு அந்த மருந்தை கொடுக்காமல் விட்டுவிடுவான். அது மாதிரி நான் எல்லோரிடமும் சொல்லுகின்றேன்.

நீ ஒரு காரியம் செய்தால்தான் முடியும் உடலில் கட்டுடலான தசைகள் வேண்டுமென்று நினைக்கின்ற ஒருவன் ஜிம்முக்கே போகாமல் தினமும் கோயிலுக்குப் போய்விட்டு வாருங்கள் - பிறந்ததிலிருந்து.

இன்னொருவர் கோவிலுக்கே போகாமல் தினமும் ஜிம்முக்குப் போய் எக் சசைஸ் செய்யுங்கள். யாருக்கு கட்டுடல் வருகிறது என்று பாருங்கள் (கைதட்டல்). இதிலிருந்து நீ இறங்கிவந்து ஒரு காரியம் செய்தால் மட்டும் தான் முன்னேற முடியும் (கை தட்டல்).

நீ படித்தால்தான் பாஸ் பண்ணமுடியும்

நீ படித்தால்தான் பாஸ் பண்ண முடியும். நீ எக்சசைஸ் பண்ணினால்தான் மசில்ஸ் வரும் (கைதட்டல்). நீ மாத்திரை சாப்பிட்டால்தான் தலைவலி போகுமே ஒழிய இந்தக் கடவுள் என்ற கற்பனையினாலே எதுவுமே நடக்காது. அதை என் வாழ்க்கையிலேயே நான் பார்த்துவிட்டேன்.

எனக்குத் தலையில் முடி கொட்ட ஆரம்பித்தவுடன்

எனக்குத் தலையிலே முடி கொட்ட ஆரம்பித்தவுடனே (பலத்த கைதட்டல் - சிரிப்பு) நான் போகாத கோயில் இல்லை, குளம் இல்லை. எல்லா மதத்தைச் சார்ந்த கோவிலுக்கும் போனேன். சாமி! சாமி! தலைக்குமேலே எப்படியாவது முடியை வளர வை என்று சொல்லி நான் உலகத்தில் உள்ள எல்லா கோவிலுக்கும் சென்று விட்டு வந்துவிட்டேன். ஒரு சாமியும் நான் சொன்னப் பேச்சைக் கேட்கவில்லை. தலைக்குமேலே முடி வளர வில்லை. அப்பொழுது கருப்புச் சட்டைப்போட்ட தொண்டர் ஒருவர் வந்து என்ன பிரச்சினைங்க என்று கேட்டார். இல்லீங்க, தலையில் முடி கொட்டியதுங்க என்று சொன்னேன். அவர் கேட்டார் - நீங்கள் என்ன தொழில் பண்ணுகிறீர்கள் என்று. நான் சினிமாவிலே நடிக்கிறேன் என்று சொன்னேன்.

முடியில்லை என்பதற்காக ஏன் வருத்தப்படுகிறீர்கள்?

சினிமாவில் டோப்பாவை வாங்கிவைத்துக் கொள்ளலாமே, தலையில் முடியில்லை என்பதற்காக ஏன் வருத்தப் படுகிறீர்கள் நான் ஒரு சாமியிடம் அழைத்துக் கொண்டு போகின்றேன். அந்த சாமி தலைக்கு மேலே முடியை வளர வைக்குமோ? என்று தெரியவில்லை.

தலைக்கு உள்ளே இருக்கிற மூளையை வளரவைக்கும் (கைதட்டல்), அப்படின்னு சொல்லி ஒரு சாமிக்கிட்டே அழைத்துக் கொண்டு போனார். அந்த சாமிதான் தந்தை பெரியார் என்ற ஈ.வெ. ராமசாமி (பலத்த கைதட்டல்) பெரியாருடைய புத்தகங்களைப் படித்தேன்
அந்த உருவத்தைக் கும்பிடவில்லை. கும்பிட வேண்டிய அவசியமில்லை. அவர் சொன்ன விசயங்களையும், அவருடைய தத்துவங்களையும், அவருடைய புத்தகங்களையும் படித்தேன். தலைக்கு மேலே வளருதோ இல்லையோ தலைக்கு உள்ளே வளர்ந்து விட்டது (கைதட்டல்) .

ஆகையினாலே மதிப்பிற்குரிய மாண்புமிகு அமைச்சர் அவர்களாகட்டும், மற்று முள்ள தொண்டர்களாகட்டும், நாம் எல்லோருமே தலைக்கு உள்ளே இருப்பதை நம்பி வாழ்கிறவர்கள். தலைக்கு வெளியே இருப்பதை நம்பி வாழ்கிறவர்கள் இல்லை (கைதட்டல்).
எல்லா மதத்தைச் சேர்ந்த மதத்தலைவர்களுக்கும் சவால் விடுகிறேன் - என் சார்பிலும் அமைச்சர் சார்பிலும் நீங்கள் கூப்பிடுகின்ற எந்த கோவிலுக்கு வேண்டுமானாலும் வருகின்றோம். எந்த சாமியிலும் வேண்டுமானாலும் வருகின்றோம்

எங்கத் தலையில் மட்டும் முடியை முளைக்க வைத்து விட்டீர்களேயானால், நாங்கள் ஒத்துக் கொள்கின்றோம். (பலத்த கைதட்டல்). அமைச்சர் அவர்களுக்கு நான் இரண்டு, மூன்று விசயங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். ஒரு விஷயத்துக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். முதலில் நன்றி!

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்

தமிழ்நாட்டில் வாழும் ஒரு தமிழன் என்ற முறையில் தமிழனுக்கெல்லாம் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுப்பதற்கு டாக்டர் கலைஞர் உறுதுணையாக இருந்தாரே, தம்பி உடையான் படைக்கஞ்சான் என்று சொல்லுவார்கள். இப்படிப்பட்ட ஒரு தம்பியை உடைய டாக்டர் கலைஞர் அவர்கள் எந்தவித மான தமிழர்களுக்கு செய்யும் நன்மைகளுக்கும் அவர் அஞ்ச மாட்டார். ஏனென்றால் இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த பொழுதே, இது எப்படி சாத்தியப்படும் என்று நினைத்தேன் ஆனால், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுத்திருக்கிறார் என்றால் இப்படிப்பட்ட தம்பிகள் இருப்பதனால்தான் அதற்கு அவருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் (கைதட்டல்). அடுத்த நன்றி அநேகமாக அவரைவிட வயதில் நான் பெரியவனாகத்தான் இருப்பேன். ஆசிரியரை அண்ணன் வீரமணி அவர்கள் என்று சொல்லியிருக்கின்றார். என்னை மட்டும் சகோதரர் சத்யராஜ் - அதாவது எதற்கு அண்ணன் என்று சொல்லி, தம்பி என்று சொல்லி என்று சொன்னாரல்லவா அதற்காக என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.




ஆசிரியர் அவர்கள் சொன்னதுகூட செவிக்கு உணவு இல்லாத பொழுது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்று கேள்விப்பட்டிருக்கின்றோம். அவர் செவிக்கும் உணவு கொடுத்துவிட்டார். வயிற்றுக்கும் உணவு கொடுத்து விட்டார்.

அமைச்சர் - கலைவாணர் பாடலைப் பாடினார்

அருமையாக கலைவாணர் அவர்களுடைய பாடலையும் பாடி இன்றைக்கு இந்த மேடையை ஒரு கலகலப்பாக்கியவர் உணவுத்துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்கள்தான். அவர் புத்தகம் வாங்கியவுடனே டக்கென்று ஒரு 500 ரூபாயை எடுத்துக் கொடுத்துவிட்டார் (கைதட் டல்).
எனக்கு ஒரு சின்ன சந்தேகம். நமது பாக்கெட்டில் பணம் இருக்கிறதா? இல்லையா? என்று! (சிரிப்பு - கை தட்டல்). ஏனென்றால் தந்தை பெரியார் அவர்கள் பெண்ணடிமைத்தனம் ஒழிய வேண்டும் என்று பாடுபட்டவர்.

எங்கள் வீட்டில் ஆணடிமைத்தனம்

எங்கள் வீட்டில் கொஞ்சம் ஓவராக பாடுபட்டதில் பெண்ணடிமைத்தனம் ஒழிந்து, ஆண் அடிமைத்தனம் வந்துவிட்டது (சிரிப்பு - கைதட்டல்) ஏன் என்றால் என் பாக்கெட்டில் எவ்வளவு பணம் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது என்னுடைய துணை வியார்தான். வேறு பேண்ட் சட்டைப் போட்டால் பரவாயில்லைங்க, தினம் ஒரு பேண்ட், சட்டை மாறும்.

பாக்கெட்டில் பணம் இருக்கிறதா?

பாக்கெட்டில் பணம் இருக்கிறதா என்று செக் பண்ணிக் கொள்வார்கள். இந்த ஜீன்ஸ் பேண்ட் இருக்கிறதே இது அழுக்குத் தெரியாமல் இருப்பதற்காக, கசங்கினால் தெரியாமல் இருப்பதற்காகப் போடுவது, கிட்டத்தட்ட மூன்று நாட்களாக இந்த ஜீன்ஸ் பேண்ட்டைத்தான் போட்டுக் கொண்டிருக்கின்றேன் (பலத்த கைதட்டல்).

அதனாலே பாக்கெட்டுக்குள் என்ன பணம் இருக்கிறது என்று தெரியவில்லை (பலத்த கைதட்டல்). நல்ல வேளை கையைவிட்டு பார்த்தேன். ஒரு அய்ந்நூறு ரூபாய் இருந்தது. கொடுத்துவிட்டேன் (கைதட் டல்). இப்படி இவ்வளவு சிறப்பாக அமைச்சருடைய பேச்சைக் கேட்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தமைக்கு ரொம்ப நன்றியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சாமி-யார்?

நான் சொல்லிவிட்டேன், உலகத்திலுள்ள ஒட்டுமொத்தமான பெரியாரின் தொண்டர்கள்தான் என்று சொல்லி விட்டேன். ஏனென்றால் முதன் முதல் சாமி யார் என்று கேட்டது நம்ம சாமியார் பயல்கள்தான். நம்ம சாமியார்களுக்கு ஏன்? சாமியார் என்று பெயர் வந்ததென்றால் இவன் தான் சாமி -யார்? என்று கேட்டதினால்தான் சாமியார் என்று பெயர் வந்தது.
அவன் சாமியார், சாமியார் என்று தேடித் தேடிப் பார்த்தவுடனே சாமி என்று ஒன்று இல்லை என்பதைக் கண்டுபிடித்து, நானே சாமி என்று சொல்லிவிட்டேன் (கைதட்டல்)

கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றேன்

அதைத்தான் அகம் பிரம்மா ஸ்மி என்பது, அடல் ஹக் என்பது ஏதோ பெயரை வைத்துச் சொல்லி நான்தான் சாமி என்று சொல்லிவிட்டான். ஆக முழு நாத்திகர் யார் என்றால் சாமியார்தான். வாயி லிருந்து லிங்கம் எடுக்கின்றான். இதை செய்கின்றான், அதை செய்கின்றான் என்று சொல்லுவார்கள்.

இலட்சக்கணக்கா, கோடிக் கணக்கான பணம் சம்பாதிக்கின்றான். சம்பாதித்தவுடனே முதல் வேலை என்ன செய்கின்றான்? பள்ளிக்கூடம் கட்டுகின்றான். ஆஸ்பத்திரி கட்டுகின்றான். ஏனென்றால் அவனுக்குத் தெரிந்திருக்கிறது. படித்தால்தான் புத்திவரும் என்று தெரிகிறது. பொதுவாக ஒருவரைப் பார்க்கும்பொழுது என்ன பாஸ்? என்ன தலைவரே என்று சொல்லுகின்றோம்.

நடிகர் திலகம் சொல்லுவார்

நானும், தம்பி பிரபுவும் கூட ஒருவரை ஒருவர் தலைவரே, தலைவரே என்று கூறிக் கொள்வோம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கூட கிண்டல் செய்வார். ஏண்டா உங்களுக்கெல்லாம் தொண்டனே இல்லாமல் நீங்களே ஒருவருக்கு ஒருவர் தலைவரே என்று கூறிக் கொள்கிறீர்களா? என்று கேட்பார். அந்த மாதிரி ஏதோ பேருக்குக் கூப்பிடுகின்ற வார்த் தைகள் உண்மையாக ஆகாமல் இருக்கின்ற காலகட்டத்தில் ஆசிரியர் என்கிற ஒரு வார்த்தைக்கு முழு உதாரண மாக வாழ்ந்து கொண்டிருப்பவர் நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள்தான் (பலத்த கைதட்டல்).

எனக்கு சினிமாவில் நடிக்க சான்ஸ் போய் விட்டது என்று வைத்துக் கொள்ளுங்களேன் எனக்கு பிழைப்பதற்கு வேறொன்றும் வேண்டாம்.

உண்மை பத்திரிகை

உண்மை பத்திரிகை ஒன்று இருந்தால்போதும். இதை கரெக்டாகப் படித்துவிட்டேன் என்றால் எந்த ஊருக்கும் போய் பெரியஅளவிலே சாக் ரட்டீஸ், பெர்னாட்ஷாவுக்கு அடுத்தப்படியாக சத்யராஜ் தான் என்று பெயர் வாங்கிவிட முடியும் (கைதட்டல்). அந்த அளவுக்கு இதில் விசயமிருக்கிறது. அதாவது இந்த இதழின் தலையங்கமே அமெரிக்காவைப் பார்த்தாவது இந்தியா தன் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது.

சீனாவில் அமெரிக்கர் பிரச்சினைக்காக

சீனாவில் அமெரிக்கர்கள் ஒரு பிரச்சினைக்காக கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்தப் பிரச்சினையை ஈழத் தமிழர்களுடைய பிரச்சினை யோடு ஒப்பிட்டு தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் மட்டுமல்ல, உலகமெங்கும் உள்ள மனித உரிமை, மனித நேயம் இவற் றின்மீது அக்கறை கொண்டுள்ள மக்களின் மத்தியில் இந்தக் கேள்வி எழுந்திருக்கிறது.

இந்தியா - அமெரிக்காவைப் பார்த்தாவது

இதுவரை இந்தியா தன் கடமையைச் செய்யத் தவறியிருந்தாலும், அமெரிக்காவைப் பார்த்தாவது அணுகுமுறையை. - செயல்பாட்டை மாற்றிக் கொண்டு தமிழ் ஈழ மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துகி றோம் என்று உண்மை இதழில் எழுதப்பட்டிருக்கின்றது (பலத்த கைதட்டல்).

அமெரிக்கர்களுக்காக அமெரிக்கா குரல் கொடுத்திருக்கிறது

சீனாவில் அமெரிக்க மக்களுக்கு நடந்த கொடுமைக்கு எதிராக அமெரிக்கா குரல் கொடுத்திருக்கிறது. ஆனால் 30 மைல் தொலைவில் உள்ள தமிழர்களை இந்தியாவின் தென்பகுதியில் வாழும் தமிழர்களின் தொப்புள்கொடி உறவையே நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இலங் கையில் உள்ள அரசு பேரின வாதக் கண்ணோட்டத்தோடு தினந்தோறும் தமிழர்களை கொன்று குவித்துக் கொண்டு வருகின்றது.

நம்முடைய ஆசிரியர் போராடிக்கொண்டு வருகின்றார்

அதைத் தட்டிக் கேட்க, தடுத்து நிறுத்த போதிய முயற்சியும் அக்கறையும் காட்ட வில்லையே, ஏன்? என்பதை அமெரிக்காவும் சீனாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியை முன்னு தாரணமாக வைத்து தமிழர் தலைவர் அவர்கள் போராடியிருக்கின்றார்கள்.
நம்முடைய நாட்டுத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, ஈழத் தமிழர்களுக்காகவும் சேர்த்து போராடிக் கொண்டு வருகின்றார்.

இன்றைக்கு முக்கியமான போராட்டமே ஈழ விடுதலை போராட்டம்தான். அதற்கு அருமையான உதாரணத்தைக் கொடுத்து ஆசிரியர் என்ற அந்தப் பட்டத்திற்கு முழுத் தகுதியாவார்.

பெரியாரின் தொண்டர் என்பதற்கு முழுத்தகுதியானவர்

பெரியாரின் தொண்டர் என்று சொல்லுவதற்கு முழுத்தகுதியானவர் (கைதட்டல்). நமது வீரமணி அய்யா அவர்கள் என்பதை உண்மையில் வெளிவந்த அந்த ஒரு தலையங்கத்தின் மூலமாக நிரூபித் திருக்கின்றார்.

இங்கு பேசும்பொழுது கூட சொன்னார்கள். பெரியார் பிஞ்சுகள் இன்றைக்கு நிகழ்த்திக் காட்டிய அந்த அற்புதங்கள் - இது அதிசயங்கள் அல்ல, அறிவியல் என்று நிரூபித்துக் காட்டினார்களே, இது ஒவ்வொரு கல்லூரியிலும் இடம் பெறவேண்டும்.

மற்ற கல்லூரிகள் முன் வர வேண்டும்

நமது கல்லூரிக்குள் மட்டுமே பண்ணிக் கொண்டிருந்தால் அது நமக்கு மட்டுமே போய்ச் சேர்ந்து கொண்டிருக்கும். அப்படி இல்லாமல் சாதாரண கல்லூரிகளிலும் இது மாதிரி அறிவியல் நிகழ்ச்சி நடத்துவதற்கு அந்தக் கல்லூரிகள் முன் வரவேண்டும், உதவி செய்யவேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.

எனக்கு ஒரு சின்ன குறை இருந்தது. தந்தை பெரியார் பேசிய பேச்சுகளை, வசனங்களை பெரியார் படத்தில் பேசி நடித்துவிட்டேன். அது என் வாழ்க்கையில் கிடைத்த மிகப் பெரிய பேறு.

கலைஞர் வசனத்தை இரு படத்தில் பேசிவிட்டேன்

டாக்டர் கலைஞர் அவர்களுடைய வசனத்தை இரண்டு படங்களில் பேசி நடித்துவிட் டேன் - பாலைவன ரோஜாக்கள், மண்ணின் மைந்தன் என்கிற படங்களில்.

அண்ணா அவர்களின் பேச்சுகளை பேசியதில்லை

இதுவரை பேரறிஞர் அண்ணா அவர்களுடைய பேச்சுகளை நான் பேசியதும் இல்லை, நடித்ததும் இல்லை. பேசிப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் எழுந்தது. அதுவும் இந்த உண்மைப் பத்திரிகை மூலமாக நிறைவேற்றிக் கொள்ள ஆசைப்படுகின்றேன் (பலத்த கைதட்டல்).

1947-இல் திராவிடநாடு இதழில் அண்ணா எழுதியது

1947-இல் திராவிட நாடு இதழில் அண்ணா அவர்கள் பேசியிருக்கின்றார். எலக்ட்ரிக் ரயில்வே, மோட்டார், கப்பல், நீர் மூழ்கிக் கப்பல் அதைக் கண்டு பிடிக்கும் கருவி, டார்பிடோ அதனின்றும் தாக்கும் கருவி, விஷப்புகை, அதைத் தடுக்கும் முகமூடி, இன்ஜெக்சன் ஊசி, இனாகுலேசன் ஊசி, இவை களுக்கான மருந்து, ஆபரேஷன், தூரதிருஷ்டக் கண்ணாடி, ரேடியோ, கிராமஃபோன், டெலிஃபோன், தந்தி, கம்பி இல்லாத் தந்தி, ஃபோட்டோ மெசின், சினிமா படம் எடுக்கும் மெசின், விமானம், ஆளில்லாத விமா னம், டைப்ரைட்டிங் மிஷன், அச்சு எந்திரம், ரசாயன சாமான், புதிய உரம், புதிய விவசாயக் கருவி, சுரங்கத் திற்குள் போகும் கருவி, மலை உச்சியில் ஏறும் மெசின், சந்திர மண்டலம் போகும் விமானம், அணுவைப் பிளக்கும் மெசின், இன்னும் எண்ணற்ற புதிய பயன்தரும் மனிதரின் கற் பனைக்கே எட்டாதிருந்த, மனிதனின் உழைப்பை குறைக்கும் முறைகள், கருவிகள், பொருள்கள் ஆகிய இவை களைக் கண்டு பிடித்தவர்கள் எல்லாம் இன்னமும் கல்லு டைக்கும் வேளையில் ஈடு பட்டுக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் ஆயுத பூஜை, சரசுவதி பூஜை கொண்டாடாதவர்கள். (1947-ல் அண்ணா அவர்கள் பேசியிருக்கின்றார்) (கைதட் டல்). அமெரிக்காவைக் கண்டு பிடித்த கொலம்பஸ் இந்தியாவிற்கு வழிகண்டு பிடித்த வாஸ் கோடகாமா, இந்தியாவை ஜெயித்த அலெக்சாண்டர், இவர்கள் எல்லாம் ஆயுத பூஜை செய்தவர்கள் அல்லர். நவராத்திரி கொண்டாடினவர்கள் அல்ல.

நம்மாள் கண்டுபிடித்ததோ

நூற்றுக்கு நூறு பேர் படித்த மேல் நாட்டிலே சரசுவதி பூஜை, ஆயுத பூஜை இவை யெல்லாம் இல்லை. ஏனப்பா கொஞ்சம் யோசிக்கக் கூடாதா?
ஓலைக்குடிசையும் கலப்பை யும், ஏரும், மண்வெட்டியும், அரிவாளும், மண்குடம் மட்டும் உனக்குத் தெரிந்த கண்டுபிடிப்புகள். தீக்குச்சி பெட்டிகூட நீ செய்ததில்லை. கற்பூரம்கூட நீ செய்ததில்லை. கடவுள் படங்களுக்கு அலங் காரம் போடும் கண்ணாடி கூட, சரசவதி பூஜை அறியாத வன் கொடுத்ததுதான் - நீ கொண்டாடுகின்றாய்.

யோசித்துப் பார் அடுத்த ஆண்டுக்குள்

யோசித்துப் பார் - அடுத்த ஆண்டுகளுக்குள்ளாவது என்று இப்படி நிறைய பேசியிருக்கிறார். இப்படி அண்ணா அவர்களுடைய பேச்சைப் பேசக்கூடிய வாய்ப்பும் கூட எனக்கு இந்த பத்திரிகை மூலமாக கிடைத்தது. உண்மை பத்திரிகையைவிட பயனுள்ள பத்திரிகை வேறு எதுவுமே இருக்கமுடியாது (கைதட்டல்).

கமலஹாசன் ஒரு பகுத்தறிவாளர்

ஏனென்றால் எல்லா விசயமும் வந்து விடுகிறது. நமது திரையுலகத்தில் நமது மதிப்பிற்குரிய நடிகர் கமலஹாசன் அவர்கள் ஒரு பகுத்தறிவாளர் (கைதட்டல்). ஆசிரியர் ஒரு புத்தகம் வந்தவுடனே படித்துவிடுவார். அமெரிக்காவில் வெளிவந்த புத்தகம்
நான் ஏதோ ஒரு விசயமாக திடலுக்கு வந்தபொழுது ரிச்சர்ட் டாக்கின்ஸ் என்பவர் ஒரு சமூகப் புரட்சியாளர். அவர் ஒரு பகுத்தறிவாளர். அமெரிக்காவில் அவர் ஒரு புத்தகம் எழுதியிருகின்றார். பெரியபரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்று ஆசிரியர் அவர்கள் சொன்னார்.

ஆசிரியர் அவர்கள் முழுமையாக அந்தப் புத்தகத்தைப் படித்தார். நான் படிக்கவில்லை. அடுத்த நாள் கமலைப் பார்க்கும்பொழுது, சத்யராஜ், அமெரிக்காவில் சமுகப்புரட்சி செய்தவர் பற்றி தெரியுமா? என்று சொன்னார். தெரியும் சார் ரிச்சர்டு டாக்கின்ஸ் தானே என்று சொன்னேன். அதற்குள் படித்துவிட்டீர்களா? என்று கேட்டார். இல்லீங்க சார், மேலோட்டமாகப் படித்துவிட்டேன் என்று சொன்னேன்.

ரிச்சர்டு டாக்கின்ஸ் பெயரை வைத்துக்கொண்டு

இதெல்லாம் ஆசிரியர் துணையால் நடந்ததுதான். ரிச்சர்டு டாக்கின்ஸ் என்ற பெயரை மட்டும் தெரிந்து வைத்துக் கொண்டு ஒரு அசத்து அசத்திவிட்டேன் (சிரிப்பு கைதட்டல்).
இப்படி பெரியார் திடலுக்கு வந்துவிட்டுப் போனாலும் சரி, விடுதலை, உண்மை பத்திரிகயைப் படித்தாலும் சரி, யாரை வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும் அசத்தலாம். நாமும் வாழ்க்கையில் உயரலாம். அப்படி உயர்வதற்காக தாங்கள் பகுத்தறிவாளர் என்று அறியாமல் வாழ்ந்து கொண்டி ருக்கும் 600 கோடி பகுத்தறி வாளர்களும், பெரியாரை நோக்கி வர வேண்டும். நான் ஒரு புத்தகத்தில் படித்தேன்.

ஒவ்வொரு குழந்தையும் நாத்திகன்தான்

பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் நாத்திகன்தான் (கை தட்டல்). அவனுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. அவன் வளரும் பொழுது அவனுக்குச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஒரு படத்தைக் காட்டி இது தானப்பா உன் கடவுள், இந்த கடவுள் சொன்னதை இப்படி எல்லாம் சொல்லியிருக்கின்றார், அப்படியெல்லாம் சொல்லியிருக்கின்றார்.

ஏனென்றால் ஓயவே ஓயாது

ஏனென்றால் இந்த மதவெறியும், மதத்தினால் ஏற்படும் வன்முறையும், மதத்தினால் ஏற்படும் கொலைகளும் ஓயவே ஓயாது, தீரவே தீராது. ஏனென்றால் இல்லாத ஒரு பொருளை முன் வைத்து நடத்தப்படுகின்ற போராட்டம்.

அண்ணன், தம்பிகளுக்கிடையே இந்த வயல்காடு உனக்கா? எனக்கா? என்று சண்டை நடந்தது என்று வைத் துக் கொள்ளுங்களேன். நீதிபதி முன்பு அந்த வழக்கு வந்தால் இந்த சொத்து உனக்கு; இந்த சொத்து அவனுக்கு என்று பிரித்துக் கொடுத்தால் பிரச்சினை தீர்ந்துவிடும்.
கணவன், மனைவி இடையே ஒரு பிரச்சினைவாக ரத்து என்று வருகிற பொழுது நீதிபதிக்கு முன்பு சென்றால் அந்தப் பிரச்சினை தீர்ந்து விடும். ஆனால், இந்த மதச்சண்டையும், மத வன்முறையும் மதவெறியும், மதக் கொலைகளும் ஓயவே ஓயாது.
ஏனென்றால் அங்கு ஆப்ஜெக்ட் கிடையாது. ஆப் ஜெக்ட்டை வைத்து நடத்து கின்ற போராட்டம்தான் முடியும்.

நாளை மலரும் தமிழ் ஈழம்

நாளைக்கு உலக நாடுகள் அத்தனையும் ஆதரவு கொடுத்து, ஆதரவு அளிக்கும்பொழுது நிச்சயாக அங்கு தமிழ் ஈழம் மலரும் (கைதட்டல்). அங்கு அந்தப் போராட்டம் ஓய்ந்து விடும். ஆனால், இல்லாத சாமியை வைத்து உன்சாமி பெரிதா? என் சாமி பெரிதா? என்று அடித்துக்கொண்டு, வெட்டிக் கொண்டு, கொலை பண்ணிக் கொண்டிருந்தால் அந்தப் பிரச்சினை தீராது.

உன் சாமியும் கிடையாது என் சாமியும் கிடையாது

ஏனென்றால் அதைத் தீர்த்து வைக்க உன் சாமியும் கிடையாது, என் சாமியும் கிடையாது. எங்கள் தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி ஒருவர்தான் என்று கூறிக் கொண்டு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றிகூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு இனமுரசு சத்யராஜ் உரையாற்றினார்.

-----------------நன்றி: "விடுதலை" 20,21-10-2008

0 comments: