Search This Blog

31.10.08

அக்கிரமக்கார அக்கிரகாரத்தின் ஆணவ - மனுதர்மக் கோட்டைகளை தூள் தூளாக்கும் வெடி மருந்து


தினமலர் அலுவலகம் திணறியது!

ஈழத்தமிழர் என்றால் வேப்பெண்ணெய்யைக் குடிப்பதுபோல் இருக்கிறது ஒரு கூட்டத்துக்கு - அந்தக் கூட்டம்தான் பார்ப்பனக் கூட்டம்.

குமுதம் ஏட்டில் ஒரு பார்ப்பனர் தெரிவிக்கிறார், தமிழ் ஈழம் தனியாட்சியாக மலர்ந்தால், அடுத்து தமிழ்நாட்டிலும் அது எதிரொலிக்கும் என்ற எண்ணம் ஒன்று இருக்கிறது என்று வெளிப்படுத்தியுள்ளார்.

உலகத்தில் சொந்த நாடே இல்லாத ஒரு இனம் உண்டென்றால், அது பார்ப்பன இனம்தான். அதனால் வேறு எந்த இனமும் சுயாட்சி உரிமைக்காகவோ, நாட்டுப் பிரிவினைக்காகவோ போராட்டம் நடத்தினால், இந்தக் கூட்டம் அதற்கு ஆதரவு தராது - குறுக்குச்சால் ஓட்டும்; பித்தலாட்டங்களையெல்லாம் சகட்டு மேனிக்கு அரங்கேற்றும். ஈழத்தமிழர்ப் பிரச்சினையிலும் அந்த நிலைதான் அவர்களுக்கு.

இந்து, தினமலர், தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ், துக்ளக் என்று ஒரு ஊடகப் பட்டியல் உண்டு. இவை அனைத்தும் பார்ப்பனர்களின் பர்ணசாலை.

தமிழ் உணர்வு உலகின் எந்த மூலையில் தலையெடுத்தாலும் அதனைக் கொச்சைப்படுத்துவது, தீவிரவாதம், குறுகிய வெறி (Chauvinism) என்று பெயர் சூட்டுவதுதான் இவர்களின் அன்றாட வேலை.

இலங்கைத் தீவில் செஞ்சோலையில் பச்சிளம் பாலகர்கள் குடியிருந்த விடுதியில் கூட இலங்கை சிங்கள இராணுவம் குண்டுமாரி பொழிந்து ஒரு நொடிக்குள் அத்தனைப் பிஞ்சு மலர்களையும் கொன்று குவித்துக் குதூகலம் அடைந்ததே - அதற்குக்கூட வக்காலத்து வாங்கி எழுதிய கொடூரமான கும்பல் இது.

இலங்கைத் தீவில் எந்த ஒரு பார்ப்பனரின் சிண்டு முடிகூட உதிர்ந்து போய்விடவில்லை. நாலு பார்ப்பனக் குடும்பம் சிங்களக் குண்டுக்கு இரையாகியிருந்தால், அய்.நா. மன்றம் ஏறி ஆச்சா போச்சா என்று அலறியிருப்பார்கள்.

ஆனால், ஈழத்தில் அவமானப்படுத்தப்படுவது, அன்றாட வாழ்வே கேள்வி குறியாக்கப்படுவது - அத்தியாவசியப் பொருள்களுக்கே அல்லாடுவது - வீட்டை விட்டு காடுகளை நோக்கி ஓடுவது எல்லாம் இந்தப் பாழாய்ப்போன தமிழ்க் குடிதானே!

அதனால்தான் அன்றாடம் அக்கிரகார ஊடகங்கள், ஏடுகள், இதழ்கள் ஆனந்த ராகம் பாடிக்கொண்டு இருக்கின்றன.

தமிழர்களைச் சீண்டுவதிலும், தமிழர்களுக்காகப் பாடுபட்ட, பாடுபட்டுவரும் தலைவர்கள்மீது மலத்தை வாரியிறைப்பதிலும் குறியாக இருக்கிறார்கள் - இட்டுக்கட்டி எழுதுகிறார்கள். அதில் முக்கியமான இடம் வகிப்பது தினவெடுக்கும் தினமலர்தான். தமிழர்கள் அவ்வப்பொழுது பாடம் கற்பித்தாலும் அதன் தடித்த தோலுக்கு உரைக்கவே உரைக்காது.

ஆனால், தமிழர்களின் தன்மான உணர்வு - தந்தை பெரியார் அவர்களால் ஊட்டப்பட்ட அந்த உணர்வு செத்துப்போய் விடவில்லை; பார்ப்பனர்கள் சீண்டச் சீண்ட அது சீறிடும் எரிமலையாக, நெருப்புக் குழம்பினை வாரியிறைத்துக் கொண்டுதானிருக்கும்.
அதனை திரைப்பட உலக இயக்குநர்கள் நிரூபித்துக் காட்டிவிட்டனர்.

சென்னை அண்ணாசாலை தினமலர் அலுவலகத்தின்முன் புரட்சி இயக்குநர் பாரதிராஜா தலைமையில் அணிவகுத்து நின்று கண்டன ஆர்ப்பாட்டத்தை முறுக்கேறிய புயலாக வெடித்துக் காட்டியிருக்கின்றனர்.

பாராட்டுகிறோம் - பார்ப்பன ஆதிபத்தியத்தின் அட்டகாசத்தை தமிழினக் கலையுலகினர் புரிந்துகொண்டதற்காகப் பாராட்டுகிறோம். பாராட்டுகிறோம் இந்த உணர்வை அவர்கள் தயாரிக்கும் திரைப்படங்களிலும், கலை வடிவங்களிலும் இடம்பெறச் செய்தால், தமிழின இளைஞர்கள் மத்தியில், இன உணர்வும், பகுத்தறிவுச் சிந்தனையும் வேர் பிடித்து வெடித்துக் கிளம்புமே!

தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு என்னும் வெடி மருந்துதான் அக்கிரமக்கார அக்கிரகாரத்தின் ஆணவ - மனுதர்மக் கோட்டைகளை தூள் தூளாக்கும்!


மீண்டும் கலையுலகச் செம்மல்களைப் பாராட்டுகிறோம் - அந்த உணர்வு மேலும் மேலும் வளர்வதாகுக!

தமிழா இன உணர்வு கொள்!

தமிழா தமிழினாக இரு என்றார் தமிழர் தலைவர் வீரமணி. அதன் வடிவத்தை இயக்குநர்களின் ஆர்ப்பாட்டம் மூலம் கண்டோம்.

தந்தை பெரியார் அவர்களின் கொள்கை சார்ந்த இந்த உணர்வை திக்கெட்டும் பரப்புவோம்! தீய சக்திகளின் தடயங்களை இல்லாது ஆக்குவோம்!

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!

----------------நன்றி: "விடுதலை"

0 comments: