Search This Blog

31.10.08

"தினமணி" நாளிதழின் பத்திரிகா தர்மம்

இலங்கைத் தமிழர்களின் கண்ணீரைத் துடைப்பதற்கும், அங்கே நடைபெறும் இனப்படுகொலையைத் தடுப்பதற்கும், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காண்பதற்கும் முதல்வர் கருணாநிதிக்கு ஓர் அருமையான வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. முதல்வர் கருணாநிதியே முன்னின்று பேச்சு வார்த்தை நடத்தும்போது விடுதலைப் புலிகள் உள்பட அனைத்துத் தரப்பினரும் அவரது முடிவுக்குக் கட்டுப்படுவார்கள் என்பது உறுதி.

இலங்கை அதிபர் ராஜபக்சே அளித்திருக்கும் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்தி இலங்கைத் தமிழர்களின் துயரை நிரந்தரமாகத் தீர்ப்பதன் மூலம் மட்டும்தான் முதல்வர் கருணாநிதி தன்னைத் தமிழினத் தலைவர் என்று சரித்திரத்தில் நிலை நிறுத்திக் கொள்ள முடியும். இந்த பொன்னான வாய்ப்பை அவர் நழுவ விடக்கூடாது!

- என்று ராஜபக்சே வாக்குறுதிகளுக்கான அவரது கழுத்து தாங்காத அளவுக்குப் புகழாரம் சூட்டிவிட்டு - போனால் போகிறது என்று ஒரு கருணையோடு - கலைஞரையும் ராஜபக்சேவே பாராட்டிய கலைஞரை நாமும் பாராட்டி விட வேண்டியதுதான் என்று பாராட்டி - அவர் சரித்திரத்தில் தமிழினத் தலைவராக நிலை பெறவேண்டும் என்று அவாளுக்கே உரிய சமத்தோடு எழுதியிருக்கிறார்!

இதிலிருந்து என்ன தெரிகிறது?

அவாள் புதன்கிழமை ராஜபக்சேயை நம்பக் கூடாது என்பார்கள்; அதுதான் சரி.

வியாழக்கிழமை அன்று ராஜபக்சேயை நம்பியே ஆகவேண்டும் என்பார்கள்! அதுவும் சரியே!

அதுதான் அவாளின் ஆரிய தர்மப்படிக்கான நேர்மை - நாணயம் - பத்திரிகா தர்மம்; கத்திரிக்கா தர்மம் எல்லாமே!

-------------நன்றி: "முரசொலி"

0 comments: