Search This Blog

25.10.08

தீபாவளி நமக்குத் துக்க நாள்

மான மீட்பர்


நான் தீபாவளி கொண்டாடினால்
உனக்கென்ன ?
என்றான் நண்பன்.

கிறித்துமசு
கொண்டாடுபவனைத்
தடுக்க நீ
துண்டறிக்கை கொடுக்கவில்லை!

ரம்ஜான் கொண்டாடுபவனைத்
தடுக்க நீ
துண்டறிக்கை கொடுக்கவில்லை!

நான் தீபாவளி
கொண்டாடப்போகும்போது
மட்டும்
துண்டறிக்கை கொடுத்து
கொண்டாடாதே என்கிறாயே என்றான்
மிகவும் உருக்கமாக.

மூடத்தனம்
முட்டாள்தனம்
உலகம் முழுமைக்கும்
பொதுவானது

எல்லா மதப்
பண்டிகை
கதைகளுக்கும்
உரித்தானது.
ஆனால்
சொந்த மதமக்களை
அவமானப் படுத்துவது
இழிவு படுத்துவது
இந்து மதப்
பண்டிகைகளுக்கே
உரித்தானது என்றேன்.

தமிழர்கள் நாம்
கொண்டாட
தீபாவளி என்பது
நமது
திருநாள் அல்ல.
நம்மை
ஒடுக்குவதற்காகப்
பார்ப்பனர்கள்
கண்டுபிடித்த
கருவிகளில்
ஒன்றுதான்
இந்த தீபாவளிப்
பண்டிகை என்றேன்.


புராணக்கதைகள்
தெரியாத காலத்தில்
புளுகுமூட்டைகள்
இவை என்பது
புரியாத காலத்தில்
நமது முன்னோர்கள்
சிலர் கொண்டாடியிருக்கலாம்
அது அறியாமை
பார்ப்பனர்களின்
சூழ்ச்சி தெரியாமை.
ஆனால்
'ஆரிய மாயை '
எழுதிய
அண்ணாவின் நூற்றாண்டுவிழாவைக்
கொண்டாடும் நாம்
படித்துப் பட்டம்
பெற்ற நாம்
தமிழர்கள் நாங்கள்
எனப் பெருமை
கொள்ளும் நாம்
பார்ப்பனர்களின்
சூழ்ச்சியை
அறிந்த நாம்
தீபாவளியைக்
கொண்டாடுவது
அறியாமை மட்டுமல்ல
தெரியாமை மட்டுமல்ல
சுத்த மடமை என்றேன்.

இராவணனுக்கும்
இராமனுக்கும்
சீதை மட்டுமா பிரச்சினை?
இந்திரனுக்கும்
சூரனுக்கும்
இந்திரனின் மனைவி
மட்டுமா பிரச்சினை?
நரகாசுரன்
கசேரு என்ற பெண்ணை
சிறைப் பிடித்ததா பிரச்சனை?
இல்லை நண்பா!
இல்லை!இல்லை! புராணப்படியே
இராவணனும்
சூரனும்
நரகாசுரனும்
பார்ப்பன எதிர்ப்பாளர்கள்
யாக எதிர்ப்பாளர்கள்
வேத எதிர்ப்பாளர்கள்
அவர்களெல்லாம்
நமது உடன்பிறப்புக்கள்
இரத்தத்தின் இரத்தங்கள்
நமது சொந்தங்கள்.

தீபாவளி என்பது
இழவு
நமது வீட்டில்
பார்ப்பனர்களால்
ஏற்படுத்தப்பட்ட இழிவு
பார்ப்பன எதிர்ப்பைக்
கையிலெடுத்த நரகாசுரனை
பார்ப்பனர்கள் கொன்ற நாள்

தீபாவளி நமது வீட்டில்
விழுந்த இழவை
கொண்டாடச் சொல்லி
பார்ப்பான்
ஏற்படுத்திய
சூழ்ச்சி வலையில்
சிக்கி நீ
தீபாவளி கொண்டாடுதல்
முறையா? என்றேன்



நண்பா,
தீபாவளி என்பது
வெறும்
இனிப்புத் தின்பது
மட்டுமல்ல
வீதிகளில் மற்றவர்
செவிடுகள் கிழிய
வெடிகள் வெடிப்பது
என்பது மட்டுமல்ல
அது ஆரியர்களின்
வெற்றிக் கொண்டாட்டம்
அதில் திராவிடர்கள்
நாம் எப்படி? என்றேன்.

பரம்பரை யுத்தம்
இன்று நேற்றல்ல
பல நூற்றாண்டுகளாய்
இம்மண்ணில்
நடந்து வருவது
தர்ப்பைப் புல்
வருகையால்
திராவிடன் இழந்தது
தன்மானம் மட்டுமல்ல
வீரர்களையும்தான்
நமது நேற்றைய
மான மீட்பர்கள்
அய்யா பெரியாரும்
அறிஞர் அண்ணாவும்
என்றால்
புராண காலத்து
மானமீட்பர்
நரகாசூரன்

எனவே நரகாசூரன்
இறந்த நாளாம்
தீபாவளி
நமக்குத் துக்க நாள்

தீபாவளிக்கு
வெடி வெடிப்பதை நிறுத்து
புத்தாடை தவிர்
கருப்பு உடை உடுத்து
துக்க நாள் என்பதை
உறவினர்களிடமும்
நண்பர்களிடமும்
தெரியப்படுத்து
என்றேன்.


தெளிவு பெற்ற
நண்பனும்
சரி எனச்சென்றான்.


----------------- ப.க. தலைவர், மானமிகு வா. நேரு அவர்கள் எழுதியது - நன்றி: "விடுதலை" ஞாயிறு மலர் 25-10-2008

1 comments:

bala said...

திராவிட முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி தமிழ் ஓவியா அய்யா,

40 ஆண்டு திராவிட கருப்பு சட்டை பொறிக்கி ஆட்சியில் வாடும் தமிழ் மக்களுக்கு இன்று மட்டும் என்ன எல்லா நாட்களூமே கருப்பு நாட்கள் தான்,துக்க நாட்கள் தான்.

பாலா